Wednesday, August 28, 2019

பிரிவினைவாதம் என்றால் என்ன, முஸ்லிம்கள் அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?


What is sectarianism and why should Muslims reject it?

அறிவார்ந்த கருத்து வேறுபாடு மற்றும் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் ஒரு பெரிய எதிரி நம்மை தாக்குவதற்கு  காத்திருக்கும்போது ஒருவருக்கொருவர் விரோதப் போக்கு கொள்வது புத்திசாலித்தனமற்றதும் நம் சமூகங்களுக்கு ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும் என்பதும் மறத்தல் ஆகாது.

பல முஸ்லீம் சமூகங்களில் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு கருப்பு மற்றும் வெள்ளை ஒற்றைப்பரிமான புரிதலை நம்பும்படி செய்யப்பட்டிருகிறார்கள். வரலாற்று ரீதியாகவும் சமகாலமாகவும் பரவலான (நியாயமான) வேறுபாடுகள் வெளிப்படும் போது அதில் ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது.

2014 Pew Poll கருத்துக் கணிப்பின்படி, 23% அமெரிக்க முஸ்லிம்கள் பருவ வயதை அடைகையில் இஸ்லாத்தை விட்டு வெளியேருக்கின்றனர். இந்த முஸ்லிம்கள் நம்பிக்கையை இழப்பதில் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு ஒற்றைப் பரிமாண புரிதல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. குறுங்குழுவாதம் பல அமெரிக்க முஸ்லிம் மையங்களில் ஒரு அரிய நிகழ்வு என்று கருதப்பட்டாலும், அவ்வாறான உணர்வுகள் இன்னும் பல முஸ்லிம்களின் இதயங்களில் நீடிக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

முன்னர் குறிப்பிட்டபடி, 40% முஸ்லிம்கள் தாங்கள் தனிக் குழு போக்கு குறுங்குழுவாதத்தை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர், நாட்பது வீதம் என்பது குறைவான எண்ணிக்கையல்ல. மற்ற முஸ்லிம்களின் பால் சகிப்புத்தன்மை அற்ற  தன்மை நம் நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறது. எமது வளங்கள் பிரயோசனமற்றவற்றுக்காக ஒதுக்கப்படுவதை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது: நமது முஸ்லிம் இளைஞர்களின் நம்பிக்கையில் உள்ள நியாயமான சந்தேகங்களை கருத்துக்களுடன் உரையாற்றுவதற்கு பதிலாக, பலர் குறுங்குழுவாத சொல்லாட்சியைப் பயன்படுத்துவதை நாடுகின்றனர். தனிக் குழு போக்கு ஒரு அறிவுசார் கருத்து வேறுபாடு அல்ல. மாறாக, இது ஓரங்கட்டப்படுதல், அந்நியப்படுதல் மற்றும் மதவெறி மற்றும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளிலிருக்கும் (முறையான) பிற முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையானது பெரும்பான்மை முஸ்லிம்களின் சிந்தனையில் இருந்து வேறுபடும் மற்ற முஸ்லிம்களை அவிசுவாசிகள் (தக்ஃபீர்) என்று அறிவிப்பது வரை இது இருக்கலாம்.

அம்மான் பிரகடனம்: தனிக் குழு போக்கு குறுங்குழுவாதத்தை நிராகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளாகும்.

 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாமிய சிந்தனை பள்ளிகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பில் நிறைய உயர்வு தாழ்வுகள் காணப்பட்டன. இவ்விடயத்தில் அம்மான் பிரகடனம் ஒரு சிறந்த முயற்சியாக காணப்படுகிறது. அம்மான் நகரில் ஒன்றுகூடிய அனைத்து முஸ்லிம் நாடுகளினதும் புகழ்பெற்ற அறிஞர்கள் ஒன்றிணைந்து, இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றை மிகவும் தெளிவாக வரையறுத்தனர். மூன்று முக்கிய விடயங்களில் அவர்கள் கையெழுத்திட்டு ஒப்புக் கொண்டனர்: முதலாவதாக அவர்கள் 8 மத்ஹபுகளை அங்கீகரித்தனர்: சுன்னி மத்ஹபுகளான (ஹனபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி, மற்றும் ழாஹிரி), ஆகியவற்றோடு ஷியா மத்ஹபுகளான (ஸெய்தி மற்றும் ஜஃபாரி) மற்றும் இபாதி ஆகிய அனைத்து 8 மத்ஹபுகளின் (சட்டப் பள்ளிகளின்) செல்லுபடியை அவர்கள் குறிப்பாக அங்கீகரித்தனர்.) மேலும் அவர்கள் அஷ்அரியிசம், சூஃபிசம் மற்றும் உண்மையான ஸலபி சிந்தனையையும் அங்கீகரித்தனர்; மேலும் ஒரு முஸ்லிம் என்பதற்கான துல்லியமான வரையறைக்கு வந்தனர். இரண்டாவதாக, முஸ்லிம்கள் என்ற  வரையறையின் அடிப்படையில், அவர்கள் முஸ்லிம்களுக்கு  இடையில் தக்ஃபீரை (விசுவாசதுரோக அறிவிப்புகளை) தடை செய்தனர். மூன்றாவதாக, மாதாஹிப்பின் அடிப்படையில், அவர்கள் ஃபத்வாக்களை வழங்குவதற்கான அகநிலை மற்றும் புறநிலை முன் நிபந்தனைகளை வகுத்தனர், இதன் மூலம் இஸ்லாத்தின் பெயரால் உள்ள அறியாமையையும் தான்தோன்றித்தனமான மற்றும் சட்டவிரோத மார்க்கத்தீர்ப்பு வழங்கும் குழுக்களையும் அம்பலப்படுத்தினர்.

