Monday, August 30, 2021

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானிய அணுகுமுறை

 Iranian approach towards the Afghanistan debacle

அமெரிக்க தோல்வியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஈரானிய அணுகுமுறை

--------------------------------------------------------------------------------------------------------------

ஆப்கானிஸ்தான் எங்கள் சகோதர நாடு, ஒரே மொழி, மதம் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடு. ஆப்கானிஸ்தானின் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் அமெரிக்காவாகும். அந்த நாட்டின் 20 வருட ஆக்கிரமிப்பின் போது அனைத்து வகையான கொடுமைகளையும் அமெரிக்கா செய்தது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் குண்டுவெடிப்பு, தனிநபர்களை சிறையில் அடைத்தல், மற்றும் போதை மருந்துகளின் உற்பத்தியை பத்து மடங்கு அதிகரித்தல் உட்பட அனைத்து அநியாயங்களையும் செய்தனர். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒரு அடி கூட முன்வைக்கவில்லை. 

நாங்கள் ஆப்கான் தேசத்தை ஆதரிக்கிறோம். அரசாங்கங்கள் வரும் போகும் ஆப்கான் தேசம் என்றும் இருக்கும். 

ஏனைய அரசாங்கங்களுடனான நமது உறவுகளின் தன்மை எங்களுடனான அவர்களின் உறவுகளின் தன்மையைப் பொறுத்தது.

ஆப்கானிஸ்தான் தேசத்திற்கு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

- இமாம் கமேனி, ஆகஸ்ட் 28, 2021

---------------------------------------------------------------------------------------------------------------

ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நடப்புகள் பல சமூக மற்றும் அரசியல் காரணிகளை கொண்டுள்ளன.

தலிபான் போராளிகள் அல்-காய்தா போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் என்ற போர்வையில் அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் 2001 ல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. இந்த படையெடுப்பு தலிபான்களை அதிகாரத்திலிருந்து நீக்கியது என்றாலும் அது நாட்டின் பாதுகாப்பு நிலையை இன்னும் இன்னும் மோசமாக்கியது.

தலிபான் போராளிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர் மற்றும் சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தான் பிரதான நகரங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர், அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் அவசர அவசரமாக வாபஸ் பெறுவது நல்ல வாய்ப்பாய் அமைந்தது. தலிபான்கள் ஆகஸ்ட் 15 அன்று காபூலை முற்றுகையிட்டனர், அப்போதிருந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அதே தினம் நாட்டை விட்டு வெளியேறினார்.

கடந்த இரண்டு வாரங்களாக, காபூலின் விமான நிலையத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் மற்றும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அச்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்களும் மற்றும் வெளிநாட்டினரும் நாட்டை விட்டு வெளியேறும் விமானங்களில் இடம்பிடிக்க முண்டியடிக்கின்றனர்.

பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கு தலிபான்களுக்கு எதிரான பலத்த எதிர்ப்பை காட்டி வருகிறது

காபூலில் அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கத்தை வீழ்த்தியதன் மூலம் கடந்த வாரங்களில் தலிபான்கள் ஒர் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு கோட்டையான பஞ்ஷிர் பள்ளத்தாக்கு மட்டுமே தலிபான்களால் வெற்றிகொள்ள முடியாதிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து அரசியல் பிரிவுகளின் பங்கேற்புக்கும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அழைக்கப்படும் பட்சத்தில் பிரச்சனை தீர்வில் உதவுவதற்கு தயாராய் உள்ளது. எனினும், எந்த அளவுக்கு அதனால் உதவ முடியும் என்பது கேள்விக்குறியே.

உதவி என்பது ஆயுதங்கள் வழங்குவது அல்லது இராணுவ ஆலோசகர்களை அனுப்புவது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர்; 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தியதால் தலிபான்களுக்கு எதிராக ஈரான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே; ஏன் அவ்வாறு செய்யவில்லை என்றும் தலிபான்கள் மீது நம்பிக்கை அற்ற சிலர் கேட்கிறார்கள்.

பிராந்தியத்தில் ஈரான் மிகவும் பலம்வாய்ந்த சக்தியாகவும் தாயேஷ் பயங்கரவாதிகளை அழிப்பதில் முக்கிய சக்தியாகவும் இருந்தது; அது ஈராக் மற்றும் சிரியா மக்களின் உயிர்களை காப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆனால் ஆப்கான் விடயத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை? ஈராக் மற்றும் சிரியா மக்களின் உயிர்களை விட ஆப்கானிஸ்தான் மக்களின் உயிர்கள் குறைவான மதிப்புடையவை என்று எண்ணியதாலா? அது ஏன் தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

அண்டை நாடுகளுடன் சகவாழ்வை விரும்பும் ஈரான் நிதானம் தவறவில்லை.

