Wednesday, November 29, 2023

போர்க்குற்றம் பற்றி சர்வதேச உடன்படிக்கை என்ன சொல்கிறது, இஸ்ரேலின் போர் குற்றங்களுக்கு யார் பொறுப்பு?

 What is a war crime and is Israel guilty of it?

பாலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட 48 நாட்கள் கொடிய வன்முறையின் ஒரு சிறிய பார்வை

-    தாஹா முஸம்மில்

காஸாவில் 4 நாள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது இப்போது 6 நாட்கள் என நீடித்த போதிலும், அமையான சூழல் அங்கு தொடர்ந்து நிலவவேண்டும் என்பதுவே சமானப் பிரியர்களின் அவா. எனினும் முற்றுகையிடப்பட்ட காஸா பிரதேசத்தின் 2.3 மில்லியன் மக்கள் மீது இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் அவ்வளவு சீக்கிரமாக ஆறிவிடப்போவதில்லை, சர்வதேச சட்டங்களை மீறி அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களுக்கு சியோனிச ஆட்சியாளர்கள் பதில்சொல்லியே ஆக வேண்டும்.

இந்த யுத்த ஓய்வானது காயமடைந்த தங்கள் அன்புக்குரியவர்களின் சிகிச்சையில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறோம், இந்த பிராந்தியத்திற்கு மிகவும் தேவையான மருத்துவ பொருட்கள் குறைந்த அளவிலேனும் வந்துள்ளன. இதற்கிடையில், இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் அனைத்தையும் இழந்தவர்கள், மேலும் வன்முறையின் சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகுகையில் புதிய புகலிடங்களைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவர்.

போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், இஸ்ரேலிய போர் அமைச்சர் யோவ் கேலன்ட் (Yoav Gallant), கத்தார் மத்தியஸ்தத்தில் நடைமுறைக்கு வந்த ஹமாஸ் உடனான "குறுகிய" போர்நிறுத்தம் முடிந்ததும், அடுத்த இரண்டு மாதங்களில் இஸ்ரேல் அதன் தாக்குதல்களை "தீவிரத்துடன்" மீண்டும் தொடங்கும் என்று கூறியிருந்ததை மறத்தல் ஆகாது.

சமீபத்திய வாரங்களில் இஸ்ரேலிய இராணுவத்தின் மருத்துமனைகளைக் கூட விட்டுவைக்காத கொடூர நடத்தையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், வரவிருக்கும் மோதலின் போது சியோனிச ஆட்சியின் சாத்தியமான செயல்திட்டத்தை ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். இஸ்ரேல் தனது தாக்குதலைக் குவித்து, பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்கப் போவதில்லை என்பது நிச்சயம். பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுவதைப் காப்பாற்றி சியோனிச அரசு கவலைப்படப் போவதுமில்லை. எந்த அநியாயத்தையும் செய்துவிட்டு அதை "தவிர்க்கமுடியாத இணை சேதம்" என்று தொடர்ந்து நியாயப்படுத்தும்.

இஸ்ரேல் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. இந்த ஆட்சி பாலஸ்தீன நிலங்களை கையகப்படுத்தத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், காஸாவின் நிலப்பரப்புகளில் சமீபத்திய பொதுமக்கள் பேரழிவு மற்றும் மோதலை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் காணும் விதம் குழப்பமாக இருக்கும் நிலையில், காஸாவில் இருந்து வரும் இனப்படுகொலை பற்றிய விவாதங்களால் சமூக ஊடகங்கள் மற்றும் கல்வித்துறை வட்டாரங்கள் கலக்கமடைந்துள்ளன.

இந்த கட்டுரையில், அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் போர் சட்ட மீறல்கள் சிலவற்றை பார்ப்போம் மற்றும் முற்றுகையிடப்பட்ட பிராந்தியத்திற்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகள் இனப்படுகொலை என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்வோம்.

சர்வதேச மனிதாபிமான சட்டம்

மோதல்களின் போது மனிதகுலத்தை பாதுகாக்கும் கருவியாகக் கருதப்படும் சர்வதேச மனிதாபிமான சட்டம் (IHL) ஆகும். அது ஜெனீவா உடன்படிக்கைகளுக்குள் உட்பொதிக்கப்பட்டுள்ளது. 1864 மற்றும் 1949 க்கு இடையில் தொடர்ச்சியான உடன்படிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முக்கிய உடன்படிக்கைகள் ஆயுத மோதல்களை நடத்துவதை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் அதன் பாதக விளைவுகளைத் தணிக்க முயற்சிக்கின்றன. காலப்போக்கில், இந்த ஒப்பந்தங்களை மேலும் வலுப்படுத்த கூடுதல் நெறிமுறைகள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ஷரத்துகளில் ஏதேனும் ஒன்றை மீறும் எவரும் போர்க்குற்றம் செய்ததாகக் கருதப்படுகிறார்கள்.

195 நாடுகள் இந்த ICH.க்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.

பிடிபட்ட ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் நடத்தும் விதம்

ஹமாஸின் அக்டோபர் 7 நடவடிக்கைக்கு ஒரு நாள் கழித்து சில சியோனிஸ்டுகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு படத்தில், பத்துக்கு மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் நிர்வாணமாக தரையில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கிடந்தனர். அவர்களின் உடலில் தாக்கப்பட்ட மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன, மேலும் அவர்கள் அனைவரும் கருப்பு நிறத்தில் எண்களால் முதுகில் முத்திரை குத்தப்பட்டிருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியர்கள், சியோனிச ஆட்சியின் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்று அறியப்பட்ட சில குடியிருப்பாளர்கள், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் செயல்பாட்டாளர்களை சித்திரவதை செய்ததாக பெருமையுடன் கூறினர்.

