Tuesday, February 23, 2021

 Uma Oya Project in Sri Lanka by I.R.Iran

உமா ஓயாத் திட்டம்

(இலங்கையில் ஈரானியப் பொறியியலின் பெருமை)


திட்டத்தின் பின்னணி

உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டமானது மார்ச், 2010 இல் உத்தியோகபூர்வமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.  இதன் ஆரம்ப செலவு 514 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், ஒப்பந்தக்காரருக்கு குறிப்பிட முடியாமல்போன காரணங்களுக்காக இத்திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்களினால் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான காலத்தை தொழில்நிறுவனத்தார் நீடித்துத் தந்துள்ளனர். இந்த ஆண்டு இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் நோக்கங்களும் தனிக்கூறுகளும்

நீரின் கீழ்நிலைத் தேவையைப் பாதிக்காமல் அதிகப்படியான நீரை உமா ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகளிலிருந்து தென்கிழக்கு வறண்ட மண்டலத்தில் உள்ள கிரிந்தி ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனால், இப்பகுதியில் நீரின் தேவை உகந்த முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது, நீரூற்றுக்களின் இருப்பிடங்களுக்கும், அது தேவைப்படும் இடத்திற்கும் இடையிலான உயரத்தில் கணிசமான வேறுபாடு காணப்படுவதால், பொருத்தமான நீர் மின்சக்தியை உருவாக்குவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இதனால், நீர்மின் உற்பத்திக்கு இதனை திறம்பட பயன்படுத்த முடியும்.


தேவையான நீரானது, ஒரு ரோலர் பொதிந்து கான்கிரீட் ஈர்ப்பு மாதிரி (ஆர்.சி.சி)  ஆக இருக்கக்கூடிய முதலாவது அணையான புஹுல்பொல அணைக்குப் பின்னால் சேமிப்பதனால் பெறப்படுகிறது. இது 35 மீ உயரமும், 634,8263 மொத்த கொள்ளளவும் கொண்ட உமா ஓயா ஆற்றை மையப்படுத்தியுள்ளது. மேலும், இந்நீர் தைராபா பகுதியிலுள்ள 50 மீட்டர் உயரமும், 970,135 M3 மொத்த கொள்ளளவும் கொண்ட மஹாதொதில்ல ஓயா ஆற்றை மையப்படுத்தி கட்டப்பட்டுள்ள மற்றொரு அணையினை உடைய நீர்தேக்கத்தினூடாக அமைந்துள்ள சுமார் 3.75 கி.மீ தூர ((D~4.6m) சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டு, 618 மீட்டர் (D~2.2m) செங்குத்து தண்டியோடு (vertical shaft)) சுமார் 15.5 கி.மீ (னு ஷ 3.6அ) தூரம்கொண்ட மற்றொரு சுரங்கப்பாதை வழியாக நிலத்தடி மின்நிலையத்திற்கு தண்ணீர் அனுப்படும். மின்சக்தி நிலையத்திலிருந்தான வெளியேற்றம் சுமார் 3.6 கி.மீ (vertical shaft))  தூரங்கொண்ட டெயில்ரேஸ் சுரங்கப்பாதை வழியாக கிரிந்தி ஆற்றின் கிளை நதியான அலிகொட எர ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

ரண்தெனிய சுவிட்ச் யார்டு 132 KV சாதாரண மின்னழுத்தம் (voltage) கொண்ட பவர்ஹவுஸின் மேல் அமைந்துள்ளது. 23 கி.மீ இரட்டை சுற்று 132 KV டிரான்ஸ்மிஷன் லைன் உமா ஓயா சுவிட்ச் யார்டை பதுளை சுவிட்ச் யார்டுடன் இணைக்கின்றது. இந்த டிரான்ஸ்மிஷன் லைன் 85க்கும் மேற்பட்ட டவர்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது.


உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டம் (UOMDP)  இலங்கையின் தென்கிழக்கு உலர் மண்டலத்திலிருந்து 5,000 ஹெக்டயர் புதிய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு 23 கி.மீ சுரங்கப்பாதை வழியாக உமா ஓயாவிலிருந்து கிரிந்தி ஓயா வரை 145 எம்.சி.எம் தண்ணீரை திருப்புவதற்கு உதவுகின்றது. அவ்வாறே, இத்திட்டத்தின் ஊடாக அனைத்து இலங்கையருக்கும் பயனளிக்கும் வகையில் தேசிய மட்டத்தில் சுமார் 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஒரு ஹைட்ரோ எலக்ட்ரிக் ஆலையை அமைப்பதும் நோக்கமாகும்.