ஆப்கானிஸ்தான் கொந்தளிப்பு நிலையில் ஈரானின் அணுகுமுறை

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், ஈரான் அதனை ஏற்கும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாயினும் அவர்கள் விடயத்தில் மிகவும் அவதானத்துடனும் நிதானமாகவும்  செயல்படும் என்றே தோன்றுகிறது.

சிரியா மற்றும் ஈராக்கில் செய்ததைப் போல ஈரான் ஆப்கானிஸ்தானில் ஈடுபட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்த நாட்டின் சொந்த வேண்டுகோளைத் தவிர்த்து ஈரான் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய முடியாது. நாம் அவ்வாறு செய்வோமெனில் எமக்கும் அமெரிக்காவிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ஈராக் மற்றும் சிரியாவில் எங்கள் இருப்பின் தன்மை, அந்த நாடுகளின் அரசாங்கங்கள் தமக்கும் எங்களுக்கும் அச்சுறுத்தல்கள் இருப்பதைக் கண்டன, அதனால்தான் நாங்கள் அந்த அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் அங்கு சென்றோம். முடிவும் நேர்மறையாக இருந்தது, அதாவது இந்த நாடுகள் தனியாக விடப்பட்டு இருந்தால், ஒருவேளை இந்நாடுகளின் அரசியல் வரைபடங்கள் மீண்டும் வரையப்பட்டிருக்கக் கூடும்.

ஈராக் தொடர்பான எங்கள் நிலைப்பாடு வேறுபட்டது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசு எங்களிடம் உதவியோ அல்லது ஒத்துழைப்போ  கேட்டதில்லை. அதனால்தான் நாங்கள் ஏனைய அண்டை நாடுகளுடன் இருப்பது போலவே ஆப்கானிஸ்தானுடனும் அதே உறவைப் பேணி வந்தோம்,” என்று ஆப்கானிஸ்தான் மற்றும் இத்தாலியின் முன்னாள் தூதர் அபுல்பஸ்ல் சொஹ்ரவண்ட் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் எந்த ஒரு தரப்பையும் ஆதரிப்பதாக ஈரானை குற்றம் சாட்டக்கூடாது என்பதற்காக ஆப்கானிஸ்தானில் சம்பந்தப்பட்ட எந்த தரப்பினருக்கும் ஆயுதங்களையோ அல்லது நிதி உதவிகளையோ வழங்கவில்லை.

ஈரான் ஒருபோதும் இராணுவ ரீதியாக எந்த நாட்டினுள்ளும் நுழையவில்லை, அந்த நாடுகளின் சட்டபூர்வமான அரசாங்கங்கள் அல்லது அதிகாரிகளின் கோரிக்கையின்றி ஒரு நாட்டிற்கு ஆலோசகர்களை கூட அனுப்பவில்லை, எனவே இந்த மூலோபாயத்தின் படி, எந்த நிலையிலும் அது ஆப்கானிஸ்தானுக்குள் நுழையாது.

இவ்வருடம் ஜூலை 7, 2021 அன்று, ஈரான் தலிபான்களுக்கும் அப்போதைய ஆப்கானிஸ்தான் அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே தெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரீப், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்க இந்த சந்திப்பை பயன்படுத்தினார். அதே நேரத்தில் தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையே மோதல்கள் தொடர்வது பாரிய பின்விளைவுகளையே உருவாக்குவதாக அமையும் என்று எச்சரிக்கை செய்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவ வெளியேற்றம் ஆகஸ்ட் 31 க்குள் நிறைவு பெற வேண்டும். இதற்கிடையில், இன்றைய நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையல்ல என்பதால் ஈரானிய கொள்கை வகுப்பாளர்கள் ஆப்கானிஸ்தான் தொடர்பாக தங்கள் எதிர்கால அணுகுமுறை குறித்து வியூகம் வகுத்து வருகின்றனர்.

தலிபான்களால் ஈரானிய துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் ஈரானிய இராஜதந்திரிகள் கொல்லப்பட்டதும் அந்த நேரத்தில் இருந்த அவர்களின் பகைமையின் வெளிப்பாடு.

இந்த சம்பவங்களுக்கு தலிபான் பொறுப்பேற்றிருந்தது. அந்த சமயத்தில் தாலிபான்களுக்கு எதிரான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்தோமே அன்றி அந்த நாட்டிற்குள் நுழைய எண்ணவில்லை.

"ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் எங்களுக்கு நிறைய ஒற்றுமை உள்ளது. நாம் அனைவரும் ஆசியாவில் வாழ்கிறோம். நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி நாம் முன்னேற வேண்டும். அதனால் ஒருவருக்கொருவர் நல்ல உறவுகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகவும். அப்போது தான் நாம் நம் தேசங்களுக்கு சேவை செய்ய முடியும்."

- முல்லா கைருல்லா கைர்க்வா, மூத்த தலிபான் அதிகாரி

ஹெல்மண்ட் நதி நீர் தொடர்பாக ஆஃகானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் 100 வருடங்களுக்கு முன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டினோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அது உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இது சிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் தெற்கு கொராசன் மாகாணங்களின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பொருளாதார உறவுகள் போன்ற பிற விடயங்களும் உள்ளன. ஆப்கானிஸ்தானுடன் 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நாணய பரிவர்த்தனைகள் உள்ளன. இது ஓரிரு ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் இந்த உறவு ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு மக்களுக்கு பயனளிப்பதாய் அமையும்.

ஈரான் எதிர்பார்ப்பது என்னவென்றால் முதலில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் மற்றும் அனைத்து ஆப்கான் பிரிவுகளும் பரஸ்பர புரிந்துணர்வை எட்டுவதன் மூலம் இந்த நிலையை அடைய அமைதியான வழிகளை நாட வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ஈரானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸரிஃப் ஆப்கானிஸ்தானில் ஒரு ஒருங்கிணைப்பு கவுன்சில் நிறுவப்பெற்றதை வரவேற்றார், இது ஆப்கானிஸ்தான் தொடர்பான ஈரானின் முதல் பெரிய எதிர்வினையாகும்.

"இந்த 'ஒருங்கிணைப்பு கவுன்சில்ஆப்கானிஸ்தானில் பேச்சுவார்த்தைக்கும் மற்றும் அமைதியான மாற்றத்திற்குக்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வன்முறை போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது", என்றும் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.

https://www.presstv.ir/Detail/2021/08/27/665267/Iran-Afghan-Taliban-relations-prospects

இது  PressTV யில் வெளியான கட்டுரையை அடியொற்றி எழுதப்பட்டது.

Tuesday, August 24, 2021

ஈரானில் சிகிச்சை மற்றும் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

 Application of artificial intelligence in the field of treatment and medicine in Iran

 By Soroush Saki


மருத்துவ ரோபாட்டிக்ஸ் மிகவும் செல்வாக்கு மிக்கதாகவும், அதனால் உடல்நலம் மற்றும் மருத்துவ சேவைகள் சார்ந்த மூலோபாய தொழில்நுட்பங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதன் விளைவாக, ஈரானிய கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சு மற்றும் தொழில்துறை மற்றும் சுரங்க அமைச்சு ஆகியவற்றுடன் இந்த தொழில்நுட்பக் கிளையை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் ஒரு மூலோபாயத் திட்டத்தை வகுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்கும் என்று எப்போதும் சொல்லப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ள மற்றும் மனித வாழ்க்கை தரத்தை மேம்படுத்தக்கூடிய துறைகளில் ஒன்று சிகிச்சை, சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் ஆகும். பொதுவாக, சிகிச்சை மற்றும் மருத்துவ செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் ... மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மருத்துவமனைகளுக்கும் பெரும் உதவியாக அமைகிறது.

செயற்கை நுண்ணறிவு மருத்துவம் மற்றும் சிகிச்சையில் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதனால் பயன் பெற்றுக்கொள்வோர் ஏராளம், மரபணு குறியீடுகளுக்கு இடையேயான தொடர்பை அங்கீகரிப்பது முதல் கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு செயற்கை நுண்ணறிவு ரோபோக்களைப் பயன்படுத்துவது வரை, அனைவரும் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துபவர்களாக இருப்பர். இந்த அனைத்து பயன்பாடுகளாலும், செயற்கை நுண்ணறிவு சுகாதார சேவைகளில் ஒரு நவீன முறைமையை உருவாக்கி அதை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்ல முடிந்ததுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோயின் தன்மையை இன்னும் துல்லியமாகக் கண்டறிந்து குறைத்து மருத்துவப் பிழைகளை தவிர்க்கலாம்

2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 10% இறப்புகள் தவறான நோயறிதல் மற்றும் மருத்துவ பிழைகள் காரணமாக இருந்தன. இந்த காரணத்திற்காக, சிகிச்சை மற்றும் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று மருத்துவ பிழைகளை குறைப்பது மற்றும் நோய்களை சரியாக கண்டறிய உதவுவது. மக்களின் மருத்துவ பதிவுகள் பற்றிய துல்லியமான மற்றும் முழுமையான தகவல்கள் இல்லாதது கொடிய மருத்துவ பிழைகளுக்கு வழிவகுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். இந்த அனைத்து தகவல்களையும் கொண்டு, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நோயை மிக விரைவாக கணிக்க அல்லது கண்டறிய முடியும். உதாரணமாக, ஒரு ஆய்வில், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதில் 11 மற்ற முறைமைகளை விட அல்காரிதம் மற்றும் ஆழ்ந்த கற்றலைப் பயன்படுத்தி ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரி சிறப்பாக செயல்பட்டதை கண்டறிய முடிந்தது.

செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் புதிய மருந்துகளின் வளர்ச்சி

மருந்துத் துறையில் எப்போதும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு நிறைய நிதி தேவைப்படுகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மணிநேர நேரமும் ஆயிரக்கணக்கான மனிதவளமும் தேவைப்படுகிறது, இதற்கு பெரிய பட்ஜெட்டுகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளுக்கும் சுமார் 2.6 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன, அதே நேரத்தில் சோதனை செய்யப்பட்ட மருந்துகளில் 10 சதவீதம் மட்டுமே சந்தைப்படுத்த முடியும். இவற்றின் காரணமாக, மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தத் துறையில் இருக்கக்கூடிய பல பயன்பாடுகளால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

மருந்து உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கற்களில் ஒன்று 2007. இந்த ஆண்டு, ஆராய்ச்சியாளர்கள் ஆடம் என்ற ரோபோவைப் பயன்படுத்தி யீஸ்டின் செயல்பாட்டை ஆய்வு செய்ய முயன்றனர். ஆடம் பொது தரவுத்தளங்களில் பில்லியன் கணக்கான தரவு புள்ளிகளை யீஸ்டில் உள்ள 19 மரபணுக்களின் செயல்பாட்டைக் கருதுகின்ற மற்றும் ஒன்பது புதிய மற்றும் துல்லியமான கருதுகோள்களை முன்னறிவித்தது. ஆதாமின் ரோபோ நண்பர் 'ஈவ்', பற்பசையின் முக்கிய மூலப்பொருளான ட்ரைக்ளோசன் மலேரியா ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடக் கூடியது என்பதைக் கண்டுபிடித்தது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கான சிகிச்சை செயல்முறையை எளிமையாக்கி, நெறிப்படுத்தல்

சுகாதாரத் துறையில், நேரம் என்பது பணம் மற்றும் மூலதனத்திற்கு சமம். ஒரு நோயாளிக்கு பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நேரம், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவர்கள் தினசரி அடிப்படையில் அதிகமான நோயாளிகளை கவனிக்கவும் சிகிச்சை செய்யவும் அனுமதிக்கிறது.

2016 ஆம் ஆண்டில், 35 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், ஒவ்வொன்றும் வெவ்வேறு நோய்கள் மற்றும் வெவ்வேறு நிலைமைகளை உருவாக்கும் வெவ்வேறு காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில். 35,000 மருத்துவர்களின் 2016 ஆய்வில், வாடிக்கையாளர் சேவை இல்லாமை குறித்து நோயாளியின் புகார்களில் 96% 'பேப்பர் விளையாட்டுகள்' மற்றும் சேவை வழங்கலில் எதிர்மறை அனுபவங்கள் பற்றிய குழப்பம் ஆகியன தொடர்பானவை.

சுகாதாரத் துறையில் புதிய செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் மூலம் நோயாளியின் அனுபவத்தை மேம்படுத்தலாம் மற்றும் மில்லியன் கணக்கான தரவு புள்ளிகளை விரைவாகவும் திறமையாகவும் செயல்படுத்த மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மருத்துவத் தரவு மற்றும் தகவல்களைச் சேகரித்து நிர்வகித்தல்

பெரிய தரவுகளால் வெல்லப்படும் அடுத்த எல்லைகளில் ஒன்று சந்தேகத்திற்கு இடமின்றி சுகாதாரத் தொழிலாக இருக்கும். பெறுமதி வாய்ந்த தகவல்கள் சில நேரங்களில் மில்லியன் கணக்கான தரவுகளில் காணாமல் போய்விடுகின்றன, இதனால் இத்துறை நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழக்கிறது. கூடுதலாக, முக்கியமான தரவுப் புள்ளிகளை இணைக்க இயலாமை புதிய சிகிச்சை முறைகளின் வளர்ச்சி, நோய்த்தடுப்பு மருந்துகளின் உற்பத்தி மற்றும் சரியான கண்டறிதல் செயல்முறை ஆகியவற்றைக் குறைக்கிறது.

