Friday, July 31, 2020

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி

The Islamic nation’s cry for unity should fall on the heads of the US & its chained dog, the Zionist regime

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர்

இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின்

ஹஜ் செய்தி

அன்பாளனும் கருணையாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். திரு நபி மீதும் அவரது புனித குடும்பத்தினர், உத்தம ஸஹாபாக்கள் மற்றும் அவரை இறுதி நாள் வரை பின்பற்றுவோர் மீதும் இறைவன் ஸலவாத் ஓதுவானாக.

ஹஜ் பருவம் எப்போதும் இஸ்லாமிய உலகின் கண்ணியம், மகிமை மற்றும் செழிப்பு பற்றிய உணர்வுகளைச் சுமந்தே வந்தது. இந்த வருடத்தில் விசுவாசிகளின் கவலைக்கும் கைசேதத்துக்கும் உள்ளாகி ஆசிப்பவர்கள் மத்தியில் பிரிவின் ஏக்கத்தையும் மனவுளைச்சலையும் உருவாக்கியுள்ளது. புனித கஃபாவைப் பிரிந்த தனிமையில் இதயங்கள் பதைக்கின்றன. ஹஜ்ஜை அடைந்து கொள்ளாதோரின் லப்பைக் கோஷத்தில் கண்ணீரும் பெருமூச்சும் கலந்துள்ளது. இந்த இடைஞ்சல்கள் தற்hலிகமானவையே. இறைவனின் கருணையாலும் வல்மையாலும் நீண்ட காலம் நீடிக்காது. ஹஜ் எனும் அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொண்டமை நாம் இதிலிருந்து கற்ற பெரும் பாடமாகும். அது என்றும் நிலைத்திருநது நம்மை அலட்சியத்தில் இருந்து விழிப்படையச் செய்ய வேண்டும்.

பல்வேறு இடங்களைச் சேர்ந்த விசுவாசிகள் புனித கஃபாவின் பூமியிலும் நபிகளாரின் புனித நகரிலும் பகீயில் அடங்கியுள்ள இமாம்களின் புனித தளங்களைச் சுற்றியும் ஒன்று கூடுவதில் உள்ள இஸ்லாமிய உம்மத்தின் மகிமையினதும் வலிமையினதும் மர்மம் பற்றி வேறு எப்போதையும் விட நாம் உணரவும் சிந்திக்கவும் வேண்டும்.

ஹஜ் ஒப்பற்ற தனித்துவமான கடமையாகும். இஸ்லாத்தின் கடமைகளுள் பல நூறு இதழ்கள் கொண்ட அரிய மலர் போன்றது. அதனுள் முக்கியமான தனிமனித, சமூக, பூலோக, விண்ணுலக, வரலாற்று அம்சங்கள் அனைத்தும் அதில் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் ஆன்மீகம் அமைந்துள்ளது. ஆனால் துறந்து செல்லல், தனித்து வாழ்தல் என்பன அதில் கிடையாது. அதில ஒன்று கூடுதல் உள்ளது. ஆயினும் அது முரண்பாடு, குழப்பம், தீய எண்ணம் என்பவற்றுக்கு அப்பால் உள்ளது. ஒரு புறத்தில் இரைஞ்சுதல், இறை தியானம், பிரார்த்தனை என ஆன்மீக பெறுமானங்களும் மறு புறத்தில் மனிதர்கள் மத்தியிலான நல்லுறவும் பிணைப்பும் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஹாஜியும் ஒரு கண்ணோட்டத்தில் சரித்திரத்தோடுள்ள தனது நீண்ட கால உறவைக் கொண்டவராவார். நபி இப்றாஹீம், இஸ்மாயில்மனித சமுதாயத்துக்கு சமயம் வைத்திருக்கின்ற இலக்குகளும் பெறுமானங்களும் உயரிய பயனைத் தர வேண்டுமாயின் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லடியார்களின் ஒற்றுமை என்பன இன்றியமையாதன என்பதை ஹஜ்ஜின் தாத்பர்யம் பற்றி நன்கு சிந்திக்கின்ற ஹாஜி புரிந்து கொள்வார். இந்த ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் நிலை நிறுத்தப்படும் போது தமது பாதையில் தொடர்ந்து பணயிப்பதில் பகைவர்களின் திருகுதாளங்கள் தடையாக அமையாது.

அமைதியின்மை, அநியாயம், ஒடுக்கப் பட்டோரைப் படுகொலை செய்தல், சூறையாடுதல் போன்றவற்றின் மொத்த வடிவமான வல்லாதிக்கங்களுக்கு எதிரான தமது சக்தியை ஒப்புவிக்கும் ஒத்திகையே ஹஜ் ஆகும். இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் உடலும் உயிரும் வல்லாதிக்கங்களின் அநியாயங்களாலும் அடாவடித்தனங்களாலும் துவண்டு போயுள்ளன. ஹஜ்ஜின் முலம் உம்மத்தின் இலகு மற்றும் கடின ஆற்றல்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. ஹஜ்ஜின் இயல்பும் உயிரோட்டமும் அதன் அதி முக்கிய நோக்கங்களில் ஒன்றுமாகும். உயரிய தலைவர் இமாம் கொமெய்னி இதனையே இப்ராஹிமிய ஹஜ் என்றார். ஹஜ் விவகாரங்களின் பொறுப்பைச் சுமந்துள்ள ஹரமைனின் காவலர்கள்என தம்மை அழைத்துக் கொள்வோர் மனப்பர்வமாக இப்பொறுப்பை நிறைவேற்றுவார்களாயின், அமெரிக்காவை மகிழ்விப்பதற்குப் பதிலாக இறை திருப்தியை தேர்ந்தெடுப்பர்களாயின் இஸ்லாமிய உலகின் பாரிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெறுவார்கள்.