பிடிபட்ட ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் கொடூரமாக நடத்தும் செயலானது எதிரிகளின் கைகளில் சிக்கியுள்ள ஆயுதப் படை உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மூன்றாவது ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த உடன்படிக்கையின்படி, போர்க்கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், கொலை, சித்திரவதை அல்லது பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், மேலும் உணவு, தண்ணீர், உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ கவனிப்பு உள்ளிட்ட முறையான கவனிப்புக்கு உரிமையுடையவர்களாக இருக்க வேண்டும். குரூரமான, இழிவான அல்லது அவமானப்படுத்தும் நடத்தையைப் பயன்படுத்துவது திட்டவட்டமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களை நேரடியாக இலக்கு வைத்தல்

இரண்டாம் உலகப் போரை அடுத்து உருவாக்கப்பட்ட நான்காவது ஜெனீவா உடன்படிக்கை, முதன்மையாக ஆயுத மோதல்களின் போது பொதுமக்களைப் பாதுகாக்க முற்படுகிறது. இது போராளிகளுக்கும் போராளிகள் அல்லாதவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக வரையறுக்கிறது, பொதுமக்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதை வலியுறுத்துகிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள முக்கியமான விதிகள் கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை போன்ற செயல்களைத் தடுக்கின்றன, பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான குறிப்பிட்ட பாதுகாப்புகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஆக்கிரமிப்போர் இவர்களுக்கான உணவு, மருத்துவப் பொருட்களை உறுதி செய்வதும், பொதுமக்கள் மீது கூட்டுத் தண்டனை விதிப்பதைத் தவிர்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களில் இஸ்ரேலிய இராணுவம் இந்த உடன்படிக்கையின் முக்கிய கோட்பாடுகளை மீறியதற்கான எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,800 ஐ தாண்டியுள்ளது, இறந்தவர்களில் 70% க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 60% க்கும் அதிகமான பாலஸ்தீனிய குடியிருப்பு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேல் கடுமையான தடையை விதித்துள்ளது, இது தனிநபர்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர், எரிபொருள், மருந்து மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பறித்துள்ளது.

ஐ.எச்.எல் குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஊழியர்களைப் பாதுகாக்கிறது, மருத்துவ வசதிகளை வேண்டுமென்றே குறிவைப்பதைத் தடுக்கிறது. இருப்பினும், அக்டோபர் 17 அன்று காஸா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சமீபத்திய வரலாற்றில் மிகவும் சோகமான சில நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. விடுதலைப் போராளிகளின் ஒரு எதிர்ப்பு ராக்கெட் தாக்கியதாகக் கூறிய போதிலும், பல புலனாய்வு அறிக்கைகள் மற்றும் பாலஸ்தீன மருத்துவமனைகள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்கள் இந்த பேரழிவுகரமான செயலுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என்பதை குறிக்கின்றன.

காஸாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீது சியோனிச அரசாங்கம் நடத்திய சோதனைகள், முக்கிய பயன்பாடுகளின் தடுப்பு மற்றும் மருத்துவ ஊழியர்களை தடுத்துவைத்தல் உட்பட, ஜெனீவா உடன்படிக்கைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு முரணாக உள்ளன. ஹமாஸ் சுரங்கங்கள் இருப்பதை இஸ்ரேல் தனது நடவடிக்கைகளுக்கான நியாயப்படுத்தலாக வலியுறுத்திய போதிலும், அவ்வாறான சுரங்கங்கள் அங்கு இருப்பதற்கான கூற்றுக்களை ஆதரிக்க ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்களை வழங்க அது தவறிவிட்டது.

மேலும், ஜெனீவா உடன்படிக்கையை நேரடியாக மீறும் வகையில், சமீபத்திய வாரங்களில் ஐ.நா.வால் பாதுகாக்கப்பட்ட பாடசாலைகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகி இடிக்கப்பட்டுள்ளன.

நான்காவது ஜெனீவா உடன்படிக்கையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து அங்கிருக்கும் மக்களை நாடு கடத்துவதைத் தடைசெய்கிறது. இது இஸ்ரேல் மீறியுள்ள மற்றொரு பிரிவு. பாலஸ்தீனியர்களை காஸாவின் வடக்குப் பகுதிகளை விட்டு தெற்கிற்குச் செல்லுமாறு துண்டுப் பிரசுரங்களை வீசி இஸ்ரேல் வெளியேற்ற உத்தரவுகளை வழங்கி வருகிறது. மக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்வதால் நாடுகடத்தல் சட்டபூர்வமானது என்று அது சர்வதேசத்துக்கு கூற விரும்புகிறது. ஆனால் தெற்கு காஸா பகுதியில் தாக்குதல்களை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, அந்த பகுதியில் எந்த பாதுகாப்பு வலயங்களையும் விட்டு வைக்கவில்லை.

இந்த மோசமான நடவடிக்கைகளின் பின்னணியில், சியோனிச ஆட்சி இனப்படுகொலையை நிகழ்த்துகிறது என்று குற்றம் சாட்ட சட்ட வல்லுநர்கள் முன்வந்துள்ளனர். 1948 ஆம் ஆண்டின் ஐ.நா இனப்படுகொலை உடன்படிக்கையை மேற்கோள் காட்டி, இந்த வல்லுநர்கள் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் வரையறைகளுடன் ஒத்துப்போகின்றன என்று வாதிடுகின்றனர், ஏனெனில் இது பாலஸ்தீனியர்களை ஒரு தேசிய, இன மற்றும் மத குழுவாக வேண்டுமென்றே குறிவைத்து அகற்றுவதை உள்ளடக்குகிறது.

இஸ்ரேலின் இந்த குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்பு?

போர்க்குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட அமைப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயல்படுகிறது. ரோம் சாசனத்தைப் பயன்படுத்தி, இது சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை வரையறுத்து தண்டிக்கிறது.

உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்திய போர்க்குற்றத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பொறுப்பு என்று அவர் மீது ஐ.சி.சி சமீபத்தில் குற்றம் சாட்டியதை கருத்தில் கொண்டு, பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவையால் திட்டமிடப்பட்ட மிகவும் கொடிய தாக்குதல்கள் மற்றும் பரவலான இடப்பெயர்வுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதியாகவும் பாரபட்சமின்றியும் தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இஸ்ரேலிய பிரதமரை தடுத்து வைப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும், அத்தகைய நடவடிக்கை நீண்ட காலமாக மனித உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறி வரும் அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான வழியாக அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.


