Tuesday, September 28, 2021

இமாம் ஹுசைனின் ஷஹாதத் அநீதி, கொடுங்கோன்மை, ஆணவத்திற்கு எதிரான ஓர் எழுச்சி

 America cannot confront Husseini ideology: political activist



அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளிகளினாலோ ஹுசைனி இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கூறுகிறார் ஒரு லெபனான் அரசியல் ஆர்வலர்

"எதிர்ப்பு இயக்கங்கள் ரசூலுல்லாஹ்விடம் இருந்து கற்றுக்கொண்ட உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் இயங்குகின்றன, அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும், மற்றும் தூய்மையான இமாம்களையும், பொருந்திக்கொள்ளட்டும்" என்று ஹுசைன் அல்-திரானி டெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.

"எதிர்ப்பு சித்தாந்தத்தை எதிர் கொள்வதென்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை; அவர்களுக்கு தார்மீக சிதைவு மற்றும் சமூக மற்றும் குடும்ப சிதைவு தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை” என்று அல்-திரானி குறிப்பிடுகிறார்.

இருபது வருடப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, ஒரு நாடு எதிர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒற்றுமையாக செயல்பட்டால் இராணுவ ஆதிக்கத்தால் போர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதையே இது உணர்த்தியுள்ளது.

இப்போது பல அரசியல் ஆய்வாளர்கள் ஈராக் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதை எதிர்பார்க்கலாம் என்று ஆரூடம் கூறுகின்றனர்.

லெபனான் ஆர்வலர் வாதிடுகையில், மக்களின் சக்திக்கு முன்னால் அவர்களது இராணுவ சக்தி தோல்வியை தழுவியதையே அது நிரூபித்தது, அமெரிக்கர்கள் தாங்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தான் ஆகும், அமெரிக்க ராணுவம் வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுவதை நாம் கண்டோம்" என்று லெபனான் ஆர்வலர் கூறுகிறார்.

அல்-திரானி மேலும் கூறுகையில், "முன்னர், லெபனானிலிருந்தும் அமெரிக்கப் படைகள் சத்திய போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஒரு காட்சியை நாங்கள் கண்டோம். விரைவில் சிரியா, ஈராக் மற்றும் யேமனில் இருந்து தப்பித்து ஓடுவதையும் நாம் காண்போம்".


அவரின் முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

கே: இஸ்லாமிய உம்மத்தின் அரசியல் வாழ்க்கையில் தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஷஹாதத் நினைவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

: இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்), அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் தேதி ஹிஜ்ரி 61 கர்பலாவில் நடந்த தியாகம் மனித வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய சோக பேரழிவாகும்.

இமாம் அல்-ஹுசைனின் ஆளுமை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு சிறப்புப் பாடத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் இறை தூதரின் பேரனாக இருந்தார், "ஹுசைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுசைனை சேர்ந்தவன்". என்று ரசூலுல்லாஹ் கூறிய ஹதீஸ் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

மேலும், அவரது பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் சொர்க்கது  இளைஞர்களின் தலைவர்களாகும்."

றஸூலுல்லாஹ்வின் மற்றொரு ஹதீஸின் படி,: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் ஆகிய இருவரும் இமாம்கள் ....." அவர்கள் இமாம் அலியின் புத்திரர்கள்; இறைவனின் அமைதி அவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்

எனவே, இமாம் ஹுசைன், (அலை), புரட்சியின் சின்னமாக இருந்தார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார், மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் புகலிடமாக இருந்தார். அவர் எங்களுக்கு சத்திய போராட்டத்தின் பாதையைக் காட்டினார் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மனசாட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கே: ஊடகங்கள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பெயர், சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் என்ற வேறுபாடின்றி, முஸ்லிம்கள் மனதில் எப்படி படிந்தது?

ப: இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஞாபகார்த்த துக்க நிகழ்ச்சிகள், அது அவரது தியாகத்தின் ஆரம்ப காலம் முதலே நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்கள் மனதில் அவரது நினைவை புதுப்பித்து வந்தது எனலாம்.

மற்றொரு அம்சம் என்னவெனில் இமாம் ஹுசைனின் சகோதரி ஸைனப் ஆகும், அவர் இமாம் அலீ பின் அல்-ஹுசைன் ஸெய்ன் அல்-ஆபிதீன் (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாவதாக) அவர்களுடன் அப்போதைய கலீபாவின் அரண்மனைக்கு வந்தபோது அவரது உறுதியான எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த இருவரும் யஸீதின் அநீதியையும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது குடும்பத்துக்கு எதிரான அடக்குமுறையையும் பரப்ப ஊடகப் பாத்திரத்தை வகித்தனர், யஸீதின் அரண்மனையில் அவர்கள் ஆற்றிய உரை சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது.

அரண்மனையில் அப்போது கூடியிருந்த மக்கள் றஸூலுல்லாஹ்வின் பேரனுக்காக கதறி அழ ஆரம்பித்தபோது, தனது ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்று யஸீத் அச்சமடைந்தார்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு தேசியங்கள் மற்றும் இனங்களுக்கிடையே வருடம் தவறாது ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஹுசைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் இந்த புரட்சி உணர்ச்சி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், ஊடகங்களிலும் நிலைத்திருப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன.