இந்த இழப்புகளைத் தடுக்க பல சுகாதார நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவுக்கு திரும்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மில்லியன் கணக்கான தரவுகளை நிமிடங்களில் பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் அவற்றைப் பெற நாம் நிறைய நேரம் செலவிட வேண்டிய தகவல்களைப் பிரித்தெடுக்கிறோம்

அறுவை சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் ரோபோக்களின் உதவியைப் பெறுதல்

சமீபத்திய ஆண்டுகளில், அறுவை சிகிச்சையில் ரோபோக்களின் பயன்பாடு ஓரளவு பிரபலமாகிவிட்டது. மருத்துவமனைகள் குறைந்த அளவிலான அறுவை சிகிச்சைகள் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை வரை பல பகுதிகளில் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றன. ஒரு அமெரிக்க கிளினிக்கின் படி, ரோபோக்கள் துல்லியமான, நெகிழ்வுத்தன்மையுடன் மற்றும் மனித திறன்களுக்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுடன் சிக்கலான சிகிச்சைகள் செய்ய மருத்துவர்களுக்கு உதவுகின்றன.

கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் ஒரு புதிய வகை அறுவை சிகிச்சையை செய்வதற்கு அறுவை சிகிச்சை நிபுணர்களின் அனுபவம், திறன்கள் மற்றும் அறிவை அதிகரிக்கின்றன. அறுவை சிகிச்சை நிபுணர்கள் கணினியைப் பயன்படுத்தி இந்த இயந்திர உபகரணங்களை கட்டுப்படுத்துகின்றனர். நோயாளியின் உடலில் அறுவைசிகிச்சை தளத்தை பெரிதாக்குவதன் மூலம் ரோபோ மருத்துவருக்கு முப்பரிமாண பார்வையை அளிக்கிறது, இது முன்பு சாத்தியமில்லை மற்றும் மருத்துவர்கள் கண்களின் சக்தியை மட்டுமே நம்பியிருந்தனர். இறுதியாக, இந்த ரோபோ அறுவை சிகிச்சை நிபுணருக்கும் முழு குழுவினருக்கும் வழிகாட்டும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் அறுவை சிகிச்சை மூலம் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைக்கின்றன, மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி குறைவான வலியை உணருவார். கூடுதலாக, ரோபோடிக் அறுவை சிகிச்சைகளில், நோயாளியின் சுகமடையும் காலம் குறைக்கப்படுகிறது.

இந்தத் துறையில் ஈரான் மேற்கொண்டுவரும் ஆய்வுகளும் அது அடைந்துவரும் முன்னேற்றமும் மேற்குலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான துணைத் தலைவர் சௌரேனா சத்தாரி, ஈரான் இந்த பிராந்தியத்தில் ஃபின்டெக், ஐசிடி, ஸ்டெம் செல், ஏரோஸ்பேஸ் ஆகிய துறைகளில் முன்னணிப் பங்கு வகிக்கிறது என்றும் செயற்கை நுண்ணறிவில் ஈடு இணையற்றது என்றும் கூறினார்.

https://www.tehrantimes.com/news/456032/Application-of-artificial-intelligence-in-the-field-of-treatment

தமிழாக்கம்: தாஹா முஸம்மில் 

 

Thursday, August 19, 2021

ஆஷூரா நாளில் இருந்து உலகவாழ் முஸ்லிம்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

 Lessons for Muslims around the world from the day of Ashura

ஆஷுரா நாளில் இருந்து அனைத்து முஸ்லிம்களும் பெறக்கூடிய மகத்தான பாடங்கள் பல உள்ளன. இங்கு நாம் 10 பாடங்களை தொகுத்துத் தருகிறோம்:

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஆஷுரா தினத்தை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஹுசைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு கர்பலா களத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர்.

வரலாறு அதை ஒரு போர் என்று அழைத்த போதிலும் உண்மையில் அது ஒரு படுகொலையாகும், ஏனெனில் ஒரு ஊழல் மிக்க தலைவருக்கு விசுவாசம் கொடுக்க மறுத்த இமாம் ஹுசன் (அலை) அவர்களின் முகாமை ஆயிரக்கணக்கானோரை கொண்ட யசீதின்  ராணுவம் முற்றுகையிட்டு, இமாம் ஹுசன் (அலை) அவர்களையும் அவரது குடும்பத்தார்களையும் அவரின் தோழர்களையும் படுகொலை செய்தனர்.

