Monday, January 31, 2022

முஸ்லிம் உலக வளங்கள் எவ்வாறு வீணடிக்கப்படுகின்றன

How the resources of the Muslim world are being wasted

முஸ்லிம் நாடுகளை இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக மேற்குலக நாடுகள் மற்றும் சியோனிச சக்திகள் ஒன்றிணைந்து குத்திக் குதறி துவம்சம் செய்துள்ள நிலையை நாம் பாலஸ்தீனில், ஆஃகானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் கண்டுகொண்டு இருக்கின்றோம்.


இவ்வாறான ஒரு நிலையில், ஒன்றுபட்டு செயல்படவேண்டிய முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் நாடுகள் அற்ப விடயங்களை காரணம் காட்டி, தமக்குள்s சண்டையிட்டுக்கொண்டு, தமது செல்வம் மற்றும் வளம் அனைத்தையும் வீணடித்துக்கொண்டு இருப்பதை காண மிகவும் கவலையாய் இருக்கிறது.

ஒரு சகோதர நாட்டை அழித்தொழிப்பதில் சவூதி அரேபிய பல பில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது; இதுவரை பல்லாயிரம் அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். செலவு செய்த இந்தப் பணத்தின் பாதியளவு பணத்தை வறுமையில் வாடிய யெமனின் அபிவிருத்திக்காக செலவு செய்திருப்பின் அந்த நாட்டு மக்கள் என்றென்றும் சவுதிக்கு நன்றிக்கடன் பட்டவர்களாய் இருந்திருப்பர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு எப்போதும் பிராந்தியத்தில் சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறது. இதற்காக தன்னால் இயன்ற அனைத்தையும் அந்நாடு செய்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

யெமன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வை வரவேற்கிறோம்,

இந்த வறிய அரபு நாட்டின் மீது சவுதி திணித்துள்ள ஏழு ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்த முயற்சியையும் தெஹ்ரான் வரவேற்கிறது.

"முற்றுகையிட்டு, பொருளாதார தடைகளை விதித்து மற்றும் இராணுவத் தாக்குதல் மேற்கொண்டு யெமன் நெருக்கடியைத் தீர்க்க முடியாது, மாறாக அவ்வாறான வன்முறை செயல்கள் பிராந்தியத்தில் பதட்டத்தையே விரிவுபடுத்தும்" என்று அண்மையில் ஒரு வைபவத்தில் உரையாற்றும் போது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே குறிப்பிட்டார். யெமனின் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகளின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஈரான் எப்போதும் ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சவூதி அரேபியா அதனது 29 நட்பு நாடுகளை இணைத்துக்கொண்டு, 2015 மார்ச்சில் அரபு உலகின் மிகவும் வறிய நிலையில் இருந்த யெமன் தேசத்தின் மீது நியாயமற்ற போரைத் தொடங்கியது, சவுதியினதும் அமெரிக்காவினதும் நேசரான அப்தர் ரப்பு மன்சூர் ஹாதியை ஆட்சியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வேண்டாத போரை அந்த நாட்டின் மீது திணித்தது.

சவுதியின் இந்தச் செயல் பல்லாயிரக்கணக்கான அப்பாவி யெமன் மக்களைக் கொன்று, முழு நாட்டையும் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் காட்சியாக மாற்றியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் போரின் நோக்கத்தை அடைந்து விடுவோம் என்று கூறி ஆரம்பித்த போர் ஏழாண்டுகளாக தொடர்கிறது;. சவுதியினால் இலக்கை அடைய முடியவில்லை.

இந்த ஆக்கிரமிப்பு கூட்டணி யெமன் மீது முழுமையான முற்றுகையைச் செயல்படுத்தி வருகிறது, நாட்டின் உயிர்நாடியான ஹுதைதா துறைமுகத்தை, மிகவும் அடிப்படைத் தேவை சரக்கு கப்பல்களைக் கூட நுழைய விடாது சகோதர மக்களை திணறடித்துக்கொண்டு இருக்கிறது.இதன் காரணமாக யெமனின் இன்றைய நிலை உலகின் பேரவலமாக மாறியுள்ளது.