அம்மான் பிரகடனம் ஒரு நேர்மறையான வளர்ச்சியாகும், இது முஸ்லிம்களிடையே உள்ள உண்மையான வேறுபாடுகள் என்ன என்பதை துல்லியமாக முன்வைத்தது. சுன்னிகள், ஷியா மற்றும் இபாதிகள் அனைவரும் முஸ்லிம்கள் என்ற பிரகடனத்துடன் இன்னுமுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அல்-அஸ்ஹரின்  ஃபத்வா மற்றும் அல்-சிஸ்தானியின் "சுன்னிகள் (இஸ்லாத்தில்) எங்கள் சகோதரர்கள் மட்டுமல்ல, நாமே தான் அவர்கள்என்று  புகழ்பெற்ற அறிவிப்பும் அடங்கும். சகிப்புத்தன்மையையும் பன்மைத்துவத்தையும் ஊக்குவிக்கும் இந்த முயற்சிகள் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்களின் இதயத்திலிருந்து வந்தனவாகும்; அவை கடைபிடிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் பிரிவினைவாதம்

சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான முயற்சிகள் நமது வரலாற்றை நினைவூட்டுகின்றன, ஏனெனில் முஸ்லிம்கள், பெரும்பாலும், சிந்தனை பிரிவுகளுக்கு (மத்ஹபுகளுக்கு) இடையிலான சகிப்புத்தன்மை இருந்துவந்ததே இஸ்லாமிய வரலாறு. ஷெரீப்பின் கீழ் மக்காவிலும்  மதீனாவிலும் பல்வேறு சிந்தனை பிரிவு பின்னணியில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்களது சிந்தை பிரிவுக்கேற்ப சுதந்திரமாக தமது கடமைகளை நிறைவேற்ற  அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஷெரீபின் குடும்பமே சுன்னிகளையும்  மற்றும் ஷியாக்களையும் கொண்டிருந்தது. ஷாஃபி மத்ஹபை பின்பற்றும் சுன்னிகளும் ஸெய்தி மத்ஹபை பின்பற்றும் ஷீஆக்களும் நிம்மதியுடனும் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு யெமன் தேசம் மற்றொரு எடுத்துக்காட்டு. யெமன் தனித்துவமானது, அது ஒருபோதும் சுன்னி மசூதி அல்லது ஷியா மசூதி என்ற கருத்தை உருவாக்கவில்லை.

தொழுகையில் கையை எங்கு கட்டுகின்றனர் என்பதைக் கொண்டு மட்டுமே ஒரு முஸ்லிம் ஷாஃபியா அல்லது ஸெய்தியா என்று சொல்ல முடியும். சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல ஷாஃபி, ஸெய்தி அறிஞர்கள் மத்தியிலும் கூட, மத்ஹபுக்கிடையிலான திருமணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உண்மை: பிரபல யேமன் ஷாஃபி சிந்தனை பள்ளியின் அறிஞர் அல்-ஹபீப் அலி அல்-ஜிஃப்ரி மேற்கண்ட நிகழ்வை விளக்கி ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். அதில் அவர்  யெமனில் உள்நாட்டுப் போர் உண்மையில், முற்றிலும் அரசியல் பின்னணியைக்கொண்டதும் வெளியில் இருந்து உட்புகுத்தப்பட்ட பிரிவினைவாதமும் ஆகும் என்பதை எடுத்துக்காட்டி, இது யெமனின்  கலாச்சாரத்திற்கு அந்நியமானது என்றும் குறிப்பிடுகின்றார். 

பிரிவினைவாதத்தால் ஏற்படும் விளைவு படு பயங்கரமானது. இப்னு ஹதீதின் ஷஹ்ர் நஜ்ஜுல் பாலகாவில் பின்வரும் சம்பவம் ஒன்று பதியப்பட்டுள்ளது: ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவோருக்கும் ஹனாஃபி மத்ஹபை பின்பற்றுவோருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை பற்றியதே அது: 633 AH இல் இஸ்ஃபாஹான் மக்கள் இரண்டு குழுக்களாக இருந்தனர்; ஹனஃபி மத்ஹபை சேர்த்தோர் மற்றும் ஷாஃபி மத்ஹபை சேர்த்தோர். அவர்கள் நிரந்தர போர்களில் ஈடுபட்டனர் மற்றும் (ஒருவருக்கொருவர் எதிராக) வெளிப்படையான மதவெறியைக் காட்டினர். எனவே, ஹனபிகளை ஒழிக்கும் முயற்சியில் ஷாபிகளில் ஒரு குழு, தாத்தாரியர்களின் உதவியை நாடினர். இதையடுத்து ஹனஃபிகளை அழிக்க ஊருக்குள் நுழைந்து தாத்தாரிய போர்வீரர்கள் முதலில் ஷாஃபி மத்ஹபை சேர்ந்தோரை கொண்றுகுவித்து அவர்களது பெண்களையும் அடிமைப்படுத்தினர். பிறகு ஹனஃபிகளையும் அவ்வாறே செய்தனர்.