இமாம் ஹுசன் (அலை) அவர்கள் கொளுத்தும் வெப்பத்தில் மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் இருந்த தனது ஆறு மாத குழந்தைக்கு தண்ணீர் கோரிய வேளை, வஞ்சகர்களால் குறிவைக்கப்பட்ட அம்பினால் அந்த பச்சிளம் குழந்தை கொல்லப்பட்டது. ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர் தியாகத்திற்கு பிறகு, றஸூலுல்லாஹ்வின் பேரனின் புனித உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டது, மேலும் அவரது சகோதரி அடங்கலாக பெண் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைபிடிக்கப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அனைத்தும் கொடியவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.

ஹுஸைன் (அலை) அவர்கள்  முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் ஆவார். இங்கே மிகவும் துக்ககரமான செய்தி என்னவென்றால்,

ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அவரது பேரனைப் பற்றி, இவ்வாறு கூறியுள்ளார்கள்:

"ஹுசைன் என்னிலிருந்து வந்தவர், நான் ஹுசைனில் இருந்து வந்தவன். ஹுசைனை நேசிப்பவரை அல்லாஹ் நேசிக்கிறான். (திர்மிதி)

சந்தேகத்திற்கு இடமின்றி பேராசை, அடக்குமுறை மற்றும் இந்த உலகத்தின் மீதான ஆசை ஆகியவை இந்த துஷ்டர்களை நபி (ஸல்) அவர்களின் அன்பிற்குரிய பேரனை படுகொலை செய்ய வழிவகுத்தது,

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார், இறைவன் மீது பயபக்தியுள்ள மக்களுக்காக எழுந்து நின்றார்; தீயவர்களிடம் இருந்து இஸ்லாத்தை காக்கவே அவர் இவ்வாறு செய்தார்.

துஷ்டனான யஸீதுக்கு விசுவாச பிரமாணம் செய்ய மறுத்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரான எனது பாட்டனாரின் உம்மாவினது சீர்திருத்தத்தை நாடும் ஒரே குறிக்கோளுக்காக நான் போராடத் தயாராக இருக்கிறேன்.  நான் என் பாட்டனார் றஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மற்றும் எனது தந்தை அலி பின் அபி தாலிப் (அலை) அவர்கள் செய்தது போல், நல்லதை ஏவவும் தீமையை தடுக்கவும் மற்றும் மக்களின் விவகாரங்களை இஸ்லாத்தின் வழிநடத்தவும் விரும்புகிறேன்".


ஆஷூரா நாளில் இருந்து உலக வாழ் முஸ்லிம்களும் மற்றும் அனைவரும் எண்ணற்ற பாடங்களை கற்றுக் கொள்ளலாம். நாம் கீழே 10 பாடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்:

1.      தவ்ஹீத் எனும் இறைவனின் ஒருமை

அன்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டவே அனைத்தையும், செய்தார்கள் - அல்லாஹ்வே இறைவன் என்று போதிப்பதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அவரது பாட்டனாரான ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பணியை தொடர்வதற்காக, நிலைமையை சீர்திருத்துவதற்காக கொடுங்கோன்மைக்கு எதிராக எழுந்து நின்றார். அல்லாஹ்வின் மீது அவருக்கு இருந்த முழு நம்பிக்கை, அவர் உயிர் தியாகத்திற்கு முன் சொன்ன இந்த பிரார்த்தனையில் பிரதிபலிக்கின்றது:

"இந்த உலகம் இனிமையானதாக கருதப்பட்டாலும், அல்லாஹ்வின் வெகுமதி அற்புதமானது மற்றும் உன்னதமானது; மேலும் உடல் மரணத்திற்காக உருவாக்கப்பட்டிருப்பதால், அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்வது மனிதனுக்கு சிறந்தது; மற்றும் வாழ்வாதாரம் பரந்தளவில் இருந்தாலும், அவை உறுதி செய்யப்பட்டால், அதை தேடுவதிலேயே மனிதன் கடுமையாக முயற்சி செய்யக்கூடாது; இந்த செல்வத்தை சேகரிப்பது, விட்டுச் செல்வதற்கு என்றால், மனிதன் ஏன் அதன்பால் வெறித்தனமாக இருக்க வேண்டும்?”

2. உங்கள் சுய கௌரவத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆற்றிய உரையில், அதிகாரிகள் அவருக்கு அவமானம், அல்லது மரணம், இரண்டு தேர்வுகளை மட்டுமே விட்டு வைத்தார்கள் என்று குறிப்பிட்டு "நாம் அவமானத்தை ஏற்கவில்லை," என்றார்.

