Friday, September 27, 2019

பொருளாதாரத் தடைகளின் கீழ் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் செல்ல மாட்டோம்.!


Rouhani: Our response to negotiation under sanctions is negative
September 25, 2019

ஐக்கிய நாடுகள் சபை - புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு முக்கிய உரையில், ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஈரானின் பொருளாதாரத் தடைகளின் கீழ் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் பதில் எதிர்மறையானதுஎன்றார்.

2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

"எனது அரசினதும் மக்களினதும் சார்பாக, பொருளாதாரத் தடைகளின் கீழ் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் அளிக்கும் பதில் எதிர்மறையானது என்பதை அறிவிக்க விரும்புகிறேன்" என்று ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி உலகத் தலைவர்கள் மற்றும் ஐ.நா வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளிடம் கூறினார்.

ரூஹானியின் முழுமையான உரை பின்வருமாறு:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

அவைத்தலைவர் அவர்களே

ஐக்கிய நாடுகள் சபை எழுபத்து நான்காவது பொதுச்சபையின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு என்னுடைய பாராத்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், மேலும் சபையின் வெற்றிகரமான செயற்பாட்டுக்காக உங்களுக்கும் கௌரவ செயலாளர் நாயகத்துக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.

ஆரம்பத்தில், இமாம் ஹுசைனின் (அலை) அவர்களது சுதந்திரம் தேடும் இயக்கத்தை நினைவுகூர விரும்புகிறேன், அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு தலைவணங்காத உலகின் சுதந்திரம் தேடுபவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன், மேலும் போராட்டத்தின் அனைத்து கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு  உரிமைகளுக்காக போராடும் யேமன், சிரியா, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் மற்றும் உலகின் பிற நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாகவும்  மற்றும் குண்டுவீச்சு  காரணமாகவும் உயிரிழந்த அனைத்து ஒடுக்கப்பட்ட தியாகிகளின் ஆத்மாக்களையும் நினைவு கூற விரும்புகிறேன்.

கண்ணியத்துக்குரியவர்களே 

மத்திய கிழக்கு போர், இரத்தக்களரி, அத்துமீறல், ஆக்கிரமிப்பு மற்றும் மத மற்றும் குறுங்குழுவாத வெறி மற்றும் தீவிரவாதத்தின் தீப்பிழம்புகளில் எரிந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், பாலஸ்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானவர்கள். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக பாகுபாடு, நிலங்களை கையகப்படுத்துதல், குடியேற்ற விரிவாக்கம் மற்றும் கொலைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்க மற்றும் சியோனிசத்தால் திணிக்கப்பட்ட திட்டங்கள், அதாவது நூற்றாண்டின் ஒப்பந்தம்”, பைத்துல் முகத்தஸை சியோனிச ஆட்சியின் தலைநகராக அங்கீகரித்தல், மற்றும் சிரிய கோலான் பிரதேசத்தை ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய பகுதிகளுடன் இணைத்தல் என்பன நிச்சயமாக தோல்வியடையும்.

அமெரிக்காவின் அழிவுகரமான திட்டங்களுக்கு மாறாக, ஈரானின் இஸ்லாமிய குடியரசின் பிராந்திய மற்றும் சர்வதேச உதவி மற்றும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் தீர்க்கமானவை. அத்தகைய அணுகுமுறையின் தெளிவான எடுத்துக்காட்டு, சிரிய நெருக்கடி குறித்த அஸ்தானா கட்டமைப்பில் ரஷ்யா மற்றும் துருக்கியுடனான எங்கள் ஒத்துழைப்பும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்களின் சிறப்பு தூதர்களுடனான நமது தீவிர ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு யேமனுக்கான எங்கள் சமாதான முன்மொழிவு. யேமன் தரப்பினர்களுக்கிடையே நல்லிணக்க பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கான எங்கள் முயற்சிகள், இதன் விளைவாக ஹொதைதா  துறைமுகத்தில் ஸ்டாக்ஹோம் சமாதான ஒப்பந்தம் நிறைவு பெற்றது.

நான் மிகவும் மோசமான பொருளாதார பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டைச் சேர்ந்தவன. எனது நாடு, அதன் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பாதுகாத்துக்கொள்ள போராடுகிறது. அமெரிக்க அரசாங்கம், பிற நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் அதேவேளை, ஈரானை உலகப் பொருளாதாரத்தில் பங்கேற்பதன் பெறக்கூடிய நன்மைகளிலிருந்து தடுக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளதுடன், சர்வதேச வங்கி முறையை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச திருட்டுக்கு முயல்கின்றது.

ஈரானியர்களான நாங்கள் பிராந்தியத்தில் சுதந்திரம் தேடும் இயக்கங்களின் முன்னோடிகளாக இருக்கின்றோம், அதே நேரத்தில் நமது தேசத்துக்கும் நமது அண்டை நாடுகளுக்கும் அமைதியையும் முன்னேற்றத்தையும் நாடுகிறோம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் அதிகார திணிப்புக்கு நாங்கள் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நமது தேசத்தின் கௌரவம் மற்றும் அபிவிருத்திக்கு எதிராக வரலாற்றின் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதாக கூறும் நபர்களின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நாங்கள் நம்ப முடியாது. ஒரு மாபெரும் தேசத்தின் மக்களை, 83 மில்லியன் ஈரானியர்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் அழுத்தம் கொடுப்பதை அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் வரவேற்கிறார்கள், இதுபோன்ற அழுத்தங்களில் தங்களை பெருமைப்படுத்துகிறார்கள் மேலும் உலக நாடுகள் - ஈரான், வெனிசுலா, கியூபா, சீனா மற்றும் ரஷ்யா - பலவற்றை அடிமைகளாக்க பொருளாதாரத் தடைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த குற்றங்களையும் குற்றவாளிகளையும் ஈரானிய மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள்.