பிரிவினை கலாச்சாரத்தை வளர்க்கும் குறுங்குழுவாதத்தின் துரதிர்ஷ்டவசமான விளைவவே இதுவாகும். சுன்னிகளாக இருந்தபோதும் கூட, இந்த பிரிவினை ஒரு சுன்னி குழுவை அழிக்க இன்னொரு சுன்னி குழு முற்படுவதற்கு வழிவகுத்தது. குறுங்குழுவாத மனநிலை வெவ்வேறு பிரிவுகளை ஓரங்கட்டுவதுடன் நிற்கப்போவதில்லை; உறவினர் என்ற மனநிலையை ஒழித்தவுடன் ஒரு மனிதன் தனது சகோதரனுக்கு எதிராக பிரிவினையை வளர்க்கவும் குழிபறிக்கவும் இது வழிசமைக்கிறது என்பதை புரிந்துவுகொள்வது அவசியமாகும்.

பிரிவினைவாதத்தை தீர்க்கும் தற்கால எடுத்துக்காட்டுகள்

இன்று, ஒரு சில முஸ்லீம் அரசாங்கங்களும் மக்களும் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் பணியாற்றுவதை காணக்கூடியதாக உள்ளது. பிரிவினைவாதத்தை குறைப்பதில் ஓர் உதாரணம் ஓமான். பல மத்ஹபுகளை பின்பற்றுவோர் சமாதானமாக வாழும் நாடு ஓமான். நாட்டின் ஏறத்தாழ பாதி மக்கள் இபாதி பிரிவை சேர்ந்தவர்கள், மற்ற பாதி சுன்னி மற்றும் ஷிஆ பிரிவுகளை சேர்ந்தோராகும். இவர்களுக்கிடையில் பிரிவினைவாத பிரச்சினை எழுவது கிடையாது; பிரிவினைவாத வெளிப்பாடுகளுக்கு எதிரான கடுமையான அரசாங்க சட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

அரசாங்கத்தின் தலையீடு உதவியாக இருந்தபோதும், சமூக முயற்சிகள் விரும்பத்தக்கவை; இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களின் போது, பாகிஸ்தான் சுன்னிகள் தங்கள் ஷியா சகோதரர்களைப் பாதுகாக்க ஒரு முயற்சியை மேற்கொண்டனர். இது ஒர் எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோன்று பல சமூக முயற்சிகள் பல நாடுகளிலும் உள்ளன. இந்த முயற்சிகள் வெவ்வேறு இஸ்லாமிய மரபுகளைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்கள் மீதான உண்மையான அக்கறை மற்றும் அன்பிலிருந்து உருவாகின்றன, மேலும் இவை ஒரு வலுவான, ஒன்றுபட்ட முஸ்லீம் சமூகத்திற்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய உணர்வுகளாகும்.

மறுபுறம், கடந்த நூற்றாண்டு (குறிப்பாக கடந்த சில தசாப்தங்கள்) ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் மற்றும் சமூகத்தை அடக்கியாள்வதற்காகவும் பிரிவினைவாதத்தைக் கையாண்டு   பல அரசியல் மோதல்கள் உருவாக்கப்பட்டதை நாம் கண்கூடாகக் கண்டோம். வரலாறு முழுவதிலும் உள்ள கொடுங்கோலர்கள் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கும் மதத்தின் பெயரில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை அடைப்பதற்கும் "மதத்தின்" நியாயப்படுத்தலை நாடுகின்றனர். அநியாய அரசியல் சக்திகளுடன் இணைந்த அறிஞர்கள்உமையா காலத்தை போலவே இன்றும் செயல்படுகின்றனர்.

அதே அறிஞர்கள் மத சுலோகங்களை பயன்படுத்தி ஈமான்கொண்ட சகோதரர்களை ஒருவருக்கொருவர் சண்டையிட அணிதிரட்டுகிறார்கள்; இவர்களது இந்த சதியினால், தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், இறுதியில் அவர்கள் மதத்தையே  அழிக்கின்றார்கள். தத்தமது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் எண்ணத்தில்  மதத்தைப் பயன்படுத்தியதன் காரணமாக, மதத்தலங்கள் இன்று மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றன. மற்ற முஸ்லிம்களை அரக்கர்களாக காட்டும் முயற்சிக்கு மதத்தைப் பயன்படுத்துவதை நாம் அங்கீகரிக்கக் கூடாது. இவ்வாறு செய்வோமானால் நாம் இனி எந்தவொரு கொடுங்கோலரால் ஏமாற்றப்பட மாட்டோம்; சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றிற்கான அழைப்புகளுக்கு நாங்கள் அதிக வரவேற்பைப் வழங்குவோம்.

