Saturday, November 28, 2020

அமெரிக்கா கொள்ளையடிக்கும் சிரிய மக்களின் எண்ணெய் செல்வம்: ஈரான் ஐ.நா தூதர்

US looting oil, wealth of Syrian people: Iran UN envoy

உலகில் தம்மை நாகரீகமடைந்த நாடுகளாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் காட்டிக்கொண்டு வறுமை நிலையிலும் பலமிழந்த நிலையிலும் உள்ள நாடுகளின் செல்வங்களை கொள்ளையடிக்கும் வெட்கம் கெட்டத்தனத்தை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் சிரியாவில் ஆக்கிரமிப்பைத் தொடரும்  அமெரிக்கப் படைகள் சிரியாமக்களின் எண்ணெய் மற்றும் செல்வத்தை கொள்ளையடிக்கின்றன என்று ஐக்கிய நாடுகளுக்கான ஈரானின் தூதர் கூறினார். சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி திரும்பப்பெற வேண்டும் என்றும்  அவர்  வலியுறுத்தினார்.

சிரியா தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய மஜித் தக்த்-ரவாஞ்சி, "கிட்டத்தட்ட 10 ஆண்டுகால மோதல்களுக்குப் பின்னர், சிரிய மக்கள் அவர்கள் நாட்டின் மீது தொடரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

"சட்டவிரோத ஆக்கிரமிப்பு, மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகள், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் வருகையை அரசியல்மயமாக்குதல் மற்றும் சிரியாவின் புனரமைப்புக்கு சர்வதேச ஆதரவைத் தடுப்பதன் மூலம், சில நாடுகள் சிரிய மக்கள் மீது தங்கள் சொந்த விருப்பத்தை / ஆதிக்கத்தை திணிக்க முயற்சிப்பது அங்கு இன்னும் மோதல் நீடிப்பதற்கு காரணமாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

"இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமானவை, ஒழுக்கக்கேடானவை, நாகரீகமற்றவை; அவை தோல்வியிலேயே முடிவுறும்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார், "சிரிய நெருக்கடியை அரசியல் வழிமுறைகள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும், சிரியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை சிரியர்களுக்கு மட்டுமே சொந்தமானது, இந்த உண்மையை உணருங்கள் சர்வதேச சமூகம் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்;."

"இதன் பொருள் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு அனைவராலும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும்." என்று ரவாஞ்சி தொடர்ந்து கூறினார்,

"எந்தவொரு பிரிவினைவாத சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்களும், சட்டவிரோதமான பிரிவினைவாத முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும், மேலும் சிரிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படாத அனைத்து வெளிநாட்டு சக்திகளும் உடனடியாக, நிபந்தனைகளின்றி சிரியாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று அவர் எடுத்துரைத்தார்.

"சிரியாவில் பயங்கரவாதிகளை எதிர்ப்பது அவர்களின் அச்சுறுத்தல்களை முழுமையாக அகற்றும் வரை சிரிய அரசின் செயல்பாடு தொடர வேண்டும். இது பொதுமக்களின் உயிரை கவனத்தில் எடுத்து மிகுந்த அவதானத்துடன் செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஏராளமான பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லவும் மற்றும் இட்லிப் போன்ற இடங்களை பயங்காரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக மாற்றவும் அனுமதிக்கக்கூடாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சிரியாவின் இறையாண்மைக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சிரிய கோலான் பிரதேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் இஸ்ரேலுடன் அதை இணைப்பதை அமெரிக்கா அங்கீகரிப்பது செல்லுபடியற்றது. அமெரிக்க செயலாளரின் சிரிய கோலனுக்கு அண்மையில் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் பயணம் குறிப்பிட்ட இணைபை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது எனபதையும் ஈரானிய தூதுவர் சுட்டிக்காட்டினார். கோலன் என்பது சிரிய நாட்டின் ஒரு பகுதியாகும், எப்போதும் அது சிரியாவின் ஒரு பகுதியாகவும் இருக்கும்,” என்று தக்த்-ரவாஞ்சி மேலும் கூறினார்.