எனவே, உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டத்தில் உமா ஓயா புஹுல்பொல ஆர்.சி.சி அணைக்கட்டு, மஹாதொதில்ல ஓயா ஆற்றின் தைராபா ஆர்.சி.சி அணைக்கட்டு, புஹுல்பொல நீர்த்தேக்கத்திலிருந்து தைராபா நீர்த்தேக்கத்திற்கு ஒரு இணைப்பு சுரங்கப்பாதை, தைராபா நீர்த்தேக்கத்திலிருந்து பவர்ஹவுஸ் நோக்கி ஒரு ஹெட்ரேஸ் சுரங்கம், இருமபு புறணி (steel lining)) கொண்ட செங்குத்து அழுத்த தண்டு ((shaft)), செங்குத்து தண்டுக்கு மேல் ஒரு எழுச்சித் தொட்டி ((surge tank), ஒரு நிலத்தடி பவர்ஹவுஸ் மற்றும் அதன் டெயில்ரேஸ் சுரங்கம், ரண்தெனிய சுவிட்ச்யார்டு, 23 கி.மீ டிரான்ஸ்மிஷன் லைன் மற்றும் பதுளை சுவிட்ச் யார்டு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முன்னேற்றம்

திட்டத்தின் தனிக்கூறுகள் விரிவான பரப்பளவில் பரந்து காணப்படுவதோடு, ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுதொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  எனவே, ஐரோப்பா மற்றும் ஈரானைச் சேர்ந்த நன்குதேர்ச்சிபெற்ற ஆலோசனைப் பொறியியலாளர்கள் விசாரணை, ஆய்வு மற்றும் மேற்பார்வைக்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதன் இறுதி அறிக்கைக்கு தொழில் நிறுவனத்தார் ஒப்புதலளித்தனர். இதனால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ஈரான், இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த துணை ஒப்பந்தக்காரர்கள் வேலைத் தளத்திலிருந்து இலங்கை, ஈரான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் வெவ்வேறு பணி முனைகளில் படுபட்டிருந்தனர். இதனால், தற்போது இத்திட்டத்தின் 96.35 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இத்திட்டத்தின் அணுகூலங்கள் பற்றிய சிறுபட்டியல் கீழே தரப்படுகின்றது:

 த்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 231 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தேசிய மின்தொகுப்புக்கு 120 மெகாவாட் மின்சாரத்தை மேலதிகமாக சேர்க்கப்படுகிறது. இது தற்போதுள்ள மின்சக்தி கொள்ளளவில் சுமார் 5 வீதத்திற்குச் சமமானதாகும். இது நாட்டின் முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கிய படியாகும். இது பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

·         இதனால் தென்கிழக்கு உலர் மண்டலத்தில் விவசாய நடவடிக்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை மற்றும் அண்டை மாவட்டங்களில் இதனைக் குறிப்பிட முடியும். இது உணவு உற்பத்தி நடவடிக்கையின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, நாட்டின் வேலையில்லாப் பிரச்சினையை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்கும்.

·    இத்திட்டத்தில் அமையப்பெறும் இரண்டு அணைக்கட்டுகளுடன் நீர்வளத்தை சிறப்பாக நிர்வகிக்க முடிகின்றது. இது வறண்ட காலங்களுக்கு நீர் விநியோகத்தை சேமிக்க உதவுவதோடு, வெள்ள நீரை பொது மக்களின் நலனுக்காக பயன்படுத்த வழிசெய்கின்றது.

· இதன் மூலம் பண்டாரவலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றுக்கு தொழில்துறையையும், குடிநீர் வசதியையும் வழங்குவதானது, பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவக்கூடியதாக அமைகின்றது.

 வாழ்க்கைத் தரத்தில் பொதுவான முன்னேற்றமும், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியிலும், மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும் பயனுள்ள அதிகரிப்பும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.