அணுசக்தி ஒப்பந்தம் (அல்லது ஜே.சி.பி.ஓ.ஏ) மீதான தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் அணுகுமுறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231 இன் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், உலகின் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரத்தை மீறுவதாகவும் அமைகிறது.

ஜே.சி.பி.ஓ.ஏவிலிருந்து அமெரிக்க விலகியிருந்த போதிலும், ஒரு வருடம் ஈரான் ஜே.சி.பி.ஓ.ஏ-வுக்கு இணங்க அதன் அனைத்து அணுசக்தி கடமைகளுக்கும் முழுமையாக விசுவாசமாக இருந்தது. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு கௌரவம் செலுத்தாமல், அமெரிக்கா வாபஸ் பெறுவதன் விளைவுகளை ஈடுசெய்ய ஐரோப்பா தனது 11 கடமைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்கினோம். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுப்பதை காணவில்லை ஆனால் நன்றாக பேசுகின்றனர்.

அமெரிக்கா தனது கடமைகளில் இருந்து பின்வாங்குகிறது  என்பதோடு ஐரோப்பியா நாடுகளாலும் அவற்றின் கடமைகளை நிறைவேற்ற இயலாது என்பதும் இப்போது அனைவருக்கும் தெளிவாகிவிட்டது. JCPOA இன் 26 மற்றும் 36 பத்திகளை செயல்படுத்துவதில் ஒரு படிப்படியான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றினோம். ஒப்பந்தத்தில் எங்கள் வாக்குறுதிகளுக்கு ஏற்ப நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும், எங்கள் பொறுமைக்கும் ஒரு வரம்பு உள்ளது: அமெரிக்கா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மதிக்காதபோது, ஐரோப்பா இயலாமையைக் காட்டும்போது, எமக்குள்ள ஒரே வழி தேசிய கௌரவத்தையம் நாட்டின் பெருமையையும் காத்துக்கொண்டு எமது வலிமையில் தங்கியிருப்பதாகும்.

ஒப்பந்தங்களில் இருந்து விலகி ஓடும் அவர்கள் எங்களை பேச்சுவார்த்தைக்கும் அழைக்கிறார்கள். ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களுடன் ஜெர்மைனியையும் இணைத்துக்கொண்டு (5 + 1) பேச்சுவார்த்தை நடத்தினோம்; பேச்சுவார்த்தை மேசையில் அமெரிக்காவும் இருந்தது; ஆனால், அவர்களின் முன்னோடி செய்த உறுதிப்பாட்டை மதிக்க அமெரிக்கா தவறிவிட்டது.

எனது மக்கள் சார்பாகவும் மற்றும் அரசின் சார்பாகவும், பொருளாதாரத் தடைகளின் கீழ் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் எங்கள் பதில் எதிர்மறையானது என்பதை அறிவிக்க விரும்புகிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக அரசாங்கமும் ஈரானின் மக்களும் உறுதியுடன் இருந்து வருகிறார்கள். ஈரானை வறுமை, அழுத்தம் மற்றும் பொருளாதாரத்தடை ஆகியவற்றின் மூலமும் ஆயுத அச்சுறுத்தல்கள் மூலமும் சரணடையுமாறு கட்டாயப்படுத்த முயற்சிக்கும் ஒரு எதிரியுடன் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டாது.

உங்களுக்கு ஒரு நேர்மறையான பதில் தேவைப்பட்டால், இஸ்லாமிய புரட்சியின் தலைவரால் அறிவிக்கப்பட்டபடி, பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான ஒரே வழி உறுதிமொழிகள் மற்றும் இணக்கத்திற்கு நீங்கள் மீள்வதே  ஆகும்.

JCPOA இன் பெயரை காக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதன் கட்டமைப்பிற்குத் திரும்பி, ஐ.நா.பாதுகாப்புக் சபை தீர்மானம் 2231 ஐக் கடைப்பிடிக்கலாம். பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமானால், தொடக்கத்திற்கான வழியைத் திறக்க பொருளாதாரத் தடைகளை நீக்குங்கள்.  

நான் அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்: நீங்கள் குறைந்த வற்றுடன் திருப்தி அடைந்தால், நாங்கள் குறைந்த பட்சமாக செயல்படுவோம்; நீங்கள் அதிகமாக எதிர்பார்த்தால், எமக்கு அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்.

உங்களது கோரிக்கை ஈரான் அணு  ஆயுதம் தயாரிக்கக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்று இருக்குமாயின், அதை ஐ.ஏ.இ.ஏ மேற்பார்வையுடனும், மிக முக்கியமாக ஈரானிய தலைவரின் ஃபத்வாவுடனும் எளிதாக அடைய முடியும். பேச்சுவார்த்தை என்று  "வித்தை" காட்டாமல், நீங்கள் பேச்சுவார்த்தையின் உண்மைக்கு திரும்ப வேண்டும். நினைவு புகைப்படம் என்பது பேச்சுவார்த்தையின் கடைசி கட்டமாகும்; முதல் அல்ல.

ஈரானில் நாங்கள், அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து தடைகளையும் மீறி, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்ற சரியான பாதையில் தான் இருக்கிறோம். 2017 ஆம் ஆண்டில் ஈரானின் பொருளாதாரம் உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்தது. இன்று, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வெளிநாட்டு தலையீட்டிலிருந்து வெளிப்படும் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், நாங்கள் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பாதையில் நிலைத்திருக்கிறோம். ஈரானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எண்ணெய் உற்பத்தியை தவிர்த்து, சமீபத்திய மாதங்களில் மீண்டும் சாதகமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் வர்த்தக சமநிலை நேர்மறையாக உள்ளது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புக் கோட்பாடு பாரசீக வளைகுடாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வழிசெலுத்தல் மற்றும் இயக்கத்தின் பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
சமீபத்திய சம்பவங்கள் இத்தகைய பாதுகாப்பை கடுமையாக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. பாரசீக வளைகுடா, ஓமான் கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு மற்றும் அமைதியை பிராந்திய நாடுகளின் பங்களிப்புடன் வழங்க முடியும், மேலும் எண்ணெய் மற்றும் பிற எரிசக்தி வளங்களின் சுதந்திர போக்குவரத்தை உறுதிப்படுத்த முடியும், இந்த பாதுகாப்பை எல்லா நாடுகளுக்கும் இணைந்த, ஒரு குடையாக நாங்கள் கருதுகிறோம்.

பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகியவற்றைப் பராமரிப்பதில் எனது நாட்டின் வரலாற்றுப் பொறுப்பின் அடிப்படையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் தற்போதைய நிலை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளையும் அழைக்க விரும்புகிறேன். "நம்பிக்கைக்கான கூட்டணி", அதாவது ஹார்முஸ் அமைதி முயற்சி.

ஹார்முஸ் ஜலசந்தியில் வசிக்கும் அனைவருக்கும் அமைதி, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நலனை மேம்படுத்துவதும், அவர்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் அமைதியான மற்றும் நட்பு உறவுகளை மேம்படுத்துவதும் இந்த நம்பிக்கைக்கான கூட்டணியின் குறிக்கோள்.

இந்த முயற்சியில் ஒத்துழைப்புக்கான பல்வேறு அனுகூலங்கள் உள்ளன, அதாவது எரிசக்தி வழங்கலில் கூட்டு பாதுகாப்து, வழிசெலுத்தல் சுதந்திரம் மேலும் எண்ணெய் மற்றும் பிற வளங்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு மற்றும் அதற்கு அப்பால் சுதந்திரமாக பறிமாற்றுதல்.

நம்பிக்கைக்கான கூட்டணி ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்குதல், பரஸ்பர மரியாதை, சமமான நிலை, உரையாடல் மற்றும் புரிதல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதித்தல், சர்வதேச எல்லைகளை மீறாமை, அனைத்து பிணக்குகளுக்கும் அமைதியான தீர்வு போன்ற முக்கியமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது; மற்றும் மிக முக்கியமாக, ஆக்கிரமிப்பு மற்றும் ஒருவருக்கொருவர் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத இரண்டு அடிப்படைக் கொள்கைகள். நம்பிக்கைக்கான கூட்டணிக்கு ஆதரவாக ஒரு சர்வதேச குடையினை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் இருப்பு அவசியம்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர், நம்பிக்கைக்கான கூட்டணியின் கூடுதல் விவரங்களை பயனாளிகளுக்கு வழங்குவார்.

பாதுகாப்பு தொடர்பாக எந்த முன்முயற்சியும், எந்த கூட்டணி அமைத்தலும் எந்தவொரு தலைப்பிலும் எந்தவொரு பாதுகாப்பு முன்முயற்சியும் உருவாக்கப்படுவது பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகளின் மையத்தன்மை மற்றும் கட்டளையுடன் பிராந்தியத்தின் விவகாரங்களில் தலையிடுவதற்கான தெளிவான எடுத்துக்காட்டு.
பிற சக்திகள் இப்பிராந்தியத்தில் கண்காணிப்பு செலுத்துவது என்பது சுதந்தர போக்குவரத்து உரிமைக்கும் அபிவிருத்திக்கான சுதந்திரத்துக்கும் முரணானதாகும். மேலும் அது பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் அதே வேளையில், பதட்டங்கள் மற்றும் நிலைமைகளின் மேலும் சிக்கல்கள் மற்றும் பிராந்தியத்தில் அவநம்பிக்கை அதிகரிக்கும்.

அமெரிக்க துருப்புக்கள் வெளியேறும்போது பிராந்தியத்தின் பாதுகாப்பு வழங்கப்படும். அமெரிக்க ஆயுதங்கள் மற்றும் தலையீட்டால் பாதுகாப்பு கிடைக்கமாட்டாது. அமெரிக்காவினால்,18 ஆண்டுகள் கழிந்தும் கூட, பயங்கரவாதச் செயல்களைக் ஒழிக்க முடியவில்லை. இருப்பினும், ஈரான் இஸ்லாமிய குடியரசினால் அண்டை நாடுகள் மற்றும் அரசாங்கங்களின் உதவியுடன் தாயேஷ் அமைப்பின் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த முடிந்தது. மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய இறுதி பாதை உள் ஜனநாயகம் மற்றும் வெளிப்புற இராஜதந்திரம் ஊடாகவே செல்கிறது. பாதுகாப்பை வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து வாங்கவோ அல்லது அவர்களால் வழங்கவோ முடியாது.

நமது அண்டை நாடுகளின் அமைதி, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவையே நமக்கு அமைதி, பாதுகாப்பு மற்றும் சுதந்திரம்.
அமெரிக்கா நம் அண்டை நாடு அல்ல. ஈரான் இஸ்லாமிய குடியரசுதான் உங்களது அண்டை நாடாகும், அண்டை வீட்டுக்காரரே முதலில் உதவிக்கு ஓடி வருவார், இதுவே  எங்களுக்கு நீண்ட காலமாக கற்பிக்கப்படுகிறது. ஒரு சம்பவம் நடந்தால், நீங்களும் நாங்கள் தனியாக விடப்படுவோம். ஒரு சம்பவம் நடந்தால், நீங்களும் நாங்கள் தனியாக இருப்போம். நாங்கள் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாக இருக்கிறோம், அமெரிக்காவுடன் அல்ல.