"சிரிய தலைமையிலான, சிரியருக்கு சொந்தமான மற்றும் ஐ.நா. வசதி கொண்ட அரசியல் செயல்முறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதன் மூலம், சிரிய நெருக்கடியின் அரசியல் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

"இந்த சூழலில், திரு. பெடெர்சன் அண்மையில் தெஹ்ரானுக்கு விஜயம் செய்தபோது, அரசியலமைப்புக் குழுவின் பணிகள் உள்ளிட்ட பயனுள்ள ஆலோசனைகள் நடந்தன, அங்கு அவர் நமது வெளியுறவு மந்திரி மற்றும் பிற உயர் அதிகாரிகளை சந்தித்தார்," என்று கூறினார். எந்தவொரு வெளிப்புற குறுக்கீடோ அல்லது அழுத்தமோ இல்லாமல் அது செயல்பட வேண்டும். அதன் பணிகளை முடிக்க எந்தவொரு செயற்கை காலக்கெடுவையும் அமைக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட அரசியலமைப்பு குழுவை ஆதரிப்பது, சிரிய மக்களின் உண்மையான நலன்கள் எல்லா நலன்களுக்கும் மேலாக மேலோங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," தக்த்-ரவாஞ்சி  தொடர்ந்தார்,

"அரசியல் செயல்முறைக்கு இணையாக, சர்வதேச முயற்சிகள் தொடர்ந்து சிரியாவின் புனரமைப்பு மற்றும் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோரை சிரியாவில் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு பாதுகாப்பாகவும் தானாகவும் வந்து குடியேறுவதற்கு உதவ வேண்டும்," என்று அவர் கூறினார்.

"இது சம்பந்தமாக ஒரு முக்கியமான முயற்சியாக, நவம்பர் 11-12 அன்று டமாஸ்கஸில் நடைபெற்ற சிரிய அகதிகள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான சர்வதேச மாநாட்டை நாங்கள் வரவேற்கிறோம். மோதலை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான ஒவ்வொரு முயற்சியையும் அரசியல்மயமாக்கும் சில நாடுகளால் துரதிர்ஷ்டவசமாக இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அகதிகள் திரும்புவது மற்றும் சிரியாவின் புனரமைப்பு. மில்லியன் கணக்கான சிரிய அகதிகளின் நலனை சில சக்திகளின் அரசியல் ஆதாயங்களுக்காக பிணைக் கைதிகளாக வைத்திருக்கக்கூடாது "என்று தக்த்-ரவாஞ்சி  குறிப்பிட்டார்.

"சிரிய மக்கள் மோதல் மற்றும் COVID-19 தொற்றுநோய்களின் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அகதிகள் திரும்பி வருவதற்கு உதவுவதைத் தவிர்ப்பது அவர்களின் துன்பங்களை அதிகரிக்கும் மற்றும் நீடிக்கும், இது அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை விதித்ததன் மூலம் ஏற்கனவே மோசமடைந்துள்ளது, " அவர் சொன்னார்.

ஈரான் ஐ.நா தூதர், "இந்த சட்டவிரோத பொருளாதாரத் தடைகளின் விளைவாக பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கான போராட்டத்தில் சிரிய மக்களை சர்வதேச சமூகம் தனியாக விடக்கூடாது" என்று வலியுறுத்தினார்.

https://en.mehrnews.com/news/166377/US-looting-oil-wealth-of-Syrian-people-Iran-UN-envoy

 

 

Monday, November 23, 2020

காஸாவில் நடக்கும் அநியாயங்களை புறக்கணிப்பதை உலகம் எப்போது நிறுத்தும்?

 When will the world stop ignoring 

what is happening in Gaza?


உலகம் தொடர்ந்து நம் நிலைமையை 'இயல்பானது' என்று கருதினால், காலம் கடந்துவிட்டது என்பதை விரைவில் உணரும்

  வழங்கியவர் மஜீத் அபுசலாமா

எனது குடும்பத்துக்கும், காஸா மக்களுக்கும் எப்போதும் போலவே கடந்த மாதமும் கொடூரமானது. கிட்டத்தட்ட முடிவடையாத பூகம்பத்தின் மையப்பகுதியில் நாங்கள் சிக்கிக்கொண்டதைப் போல இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் குண்டுவீச்சு நடத்தியது. வெடிப்புகள், சில நேரங்களில் எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில், மிகவும் சத்தமாக இருந்தன, என் இரண்டு வயது மருமகளுக்கு இரவில் தூங்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவள் பெரிய சத்தம் ஒன்று கேட்கும்போது, அவள் பொம்மைகளை இஸ்ரேலின் குண்டுகளிலிருந்து பாதுகாப்பது போல விரைவாக அவளைச் சுற்றி சேகரித்தாள்.


