Wednesday, July 28, 2021

கதீர் கும் ஹதீஸின் பின்னணி அறிவோம், இஸ்லாமிய ஒற்றுமைக்காப்போம்

Understand  the background of Ghadir Khumm and protect Islamic unity

பல நூற்றாண்டு காலமாக பிரிந்திருந்தது ஒருவருக்கொருவர் குற்றம் குறை சொல்லிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய உலகின் ஒற்றுமை கருதியே இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பிறகு ‘அலீ (அலை) அவர்களை கலீபாவாகவும் முஸ்லிம்களின் பாதுகாவலராகவும் நியமித்தார்கள் என்பதற்கான உறுதியான சான்றுகளில் ஹதீஸ் கதீர் கும் ஒன்றாகும் என்று ஷீஆ முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

இந்த விஷயத்தில், இங்கே தரப்படும் ஆதார ஆவணங்களும் குறிப்புகளும் இத்தனை இருக்கும்போது, உலக முஸ்லிம்களிடமிருந்து, குறிப்பாக அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களிடமிருந்து, இந்த தெளிவான ஹதீஸ் ஏன் மறைக்கப்பட்டது என்று சிந்திப்போரை நிச்சயமாக வியப்பில் ஆழ்த்தும்!

அஹ்லுஸ் சுன்னா இமாம்களின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் இந்த தர்க்கரீதியான பகுப்பாய்வுகள் மற்றும் முன்னர் கவனத்தில் எடுக்கப்படாத உண்மைகளை துல்லியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே கட்டுரையாக வடிக்கப்படுகிறது.

எம்மில் பலர் இந்த ‘கதீர் கும்’ என்ற சொல்லையே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்; ஏனென்றால் அது எங்களுக்கு சொல்லித்தரப்படவில்லை, வேண்டுமென்றே மறைக்கப்பட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

‘கதீர் கும்’ மக்காவிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ள ஜுஃபாவுக்கு அருகில், மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலான ஒரு நீர்நிலை இருக்கும் பகுதி.

அவ்விடத்தில் இருந்து தான் நபி (ஸல்) அவர்கள் ஹி,பி, 10ம் ஆண்டு துல்-ஹஜ் மாதம் பதினெட்டாம் நாளில், ஹஸரத் அலீ (அலை) அவர்களை கலிபாவாக நியமித்தார்கள். இதற்கான அஹ்லுஸ்ஸுன்னா ஆதாரங்களை பிறகு பார்க்கலாம்.

அரசியல் நோக்கங்களுக்காக, அதிகாரத்தில் இருந்த சிலர் இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வின் நினைவகத்தை அழிக்க முயன்றனர், இப்போதும் கூட, சில தனிநபர்கள், சில காரணங்களுக்காக, அதை மறைக்க முயற்சிக்கிறார்கள், ஆயினும்கூட, இந்த நிகழ்வு பரிமாணங்கள் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றில் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பதியப்பட்டுள்ளது. ஆகவே இதை மறக்கடிக்கச் செய்வது என்பது இலேசான காரியமாக அமையாது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ‘அலீ (அலை) அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரங்களில் கதீர் பாரம்பரியமும் ஒன்றாகும், இஸ்லாமிய ஆய்வாளர்கள் அதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை வழங்குகிறார்கள்.

அலீ (அலை) அவர்களது தலைமைத்துவம் குறித்து விவாதிப்பவர்கள் கூட இந்த ஹதீஸை நிராகரிப்பதில்லை; அதன் நம்பகத்தன்மையைப் பற்றி கேள்வி எழுப்பாது ஏற்றுக்கொள்கிறார்கள், ஏனெனில் 110க்கும் அதிகமான சஹாபாக்களால் அறிவிக்கப்பட்ட முதவாத்திரான ஹதீஸ் அதுவாகும். ஆனால் குறித்த ஹதீஸில் வரும் "மௌலா" எனும் சொல்லின் உட்பொருளிளிலேயே முரண்பாடு தெரிவித்து இணங்க மறுக்கிற்றார்கள் என்பது இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸின் வெவ்வேறு அம்சங்களை தெளிவுபடுத்துவதற்கு, இவ்விரு குழுக்கள் கூறுவதை உண்மையான மற்றும் சரியான ஆதாரங்களுடன் ஆராய வேண்டியது அவசியம்:

கதீரின் சம்பவத்தின் பின்னணி

அல்லாஹ்விடமிருந்து றஸூலுல்லாஹ்வுக்கு பின்வரும் வசனம் வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் இறக்கப்படுகிறது:

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ ۖ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ۚ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவர் ஆக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

வசனத்தின் தொனியை நோக்குங்கள், அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒரு தீர்க்கமான பணியை நிறைவேற்ற நியமித்திருப்பதைக் அது குறிக்கிறது. இது அவருடைய தீர்க்கதரிசன பணிக்குரிய விடயமாகும், அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும் என்பதையும் இந்த வசனம் குறித்து நிட்கிறது.

