Wednesday, February 27, 2019

குர்'ஆன் வழங்கும் மனித உரிமைகள்

Holy Qur'an and Human Rights




உலகம் முழுவதும் வாழும் சுமார் இரண்டு பில்லியன் அளவிலான  முஸ்லிம்களின் வாழ்வில் புனித குர்ஆன் மையஸ்தானத்தில் இருக்கின்றது.

அதே நேரம் முஸ்லிம்கள் தம் வாழ்வின் ஆதாரமாகக் கருதும் இந்தக் குர்ஆனை, உலகில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கும் ஒரு நூலாக காட்டுவதற்கு நூற்றாண்டு காலமாக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். கடந்த நூற்றாண்டில் இந்தப்பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

மனித உரிமை மீறலில் மிக மோசமான மீறல் என்னவென்றால் மக்களை அடிமைப்படுத்துவதாகும். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய மக்களை கொடுங்கோலன் ஷாவிடம் இருந்து விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் என்னவென்று உணரச்செய்தார் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள். இறைவன் அருளால் ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக, இஸ்லாமிய மனங்கமழும் உன்னத காற்றை சுவாசிக்கின்றனர்.

'இஸ்லாத்தை இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக எழுவதற்கு  முடியாதவாறு முதுகெலும்பை முறித்துவிட்டோம்' என்று எண்ணியிருந்த காலனித்துவ சக்திகள் ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு கண்டு அச்சம் கொள்ளத் தொடங்கின.

இஸ்லாமிய நாடுகளில் தங்களது முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மன்னர்களும் அமீர்களும் ஷேக்குகளும் சுல்தான்களும் வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிந்திக்கும் இந்த சக்திகள் கதிகலங்கி போயுள்ளன.

உலகின் வளங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம் என்ற வெளிப்படையான ரகசிய திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி வரும் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவினாலும், உலகின் சக்தி வளங்களை பாரிய அளவில் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆட்சி அதிகாரம் தம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஈரானில் ஏற்பட்டதுபோன்ற ஓர் இஸ்லாமிய புரட்சி சவுதியிலும் ஏற்படுமாயின், அவ்விரு நாடுகளும் கொள்கையளவில் ஒன்றுபடுமாயின், அதன் விளைவு என்னவாய் இருக்கும் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கவும் முடியாது. இதன் காரணமாகவே இவ்விரு இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றையொன்று பகைக்கும் நாடுகளாக எப்போதும் வைத்திருக்கும் முயற்சியில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிரமாக இறங்கியுள்ளன.


"ஷீஆக்களை எதிர்ப்பதற்கு தீவிரவாத சுன்னிகளுக்கு அமேரிக்காவும் சுன்னிகளை எதிர்ப்பதற்கு தீவிரவாத ஷீஆக்களுக்கு பிரிட்டனும் உதவி வருகின்றன" என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பலமுறை கூறியுள்ளார். 

இவர்களது இந்த பிரித்தாளும் கொள்கையினை வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் உணரத்தலைப்பட்டுள்ளது. இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமுள்ள மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் எதிரிகளும் அறிவர். இவர்களது துர்பிரச்சாரங்களையும் மீறி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியுள்ளதானது இவர்களை இன்னும் கிலிகொள்ளச் செய்துள்ளது.

இஸ்லாம் மூர்க்கத்தனமானது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது; அது மனித உரிமையினை மதிக்காத மதம் என்றெல்லாம் தொடர்ச்ச்சியாக இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை ஆராய்ந்து, அதன் பொய்த்தன்மையை உணர்ந்த மக்களே இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாகும்.
இஸ்லாம் மூர்க்கத்தனமானதா? பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதா? அது மனித உரிமையினை மதிக்காத மதமா? என்பதை குர்ஆன் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

புனித குர் ஆனை ஆராய்பவர்கள் அது உலக மக்களை இயற்கை நியதிக்கு முரணான பாரம்பரியம், சர்வாதிகாரம், பழங்குடிவாதம், இனவெறி, பாலியல் அடிமைத்தனம் போன்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, மனிதனை உண்மையான சுதந்திரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதை அறிந்துகொள்வர்.