எமது தற்போதைய நிலை பரிதாபகரமானது. இப்போது எம்மத்தியில் உள்ள பிரிவினைவாத சிந்தனை  எதிர்காலத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சியையும் அழித்துவிடும்.

இங்கிருந்து நாம் எங்கு செல்வது...?

பிரிவினைவாத மனப்பான்மை முஸ்லிம்களை சிறிய மற்றும் பலவீனமான குழுக்களாக தொடர்ந்து பிரிப்பதை நிரூபித்துள்ளது. முஸ்லிம்களை சுன்னி மற்றும் ஷியா குழுக்களாகப் பிரிப்பதுடன் இது நின்றுவிடும் என்று நாம் நினைக்கலாம், ஆனால் அது நிற்கப்போவதில்லை. சுன்னிகளை சூஃபிகள் என்றும் ஸலபிகள் எனப் பிரிப்பார்கள், அவர்களுக்குள்ளும் பல பிரிவுகளை ஏற்படுத்துவார்கள். பிரிவினைவாத மனப்பான்மை கவனிக்கப்படாவிட்டால், முஸ்லிம்கள் தங்கள் ஷேக்கைப் பின்பற்றாத முஸ்லிம்களுடன் அவர்களது  சொந்த சிந்தனை பள்ளியிலிருந்து கொண்டே சண்டையிடுவார்கள். வரலாற்று ரீதியாக, சிந்தனை மற்றும் பிரிவின் ஒவ்வொரு பள்ளியிலும் தவறுகள் இருக்கலாம். பிரச்சினையை ஏற்படுத்துவது என்னவென்றால், எக்ஸ் எனும் மத்ஹபில் இருப்போர் ய மத்ஹபில் இருப்போர் தொடர்பாக எதிர்மறையான படத்தை முன்வைத்து தவறு கண்டுபிடிப்பதில் ஈடுபடுவதுவே ஆகும்.

முன்னோக்கி செல்லும் பாதை சகிப்புத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தின் பாதையாக இருக்க வேண்டும். நமது முஸ்லீம் அமைப்புகளை, பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸ்களை, மற்றும் புத்திஜீவிகளைக்கொண்ட அதுபோன்ற அமைப்புகளை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் கருப்பொருள்கள் மற்றும் மதிப்புகளை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை நடத்த ஊக்குவிப்பதன் மூலம் நாம் இதனை ஆரம்பிக்கலாம். வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் கதீபுமார்களுக்கு இதில் பெரும் பங்கு வகிக்கலாம். றஸூலுல்லாஹ்வின் பிறந்த தினத்தை இதற்காக பயன்படுத்தலாம். மேலும் இஸ்லாத்தில் அன்பு மற்றும் நீதியின் முக்கியத்துவம், சமூக சகவாழ்வு போன்றவற்றுடன் உய்குர், காஷ்மீரி, பாலஸ்தீனிய மற்றும் பிற ஒடுக்கப்பட்ட முஸ்லீம் சகோதர சகோதரிகளின் நிலை பற்றி கலந்துரையாடலாம், மக்களை தெளிவுபடுத்தும் கூட்டங்களை இணைந்து ஏற்பாடு செய்யலாம்.

இறுதியாக, முஸ்லிம் கல்விமான்கள் ஒருவருக்கொருவர் தம்மிடையே சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை வளர்ப்பது முக்கியம். அதைச் செய்வதற்கான ஒரு வழி, பிற சிந்தனைப் பள்ளிகளின் உறுப்பினர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துக் பரிமாறல்களில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். பலர் மார்க்கத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள், மற்றவர்கள் இஸ்லாமோபோபியாவினால் எல்லா பக்கங்களில் இருந்து தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். சன்னியிசத்துக்காகவோ ஷியா இசத்துக்காகவோ, சூஃபியிசத்துக்காகவோ அல்லது ஸலபிசத்துக்காகவோ நம் சமூகத்தில் உராய்வையும் வெறுப்பையும் உருவாக்க இது சரியான நேரம் அல்ல. 

அறிவார்ந்த கருத்து வேறுபாடு மற்றும் விவாதங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஆனால் ஒரு பெரிய எதிரி நம்மை காயப்படுத்த காத்திருக்கும்போது ஒருவருக்கொருவர் விரோதப் போக்கு கொள்வது என்பது நம் சமூகங்களுக்கு ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும், ஆபத்தை ஏற்படுத்தும்.


கருத்துக்களால் மோதலாம், மோதவும் வேண்டும், ஆனால் இதயங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் நமக்கு நினைவூட்டுகிறான்: இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்……… (3:103).

நாம் உண்மையிலேயே விசுவாசத்தில் சகோதரர்களாக இருப்போம், எங்கள் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.