அமெரிக்கா அமைந்துள்ளது அமெரிக்க கண்டத்தில், மத்திய கிழக்கில் அல்ல. அமெரிக்கா எந்தவொரு தேசத்தையும் ஆதரிக்க மாட்டாது; அது எந்த ஓர் அரசின் பாதுகாவலரும் அல்ல. உண்மையில், எந்த அரசும் தமது பாதுகாப்பை அந்நியர்களிடம் ஒப்படைக்க மாட்டாது. யேமனின் நெருப்பின் தீப்பிழம்புகள் இன்று ஹிஜாஸுக்கு பரவியிருந்தால், அப்பாவிகள் மீது வீண் பழிசுமத்துவதை விட்டுவிட்டு அதை செய்தவரை தேடி தண்டிக்க வேண்டும்.
பிராந்தியத்திற்கு வெளிநாட்டினரை அழைப்பதை விட யேமனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுவதன் மூலம் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எங்கள் தேசிய வலிமை மற்றும் பிராந்திய நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச அதிகாரத்தை பிராந்திய பாதுகாப்புக்கு பயன்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

அரேபிய தீபகற்பத்தில் அமைதிக்கான தீர்வு, பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை ஆகியவை பிராந்தியத்திற்கு வெளியே இருப்பதை விட பிராந்தியத்திற்குள் தேடப்பட வேண்டும். அமெரிக்காவுக்கு தீர்க்க முடிந்ததை விட பிராந்தியத்தின் பிரச்சினைகள் பெரியவை மற்றும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பிரச்சினைகளை அமெரிக்கா அமெரிக்காவினால் தீர்க்க முடியவில்லை, மேலும் தீவிரவாதம், தலிபானிசம் மற்றும் தாயேஷ்  ஆகியவற்றின் ஆதரவாளராக இருந்து வருகிறது. அத்தகைய அரசாங்கத்தால் இப்பிராந்தியத்தில் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எங்கள் பிராந்தியம் சரிவின் விளிம்பில் உள்ளது. ஒரு சிறிய தவறு பெரிய நெருப்பைத் தூண்டும் என்பதால், வெளிநாட்டினரின் ஆத்திரமூட்டும் தலையீட்டை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். எந்தவொரு மீறலுக்கும் எங்கள் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதற்கும் நாங்கள் தீர்க்கமாகவும் வலுவாகவும் பதிலளிப்போம்.

எவ்வாறாயினும், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் பிராந்தியத்தில் பொதுவான நலன்களைக் கொண்ட அனைத்து நாடுகளிடையேயும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே எங்களுக்கு மாற்று மற்றும் சரியான தீர்வாகும்.

இது ஈரானிய தேசத்தின் செய்தி:

போர் மற்றும் வன்முறையை விட சிறந்த எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையில் முதலீடு செய்வோம். நீதிக்கும்  அமைதிக்கும் திரும்புவோம்; சட்டங்களை மதிப்போம்; பேச்சுவார்த்தை, அர்ப்பணிப்பு வாக்குறுதி பேணுவோம்; பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவோம்.

நன்றி 


Friday, September 20, 2019

அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து பிராந்தியத்தை விடுவிக்கும் ஈரான்-ஈராக் ஒற்றுமை





வேகமாக மாறிவரும் பிராந்தியத்தின் நிலைமையானது அமேரிக்காவினதும் மற்றும் அதனது இஸ்லாமிய உம்மாவிற்கு எதிரான, குறிப்பாக மேற்கு ஆசியாவின் முஸ்லிம்களுக்கும் எதிரான குற்றச்செயலின் பிராந்திய கூட்டாளிகளினதும் விரைவான வீழ்ச்சியின் தெளிவான அறிகுறியாகும்.


முதலாவது, அமெரிக்கர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் ஸ்திரத்தன்மையை குலைக்க எடுத்த முயற்ச்சி தோல்வியுற்றது. அடுத்து அவர்கள் ஐசிஸ் எனும் தக்பீரிகளைக் கொண்டு பாரசீக வளைகுடாவின் தலைநகரில் இருந்து மத்தியதரைக் கடலின் லெவாண்டின் கரை வரை ஒரு பெரிய தக்ஃபிரிஸ்தானாக மாற்ற மேற்கொண்ட சதி, கனவாய் போனது.

டமாஸ்கஸ் மற்றும் பாக்தாத்தில் உள்ள முறையான அரசாங்கங்களை கவிழ்க்கவும், இரண்டு தலைநகரங்களில் அமெரிக்க கைப்பாவைகளை நிறுவவும் வஹாபி-சியோனிச கனவு, பயங்கர கனவாக மாறியது. ஈரானின் புத்திசாலித்தனமான கொள்கைகளுக்கும் இஸ்லாமிய புரட்சியின் தலைவரின் தொலைநோக்கு பார்வைகளுக்கும் நன்றி.


வாஷிங்டன் தாயெஷ் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை எதிர்ப்பதாக நடித்து, ஈராக்கின் நண்பராக காட்ட முயன்றது.

ஹஷ்த் அஷ்-ஷ'பி என்ற மக்கள் அணிதிரட்டல் அலகுகளின் உருவாக்கமும் ஈராக்கின்  ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஒருங்கிணைந்த அதனது நடவடிக்கையும் அமெரிக்காவின் கணக்கீடுகளை பிழைக்கச் செய்தது.

இந்த நிகழ்வுகள் ரியாத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்தன. அதனால் மருண்ட இஸ்லாம் விரோத வஹாபி ஆட்சி பிரபலமான அன்ஸாருல்லாஹ் இயக்கத்தை துவம்சம் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில், அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இணங்க, பிராந்தியத்தின் வறிய நாடான யேமனுக்கு எதிராக ஒரு போரை ஆரம்பித்தது.