Thursday, November 23, 2023

போர் நிறுத்தம் தோல்வியுற்றால், பிராந்திய போர் ஏற்படக்கூடும் - அமீர்-அப்துல்லாஹியன்

If ceasefire fails, regional war likely - Amir-Abdollahian

யுத்தம், போர்நிறுத்தம் மற்றும் மாறிவரும் பிராந்திய நிலைமை தொடர்பாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் அல்-மயாதீன் செய்தி தளத்திற்கு 2023-11-22 வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ,


பலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்த தன்னால் முடிந்ததைச் சிறந்தமுறையில் செய்ய வேண்டும். இல்லையென்றால், போர்நிறுத்ததின் தோல்வி ஒரு முழுமையான பிராந்தியப் போருக்கு வழிவகுக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காஸா மீதான போர் நீடித்தால், அது புதிய முனைகளுக்கு விரிவடைவதற்கு வழிவகுக்கும் என்பதை விடுதலை போராட்டக்குழுக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதுன; லெபனானியர்கள், சிரியர்கள், ஈராக்கியர்கள் மற்றும் யெமனியர்கள் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை என்று ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் புதன்கிழமை அல் மயாதீனிடம் தெரிவித்தார்.

சமீபத்திய பிராந்திய நிலைமைத் தொடர்பான ஆலோசனைகளுக்காக தற்போது தற்போது லெபனான் வந்து  இருப்பதாக அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்தார். லெபனான் அதிகாரிகளுடன் போர் நிறுத்தம், போர், பாலஸ்தீனத்தின் எதிர்காலம், மாறிவரும் பிராந்திய நிலைமை, போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் நடத்தை மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குறித்து விவாதித்ததாக அவர் கூறினார்.

"சியோனிஸ்டுகளின் அத்துமீறல்களை விடையிறுக்கும் ஆபரேஷன் அல்-அக்ஸா வெள்ளத்தின் 6 வாரங்களுக்குப் பிறகு இப்பகுதி சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறது," என்று குறிப்பிட்ட அவர் இஸ்ரேலை அணு நிராயுதபாணியாக்க வேண்டும் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.

போர்நிறுத்தம் தொடர்பாக குறிப்பிடுகையில், அது தொடரவில்லை என்றால், பிராந்தியத்தின் சூழ்நிலைகள் மாறும், மேலும் போர் விரிவடையும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "அது விரிவடைவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் சகல தெரிவுகளும் மேசையில் உள்ளன," என்றார்.

போரை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு தெஹ்ரான் சர்வதேச தரப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், போரின் முடிவு விடுதலை போராட்ட அணிகளுக்கு சாதகமாக அமையும் றன்று அவர்களிடம் குறிப்பிட்டதாகவும் அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்.

கடினமான மற்றும் சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கட்டார் மற்றும் எகிப்திய மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்டுள்ள 4 நாள் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்த சமீபத்திய அறிவிப்பை பல சர்வதேச அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் சிறார்களை (19 வயதிற்குட்பட்டவர்கள்) விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் சிறைபிடிக்கப்பட்ட 50 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறார்களை (19 வயதிற்குட்பட்டவர்கள்) விடுவிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்குகிறது.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா துணை பொதுச் செயலாளரும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளருமான மார்ட்டின் கிரிஃபித்ஸ், இடம்பெயர்ந்த காஸா மக்கள் வடக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை "நம்பிக்கையுடன்" அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ஐ.நா கொண்டுள்ளது என்றும், "வசதிகளை சரிசெய்ய நாங்கள் வடக்கிற்கும் செல்ல முடியும்" என்றும் தெரிவித்தார்.

குண்டுவீச்சுகளை தெற்கே நகர்த்துவதற்கான இஸ்ரேலின் விருப்பத்தை க்ரிஃபித்ஸ் வெளிப்படுத்தினர், அது முன்னர் காஸா மக்களை அங்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. அவர் வடக்கை "பாழடைந்த பகுதியாக்கினர். இது மீண்டும் தெற்கில் நிகழும் என்று நாங்கள் மிகவும் பயப்படுகிறோம்," என்றும் க்ரிஃபித்ஸ் தெரிவித்தார்,

"தெற்கில் ஒரு பெரிய மனிதாபிமான நடவடிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும், மேலும் எங்கள் கிடைத்து வரும் யுத்தநிறுத்தின் ஒவ்வொரு கணத்தையும் நாம் பயன்படுத்த வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்திய எதிர்ப்பு குழுக்களுக்கு ஈரான் ஆதரவு

இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் காஸாவில் ஹமாஸை ஒருபோதும் ஒழிக்க முடியாது, அது பாலஸ்தீனத்திலேயே இருக்கும். ஹமாஸ் ஒரு சட்டபூர்வமான புரட்சிகர இயக்கம், அது மிகவும் யதார்த்தபூர்வமானது என்பதால் தொடர்ந்து வாழும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

போர்நிறுத்தம் எவ்வாறு எதிர்ப்பு குழுக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்த நுண்ணறிவை வழங்கிய போதிலும், அமீர்-அப்துல்லாஹியன், இந்த விஷயத்தில் கட்டாருடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

"போராட்டக் குழுக்கள் எங்கள் சார்பாக செயல்படவில்லை, அவை தங்கள் நாடுகள் மற்றும் அரபு தேசத்தின் நலன்களுக்காக செயல்படுகின்றன," என்று அவர் கூறினார்.

"ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக சுயாதீனமாக செயல்படும் பிரிவுகள் உள்ளன, ஈரானின் உத்தரவுகளையும் நிர்வாகத்தையும் அவை பின்பற்றவில்லை" என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஈராக் தனது சுதந்திரத்தை பாதுகாக்கவும், தனது சகோதரர்களை பாதுகாக்கவுமே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்குகிறது,” என்று அமீர் அப்துல்லாஹியன் வலியுறுத்தினார்.

https://english.almayadeen.net/news/politics/exclusive--if-ceasefire-fails--regional-war-likely---amir-ab 

Monday, November 20, 2023

இஸ்லாமிய ஈரானிடம் பினாமி குழுக்கள் இல்லை - நாசர் கனானி

Kan'ani: Unlike US, Iran has no proxy forces in region

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி ஈரானிடம், அதன் நட்பு நாடுகளுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவைப் போல், மேற்காசிய பிராந்தியத்தில் எந்த பினாமி படைகளும் இல்லை என்று கூறினார்.