3.  மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை

கர்பலா களத்தில் உயிர் தியாகத்தை சந்தித்த ஒருவரின் பெயர் ஹூர் (அதாவது சுதந்திரம்) என்பதாகும். அவர் யஸீதின் ராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்தார், மேலும் அவரது நடவடிக்கைகள் காரணமாகவே இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் கர்பலாவில் இட்டிருந்த முகாம் முற்றுகையிடப்பட்டது. குடிப்பதற்கான நீரையும் தடுத்தவர் அவரே. அதனால் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியே வர நிர்பந்திக்கப்பட்டார்கள். போர் முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் அவர் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்துடன் இணைந்து கொண்டார், தாம் செய்த தவறுக்காக இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கோரினார். யஸீதின் ராணுவத்தில் வீரமரணம் அடைந்த முதல் நபர்களில் இவரும் ஒருவர்.

மனம் திருந்துவதற்கு ஒருபோதும் காலம் கடப்பதில்லை, எந்த பாவமும் திரும்பி வர முடியாத அளவுக்கு கடினமானது அல்ல.  "உங்கள் தாய் உங்களுக்கு பெயரிட்டபடி நீங்கள் நிச்சயமாக சுதந்திர புருஷராக இருக்கிறீர்கள்." என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் குறிப்பிட்டார்கள். கடைசி சந்தர்ப்பத்திலும் ஒருவர் மனம் திருந்தலாம் என்பதற்கு ஹூரின் கதை சான்று.

4. வாழ்க்கை கடினமாக இருக்கும் போது, அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறுகையில் அல்லாஹ்வின் திருப்தியை தவிர வேறு எதையும் நாடவில்லை. தோழர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினரும் போர்க்களத்தில் விழுந்த போது, "அல்லாஹ் இதற்கு சாட்சியாக இருக்கிறான் என்பதால் மட்டுமே மட்டுமே அது இந்த துக்கம் தாங்கக்கூடியதாக உள்ளது," என்று இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சொன்னார்கள்.

5.      சுதந்திர சிந்தனையாளராக இருங்கள்

ஆஷுரா நாளில் இமாம் ஹுஸைன் (அலை) கூறிய முக்கிய விடயங்களில் ஒன்று " உங்களுக்கு மதம் என்று எதுவும் இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் தற்போதைய வாழ்க்கையில் குறைந்தபட்சம் சுதந்திர புருஷர்களாக (திறந்த மனதுடன்) இருங்கள்." உலகில் ஆயிரக்கணக்கானோர் ஒரு கொடுங்கோல் ஆட்சி தலைவனை ஏற்றுக்கொண்டு, கண்மூடித்தனமான விசுவாசத்தை செலுத்தி கொண்டிருக்கையில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதை தேர்ந்தெடுத்தார்கள்.

இது நம் அனைவருக்கும் முக்கியமான வாழ்க்கை பாடமாகும் - நாம் சுதந்திரமாக சிந்தித்து, திறந்த மனதுடன், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மறுபரிசீலனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

6.      எப்போதும் உண்மையை ஆதரித்து பாதுகாக்கவும்

இஸ்லாம் சத்தியத்தை பிரதிபலிக்கிறது, பொய்யான உலகில் இதுவே யதார்த்தம், இதைத் தான் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் பாதுகாக்கத் துடித்தார்கள். அவர் அதை பாதுகாக்க தன்னிடம் இருந்த அனைத்தையும் தியாகம் செய்தார்கள்.

அவரது மூத்த மகன் அலி அல்-அக்பர் ஆஷூரா நாளில் தந்தையிடம் கேட்டார், "நாங்கள் சாத்தியத்துக்காகத்தானே போராடுகிறோம்?" என்று. அதற்கு இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள், அதைக்கேட்ட அவரது மகன் "அப்படியானால், மரணம் நம்மை நோக்கி வந்தாலும் சரி அல்லது நாம் மரணத்தை நோக்கி சென்றாலும் சரி எந்த வித்தியாசமும் இல்லை," என்று கூறினார்கள்.

7.      மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் அரை சகோதரர், அப்பாஸ் இப்னு அலி (ரஹ்) அவர்கள்  பெரும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார்கள். அவரது புனைப்பெயர் அபு ஃபாதில் (நல்லொழுக்கங்களின் தந்தை). அவர் மனித குளம் அறிந்துகொள்வதற்காக ஆஷுரா நாளில் தனது உயர் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தினார். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது இராணுவத்தின் கொடியை ஏந்தியவர் அவர். எதிர்தரப்பினர் பயந்து நடுங்கும் அளவிற்கு மாவீரர், இமாமின் தீவிர விசுவாசியாக இருந்தார், தாகத்தால் தவித்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது புதல்விகளுக்கு குடிப்பதற்கு நீர் எடுத்து வர சென்ற வேளையில் ஷஹீதாக்கப்பட்டார்.