எவ்வாறாயினும், அதிக காலம் செல்லுவதற்கு முன்பே இஸ்லாம் விரோத சவுதிகள் தாங்களே தோண்டிய புதைகுழியில் சிக்கிக் கொண்டனர்; மேலும் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான நவீன ஆயுதங்கள் இருந்தபோதிலும், அன்ஸாருல்லாஹ்வின் பதிலடியை அதனால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.

இதற்கிடையில், ஈரான் இஸ்லாமிய குடியரசில் மட்டுமல்லாமல், மேற்கு ஆசியாவின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரனான இமாம் ஹுசைனின் (அலை) கர்பலாவில் நடந்த காவிய சம்பவத்தால் உத்வேகம் கொண்டோரின் எழுச்சி ட்ரம்பை வெள்ளை மாளிகைக்குள் முடங்கச் செய்தது.

அங்கிருந்து ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதார பயங்கரவாத பிரச்சாரத்தை துவக்கியது மட்டுமல்லாமல் சியோனிஸ்டுகளால் தூண்டப்பட்டு, பாலஸ்தீனிய இஸ்லாமிய குழுக்களான ஹமாஸ், யேமனின் அன்சரல்லா, மற்றும் லெபனானின் புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு இயக்கமான ஹெஸ்பொல்லா போன்றவற்றுக்கு எதிராக தனது ஆத்திரத்தை கொட்டத் தொடங்கினார்.

ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை ட்வீட் செய்வது மூலமும் மற்றும் பாரசீக வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை பலமூட்டுவதன் மூலமும் இஸ்லாமிய குடியரசை முழங்காலிட செய்ய முடியும் என்று அவர் நினைத்தார்.

எப்போதும் விழிப்புடன் இருந்த ஈரானின் பாதுகாவலர்களால் உலகின் அதிநவீன மற்றும் விலையுயர்ந்த ட்ரோன் உரிய நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது, வழக்கமான பொய்யர் டிரம்புக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. ஈரானுடனோ அல்லது ஈராக், சிரியா, லெபனான் மற்றும் யெமன் போன்ற அதன் நட்பு நாடுகளுடனோ நேரடி சண்டையிலீடுபடுவது தற்கொலைக்கு சமம் என்பதை உணர்ந்ததாகத் தெரிகிறது.

அதே நேரத்தில், ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் அமெரிக்க பிரயத்தனமும் மோசமாக தோல்வியடைந்தது. இரு நாடுகளும் அவற்றின் மக்களும் தொழிநுட்பம் மற்றும் கலாச்சாரம் முதல் அரசியல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவம் வரையிலான துறைகளில் வளர்ந்து வரும் நெருக்கம் வாஷிங்டனை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதற்கிடையில், யெமன் ஹவ்திக்கள் தங்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் வேகமாக அதிகரித்துவரும் சக்தியின் ஊடாக, சவூதி அரேபியாவின் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பின் பலவீனத்தை அப்பட்டமாக நிரூபித்துள்ளனர்.

இதிலிருந்து புரிவது என்னவென்றால் றியாத்தின் ஆட்சி இரவல் வாங்கிய காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பஹ்ரைனில் ஆல்-இ கலீஃபா கொள்ளையர் ஆட்சியும் அவ்வாறே. அதே போல், அபகரிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் சட்டவிரோத ஆட்சி நடத்தும் சியோனிஸ்டுகளும் அதே நிலையில்தான் உள்ளனர் என்பதாகும்.

மொத்தத்தில், ஈரானுக்கும் ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் மற்றும் லெபனானுக்கும் இடையில் வளர்ந்து வரும் ஒற்றுமை, அழியாத எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைந்த பகுதிகளாக அவற்றை இறுக்கியுள்ளது. ஆகவே CENTCOM பயங்கரவாதிகளின் சட்டவிரோத இருப்பிலிருந்து முழுப் பிராந்தியத்தையும் தூய்மைப்படுத்தும் நேரம் வெகுதூரத்தில் இல்லையெனலாம்.



Friday, September 13, 2019

"எதிரி (அமெரிக்கா) ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வரை ஈரானின் எதிர்ப்புக் கொள்கை மாறாது" - ரூஹானி




பாரசீக வளைகுடாவில் பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்டன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் "போர்க்குணமிக்கவர்களை ஒதுக்கி வைக்க" ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி புதன்கிழமை அமெரிக்காவை வலியுறுத்தினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரூஹானி, ஈரான் மீதான "போர்க்குணமிக்க மற்றும் அதன் அதிகபட்ச அழுத்தக் கொள்கையை கைவிட" வாஷிங்டனை மேலும் வலியுறுத்தினார், மேலும் தேவைப்பட்டால் தெஹ்ரான் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் குறைக்கும் என்றும் கூறினார்.

"
போர்க்குணத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும், ஈரான் மீதான அதிகபட்ச அழுத்தம் என்ற கொள்கையை கைவிட வேண்டும் ... அணுசக்தி ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டிய கடமைகள் ஈரானைப்போல் மற்ற தரப்பயிருக்கும் உண்டு, அவசிமேற்பட்டால் நாங்கள் மேலும் நடவடிக்கைகளை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.

அணுசக்தி உற்பத்தி வேகத்தை அதிகரிக்கும் தொழில்நுட்ப பயன்பாடு,  ஒப்பந்தத்திற்கு அப்பால், "மூன்றாம் கட்ட நடவடிக்கையாகும்" என்று ரூஹானி குறிப்பிட்டார்.  "தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நாங்கள் மற்ற நடவடிக்கைகளை எடுப்போம்" என்றும் அவர் கடந்த புதனன்று கூறினார்.

"
எங்கள் எதிரி (அமெரிக்கா) ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வரை ஈரானின் எதிர்ப்புக் கொள்கை மாறாது" என்று ரூஹானி கூறினார்.

