Friday, August 23, 2024

ஈரான் மேற்காசிய பிராந்தியத்தில் அசைக்க முடியாத வல்லரசு

The Retribution: When Iran punished 'Israel' in Operation True Promise

  • By Al Mayadeen English

அல் மயாதீன் தொலைக்காட்சி "தி ரிட்ரிபியூஷன்" ஆவணப்படத்தை தயாரித்துள்ளது, இது இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் தொடர்பான விரிவான நுண்ணறிவுகள், தகவல்கள் மற்றும் முக்கிய நேர்காணல்களை வழங்குகிறது.


ஈரான் இஸ்லாமிய புரட்சியின் போது இளைஞர்களின் அபிலாஷைகளில் ஒன்று தங்கள் நாட்டை மேற்கு ஆசியாவின் முன்னணி ஏவுகணை சக்தியாக மாற்றுவதாகும். புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நான்கு தசாப்த கால இடைவிடாத முயற்சிக்குப் பின்னர், இப்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர்களாக இருக்கும் இந்த இளைஞர்கள், இப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்குள் ஆழமாக ஊடுருவி "இஸ்ரேலை" தண்டிக்கக்கூடிய அளவுக்கு இலக்கை அடைந்துள்ளனர்.

இந்த முயற்சிகள் குறுகிய தூர ஏவுகணைகளின் உற்பத்தியில் தொடங்கி ஃபத்தாஹ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியில் உச்சக்கட்டத்தை அடைந்தன. இந்த முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புத் தொழில்களின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள நோக்கம் ஈரானின் தடுப்பு முறையை வலுப்படுத்துவதும் அதன் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதும் ஆகும்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பரந்த அளவிலான ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகள் மட்டுமே அவற்றை உண்மையில் பயன்படுத்துவதற்கான உறுதியையும் வலுவான விருப்பத்தையும் கொண்டுள்ளன, ஈரான் இந்த சிலவற்றில் ஒன்றாகும். அடிப்படையில் வேறுபட்ட ஒரு புறநிலையுடன், இஸ்லாமிய குடியரசு அதன் ஆயுதக் களஞ்சியத்தை தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை தெஹ்ரானின் எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டும்.

உண்மையில், ஈரான் கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக அதன் மீது திணிக்கப்பட்ட போர் முடிவடைந்த பின்னர், இந்த உறுதியின் சாத்தியத்தை நிரூபித்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய இராணுவ பயிற்சிகளில் ஒன்றைத் தொடங்கி, ஈராக்கில் உள்ள பயங்கரவாத முஜாஹிதீன்-இ-கல்க் (MKO) அமைப்புக்கு சொந்தமான தளங்களை குறிவைத்த 2005 மற்றும் 2024 க்கு இடையில், ஈரான் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் தக்ஃபிரிகளை (தீவிரவாதிகள்) எவ்வாறு தண்டித்தது, விரோத உளவுத்துறை மையங்களை குறிவைத்து, எதிரிகளுக்கு எதிராக அதன் தடுப்பு சக்தியை குவித்தது என்பதை உலகம் அறிந்து கொண்டது.

ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கை குறிப்பிட்ட கருவிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்காமல் அதன் தடுப்பு முழுமையடையாது.

ஜனவரி 2020 இல், ஐ.ஆர்.ஜி.சியின் குத்ஸ் படையின் தளபதி, தியாகி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான ஐன் அல்-அசாத் மற்றும் எர்பிலில் உள்ள ஹரிர் தளம் மீது குண்டுவீசியதன் மூலம் ஈரான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கு முதல் உத்தியோகபூர்வ அடியை வழங்கியது.

பின்னர், ஏப்ரல் 2024 இல், டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தை குறிவைத்ததற்கும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள குத்ஸ் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரீஸா ஜாஹதி படுகொலை செய்யப்பட்டதற்கும் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு எதிரான ஆபரேஷன் ட்ரூ பிராமிஸை நடத்தியது.

அந்த நேரத்தில், தற்காப்பு தயார்நிலை முன்னொருபோதும் இல்லாத வரலாற்று மட்டத்திற்கு உயர்த்தப்பட்யிருந்த போதிலும், கிட்டத்தட்ட முழு உலகின் கவனமும் வெறும் 22,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த பிராந்தியத்தின் (அமெரிக்க ராணுவத் தளம்) மீது குவிந்திருந்தது. இது, ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பாகமாக இருந்தது. எவ்வாறாயினும், இவற்றால் மேற்கு ஆசியாவில் இந்த உலகளாவிய அணிதிரட்டல், ஈரானின் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் மூலம் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மூலோபாய அடிகளை கொடுப்பதை தடுக்க முடியவில்லை. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் நடத்தியது என்ற போதிலும் இந்த பதிலடிக்காக இஸ்லாமிய குடியரசின் இராணுவம் அதன் சக்திகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்தியது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளின் மனதில் பல கேள்விகள் எழுந்தன: ஆபரேஷன் ட்ரூ பிராமிஸில் ஈரான் ஆச்சரியத்தின் கூறுகளைப் பயன்படுத்தியிருந்தால்? ... ஈரான் தொடர்ச்சியாக பொலிஸ்டிக் ஏவுகணைகளை மட்டுமே ஏவினால் என்ன செய்வது? ... தாக்குதல்கள் இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் நீடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ... ஈரானின் எதிரிகளின் பாதுகாப்பு அமைப்பு பலம் குறைந்ததைத் தொடர்ந்து மற்ற தொகுதி ஏவுகணைகள் ஏவப்பட்டால் என்ன செய்வது?.... IRGC அதன் சமீபத்திய தற்காப்பு சாதனங்களை முழுமையாக பயன்படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? … இஸ்லாமிய குடியரசின் கூட்டாளிகள் முழு பலத்துடன் போர்க்களத்தில் ஈடுபட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? … அக்டோபர் 7 முதல் காஸாவின் சிறிய நிலப்பரப்பில் கூட வெற்றியைக் பெற முடியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அமைப்புக்கு என்ன நடந்திருக்கும்?

இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, அவற்றுக்கு ஈரானின் எதிரிகளிடம் பதில் இல்லை.

"பழிவாங்கல்" ஆவணப்படம் ஈரானின் ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் பற்றிய விரிவான நுண்ணறிவுகள், தகவல்கள் மற்றும் பெறப்பட்ட முக்கிய நேர்காணல்களை வழங்குகிறது, இதில் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் சையத் அலி காமனேயி, ஐஆர்ஜிசி கமாண்டர்-இன்-சீஃப், மேஜர் ஜெனரல் ஹொசைன், IRGC விண்வெளிப் படையின் தளபதி சலாமி, ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா, பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே, முன்னாள் பென்டகன் ஆலோசகர், முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி, மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர்.

https://english.almayadeen.net/news/politics/the-retribution--when-iran-punished--israel--in-operation-tr

Iran air defense force ‘absolute power’ in West Asia: Cmdr.

மேற்கு ஆசியாவில் ஈரான் வான் பாதுகாப்பு படை முழு பலம் கொண்டது: கமாண்டர்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வான் பாதுகாப்பு படை துறையில் நாடு "முழுமையான ஒரு சக்தி" என்று ஈரானின் மூத்த தளபதி ஒருவர் கூறுகிறார்.

ஈரானிய இராணுவத்தின் விமான பாதுகாப்புப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹி-ஃபார்ட் புதன்கிழமை கூறுகையில், "பிராந்தியத்தில் வான் பாதுகாப்பின் முழுமையான சக்தி நாங்கள் என்றும், இது எவராலும் மறுக்க முடியாத உண்மை" என்றும் கூறினார்.

ஈரான் எந்த நாட்டையும் சார்ந்திருக்கவில்லை என்பதையும், ஈரானிய நிபுணர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சிறந்த உபகரணங்கள் எம்மிடம் உள்ளன என்பதையும் எதிரிகள் நன்கு அறிவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

1980 களில் ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் எம் மீது திணித்த எட்டு ஆண்டுகால போர் மற்றும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா செயித் அலி காமனேயி ஈரான் அதன் பாதுகாப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிறப்பித்த உத்தரவு அனைத்தும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த பங்களித்தன என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரானிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படை தற்போது நாட்டைப் பாதுகாக்க சிறந்த நிலையில் உள்ளது என்று மூத்த தளபதி சபாஹி-ஃபார்ட் மீண்டும் வலியுறுத்தினார். தேவைப்பட்டால் எதிரிகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசவும் ஈரான் தயாராக உள்ளது என்று கூறினார்.

எதிரிகளின் தவறான கணிப்புகள்

எந்தவொரு தவறான கணிப்பீடுகளையும் செய்ய வேண்டாம் என்று சபாஹி-ஃபார்ட் எதிரிகளுக்கு எச்சரித்தார். ஈரானிய இராணுவம் மற்றும் விமான பாதுகாப்புப் படை எந்தவொரு சாத்தியமான மோதலிலும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று அறிவுறுத்தினார்.

சமீபத்திய ஆண்டுகளில், ஈரானிய இராணுவ வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் பரந்த அளவிலான உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர், இது ஆயுதப் படைகளை தன்னிறைவு அடையச் செய்துள்ளது.

முற்றிலும் பாதுகாப்பிற்காக இருக்கும் எமது இராணுவ திறன்களை வலுப்படுத்த ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் தயங்காது என்றும், ஈரானின் பாதுகாப்பு திறன்கள் எந்த சமயத்திலும் பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படாது, பாதுகாப்பு விடயங்களில் எம்மீது கட்டுப்பாடுகளை விதிக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்  என்றும் ஈரானிய அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி காமனேயி பல சந்தர்ப்பங்களில் ஈரானின் பாதுகாப்பு திறன்களை பராமரித்து அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://en.mehrnews.com/news/220013/Iran-air-defense-force-absolute-power-in-West-Asia-Cmdr

 

No comments:

Post a Comment