ஆற்றை அடைந்ததும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களினதும் அவரது குழந்தைகளினதும் தாகத்தை தீர்க்க நீரை கொண்டு வருவதற்கு முன்பு தனது நா வறண்ட நிலையில் தானும் நீரருந்த முயன்றார். கூடாரத்தில் தாகத்தால் தவிப்போரின் நிலை அவர் கண் முன் வந்து நின்றது, தனக்கு முன் அவர்களது தாக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்ற தன்னலமற்ற எண்ணம் காரணமாக அவர் தான் கையில் ஏந்திய நீரையும் குடிக்காமல், கூடாரத்துக்கு திரும்புகையில், மறைந்திருந்த யஸீதின் இராணுவத்தால் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அந்த நாளில் அவர் எமக்கு வழங்கிய பல பாடங்களில் இதுவும் ஒன்று. சுயநலமின்மை, தன்னலத்தை விட பிறர் நலனே முக்கியம் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டுகிறது.

8.      பொறுமை காத்தல்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தியாக கதையை அறிந்தவர்கள் பெரும்பாலும் அவர் பட்ட துயரங்களையும், அன்றைய வாழ்க்கையில் அவரின் சொந்த கஷ்டங்களின் போது அவர் வெளிப்படுத்திய பொறுமையையும் விபரிக்கின்றார். இது பலவீனத்தினால் வந்த பொறுமை அல்ல, மாறாக எந்த நிலைக்கும் முகம் கொடுக்கக்கூடிய அவரது ஈமானின் உறுதி. "இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கண் எதிரிலேயே அவரது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட, மன உறுதியுடன் நின்ற இமாமைப் போன்ற ஒருவரை நாம் இஸ்லாமிய சரித்திரத்தில் காண்பதரிது.

9.      நன்மையை ஏவுதல் மற்றும் தீயதை தடுத்தல்

ஒவ்வொரு முஸ்லிமும் நல்லதை ஏவவும், தீயதைத் தடுக்கவும், வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார், இது இஸ்லாம் விதித்த இன்றியமையாத கடமைகளில் ஒன்றாகும். இதில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார்கள். அவர் இந்த போராட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் ஒரே குறிக்கோள், நன்மையைக் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் மற்றும் தீமையை தடுத்தலுமாகும் என்று குறிப்பிட்டார்.

10.  பெண்களுக்கு உரிய இடம் வழங்குதல்

இமாமவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பேத்திகள் மற்றும் ஸஹாபி பெண்மணிகள் இருந்த கூடாரங்கள் கொடியவர்களால் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. இங்குதான் இமாம் ஹுசைனின் சகோதரியும் புனித நபியின் பேத்தியுமான ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா அவர்கள் முகாமில் எஞ்சியிருந்தவர்களின் தலைமையை ஏற்றார். ஒழுக்க சீலத்துக்கு உதாரணமாகவும் கற்புக்கரசிகளாகவும் அறியப்பட்ட றஸூலுல்லாஹ்வின் குடும்பப் பெண்கள், சிறைபிடிக்கப்பட்டு டமாஸ்கஸ் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இருந்தபோதிலும், ஸைனப் ஸலாமுன் அலைஹா அவர்கள் யஸீதின் அரண்மனையில் அச்சமின்றி, உறுதியாக நின்று பின்வருமாறு கூறினார்கள்.

"ஓ யாசித்! எங்கள் மக்களின் தியாகம் மற்றும் எங்களை சிறைபிடித்தல் காரணமாக நாங்கள் தாழ்ந்தவர்களாகவும் இழிவானவர்களாகவும் மாறிவிட்டோம் என்று நினைக்கிறாயா? நீ எங்கள் பாதைகள் அனைத்தையும் அடைத்துவிட்டதால், நாங்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால், அல்லாஹ் அவனுடைய ஆசீர்வாதத்தை எங்களிடமிருந்து எடுத்துவிட்டான் என்று நினைக்கிறாயா? இறைநேசர்களை கொல்வதன் மூலம் நீ பெரிய ஆளாகவும் மரியாதைக்குரியவராகவும் ஆகிவிட்டாய் என்று நினைக்கிறாயா? என்று காரசாரமாக கேள்வியெழுப்பினார்.

போர் முடிந்த பிறகு, ஒரு பெண்ணாக இருந்து எஞ்சியிருந்தவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேற்றினார்.

கொடுங்கோலனுக்கு சவால் விடுத்து, முழு முஸ்லிம் உலகத்தையும் வழிநடத்திய ஸைனப் பின்த் அலி ஸலாமுன் அலைஹா, இஸ்லாத்தில் பெண் வலுவூட்டலுக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.