அவ்விடத்தில் கூடியிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முன்னால் கலீபா, பாதுகாவலர் மற்றும் வாரிசு தரத்திற்கு அலீ (அலை) அவர்கள்  நியமிக்கப்பட்டதை விட அச்சமயத்தில் வேறு எந்தவொரு முக்கியமான பணியும் அங்கு இடம்பெற்றதா...? என்று சிந்தித்துப் பாருங்கள்.

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தமது பரிவாரத்துக்கு முன்னாள் சென்றோரை திரும்பி வரும்படி அழைத்ததுடன் பின்னால் வருவோருக்காக காத்திருந்து பின்வருமாறு உரையாற்றினார்கள்:

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நாம் அவனிடம் இருந்தே உதவியை நாடுகிறோம், அவனையே விசுவாசம் கொள்கிறோம். நம்முடைய தீங்கு விளைவிக்கும் மற்றும் தீமையான செயல்களுக்காக அவனிடமே மீழுகின்றோம். இறைவா, வழிகாட்டி இல்லாதவர்களைக் காப்பாற்றுவாயாக. யார் ஒருவன் இறைவனால் வழிநடத்தப் படுகிறானோ, அவனுக்கு எந்த கவலையும் இருக்காது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கிறேன், அவனையே வழிபடுங்கள், முஹம்மத் அவனுடைய அடிமை மற்றும் தீர்க்கதரிசி.

மகா ஜனங்களே..! விரைவில், நான் இறைவனின் அழைப்பை ஏற்று சென்றுவிடுவேன், உங்களை விட்டும் பிரிந்துவிடுவேன். எனது விடயங்களுக்கு நான் பொறுப்பு, உங்கள் விடயங்களுக்கு நீங்கள்! அவர் தொடர்ந்தும் கேட்டார்கள்: என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!?  (உங்களுக்கான எனது பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேனா?) கூட்டத்தினர் அனைவரும் சொன்னார்கள்: உங்கள் தீர்க்கதரிசன பணியை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள், முயற்சி செய்தீர்கள் என்பதற்கு நாங்கள் சாட்சியமளிக்கிறோம். இறைவன் உங்களுக்கு நல்ல வெகுமதிகளை வழங்குவான்.

நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: அகிலமனைத்தினதும் இறைவன் ஒருவன் என்பதையும், முஹம்மத் அவனது அடிமை, தூதன் என்பதற்கும் மேலும் சொர்க்கம், நரகம், மறுமை உலகில் நித்திய ஜீவியம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்களா...? ஆம், அது உண்மை. நாங்கள் சாட்சியமளிக்கிறோம்..! என்று அனைவரும் பதிலளித்தனர்:

அவர் மேலும் கூறினார்: மக்களே, நான் உங்களிடம் இரண்டு விலைமதிப்பற்ற விஷயங்களை விட்டு செல்கிறேன். இவ்விரண்டு விடயங்களுடனும் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை நான் அவதானிப்பேன்..! நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: அவற்றில் ஒன்று புனித குர்ஆனாகும், அதன் ஒரு முனை வல்லோன் இறைவன் கையில் உள்ளது, மறுமுனை உங்களிடம் உள்ளது. அடுத்தது என்னுடை அஹ்லுபைத் (குடும்பம்) ஆகும். இவை இரண்டும் ஒருபோதும் ஒன்றையொன்று பிரியாது என்று வல்ல அல்லாஹ் எனக்கு அறிவித்திருக்கிறான்.!

மக்களே, உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன், குர்ஆனையும் எனது குடும்பத்தையும் மிஞ்சாதீர்கள். வை இரண்டையும் பின்பற்றத் தவறாதீர்கள். இல்லையெனில், நீங்கள் அழிந்து விடுவீர்கள்..!