கடந்த மாதம் உண்மையில் கொடூரமானது, ஆனால் அது எந்த வகையிலும் அசாதாரணமானது அல்ல. இஸ்ரேலின் வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் துப்பாக்கி கப்பல்கள் பல தசாப்தங்களாக காஸா மக்களை தவறாமல் துன்புறுத்துகின்றன, அச்சுறுத்துகின்றன, கொலை செய்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் காஸாவில் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகும். உயிர்வாழ்வதற்கும், ஒரு சாதாரண வாழ்க்கையை ஒத்த ஒன்றை நடத்துவதற்கும், நம்மீது ஏற்படுத்தப்படும் வன்முறைகளை சாதாரணமாக ஏற்றுக்கொள்வதைத் தவிர காஸா மக்களுக்கு வேறு வழியில்லை.

காஸாவில் வளர்ந்த நான் எப்போதும் அவசர நிலையை உணர்ந்தவனாகவே இருந்தேன். 2008, 2009, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான தாக்குதல்களின் போது செய்ததைப் போல, எனது குடும்பம் எப்போதுமே மோசமான நிலைக்குத் தயாராக இருந்தது, ஏனெனில் மோசமான இஸ்ரேலிய மிருகங்கள் எந்த நேரத்திலும் எங்கள் கதவைத் தட்டலாம். ஒரு குழந்தையாக, ஒவ்வொருவரும் பயத்தில் வாழ்வதை நான் அறிவேன் எந்த ஒரு நாளும் சாதாரணமாக இருந்ததில்லை. என் இதயத்தில், அன்றாட கொடூரங்கள் இயல்பாக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவற்றை நான் நிராகரித்தேன், ஏனென்றால் என் மனிதநேய தொடர்பை இழக்க நான் விரும்பவில்லை. ஆயினும்கூட, நான் பிறந்த நிலைமை மற்றும் என் சுற்றுப்புறங்களுடன் தான் நான் வாழ வேண்டியிருந்தது.

இப்போது, என் மருமகளும் சரி, காஸாவில் இஸ்ரேலிய முற்றுகையின் கீழ் வாழும் ஆயிரக்கணக்கான பிற குழந்தைகளும் சரி, அதே அச்சங்களுடனும், தொடர்ச்சியான அவசரகால அபாய உணர்வுகளுடனேயே வளர்ந்து வருகின்றனர். அவர்கள் வெடிகுண்டுகளின் சத்தத்தின் மூலம் தூங்க முயற்சிக்கும்போது, மற்றும் அவர்களின் பொம்மைகளை கதவுக்கு வெளியே இருக்கும் கொடூரங்களிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கும் போது, எந்தவொரு குழந்தையும் ஒரு வன்முறை யதார்த்தத்தை அவர்கள் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் தான் உலகம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ஆம் திகதியை சர்வதேச சிறுவர் தினமாக அனுஷ்டித்துக்கொண்டிருக்கிறது.)

சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரேல் வெடிகுண்டு வீசவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ அல்லது உடல் ரீதியாக படையெடுக்கவோ இல்லாத ஒரு நாள் கூட இல்லை. காஸா புவியின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்று மட்டுமல்ல, 13 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றுகையிடப்பட்ட இடமாகும். சாதாரண மனித வாழ்க்கைக்குத் அவசியமான அடிப்படைகளின் பெரிய பற்றாக்குறையுடன் பெருந்தொகையான மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