புனித குர் ஆன் அனைத்து மனிதர்கர்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இந்த உரிமைகள் அனைத்தும் மனிதம் என்பதில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவற்றை மறுப்பதென்பது அல்லது அவற்றை மீறுவதென்பது மனிதத்தை மதியாதிருப்பதற்கு ஒப்பாகும்.

இஸ்லாம் என்பது தூய்மையான, மிகப் பரந்த, இயற்கையுடன் இணைந்து செல்லக்கூடிய உன்னத மார்க்கம். ஆதி மனிதர் ஹஸரத் ஆதம் (அலை) தொடக்கம் இறுதி நாள் வரை அதுவே இயற்கை மார்க்கம். காலத்துக்குக் காலம் சட்டங்கள் மாறலாம் ஆனால் மார்க்கத்தின் இலக்கு மாறுவதில்லை.

இறைவன் மனிதர்களுக்கு சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளான். ஆனால், தமது கருத்து மட்டுமே சரியானது, அதையே சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவோ அல்லது அக்கருத்தை மற்றவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவோ எவருக்கும் உரிமைக் கிடையாது.

"நீங்கள் சிந்திக்க வேண்டாமா..?," "ஆராய வேண்டாமா...?" என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து புனித குர்'ஆன் மூலம் சிந்தனையைத் தூண்டி விடுகின்றான்.

ஆக, ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை மதிக்க வேண்டும். அக்கருத்தை சிலர் ஏற்றுக் கொள்ளலாம், சிலர் நிராகரிக்கலாம்; இது அவரவர் சுதந்திரம்.

குர் ஆன் வழங்கும் இந்த உரிமைகள் அனைத்துமே மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது. (53/42) என்ற குறிப்பிட்ட ஓரிலக்கை நோக்கியே மனிதனை நகர்த்துகின்றன. 

"குர்ஆனின் நோக்கில், இறைவன் மனிதனை படைக்கையிலேயே இந்த உரிமைகளை வழங்கிவிட்டான். ஆக அந்த உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டவையாகும். இந்த உரிமைகள் மனிதர்களிடம் உள்ள உள்ளார்ந்த திறமைகளை பயன்படுத்தி, வளங்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மட்டுமல்லாமல், இறைவனின் விருப்பத்துக்கமைய மனிதன் வாழ்வது எவ்வாறு என்றும் மரணிப்பது எவ்வாறு என்றும் கற்றுத்தருகிறான்", என்று லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் றிபாத் ஹசன் குறிப்பிடுகின்றார்.

"மேலும், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட உரிமைகளை ஆட்சியாளரோ அல்லது மனிதனால் அமைக்கப்பட்ட அமைப்போ அகற்ற முடியாது. மற்றும் இந்த மாறுபடாத நித்திய உரிமைகள் மனிதனால் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இறைவன் எதனையும் தக்க காரணம் இன்றி படைக்கவில்லை. இறைவனின் செயல்கள் அனைத்துக்கும் நியாமான நோக்கம் இருக்கின்றது" என்று பேராசிரியர் றிபாத் ஹசன் மேலும் தெரிவிக்கின்றார்.

பின்வரும் புனித குர்ஆன் வசனங்கள் அடிப்படை மனித உரிமையினை இஸ்லாம் எந்தளவு உயர்வாகக் கருதுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

உயிர்வாழும் உரிமை

மனித உயிரின் புனிதமும் அதனது முழுமையான மதிப்பும்  குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…..” (5/32)
 “….. அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான். (6/151)

சுயமரியாதைக்கான உரிமை

மனிதர்கள் கண்ணியத்துக்குரியவர்கள், ஏனென்றால் எல்லா படைப்புகளிலும், அவர்கள் மட்டுமே இறைவன் வழங்கிய பொறுப்பை சுமக்க முன்வந்தார்கள்.