"பிராந்தியத்தின் நெருக்கடிகள் எதற்கும் தீர்வு போர் மற்றும் வன்முறையை நாடுவதால் பெற்றுக்கொள்ள முடியாது" என்று கதீப்சாதே கூறினார், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை அமைதியை நிறுவுவதன் மூலமும் பதற்றத்தைத் தவிர்ப்பதன் மூலமும் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய எப்பொழுதும் தயாராய் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

இது இவ்வாறிருக்க

யெமன் இப்போது 1,600 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய வல்லமையைப் பெற்றுள்ளது

கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி மீதான யெமனின் பதிலடி தாக்குதல், சமீப ஆண்டுகளில் யெமன் படைகள் ராணுவ ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றங்களை வெளிப்படுத்தியது, இது மூர்க்கமான சவூதி தலைமையிலான போரை எதிர்கொள்வதில் அவர்களின் இராணுவ முன்னேற்றத்தின் மிகவும் வெளிப்படையான காட்சியாகும் என்று the Wall Street Journal கூறுகிறது.

தமது நாட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களை அடுத்து அன்ஸாருல்லாஹ் போராளிகள் அபுதாபி மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளை குறிவைத்து பதிலடித் தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

யெமன் படைகள் "இதற்கு முன்னரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கியுள்ளன, ஆனால் எமிராட்டிகள் அதை ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை" என்று அமெரிக்க நாளிதழ் The Wall Street Journal குறிப்பிட்டுள்ளது

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி உறுப்பினரின் தாக்குதலில் தொடங்கிய பல வருட யுத்தத்தில் இருந்து யெமன் படைகள் ராணுவ ரீதியாக எந்த அளவு வலுப்பெற்றுள்ளன என்பதை குறிப்பிட்ட பதில் தாக்குதல்கள் காட்டுகின்றன என்று தி வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் மேலும் கூறியது.

அபுதாபி விமான நிலையம் மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் ஆலை மீது அதன் தாக்குதல்கள் மூலம், யெமன் உள்நாட்டுப் போரில் சவூதி தலைமையிலான கூட்டணியில் தீவிரம் காட்டிய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பங்களிப்புக்கு யெமனியர்கள் வெளிப்படையாக பதிலடி கொடுத்துள்ளனர்.

யெமனின் எதிர் தாக்குதல்கள் "ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்னர் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை நம்பியிருந்த" படைகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ முன்னேற்றங்களின் காட்சியாக இருந்தது.

இப்போது, அவர்கள் தங்கள் மலைபாங்கான பிரதேசங்களில் இருந்து "1,000 மைல்கள் (1,600 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க முடியும்" என்று அந்த செய்தித்தாள் மேலும் கூறியது.

சவூதி மற்றும் அமெரிக்க நண்பரான அதன் முன்னாள் தலைவர் மன்சூர் ஹாதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சவூதி மற்றும் அதனுடன் இணைந்துள்ள நாடுகள் மேற்கொண்ட ராணுவ தாக்குதல்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த முடிந்ததே அன்றி அவர்கள் போரினால் ஏற்படுத்த நினைத்த ஆட்சி மாற்றத்தை செய்ய முடியவில்லை.

போரின் தொடக்கத்தில், ராக்கெட் மற்றும் கிரெனேட் லாஞ்சர்கள் போன்ற இலகுரக ரக ஆயுதங்களை மட்டுமே கொண்டிடிருந்த யெமன் படைகள் உள்நாட்டில் பெற்றுக்கொள்ளக்கூடிய இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ட்ரோன்கள், குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களை உருவாக்கும் திறனை பெற்றுக்கொண்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் தி ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வார எதிர்த்தாக்குதலை மேலும் விரிவாக விவரித்த தி ஜர்னல், பூர்வாங்க எமிராட்டி விசாரணையை மேற்கோள் காட்டி, குறிப்பிட்ட தாக்குதலில் "ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்" சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறியது.

சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனை எந்த அளவு அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதேநேரம் இஸ்லாத்தின் எதிரிகள் தங்களது நவீன ஆயுதங்களை பரீட்சிக்கும் இடமாகவும் இப்பிராந்தியத்தை ஆக்கியுள்ளது.