இஸ்ரேலின் காலனித்துவ உள்கட்டமைப்பு நமக்கு மேலேயுள்ள வானத்தையும், நம்மைச் சுற்றியுள்ள நிலத்தையும் கடலையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் அதன் மேலாதிக்க சக்தியைக் காண்பிப்பதற்காக எமக்கு மிக நெருக்கமான பிரத்தியேக இடங்களுக்குள் அத்துமீறி ஊடுருவிச் செல்லும். காஸாவில், நீங்கள் எங்கு பார்த்தாலும், அடக்குமுறை, நகர்ப்புற காவலர்கள் - எல்லை வேலிகள், தடுப்பு சுவர்கள், கவச லாரிகள், போர் விமானங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் ஆகியவை நாம் வாழும் நிலப்பரப்பை வடிவமைக்கின்றன. நீங்கள் வீட்டில் இருக்கும்போது கூட, இராணுவ ட்ரோன்களின் சத்தம் நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும். எந்த நேரத்திலும் நீங்கள் தாக்கப்படலாம் என்ற அச்ச உணர்வுடனேயே மக்களை வைத்திருப்பர்.

எமது ஆக்கிரமிப்பின் கீழ்தான் காஸா உள்ளது என்று பாலஸ்தீனியர்களை நம்பச்செய்ய, அதன் இருப்பை தொடர்ந்து நினைவுபடுத்த இஸ்ரேல் ஒரு தொடர்ச்சியான முயற்சியை மேற்கொள்கிறது என்று நான் நம்புகிறேன். அதன் ஆக்கிரமிப்பை மிகவும் புலப்படுத்துவதன் மூலமும், அது நம்மீது வைத்திருக்கும் அடக்குமுறை சக்தி மிகவும் வெளிப்படையானதாலும், அது எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது: நாங்கள் உங்களை ஒருபோதும் சாதாரண மனிதர்களாக, சுதந்திர வாழ்க்கையை வாழ அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியே அது.

இஸ்ரேலைப் பொறுத்தவரை, காஸா என்பது இரண்டு மில்லியன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் இடம் அல்ல, அப்பிரதேசத்தை ஒரு "எதிரிகளைக்கொண்ட" - அன்னிய இடம் ஒன்றுபோலவே நடத்துகிறது. அதன் மக்கள் மனித கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவர்களது கருத்து. ஆனால் இஸ்ரேலின் பிரச்சார இயந்திரம், உலகெங்கிலும் உள்ள அதன் நட்பு நாடுகளின் உதவியுடன், காஸா மக்களை மனிதநேயமற்ற முறையில் நடத்துவதற்கும், அவர்களை மோசமான வன்முறை "தீவிரவாதிகள்" என்று முத்திரை குத்துவதற்கும் பயன்படுத்துவதோடு, இஸ்ரேலின் கொடுமையான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை "மனிதாபிமானம்" மற்றும் "நாகரிகம்" என்ற கருத்தை உருவாக்குவதற்கும் அயராது உழைக்கிறது.

நிச்சயமாக, உண்மை நிலை மிகவும் வித்தியாசமானது. எங்களை அச்சுறுத்தி அமைதிப்படுத்த இஸ்ரேல் முயற்சித்த போதிலும், காஸா மக்களான நாங்கள் எம்மைப்பற்றி ஆக்கிரமிப்பாளர் கதை கூற அனுமதிப்பதில்லை. நாங்கள் எங்கள் அச்சங்கள், பாதிப்புகள் மற்றும் விரக்திகளை எதிர்ப்பாக மாற்றி, நமது சோகமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தவும், எங்கள் உரிமைகளை கோருவதற்கும், எங்கள் ஒடுக்குமுறையாளர்களை அவமானப்படுத்துவதற்கும் எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் உலகை அடைகிறோம்.