பின்னர், அவர் ‘அலீயின்  (அலை) கையை பற்றி, அதை மிக உயரமாக உயர்த்தி மக்களிடம் வினவினார்கள்: விசுவாசிகளுக்கு தம்மை விட அதிக அங்கீகாரமும் உரிமையும் உள்ளவர் யார்? என்று,

இறைவனும் அவனது தூதருமே இதைப்பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர் என்று அனைவரும் பதிலளித்தனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் என்னுடைய எஜமானன், நான் விசுவாசிகளின் தலைவன், நான் தங்களை விட அதிக அங்கீகாரமும் உரிமையும் உடையவன்! மக்களே, ஜாக்கிரதை!

من کنت مولاه فهذا علی مولاه

நான் யார் யாருக்கெல்லாம் தலைவனாகவும் அதிகாரமுடையவனாகவும் இருக்கின்றேனோ (எனக்குப் பின்) இந்த அலீ அவர்களுக்கெல்லாம் தலைவராகவும் அதிகாரமுடையவராகவும் இருப்பார்.

எதிர்காலத்தில் எந்த தவறும் ஏற்படாமல் இருக்க நபி அவர்கள் இந்த சொற்றொடரை மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார்!

اللهم وال من والاه و عاد من عاداه و احب من احبه و ابغض من ابغضه و انصر من نصره و اخذل من خذله و ادر الحق معه حیث دار.

இறைவா, ‘அலீ’யுடன் நட்பு கொண்டோருடன் நீயும் நட்பாக இரு,‘ அலீ’க்கு எதிரியாக இருப்போருடன் நீயும் எதிரியாய் இரு. அலீக்கு உதவி செய்பவருக்கு நீ உதவியாய் இரு, அவரை விட்டு விலகியவரை விட்டும் நீயும் விலகியிரு என்று கூறிவிட்டு, சத்தியத்தின் அளவுகோலாக அவரை ஆக்கு' என்றும் இறைஞ்சினார்கள்.

மேற்கண்ட பிரசங்கத்தை அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் தங்கள் புத்தகங்களில் விவரித்திருக்கிறார்கள்:

-        முஸ்னத் அஹ்மத்: தொகுதி. 1, பக். 84, 88, 118, 119, 152, 281, 331, 332, 370;

-        சுனன் இப்னு மஜா, தொகுதி. 1, பக். 55, 58;

- அல்-முஸ்தத்ராக் அலீ-சாஹிஹீன் ஹக்கீம் நிஷாபுரி, தொகுதி. 3, பக். 118 & 613;

-        சுனன் திர்மிதி, தொகுதி. 5, பக். 633;

-        ஃபத் அல்-பாரி, தொகுதி. 79, பக். 74;

-       பாக்தாதி போதகரின் வரலாறு, தொகுதி. 8, பக். 290; கலீபாக்கள் மற்றும் சுயூத்தியின் வரலாறு, ப. 114

ஸெய்த் இப்னு அர்க்கம் கூறுகிறார்: முஹாஜிர்களில் இருந்து வந்த அபுபக்கர், உமர், உத்மான், தல்ஹா மற்றும் ஜுபைர் (அல்லாஹ் அவர்கள் அனைவரையம் பொருந்திக் கொள்ளட்டும்) ஆகியோர் முதலில் ‘அலீ’க்கு மரியாதை செலுத்தியோராகும், அதைத்தொடர்ந்து வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வு சூரிய அஸ்தமனம் வரை தொடர்ந்தது. இது அஹ்மத் இப்னு முகமது தபரி தொகுத்த அலீ பின் அபி தாலிப்பின் நல்லொழுக்கங்கள் என்ற புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

இந்த கதீர் வரலாற்று நிகழ்வை எல்லா காலத்திலும், நூற்றாண்டுகளிலும், ஒரு நேரடி வரலாறாகவும், இதயங்களையும் மனதையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாகவும், இஸ்லாமிய எழுத்தாளர்கள் அதை விவரித்துள்ளனர். வரலாறு, பாரம்பரியம் மற்றும் இறையியல் புத்தகங்கள் மற்றும் மத சொற்பொழிவாளர்கள்  இமாம் அலீயின் (அலை) மறுக்க முடியாத நல்லொழுக்கங்கள் பற்றி பேசுகையில் அவற்றில் ஒன்றான இது பற்றியும் விரிவுரைகளை வழங்குவதற்கு, இவ்விடயம் விவாதிக்கபட வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரம்பரியவாதிகள், வர்ணனையாளர்கள், இறையியலாளர்கள், தத்துவவாதிகள், சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு வகுப்பினரால் உலகில் எழுதப்பட்ட வேறு எந்த வரலாற்று நிகழ்வுகளும் இந்த அளவு முக்கியத்துவம் பெறவில்லை எனலாம்.