- தாஹா முஸம்மில் 

Wednesday, January 19, 2022

எதிர்கால சக்தியாக முஸ்லிம் உலகம் மிளிரும்

 Iran Redefining Regional Geopolitics

Muslim world will be future power

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயதுல்லா செய்யத் அலி கமேனியின் உயர் இராணுவ ஆலோசகர், மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி ஈரானும் எதிர்ப்பு முன்னணியும் பிராந்தியத்தில் புவிசார் அரசியலை மறுவடிவமைப்பதாகக் கூறி, தற்போதைய மேற்குலக மேலாதிக்க மற்றும் கிழக்கு சக்திகளுடன் போட்டியிடக்கூடிய எதிர்கால சக்தியாக முஸ்லிம் உலகம் மிளிரும் என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் ஈரான் மற்றும் அண்டை நாடுகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மேஜர் ஜெனரல் யஹ்யா ரஹீம் சஃபாவி, தற்போதைய நூற்றாண்டு முஸ்லிம் உலகம் ஒரு புதிய சக்தி துருவமாக மாறும் எனவும் கலாச்சார, நாகரிக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை இயல்பைக் கொண்டு ஆணவ சக்திகளுக்கு பெரும் எதிர்ப்பு முன்னணியாக அமையும் என்றார்.

புவிசார் அரசியல் என்பது "இஸ்லாமிய உம்மாவின் சமூக, கலாச்சார, மத, பொருளாதார மற்றும் இராணுவ கட்டமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மாற்றுவதன் மூலம் விடுதலை மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கும், மேற்கு மற்றும் கிழக்கின் ஆதிக்க சக்திகளுக்குப் போட்டியாக பல்வேறு தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில், இஸ்லாமிய சக்தியை உருவாக்குவது ஆகும்,” என்று ரஹீம் சஃபாவி கூறினார்.

"தீமை எதிர்ப்பு முன்னணியின் இந்தப் புதிய புவிசார் அரசியலில் முன்னிலை வகிப்பவர்கள் இஸ்லாமியப் புரட்சிப் படைகள், இஸ்லாமிய எழுச்சி இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனருமான இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் அடிச்சுவட்டில் தீமை எதிர்ப்பு முன்னணியை வழிநடத்தும் இஸ்லாமியப் புரட்சியின் தலைவரும் ஆகும்" என்று அவர் மேலும் கூறினார்.

1979 இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து, பாலஸ்தீனம் மற்றும் சியோனிச ஆட்சியின் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு, இஸ்லாமிய நாடுகளில் ஊழல்மிகு மற்றும் அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் தீமை எதிர்ப்பு முன்னணி கவனம் செலுத்தியது என்றும் ரஹீம் சஃபாவி குறிப்பிட்டார்.

1980 களில் ஈரானுக்கு எதிராக முன்னாள் ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனினால் திணிக்கப்பட்ட போருக்குப் பிறகு தீமை எதிர்ப்பு எனும் கருத்தை முன்வைத்து நிறுவனமயமாக்குவதில் ஈரானின் பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கம், பாலஸ்தீனிய குழுக்கள், ஈராக் மற்றும் சிரியாவை ஒரு புதிய தீமை எதிர்ப்பு குழுவின் உறுப்பினர்களாக தளபதி மேற்கோள் காட்டினார், "யெமனில் அன்சாருல்லா இயக்கத்தின் தோற்றத்துடன், இந்த கூட்டணிக்கு இன்று மற்றொரு அதிகாரப்பூர்வ உறுப்பினர் இணைந்து உள்ளது".

IRGC குத்ஸ் படையை "போராட்டத்தின் இயந்திரம் என்றும் அதன் உந்துசக்தி" என்றும் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான ரஹீம் சஃபாவி, பாராட்டினார்.

உண்மையில், பிராந்திய அரசியலில் அதிகாரத்தை உருவாக்கும் ஈரானின் செயல்முறையே இஸ்லாமிய குடியரசின் மீது அமெரிக்காவை கோபமடைய செய்துள்ளது. குறிப்பிட்ட இந்த சக்தி மேற்கு ஆசியாவின் முதல் அடுக்கில் இஸ்லாமியப் புரட்சித் தலைவரின் சாதுரியமான மற்றும் தைரியமான தலைமைத்துவத்துடனும், தியாகி ஜெனரல் காசிம் சுலைமானியின் தலைமையில் குத்ஸ் படையின் பங்குடனும் உருவாக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் பகிரப்பட்ட இலக்கை அடிப்படையாகக் கொண்டு மேற்கு ஆசியாவில் இஸ்லாமிய குடியரசின் தலைமையில் புதிய ஏற்பாடு அல்லது ஒழுங்கின் வருகைக்கு இணையாக, வெனிசுலா, கியூபா மற்றும் பெரு உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டனஎன்று அவர் மேலும் கூறினார்.

அமேரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படும்

ஜெனரல் சுலைமானியின் தியாகத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தமக்கு ஆதரவு வழங்கிய நண்பர்களையும் உளவாளிகளையும் கூட அழைத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவமானகரமான முறையில் தப்பி ஓடியதாக ஈரானின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் முஹம்மது பாக்கரி கூறியுள்ளார்.

ஜெனரல் பாக்கரி மேலும் கூறுகையில், அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும், மேலும் ஜெனரல் சுலைமானியின் தடயம் எங்கிருந்தாலும், சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்காவின் கால்கள் நடுங்குகின்றன.

ஜெனரல் சுலைமானியின் துணிச்சலான பாதையை இறுதிவரை தொடர்வதாகவும், இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் இமாம் கொமெய்னி (ரஹ்) மற்றும் தியாகிகளின் கொள்கைகளை கடைபிடிப்பதாகவும் பாக்கரி சபதம் செய்தார்.


காசிம் சுலைமானி மற்றும் ஈராக் உயர்மட்ட தளபதி அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரை தனி நபர்களாக பார்க்கக்கூடாது, அவர்கள் ஒரு சிந்தனை பள்ளியாகவும் ஒரு வழிகாட்டியாகவும் பார்க்கப்பட வேண்டும் என்று ஜெனரல் சுலைமானி பற்றி ஈரான் தலைவர் கூறியதையும் அவர் எதிரொலித்தார்.

ஜெனரல் சுலைமானி ஒரு அனுபவமிக்க இராஜதந்திரி அதே நேரத்தில் போர்க்களத்தில் எதிரிகளை மிரளவைத்த துணிச்சலான தளபதியுமாகும் என்று பாக்கரி மேலும் விவரித்தார்,

ஈரானின் உலகப் புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி ஜெனரல் சுலைமானி, ஈராக்கின் மக்கள் அணிதிரட்டல் பிரிவுகளின் (PMU) துணைத் தலைவரான அபு மஹ்தி அல்-முஹந்திஸுடன் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் ஜனவரி 3, 2020 இல் ஆளில்லா விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

பிராந்தியத்தில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் தாயேஷ் பயங்கரவாதக் குழுவை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்ததால், இரு தளபதிகளும் பிராந்தியத்தில் மிகவும் பிரபலமாக இருந்தனர்.

https://kayhan.ir/en/news/98566/iran-redefining-regional-geopolitics

Tuesday, January 11, 2022

சவுதி, எமிரேட்ஸ், பஹ்ரைன் முகத்திரையை கிழிக்கும் யுவோன் ரிட்லி

 KSA, UAE and Bahrain, the tyrannical triumvirate

சவூதி அரேபியா 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பிராந்தியத்தின் மிகவும் வறிய நாடான யெமனை ஆக்கிரமிப்பதற்காக ஒரு கூட்டணியைக் அமைத்தது, அது ஓர் இறுக்கமான கூட்டணியாக அமையவில்லை.. இந்த கூட்டணியில் சவுதிக்கு விசுவாசமாக இருக்கும் இரண்டு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.

போர் தொடங்கியதில் இருந்து, இந்த மூன்று நாடுகளும் யெமன் குடிமக்களை கருணையுடன் நோக்கவே இல்லை. இவர்களது மூர்க்கத்தனமான தாக்குதல்களினால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த கூட்டணியின் மனித உரிமைகள் அலட்சியம் யெமன் நாட்டில் மட்டும் நிகழ்வதாக எண்ணிக்கொள்ளாதீர்கள். அவர்களது சொந்த நாட்டில் கூட மனித உயிர் மற்றும் கண்ணியம் போன்றவற்றை மதிப்பது கிடையாது. அப்பாவி யெமன் மக்கள் மீதான இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை, இந்த மூக்கட்டு அநியாயத்தின் நீட்சியே ஆகும்.

ரியாத்தைப் பொறுத்தவரை, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் ஜமால் கஷோகியின் கொடூரமான கொலை, எதிரிகளை கையாளும் அவர்களது பொதுவான விதியாகும். இதனை ஒரு விதிவிலக்கு என்று கூற முடியாது.


கஷோகி ஒரு சவூதி ஊடகவியலாளர், அவர் சவூதி ஆட்சியாளர்களின் நடவடிக்கை சிலவற்றுட,ன் உடன்படவில்லை என்பதால் தான் அவருக்கு இந்த கதி நேர்ந்தது என்பதை சொல்ல தேவையில்லை.