யஹ்யா அல்-ஷாமி
Yahya Al-Shamy



Monday, August 19, 2019

எம் மீது யுத்தமொன்றை திணித்தால் இஸ்ரேல் நிர்மூலமாவதை டீவியில் நேரலையாகக் காண்பீர்கள் - ஹசன் நஸ்ரல்லாஹ்


Imposing a war on us: You will see Israel's annihilation live on TV - Hassan Nasrallah

-       - ராமின் ஹுசைன் அபாதியான் 
-           

லெபனான் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லாஹ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2006ம் ஆண்டு ஜூலை மாதம் லெபனான் மீதான இஸ்ரேலிய’ 33 நாள் போரின்போது ஹிஸ்புல்லாஹ் அடைந்த பெரும் வெற்றியின்” 13 வது ஆண்டு நினைவு நாளை குறிக்குமுகமாக உணர்ச்சிபூர்வமான உரையொன்றை நிகழ்த்தினார்.

உரையின் போது  நஸ்ரல்லாஹ் இஸ்ரேலியர்கள் லெபனானுக்குள் ஊடுருவினால், அவர்களின் யுத்த டாங்கிகள் அனைத்தும் அழிக்கப்படும். கடந்த காலத்தில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை அழிக்கலாம் என்று கனவு கண்டது, ஆனால் இன்று, இவ்வியக்கம் இப்பகுதியில் பாரிய ஒரு சக்தியாக மாறியுள்ளது", என்று கூறினார்.

மேலும் அவர் "லெபனானுக்குள் வர வேண்டாம் என்று நான் எச்சரிக்கிறேன், நீங்கள் லெபனானுடன் ஒரு போரைத் தொடங்கினால், இஸ்ரேல் நிர்மூலமாவதை எல்லோரும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் நேரடியாகவே காண்பார்கள். அந்த 33 நாள் போர் சியோனிச ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது. இன்று, இஸ்ரேலியர்கள் லெபனானை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்என்று தெரிவித்தார்.

"எம்முடைய எதிர்ப்பை தொடர்ந்தும் உயிரோட்டம் உள்ளதாக வைத்திருப்பது முக்கியமாகும். அது சிரியாவில் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியைத் தடுப்பது மட்டுமல்லாமல் அங்கிருந்து மற்றொரு உலகப் போர் உருவாதையும் தடுக்கும். நிச்சயமாக, சரணடைதல் அல்லது அடிபணித்தலை ஏற்றுக்கொள்வதினால் ஏற்படும் இழப்பை விட, எதிர்ப்பின்னாலும் சண்டையினாலும் ஏற்படும் இழப்பு மிகக் குறைவாகவே இருக்கும்,” என்றும் நஸ்ரல்லாஹ் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் இயக்கம் எப்போதுமே பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் ஒன்றாக இருந்து வருவதாகவும், இன்று பெஞ்சமின் நெதன்யாகு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவை இப்பகுதியில் போரொன்றை உருவாக்கவே விரும்புவதாகவும் நஸ்ரல்லா கூறினார்.

நஸ்ரல்லாஹ்வின் உரையின் மிக முக்கியமான பகுதி ஈரான் இஸ்லாமிய குடியரசின் சக்தி மற்றும் அதற்கு எதிரான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் பற்றியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

"இப்போது அமெரிக்க அதிகாரிகள் ஈரானைத் தாக்குவது குறித்த அவர்களது முந்தைய அச்சுறுத்தல்களிலிருந்து பின்வாங்கியுள்ளதால், நாங்கள் ஒரு வரலாற்று சாதனை நிகழ்த்துவதற்கான விளிம்பில் இருக்கிறோம். ஈரானுக்கு எதிரான எந்தவொரு போரும் முழு பிராந்தியத்தையுமே சுட்டெரிக்கும்; ஈரானைத் தாக்குவது என்பது  அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் அனைத்து உறுப்பினர்களையும் தாக்குவதாகும்.என்றும் நஸ்ரல்லாஹ் குறிப்பிட்டார்.

அவரது இந்த உரையின் மூலம், பிராந்தியத்தில் தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தவும் யுத்தமொன்றை உருவாக்கவும் முயற்சிக்கும் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட சமாதானத்தின் எதிரிகளுக்கு நஸ்ரல்லாஹ் மிகவும் கடுமையான எச்சரிக்கைகளை வழங்கினார்.

ஈரானுக்கு எதிராக ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துவார்களாயின், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் அனைத்து  உறுப்பினர்களும் அமைதிகாத்து சும்மா இருப்பர் என்று நினைக்க வேண்டாம்; மாறாக, அவர்கள் ஈரானை பூரணமாக ஆதரிப்பவர்களாகவும் ஈரானின் எதிரிகளை குறிவைப்பவர்களாகவும் இருப்பர் என்றும் நஸ்ரல்லாஹ் உறுதிபட  கூறினார்.

ஹிஸ்புல்லாவின் இந்த எச்சரிக்கைகள் ஒரு முக்கியமான நேரத்தில் வருகின்றன; கடந்த சில வாரங்களாக அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேர்வுகள் அனைத்தும் மேசையில் இருப்பதாக பலமுறை அறிவித்தனர்; இருப்பினும், ஈரானின் சக்தியை உணர்ந்த பின்னர் அவர்கள் இந்த அச்சுறுத்தலின் வீரியத்தை குறைத்துக்கொண்டனர். இந்த நேரத்தில் ஈரான் பாரசீக வளைகுடா வான் பகுதியில் ஊடுருவிய அமெரிக்க ட்ரோனை வீழ்த்தியது மற்றும் சர்வதேச கடல் சட்டங்களை மீறிய ஒரு பிரிட்டிஷ் எண்ணெய்தாங்கி கப்பலை ஈரான் கைப்பற்றிய செயலானது ஈரானின் துணிச்சலை முழு உலகுக்கும் வெளிக்காட்டியது எனலாம்.