இந்த பாரம்பரியத்தின் நித்திய தன்மைக்கான காரணங்களில் ஒன்று, சூரா அல்-மாயிதா 5:3 மற்றும் 5:67 ஆகிய இரண்டு குர்ஆனிய வசனங்களாகும். குர்ஆன் நித்தியமானது என்பதால், இந்த வரலாற்று நிகழ்வும் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.

சம்பவம் நிகழ்ந்த துல்-ஹஜ் 18ம் தினத்தை ஓர் உன்னத தினமாகவும் மகிழ்ச்சிக்குரிய பண்டிகைத் தினமாகவும் "ஈத் கதீர்" பெருநாள் என்று உலகமனைத்திலும் உள்ள ஷீஆ முஸ்லிம்கள் இன்றளவிலும் கொண்டாடி வருகின்றனர். உலகில் பல நாடுகள் இத்தினத்தை விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அபுரைஹான் அல் பிருனி, அஸ்ஸருல் பாகீஹில் “ஈத் கதீர்” நாளானது அனைத்து முஸ்லிம்களும் கொண்டாடி வந்த ஒரு திருநாள் என்று குறிப்பிடுகின்றார். இப்னு கல்கானும் அவ்வாறே குறிப்பிடுகின்றார்.  அதுமட்டுமல்ல பிரபலமான அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களில் ஒருவரான தஆபி, கதீர் இரவை இஸ்லாமிய உலகின் பிரபலமான இரவுகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.

இப்போது சிலர் ரசூலுல்லாஹ் குர்ஆனையும் அவரின் வழிமுறைகளையும் (ஸுன்னாவையும்) பின்பற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. றஸூலுல்லாஹ்வின் சுன்னா என்பது அவரின் சொல், செயல் மற்றும் அங்கீகாரம் என்பனவாகும். இவற்றை ஆராய்வோம்.

முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்ப்போம், புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டு தலைநிமிர்ந்து வாழ்வோம்.

தாஹா முஸம்மில்



Sunday, July 25, 2021

சவூதி அரேபியா யெமன் மீது போர் தொடுத்தது ஏன்?

 Why did Saudi Arabia wage a war on Yemen?


ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிக்கிடந்த மேற்கு ஆசியாவின் வரலாற்றில் யெமன் மீதான போர் ஒரு பெரிய எழுச்சியை  ஏற்படுத்தியுள்ளதாகத் காட்டலாம், இருந்தாலும் இது நிச்சயமாக வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மோசமான செயலாகவே பதியப்படும். சவுதிகளின் மோசமான பக்கங்களை பதிவதாகவே அமையும் என்பது திண்ணம்.

மார்ச் 2015 இல், சவூதி அரேபியாவும் சில நட்பு நாடுகளும் ரியாத் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதாக அறிவித்தன. அரேபியர்கள் முதன்முறையாக ஒரு இராணுவ கூட்டணியை உருவாக்கி, பெரும் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் பரந்த அளவிலான குண்டுவீச்சுகளை நடத்தி வந்தனர் என்பது பல தசாப்தங்களில் கேள்விப்படாத ஒன்று, குறிப்பிட்ட ராணுவ தாக்குதல் Operation Decisive Storm என்று அழைக்கப்பட்டது. ஒரு சில அரபு நாடுகளிடையே “இந்த தைரியமான செயலையும் துணிந்த தலைமைத்துவத்தையும் நாங்கள் திடீரென்று காண்கிறோம்” என்று இப்பகுதியில் பலர் நக்கலாக எடுத்துரைத்தனர்.

“அரேபியர்களின் புயல்” என்று பெயரிட்டு சகோதர முஸ்லிம் நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த யுத்தமானது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.


பல தசாப்தங்களாக
பாலஸ்தீனியர்கள் ஒரு படுகொலைக்குப் பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரேலிய தாக்குதல்களை 1948 முதல் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறோம், நாங்கள் எந்த ஒரு அரபு புயலையும் காணவில்லை. இதுபோன்றதொரு செயல்பாட்டை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களும் லெபனானியர்களும் இந்த அளவிலான ஒரு அரபு புயலை காண வேண்டும் என்று கனவு கண்டனர்.