எப்போதும் போல இன்றும் இஸ்லாமிய உம்மத்தின் நலன்கள் அதன் ஒற்றுமையிலேயே அவசியம் தங்கியுள்ளது. எதிரிகளின் அச்சுறுத்தல்கள் முன்னால் கருத்தோர்மைப்பட்ட ஐக்கியம். சாத்தானின் மறுவடிவமான அடாவடித்தனம் புரியும் அமெரிக்காவினதும் அதன் ஏவல் நாயான சியோனிஸ அரசினதும் முன்னால் இடியாக ஓங்கி ஒலிக்கும் குரலான ஐக்கியம். அத்தகைய ஐக்கியமே அவற்றின் சண்டித் தனத்துக்கு முன்னால் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்தெழும் வல்லமை பெற்றது. பின்வரும் இறைவாக்குகள் அந்த ஒற்றுமையையே சுட்டி நிற்கின்றன.

அனைவரும் ஒனறிணைந்து இறைவனின் கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விட வேண்டாம்’. ‘நிராகரிப்போர் மீது கடுமையானவர்கள்ää தமக்குள் இரக்கமுள்ளவர்கள்’ எனும் சட்டகத்துக்குள் இஸ்லாமிய உம்மத்தை அறிமுகப்படுத்துகிறது புனித குர்ஆன்.

அநியாயம் செய்வோருடன் இணங்க வேண்டாம்’,விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நிராகரிப்பாளர்களுக்கு அல்ல்hஹ் இடமளிக்கவே மாட்டான்’, ‘நிராகரிப்பின் தலைமைகளுடன் போராட்டம் நடத்துங்கள்’,எனதும் உங்களதும் எதிரிகளை காவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்’ முதலிய கடமைகளை உம்மத்திடம் எதிர்பார்க்கப்படுகிறது.

பகைமையை இனங்கண்டு கொள்வதற்காக ‘மார்க்க விவகாரத்தில் உங்களுடன் சமர் புரியாத, வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதவர்களுடன் பொருதுவதை அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கிறான்’ என்ற தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான இந்த கட்டளைகள் ஒரு காலமும் முஸ்லிம்களின் சிந்தனை மற்றும் பெறுமான ஒழுங்கில் இருந்து அகன்று விடவோ மறக்கப்படவோ கூடாது.

இந்த அடிப்படை மாற்றத்திற்கான பின்புலம் தற்போதும் முன்னெப்போதையும் விட உம்மத்தினதும் நலன் விரும்பிகளினதும் ஆர்வலர்களினதும் கைக்கு எட்டு தூரத்தில் வந்துள்ளது. முஸ்லிம் இளைஞர்களும் ஆர்வலர்களும் தமது அறிவு மற்றும் ஆன்மீக வளங்களைப் பற்றிய கரிசனையோடு திகழும் இஸ்லாமிய எழுச்சியானது இன்று நிராகரிக்க முடியாத யதார்த்தமாகும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் மேற்கு நாகரிகத்தின் பொக்கிசங்களாகக் கருதப்பட்ட லிபரல்வாதமும் கம்ய10னிஸமும் இன்று பொழிவிழந்து சீரமைக்க முடியாத நிலையில் சிதைவடைந்துள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஆட்சி சரிந்து வீழ்ந்தது. மற்றையதன் மீதான ஆட்சி அமைப்பும் கூட அடிப்படையான நெருக்கடிகளில் சிக்கி அழிவின் விளிம்பில் நிற்கிறது.

அசிங்கமான ஆரம்பத்தைக் கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் முன்மாதிரி மட்டுமன்றி அதன் அரசியல் மற்றும் பொருளாதார முன்னுதாரணமும் கூட தனது பணம் சேகரிக்கும் வகுப்பு வேறுபாட்டினதும் முதலாளித்துவ வர்க்கவாதத்தினதும் சுரண்டலினதும் அடிப்படையிலான ஜனநாயகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

மேற்கு நாகரிகத்தின் அறிவியல் மற்றும் நாகரிக உரிமைகளை சவாலுக்குட்படுத்தி அவற்றுக்கு இஸ்லாமிய பிரதியீடுகளை நெஞ்சுறுதியுடனும் பெருமையுடனும் முன்மொழியும் ஆர்வமுள்ள அறிஞர்கள் இன்று இஸ்லாமிய உம்மத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள். லிபரல் சிந்தனையை வரலாற்றின் இறுதியான சிந்தனையாக அகங்காரமாக அறிமுகப்படுத்திய மேற்கின் பெரும் சிந்தனையாளர்கள் கூட தற்போது தமது நிலைப்படுகளைக் கைவிட்டு சித்தாந்த மற்றும் நடைமுறை ரீதியான தமது குழப்ப நிலையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அமரிக்காவின் நடைபாதைகளைக் கவனியுங்கள். அந்நாட்டு ஆட்சியாளர்கள் தமது மக்களுடன் நடந்து கொள்ளும் முறை, அந்த நாட்டில் வர்க்க வேறுபாட்டில் காணப்படும் பாரிய இடைவெளி, அந்த நாட்டின் நிர்வாகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் வெகுளித்தனமும் கோமாளித்தனமும் அங்குள்ள ஆழமான இன முரண்பாடு, குற்றமற்ற அப்பாவியை நடுவீதியில் மக்களின் கண்முன்னால் மிகச் சாதாரணமாக வதை செய்து கொலை செய்யும் கல்மனம் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் என எல்லாமே மேற்கு நாகரிகத்தின் சமூகää ஒழுக்க ரீதியான சிக்கலான நெருக்கடிகளைப் பறைசாற்றுகின்றன. அது மட்டுமன்றி அதன் அரசியல் மற்றும் பொருளதார தத்துவத்தின் சிதைவையும் தோல்வியையும் உணர்த்துகின்றன.