உண்மையில், சவூதி அரேபியாவிலும், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது, மௌனிக்கப்படுவது,  அச்சுறுத்தப்படுவது அல்லது அவர்களது கதை முடிக்கப்படுவது ஆச்சர்யமான விடயமல்ல. சவுதி போலவே பஹ்ரைன் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய இரண்டு அரபு நாடுகளிலும் பேச்சு சுதந்திரம் என்பது நடைமுறையில் கிடையாது.

மனித உரிமைகள் என்று வரும்போது, சவுதி அதிருப்தியாளர் ஜமால் கஷோகியின் கொடூரமான படுகொலையில் நாம் பார்த்ததைப் போல, அவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மற்ற நாடுகளின் இறையாண்மையை மீறுவதில் கவலைப்படுவதே இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

துபாய் ஷேக் மக்தூம், தனது மகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக பிரிட்டனின் தெருக்களில் வைத்து அவரை கடத்தினார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.

இந்த ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே சட்டத்தின் ஆட்சியை மதிக்கவில்லை. மற்றவர்களின் நாடுகளில் சட்டத்தின் ஆட்சியை அவர்கள் நிச்சயமாக மதிக்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது..

யுவோன் ரிட்லி, எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்

அதிருப்தியாளர் எவராயினும் விட்டுவைக்கப்படுவதில்லை. முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப், இளவரசர் அஹ்மத் பின் அப்துல்அஜிஸ் மற்றும் முன்னாள் மன்னர் சவுத் பின் அப்துல்அஜிஸ் அல் சவுதின் மகள் இளவரசி பாஸ்மா பின்த் சவுத் அல் சவுத் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது ராஜ்யத்தின் தீவிரத்தை காட்டுகிறது.

இந்த பாரசீக வளைகுடா நாடுகள் சர்வதேச நியாய விசாரணைத் தரங்களுக்குக் கீழ்ப்படியத் தவறி வருகின்றன, பெரும்பாலும் மூடிய அறைக்குள் நடவடிக்கைகளை இரகசியமாக நடத்துகின்றன.

நியாயமான விசாரணை என்று எதுவும் அங்கு இடம்பெறுவது இல்லை. உண்மையில், பெரும்பான்மையான அரசியல் கைதிகளுக்கு, சவுதியில், எந்த விசாரணையும் இல்லை, இது உண்மையில் சவுதி அரசியலமைப்பிற்கு எதிரானது.

சவுதியில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார், நீதி, நியாயமெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன, எனவே விசாரணைகள் எவ்வாறு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், நியாயமான விசாரணை என்ற சொல்லைக் கூட மறந்துவிடுங்கள், அங்கு சோதனைகளே நிரம்பியுள்ளன. விசாரணையும் இல்லாமல் குற்றச்சாட்டும் இல்லாமல், காலவரையின்றி மக்கள் ஆயிரக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுவோன் ரிட்லி,

நீதித்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் செய்துள்ளோம் என்று பெருமையடித்த போதிலும் சவூதி அரேபியா 2021 இன் முதல் பாதியில் குறைந்தது 40 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

சவுதியின் நியாயமற்ற விசாரணைகள் அதன் சொந்த மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் "பயங்கரவாத அமைப்புடன்" தொடர்பு இருப்பதாக தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சவூதி அரேபியா 2020 மார்ச் இல், 68 பாலஸ்தீனியர்கள் மற்றும் ஜோர்டானியர்கள் மீது பாரிய விசாரணையைத் தொடங்கி தடுப்புக்காவலில் வைத்தது.

இதற்கிடையில், எண்ணற்ற முக்கிய ஆர்வலர்கள் தங்கள் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக குறிப்பாக அரபு உலகத்தை உலுக்கிய 2011 எழுச்சிக்குப் பிறகு நீண்டகால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்,

உதாரணமாக, பிரபல சவூதி மனித உரிமை ஆர்வலர் வலீத் சமி அபுல்கைர் சமூக ஊடகங்களில் மனித உரிமை மீறல்களை அமைதியான முறையில் விமர்சித்ததற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

உலகின் அந்தப் பகுதியில் மனித உரிமைகள் எப்போதுமே ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது, மேலும் மனித உரிமைகளின் திசையில் மாற்றம் இருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டாலும் இவை அனைத்தும் வெறும் பகட்டுக்காக வெளியில் காட்டப்படும் ஒப்பனையாக இருக்குமோ என்று நான் அஞ்சுகின்றேன்.