காஸாவிலும் மேலும் உலகெங்கிலும் பறந்து வாழும் பல காஸா மக்களை போலவே, நானும் இஸ்ரேலின் காலனித்துவ கொள்கைகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் செலவிட்டேன். நீதி மற்றும் சுதந்திரத்திற்கான பாலஸ்தீனிய போராட்டத்தில் நான் முன்னணியில் இருந்து வருகிறேன். முதலில் காஸாவிலும், பின்னர் ஜெர்மனியிலும் உள்ள எனது அகதி முகாமில். நான் தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளுக்காக அச்சுறுத்தப்பட்டேன், துன்புறுத்தப்பட்டேன், மிரட்டப்பட்டேன், சுடப்பட்டேன். ஆனால் நான் ஒருபோதும் எனது போராட்டத்தைக் கைவிடவில்லை, ஏனென்றால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், என் அன்புக்குரிய காஸாவின் எதிர்காலம் ஒரு காலனித்துவமயமாக்கப்பட்ட எதிர்காலமாக இருப்பதை நிராகரிப்பதற்கான ஒரே வழி எதிர்ப்புதான் என்று எனக்குத் தெரியும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உலகம் நாம் சொல்வதைக் கேட்க ஆர்வம் காட்டவில்லை. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்கள் பத்திரிகையாளர்கள், ஐ.நா. அறிக்கையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களால் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும்கூட, பெரும்பாலான உலக அரசாங்கங்கள் இன்றுவரை இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க பெரிதாக எதுவும் செய்யவில்லை. சிலர் இஸ்ரேலை "கண்டிக்க" வெற்று அறிக்கைகளை வெளியிட்டனர், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் தாக்குதல்களை நிறுத்துமாறு பேச்சளவில் "வற்புறுத்துகிறார்கள்", ஆனால் அதேநேரம் இஸ்ரேலுக்கு இராஜதந்திர, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவைத் தொடர்ந்து வழங்கினர். மேலும் சிலர் எதுவுமே நடக்காதது போல முற்றிலும் அமைதியாக இருப்பதை தேர்ந்தெடுத்து, மேலும் சிலர் எமக்கு இழைக்கப்படும் அநியாயம் தொடர்பாக கண்மூடித்தனமாகத் இருந்தனர், இவை அனைத்தும் தார்மீக துரோகமாகும். (இந்த துரோகிகளின் பட்டியலில் இப்போது சில அரபு தலைவர்களும் இணைந்திருப்பது பெரும் வேதனைக்குரிய விடயமாகும்).


ஆனால் சர்வதேச சமூகம் தொடர்ந்து நமது அவலநிலையை புறக்கணிக்க முடியாது.
2020 க்குள் காஸா "வாழ்வதற்கு ஒவ்வாத இடம்" ஆக மாறும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தது.. அப்போதிருந்து, காஸாவின் விரைவான சீரழிவை மாற்ற இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது மட்டுமல்லாமல், அதன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. காஸா என்ற இந்த திறந்த சிறைச்சாலையை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் மேற்கொண்ட முயற்சிகள்  இன்னும் சிறிது காலம் வாழவைக்கும். கொரோனா வைரஸ் இப்போது காஸா முழுவதும் உள்ள அகதி முகாம்கள் மற்றும் சமூகங்கள் முழுவதும் பரவி வருவதால், உலகம் நம்முடைய துன்பங்கள் தொடர்பாக இன்னும் பாராமுகமாக,  நடவடிக்கை எதுவும் எடுக்காது இனியும் காத்திருக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று, பாலஸ்தீனியர்கள் "பேரழிவு" என்பதைக் குறிக்கும் நக்பா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இது 1948 இல் பாலஸ்தீனத்தின் இன அழிப்பு மற்றும்  பாலஸ்தீனிய சமுதாயத்தை முற்றிலுமாக அபகரித்த பேரழிவு நிலை ஒப்பந்தத்தை குறிக்கிறது.

இன்று, இஸ்ரேல் அதன் வழக்கமான இராணுவ தாக்குதல்கள், தினசரி குண்டுவெடிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு கண்காணிப்பு மூலம் இந்த பேரழிவு நிலையை தொடர்ந்து பராமரிக்க முயற்சிக்கிறது. அதன் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத தீர்வுக்கு எதிரான எமது அமைதியான போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதன் மூலம் இணக்கத்திற்கு நம்மை கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது. எங்களை "பயங்கரவாதிகள்" மற்றும் "காட்டுமிராண்டிகள்" என்று சித்தரிக்கும் ஊடக பிரச்சாரங்கள் மூலம் எமது குரல்களை அடக்க முயற்சிக்கிறது. அது அதனது மனித நேயத்தை மறந்து, சுதந்திரமாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான எமது உரிமைக்காக போராடுவதை நிறுத்த முயற்சிக்கிறது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை இவ்வளவு காலமாக பேரழிவு நிலையில் வைத்திருக்கிறது, இப்போது நமது நிலைமை "சாதாரணமானது" என்று உலகிற்கு காட்ட முயற்சிக்கிறது. ஆனால் நமது சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அழிக்க இஸ்ரேல் தொடரும் முயற்சிகள் சாதாரணமான ஒன்றல்ல.