திங்களன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாசர் கனானி, குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்த ஈரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் கூற்றுக்களை நிராகரித்தார். "பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள் ஈரானின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை, ஆனால் அவை தங்கள் நாடுகளையும் அரசாங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன" என்று கூறினார்.

"ஈராக், சிரியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்கள் தங்கள் நாடுகளின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றன" என்றும், அமெரிக்காவைப் போலல்லாமல், அதன் கூட்டாளிகளுக்கு கட்டளையிடும் அதன் கட்டளை அல்லது முகமையின் கீழ் செயல்படும் படைகளைக் கொண்டிருக்கவில்லை.

பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்பு சக்திகள் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகள் என்றும், அவர்கள் தங்கள் நாடு மற்றும் தேசத்தின் நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்கள் மற்றும் தன்னாட்சியுடன் செயல்படுகிறார்கள் என்றும் நாங்கள் பல முறை கூறியுள்ளோம்," என்று கனானி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை சியோனிச ஆட்சி தான் சிக்கியுள்ள "மோசமான நிலைமையில் இருந்து தப்பிக்க" பயன்படுத்தும் ஒருவகையான "குற்றச்சாட்டு" என்றும் குறிப்பிட்டார்.

"காஸாவில் உள்ள பாலஸ்தீன எதிர்ப்புக் குழுவிடமிருந்து (பெற்றுவரும் அடியின் காரணமாக) பல பரிமாணத் தோல்வியை கண்ட இந்த ஆட்சியினால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே, ஈரான் இஸ்லாமிய குடியரசு உட்பட, இது குறித்தும் பல்வேறு வழிகளில் குற்றம் சாட்ட முயற்சிக்கிறது" என்று விளக்கினார்.

சியோனிச ஆட்சியின் "குற்றவியல் நடவடிக்கைகளுக்கு" அமெரிக்க இராஜதந்திரிகளின் ஒட்டுமொத்த ஆதரவின் விளைவாகவே இந்த பிராந்தியத்தில் மோதல்கள் தொடர்வதாக குறிப்பிட்ட அவர் "மேற்கத்திய நாடுகளின் மற்றும் குறிப்பாக அமெரிக்காவின் (இஸ்ரேலுக்கு) ஆதரவு காரணமாக, காஸாவின் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான தரை, கடல் மற்றும் வான்வழி தாக்குதல்களை நாங்கள் காண்கிறோம்" என்று கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள் பிராந்தியத்தில் உள்ள எதிர்ப்புக் குழுக்களின் எதிர்வினையைத் தூண்டிவிட்டன, அவர்கள் "இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், எதிர்ப்புக் குழுக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என்று அமெரிக்காவையும் சியோனிச ஆட்சியையும் பலமுறை எச்சரித்திருந்தனர்.

இஸ்ரேலிய ஆட்சியுடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இஸ்லாமிய நாடுகள் துண்டிக்கும் விவகாரம் குறித்து அவர் பேசுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக இஸ்லாமிய குடியரசு அடிக்கடி குரல் எழுப்பி வருகிறது, இஸ்லாமிய நாடுகள் தங்கள் அனைத்து திறன்களையும் பயன்படுத்த வேண்டும் என்று பாலஸ்தீன தேசம் நியாயமாக எதிர்பார்க்கிறது என்றார். இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன, எனினும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

காஸாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகளினால் பல நடவடிக்கைகளை எடுக்க முடியும், எனினும், துரதிர்ஷ்டவசமாக, பாலஸ்தீனியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான நடைமுறை நடவடிக்கைகளை அவர்கள் இன்னும் எடுக்கவில்லை என்றும் கானானி கூறினார்.

https://en.mehrnews.com/news/208585/Unlike-US-Iran-has-no-proxy-forces-in-region-FM-Spox

Friday, November 17, 2023

பாலஸ்தீனர்களின் எதிர்ப்பு உரிமையை கொச்சைப்படுத்த வேண்டாம் - அமீன் இஸ்ஸதீன்

 Don’t demonise Palestinians’ right to resist



நவம்பர் 15, 2023 அன்று தெற்கு காசா பகுதியில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சைத் தொடர்ந்து தனது குழந்தையை கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் விரையம் ஒரு பாலஸ்தீன பெண். AFP.

'போரில் முதலாவது பலியாவது உண்மைதான் என்பது ஒரு வழக்கமாக சொல்லப்படும் ஒன்றாக இருப்பினும், இது எல்லா காலங்களிலும் அனைத்து போரின்போதும் பொன்மொழியாக உள்ளது. இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை காஸா போரில் இது தெளிவாகத் தெரிகிறது, இப்போது இது ஒரு மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது, மருத்துவமனைகள் இலக்காக மாறியுள்ளன.

ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் போரொன்றின்போது மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளை கட்டளை மையங்களாகவும் ஆயுதக் களஞ்சியங்களாகவும் பயன்படுத்தி கீழே ஒரு சுரங்க வலையமைப்பை பராமரித்து வருவதாகக் கூறி, மருத்துவமனை தாக்குதல்களை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. இஸ்ரேலின் கூற்றை மருத்துவர்களும் உதவி ஊழியர்களும் மறுக்கின்றனர். காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவ ஊடகங்கள் காட்சிப்படுத்தின.

பதிவு செய்யப்பட்ட வரலாற்றை போர் முந்துகிறது. போர் என்பது ஓர் அவசியமான தீமையாகும். ஐக்கிய நாடுகள் சாசனம் கூட பலத்தைப் பயன்படுத்துவதை அங்கீகரித்து, நீதியை நிலைநாட்டவும், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தவும், ஆக்கிரமிப்பை நிறுத்தவும் ஒரு நியாயமான நோக்கத்திற்காக வன்முறையை அனுமதிக்கிறது.