சவூதி அரேபியா வேறொரு நாட்டில் இந்த அளவிற்கு ஒரு போரை நடத்த முன்வந்ததற்காக மூன்று காரணங்களை அந்த நேரத்தில் முன்வைத்தது:

முதலாவதாக, முன்னாள் ஜனாதிபதி அப்தர்ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான யெமனின் முன்னாள் அரசாங்கம் சவுதியின் இராணுவத் தலையீட்டைக் கோரியது. இருப்பினும், பாலஸ்தீனியர்களும் அத்தகைய தலையீட்டையே கோரியிருந்தனர், இன்றும் அத்தகைய தலையீட்டைக் கோரி வருகின்றனர் என்பதை நாம் மறத்தல் ஆகாது; ஆனால் இன்றுவரை, அவர்களின் முறையீடுகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கின்றன. அதற்கு பதிலாக சவுதிகளும் அவர்களது கூட்டாளிகளும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக சதிசெய்து, இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான ஸ்தலமான பைத்துல் முகத்தஸை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் அல்-குத்ஸ் உடன் இஸ்ரேலியர்களுக்கு தாரைவார்த்தனர் என்று குற்றம்சாட்டப்படுகின்றது.


யெமன் தலைநகர் சானாவில் முன்னாள் சவுதி ஆதரவு மன்சூர் ஹாதி அரசாங்கத்திற்கும் புதிய தேசிய இரட்சிப்பு அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிந்தன, இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக யெமனில் இருந்து ஒரு அச்சுறுத்தலை உணர்ந்ததாக சவுதிகள் கூறினர். முன்னாள் ஜனாதிபதி ஹாதி ரியாத்துடன் கூட்டணி வைத்திருந்தவர். இயற்கையாகவே ரியாத்துடன் பக்கபலமாக இருந்தார் என்பது இங்கே கவனிக்க வேண்டியது அவசியம்.  அதேசமயம், ஒரு மக்கள் புரட்சியின் ஆதரவுடன் அமையப்பெற்ற புதிய தேசிய இரட்சிப்பு அரசாங்கம் யெமன் மீதான, பல தசாப்தங்களாக தொடரும் சவூதி அரேபிய கட்டுப்பாட்டை எதிர்த்ததுடன், சவூதி இராச்சியத்திலிருந்து சுதந்திரத்தையும் நாடி நின்றது.


யெமன் மீதான தனது பிடியை இழந்த ஹாதி
, நாட்டைவிட்டு ரியாத்துக்கு தப்பி ஓடினார். ஒரு மக்கள் புரட்சியால் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டாலும், வாதங்களுக்காக, ஹாதியே அந்நாட்டின் நியாயமான ஜனாதிபதி என்று வைத்துக்கொள்வோம், ரியாத், இதுபோன்ற பேரழிவு தரும் போரை தொடுக்க இது ஒரு நியாயமான காரணமா..?

இஸ்லாமாகிய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட நியூனிசிய புரட்சியால் 2011ல்  மற்றுமொரு சவூதி ஆதரவாளரான முன்னாள் நியூனிசிய ஜனாதிபதி ஸைனுல் ஆபிதீன் பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டு, சவூதி அரேபியாவுக்கு தப்பி ஓடியபோது, சவூதி இப்போது முன்வைக்கும் காரணத்தை பார்க்கையில், பென் அலியை மீண்டும் பதவியில் அமர்த்த துனிசியா மீது போர் தொடுத்திருக்க வேண்டுமே...? ஏன் அது அவ்வாறு செய்யவில்லை....?

அதேபோல் சவுதி அரேபியாவின் அண்டை நாடான எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஹொஸ்னி முபாரக்கை  மீண்டும் பதவியில் அமர்த்த சவூதி அரேபியா முயன்றது என்பது உண்மைதான், என்றாலும் அது ஒரு இராணுவ ரீதியாக தலையீடாக இருக்கவில்லை, ஒரு போரையும் நடத்தவில்லை. இது சவுதி கூறும் காரணம் இயல்பாகவே தவறானது என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல், யெமனுக்கு எதிராக மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது என்ற விடயம்  கவனத்தை ஈர்க்கிறது.

யெமனுக்கு எதிராக மட்டும் போர் தொடுத்தது ஏன்? யெமனுக்கு எதிராக போரை நடத்துவதற்கான இந்த அவசரமான நடவடிக்கை ஏன்? முதலில் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தப்படவில்லையே, ஏன்? சமாதான முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஏன்...? என்ற கேள்விகள் எழுகின்றன அல்லவா.