தனக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்புக்கான வாய்ப்பை ரூஹானி மீண்டும் நிராகரித்தார். ட்ரம்ப்-ரூஹானி சந்திப்பு பற்றி வெள்ளை மாளிகை சமிக்ஞை செய்த பின்னர் ரூஹானியின் இந்த கருத்துக்கள் வெளிவந்தன.

அமெரிக்கத் தலைவர் போல்டனை பதவி நீக்கம் செய்த பின்னர், ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளர்களில் இருவர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானிய ஜனாதிபதியை, எந்த முன்நிபந்தனையுமின்றி  சந்திக்கத் தயாராக உள்ளார் என்று செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ மற்றும் திறைச்சேரி செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோர் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான "அதிகபட்ச அழுத்தம்" என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா தொடர்ந்து செயற்படுத்தும் என்று தெரிவித்தனர்.

தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அனைத்தையும் நீக்கி வாஷிங்டன் தனது "பொருளாதார பயங்கரவாதத்தை" முடிவுக்கு கொண்டுவந்தால்தான் ஒரு கூட்டம் நடைபெற முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஈரானின் பிரதிநிதி Takht Ravanchi மீண்டும் வலியுறுத்தினார்.

ஈரானிய தூதர் எந்தவொரு கூட்டமாயினும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கிய சக்திகளின் (5+1) குழுவின் கட்டமைப்பிலேயே  நடத்தப்பட வேண்டும் என்றார்.

"
அமெரிக்க அரசாங்கத்தின் பொருளாதார பயங்கரவாதம் மற்றும் இத்தகைய கொடூரமான பொருளாதாரத் தடைகள் ஈரானிய மக்கள் மீது சுமத்தப்படும் வரை, பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை" என்று அவரை மேற்கோள் காட்டி ஈரானின் செய்தி சேவையான IRNA தெரிவித்தது.

ஈரானுக்கு எதிரான போரை நோக்கி ட்ரம்பை தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட போல்டனை நீக்குவதற்கான ட்ரம்பின் முடிவு அமெரிக்கர்களுக்குரிய ஒரு விஷயம் என்று தூதர் கூறினார்.

"
ஜான் போல்டனை நீக்கிய விடயமானது அவர்களது உள் விவகாரம், உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து நாங்கள் எந்த நிலைப்பாட்டை எடுப்பதில்லை" என்று தக்த்-ராவஞ்சி (Takht Ravanchi) கூறினார்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகாலமாக இருந்துவரும் முறுகல்நிலை உறவுகளில் போல்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் தாக்கம் குறித்து கேட்டதற்கு, எந்தவொரு முடிவுக்கு வருவதற்கு "காலம் இன்னும் கனியவில்லை" என்றார்.

"
அமெரிக்காவின் தீவிரவாதக் கொள்கை மாறுமா இல்லையா என்பது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல்வேறு காரணிகளைப் பொறுத்தது" என்று அவர் ISNA விடம் கூறினார்.

போல்டன் ஒரு சர்ச்சைக்குரிய நபர், 2003 ஈராக் மீதான படையெடுப்பு மற்றும் பிற ஆக்கிரமிப்பு தொடர்பான வெளியுறவுக் கொள்கை முடிவுகளுடன் நெருக்கமாக தொடர்புடையவர். ஈரான், வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகியவற்றுக்கான வெள்ளை மாளிகையின் அச்சுறுத்தும் அணுகுமுறையில் அவர் ஒரு முக்கிய உந்து சக்தியாகக் காணப்பட்டார்.

ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை போல்டனை "அமெரிக்காவின் மோசமான கொள்கைகளின் சின்னம் மற்றும் ஈரானுக்கு எதிரான விரோதப் போக்கு கொண்டவர்" என்று அழைத்தார், ஆனால் அவரது பதவி நீக்கம் என்பது அமெரிக்காவின்  உள் பிரச்சினை என்று கூறினார்.

போல்டன், சியோனிச பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் மற்றும் அபுதாபி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் அடங்கிய #B_Team என அழைக்கப்படுவதைப் பற்றி தனது டுவிட்டர் செய்தியில் ஈரானிய வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீப்  மீண்டும் ட்விட்டரைப் பயன்படுத்தி, இந்த டீமில் உள்ளோர் "ஈரானை மேய காத்திருக்கும் கழுகுகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

போல்டன் வெளியேற்றப்பட்ட பின்னர் "உலகம் ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிறது" என்று ஸரிஃப் கூறினார். "போர் தாகம் - அதிகபட்ச அழுத்தம் - போர்வெறியருடன் நீங்க வேண்டும்," என்று ஸரிஃப் எழுதினார்.
இருப்பினும், மற்ற அதிகாரிகள் எச்சரிக்கையை வலியுறுத்தினர்.

இஸ்லாமிய புரட்சி காவல்படைப் பிரிவு தளபதியும் அதன் முன்னாள் தலைவருமான ஜெனரல் மொஹ்சென் ரெஸாயீ ஒரு ட்வீட்டர் செய்தியில் கூறியதாவது: "போல்டன் நீக்கப்பட்டதால் நாங்கள் ஏமாற மாட்டோம்."

போல்டன் ஈரானைப் பற்றி நீண்டகாலமாக கடுமையாகப் பேசியவர், அவர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரித்தார் மற்றும் ஈரான் எதிர்ப்பு முஜாஹெடின் கல்க் (எம்.கே.ஓ) என்ற ஒரு மோசமான பயங்கரவாதக் குழுவிலிருந்து பேசுவதற்காக பணம் பெற்றவராகும். ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்பு, 2015 ஆம் ஆண்டில் போல்டன் "ஈரானின் வெடிகுண்டை நிறுத்த, அதன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த வேண்டும்." என்று கூறியிருந்த செய்தி பிரபலமான 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில், சியோனிச கட்சித் தலைவர் நாப்தாலி பென்னட், போல்டனின் பதவி நீக்கம் குறித்து மிகவும் கவலைப்படுவதாகக் கூறினார்.