இராணுவம் இல்லாத, கடற்படை இல்லாத, விமானப்படை இல்லாத பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரில், ஐ.நா சாசனத்தின் ஏழாம் அத்தியாயம் பேசும் பலத்தைப் பயன்படுத்த யாருக்கு உரிமை உள்ளது? அக்டோபர் 7 கண்ணோட்டத்தில் மட்டும் இந்தப் பிரச்சினையைப் பார்த்தால், பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்று சொல்லலாம். ஆனால், அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் எதுவும் நடக்காமல் நடைபெறவில்லை. அந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான ஒடுக்குமுறை, நில அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறியின் கீழ் வாழும் அவமானம் ஆகியவை உள்ளன. இந்தப் பின்னணியில், வன்முறையைப் பயன்படுத்த எந்தத் தரப்புக்கு தார்மீக உரிமை உள்ளது? நிச்சயமாக, சர்வதேச சட்டத்தின்படி, பாலஸ்தீனியர்கள்தான் டன் கணக்கில் இஸ்ரேலிய குண்டுகளால் இரவும் பகலும் தாக்கப்படுகிறார்கள், இதன் ஒட்டுமொத்த சக்தி ஒரு அணுகுண்டின் கால் பகுதியை விட அதிகமாக உள்ளது.

அது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றால், மற்ற நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், 1948-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அது செய்து வருவது சர்வதேசச் சட்டம் தடை செய்த, ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ள நடவடிக்கைகளைத்தான். பாலஸ்தீனிய சிவிலியன்கள் படுகொலைகள் மற்றும் இனச்சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேலின் பிறப்பு இரத்தக்களரியாகவே இருந்தது— சர்வதேச சட்டம் அவற்றை போர்க்குற்றங்கள் என்று கண்டனம் செய்கிறது. 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலினால் அரபு-அழிப்பை விரும்பிய அது (அரபு) கிராமங்களில் இருந்து கால் மில்லியன் பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போதிருந்தே, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் வழக்கமான தாக்குதல்களுக்கு இலக்காகிவிட்டனர். அப்போதிருந்தே, பாலஸ்தீனியர்களிடம் எஞ்சியிருந்த நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டன. இஸ்ரேல் யூதர்களுக்கு குடியேற்றங்களை அமைத்தது. பாலஸ்தீனியர்கள் இந்த சட்டவிரோத குடியேற்றங்களை எதிர்த்தபோது, அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன, மேலும் அவர்களின் எதிர்ப்பு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டது. காஸா, மேற்குக் கரை, லெபனான் மற்றும் தொலைதூர துனிசியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் அவர்கள் வேட்டையாடப்பட்டனர். எதேச்சதிகாரமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். அவர்களில் பலர் விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றனர். எனினும், மத்திய கிழக்கில் உள்ள ஒரே உண்மையான ஜனநாயகம் இஸ்ரேல் என்று மேற்கத்திய நாடுகள் பாராட்டுகின்றன. ஜனநாயகத்திற்கு என்ன ஒரு அவமதிப்பு! ஜனநாயக நாடுகள் சட்டத்தை மதித்து நடப்பவை. அவர்கள் மனித உரிமைகளை மதிப்பவர்கள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்கி நடப்பவர்கள். ஆனால் (உலகில்) எந்த ஒரு நாடும் சர்வதேச சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை இஸ்ரேல் போன்ற தண்டனையின்றி மீறியதில்லை.

ஆரம்பத்தில் அரபு நாடுகளும் அணிசேரா இயக்கமும் பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்திற்கு இடைவிடாத ஆதரவை அளித்தன. ஆனால் இன்று, சில அரபு நாடுகள் இஸ்ரேலுடனான 'ஆபிரகாமிய உடன்படிக்கை'கள் என்று அழைக்கப்படும் ஒன்றின் மூலம் கட்டுண்டுண்டுக் கிடக்கின்றன. மற்றவர்கள் தலையிட சக்தியற்றவர்கள், உதட்டுச் சேவை செய்தால் (அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தால் போதும்) போதும் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றன. ஐ.நா. தீர்மானம் 181-ல் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளுவதற்கு அரபு நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது போர் தொடுக்க முடிவு செய்தாலும், இஸ்ரேலின் மேம்பட்ட ஆயுத பலம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை இராணுவ ரீதியாக பாதுகாக்க தயாராக இருப்பதால், அவை வெற்றி பெற வாய்ப்பில்லை. வரைபடத்தில், இஸ்ரேல் பெரிய அரபு நாடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய பிரதேசம் போல தோற்றமளித்தாலும், உண்மையில், இஸ்ரேல் அனைத்து அரபு நாடுகளையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு உட்பட எதிர்ப்பு என்பது சர்வதேச சட்டங்கள் மற்றும் பல ஐ.நா தீர்மானங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உரிமையாகும். 1980 களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் துருப்புக்களை எதிர்த்துப் போராடியதால் அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு ஆயுதம் வழங்கியது மற்றும் அவர்களை தற்காப்பாளர்கள் என்று அழைத்தது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எதிர்க்க ஒவ்வொரு உக்ரேனிய குடிமகனும் ஆயுதபாணியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உரக்க கூறின. பாலஸ்தீனியர்களின் மீள்குடியேற்ற உரிமைக்கு ஏன் மேலைநாடுகளில் அங்கீகாரம் கிடைக்கவில்லை?

இஸ்ரேல் சார்பு மற்றும் சியோனிச கட்டுப்பாட்டில் உள்ள மேற்கத்திய ஊடகங்கள் பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை முன்னிலைப்படுத்தாது. பாலஸ்தீன எதிர்ப்பையும் மக்களை போராட்டத்தையும் மனிதாபிமானமற்றதாகக் காட்டுவதும் பூதாகரமாக்குவதும் அவர்களின் வேலையின் ஒரு பகுதியாகும். அவர்களின் கூற்றுப்படி, ஹமாஸ் இஸ்ரேலை பூமியிலிருந்து (உலக வரைபடத்தில் இருந்து) அழிக்க உள்ளது.