கே: பாலஸ்தீனம் மற்றும் லெபனான் முதல் யெமன் வரையிலான பிராந்தியத்தில் போராட்ட இயக்கங்களில் ஹுசைனி எழுச்சியின் தாக்கம் என்ன? இமாம் ஹுசைன் நிறுவிய திசையிலிருந்து போராளிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை

. இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் எழுச்சி மற்றும் அநியாயத்திற்கு எதிரான அவரது புரட்சி, சுதந்திரப் புரட்சியாளர்கள் தங்கள் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட போராளிகள் சரியான பாதையை வெளிச்சமிட்டு காட்டியது என்பதில் சந்தேகமில்லை.

லெபனானில், இமாம் மூசா அல்-சதர் லெபனான் மக்களை  ஆக்கிரமிப்பு மற்றும் சியோனிச ஆட்சியை எதிர்த்து போராடுவதற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் போக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் இமாம் ஹுஸை (அலை) அவர்களது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் இருந்து அணிதிரட்டினார்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் புரட்சியால் அவர் ஈர்க்கப்பட்டார், அதை ஓர் உதாரண பாதையாக மற்றும் நடைமுறை அணுகுமுறை என அவரது அனைத்து ஜிஹாதி மற்றும் அரசியல் இயக்கங்கள் மற்றும் நோக்குநிலைகளிலும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு, எதிர்ப்புப் போக்கு தொடர்ந்தது மற்றும் இன்றுவரை சியோனிச எதிரியுடன் அனைத்து முனைகளிலும் பெரும் வெற்றிகளை அடைந்து வருகிறது.

இனவெறி, பயங்கரவாத அமெரிக்க நிர்வாகம் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூலிப்படையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட உலகளாவிய திமிர் முன்னணியால் உருவாக்கப்பட்ட புதிய தக்பிரி எதிரியுடன் ஒரு எதிர்ப்பு முன்னணி வெற்றிகரமாக போராடி வருகிறது.

லெபனான், பாலஸ்தீனம், யெமன், ஈராக் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சத்திய போராளிகள் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளின் போது எழுப்பிய முழக்கங்களை பிரதிபலிக்க போதுமானது, குறிப்பாக அவர்களின் நிரந்தர முழக்கம்:

இப்னு ஸியாத் (இமாமின் எதிரி) எங்களுக்கு இரண்டு தேர்வுகளை முன்வைத்தான்; போர் அல்லது சரணடைதல் எனும் அவமானம். ஆனால் அவமானங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவவனாலும் அவனுடைய தூதராலும், துஷ்டனுக்கு கீழ்ப்படிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் நாம் கற்றுக்கொடுக்கொண்ட பாடம் இதுதான்: கொடுங்கோலர்களுக்கு அடிபணிய ஒப்புக்கொள்ள வேண்டாம், சரணடைய வேண்டாம்; அநீதி, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை பயமின்றி எதிர்க்க வேண்டும். தோற்கடிக்கும் வரை போராட வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் வெற்றியடையும்வரை போராடவேண்டும்; அதில் நாம் உயிர் தியாகம் செய்ய நேரிட்டாலும் சரியே. இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நித்திய வாழ்க்கையில், மரியாதை மற்றும் கண்ணியத்தை அடைவோம்.

கே: போராட்ட முன்னணியின் ஹுசைனி சித்தாந்தத்தை எதேச்சதிகார அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் எதிர்கொள்ள முடியுமா? இமாம் ஹுசைன் கைக்கொண்ட வழிகள் மக்கள் மீதான "மென்மையான செல்வாக்கு" என்று விளக்கப்படலாம், ஏனெனில் இமாம் அவர்களின் போதனைகள் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அத்தகைய செல்வாக்கை அமெரிக்கா எதிர்கொள்ள முடியுமா?

. ஹுசைனி சித்தாந்தம் என்பது முஸ்லிம்களின் இதயங்களில் ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை ஆகும். உலகில் எந்த ஒரு சக்தியாலும் அத்தகைய நிறுவப்பட்ட நம்பிக்கையை எதிர்க்கவோ அல்லது தோற்கடிக்கவோ முடியாது, அது இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சரி.

ஆமாம், இந்த உண்மையான ஹுசைனி மற்றும் புரட்சிகர சிந்தனையைச் சேர்ந்தவர்களை மதிப்பிழக்கச் செய்வதற்காக அமெரிக்க நிர்வாகம் ஆராய்ச்சி மையங்களுக்காகவும் மூலோபாய மற்றும் ஊடக ஆய்வுகளுக்காகவும் ஒரு பெரிய பட்ஜெட்டை வருடாந்தம் செலவிடுகிறது. போராட்ட இயக்கங்களுக்கு எதிராக இராணுவம், உளவுத்துறை மற்றும் ஊடகப் போரைத் தொடர அது தயங்காது என்பது உண்மையே.