புதன்கிழமை நடந்த மாரிவ்-ஜெருசலேம் போஸ்ட் மாநாட்டில் பேசிய பென்னட் இடம், இந்த சமீபத்திய நிகழ்வுகளால் அவர் எவ்வளவு கவலைப்படுகிறார் என்று கேட்கப்பட்டது. ட்ரம்ப் ஈரானுடன் இணக்கமாக முயல்கிறார் என்றும் அதுபற்றி "மிகவும்" கவலைப்படுவதாக பென்னட் பதிலளித்தார்.

"
நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். டிரம்ப் வெளிப்படையாக இஸ்ரேலின் ஒரு பாரிய நண்பர் தான் என்றாலும் எங்கள் நலன்கள் ஒரே மாதிரியாக இல்லை, அவருக்கு அவரது நலன், எமக்கு எமது நலன்." என்று பென்னட் கூறினார்.




Monday, September 2, 2019

கூர் வாளை செங்குருதி வெற்றி கொண்ட மாதம் - முஹர்ரம்





முஹர்ரம் மாதம், இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் துயர் நிறைந்த சம்பவத்தை நினைவுகூரும் மாதமாகும். இந்த வரலாற்று நிகழ்வின்  ஞாபகார்த்தமாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், தீய கொடுங்கோலர்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்க எம்மைத் தூண்டுகின்றன.


யஸித் போன்ற சக்தியை நாங்கள் இமாம் ஹுசைனின் மனவலிமையைக் கொண்டு எதிர்த்து நிற்கிறோம். அசத்தியத்தை எதிர்க்கும் போராட்டத்தில் நாம் உயிர் தியாகம் செய்யவும் தயாராய் உள்ளோம். இறைவனின் கருணை மீது எமக்கு பரிபூரண நம்பிக்கை உள்ளது. புனித குர்ஆனின் சூரா ஆல்-இ இம்ரானின் 169 வது வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு வாக்களிக்கின்றான்:

"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்".

அந்த மாதம் மீண்டும் வந்துவிட்டது - முஹர்ரம் மாதமும், கர்பலா காவியத்தின் நினைவுகளும் தொடர்ந்து நம் வாழ்வில் ஆழமான செல்வாக்கை செலுத்துகின்றன. செங்குருதி கூர்மையான வாள்களை வென்ற நாள் அது. ஆம், 6 மாத குழந்தையின் செங்குருதியும் தான். ஒவ்வொரு ஆண்டும் மனித மனசாட்சியைத் உசுப்பும்  மாதமிது; மார்க்கத்துக்காகவும் சமுதாயத்திற்காக்கவும் செய்ய வேண்டிய தனது கடமைகளை மனிதகுலத்திற்கு உணர்த்தும் மாதம் இது.

மனித வாழ்க்கையை நிர்வகிக்கும் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை கொடுங்கோலர்களின் கைகளில் விட்டுவிட்டு, வெளிப்புற வழிபாட்டு முறைகளில் மட்டும் ஈடுபடுவது பொருத்தமற்றது. இறை சட்டத்தை புறக்கணித்து, தவறான, மன இச்சையின் அடிப்படையில் இயங்குவது தம்மைத் தாமே ஏமாற்றும் செயலாகும். இதன் மூலம் மக்களின் தலைவிதி சமூக அநீதிக்குள் வீழ  அனுமதிக்கிறது. இதன் விளைவு ட்ரம்ப், நெத்தன்யாகுதக்ஃபிரி போன்ற தீய சக்திகள் உருவாவதற்கும் தறுதலை எம்.பி.எஸ் போன்ற குற்றவாளிகள் உருவாவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.


இது, வாழ்க்கைக்கு புத்தூக்கமளிக்கும் முஹர்ரம் மாதத்தின் செய்தியாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹர்ரம் முதல் நாள் கொண்டாடி களிக்கும் ஒரு நாள் அல்ல. துரதிர்ஷ்டவசமாக சில அரபு நாடுகளில் இது கொண்டாட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. றஸூலுல்லாஹ்வின் பேரனான இமாம் ஹுசைனின் மாபெரும் தியாகத்தை இவர்கள் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மேலும் அப்பாவி சக முஸ்லிம்களின் இரத்தத்தை இந்த நாட்டுகள் தொடர்ந்து கொட்டுகிறது. யேமனில் சவுதிகளும் எமிரேட்டிகளும் இணைந்து இதையே செய்கிறார்கள்.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு ரசூலுல்லாஹ் புனித இடம்பெயர்வு முஹர்ரம் தினத்தன்று நிகழ்ந்த ஒன்றல்ல. ரஸூலுல்லாஹ்வின் ஹிஜ்ரத் ரபி அல்-அவ்வல் மாதத்திலேயே நிகழ்ந்தது என்ற உண்மையைப் பார்க்கும்போது, புத்தாண்டு எனும் சாக்கில் இத்தகைய கொண்டாட்டங்களும் விடுமுறை நாட்களும் ஜஹிலியாவின் நாட்களின் நடைமுறைகளே அன்றி வேறொன்றுமில்லை. ஆகவே, இத்தகைய அற்பத்தனமான கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் உயர் நோக்கங்களில் இருந்து முஸ்லிம்களை தூர விலக்குவதற்கான சதித்திட்டங்கள் தவிர வேறொன்றுமில்லை. அஹ்லுல்பைத்துகள் எனும் றஸூலுல்லாஹ்வின் புனித குடும்பத்தினரின் புனித இரத்தத்தால் இஸ்லாத்தின் உயர் நோக்கங்கள் இன்றளவிலும் பாதுகாக்கப்பட்டும் போஷிக்கப்பட்டும் வருகின்றன.