பலவீனமான தேசங்களுடன் அமெரிக்கா நடந்து கொள்ளும் முறை, கறுப்பின அப்பாவியின் கழுத்தில் முழங்காலை அழுத்தி உயிர் பிரியும் வரை இறுக்கிப் பிடித்த காவல் அதிகாரியின் நடத்தையின் பெரிது படுத்திய பிரதியாகும். மேற்கின் ஏனைய அரசுகளும் தமது ஆற்றலுக்கும் வசதிக்கும் ஏற்ப இது போன்ற படுமோசமான நிலைமைக்கு சிறந்த முன்னுதாரணங்கள் ஆவர்.

இந்த நவீன ஜாஹிலியத்துக்கு எதிரான செழுமை மிக்க தோற்றப்பாடே ஹஜ் ஆகும். அது இஸ்லாம் நோக்கிய அழைப்பாகும். அது இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது. அந்த சமுதாயம் ஏகத்துவத்தை மையமாக் கொண்டு இடைவிடாது நகர்ந்தேறிச் செல்லும் விசுவாசிகளின் சகவாழ்வை வெளிப்படுத்துகிறது. முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் அப்பால்ää சமுதாய வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால், சீரழிவு மற்றும் மாசடைதலுக்கு அப்பால் அமைவது அதன் அடிக்கடை நிபந்தனையாகும்.

இங்கு சைத்தானுக்குக் கல் எறிதல், இணைவைப்பாளர்களின் தொடர்பறுத்தல், இடர்பட்டோருக்கு ஆதரவளித்தல், தேவையுடையோருக்கு உதவிக் கரம நீட்டுதல், விசுவாசிகளின் நம்பிக்கைகளை உயரப் பிடித்தல் என்பன இதன் அடிப்படையான கடமைகளாகும். இறைவனைப் போற்றுவதும் அவனுக்கு நன்றி சொல்வதும் அவனுக்கு வழிபடுவதை உறுதி செய்வதும் அத்தோடு பொதுவான நலன்களையும் பயன்களையும் அடைந்து கொள்ளலும் இறுதியான அடித்தளமாக அமையும் இலக்குகளில் உள்ளவையாகும். இப்ராஹிமிய ஹஜ்ஜில் பிரதிபலிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தின் சுருக்கமான வடிவம் இதுவாகும். பெரும் உரிமை கோரல்களுடன் காணப்படும் மேற்கு சமுதாயங்களின் உண்மை நிலையுடன் இதனை ஒப்பிடும் போது ஆர்வமுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இத்தகைய ஓர் உயரிய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் அதனைப் பாதுகாக்க போராடுவதற்குமான ஆர்வம் அள்ளி நிறையும்.

ஈரானிய மக்களாகிய நாம் பெருந் தலைவர் இமாம் கொமெய்னியின் வழிகாட்டலிலும் அவரது தலைமையிலும் இதே ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்து வெற்றியும் கண்டோம். நாம் அடையாளம் கண்டவற்றையும் நாம் விரும்பியவற்றையும் அவ்வாறே அடைந்து கொண்டோம் என்று நான் வாதிடவில்லை. ஆயினும் நாம் இந்தப் பாதையில் முன்னேறிச் செல்கிறோம் என்பதையும் பாதையில் இருந்த பல்வேறு தடைகளை நாம் நீக்கி விட்டோம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். குர்ஆனின் வாக்குறுதிகளின் மீதான அசையாத நம்பிக்கையின் பலனாக நமது பாதையில் ஸ்திரமான அடிகளை எடுத்து வைக்கிறோம். யுகத்தின் மிகப் பெரும் கொள்ளைக் காரனும் வழிப்பறிக்காரனும் ஆகிய அமெரிக்க அரசால் நம்மை அச்சுறுத்தவோ வீழ்த்தவோ ஏமாற்றவோää நமது ஆன்மீக மற்றும் அறிவியல் முன்னேற்றங்களைத் தடுக்கவோ முடியவில்லை.

நாம் அனைத்து முஸ்லிம் சமுதாயங்களையும் நமது சகோதரர்களாகவே கணிக்கிறோம். நமக்கு எதிரான முகாமில் சேர்நது கொள்ளாத முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் நீதியுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்கிறோம். முஸ்லிம் சமுதாயங்களின் கஷ்டநஷ்டங்களை நமது இடராகக் கருதி அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். பலஸ்தீன மக்களுக்கு உதவி செய்தல்ää காயப்பட்டுள்ள யெமன் தேசத்துக்கு ஆதரவளித்தல், உலகின் எந்த இடத்திலும் அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்களின் இ;ன்னல்கள் பற்றிய கரிசனை என்பன பற்றி நாம் கவனம் செலுத்துகிறோம். சில முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு சில உபதேசங்களை கூற விரும்புகிறேன்:

தமது சகோதர முஸ்லி;ம் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து எதிரியின் பாதுகாப்பில் தஞ்சம் அடையும் ஆட்சியாளாகள், தமது சில நாள் சொகுசுக்காக எதிரியின் வன்முறைகளையும் இழிவுகளையும் பொறுமையோடு சகித்துக் கொள்வார்கள். தமது தேசத்து மக்களின் கண்ணியத்தையும் சுயாதீனத்தையும் அதற்காக விலை பேசுவார்கள். அநியாயம் செய்யும் ஆக்கிரப்புக்கார சியோனிச அரசை அங்கீகரிக்கும் அவர்கள் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் அவ்வாட்சியாளரிடம் நேசக் கரம் நீட்டுகிறார்கள். நான் இவர்களுக்கு வழங்கும் உபதேசம் என்னவெனில் இந்தப் போக்கின் கசப்பான விளைவுகள் பற்றி அவர்களை எச்சரிக்கிறேன்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னம் இப்பிராந்திய நாடுகளின் நலன்களைப் பாதிக்கும் என்றும் அந்நாடுகளின் அழிவுக்கும் பாதுகாப்பின்மைக்கும் பின்னடைவுக்கும் காரணமாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமெரிக்காவின் தற்கால விவகாரங்களில் அதிலும் குறிப்பாக அங்கு உருவாகியுள்ள இனவாத பாகுபாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் அந்த மக்களுக்காக ஆதரவளிப்பதும் இனப் பாகுபாட்டைத் தூண்டும் அரசாங்கத்தின் கடும் போக்கைக் கண்டிப்பதும் நமது தெளிவான நிலைப்பாடாகும்.

முடிவாக, நமது உயிர் அர்ப்பணமாகும் இறுதியான இமாம் அவர்களுக்கு ஸலாம் சமர்ப்பிக்கிறேன். இமாம் கொமெய்னிக்கும் உயிர் நீத்த தியாகிகளுககும் நல்லருள் கோருகிறேன். முஸ்லிம் உம்மத் பாதுகாப்பான பேரருள் மிக்க ஹஜ்ஜினை மிக வரைவில் அடைந்து கொள்ள இறையோனைப் பிரார்த்திக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

ஸெய்யித்அலீ காமெனெயி


Tuesday, July 28, 2020

ஹஜ் என்பது சில கிரியைகளை கொண்ட வெற்றுச் சடங்கல்ல; அதன் பின்னால் மாபெரும் தாத்பரியம் ஒன்றுண்டு.

The Hajj Pilgrimage from Imam Khomeini's Point of View

 

தனது அறிவுசார், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே, உண்மையான இஸ்லாத்தை விளக்கி, அறியாமை, விறைப்பு மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றின் பொறிகளிலிருந்து விடுபடுவதற்கான அவசியத்தை மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது முதன்மை நோக்கமாகக் கருதினார்கள்.

இஸ்லாமிய புரட்சி ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இஸ்லாமிய புரட்சி வெற்றிபெற்று இஸ்லாமிய குடியரசு முறையையும் ஸ்தாபித்த பின்னரும், உலக அளவில் இஸ்லாமிய சிந்தனையை புத்துயிர்ப்பிப்பது ஒரு முஸ்லிமின் புனிதமான நோக்கமாக கருதி இமாம் கொமெய்னி (ரஹ்) செயற்படுத்தி வந்தார்கள். அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்கள் வரை அதைப் பின்பற்றுவதில் கொஞ்சம்கூட சளைக்கவில்லை.

சர்வாதிகார ஆட்சியின் கட்டமைப்பை மாற்றுவதற்கும் இஸ்லாமிய ஆட்சியின் அஸ்திவாரங்களை அமைப்பதற்கும் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் முக்கிய காரணியாக மக்கள் நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுத்தி அசல் இஸ்லாமிய தன்மைக்கு அவர்களை மீளவைக்கும் வழிமுறை பற்றியும் இமாமவர்கள் திட்டமிட்டார்கள்.


மத சிந்தனையின் மறுமலர்ச்சியை காணும் வழியில் இமாம் கொமெய்னி அவர்கள் புனித போராட்டத்தின் பரிமாணங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் ஒன்றாக 'ஹஜ் யாத்திரை'யை அதன் அடிப்படை தத்துவங்கள், பாடங்கள், அது வழங்கும் செய்திகள் மற்றும் சமூக மற்றும் அரசியல் பரிமாணங்களை விளக்கி விவரிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும் என்று அயராத முயற்சி செய்தார்கள்.

ஹஜ் சம்பந்தமான இமாமின் செய்திகள் மற்றும் அறிக்கைகளில் குறிப்பிடத்தக்க பகுதி இப்ராஹீம் (அலை) அவர்கள் கால மற்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கால ஹஜ் யாத்திரையை புத்துயிர் பெறச்செய்வதாகவே அமைந்திருந்தன.

இந்த மாபெரும் மார்க்க கடமையில் இருந்து மூடநம்பிக்கைகளை  அகற்றி, ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதன் விளைவுகளையும் விளக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளான இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவ சக்திகள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகள் ஆகியோரை  அடையாளம் காட்டி, ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியத்தை உணர்த்த முடியும் என்று நம்பினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் ஹஜ் தொடர்பாக இமாம் கொமெய்னி விடுத்த அறிக்கைகளில் ஒரு பகுதியை ஆராய்ந்ததில், அது மூன்று முக்கிய தலைப்புகளைக் கொண்டுள்ளது என்பதை கண்டறிந்தோம். அது ஒவ்வொன்றையும் தத்தனியாக ஆராய்வோம்.

1.    ஹஜ்ஜின் தத்துவம் தொடர்பான குழப்பமான விளக்கங்கள்

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்த புனித யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் ஹஜ்ஜை நிலைநிறுத்த தங்கள் பொருள் மற்றும் ஆன்மீக வாழ்வின் ஒரு பகுதியை ஏன் செலவிட வேண்டும் என்பதையும் கண்டறிவதாகும்.