ரியாத் தனது தெற்கில் உள்ள மிகவும் வறிய அண்டை நாடான யெமன் மீது போர் தொடுக்க கூறிய இரண்டாவது காரணம், "அன்சாருல்லா தலைமையிலான மக்கள் புரட்சி சவுதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதுடன் அரபுக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடலின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது" என்பது மிகவும் வினோதமானது. எந்த நியாயமும் அற்றது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க சவுதி அரேபியா ஏதேனும் ஆதாரங்களை முன்வைத்ததா? இந்த கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை பிராந்தியத்திற்கு அல்லது உலகிற்கு முன்வைத்திருந்தால் பேரழிவு தரும் ஒரு பயங்கரமான போரை நடத்த வேண்டிய தேவையே ஏற்பட்டிக்காது அல்லவா.

இப்பிராந்தியத்தில் மிகவும் வறிய நாடு யெமன் என்பது அனைவரும் அறிந்ததே. பாதுகாப்பு பிரச்சினைகள் முதல் பயங்கரவாதம் வரை பல சவால்களை அது எதிர்கொண்டது என்பதும் நன்கு அறியப்பட்டதாகும், உதாரணமாக ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாட்டு மக்களுக்கு அடிப்படை சேவைகளை மீண்டும் வழங்குதல், நொறுங்கிய உள்கட்டமைப்பை மீள் கட்டியெழுப்புதல், அல்-கய்தா போன்ற தமது நாட்டில் இயங்கும் தக்ஃபிரி பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக போராடுதல் போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள். இவ்வாறான சிக்கல்களுக்கு முகம்கொடுத்துள்ள வேளை, பிராந்தியத்தில் பணக்கார இராச்சியமான சவுதி அரேபியாவுக்கோ, அல்லது பாரசீக வளைகுடாவிற்கோ அல்லது செங்கடலுக்கோ யெமன் புதிய அரசு அச்சுறுத்தலாக இருக்க முடியுமா? ஆகவே, சவூதி கூறிய இதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்டது.


அந்த நேரத்தில் சவூதி ஊடகங்கள் மற்றும் பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள சவுதி நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து ஊடகங்களிலும் பரவியிருந்த மூன்றாவது மற்றும் மிக முக்கியமான காரணம்: யெமன் ஈரானால் 'ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது', 'கட்டுப்படுத்தப்படுகிறது'. ஆகவே  யெமனை மீண்டும் 'அரபு அரபுலகிற்கு' மீட்க இராணுவ தலையீடு அவசியம் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யெமன் ஒரே இரவில் ஈரான்மயப்படுத்தப்பட்டது.

நீங்கள் யெமனின் மொழி, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், கண்ணியம், போராட்டம் மற்றும் சவுதிகளுக்கு எதிரான அதன் உறுதியான தொடர் போராட்டத்தை படிக்கும்போது யெமனியரின் நிலையை நன்றாக புரிந்துகொள்ள முடியும்; யெமன் மக்கள் அரேபியர்கள் இல்லையென்றால், வேறு யார்தான் அரேபியர்கள்?

இது ஒரு ஈரானுக்கு எதிரான மாபெரும் குற்றச்சாட்டு என்பதால், அதை ஆவணப்படுத்தி கவனமாக மற்றும் தர்க்கத்துடன் ஆராய வேண்டியுள்ளது.

சவுதிகள் ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளதால், முதலில் அது தொடர்பான அம்சங்களைச் பாப்போம். ஈரான் யெமனை ‘ஆக்கிரமித்துள்ளது’ என்பதற்கான சான்றுகள் எங்கே? ஈரானின் இராணுவம் யெமனை அல்லது யெமனின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனது என்றால்  யெமன் பிரதேசத்தில் ஈரானிய இராணுவ தளங்கள் ஏதேனும் இருந்தனவா...? இல்லையே. ஆகவே  குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது, நகைப்புக்குரியது.

சவுதிகள் உண்மையில் ஈரானிய இராணுவ ஆக்கிரமிப்பைக் குறிக்கவில்லை, ஆனால் யெமன் மீது ஈரானியர்கள் மேலாதிக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். யெமனில் மட்டுமல்ல, முழு பிராந்தியத்திலும் உள்ள தவறான கருத்தை புரிந்து கொள்ள இந்த விடயம் நன்றாக கவனிக்கப்பட வேண்டும்.