முஹர்ரம் என்பது முஸ்லிம்களின் பிரதிபலிப்புக்கான நேரம். இமாம் ஹுசைன் (அலை) மற்றும் கர்பலாவின் தியாகிகள் ஞாபகார்த்தமாக அனுஷ்டிக்கப்படும் துக்க நிகழ்வுகள் சத்தியத்தைப் பற்றி சிந்திக்க சிறந்த சந்தர்ப்பமாகும்.

முஹர்ரம் முதலாம் தினத்தில் பாரசீக வளைகுடா அரபு நாடுகளிலும் எகிப்திலும் நடைமுறையில் இருந்து வரும் களியாட்டம், நடனம் மற்றும் மது அருந்துதல் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

சக முஸ்லிம்களின் இரத்தம் சிந்துவதற்கு இஸ்லாம் முஸ்லிம்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அவ்வாறிருக்க, தக்ஃபிரி மற்றும் பிற வழிகெட்ட குழுக்கள் இன்று முஸ்லிம்களை படுகொலை செய்த வண்ணம் உள்ளன. நிச்சயமாக ஈனச் செயல் கருணைமிக்க தூதரால் நமக்குக் கற்பிக்கப்பட்டவை அல்ல.

பனீ சவுத் மற்றும் எமிரேட்ஸின் பனீ கலீஃபா போன்ற, மக்களால் அங்கீகரிக்கப்படாத ஆட்சியாளர்கள் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவில் உள்ள ஷெய்த்தான்களுடன் இணைந்து முஸ்லிம்களின் முதுகில் குத்துகின்றனர். இந்த சாத்தானிய கூட்டணி பாலஸ்தீனத்தை விற்பதற்கும் மற்றும் தங்கள் சொந்த குடிமக்களை அச்சுறுத்தி அடக்கிவைக்கவும் முயற்சிக்கிறது என்பதை நாம் காண்கிறோம். இதற்கு இஸ்லாம் எவருக்கும் உரிமம் வழங்கவில்லை.


முஹர்ரம் தொடங்கியவுடன் ஒடுக்கப்பட்ட பஹ்ரைனியர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட நைஜீரியர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளின் இதயங்கள் கர்பலாவை நோக்கி திரும்பும்போது, அங்கு தியாகிகளுடனான சந்திப்பு இடம்பெறுகையில், உமையாக்களின் மறைக்கப்பட்ட நயவஞ்சகத்தனம் வெளிப்படுகிறது; இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் குருதி புதுப்பிக்கப்படுகிறது.

முஹர்ரம் என்பது பயங்கரவாதத்தின் வேர்களை அம்பலப்படுத்த மனித மனசாட்சியைத் தூண்டும் மாதமாகும். இப்போது சில ஆட்சியாளர்கள் இத்தினத்தில் இஸ்லாத்தின் மனிதாபிமான பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கின்றனர். தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளும் சலபிகள், வஹாபிகள், தாயேஷ் மற்றும் அதுபோன்ற குழுக்களின் மிருகத்தனமான செயற்பாடுகளினால் இது தெளிவாகிறது, நடைமுறையில் அவர்களுக்கு இஸ்லாத்தின் உயர் சட்டங்களுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பயங்கரவாதிகள் சியோனிச ஆதரவு கொண்ட மேற்கத்திய ஊடகங்களால் "ஜிஹாதிகள்" மற்றும் "தூய்மையான முஸ்லிம்கள்" என்று அழைக்கப்படுவது நகைப்புக்குரியது. இந்த தக்ஃபிரிகள் மனிதர்களின் உடலை வெட்டி, உள்ளுறுப்புகளை அறுத்தெடுத்து பச்சையாக சாப்பிடுவது நிச்சயமாக ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய செயல் அல்ல.

ஒவ்வொரு யுகத்திலும் மனிதகுலம் ஒரு தகுதியான மாதிரியைக் கொண்டிருக்க முடியும் என்பதை முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரன் உலகுக்கு உணர்த்தினார்கள். தீய சக்திகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி எக்காலத்திலும் இருக்கும் என்பதை உணர்த்தினார்கள். இதுவே இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் செய்தியாகும்.


ஈராக்கின் கர்பலா சமவெளியில் ஹிஜ்ரி 61 (கி.பி 680) இல் அஷுராவின் துயர்நிறைந்த சம்பவங்கள் அல்லது முஹர்ரம் 10 வது நாளின் துன்பகரமான சம்பவங்களை இம்மாதம் நினைவூட்டுகிறது. இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் உமையா ஆட்சியினால் விசுவாசப்பிரமானம் செய்ய சட்டவிரோதமாக நிர்பந்திக்கப்படுகையில், துஷ்டன் யஸீதுக்கு விசுவாசப்பிரமானம் செய்வதை விட போரிட்டு மடிவதை உயர்வாகக் கருதினார்கள்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அவர் நீதிக்கான இயக்கத்தின் முன்னோடி, நல்லவற்றை ஏவும் மற்றும் தீயவற்றை விலக்கும் இயக்கங்களுக்கான முன்னோடி. எல்லாம்வல்ல அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் பேரனால் தொடங்கப்பட்ட இவ்வியக்கம்  1380 ஆண்டுகளுக்கு மேலாக, இன்னும் பலத்திலிருந்து வலிமைக்குச் செல்லும் ஒரு பேரியக்கமாக உள்ளது.

இந்த மகத்தான பொறுப்பை இப்போது ஏந்திச் செல்லும் ஈரான் இஸ்லாமிய குடியரசு, அதற்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்களை வகுக்கும் டிரம்ப், நெதன்யாகு, பின் சல்மான் மற்றும் அவர்களின் சாத்தானிய கூட்டாளிகள் போன்ற கொடுங்கோலர்களை நிச்சயமாக வெற்றிகொள்ளும்.


-       எஸ். நவாப்ஸாதேஹ்