ஹமாஸ் அதன் வளர்ச்சியில் அப்போதைய பிரபல பாலஸ்தீனிய விடுதலை அமைப்பை (PLO) பலவீனப்படுத்த வேண்டும் என்ற இஸ்ரேலின் நீட்டித்த நோக்கம் கொண்ட தவறான சகிப்புத்தன்மைக்கு கடன்பட்டுள்ளது. எனினும், ஹமாஸ் தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்காது உறுதியாக வைத்திருந்தது மற்றும் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்காத எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தையும் எதிர்த்து வந்தது: பாலஸ்தீன சுதந்திரம், பாலஸ்தீனிய நிலத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறுதல், இஸ்லாத்தின் மூன்றாவது மிகவும் புனிதமான மசூதி அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமின் விடுதலை மற்றும் பாலஸ்தீன அகதிகள் வெளியேற்றப்பட்ட கிராமங்களுக்குத் திரும்புவதற்கான உரிமை ஆகியன.

பாலஸ்தீன சட்டமன்றத்திற்கான 2006 தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது, ஆனால் மேற்கத்திய நாடுகள் ஹமாஸ் அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்து பாலஸ்தீனத்திற்கான உதவியை நிறுத்தின. ஏன்? மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்ற தங்கள் கூற்றுக்கு உண்மையாக இருந்தால், 2006 தேர்தலில் பாலஸ்தீன மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஹமாஸ் மற்றும் பி.எல்.ஓ.வில் ஆதிக்கம் செலுத்தும் குழுவான ஃபத்தா இடையே ஒரு ஆயுத மோதலைத் தூண்டுவதற்காக மேற்கத்திய நாடுகள் இந்த நிகழ்வுகளைக் கையாண்டன. இதன் விளைவாக ஹமாஸ் காஸாவையும், ஃபத்தா மேற்குக் கரையையும் ஆட்சி செய்தது. இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும், அரபு நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளும் தேவைப்பட்டன.

கடந்த புதனன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இறுதியாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, அது போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை, மாறாக மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவ வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக சண்டையில் இடைநிறுத்தத்தைக் கோரியதோடு. ஹமாஸ் காவலில் உள்ள சுமார் 240 பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அது கோரியது.

எவ்வாறாயினும், சர்வதேச சட்டம் மற்றும் பல ஐ.நா தீர்மானங்களுக்கு இஸ்ரேல் மதிப்பளிக்காத நிலையில், அது ஐ.நா.பாதுகாப்புச்சபை தீர்மானத்திற்கு இணங்குமா என்பது பெரிய கேள்வியாகும்.

https://www.dailymirror.lk/opinion/Dont-demonise-Palestinians-right-to-resist/172-271455

தமிழில்: தாஹா முஸம்மில்

Sunday, November 12, 2023

சியோனிஸ்ட் மற்றும் அமெரிக்க கிரிமினல் தலைவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவ வேண்டும் - இப்ராஹிம் ரயீஸி

The speech of Dr. Ebrahim Raisi president of Islamic Republic of Iran at the joint meeting of the OIC and Arab League regarding Gaza:

காஸா தொடர்பாக ஓ.ஐ.சி மற்றும் அரபு லீக்கின் கூட்டுக் கூட்டத்தில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் டாக்டர் இப்ராஹிம் ரயீஸி 2023 நவம்பர் 11 அன்று ஆற்றிய உரை

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற காஸா பிரச்சினையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அரபு லீக் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய டாக்டர் சையத் இப்ராஹிம் ரயீஸி, சமீபத்திய வாரங்களில் சியோனிச ஆட்சியின் குற்றங்கள் ஒழுக்கம், சட்டம் மற்றும் மனிதநேயத்திற்கு ஒரு வரலாற்று அவமானம் என்று குறிப்பிட்டார். அத்துடன் இந்த குற்றங்களில் அமெரிக்காவின் முக்கிய பங்கையும் எடுத்துக்கூறினார். பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களின்
பிரச்சினையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பொறுப்பை நினைவூட்டுவதுடன், 10 அவசரத் தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை முன்மொழிந்தார்:

§ பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பொறுப்பை நினைவூட்டுவது,

§  "காசா மக்கள் கொல்லப்படுவதை நிறுத்துதல்" உட்பட,

§  "காசாவின் மனித முற்றுகையை முழுமையாக நீக்குதல்",

§  "இந்த பிராந்தியத்தில் இருந்து சியோனிச ஆட்சியின் உடனடி இராணுவ விலகல்",

§  "இஸ்லாமிய நாடுகளால் சியோனிச ஆட்சியுடனான எந்தவொரு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளையும் முறித்தல்",

§  "ம்சியோனிஸ்ட் மற்றும் அமெரிக்க கிரிமினல் தலைவர்களை விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு சர்வதேச நீதிமன்றத்தை நிறுவுதல்",

§  "இஸ்லாமிய நாடுகளின் ஒப்புதலுடன் காஸாவின் உடனடி புனரமைப்புக்கான சிறப்பு நிதியத்தை நிறுவுதல்"

§  "இஸ்லாமிய நாடுகளில் இருந்து பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புதல்"

மகத்துவமிக்க குத்ஸ் மீது ஸலாம் உண்டாவதாக, காஸா மீதும் அதன் குழந்தைகள் மீதும் சாந்தி உண்டாவதாக, பாலஸ்தீனத்தின் மீதும் அதன் அநியாயமாக சிந்திய இரத்தத்தின் மீதும் அமைதி உண்டாவதாக, மனித மரியாதையின் அளவுகோலாக உள்ள பாலஸ்தீனம் மற்றும் இன்று, பாலஸ்தீனம் இஸ்லாமிய மற்றும் லெபனானின் புனித போராட்டத்தின் மீது அருள் உண்டாவதாக

சபை தலைவர் அவர்களே,

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அரபு லீக்கின் இந்த முக்கியமான கூட்டு உச்சிமாநாட்டை பிராந்தியத்தின்  தற்போதைய சூழ்நிலை= மற்றும் முக்கியமான காலகட்டத்தில் ஏற்பாடு செய்து நடத்தியதற்காக சவூதி அரசாங்கத்திற்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று, இந்த அவசர உச்சிமாநாட்டில், இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான பாலஸ்தீன பிரச்சினை, மனித வரலாற்றின் பேரழிவுகளில் ஒன்றாக மாறியிருக்கும் வீரமிக்க காஸா மக்கள் பொறுமை ஆகியவற்றைப் பற்றி விவாதிக்க, இவற்றுக்கு தீர்வாக வரலாற்று மற்றும் சங்கடமான முடிவுகளை எடுக்க நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.