இங்கே, சவூதி அரேபியாவின் ஆளும் முடியாட்சியின் மனநிலையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  அமெரிக்காவின் முழுமையான ஆதரவுடன் சவூதி உள்ளது மற்றும் இஸ்ரேலின் ஆதரவும்  இருப்பதாகவு பரவலாக நம்பப்படுகிறது. இந்த ஆளும் முடியாட்சிக்கு மேற்கு ஆசியாவில் சுயாதீன ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படுகின்ற தேசங்களுடன் ஒரு பிரச்சினை உள்ளது. ஒரு சுயாதீன டியூனீசிய அரசு அல்லது சுயாதீன சிரிய அரசு அல்லது வாதங்களுக்காக, ஒரு சுயாதீன எகிப்திய அரசு அல்லது சுயாதீன பாரசீக வளைகுடா நாடுகள், சவூதி அரேபியாவில் இயங்கும் சுயாதீன ஜனநாயக நிறுவனங்களுடன் கூட பிரச்சனைகள் உள்ளன. மேற்கு ஆசிய முடியாட்சிகள் மக்களையும் இரும்புக் கரங்களுடன் ஆட்சி செய்கின்றன என்பது ரகசியமல்ல, எந்தவொரு சுதந்திரத்தையும் அவற்றின் அதிகார ஆட்சிக்கு எதிரான ஒரு வடிவமாக கருதுகின்றன.

ஆளும் பழங்குடியினரின் இந்த தர்க்கம், வழக்கமான வெளியுறவுக் கொள்கை தொடர்பான தவறான கணிப்புகள், இழப்புகள் மற்றும் இராஜதந்திர தவறுகளுக்கு வழிவகுக்கிறது என்பதே உண்மை.

சவூதி அரேபியாவின் ஓர் உண்மையான வெளியுறவுக் கொள்கை சாதனைகளில் ஒன்றையாவது கண்டறிவது கடினம். யெமனுக்கு எதிரான சவுதி அரேபியாவின் யுத்தம் ஆறு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் முடித்து, யெமனை வழிக்கு கொண்டுவந்துவிடலாம் என்று ரியாத் கணித்தது,  ஆயினும் இதில் தோல்விக்கு மேல் தோல்வியையே சந்தித்தது மட்டுமல்லாமல் சவூதி ராஜ்யத்திற்கு மீண்டுவர முடியாத ஒரு புதைகுழியாகவும் அமைந்துவிட்டது.

அனைத்து வளங்களும் இருந்தபோதிலும், இஸ்லாத்தின் இரண்டு புனிதமான தளங்களை கொண்டிருந்த போதிலும் இப்பகுதியில் சவுதி அரேபியா ஒரு வலுவான தலைமையை கொண்டிருக்கவில்லை. மேலும் அதன் தோல்வியுற்ற ராஜதந்திர கொள்கைகள் காரணமாகவே பிராந்திய நாடுகலான ஈராக்,  சிரியா, பாலஸ்தீன், லெபனான் போன்ற மேற்கு ஆசிய நாடுகள் ஈரான் இஸ்லாமிய குடியரசு போன்ற ஒரு சுதந்திர தேசத்திடம் உதவி கோர நிர்பந்திக்கப்படுகின்றன.

இங்கே தான் ரியாத் தனது மனநிலையை மாற்றி, மேற்கு ஆசியாவிற்கு உத்வேகம் அளிக்கும் ஒரு நாடாக மாற்றமடைய வேண்டும். உதாரணமாக, 1982ல் இஸ்ரேலிய படைகள் படையெடுத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டை அடைந்தபோது. எந்தவோர் அரபு முடியாட்சிகளும் சர்வாதிகாரங்களும் லெபனான் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. லெபனானை அதன் கஷ்டமான, இருண்ட காலத்தில் ஆதரித்த இரண்டு நாடுகள் ஈரான் மற்றும் சிரியா மட்டுமே.

இவ்விரு நாடுகளும் முற்றுகை, மற்றும் பொருளாதாரத்தடை, போர் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்த வண்ணம் இருந்தன. அவ்வாறு இருக்கையில் தான்  லெபனான் ஈரானிடம் உதவி கோரியது. சதாமினால் திணிக்கப்பட்ட ஒரு போரை எதிர்கொண்ட நிலையிலும், ஈரான் அதன் இராணுவ ஆலோசகர்கள் குழுவை அனுப்பியதன் மூலம் மற்றொரு ஒடுக்கப்பட்ட தேசத்திற்கு தனது கடமையை நிறைவேற்றியது. 