உண்மை என்னவென்றால், அன்றாட அடிப்படையில் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக சவுதியில் உரிமை கோரியதற்காக பெண்கள் மற்றும் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஆயினும்கூட, சவுதி தன்னை மிகவும் பெண் நட்பு கொண்ட நாடாக, பெண்களுக்கு உரிமைகளை வழங்கும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன போன்றும் மேற்கு நாடுகளுக்குக் காட்டிக்கொள்கிறது.

சரி, அது உண்மையானால், பெண் உரிமை ஆர்வலர்கள் சிலர் ஏன் இன்னும் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்?

யுவோன் ரிட்லி

லௌஜைன் அல்-ஹத்லூல், மாயா அல்-சஹ்ரானி, சமர் படாவி, நௌஃப் அப்துல்அஜிஸ் மற்றும் நசிமா அல்-சதாஹ் உள்ளிட்ட பல முக்கிய பெண் உரிமை ஆர்வலர்கள் 2018 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்தனர்.

லௌஜைன் அல்-ஹத்லோல் பின்னர் விடுவிக்கப்பட்டாலும், அவர் இன்னும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிலையம் அது போன்றதே,

மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர் மற்றும் கல்வியாளர் நாசர் பின் கைத் ஆகியோரின் இரண்டு வழக்குகள், ஒரு முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் உரிமைகளை மதிக்கும் தேசமாக தன்னை வர்ணித்துக் கொள்ளும் ஒரு நாட்டின் உண்மையான நிலையை துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்திய அதிகாரிகளை விமர்சித்த குற்றச்சாட்டில் பின்-கெய்த் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

உண்மையில், ஏராளமான ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சிறைகளில் நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பஹ்ரைனில், பதின்மூன்று முக்கிய எதிர்ப்பாளர்கள் 2011 இல் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டதில் இருந்து நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் அழுத்தம் காரணமாக, நாட்டின் மிக பிரபல மனித உரிமைப் பாதுகாவலர்களில் ஒருவரான நபீல் ரஜப், ஜூன் 9, 2020 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆயினும், தனது ஐந்தாண்டு சிறைத் தண்டனையின் மீதியை மாற்றுத் தடைச் சட்டத்தின் கீழ்  அனுபவிக்கின்றார்.

மனித உரிமைகளுக்கான பஹ்ரைன் மையத்தின் நிறுவனர் அப்துல்ஹாதி அல்-கவாஜா, எதிர்க் குழு அல் ஹக்கின் தலைவரான அப்துல்ஜலீல் அல்-சிங்கேஸ் மற்றும் பஹ்ரைனின் மிகப்பெரிய, ஆனால் இப்போது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்ட, எதிர்க்கட்சி அல்-விஃபாக்கின் தலைவர் ஷேக் அலி சல்மான். ஆயுள் தண்டனை அனுபவிக்கும் மற்ற முக்கிய அரசியல் கைதிகளில் அடங்குவர்.

மனித உரிமை மீறல்கள் என்று வரும்போது, தன்னிச்சையாக குடியுரிமையை ரத்து செய்யும் வழக்கத்தை பஹ்ரைன் ஆட்சி கடைப்பிடித்து வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் பஹ்ரைன் அதிகாரிகள் குடியுரிமையைப் பறித்த கிட்டத்தட்ட 300 பேர் பஹ்ரைன் குடியுரிமை இல்லாமல் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆட்சியுடனான உறவுகளை இயல்பாக்கியதன் மூலம், இந்த ஆட்சிகள் இன்னும் கூடுதலான மனித உரிமைகளை மீறல்களைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை இப்போது தங்கள் வசம் கொண்டுள்ளன.

இந்த அரபு நாடுகள் இஸ்ரேலிய NSO குழுமத்தின் ஸ்பைவேரான Pegasus ஐ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் டிஜிட்டல் ஒடுக்குமுறையின் மையத்தில் பயன்படுத்தி வருகின்றன என்பதை வெளிப்படுத்தும் அல்லது சுட்டிக்காட்டும் பல அறிக்கைகள் உள்ளன.

பயிற்சி பெற்ற கட்டிடக் கலைஞரும் பொறியியலாளருமான 82 வயதான டாக்டர். முஸ்தபா எனது நல்ல நண்பர், கடந்த ஆண்டு மதீனாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து காணாமல் போனார்.

அவர் காணாமல் போனது குறித்து அவரது குடும்பம் அமைதியாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நான் 82 வயதான டாக்டர். முஸ்தபாவின் பிரச்சினையை எழுப்பும் ஒரு தனிக் குரலாக இருக்கிறேன், மேலும் அவர் விசாரணையின்றி, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர்.