இவற்றை ஆய்ந்தறியாத நபர்களால் அல்லது பக்கச்சார்பான ஆய்வாளர்களால் இதுவரை ஹஜ் யாத்திரையின் தத்துவமாக வரையப்பட்டிருப்பது என்னவென்றால், இது ஒரு கூட்டு வழிபாடு மற்றும் ஒரு யாத்திரையுடனான ஒரு சுற்றுலா பயணம்.

ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு புனித போராட்டத்தில் ஈடுபட வேண்டும், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றுக்கும் ஹஜ் யாத்திரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்களின் உரிமைகளையும், அடக்கி ஆள்பவரிடமிருந்து நலிந்தவர்களையும் பாதுகாப்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்கள் மீது செலுத்தப்படும் உளரீதியான மற்றும் உடல்ரீதியான  அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது...? முஸ்லிம்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாகவும், மூன்றாவது உலகளாவிய சக்தியாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா...? மாறாக, ஹஜ் யாத்திரை என்பது 'கஃபா' மற்றும் மதீனா நகரத்தைப் பார்வையிடும் ஒரு பயணமாக மட்டுமே இருக்க வேண்டுமா...? போன்ற கேள்விகள் எம்முள் எழ வேண்டும்.

வரலாறு முழுவதும் இஸ்லாமிய சமூகங்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்களை கட்டிப்போட்டுள்ள ஆபத்துகளில் ஒன்று ஹஜ் யாத்திரையின் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் அந்த உபரிகளையே ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகும்.

இவர்களால் கொடுக்கப்படும் இந்த தவறான விளக்கங்கள் இந்த வழிபாட்டுச் செயலின் யதார்த்தங்கள், போதனைகள் மற்றும் ஞான அறிவு ஆகியவற்றை அறியாமையுடன் கலக்கச் செய்து முஸ்லிம்களில் மந்தநிலை, மூடநம்பிக்கை போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களில் உள்ள மாற்றத்தை உருவாக்கும் திறனை பயன்படுத்த விடாது, பின்தங்கியிருக்க காரணமாகின்றன.

ஹஜ் எனும் இந்த முக்கியமான இஸ்லாமிய கடமையின் போது  அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டி, ஒரு பாரிய இஸ்லாமிய மாநாட்டு வடிவத்தில், சமூக மற்றும் அரசியல் விளைவுகளை உணரச் செய்ய பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சுற்றுலா பயணம் போல் கருதச் செய்துள்ளனர்.

முஸ்லிம்களை மகிழ்விக்கவும், களிப்புறச் செய்யவும், அங்குள்ள  கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பார்த்துவிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என்றா இஸ்லாம் கோருகிறது...?

இமாம் கொமெய்னி அவர்களின் பார்வையில், ஹஜ் தொடர்பான இந்த தவறான விளக்கங்கள் இரண்டு குழுக்களால் முன்வைக்கப்பட்டு தொடர்கின்றன.

முதல் குழு, அறியாமையில் உள்ளவர்கள்: இஸ்லாமிய சமூகங்களின் உண்மையான தேவை தொடர்பான புரிதலும் அறிவும் இல்லாத காரணத்தால், ஹஜ் யாத்திரையை சில இடங்களை தரிசிப்பதற்காகவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தை சில சடங்குகளுக்குள் சுருக்கி, வரையறுத்து கட்டுப்படுத்துகிறார்கள். இவர்களது இந்த அறியாமை, புனித ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதனால் ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கத்தையும் அதன் கருத்தியல் மற்றும் ஆன்மீக நோக்கங்களுடன் புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.

இரண்டாவது குழு தமது பொருளாதார மற்றும் அரசியல் நலன் காரணங்களுக்காக ஹஜ் யாத்திரையை பயன்படுத்த முயற்சிக்கும் பக்கச்சார்பான ஆய்வாளர்கள் ஆகும். இந்த குழு யாத்ரீகர்கள்  ஹஜ்ஜின் உண்மையான நலன்களையும் அபிலாஷைகளையும் அடையவிடாது, அல்லது விரும்பிய மற்றும் வளமான முறையில் அதன் தாத்பரியத்தை  உணரவிடாது இந்த மாபெரும் இறை வழிபாட்டை அவர்கள் தங்கள் மார்க்கப் பிரிவினரின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப விளக்குகிறார்கள். இந்த ஆய்வாளர்கள், இன்றும்கூட, மதத்தின் பெயரில் இஸ்லாமிய போர்வை போர்த்திக்கொண்டு, பொதுமக்களின் கருத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர் ஹஜ் யாத்திரையின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை எதிர்க்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதே நபர்கள்தான். இன்றும், அவர்கள் காலத்தின் கட்டாயமான முஸ்லிம் ஒற்றுமையை எதிர்ப்பவர்களாகவும் இஸ்லாமிய பிரிவுகளின் அடிப்படை நெருக்கத்தை மறைப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தான் புனித ஹஜ்ஜை சடங்குகளுக்கு முடக்கி சில இடங்களை தரிசிக்கும் பொழுதுபோக்கு பயணம் போல் நம்பச் செய்துள்ளார்கள்.