பாலஸ்தீனியர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலின் காலனித்துவ கொள்கைகளை எதிர்த்து போராடுவார்கள், பின்னடைவின் மத்தியிலும் அழகிய போராட்ட கதைகளை உருவாக்குவார்கள். ஆனால் நிறவெறி தென்னாப்பிரிக்காவில் நடந்ததைப் போலவே, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இல்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் கௌரவமான நமது நீதியான, நியாயமான, தார்மீக போராட்டத்தை நாம் வெல்ல முடியாது.

இதனால்தான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மீண்டும் மீண்டும் செய்துவரும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் அனுமதி மறுத்து அதனை தனிமைப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். உலகம் தொடர்ந்து நம் நிலைமையை "இயல்பானது" என்று கருதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், விரைவில் அது காலம் கடந்துவிட்டது என்பதை உணர்ந்துகொள்ளும்.

https://www.aljazeera.com/indepth/opinion/world-stop-ignoring-happening-gaza-200908080221601.html?fbclid=IwAR3OC0EvnEMJF8qylONYrK9hnbVoYwP_lRLHA0xY--ePPpYolFkxWME40eo

தமிழில்: தாஹா முஸம்மில் 

 

 

Saturday, November 21, 2020

ஈரான் ஏவுகணை திட்டத்தின் தந்தை தெஹ்ரானி மொகத்தம்

Tehrani Moghaddam, the father of the Iranian missile program
ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான துணிச்சலான முயற்சி எடுத்தகவர்களின் பெயர்களில் மறக்க முடியாத பெயர்தான் ஜெனரல் ஹசன் தெஹ்ரானி மொகத்தம் ஆகும். 

இவரது ஒன்பதாவது தியாக ஆண்டு நிறைவை ஈரான் கடந்த வாரம் நினைவுகூர்ந்தது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை திட்டத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படும் தெஹ்ரானி மொகத்தம் அக்டோபர் 29, 1959 அன்று தெஹ்ரானில் பிறந்தார். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு ஒரு வருடம் முன்பு அவர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார், இஸ்லாமிய புரட்சி வெடித்தபோது, அவருக்கு 19 வயதாக இருந்தது. ஷா எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து. புரட்சியில் ஈடுபட்டு பல சாகசங்களை துணிச்சலுடன் செய்து காட்டினார். 

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர், தெஹ்ரானி மொகத்தம் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) புதிதாக நிறுவப்பட்ட படையில் சேர்ந்தார், இந்த படையணி புரட்சியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. ஐ.ஆர்.ஜி.சிக்குள் பல பதவிகளில் இவர் பணியாற்றினார். 1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது ஐ.ஆர்.ஜி.சி ஏவுகணை மற்றும் பீரங்கித் திறன்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த முக்கிய நபர்களில் தெஹ்ரானியும் ஒருவராகும். 

இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர், தெஹ்ரானி மொகத்தம் இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) புதிதாக நிறுவப்பட்ட படையில் சேர்ந்தார், இது புரட்சியைப் பாதுகாக்கும் பணியில் இருந்தது. ஐ.ஆர்.ஜி.சிக்குள் பல பதவிகளில் பணியாற்றினார். 1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது ஐ.ஆர்.ஜி.சி ஏவுகணை மற்றும் பீரங்கித் திறன்களை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த முக்கிய நபர்களில் தெஹ்ரானி மொகத்தம் ஒருவராக இருந்தார். 

ஈராக் உடனான போர் முடிந்தபின்னர் அவர் தொடர்ந்து பாதுகாப்புத்துறையில் கூடிய கவனம் எடுத்தார். உண்மையில், ராணுவ பாதுகாப்பு விடயத்தில் ஈரான் சுயத்தேவை பூர்த்தியடைந்த நிலையை அடைய வேண்டும் என்ற இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் கனவை நினைவாக்க அள்ளும் பகலும் பாட்டுபட்டார்; தெஹ்ரானி மொகத்தம் ஈரானின் ஏவுகணை திறன்களை வளர்ப்பதில் தனது வாழ்க்கையின் கடைசி தருணம் வரை செலவிட்டார்.

