Sunday, January 28, 2024

பாலஸ்தீனத்திற்கு ஒரு "பெரிய வெற்றி, சியோனிச ஆட்சிக்கு ஒரு மூலோபாய தோல்வி...!

 8 points about ICJ ruling; victory for Gaza people

சர்வதேச நீதிமன்றம் (ICJ) தடுப்பு நடவடிக்கைகளுடன் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்திருந்தால், அது சிறந்த தீர்ப்பாக அமைந்திருக்கும். எப்படியிருந்தாலும், அதன் ஆரம்ப தீர்ப்பு பாலஸ்தீனத்திற்கு ஒரு பெரிய வெற்றியாகும்.

காஸாவில் இஸ்ரேலிய மேற்கொண்டு வரும் இனப்படுகொலை தொடர்பாக சியோனிச ஆட்சிக்கு எதிராக தென்னாபிரிக்கா அளித்த புகார் மீது சர்வதேச நீதிமன்றம் ஒரு ஆரம்ப தீர்ப்பை வழங்கியது.

இந்த ஆரம்ப தீர்ப்பு பற்றி ஒருவர் 8 புள்ளிகளை கருத்தில்கொள்ள முடியும்:

1.     தென்னாப்பிரிக்காவின் வழக்கை கைவிடுவதற்கான அதன் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததால், தீர்ப்புக்கு முன்பே நீதிமன்றத்தில் இஸ்ரேல் தனது முதல் தோல்வியை சந்தித்தது எனலாம். ஆரம்ப விசாரணையில், ICJ தலைவர் புகாரை விசாரிக்க தனது அதிகார வரம்பை அறிவித்தார் மற்றும் இந்த நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக புகார் அளிக்க தென்னாப்பிரிக்காவுக்கு உரிமை உண்டு என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் தென்னாப்பிரிக்காவின் அறிக்கைகள் நியாயமானவை மற்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தகுதியானவை என்றும் நீதிமன்றம் கூறியது.

2.     டிசம்பர் 9, 1948 அன்று ஐ.நா பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா இன அழிப்பு தொடர்பான  மாநாட்டின்படி, ஒரு தேசிய, இன, அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஐந்து செயல்களில் ஏதேனும் ஒன்று இன அழிப்பு கொலையாகக் கருதப்படுகிறது. 17 ICJ நீதிபதிகளில் 16 பேர் காஸாவில் இனப்படுகொலை மற்றும் அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று நம்புகின்றனர்.

"இனப்படுகொலை நடந்ததா இல்லையா என்பது குறித்து நாங்கள் இப்போது தீர்ப்பு வழங்கவில்லை" என்று நீதிமன்றம் கூறியிருந்தாலும், இனப்படுகொலை இடம்பெற்றிருப்பது நீதிமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியானது.

மேலும், "இனப்படுகொலை குற்றத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு பாலஸ்தீன மக்களுக்கு உரிமை உண்டு" என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், ஒரு சட்ட வல்லுனர் ஹேக் நீதிமன்றத்தின் முடிவுகளை பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று குறிப்பிட்டார் மற்றும் காஸாவில் மேலும் போர்க்குற்றங்களை தடுக்க சியோனிச ஆட்சிக்கு எதிராக இன்னும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

3.     ஐ.நா.வின் முக்கிய நீதித்துறை தூணாக சர்வதேச நீதிமன்றம் உள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாக்குகள் இருப்பதாலும், வீட்டோ அதிகாரம் இல்லாததாலும் ஐ.நா பொதுச் சபையையும் ஒரு சட்ட தூணாக கருதலாம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவ்வாறன்றி ஒரு அரசியல் ரீதியான அமைப்பு, அதனால் வீட்டோ அதிகாரம் கொண்டு நீதி நிர்வாகத்தைத் தடுக்க முடியும். ICJ என்பது "அரசியலை" பொருட்படுத்தாமல் நீதித்துறை தீர்ப்புகளை வழங்கும் ஒரு நீதித்துறை தூண். மற்றும் இது ஒரு வகையான விசாரணை என்பதால் நீதிமன்றத்தின் முடிவுகள் கட்டுப்படுத்தக்கூடியவை.