யுவோன் ரிட்லி

சமீபத்திய ஆண்டுகளில், ரியாத், அபுதாபி மற்றும் மனாமா ஆகியவை தங்கள் கறைபடிந்த பெயரை மேம்படுத்த பயன்படுத்தும் ஒரு பொதுவான தந்திரமாக 'ஸ்போர்ட்ஸ்வாஷிங்' உத்வேகம் பெற்றுள்ளது.

சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவது மற்றும் உலகெங்கிலும் உள்ள பிரபலமான விளையாட்டுக் கழகங்களை விலைகொடுத்து வாங்க முயற்சிப்பது அனைத்தும் அவர்களின் 'ஸ்போர்ட்ஸ்வாஷிங்' திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை மனித உரிமைகள் அடிப்படையில் மோசமான நாடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆயினும்கூட, அவர்கள் மேற்குலக நாடுகளில் இருந்து பெறும் கிட்டத்தட்ட நிபந்தனையற்ற ஆதரவுடன் , அவர்கள் நிலைமையை மேம்படுத்த இதயசுத்தியான எந்த முயற்சியும் எடுக்காமல், தங்கள் அப்பட்டமான மனித உரிமைகளை மீறல்களை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாடுகளில் மக்கள் படும் துன்பங்களுக்கு முடிவே இல்லை; இந்த மூன்று நாடுகளு பிராந்தியத்தில் கொடுங்கோன்மையின் முக்கோணம். சர்வதேச சமூகம் இதை கண்டுகொள்வதில்லை.

https://www.presstv.ir/Detail/2022/01/02/673888/KSA-UAE-Bahrain-Tyrannical--Arabian-Trio

Monday, January 3, 2022

ஷஹீத் காஸிம் சுலைமானி ஓர் அபூர்வ நபர்

 Shaheed Qasim Soleimani was an extraordinary person


ஈரானின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்புத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானி ஈராக் தலைநகரில் அமெரிக்காவால் உத்தரவிடப்பட்ட கோழைத்தனமான படுகொலைக்குப் பிறகும், அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்க மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பார் என்று அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல் விமர்சகரும் கூறுகிறார்.

"இமாம் ஹுசைன், மால்கம் எக்ஸ் மற்றும் சே குவேரா போன்ற வரலாற்று நபர்களைப் போலவே, ஜெனரல் காசிம் சுலைமானியும் அவரது மரணத்திற்குப் பிறகும் அநீதி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பார்" என்று கெவின் பாரெட் ஞாயிற்றுக்கிழமை பிரஸ் டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறினார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் ஒரு நபராக, தியாகி காசிம் சுலைமானியைப் பற்றி எனது சிந்தனையை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

ஷஹீத் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. இவரின் ஞாபகார்த்தமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இடம்பெற்று வருகின்றன என்பதில் இருந்தே ஈரானிய மக்கள் இவர் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. 33:23

இமாம் அலியின் சுல்பிகர் வாள் போன்ற கூர்மையான கண்களாலும்அவரது உறுதியான செயல்பாட்டினால், ஜெனரல் ஹாஜ் காசிம் சுலைமானி மக்கள் இதயங்களில் ஒரு முக்கிய இடத்தை செதுக்கி, தியாகத்தை தனது வாழ்க்கை முன்மாதிரியாக மாற்றி, அவரது பெயரை என்றென்றும் செதுக்கியுள்ளார்.

ஈரானியர்களுக்குள் இருந்து ஒரு சாதாரண மனிதன் இஸ்லாமிய தேசத்தின் சிறந்த ஆளுமை மற்றும் சாம்பியனானார். தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோவானார்.

ஒரு சாதாரண தொண்டனாக ராணுவத்தில் இணைந்த சுலைமானி, தன்னுடைய திறமையின் காரணமாக படிப்படியாக உயர்ந்து ஜெனெரல் ஆனார்.


"ஷஹித் சுலைமானி தைரியமானவர், நுண்ணறிவுள்ளவர். அவரது நடவடிக்கைகள் வெறுமனே தைரியத்தால் குறிக்கப்படவில்லை. சிலருக்கு தைரியம் இருக்கிறது, ஆனால் அவர்களின் தைரியத்தைப் பயன்படுத்த தேவையான ஞானமும் புத்திசாலித்தனமும் அவர்களுக்கு இல்லை. மேலும் சிலர் ஞானவான்களாக இருப்பர், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுப்பதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை. எங்கள் அன்புக்குப்பாத்திரமான தியாகி சுலைமானி இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த அபூர்வ நபர்; இருவருக்கு தேவையான தைரியமும் தேவையான புத்திசாலித்தனமும் அதேசமயம் இறையச்சமும்  அவரிடம் இருந்தது".