அநியாயத்தையும் ஆக்கிரமிப்பையும் எதிர்க்கும் ஒன்றுபட்ட அணி பற்றி நஸ்ரல்லாஹ் எதிரிகளுக்கு நினைவுபடுத்தினார்; இந்த அணியின் எந்தவொரு உறுப்பினரையும் தாக்குவது முழு ஒற்றுமையையும் தாக்குவதற்கு சமம் என்பதை தெளிவுபடுத்தினார்.

நஸ்ரல்லாஹ்வின் எச்சரிக்கை மிகவும் துல்லியமாக இருந்தது. பின் சல்மான், பின் சயீத் மற்றும் நெதன்யாகு போன்ற பிராந்தியத்தில் உள்ள யுத்த வெறியர்களுக்கு நிச்சயமாக உரிய செய்தி சென்று சேர்ந்திருக்கும் என்று நம்பலாம்.

மறுபுறம், அமேரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரானின் தற்காப்பு மற்றும் இராணுவ சக்தி குறித்து நஸ்ரல்லாஹ்  கூறியது உலகெங்கிலும் உள்ள ஊடகங்களின் கவனத்தை ஈரானை நோக்கி ஈர்த்துள்ளது.

"ஈரானின் உயர் இராணுவ சக்தியையும் திருப்பித்தாக்கும் வல்லமையையும் உணர்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானைத் தாக்குவதைத் தவிர்த்தார்" என்று நஸ்ரல்லாஹ் தெளிவாகக் கூறினார்.

அமேரிக்கா ஈரானுடனான போரைத் தவிர்ப்பதற்கான காரணம் ஒரு மூலோபாயமோ அல்லது இராஜதந்திர முடிவோ அல்ல என்றும் ஈரான் திருப்பித் தாக்கும் என்ற அச்சமே அதற்கு காரணம் என்பதை நஸ்ரல்லாஹ்  தெளிவுபடுத்தினார்.

நஸ்ரல்லாஹ்வின் பேச்சு ஒரு தடுப்பு விளைவைஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகிறது; இதன் நோக்கம் என்னவென்றால், பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள போரார்வம் கொண்டோர்  எமது  எதிர்ப்பு சக்திகளின் ஒற்றுமையைப் புரிந்துகொள்வார்கள், எனவே அவர்கள் பிராந்தியத்தில் சாகசங்களை செய்வதற்கு முன்பு,  அதை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் மற்றும் அவர்களின் அனைத்து நகர்வுகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்வார்கள்.

நஸ்ரல்லாஹ்வின் உரையின் மற்றொரு நோக்கம் என்னவென்றால், சவுதி மற்றும் அமேரிக்கா உட்பட எதிரிகளுக்கு ஹிஸ்புல்லாஹ்  மற்றும் ஈரானின் ஓங்கிவரும் சக்தி குறித்து அறிவிப்பதே ஆகும். இந்த சக்தி எம்மைப்பற்றிய அவர்களின் முந்தைய கணக்கீடுகளை மாற்றிவிடும், மேலும் சில மேற்கத்திய ஊடகங்கள் கூட ஈரானுக்கு எதிரான அமெரிக்க சக்தி வேகமாக குறைந்து வருவதை ஒப்புக்கொள்கின்றன.

நன்றி

Saturday, August 17, 2019

உலக புகழ்பெற்ற கவிஞர் உமர் கய்யாம் கணிதத்தில் கெப்ளருக்கும் நியூட்டனுக்கும் சமமானவர்.


The world famous poet Omar Khayyam was equal to Kepler and Newton in mathematics.

உமர் கய்யாம் ஒரு வானியலாளர், மருத்துவர், தத்துவவாதி மற்றும் கணிதவியலாளர்: அவர் இயற்கணிதத்தில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அவரது கவிதை வேறு எந்த மேற்கத்திய சாரா கவிஞரையும் விட மேற்கில் நன்கு அறியப்பட்டிருக்கிறது.

கி.பி 1072 ஆம் ஆண்டில், உமர் கய்யாம் இதுவரை கணக்கிடப்பட்ட மிக துல்லியமான ஆண்டு நீளத்தை ஆவணப்படுத்தினார் - நவீன உலகில் பெரும்பாலான நோக்கங்களுக்காக துல்லியமான ஒரு கணக்கீடாக இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது.