எவ்வாறாயினும், மேற்கினதும் மற்றும் பிராந்தியத்தினதும் பிரச்சாரங்கள் வேறுவிதமாக இருந்தபோதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் லெபனானியரின் போராட்டமே என்பதை முன்னிலைப்படுத்துவது மிகவும் முக்கியம்; லெபனானில் போரிட்டது அந்நாட்டின் தளபதிகள் மற்றும் வீரர்களே அன்றி ஈரானியர்கள் அல்ல என்பதையும்  நினைவில் கொள்ளல் நல்லது. பாலஸ்தீன விடயமும் அவ்வாறே, இன்றளவிலும் சவுதிகள் அதன் ஊடகங்களில் லெபனான் எதிர்ப்பு போராட்டத்தை ஆதாரங்கள் இல்லாமல், ஈரானிய போராட்டமென்றே விவரிக்கிறார்கள், அது அவ்வாறல்ல என்று நிரூபிக்கக் கூடிய ஆயிரக்கணக்கான சான்றுகள் இருந்தபோதிலும் கூட அவ்வாறு செய்கிறார்கள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சவூதி அரேபியா பாலஸ்தீனியர்களை ஆதரித்திருந்தால், யெமன் மீதான அதன் போரில் கொண்டிருந்த அதே மன உறுதியையும், அதற்காக வீணாக்கிய பணம் மற்றும் அது பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள், பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவர்கள் உதவி கேட்டு ஈரான் பக்கம் திரும்பியிருக்க மாட்டார்கள்.

தாயெஷ் ஆக்கிரமித்த காலத்தில் ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இதுவே பொருந்தும். அரபு முடியாட்சிகள் எங்கே சென்றன? ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் இல்லாதிருந்தால், தாயேஷ் பயங்கவாத குழு இவ்விரு நாடுகளையும் கைப்பற்றியிருக்கும். இதை விட முக்கியமான விடயம் என்னவென்றால், நிலைமையை தெளிவுபடுத்துவதற்கு (அமெரிக்க / இஸ்ரேலிய / சவுதி பிரச்சாரத்தை முறியடிக்க) இன்னும் ஒன்றை கூறவேண்டி உள்ளது;  தெஹ்ரானின் எமக்கு வழங்கிய ஆதரவுக்கு ஈடாக ஏதாவது செய்யுமாறு ஈரான் எங்களுக்கு ஒருபோதும் சொல்லவில்லை என்றும் இந்த நாடுகள்ளின் வரலாற்றில் இது பதியப்படும் என்றும் கூறுகின்றனர்.

ஈரான், ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீனம் அல்லது யெமன் போன்ற நாடுகளில் இடம்பெறும் ஜனநாயக தேர்தல்கள் முடியாட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. எமது நாட்டில் ஏன் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்று சவுதி நாட்டவர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனையிட்டு சவூதி ஆட்சியாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர். ஆயினும் இந்த முடியாட்சிகளுக்கு அமெரிக்க ஆதரவு என்றும் உண்டு. மேற்கு ஆசியாவில் அதன் மேலாதிக்க இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் இஸ்ரேலிய நலன்களுக்கு சேவை செய்யவும் இந்த நிலையே அனுமதிக்கிறது .

யெமனில் மார்ச் 2015 க்கு முன்னர், சவூதி அரேபியா தொடர்ச்சியாக அதன் உள்விவகாரத்தில் தொடர்ச்சியாக, ஒவ்வொரு அம்சத்திலும் குறுக்கிட்டு வந்திருக்கிறது, அதன் நிர்வாகம், கொள்கைகள், இராணுவம், பொருளாதாரம் மற்றும் மத நம்பிக்கை சார் விடயங்களில் கூட தலையீடு செய்து வந்துள்ளது. அவ்வாறிருந்தும் சவூதி அரேபியா யெமனுக்கு என்ன வழங்கியுள்ளது? யெமனில் உள்கட்டமைப்பு எங்கே இருந்தது? பொருளாதாரத்தின் நிலை என்ன? பாதுகாப்பு எங்கே இருந்தது? எதுவுமே இல்லை; அங்கு வறுமையே தழைத்தோங்கியிருந்தது.

அப்போதிருந்த யெமனிய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கியிருந்த போதும் பாரசீக வளைகுடா பாதுகாப்பு கவுன்சிலில் சவூதி அரேபியா யெமனை உள்ளடக்கவில்லை. சவூதி அரேபியா யெமனை பிராந்தியத்தின் வறிய நாடாக வைத்திருப்பதிலேயே குறியாய் இருந்தது. இதன் காரணமாகவே யெமன் மக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ரியாத் இடமிருந்து தம்மை விடுவித்து, இறையாண்மை, சுதந்திரம் மற்றும் மிக முக்கியமாக கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முடிவை எடுத்தனர்.

https://www.tehrantimes.com/news/462906/Why-did-Saudi-Arabia-wage-a-war-on-Yemen