அதன்படி, இஸ்ரேல் தொடர்பான ICJ இன் முடிவை, அதன் உள்ளடக்கம் என்னவாக இருந்தாலும், பேர்லின் மதிக்கும் என்று ஜேர்மன் அரசாங்கம் அறிவித்தது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகமும் ஒரு அறிக்கையில் "சர்வதேச சட்டத்தை மதிக்க நாங்கள் ஆழமாக கடமைப்பட்டுள்ளோம், என்று குறிப்பிட்டது, ICJ க்கான எங்கள் ஆதரவை நாங்கள் வலியுறுத்துகிறோம்."

4.     காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றத்தை தடுத்து நிறுத்த இதுவரை எந்த தீர்மானத்தையும் வெளியிடாத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிலுக்கு இந்த தீர்ப்பு தோல்வியாக கருதப்படுகிறது.

காஸாவுக்கு எதிரான குற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இஸ்ரேலை பல முறை கண்டித்துள்ளது, ஆனால் பொதுச் சபையின் தீர்மானங்கள் அமல்படுத்த முடியாதவை, அதேசமயம் ICJ தீர்ப்புகள் கட்டுப்படுத்துகின்றன, மேலும் இது காஸாவின் நிலைமை தொடர்பாக வல்லரசுகளின் செயல்திறன் குறித்த ஒரு வகையான விமர்சனமாக கருதப்படுகிறது.

5.     நீதிமன்ற தீர்ப்பின்படி, சியோனிச ஆட்சி ஒரு மாதத்திற்குள் காஸா மக்களின் மனிதாபிமான தேவைகளை அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மேலும் ஒரு குழுவினருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்வது இந்த சியோனிச ஆட்சிக்கு சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காததால் தாங்கள் தோற்கடிக்கப்படவில்லை என்று சியோனிஸ்டுகள் கூறினாலும், தீர்ப்பு வழங்கப்பட்ட பின் சியோனிச அதிகாரிகளின் பிரதிபலிப்பு அவர்கள் நீதிமன்றத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டதையே சுட்டிக்காட்டுகிறது.

6.     ICJ தீர்ப்பு அதற்கான அமலாக்க இயங்குமுறை எதுவும் இல்லை என்ற போதிலும் இஸ்ரேல் மீது சர்வதேச சட்ட கடமைப்பாடுகளை சுமத்துகிறது. எனவே, 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில், கிழக்கு குத்ஸ் உட்பட, இஸ்ரேல் குடியேற்றங்களை நிறுவுவது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாது என்று கூறிய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2334 ஐ செயல்படுத்த இஸ்ரேல் மறுத்தது போன்று, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்ப்பையும் செயல்படுத்த இஸ்ரேல் மறுக்கலாம்.

7.     இன அழிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே, போரின் முடிவுக்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், முதற்கட்டத் தீர்ப்பு வெளியானதால், இது ஒரு வகையான புதுமையாகவும், திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது.

ஹேக் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தென்னாப்பிரிக்க அரசாங்கமும் "இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் விதித்த தற்காலிக நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு தீர்க்கமான வெற்றி மற்றும் பாலஸ்தீனிய மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்" என்று குறிப்பிட்டது.

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சமி அபு ஸுஹ்ரியும் காஸாவில் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை பற்றிய ஹேக் நீதிமன்றத்தின் ஆரம்ப தீர்ப்பை சியோனிச ஆட்சியை தனிமைப்படுத்துவதற்கும் காஸாவில் இந்த ஆட்சியின் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று தெரிவித்தார்.

8.     ஒரு காலத்தில் நிறவெறி ஆட்சியால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதன் மூலம் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித துயரங்களில் ஒன்றை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதால், நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதன் நடவடிக்கையும் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு பெருமையாகும்.

தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக காஸாவில் போர் நிறுத்தத்திற்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் அது மிகச் சிறந்த ICJ தீர்ப்பாக இருந்திருக்கும், எனினும், உலக ஒழுங்கில் சியோனிச லாபியும் அதன் ஆதரவாளர்களும் அமெரிக்காவுக்குள் நிறைய செல்வாக்கு செலுத்துவோராக இருக்கின்றனர் என்பதையும் நாம் மறத்தல் ஆகாது.

"இனவெறி மற்றும் இனப்படுகொலையின் கசப்பை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு நாட்டின் இந்த நடவடிக்கையானது, இஸ்லாமிய உலகில் மட்டுமின்றி, சுதந்திர மற்றும் சுதந்திரத்தை விரும்பும் உலகின் அனைத்து நாடுகளாலும் போற்றப்படுகிறது," என்று ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சர்வதேச நீதிமன்றத்தின் ஆரம்ப தீர்ப்பு பாலஸ்தீனத்திற்கு ஒரு "பெரிய வெற்றி" என்றும், சியோனிச ஆட்சிக்கு ஒரு "மூலோபாய தோல்வி" மற்றும் "நீதிக்கு" ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும் கருதலாம்.

By Seyyed Razi Emadi; West Asia expert

https://en.mehrnews.com/news/211347/8-points-about-ICJ-ruling-victory-for-Gaza-people

Monday, January 22, 2024

உலகில் ஈரானிய பாரம்பரிய மருத்துவத்தின் நிலை

 The Position of Iranian Traditional Medicine in the World

ஈரானிய பாரம்பரிய மருத்துவம் என்றால் என்ன

ஈரானிய பாரம்பரிய மருத்துவம் பத்தாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகின் மருத்துவப் பள்ளிகளில் ஒன்றாகும், மேலும் அதன் பல அடித்தளங்களை இன்றைய மருத்துவ ஆதாரங்களில் காணலாம். பொதுவாக, ஈரானிய மருத்துவம் என்பது ஒரு முழுமையான பள்ளியாகும், இது ஒருவரின் அனைத்து பகுதிகளையும் (உடல் மற்றும் ஆன்மா), வயது நிலைமைகள், புவியியல் போன்றவற்றை நோய் கண்டறிதலில் மற்றும் சிகிச்சையில் கருத்தில் கொள்கிறது. இந்த பள்ளியில், நோய்க்கு சிகிச்சையளிக்க, முதலில், நபரின் வாழ்க்கை முறை மற்றும் உணவு உட்கொள்ளும் முறை மாற்றியமைக்கப்படுகிறது, பின்னர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பண்டைய காலத்தில் ஈரானிய மருத்துவம்

பாரம்பரிய ஈரானிய மருத்துவம் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, அதை 3 காலங்களாக பிரிக்கலாம் (இஸ்லாத்திற்கு முன்):

1. அகாமனிசியர் காலம்

2. பார்த்தியர் காலம்

3. சாசானியர் காலம்

சசானி வம்சத்தின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று கோண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தை நிறுவியதாகும், அங்கு பல முக்கியமான மருத்துவ நிகழ்வுகள் நடந்தன, அவை:

  •   பிற நாடுகளிலிருந்து ஈரானிய தத்துவ மற்றும் மருத்துவ நூல்களைச் சேகரித்து ஈரானுக்குத் திருப்பி வருதல்,
  •   கிரேக்க மருத்துவத்தின் தாக்கம் இருந்தபோதிலும் அவெஸ்தான் மருத்துவத்தின் மறுமலர்ச்சி,
  •   உலகின் முதல் அறிவியல் மாநாட்டை நிறுவுதல் மற்றும் ஜிப்ரேயில் டார்ஸ்ட்பாத் (மன்னரின் சிறப்பு மருத்துவர்) மேற்பார்வையின் கீழ் அறிவியல் மற்றும் மருத்துவ விவாத அமர்வுகளை ஏற்பாடு செய்தல், மற்றும்
  •  கோண்டிஷாபூர் பல்கலைக்கழகத்தின் விவாத அமர்வுகளில் பங்கேற்கவும், கற்பிக்கவும் சிறந்த கிரேக்க, இந்திய மருத்துவர்களை அழைத்தல்.