நவம்பர் 12, 2011 அன்று தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே ஒரு ஏவுகணை காரிஸனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பல ஐ.ஆர்.ஜி.சி அதிகாரிகளுடன் ஏவுகணை சோதனைக்கு தயாராகி கொண்டிருந்த தெஹ்ரானி மொகத்தமும் உயிரிழந்தார். 

அவர் ஐ.ஆர்.ஜி.சி தளபதியின் ஏவுகணை ஆலோசகராகவும், டிசம்பர் 2006 நடுப்பகுதியில் ஐ.ஆர்.ஜி.சியின் சுய ரிலையன்ஸ் அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், மேலும் அவர் 2011 இல் உயிர் தியாகியாகும் வரை தொடர்ந்து அந்த பதவியில் இருந்தார். 

ஈரானின் ஏவுகணை திறன்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் தெஹ்ரானி மொகத்தம், இவர் ஈரானின் ஏவுகணை திட்டத்தின் தந்தை என்ற அந்தஸ்தையும் பெற்றார். 

1980 களில் லெபனானுக்கு விஜயம் செய்தபோது அவர் லெபனான் ஹிஸ்புல்லாஹ்வின் ஏவுகணை அலகுகளையும் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏவுகணை திறன்கள் மற்றும் ஏவுகணை தடுப்பு ஆகியவற்றில் ஈரானின் பாதுகாப்பு மூலோபாயத்தை தெஹ்ரானி மொகத்தம் அடிப்படையாகக் கொண்டிருந்த காரணத்தினாலேயே ஈரானைத் தாக்கும் ஈரானின் எதிரிகளின் இராணுவ விருப்பத்தை மேசையிலிருந்து திறம்பட நீக்கியது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 

ஈரானிடம் இந்த ஏவுகணை வல்லமை இல்லாதிருந்திருப்பின் அது நிச்சயமாக எப்போதோ தாக்கப்பட்டிருக்கும்.
ஈராக் உடனான எட்டு ஆண்டுகால யுத்தத்தில் நாடு ஈடுபட்டிருந்த காலகட்டத்திலேயே ஈரான் ஏவுகணைத் திட்டத்தை தெஹ்ரானி மொகத்தம் நிறுவியதாக பாதுகாப்பு நிபுணர் மெஹ்தி பக்தியாரி தெரிவித்துள்ளார். 

"ஈராக் தரப்பு எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கையில், எங்களால் பதிலளிக்க முடியவில்லை, புரட்சிக்கு முன் எமக்கு ஏவுகணைத் தொழிலில் எந்த அனுபவமும் இல்லை. ஏவுகணைத் திட்டத்தைக் கண்டுபிடிக்க தெஹ்ரானி மொகத்தம் நடவடிக்கை எடுத்த பின்னர் தான் ஈராக் நம்மைத் தாக்குவதைத் தடுக்க ஒரு வகையான ஏவுகணை திறனைப் பெற்றோம். ஈரான் மீதான சதாமின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்க வழிவகுத்த தெஹ்ரானி மொகத்தமுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்,” என்று பக்தியாரி தெஹ்ரான் டைம்ஸிடம் தெரிவித்தார். 

நிபுணரின் கூற்றுப்படி, ஈரான்-ஈராக் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் தெஹ்ரானி மொகத்தம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை தொடர்ந்து உயர்த்தினார். "ஈரானின் ஏவுகணைத் திட்டத்திற்கு மேற்கு நாடுகள் முற்றிலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன, ஈரான் மூலப்பொருட்களைக் கூட பெற முடியாத வகையில் அனைத்து பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது தெஹ்ரானி மொகத்தம் ஏவுகணை திறன்களை உருவாக்கியது ஒரு மாபெரும் சாதனையே" என்று பக்தியாரி வலியுறுத்தினார்.

ஈரானும் மேற்கு நாடுகளும் பல ஆண்டுகளாக குறைந்தது மூன்று முக்கிய பிரச்சினைகள் தொடர்பான சர்ச்சையில் அடைக்கப்பட்டுள்ளன. ஈரானின் ஏவுகணைத் திட்டம் ஈரானைக் கட்டுப்படுத்துமாறு மேற்கு நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும். 