ஆரம்பம்
உமர் கய்யாம் 1048 மே 18 அன்று வடக்கு பாரசீகத்தின் நைஷாபூரில் ஒரு பெரிய வர்த்தக நகரத்தில் பிறந்தார். இன்று நகரம் ஈரானில் உள்ளது. உமரின்  தந்தை இப்ராஹிம் கய்யாமி, ஒரு செல்வந்த  மருத்துவர். உமரின் தாயின் பெயர் தெரியவில்லை. கய்யாமி என்றால் கூடாரம் கட்டுபவர் என்று பொருள்படும் என்பதால் உமரின் தந்தை கூடாரங்களை அமைப்பவராக இருந்தார் என்று சில ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். இருப்பினும், பல ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு ஸ்மித் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், அவர்கள் கொல்லர்களாக இருப்பதில்லை என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்குலக இலக்கியத்தில் ஒமர் கய்யாமின் தாக்கம்
பாரசீக வானியலாளர், கணிதவியலாளர் மற்றும் கவிஞர் உமர் கய்யாம் 1048 இல் நைஷாபூரில் (கோராசான் ராஸாவி மாகாணத்தில் உள்ள ஒரு நகரம்) பிறந்தார். ஷேக் முகமது மன்சூரி என்ற அறிஞரிடமிருந்து தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர்  இயற்கணிதம் மற்றும் வடிவியலைக் கற்பிப்பதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

உமர் கய்யாமின் மிகவும் பிரபலமான இயற்கணித  சிக்கல்களுக்கான தீர்வு' என்ற படைப்பை அவர் 1070 இல் நிறைவு செய்தார், இதில் அடிப்படை இயற்கணிதக் கொள்கைகளை வகுத்திருந்தார். 1077 ஆம் ஆண்டில் கயாம் எழுதிய மற்றொரு பெரிய படைப்பு, ‘ஷார்ஹ் மா அஷ்கலா மின் முசாதராத் கிதாப் உக்லிடிஸ்அதாவது யூக்லிட்டின் போஸ்டுலேட்டுகளில் உள்ள சிரமங்களின் விளக்கங்கள்என்ற நூலாகும். 6 நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஜியோர்டானோ விட்டேல் என்ற ஒரு இத்தாலிய கணிதவியலாளர் கய்யாமின் கோட்பாட்டில் மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார். எண்கணித சிக்கல்கள்என அழைக்கப்படும் கய்யாமின் மற்ற புத்தகம், இசை மற்றும் இயற்கணிதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

அவர் நன்கு அறியப்பட்ட அக்கால வானியலாளராக இருந்தார். பாரசீக ஜலாலி நாட்காட்டியில் பல சீர்திருத்தங்களையும் செய்தார். ஜலாலி நாட்காட்டி ஏனைய நாட்காட்டிகளுக்கு அடித்தளமாக மாறியது. மேலும் கிரிகோரியன் காலெண்டரை விட இது மிகவும் துல்லியமானது என்றும் அறியப்படுகிறது. ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்பதற்கும் அப்பால், மேற்கில் அவரது புகழ் அவரது ருபையாத்கவிதைகளின் தொகுப்பால் ஏற்படுகிறது.

மஷ்ஹத் நகரிலுள்ள இமாம் ரிஸா பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியப் பேராசிரியர் டாக்டர் மரியம் கோஹெஸ்தானி இஸ்னா (ஈரானிய செய்தி நிறுவனம்) வுக்கு அளித்த பேட்டியில் உமர் கய்யாம் பற்றி குறிப்பிடுகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ருபையாத்அல்லது வசனங்களைத் தந்த ஒரு சிறந்த கவிஞர் என்று குறிப்பிட்டார். இவரது கவிதைகள் 70க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவித்துவத்துக்கு அப்பால் உமர் கய்யாம் ஒரு திறமையான தத்துவஞானியூமாவார். இவரது சிந்தனைப் பள்ளியில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு மொழிகளில் அவரது படைப்புகளின் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், தனது இளம் வயதிலேயே மருத்துவம் கற்ற  உமர் கய்யாம் மருத்துவ அறிவியலை நன்கு அறிந்திருந்தார். இப்னு சினாவின் ஆக்கங்களை ஆர்வத்துடன் கற்றார். அவற்றின் தாக்கம் அவரில் நிறைய இருந்தது. இதை அவரே குறிப்பிட்டிருந்தார்.

உமர் கய்யாம் தனது வாழ்நாளில் எந்த கவிதையையும் வெளியிடவில்லை. அவர் ஒரு விஞ்ஞானியாகவும் தத்துவஞானியாவுமே நன்கு அறியப்பட்டவர். இன்று ருபையாத் எனும் அவரது  படைப்பு உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உமர் கய்யாமின் ஆக்கங்களை ஆராய்ந்த முதல் ஆங்கில அறிஞர், தாமஸ் ஹைட் (1636-1703), கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளுக்கு சிறிது இடத்தை அர்ப்பணித்தார், மேலும் கய்யாமின் 'ருபை' எனும் நாலடிப்பாடல்களை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்

சர் கோர் ஒஸ்லி (Sir Gore Ouseley 1770 -1844) ஒரு பிரிட்டிஷ் தொழிலதிபர், மொழியியலாளர் மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர் பாரசீக மொழியை நன்கு அறிந்தவர் மற்றும் ஈரானிய புத்தகங்களின் பல கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாரசீக இலக்கியத்தில் பட்டம் பெற்ற ஃபிட்ஸ் ஜெரால்ட் உமர் கய்யாமின் ருபையாத்'தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில், (FitzGerald) மொழிபெயர்த்த ருபையாத்தின் புகழ் பிரிட்டனில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பரவியது. ஃபிட்ஸ் ஜெரால்ட் தனது மொழிபெயர்ப்பை பல முறை மாற்றியமைத்தார் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத், நான்காவது ஆங்கில பதிப்பு 1879 இல் வெளியிடப்பட்டது, மற்றும் ஐந்தாவது பதிப்பும் (கடைசி பதிப்பு) அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டது.