போராட்ட இயக்கங்கள் உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் நிறுவப்பட்டுள்ளன, இது இறைதூதரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மற்றும் தூய இமாம்களின் வழிகாட்டல் அடிப்படையைக் கொண்டுள்ளது, இவர்களது இந்த போராட்ட சித்தாந்தத்தை எதிர்கொள்வது என்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை.

அவர்களது இராணுவ சக்தி அனைத்தும் உறுதிகொண்ட  மக்களின் முன்னிலையில் தோல்வியை தழுவும் என்பதையே சரித்திரம் நிரூபித்தது, அமெரிக்கர்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தானில் ஆகும், அங்கிருந்து அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

முன்னதாக, லெபனானில் இதுபோன்ற காட்சியை நாங்கள் கண்டோம், அமெரிக்க துருப்புக்கள் போராட்ட முன்னணியின் தாக்குதல்களுக்குப் பிறகு தப்பி ஓடியது, சிரியா, ஈராக் மற்றும் யெமனில் இருந்தும் மிக விரைவில் அவர்கள் தப்பி ஓடுவதை நாங்கள் விரைவில் காண்போம்.

கே: அர்பஈன் (இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட 40 ஆம் நாள்) அணிவகுப்புகள் எதிர்வரும் காலங்களில் (அதாவது இஸ்லாமிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய் அடங்கிய பிறகு) மற்ற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் நீடிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ப. ஈராக்கிலும் மற்றும் ஈராக்கிற்கு வெளியிலும், கொரோனா தொற்றுக்கு முன், அர்பஈன் அணிவகுப்புகளில் மக்கள் பங்கேற்றதன் அடிப்படையில், நாங்கள் கண்ட காட்சி எமது கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது; கர்பலாவில் அர்பீன் அணிவகுப்பில் 25 மில்லியன் யாத்ரீகர்களுக்கும் அதிகமானோரை பங்கேற்றனர். அது ஒரு மானுட சூறாவளி போல் இருந்தது.

இந்த நிகழ்வை மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் அணிவகுப்பை கண்ட வெளிநாட்டு ஊடகங்கள் பிரமித்து, வாயடைத்து போகின்றன. பிறகு, இமாம் ஹுசைன் மீதான இந்த அன்பு எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை ஆராய தலைப்படுகின்றன.

அதன் செய்தி என்னவென்றால் அது ஒரு புரட்சி மற்றும் அநீதி, கொடுங்கோன்மை மற்றும் ஆணவத்திற்கு எதிரான எழுச்சி என்பதைத் தவிர வேறில்லை.

இந்த கர்பலா அணிவகுப்பில் ஷிஆக்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான சன்னிகளுடன் கிறிஸ்தவர்களும் பங்கேற்பதையும் நாங்கள் கண்டோம், இந்த அணிவகுப்பில் ஷியாக்களின் பிரசன்னம் மிகப்பெரியதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவுகுரியது என்று கூற முடியாத, உலகளாவிய செய்தி அதில் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

https://www.tehrantimes.com/news/465443/America-cannot-confront-Husseini-ideology-political-activist

தமிழில்: தாஹா முஸம்மில் 



Wednesday, September 22, 2021

போரின் போது இமாம் கொமைனி கடைபிடித்த இஸ்லாமிய மனிதாபிமான சட்டம்

The place of “humanitarian law” in Imam Khomeini’s worldview


ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது அண்டை நாடான ஈராக்கின் முழு அளவிலான படையெடுப்பு 22 செப்டம்பர் 1980 இல்  தொடங்கியது. இந்த போரின் போது அனைத்து வல்லரசுகளும், சிரியா, லிபியா தவிர, சகல அரபு நாடுகளும் சதாமிற்கு பக்கபலமாக இருந்தன.

மனித வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து, மோதல்கள் மற்றும் போர்கள் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும் மேலும் கொள்ளை, கொடூரமான படுகொலைகள் மற்றும் பெண்களை மற்றும் குழந்தைகளை பல்வேறு காலகட்டங்களில் சிறைபிடிப்பது போன்ற நிகழ்வுகள் மற்றவர்களின் உரிமைகளை மீறுவது மற்றும் மனிதாபிமான கொள்கைகளை உதாசீனம் செய்வது ஆகியவை வரலாற்றில் தொடர்கதையாக இருந்துவருகின்றன.

துரதிருஷ்டவசமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உபகரணங்களின் வளர்ச்சியுடன், அடக்குமுறை மற்றும் கொடுங்கோலர்கள் அதைப் பயன்படுத்துவதில் எந்த வரம்புகளும் இல்லை என்றாகிவிட்டது, ஏனென்றால் எதிரியை எந்த முறையிலாவது, எந்த விலை கொடுத்தாவது முற்றிலுமாக அழிப்பதே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மனிதாபிமான சட்டமானது போர்களில் காட்டுமிராண்டித்தனத்தையும் கொடுமையையும் குறைக்கும் முயற்சியில் சில கொள்கைகளை உருவாக்க வழி வகுத்தது என்பது உண்மையே. இந்த ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இடையே விரோதங்கள் மற்றும் போர்களின் நோக்கம் மற்றும் விளைவுகளை குறைக்கவும் உதவியது.