இஸ்லாமிய உலகின் அனைத்து பிரச்சினைகளும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்க்கப்படக்கூடியவை. சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வும் அவனது பரிபூரண சக்தியையும் நம்புவதும், இஸ்லாமிய உலகின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை நம்புவதும் இஸ்லாமிய உம்மத்தைக் காப்பாற்றுவதற்கான வழியாகும், மேலும் எம்மைக் கட்டுப்படுத்தும் மற்றும் மேலாதிக்க சக்திகளை நம்பக்கூடாது. ஈரான் இஸ்லாமியக் குடியரசு நல்ல அண்டை நாடுகள் மற்றும் நல்லிணக்கக் கொள்கையைப் பின்பற்றி, அனைத்து இஸ்லாமிய நாடுகளுக்கும் சகோதரத்துவம் மற்றும் நட்புக்கான கதவுகளைத் திறந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் ஏனைய முஸ்லிம்கள் விடுத்த கூக்குரலுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று நாம் இங்கு கூடியுள்ளோம்,

இன்று அல்லாஹ்வும் அவனுடைய இறைத்தூதர் (ஸல்) அவர்களுமே பாலஸ்தீன தேசத்திற்கு ஆறுதலைத் தருவோராக இருக்கின்றார்கள்.

இன்று இஸ்லாத்தின் நபிகள் நாயகம் தம் உம்மத்திடம் எதிர்பார்ப்பது என்ன? இன்று, இஸ்லாமிய தேசம் அதன் தலைவர்களிடமிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கிறது?

என் ஈமானிய சகோதரர்களே!

இன்று சத்தியத்திற்கும் சத்தியத்திற்கும் இடையிலான மோதலின் நாள், இஸ்ரேல் எனும் இட்டுக்கட்டப்பட்ட நிறுவனம் நம் காலத்தின் பிர்அவ்னின் சின்னமாகவும் மற்றும் பூமியில் வாழும் அப்பாவிகளைக் கொல்லும் ஒரு சின்னமாக உள்ளது. மேலும் இந்த நாள் கூர் வாளை செங்குருதி வெற்றிகொண்ட நாள். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களின் வலுவான ஆர்ப்பாட்டங்கள் பாலஸ்தீனிய பிரச்சினை அவர்களின் இதயங்களில் இருப்பதைக் குறிக்கிறது,

கடந்த 5 வாரங்களில் காஸா முனையில் நடந்தேறிவரும் சம்பவங்கள் வெட்கக்கேடானது மற்றும் ஒழுக்கம், நியாயம் மற்றும் மனிதநேயத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வரலாற்று அவமானமுமாகும்.

அனைத்து சர்வதேச விதிகளையும் மீறி, இனப்படுகொலையை நோக்கமாகக் கொண்டு கண்மூடித்தனமான குண்டுவீச்சு மற்றும் பாஸ்பரஸ் குண்டுகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி காஸா முனை மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கி, காஸா பகுதியின் பாதியை இடிபாடுகளின் மலையாக மாற்றியது. இன்று வரை, 11,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடிபாடுகளின் கீழ் உள்ளனர், மேலும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மருத்துவ ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் கொல்லப்படுவதும், மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சும் இந்த கொடூரமான குற்றங்களின் ஒரு பகுதியாகும். மிக மோசமான விஷயம் என்னவென்றால், சியோனிச ஆட்சியின் முற்றுகை காரணமாக மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்டவர்களின் பல உயிர்கள் இழக்கப்படலாம்.

காஸா முனையில் நடந்துவரும் நிகழ்வுகள் சத்தியத்திற்கு சத்தியத்திற்கும் இடையிலான மோதலாகும், மேலும் ஒவ்வொருவரும் இதில் எந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்க அரசாங்கம் இந்த அநியாயத்தில் பங்கேற்கும் முக்கிய குற்றவாளி மற்றும் சியோனிச ஆட்சியின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இன்றளவிலும் உடந்தையாக உள்ளது.

இஸ்ரேல் அமெரிக்காவின் முறைகேடான குழந்தை. ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளின் புனித வாழ்க்கையை விட அமெரிக்கா இந்த அரக்கர்களை ஆதரிப்பதையே விரும்புகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக தனது பாதுகாப்பு அமைச்சரவையை அமைத்ததன் மூலம், காஸாவின் ஆதரவற்ற மக்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சியோனிச ஆட்சியை அமெரிக்கா ஊக்குவித்தது மேலும் அதை சட்டபூர்வமான பாதுகாப்பு என்றும் அழைத்தது.

பாலஸ்தீனியர்களின் உரிமைகளை தொடர்ந்து மீறும் ஆக்கிரமிப்புப் படைகளின் அத்துமீறல்களை 'சட்டபூர்வமான பாதுகாப்பு' என கோருவது வரலாற்றின் கசப்பான பதிவுகளில் ஒன்றாகும், இது எந்தவொரு ஸ்தாபிக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் சர்வதேச தரங்களுடனும் ஒத்துப்போகவில்லை.

அதே நேரத்தில், அமெரிக்க போர்க்கப்பல் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டதானது, இஸ்ரேல் சார்பாக நேரடியாக அது போரில் நுழைந்தது என்பதையே காட்டுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சியோனிச ஆட்சிக்கு முழு ஆதரவும், காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடுப்பதும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அமெரிக்காவின் மற்றொரு சேவையாகும், இது முன்னெப்போதையும் விட அதிகமாக போர்க்குற்றங்களை செய்ய அவர்களை அனுமதித்தது.