ஃபிட்ஸ் ஜெரால்டின் பதிப்பின் ஊடாக ஐரோப்பாவில் (மேற்கு) கய்யாம் நன்கு அறியப்பட்டாலும், எட்வர்ட் ஹென்றி வின்ஃபீல்ட் (1836-1922)  எனும் பாரசீக இலக்கிய மொழிபெயர்ப்பாளர் கய்யாமின் ருபையாத்தினது துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்கினார். இவர் உமர் கய்யாமின் 500 ருபையாத்களை மொழிபெயர்த்தார்.  ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழிபெயர்த்தது 101 ருபையாத்கள் மட்டுமே. இந்த இரண்டு படைப்புகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில், வின்ஃபீல்ட் பாரசீக கவிதை மரபு பிசகாமல் மொழிபெயர்த்திருந்தார் என்பதாகும்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் விக்டோரியன் ரொமாண்டிஸத்துடன் ஒத்துப்போகும்படி அசல் "ரூபாயத்"தை கணிசமாக சிதைத்தார். கய்யாமின் தத்துவ வசனங்களுக்கு பதிலாக காதல் வசங்களை உட்புகுத்தியதன் காரணமாக ருபையாத் கவிதையை ஒரு காதல் பாடலாக சிலர் கருத வழிவகுத்தது.

1892 ஆம் ஆண்டில் கய்யாம் சங்கம்லண்டனில் நிறுவப்பட்டது. இது பிரிட்டிஷ் சிந்தனையாளர்களும் புத்திஜீவிகளும் ஒன்றுகூடும் மையமாக இருந்தது. விக்டோரியன் எழுத்தாளர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் மற்றும் உமர் கய்யாமின் ருபையாத்தை  நினைவுகூரும் வகையில் இந்த சங்கம் உருவாக்கப்பட்டது. லண்டனில் கய்யாம் சங்கத்தின் வெற்றி ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் கய்யாம் சங்கங்களை நிறுவ வழிவகுத்தது. ருபையாத்தை நினைவுகூரும் வகையில் கய்யாம் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் லண்டன் சங்கத்தில் ஒன்றுகூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் கய்யாம் மேற்கத்திய இசையிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். கிரான்வில்லே பான்டோக் என்ற ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், அவரது கவிதைகளால் ஈர்க்கப்பட்டு உமர் கய்யாம்ஆல்பத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் சிறந்த கணிதவியலாளர் வில்லியம் எட்வர்ட் ஸ்டோரி என்பவர் உமர் கய்யாம் கெப்லருக்கும் நியூட்டனுக்கும் சமம் என்று நம்பினார்.

பாரசீக கவிதைகள் குறித்த தனது "இலக்கியம் மற்றும் சமூக நோக்கங்கள்" என்ற கட்டுரையில் கய்யாம் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் ரால்ப் வால்டோ எமர்சன் சுட்டிக்காட்டுகின்றார்.

அமெரிக்க எழுத்தாளர்களான மார்க் ட்வைன் மற்றும் டி.எஸ். எலியட் ஆகியோரில் உமர் கய்யாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். கய்யாமின் எண்ணங்களுக்கு ஏற்ப இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலின் கதையைச் சொல்லும் தனது "தி வுல்ப்  ஆஃப் தி சீ" (The Wolf of the Sea) நாவலில் அமெரிக்க நாவலாசிரியரான ஜாக் லண்டனையும் அவர் ஈர்த்திருந்தார்.

உமர் கய்யாமின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை கருவாகக் கொண்டு பல படங்களை ஹாலிவுட் உருவாக்கியுள்ளது. "தி கீப்பர்: தி லெஜண்ட் ஆஃப் உமர் கய்யாம்" (The Keeper: The Legend of Omar Khayyam) 2005 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அவரது வாழ்க்கையின் சமீபத்திய திரைப்படமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஜீன்-பாப்டிஸ்ட் நிக்கோலாய் கய்யாமின் ருபையாத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தபோது பிரெஞ்சு மக்கள் கய்யாமின் ருபையாத்துடன் நன்கு பரிச்சயமாகினர்.

பிரெஞ்சு கவிஞரும் நாடக ஆசிரியருமான மோரிஸ் புஷெர் "ட்ரீம் ஆஃப் கய்யாம்" (Dream of Khayyam) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை வழங்கினார், அதில் அவர் "நான் கய்யாமை  பின்பற்றுபவர்களில் ஒருவன்" என்று கூறினார்.

தவிர, ஜீன் லாகூர் கய்யாமின் தத்துவத்தின் அடிப்படையில் "மாயை" (Illusion) என்ற புத்தகத்தை எழுதினார்.

கய்யாம் ஒரு புதிரான மனிதராக இருக்கிறார். அவரைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். ஆயினும் அவர் ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.