இக்கட்டுரையானது இமாம் கொமைனியின் சிந்தனையில் கோட்பாடு மற்றும் நடைமுறையில் மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகளை விவாதிக்கவும் ஆராயவும் முயற்சிக்கிறது. ஈரானுக்கு எதிராக சதாமினால் திணிக்கப்பட்ட 8 வருட போரின் போது இமாம் கொமெய்னியின் தலைமைத்துவதிற்கு இவ்விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மனிதாபிமான சட்டத்தின் கருத்து, குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள்

சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பது மோதல்களின் விளைவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் கொள்கைகளின் தொகுப்பாகும். சர்வதேச சட்டத்தின் இந்த அம்சம் மோதல்களில் ஈடுபடாத அல்லது போர்க்களத்தை விட்டு வெளியேறியவர்களின் உரிமைகளை காக்கிறது, மேலும், இராணுவ உபகரணங்கள் மற்றும் போர் முறைகளைப் பயன்படுத்துவதில் வரம்புகளை விதிக்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டம் தனிநபர்கள் மற்றும் நாடுகளின் ஆயுத மோதல்களின் போது உரிமைகள் மற்றும் இவ்வாறான மோதல்களின் போது அவர்களின் கடமைகள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. மேலும், ஆயுத மோதல்களின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதன் மூலமும், சில ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலமும், இது இராணுவத்தையும் பொதுமக்களையும் மற்றும் ஆயுத மோதல்களில் இராணுவமற்ற இலக்குகளையும் காப்பதை ஆதரிக்கிறது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் முக்கியமாக தனிநபர்களை காக்கும் கொள்கை விடயத்தில் கவனம் செலுத்துகிறது. அதன் இலக்கை பாரம்பரிய மற்றும் நவீனமாக வகைப்படுத்தலாம்:

அ) போரின் போது மனித துன்பங்களைக் குறைத்தல் மற்றும் போரில் சில கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துதல் அல்லது தடை செய்தல் ஆகியவை பாரம்பரிய குறிக்கோள்;

ஆ) மறுபுறம், மனிதர்களின் உயர்ந்த நிலை மற்றும் கண்ணியத்தை மதிப்பது மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பின்தொடர்வது, விசாரணைக்கு உட்படுத்துவது மற்றும் தண்டிப்பது, நவீன குறிக்கோள் ஆகும்.

மறுபுறம், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கண்ணோட்டத்தில், பின்வரும் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

மனிதாபிமான நடத்தை மற்றும் பாரபட்சம் காட்டாமை

இந்த கோட்பாட்டின் படி, அனைத்து மனிதர்களும் மனிதாபிமானத்துடன், எந்த தேசியம், இனம், மதம் போன்ற பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். இங்கு "மக்கள்" என்ற வார்த்தையில் சண்டையில் பங்கேற்க முடியாத அல்லது விரும்பாத அனைவரும் அடங்குவர்.

இராணுவத் தேவை

இராணுவத் தேவை என்பது எந்தவொரு இராணுவ தாக்குலையும் அல்லது நடவடிக்கையும் நியாயமான, ஏற்றுக்கொள்ளத்தக்க இராணுவ காரணங்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நியாயமின்றி செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, போர்க்களத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தல்

மட்டுப்படுத்தல் கொள்கையின் மிக முக்கியமான விளக்கம் என்னவென்றால், தேவையற்ற அல்லது அதிகப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மனிதாபிமான சட்டம் தடைசெய்துள்ளது.

 வேறுபாடு காணல்

பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு காணல்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை மற்றும் முழுமையான கொள்கையாகும்.

பரிமாணம்

இந்த கொள்கையின்படி, "சாத்தியமான எந்த வழியிலும்" எதிரி மீது வெற்றி பெறுவதை ஏற்க முடியாது. எனவே, போரை வழிநடத்துவதில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஓர் இராணுவத் தாக்குதலில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரடி மற்றும் முழுமையான இராணுவ நன்மைகளுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான எதிர்பாரா  துன்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாமும் மனிதாபிமான சட்டமும்

புனித குர்ஆனின் படி, இஸ்லாமிய போதனைகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன, பூமியில் ஒரு நபர் எங்கு வாழ்கிறார் மற்றும் எந்த இனம் அல்லது தேசியத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. இதனடிப்படையில், ஆரம்பத்தில் இருந்தே, இஸ்லாம் அமைதியான வாழ்க்கை என்ற திட்டத்தை கொண்டு வந்தது, மற்றும் போரை விடுத்து மற்ற நாடுகளுடனான முஸ்லிம்களின் உறவுக்கு அமைதியை அடிப்படையாக அமைத்தது. அதன்படி, அமைதி மற்றும் பாதுகாப்பின் மார்க்கமான இஸ்லாம் போரை ஒரு வேண்டப்படாத நிகழ்வாகவே கருதுகிறது. ஆகவே இது மற்றவர்களுடனான உறவின் அடிப்படையாக அமைதியையும் அமைதியான சகவாழ்வையும் அமைத்துள்ளது.

முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் எங்களது சுதந்திரம் மற்றும் இஸ்லாமிய ஆட்சியை அச்சுறுத்தும்போது மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஆக்கிரமிப்புக்கு எதிராக பாதுகாப்பது அவசியமானது மற்றும் கட்டாயமானது.  இந்த நோக்கத்திற்காக, இஸ்லாம் நீதி, கருணை, மற்றும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. எதிரிகளுக்கு எதிரான வரம்புகள் என்னவென்பது குர்ஆனில் மிகவும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. மேலும், போரின் போது நடந்துகொள்ளவேண்டிய முறைகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களிடம் சகிப்புத்தன்மை போன்ற மனிதாபிமானக் கருத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்தினார்.

அவர் போர்க்களத்துக்கு ஆயுதப்படைகளை அனுப்பிய போதெல்லாம் போரில் மனிதாபிமான கொள்கைகளை கடைபிடிக்க பரிந்துரைத்தார்.

பாத் சோஷலிச ஆட்சியினால் ஈரான் மீது திணிக்கப்பட்ட போரில் மனிதாபிமான சட்டம் மீறப்பட்டது பற்றிய சுருக்கமான பார்வை

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் மீதான படையெடுப்பில், ஈராக் இராணுவம் தெற்கு ஈரானின் பல எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிலவற்றில் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியாத வகையில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. பாத் சோஷலிச ஆட்சி போரை போர்க்களத்திற்கு மட்டுப்படுத்தவில்லை மற்றும் அஹ்வாஸ் மற்றும் கெர்மன்ஷா போன்ற நகரங்களில் குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் பல முறை தாக்கியது. தவிர, மக்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான பள்ளிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறை வசதிகளை அளித்தது மட்டுமல்லாமல் உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்களையும் ஈராக்கிய ராணுவம் மேற்கொண்டது. இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதானது ஈரானுக்கு எதிராக பாத் சோஷலிச ஆட்சி எடுத்த மற்றொரு மனித-விரோத நடவடிக்கை ஆகும்; இந்த பாத் சோஷலிச ஆட்சி ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஈராக்கிற்கு இந்த சட்டவிரோத ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. ஐநா நிபுணர்களின் அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்தின. ஈராக்கிய பாத் சோஷலிச ஆட்சி இரசாயன குண்டுகளை பயன்படுத்தியது ஈரானிய போராளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் சர்தாஷ்ட் போன்ற எல்லை நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு எதிராகவும் அவற்றை பயன்படுத்தியது.

மனிதாபிமான கொள்கைகள் மற்றும் விதிகள் குறித்த இமாம் கொமெய்னியின் பார்வை

இமாம் கொமெய்னி தனது அறிக்கைகள் மற்றும் உரைகளில் "மனிதாபிமான சட்டம்" என்ற வார்த்தையை நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், திணிக்கப்பட்ட 8 வருட போரின்போது அவர் நாட்டை வழிநடத்திய முறையானது மனிதாபிமான கொள்கைகள் மற்றும் நியமங்களுக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.

பின்வரும் பிரிவில், இமாம் கொமைனியின் சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டத்தில், மற்றும் நடைமுறை கோட்பாட்டில் இந்த கொள்கைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விவாதிக்க உள்ளோம்.

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையில் கவனம் செலுத்துதல்

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையை கவனிப்பது இஸ்லாத்தின் மிக அடிப்படையான மனிதாபிமான கொள்கைகளில் ஒன்றாகும். இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், மன்னிப்பு, இரக்கம் மற்றும் மனிதாபிமான-இஸ்லாமிய நடத்தை ஆகியவை எதிரி படைகளுடன் மோதலில் காட்டவேண்டிய அடிப்படை நெறிமுறை மதிப்புகளில் ஒன்றாகும், அவற்றை ஆயுதப்படைகள் கவனத்திகொள்ள வேண்டும். உதாரணமாக, இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"சதாம் மற்றும் அவரைப் பின்பற்றி போர்க்களத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணான வகையில் பழிவாங்க இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.... நாம் உயிர் தியாகம் மற்றும் இறப்பு வரை மனிதாபிமான கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்."

ஆயுத மோதல்களில் ஒடுக்குமுறையை நிராகரித்தல்

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (புனித குர்ஆன் 2:190) என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. மற்றொரு வசனத்தில், போர்க்களத்தில் உள்ள முஸ்லிம் போராளிகள் நீதி மற்றும் அறநெறியை மறந்துவிடக் கூடாது என்று புனித குர்ஆன் எச்சரிக்கிறது: "முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்." (புனித குர்ஆன் 5:8). இந்த இஸ்லாமிய போதனையின் அடிப்படையில் மற்றும் ஈரானிய நகரங்கள் மீது ஈராக் தாக்குதல் நடத்தி பொதுமக்கள் கொல்லப்பட்ட பிறகும் கூட, போராளிகளை நோக்கி உரையாற்றுகையில், இமாம் கொமைனி கூறினார்: உங்கள் நகரங்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி அழிந்தும், உங்கள் அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்டு இருப்பினும் பழிவாங்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் ... ஒரே ஒரு தோட்டாவை அவர்களது நகரங்களை நோக்கி [இராணுவ இலக்குகளுக்கு அன்றி] குறிவைப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்.”

குடிமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டின் கொள்கை

இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில், போரில் பங்கேற்காதவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில், இமாம் கொமெய்னி பொதுமக்களைத் தாக்குவதைத் தடைசெய்தார் மற்றும் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே உள்ள  வேறுபாட்டை சுட்டிக் காட்டினார்: "ஈரானின் ஆயுதப் படைகளின் தளபதிகளுக்கும் ஈராக்கிற்கும் இடையே வேறுபாடு உள்ளது, வித்தியாசம் என்னவென்றால் ஈரானிய தளபதிகள் இஸ்லாத்தை மனதில் இருத்தி இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் பாதுகாப்பற்ற நகரங்களைத் தாக்கமாட்டாங்கள், சந்தையில் உள்ள மக்களை அல்லது வேறு எங்கும் உள்ள மக்களை, நிர்கதிக்குள்ளான ஏழைகளையும் தாக்க மாட்டார்கள் ... ஆனால் ஈராக் தளபதிகள் தங்கள் குண்டுகளை நகரங்களை நோக்கி வீசுகிறார்கள்.

இமாம் கொமைனியின் இந்த உரை பொதுமக்கள் மற்றும் போராளிகள் மற்றும் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத இலக்குகளுக்கு இடையே வேறுபாட்டை அறிந்துகொள்ளும் தேவையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டுகிறது.

ஆயுதங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு

போர்க்களத்திற்கான ஒரு மனிதாபிமான கட்டமைப்பை இஸ்லாம் ஒரு பொது மற்றும் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் வரையறுத்துள்ளது. அதன்படி போரொன்றில் கொல்வது நியாயமானதாக இருந்தாலும் கூட, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த ஒரு முஸ்லிம் தளபதிக்கு சுதந்திரம் இல்லை; போரில் இரசாயன மற்றும் நச்சு ஆயுதங்கள் உட்பட சில ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இமாம் கொமெய்னி உலகில் அழிவு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தி, அவற்றை இன்றைய உலகின் அவலங்களில் ஒன்றாக கருதி, இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு எதிராக நிற்க சிந்தனையாளர்களையும் நாடுகளையும் தூண்டினார். ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஈராக் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக ஈரான் ஒருபோதும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. இமாம் கொமெய்னி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஹராமாக அறிவித்தார் (மத ரீதியாக தடைசெய்யப்பட்டது). அமெரிக்க பத்திரிகையாளர் கரேத் போர்ட்டர் தனது "தயாரிக்கப்பட்ட நெருக்கடி: ஈரான் அணுசக்தி அச்சத்தின் சொல்லப்படாத கதை" என்ற தனது நூலில், "ஈரான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்ததற்கான உண்மையான காரணம்… இமாம் கொமெய்னி இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அதை தடை செய்திருந்தார் என்பதாகும்" என்று எழுதியுள்ளார்.

இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவரான இமாம் கமேனி, மனித நேயமற்ற பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அதே கொள்கையையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது; இந்த ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு ஆகியவற்றை அவர் ஹராமாக (தடைசெய்யப்பட்டதாக) கருதுகின்றார். இது சம்பந்தமாக, அவர் ஒருமுறை இவ்வாறு கூறினார், "அணு ஆயுத பயன்பாடு பரவலான கொலை மற்றும் அழிவுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், பொதுவாக இராணுவமென்றோ, பொதுமக்களென்றோ, இளைஞர்கள், முதியவர்கள் என்றோ, ஆண்கள், பெண்கள் என்றோ குழந்தைகள் என்றோ எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை., மற்றும் இதன் மனித விரோத விளைவுகள் அரசியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கு மட்டுப்பத்தப்படாமல் அடுத்த தலைமுறைகளுக்கு மீள முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது; எனவே, இந்த ஆயுதத்தின் எந்தவொரு உபயோகமும் மற்றும் அச்சுறுத்தலும் கூட மிக அடிப்படையான மனிதாபிமானக் கோட்பாடுகளின் கடுமையான மீறலாகும் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஒரு தெளிவான உதாரணமாகும்என்று குறிப்பிடுகின்றார்.