இந்த இரு குழுக்களும் நம்பமுடியாத அனுமானங்களையும் விளக்கங்களையும் வழங்குவதன் மூலம், ஹஜ் யாத்திரைக்கும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற கூற்றை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்களுக்கு முஸ்லிம்கள் உலகளாவிய அதிகாரத்தை அடைவதோ, திமிர்பிடித்த உலக சக்திகளுக்கு எதிரான புனித போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதோ அவசியமில்லை. அவர்களின் பார்வையில், இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகளுக்கு எதிராக போராடுவது ஒரு தவறான செயலாகும்.

2.    உண்மையான ஹஜ் யாத்திரையில் மறைந்திருக்கும் உண்மைகள்

ஹஜ் யாத்திரைக்கு கொடுக்கப்பட்டு வரும் மேற்கூறப்பட்ட  தவறான விளக்கங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரித்த உடனேயே, இமாம் கொமெய்னி இந்த மாபெரும் வழிபாட்டின் மகத்துவம் பற்றி குறிப்பிடுகிறார்:

"... ஹஜ் யாத்திரை என்பது மனிதர்கள் நெருங்கி வந்து கஃபா எனும் புனித இல்லத்தின் உரிமையாளனுடன் இணைவதுதான் ... மேலும் ஹஜ் யாத்திரை என்பது வெறுமனே கிரியைகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஜெப சொற்களின் தொடர் அல்ல. ஒரு நபர் இறைவனை சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இறுகிய இயக்கம் போன்றவற்றின் ஊடாக அடைவதில்லை. தெய்வீக போதனைகளின் மையத்தில் ஹஜ் யாத்திரை உள்ளது. அதில் இருந்து இஸ்லாத்தின் கொள்கையின் உள்ளடக்கத்தை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேட வேண்டும். ஹஜ் யாத்திரை என்பது பொருள் மற்றும் எண்ணங்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு முக்கிய கடமையாகும்; மேலும் அது ஒரு நபரில் மற்றும் உலகில் அன்பை உருவாக்கும் ஒரு முழுமையான சமூக வாழ்க்கையின் அனைத்து காட்சிகளின் வெளிப்பாடும் ஆகும்.

இன்னும் ஹஜ் யாத்திரையில் உள்ளவை உண்மை வாழ்க்கையுடன் தொடர்புபட்ட  சடங்குகளாகும்... மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் "உம்மா" எனும் உலகளாவிய சமூக சபையுடன் இணைவதற்கு, எந்தவொரு இனத்திலிருந்தும் தேசத்திலிருந்தும் வந்தபோதும், இப்ராஹிம் (அலை) அவர்களின் கவ்ம் எனும் வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, "உம்மா" என்ற ஒன்றுபட்ட சக்தியாக மாறி, இந்த ஏகத்துவ வாழ்க்கையின் பயனை அடைவதற்கு ஹஜ் யாத்திரை எம்மை தயார் படுத்துகிறது, அதற்கான பயிற்சியை வழங்குகிறது. அதற்கான ஒத்திகையே இந்த புனித கடமையாகும்.

3. ஹஜ் யாத்திரை என்பது குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்களின் பொருள் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் மற்றும் திறன்களை பிரதிபலிக்கும் அற்புத காட்சி; மேலும் அது அனைவரும் பயனடையக்கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

சன்மார்க்க சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய தேசமான "உம்மா" வின் நிலையினை நன்கு அறிந்தவர்கள் ஹஜ்ஜின் கடமையில் புதைந்து கிடைக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களை அடைந்துகொள்வதற்கு, ஞானக் கடலில் மூழ்கவேண்டும், சுழியோட வேண்டும். அவ்வாறன்றி அவற்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

ஹஜ் யாத்திரையின் தத்துவம் மற்றும் விளைவுகள் பற்றி  இந்த விளக்கங்களில், இமாம் கொமெய்னி (ரஹ்) விவரிக்கிறார். இந்த பெரிய இறை வழிபாட்டுச் செயலையும் அதன் விளைவுகள் மற்றும் அறுவடைகளின் மகத்துவத்தையும் இலகுவான, புரியும் மொழியில்  தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையான ஹஜ் யாத்திரையை விளக்கிய பின்னர், இமாம் கொமெய்னி (ரஹ்) மகத்தான சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்ட இந்த மாபெரும் வழிபாட்டுச் செயல் எவ்வாறு அதன் இயல்பு தன்மையில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது, வெறும் சரித்திர கதையாக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்.

புனித குர்ஆனில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் புரியாதுள்ளது போன்றே ஹஜ்ஜின் தாத்பரியங்களையும்  அறியாதிருக்கிறோம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

உயிர்த்துடிப்புள்ள குர்ஆன் வசனங்களின் அர்த்தத்தை எந்தளவு மறைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஹஜ்ஜின் மகத்துவமும் வக்கிர சிந்தனையின் மண்ணின் கீழ் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது ...

புனித குர்ஆனின் வழிகாட்டுதல், வாழ்வொழுங்கு மற்றும் வாழ்க்கையை உருவாக்கும் தத்துவத்தின் மொழி எவ்வாறு திகில், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மொழியாக தரம் குறைக்கப்பட்டுள்ளதோ, ஹஜ் யாத்திரை அதே கதியை அனுபவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று, இஸ்லாத்தின் புனித ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் மற்றும் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள்  கால்தடங்களில் கால் பதிக்கின்றனர். இருப்பினும், இப்ராஹிம் (அலை) யார், முகமது (ஸல்) யார், அவர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள் என்ன; அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கேள்வியெழுப்புவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.

நிச்சயமாக, ஒர் உயிர் துடிப்பற்ற ஹஜ், இயக்கம் அற்ற ஹஜ், ஒற்றுமையை வெளிப்படுத்தாத ஹஜ் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை அழிக்க அழைப்பு விடுக்காத ஹஜ் உண்மையான ஹஜ் யாத்திரை அல்ல.