அமெரிக்காவின் மற்றொரு நடவடிக்கை சியோனிச ஆட்சிக்கு அனைத்து வகையான கொடிய ஆயுதங்களையும் வழங்கி ஆதரிப்பதும், இந்த ஆட்சியின் இராணுவ வரவுசெலவுத் திட்டத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் உதவியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பில் உள்ள இஸ்ரேலின் ஆயுத கிடங்குகளை நிரப்புவதும் ஆகும். சியோனிச ஆட்சியின் போர் இயந்திரமும் அதன் எரிபொருளும் அமெரிக்கர்களுக்கு சொந்தமானவை. தினசரி கனரக ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன, சியோனிச எதிரி இதுவரை ஹிரோஷிமா குற்றத்தின் அளவில் ஏழு அணுகுண்டுகளுக்கு சமமான குண்டுகளை காஸா மக்கள் மீது வீசியுள்ளனர். அமெரிக்கா இக்குற்றத்தில் பங்கெடுத்துள்ளது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது., அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சர்வதேச அமைப்புகளால் கடுமையான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட வேண்டும்.

மிகவும் அழிவுகரமான பாத்திரம் அமெரிக்காவின் பாத்திரம். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் பிற இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகில் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா பொறுப்புக்கூற வேண்டும். ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உலகை கட்டுப்படுத்தி, அனைத்து சர்வதேச அமைப்புகளையும் வளைத்துப்போடுவதன் மூலம் அமெரிக்கா இந்தப் போர்களைத் தூண்டுகிறது.

மதிப்பிற்குரிய இஸ்லாமிய அரசுகளே..!

இப்போது அமெரிக்காவின் செல்வாக்கின் கீழ் உள்ள சர்வதேச சபைகள் முடிவெடுக்கும் இயலாமை, தைரியமின்மை மற்றும் அடையாளமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாமே களம் இறங்க வேண்டும்.

பாலஸ்தீனத்தை விடுவிக்கும் எதிர்ப்பு போராட்டத்தை ஒரு விடுதலை இயக்கமாக ஈரான் இஸ்லாமியக் குடியரசு கருதுகிறது என்பதை நான் அறிவிக்க விரும்புகிறேன். மேலும் காஸா பகுதி மக்களை கட்டாயமாக இடம்பெயர்க்கும் கொள்கையானது மீறல்களின் தொடர்ச்சியும் போர்க்குற்றமுமாகும். மஸ்ஜித் அல்-அக்ஸா மற்றும் பிற புனித இடங்களைப் பாதுகாப்பது ஒரு முக்கிய தேவையாகும்.

கடந்த ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விடயம் இப்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களிடமிருந்து கேட்கிறது, மேலும் காஸா மக்களுடன் ஒருமைப்பாட்டைக் காட்டிய அனைத்து மக்களுக்கும் நான் இதன் மூலம் நன்றி கூறுகிறேன். இன்று காஸாவில் இஸ்ரேல் இழைத்துவரும் குற்றங்கள் உலக மக்கள் விழிப்புணர்வடைய ஒரு காரணம். எமது கவனம் இன்று மற்றொரு தலைப்பில் செலுத்தப்பட வேண்டும், இது இஸ்ரேலின் அணு ஆயுத பிரயோக அச்சுறுத்தல். உலகில் குழந்தைகளைக் கொல்வதை சட்டப்பூர்வமாக்கும் ஒரே இனவெறி ஆட்சியான இந்த சியோனிச ஆட்சி எந்த ஒரு சர்வதேச அமைப்பின் மேற்பார்வையிலும் இல்லை, மேலும் அணுகுண்டுகளை காட்டி அப்பாவி மக்களை அச்சுறுத்துகிறது.

பாலஸ்தீனம் மற்றும் பிராந்தியத்தைப் பாதுகாப்பதில் இஸ்லாமிய வீரர்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளனர், இது இஸ்லாமிய உம்மாவின் விழிப்புணர்வின் விளைவாகும் மற்றும் சியோனிச எதிரியின் ஆக்கிரமிப்பு, அதை ஆதரிக்கும் திமிர் பிடித்த நாடுகளின் மேலாதிக்கம் மற்றும் ஆணவத்தை எதிர்கொண்ட 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவங்களின் விளைவாகும்.

  • காஸாவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் தியாகிகள் மீது சாந்தி உண்டாவதாக.
  • காஸா அருகே திருக்குர்ஆனில் தஞ்சம் புகுந்து அதன் வசனங்களை ஓதுகின்ற குழந்தைகள் மீது ஸலாம் உண்டாவதாக.
  • அநீதி, பயம், அச்சுறுத்தல் ஆகியவற்றால் நடுங்கும் குழந்தைகள் மீது சாந்தி உண்டாவதாக.
  • காஸா முனையில் உள்ள என் அன்புக் குழந்தைகள் மீது ஸலாம் உண்டாவதாக
  • மிகவும் முன்னேறிய உலகளாவிய இராணுவங்கள் மற்றும் பூமியில் மிகவும் தீங்கிழைக்கும் மக்கள் மத்தியில் ஈமான் உறுதியின் மூலம் எதிர்ப்பிற்கு அர்த்தமளித்த உங்கள் மீது அமைதி உண்டாவதாக.
  • ஆக்கிரமிக்கும் சியோனிஸ்டுகளின் காட்டுமிராண்டித்தனத்தையும் மிருக வெறியையும் காட்டிய சிறிய கைகள் மற்றும் மெல்லிய உடல்கள் மீது சாந்தி உண்டாவதாக.
  • உனது இரத்தக் கறை படிந்த முகங்களும், சிதைந்த உடல்களும், அமெரிக்க குண்டுகளின் இடிபாடுகளுக்கு அடியில் உடைந்த எலும்புகளும், உனது உறுதியை உரக்கச் சொல்கின்றன.

எதிர்காலம் போராட்டத்திற்கு சொந்தமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, உண்மையான ஹீரோ நீங்கள் தான், உறுதியான மக்களே, நாங்கள் உங்களை கைவிட மாட்டோம். பாலஸ்தீனம் நிச்சயம் வெற்றி பெறும்.

அல்-குத்ஸ் நம்முடையது, வெற்றி நம்முடையது.

அல்லாஹ்வின் சாந்தியும், கருணையும், ஆசீர்வாதமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

---------------------------------------------------------------------

தமிழில்: தாஹா முஸம்மில்