இராணுவ நடவடிக்கைகளில் பரிமாணத்தை பேணல்

இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், "சாத்தியமான எந்த வழியையும்" பயன்படுத்தி எதிரிகளை வெல்லும் உத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தாக்குதல்கள் சாதாரண மக்களை கொல்ல வழிவகுக்கக்கூடாது மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கௌரவ ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; அதற்கு மாற்றமாக நாங்களும் எங்களது இராணுவமும் தேச மக்களும்  சதாம் போலவே நினைத்திருந்தால், குழந்தைகளையும் பெண்களையும் பொதுமக்களை கொன்றாயினும் முன்னேறிச் செல்லலாம் என்று நினைத்திருந்தால்.., ஈராக்கிற்கு உதவி செய்வோர் எவரும் இல்லை என்பதை நீங்கள் இன்று பார்ப்பீர்கள்... எங்கள் இராணுவம் இஸ்லாத்தில் உறுதியாக உள்ளது .. மேலும் ஈராக் நகரங்கள் மீது ஒரு குண்டையும் அது வீசவில்லை."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாத்தின் சட்டத்தின் மூலாதாரமான குர்ஆன் சுற்றுச்சூழலைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டுள்ளது மற்றும் பல வசனங்களில் இதை வலியுறுத்தியுள்ளது. ஈராக்கின் பாத் சோஷலிச ஆட்சி ஈரானின் எண்ணெய் வயல்களில் குண்டுவீச்சு உட்பட சூழல்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயத்தில், இமாம் கொமெய்னி அதைக் கண்டித்து இவ்வாறு கூறினார்: "அமைதிக்காக ஆதரவு கோரிய எவரும் இதை ஆரம்பித்த சதாமை தட்டிக் கேட்கவில்லை, வேண்டாத இந்த போரை திணிக்க இந்த தேசம் (ஈரானிய தேசம்) என்ன குற்றம் அல்லது பாவம் செய்தது?, பல்லாண்டுகளாக அவர்கள் அயராது உழைத்து அமைத்த தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் முதலீடு செய்ததன் விளைவை அழித்து எரிக்கச் செய்தது ஏன்? என்று எவரும் கேட்கவில்லை."

போர்க் கைதிகளுக்கு அன்பு காட்டுதல்

திணிக்கப்பட்ட போரில், ஈராக் இராணுவப் படைகள் இஸ்லாமியப் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்டபோது, ​​அவர்களுடன் தயவுடன் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் தவிர்க்க வேண்டும், என்று கூறினார். இமாம் கொமைனி, அவர்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் விருந்தினர்களாகக் கருதி இவ்வாறு கூறினார்: "எங்கள் இராணுவம் மற்றும் புரட்சிகர காவலர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் மனிதாபிமான நடத்தை கொண்டிருக்க வேண்டும் மற்றும் இந்த மனிதாபிமான நடத்தையில் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்; உங்களது பொறுப்பில் உள்ள இந்தக் கைதிகள் உங்களுக்கு விருந்தினர்கள் போல இருப்பதால் அவர்களை நல்ல முறையில் மனித நேயத்துடன் நடத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன்." அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், "நீங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் போர்க் கைதிகளுக்கு அனுதாபம் காட்டுங்கள் மற்றும் அவர்களிடம் இஸ்லாமிய-மனிதாபிமான நடத்தையைக் காட்டுங்கள் மற்றும் காயப்பட்ட ஈராக்கியர்களை மருத்துவமனைக்கு அனுப்புங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். - அவர்களது கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது, - காயப்பட்ட கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் போல் நடத்த வேண்டும்; அவர்களின் இஸ்லாமிய நடத்தையால் காயம் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் குரோதத்தை தணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

முடிவுரை

இந்த கட்டுரையானது இமாம் கொமைனியின் உலகக் கண்ணோட்டத்தில் அவர் வழங்கிய மனிதாபிமான சட்டத்தின் மற்றும் கோட்பாடுகளின் இடத்தை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய முயன்றது. மனிதாபிமான சட்டத்தின் முக்கிய கோட்பாடுகள் இமாம் கொமைனியின் சிந்தனையில் இருந்ததையே இது காட்டுகிறது. இவை நிச்சயமாக இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது மற்றும் பெறப்பட்டது என்பது சந்தேகமில்லை. இமாம் கொமைய்னியின் உலகக் கண்ணோட்டத்தில் மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்லாது, அதன் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான 8 ஆண்டு ஈராக்கிய போரின் போது கூட நாட்டின் தலைமைத்துவத்தில் இத்தகைய கொள்கைகள் தெளிவாக காணப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இமாம் கொமெய்னி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுமீது சதாம் திணித்த போர் போன்ற மிக கடினமான சூழ்நிலைகளில் கூட, ஈரான் மனிதாபிமானமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை நாடாது, எப்போதும் மனித ஒருமைப்பாடு மற்றும் கௌரவத்தை மதிக்க முயன்றது என்பது சரித்திரம்.

 

https://english.khamenei.ir/news/8518/The-place-of-humanitarian-law-in-Imam-Khomeini-s-worldview

 

தமிழில்: தாஹா முஸம்மில்

Thursday, September 16, 2021

ஈரானின் ட்ரோன் வல்லமை கண்டு அஞ்சும் இஸ்ரேல்

Israel admits to Iran’s drone power, says ‘deadly’ UAVs can cross ‘thousands of kilometers’


ஈரானின் ட்ரோன் சக்தியை இஸ்ரேல் ஒப்புக்கொள்கிறது, அதன் 'கொடிய' UAV கள் 'ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை' கடந்து தாக்கும் வல்லமை கொண்டது என்று கூறுகிறது

இஸ்ரேலின் இராணுவ விவகார அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தனது சமீபத்திய உரையில் ஈரானின் ட்ரோன் சக்தியை ஒப்புக்கொண்டார், இஸ்லாமிய குடியரசு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடக்கக்கூடிய "துல்லியமான" மற்றும் "அழிவுகரமான" ட்ரோன்களை வைத்திருக்கிறது, என்று கூறியிருந்தார்

"ஈரான் உருவாக்கிய மிக முக்கியமான கருவிகளில் ஒன்று அதன் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்)" என்று பென்னி கான்ட்ஸ் கூறினார், ஈரான் அதன் மத்திய மாகாணங்களில் ஒன்றில் விமானப்படை தளத்தை பயன்படுத்தி யெமன், ஈராக், சிரியா மற்றும் லெபனான் (போராளிகளுக்கு) ஈரானில் தயாரிக்கப்பட்ட UAV களில் பயிற்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.