சுருக்கமாக கூறின், அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியங்களின்பால் கவனம் செலுத்த வேண்டும், குர்ஆன் போதனைகளை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் இவை இரண்டும் உயிரோட்டம் பெற வேண்டும்.

ஹஜ் யாத்திரையின் சரியான மற்றும் உண்மையான தத்துவத்தை, விளக்கங்களை முன்வைப்பதன் மூலம், ஆஸ்த்தான ஆலிம்களின், மத அறிஞர்களின் தன்னிச்சையான அனைத்து மூடநம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிதைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.

குர்ஆன் உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கை புத்தகம் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மட்டுமல்ல, இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் நியதிகள் மற்றும் கொள்கைகளுடன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். அதன் போதனைகளின் உலகளாவிய தன்மையையும், வாழ்க்கையை உருவாக்கும் நியதிகளையும் கொண்ட சத்தியத்தின் சிறந்த புத்தகமான குர்ஆன் இன்று மரணித்தவர்கள் ஆன்மாக்களுக்கான பாராயண புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது பெரும் கவலைக்குரிய விடயமாகும். அதுபோல் இந்த மகத்தான ஹஜ் கடமையில் இருந்து சமூக மற்றும் அரசியல் தத்துவங்கள் தூரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த வேதனையையும் துக்கத்தையும் தெரிவித்திருந்தார்கள்.

http://www.hajij.com/en/the-hadj-messages/item/118-the-hajj-pilgrimage-from-imam-khomeinis-point-of-view


Monday, July 20, 2020

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விடுக்கும் ஈரான்-சீன ஒப்பந்தம்: நியூ யார்க் டைம்ஸ்

NY Times: Iran-China Deal ‘Major Blow’ to U.S.

ஈரானும் சீனாவும் ஒரு பாரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளன, இது எரிசக்தி மற்றும் பிற துறைகளில் பில்லியன் கணக்கான டாலர் சீன முதலீடுகளுக்கு வழிவகுக்கும். இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்த டிரம்ப் நிர்வாகத்திற்கு இது ஒரு பெரும் அடியாக இருக்கும் என்று  நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகங்கள், ரயில்வே மற்றும் இதுபோன்ற ஏராளமான திட்டங்களில் சீனா பங்களிப்பை பெரிதும் விரிவுபடுத்தும் 18 பக்க உத்தேச ஒப்பந்தத்தின் விவரங்கள் அடங்கிய பிரதி ஒன்றை கடந்த வாரம் இப்பத்திரிகை பெற்றுள்ளது. சீன பங்களிப்புக்கு ஈடாக, அடுத்த 25 ஆண்டுகளில் கிராமமான முறையில்  சீனா ஈரானிய எண்ணெய் விநியோகத்தைப் பெறும் என்று அவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் மூலோபாய திட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்து வரும் ஒரு பிராந்தியத்தில், இவ்விரு நாடுகளும் இராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதையும் இந்த ஆவணம் விவரிக்கிறது. கூட்டு பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆயுத மேம்பாடு மற்றும் உளவுத்துறை பகிர்வு - இவை அனைத்தும் "பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் மனித கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுடன் எதிர்த்துப் போராடும் நோக்கத்துக்காக" என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டாண்மை - சீன தலைவர் ஜி ஜின்பிங்கினால், 2016 இல் அவர் ஈரானுக்கு விஜயம் செய்தபோது முதலில் முன்மொழியப்பட்டது - கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் அமைச்சரவை இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று வெளியுறவு மந்திரி முஹம்மது ஜவாத் ஸரீப் கடந்த வாரம் தெரிவித்தார்.

சீனாவுடன் இவ்வொப்பந்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இன்னும் ஈரான் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த வாரம் ஸரீப் கூறினார்.

பெய்ஜிங்கில், அதிகாரிகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிடவில்லை, மேலும் சீன அரசாங்கம் இதில் கையெழுத்திட்டதா அல்லது அவ்வாறு இருந்தால், அதை எப்போது அறிவிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

"ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் விரிவாக நடைமுறைக்கு வந்தால், இந்த ஈரான்-சீன கூட்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோசமடைந்துவரும் உறவில் புதிய மற்றும் ஆபத்தான மோதல் புள்ளிகளை உருவாக்கும்" என்று அந்த பத்திரிகை அறிக்கை மேலும் கூறியது.

"அதிபர் ஒபாமாவும் மற்ற ஆறு நாடுகளின் தலைவர்களும் இரண்டு வருடங்கள் கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2015 ல் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் மீதான ஆக்கிரோஷக் கொள்கைக்கு இது ஒரு பெரிய அடியைக் குறிக்கிறது”, என்று அப்பத்திரிகை மேலும் தெரிவித்தது.

ஈரானில் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனத்துக்கும் சர்வதேச வங்கி முறைக்கான அணுகலை துண்டிக்கும் அச்சுறுத்தல் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள், ஈரானுக்குத் தேவையான எண்ணெய்க்கான தொழில்நுட்பமும் எண்ணெய் பசியும் கொண்ட சீனாவின் பக்கம் திரும்ப தெஹ்ரானைத் தூண்டின.

 உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஈரானும் ஒன்று.  எனினும் டிரம்ப் நிர்வாகம் 2018 இல் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தொடங்கியதிலிருந்து அதன் ஏற்றுமதிகள் சரிந்தன; சீனா தனது எண்ணெய் தேவையில் 75 சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து பெறுகிறது மற்றும் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது, கடந்த ஆண்டு அதன் ஒரு நாள் தேவை 10 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல்.

"பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கும் நேரத்தில், பெய்ஜிங் தற்போதைய அமெரிக்க பலவீனத்தை உணர்ந்துள்ளது. ஈரானுடனான உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம், பெரும்பாலான நாடுகளைப் போலல்லாமல், அமெரிக்க பொருளாதார தடையை மீறும் சக்திகொண்ட நிலையில் இருப்பதாக சீனா உணர்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடன் நடத்தி வரும் வர்த்தகப் போரில் உள்ளதைப் போலவே, அமெரிக்க சவால்களை தாங்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது ”என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

"இரண்டு பண்டைய ஆசிய நாகரிகங்கள் (ஈரானும் சீனாவும்), வர்த்தக துறைகளில் இரண்டு பங்காளிகள் போன்று, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு நலன்கள் பேணுவதில் ஒன்றுக்கொன்று மூலோபாய பங்காளியாக கருத்தில் கொள்ளும்,” என்று அந்த ஆவணம் அதன் தொடக்க வாக்கியத்தில் கூறுகிறது.

ஈரானில் 25 ஆண்டுகளில் மொத்தமாக 400 பில்லியன் டாலர் சீன முதலீடுகள், என்று ஒப்பந்தம், சீன நிறுவனங்களுக்கு எதிராக இன்னும் கூடுதலான தண்டனை நடவடிக்கைகளைத் தூண்டக்கூடும், அவை சமீபத்திய மாதங்களில் ஏற்கனவே அமெரிக்க நிர்வாகத்தால் குறிவைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பத்திரிகையின் படி, இராணுவ உதவி விரிவாக்கம், இராணுவ பயிற்சி மற்றும் உளவுத்துறை தகவல்கள் பகிர்வு ஆகியவை வாஷிங்டனால் எச்சரிக்கையுடன் மிகவும் உன்னிப்பாக பார்க்கப்படும். அமெரிக்க போர்க்கப்பல்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவின் நெரிசலான நீர்ப்பகுதியில் ஈரானியப் படைகளுடன் தொடர்ந்து உரசிக் கொள்கின்றன; மற்றும் தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனாவின் சொந்தம் கொடாடும் சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய கூற்றை சவாலுக்கு உட்படுத்துகின்றன, மேலும் பென்டகனின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் சீனாவை ஒரு எதிரி நாடாகவும் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் ஈரானுடனான நீண்டகால முதலீட்டு ஒப்பந்தத்தின் அறிக்கைகள் வெளிவந்தபோது, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அதை ஏற்றுக்கொள்ளவுமில்லை மறுக்கவுமில்லை. கடந்த வாரம் மீண்டும் இது குறித்து கேட்டபோது, சீன செய்தித் தொடர்பாளர் ஜாவோ லீஜியாங், ஒரு ஒப்பந்தம் செயல்படுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

"சீனாவும் ஈரானும் பாரம்பரிய நட்பை கொண்டுள்ள இரு நாடுகள், இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியைப் பற்றி தொடர்ந்தும் உரையாடி வருகின்றன," என்று அவர் கூறினார். "நடைமுறை ஒத்துழைப்பை சீராக முன்னேற்ற ஈரானுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டார்."

குறிப்பிட்ட திட்டங்கள் - ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 100 செயற்றிட்டங்கள் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன - இது ஷியின் "பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி", அதாவது இது ஒரு பரந்த உதவி மற்றும் முதலீட்டு திட்டத்துடன் பொருந்தக்கூடியது என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் அடிப்படையில் விமான நிலையங்கள், அதிவேக ரயில்வே மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட மில்லியன் கணக்கான ஈரானியர்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படும் திட்டங்களாகும். மேலும் வடமேற்கு ஈரானில் உள்ள மாகுவிலும்  அபாதானில், பாரசீக வளைகுடா தீவான கெஷ்மிலும் சீனா சுதந்திர வர்த்தக வலயங்களையும் உருவாக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் 5 ஜி தொலைத்தொடர்பு வலையமைப்பிற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், சீனாவின் நவீன உலகளாவிய நிலைப்படுத்தல் GPS வழங்குவதற்கான பெய்டோ (Beidou) திட்டங்களும் அதில் அடங்கும்.

டைம்ஸின் கூற்றுப்படி, டிரம்ப் நிர்வாகம் ஈரானுடனான  அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட்ட பின்னர் பெய்ஜிங் ஈரானில் ஒரு பரந்த முதலீட்டுத் திட்டத்துடன் முன்னேறுவது, அமெரிக்கா மீதான பெருகிய பொறுமையின்மையைக் வெளிக்காட்டுகின்றது. "சீனாவும் ஒரு தரப்பாக இருந்த இந்த ஒப்பந்தத்தை பாதுகாக்க சீனா பலமுறை அமெரிக்க நிர்வாகத்திடம் அழைப்பு விடுத்துள்ளது, மேலும் ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை அமெரிக்கா பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்துள்ளது" என்று அது கூறியது.

பத்திரிகையின் படி, ஈரானிய அரசாங்கங்கள், பாரம்பரியமாக வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காளிகளுக்காக ஐரோப்பாவை நோக்கி மேற்கு நோக்கிப் பார்வையை செலுத்தின. ஆயினும் "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ட்ரம்பின் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்த போதிலும், அவை ஒப்பந்தத்தை மதிக்காத காரணத்தினால், ஈரான் கடும் விரக்தியடைந்துள்ளது".