பார்த்தியர்கள் மற்றும் சாசானியர்கள் ஆகிய இரண்டு வம்சங்கள் ஈரானிய மருத்துவத்தைப் பாதுகாப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் மதிப்புமிக்க பங்கைக் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இது செலூசிட்களின் ஆட்சியின் போது அழிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அவெஸ்தான் மற்றும் ஈரானிய மருத்துவத்திற்கு புத்துயிர் அளித்தனர், இந்த சகாப்தத்தில், ஈரானிய மருத்துவம் அதன் வலிமையை மீண்டும் பெற்றது.

பண்டைய ஈரான் அறிவின் அடிப்படையிலும், திறமையான மருத்துவர்களைக் கொண்டிருப்பதிலும் பிரபலமாக இருந்தது, மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பற்றிய பல சட்டங்கள் அவெஸ்தாவில் (ஜோராஸ்ட்ரிய புனித புத்தகம்) எழுதப்பட்டன, மேலும் ஈரானில் சுகாதாரம், மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான விரிவான வழிமுறைகளும் இருந்தன. பண்டைய காலங்களில் மருத்துவத்தின் மற்ற இரண்டு முக்கிய அம்சங்கள் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் நோய் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தின.

சமனிட்களின் காலத்தில் (இஸ்லாமுக்குப் பிறகு) மருத்துவம் மற்றும் ஸக்கரிய்யா ராஸி மற்றும் இப்னு சினா (அவிசென்னா) போன்ற அறிஞர்களின் தோற்றத்துடன், சந்தேகத்திற்கு இடமின்றி கிழக்கு மற்றும் மேற்கின் மிகப்பெரிய பண்டைய மருத்துவத்தின் அடிப்படையை உருவாக்கியது.

மருத்துவ அறிவியலுக்கு புத்துயிர் அளித்தது, இஸ்ஃபஹான், பால்க், ரே, மெர்வ் மற்றும் நெய்ஷாபூர் நகரங்களில் மருத்துவமனைகளை நிறுவியது, மருந்தகங்களை நிறுவியது மற்றும் மருத்துவர்களுக்கு அவர்களின் முன்னோடிகளின் படைப்புகளுடன் பயிற்சி அளித்தது ஆகியவை மருத்துவ அறிவியலில் சமானிட் காலத்தின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளில் அடங்கும்.

இஸ்லாமிய சகாப்தத்தில் ஈரானிய மருத்துவத்தின் மிக முக்கியமான முன்னோடிகளில், தபரி, ஸக்கரிய்யா ராஸி, அகாவினி புகாரி, மஜூசி அஹ்வாசி, இப்னு சினா (அவிசென்னா) மற்றும் செய்யத் இஸ்மாயில் கோர்கானி ஆகியோரைக் குறிப்பிடலாம், அவர்கள் தங்கள் மேதைமை, திறமை, புத்திசாலித்தனம் மற்றும் சாமர்த்தியம் ஆகியவற்றால் ஈரானிய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.

நவீன மருத்துவம் இன்று பரவலாக வளர்ந்து வளர்ந்திருந்த போதிலும், பாரம்பரிய மருத்துவம், பல நாடுகளில் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களில் இன்னும் வேரூன்றி இருக்கிறது, பல நாடுகளில் அதன் இடத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஈரானிய மக்களும் பாரம்பரியமாக மருத்துவ தாவரங்கள் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளனர், மேலும் இது இந்த நாட்டில் ஈரானிய மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக மாறியுள்ளது.

நவீன மருத்துவ சிகிச்சைகள் (குறிப்பாக நாட்பட்ட நோய்கள் மற்றும் இரசாயன மருந்துகளின் பக்க விளைவுகள்) மற்றும் ஈரானிய மருத்துவ அறிவை கல்வி மற்றும் சர்வதேச சமூகங்களில் நுழைவதில் அதிருப்தியின் காரணமாக, ஈரானிய பாரம்பரிய மருத்துவத்தின் மீதான ஆர்வம் ஏராளமான மக்களிடையே அதிகரித்து வருகிறது.

நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், கணிசமான சதவீத மக்கள் பாரம்பரிய மருத்துவம் மற்றும் நிரப்பு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். எனவே, கடந்த மூன்று தசாப்தங்களில், உலக சுகாதார நிறுவனம் பாரம்பரிய மருத்துவத்தை (ஒவ்வொரு நாட்டிற்கும்) விரிவுபடுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை எடுத்துள்ளது.

ஈரானிய மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகின் பரந்த பகுதியில் (மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள்) பயன்படுத்தப்படுகிறது, மேலும் இந்த பகுதிகளில் உள்ள பலர் இன்றும் கூட பயனடைகிறார்கள்.

இந்த நாட்களில், இந்த பாரம்பரிய மருத்துவம் முற்றிலும் கல்வியாக மாறிவிட்டது, தற்போது, நாட்டில் உள்ள 17 மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்கள் ஈரானிய மருத்துவ பீடத்தைக் கொண்டுள்ளன. MBBS முடித்த பிறகு, மருத்துவர்கள் ஈரானிய பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்தியல் துறைகளில் 5 ஆண்டு சிறப்பு படிப்பை முடிக்க அனுமதி பெறலாம்..

தற்போது, ஈரான் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிரப்பு மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறையில் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும், மேலும் இவற்றில் ஒரு நல்ல நிலை மற்றும் பழைய மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், சர்வதேச அரங்கில் ஈரானிய மருத்துவத்தின் அறிவியல் அதிகாரத்தை அங்கீகரிக்கும் திசையில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அறிவியலின் பல்வேறு துறைகளில் உலக நாடுகளை வரிசைப்படுத்தும் ஒரு சர்வதேச தளமான சிமாகோ (Scimago), நிரப்பு மற்றும் மாற்று மருத்துவம் தொடர்பாக சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஈரானை உலகில் நான்காவது இடத்தில் வைத்துள்ளது. பாரம்பரிய ஈரானிய மருத்துவம் கல்வித் துறையில் நுழைவதற்கு முன்பு, இந்த நிலை 13 வது இடத்தில் இருந்தது.

மேலும், சீனா, இங்கிலாந்து, போர்ச்சுகல், பல்கேரியா, ஜெர்மனி, போலந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பின் விளைவாக உருவான எத்னோ பார்மகாலஜி (Ethno Pharmacology) இதழின் பகுப்பாய்வு அறிக்கையின்படி, அறிவு உற்பத்தி நிலை மற்றும் உள்நாட்டு மருந்தியல், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவ தாவரங்கள் துறையில் கட்டுரைகளை வெளியிடுதல், 2011 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்ட 2439 கட்டுரைகளை (6.3% கட்டுரைகள்) பங்களிப்புச் செய்ததன் மூலம் ஈரான் அறிவியல் (Scientology) துறையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது,.

கல்விச் சமூகத்தில் ஈரானிய பாரம்பரிய மருத்துவத்தின் இருப்பு, குறுகிய காலத்தில் (2 தசாப்தங்களுக்கும் குறைவாக), நாட்டின் இந்த உள்நாட்டு மற்றும் பண்டைய அறிவுக்கு இத்தகைய மதிப்புமிக்க சாதனைகளை அடைய முடிந்தது என்பது மதிப்புமிக்க சர்வதேச (ISI) பத்திரிகைகளில் முக்கியமான அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவது மற்றும் இந்தத் துறையில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பது ஈரானுக்கு பெருமையளிக்கும் விடயமாகும்.

இறுதி குறிப்புகள்

ஆகையால், ஈரானிய பாரம்பரிய மருத்துவம் எப்போதும் உலகில் நிரப்பு மருத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறலாம், இன்றும், கல்வித் துறைகளில் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க அறிவியல் சாதனைகள் காரணமாக, அதற்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

By: The Research Team of Dr. Alireza Yargholi’s Website      

http://echoofislam.itfjournals.com/article_4461.html