"நாங்கள் மிகவும் துல்லியமான மற்றும் அழிவுகரமான ட்ரோன்களைப் பற்றி பேசுகிறோம். பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது ஜெட் போர் விமானங்கள் போன்று  இந்த ட்ரோன்களால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். ஈரானியர்கள் இந்த ட்ரோன்களை உருவாக்கி, [இஸ்லாமிய புரட்சி] காவலர் படையின் விண்வெளிப் படை மற்றும் குத்டஸ் படையில் தங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்குகிறார்கள், ”என்று இஸ்ரேலிய அமைச்சர் ஹெர்ஸ்லியாவில் உள்ள ரீச்மேன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெறிவித்தார்.

ஈரான் "காஸா பகுதியில் UAV களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப அறிவை வழங்க முயற்சிக்கும்" என்று கான்ட்ஸ் மேலும் குற்றம் சாட்டினார், அதே நேரத்தில் ஈரானிய விமானப்படை ஓடுதளங்களில் UAV களைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் என்று கூறப்பட்டதை அவரது அலுவலகம் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதத்தில் ஓமான் கடற்பிராந்தியத்தில் இஸ்ரேலினால் நிர்வகிக்கப்படும் ‘மெர்சர் ஸ்ட்ரீட்’ டேங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை இந்த சம்பவத்திற்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறின,  இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அச்சுறுத்தலும் விடுத்தன. அதைத்தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோனினாலேயே குறிப்பிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. எவ்வாறாயினும், தெஹ்ரான் இக் குற்றச்சாட்டை "ஆதாரமற்றது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று நிராகரித்தது.

லெபனான் நாட்டின் நிதி மற்றும் அரசியல் நெருக்கடியின் போது லெபனான் மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஈரான் சமீபத்தில் எரிபொருள் வழங்கியதை சுட்டிக்காட்டிய இஸ்ரேலிய அமைச்சர், லெபனான் மக்களின் நலனுக்கு முரணாக ஈரான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எரிபொருள் வழங்குவதாக கூறினார்.

"காஸாவிலும் இவ்வாறே நடக்கிறது; அங்கு ஈரான் உயர்தர ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப அறிவையும் ஆயுதங்களையும் வழங்குகிறது," என்று அவர் கூறினார்.

JCPOA எனும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் எனவும் காண்ட்ஸ் அழைப்பு விடுத்தார்.

"ஈரான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மதிக்கவில்லை, எதிர்காலத்தில் கையெழுத்திடும் எந்த ஒப்பந்தங்களையும் மதிக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. செயலுக்கான நேரம் வந்துவிட்டது,” என்று அவர் கூறினார்.  

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை (கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) ஈரானின் முழு இணக்கம் இருந்தபோதிலும், 2018 இல் இஸ்ரேலிய நெருக்குதலின் கீழ் அமெரிக்காவே இந்த ஒப்பந்தத்தை மதிக்காது, அதிலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இதேபோன்ற ஈரான் எதிர்ப்பு குற்றச்சாட்டில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் யைர் லாபிட், "அணு ஆயுதத்தை நோக்கிய ஈரானின் பயணம் இஸ்ரேலிய பிரச்சனை மட்டுமல்ல; அது முழு உலகிற்குமான ஒரு பிரச்சனை," என்று குறிப்பிட்டிருந்தார்.

"என்ன விலை கொடுத்தாயினும் சரி, ஈரான் அணுசக்தி திறனைப் பெறுவதை உலகம் தடுக்க வேண்டும். உலகம் அதைச் செய்யாவிட்டால், இஸ்ரேல் செயல்படும் உரிமையை கொண்டுள்ளது,” என்று லாபிட் கூறினார்.  இது ஈரான் மீதான போர் அச்சுறுத்தலாகும்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் கதிப்சாதே இஸ்ரேலிய ஆட்சியின் எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் எதிராக தகுந்த பதிலடி கொடுக்கும் இஸ்லாமிய குடியரசின் உரிமையை அடிக்கோடிட்டுக் காட்டினார் மற்றும் ஈரான், இஸ்ரேலைப் போலல்லாமல், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டுள்ள உறுப்பு நாடாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத இஸ்ரேலிய ஆட்சி - சட்டவிரோத அணு ஆயத்தங்களை வைத்துக்கொண்டும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் சேர மறுத்துக் கொண்டும் - NPT உறுப்பு நாடான ஈரானை அச்சுறுத்துகிறதுஉலகில் அணுசக்தி திட்டம் தொடர்பாக மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் நாடு ஈரானாகும்,” என்று கதிப்சதே தனது ட்வீட்டர் செய்தியில் குறிப்பிட்டார்.

https://www.presstv.ir/Detail/2021/09/12/666386/Israel-admits-Iran-drone-power-Iranian-UAVs-very-destructive