2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு (ஜே.சி.பி.ஓ.ஏ) வழிவகுத்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் அணுசக்தி திட்டத்துடன் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு குறித்து விவாதிக்க மேற்கத்திய நாடுகளின் கட்சிகள் தயாராக இருந்தன, ஆனால் ஈரான் அவ்வாறான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான எந்தவொரு திட்டத்தையும் உறுதியாக நிராகரித்தது. எந்தவொரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கும் எதிரான முக்கிய தடுப்பாக ஏவுகணைகள் உள்ளன என்ற நம்பிக்கையில் ஈரானின் கொள்கை வேரூன்றியுள்ளது. ஆக இதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு ஈரான் ஒருபோதும் தயாரில்லை என்று உறுதிபட கூறிவருகிறது. 

ஈரானின் பாதுகாப்புக் கோட்பாடானது தெஹ்ரானி மொகத்தமால் பெருமளவில் கட்டப்பட்ட ஏவுகணை திறன்களை அடிப்படையாகக் கொண்டது என்று பக்தியாரி கூறினார். "தெஹ்ரானி மொகதாமின் ஏவுகணை மரபின் முக்கியத்துவம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை கட்டுப்படுத்த மேற்கு நாடுகளின் முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டுகளில், மேற்கு நாடுகளுக்கு மிக முக்கியமான பிரச்சினை ஈரானின் ஏவுகணைத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு அவர்கள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். ஏவுகணை பிரச்சினை மேற்கத்தியர்களுக்கு மிகவும் முக்கியமானது, அவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர், ”என்று பக்தியாரி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஈரானின் ஏவுகணை திறன்கள் இராணுவப் பயிற்சிகளில் மட்டும் காட்டப்படவில்லை, மாறாக ஈரான் தனது ஏவுகணைகளை போர்க்களத்திலும் பயன்படுத்தியுள்ளது. ஈரான் சமீபத்திய ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக குறைந்தது இரண்டு வெளிநாட்டு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் ஈராக்கில் ஓர் அமெரிக்க இராணுவ தளத்தைத் தாக்கியழித்தது. இது அமெரிக்க பயங்கரவாதத்துக்கு எதிரான துணிகர சம்பவமாகும். சமீபத்திய காலங்களில் முன்னோடியில்லாதது. இந்த தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை திறன்கள் எவ்வளவு பயனுள்ளவை என்பதையும் ஈரான்-ஈராக் போரின்போது அல்லது தற்போதைய நேரத்தில் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எவ்வாறு முறியடித்தன என்பதையும் காட்டுகிறது. 

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்தால், இந்த ஏவுகணை திறன்கள் அதைத் தடுக்கும். ஈரானின் ஏவுகணை திறன்களின் தட பதிவு அவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” ஈரானியர்கள் அத்தகைய வலுவான தடுப்பை உருவாக்கினர், இது ஈரானுக்கு எதிராக எடுக்கப்படவிருந்த இராணுவ நடவடிக்கைகளை எதிரிகள் கைவிடச் செய்தது. 

அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக பல முறை போரை தொடுக்க விரும்பியதாக நிபுணர் சுட்டிக்காட்டினார், ஆனால் ஈரானின் ஏவுகணை திறன்களின் காரணமாக அவர்கள் அவ்வாறு செய்வதை நிறுத்தினர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“ராணுவ ரீதியாக இரண்டு வகையான திறன்கள் உள்ளன: அதில் ஒரு வடிவம் ஒரு நாடு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்போது, அது ஒரு குறிப்பிட்ட நாட்டோடு போருக்குச் சென்றால் அது வெல்லும் என்பது உறுதி. மற்றது ஒரு நாடு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்போது, எந்தவொரு நாடும் அதன் மீது போர் தொடுக்கத் துணிவதில்லை. இந்த இரண்டாவது வடிவம் மிகவும் முக்கியமானது என்று இராணுவ வல்லுநர்கள் நம்புகிறார்கள்” என்று பக்தியாரி சுட்டிக்காட்டினார்.

https://www.tehrantimes.com/news/454553/The-man-who-made-it-possible