பல ஆண்டுகளாக, சர்தார் சுலைமானி உலகின் தீய செயல்களுக்கும் மனித உருவங்களில் உலாவும் பிசாசுகளுக்கு எதிராக பல்வேறு போர்க்களங்கள் மற்றும் முனைகளில் போராடினார் மற்றும் எந்தவிதமான பயமும் அச்சமும் இல்லாமல், தொடர்ச்சியான நடவடிக்கைகளை திட்டமிட்டார், அதில் தனது சகாக்களுடன் மற்றும் வீரர்களுடன் அவரும் பங்கேற்றார்.

அவர் ஒரு தனித்துவமான இராணுவ மனிதர், ஒரு தனித்துவமான அரசியல் சிந்தனையாளர் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நிபுணத்துவ அறிவைக் கொண்டவர்.

தனது முக்கிய ராணுவ கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கலந்துகொள்வதோடு, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் மற்றும் பயனுள்ள பிற பணிகளிலும் கலந்து கொண்டார்.

தேசிய மற்றும் நாடுகடந்த பிராந்திய நலன்களின் ஒருங்கிணைப்பை அவர் நம்பினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ஈரானிய எல்லைகளுக்குள்ளும் அதைச் சுற்றிய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டார்.

அதேசமயம் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்ற பகுதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை தானாகவே உறுதி செய்யும் என்று நம்பினார்.

பிராந்திய பாதுகாப்பைப் பேணுவதற்கு இராஜதந்திரமே சிறந்த வழி என்று அவர் உறுதியாக நம்பினார்.

இந்த அணுகுமுறை அவரது செயல்பாட்டு வேறுபாடுகளைக் காட்டுகிறது.

நாட்டிற்கு ஆதரவாக ஒரு நிலையான ஒழுங்கை நிறுவும் போதும் அவர் அச்சுறுத்தல்களைத் தவிர்த்தார். பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவதற்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான ஆதரவை அவர் முன்மொழிந்தார்.

எதிரிகளின் விரிவாக்கத் திட்டங்களையும் பிரிவினைவாத இயக்கங்களையும் முறியடிக்க அவரால் முடிந்தது.

மேற்கு மற்றும் மொசாட்டின் உளவுத்துறை சேவைகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் பயங்கரவாத கூறுகளை மத்திய கிழக்கிலிருந்து அகற்றுவதில் வெற்றிகண்டார்.

மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பினாமி யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் அடைய விரும்பிய "நைல் முதல் யூப்ரடீஸ் வரை" என்ற கனவு ஒரு இழந்த இலட்சியமாகும் என்பதை சியோனிச ஆட்சி புரிந்துகொள்ள வைத்தது.

அமெரிக்க தலைமையிலான மேலாதிக்க அமைப்பின் விருப்பமான கட்டமைப்பு சித்தாந்தத்தை சர்தார் சுலைமானி பல்வேறு தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் ஒரு விரிவான செயற்பாட்டின் மூலம் சவாலுக்கு உட்படுத்தினார்.

இவர்களது இந்த சர்வதேச மேலாதிக்க திட்டத்திற்கு பெரும் சவாலாக இருக்கின்றது என்பதனாலேயே ஈரானுக்கு பெரும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் இன்று முகம்கொடுத்துள்ள கஷ்டங்களுக்கும் இதுவே காரணமாகும்.

கருத்தியல் துறையில் அரசியல் போக்கை ஈரானுக்கு ஆதரவாக மாற்றுவதில் சுலைமானி வெற்றிகண்டார். இவை சுலைமானியின் சில தனித்துவமான குணங்களாகும், இது சர்வதேச அரங்கில் தியாகி சுலைமானியின் மதிப்பை உயர்த்தியது,

இதயத்தில் பதிந்த இந்த தளபதியின் ஆளுமையின் மகத்துவம் ஈரானியர்களை மட்டுமல்ல, மத்திய கிழக்கு மக்களையும், சுதந்திரத்தை விரும்பும் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியது.

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.    ஸூரத்துல்ஆல இம்ரான் 3:169.