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன; அதைப் பற்றி அவை அஞ்சின; ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்..." (33/72)
“(நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.) (அல்-குர்ஆன் 17:70).

மனிதன், எல்லாவற்றுக்கும் மேலாக, ஏனைய படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபடுகின்ற பகுத்தறிவைக் கொண்டிருப்பதால், அவன் சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவனாக இருக்கின்றான். சர்வ வல்லமையுள்ள இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

இறைவன் வானவர்களை நோக்கி “…. நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறினான்…..” (2/30)
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவனின் தீய செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (95/4-6)

மனிதர்களால் சிந்திக்க முடியும்; சரி எது, பிழை எது என்று அவர்களால் பகுத்தறிய முடியும்; நல்லதை தெரிந்து தீயதை தவிர்க்க முடியும். தவறு செய்பவனாயினும் ஒருநாள் தம் தவறை உணர்ந்து திருந்தக்கூடிய வாய்ப்பு அவனுக்குண்டு. ஒரு கைதியாயினும் அவனை மிருகத்தனமாக நடத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, மனிதன் (பூமியில் இறைவனின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவன் என்பதன் காரணமாக) எல்லா சந்தர்ப்பங்களிலும் மனித கண்ணியத்துக்கு உரியவனாவான்.

நீதிக்கான உரிமை.

எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. நீதி கோரும் உரிமையினை எவராலும் மறுக்க முடியாது. பாரபட்சமின்றி, நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள் என்று என்று குர்ஆன் அழுத்தமாக வலியுறுத்துகிறது:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” (5/8)
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (4/135)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16/90)

நீதி விசாரணையின்போது, இரண்டு தரப்பினரின் கூற்றுகளும், எந்த பாரபட்சமும் இன்றி, சமமாக கருதப்பட வேண்டும்.

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.” (2/177)

- தாஹா முஸம்மில்

Monday, February 25, 2019

யெமன் மீதான யுத்தத்தில் நாம் சவுதிக்கு உதவமாட்டோம் - மகாதீர் முஹம்மத்


Prime Minister of Malaysia: “We will not support Saudi war on Yemen”



"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" - மகாதீர் முஹம்மத்

யெமனுக்கு  ஆதரவு தெரிவிப்பதற்காகவும் யெமன் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும் கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் மலேசிய மனித உரிமை கமிஷனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துகொண்டு உரையாற்றும்போதே மலேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
"யெமனில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சவுதி தலைமையிலான இராணுவப் பிரச்சாரத்திற்கான முந்தைய அரசாங்கத்தின் ஆதரவிலிருந்து நாம் எம்மை தூரப்படுத்திக்கொள்கிறோம்; நாம் எந்த ஒரு நாட்டினது உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாய் இருக்கின்றோம்" என்று மகாதீர் உறுதிப்படுத்தினார்.
"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" என்ற உறுதிப்பாட்டையும் பிரதமர் மகாதீர் எடுத்துரைத்தார்.
பல ஆண்டுகள் நீடித்த யெமன் உள்நாட்டுப் போருக்கு உடந்தையாக இருந்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை "மரணத்தின் வியாபாரிகள்" என்றும் பிரதம மந்திரி குற்றம் சாட்டினார்.
மனித உரிமைகள் பற்றிய அவர்களின் பேச்சின் நயவஞ்சகத்தனத்தை குற்றம்சாட்டிய மகாதிர், ஒரு மோதலுக்குள் சிக்கியுள்ள பிராந்தியத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் லாபம் ஈட்டும் நாடுகள், மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவை என்று குறிப்பிட்டார்.
"மத்தியகிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளவை பினாமி யுத்தங்களாகவும் தலையீடுகளாகவும் நான் நோக்குகின்றேன். மலேசியா மற்றும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற முயற்சிகளிலிருந்தும் அவர்களது தீர்மானங்கள் மற்றும் கொள்கை திணிப்பு போன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.
ஆசியான் உறுப்பு நாட்டுகள் தமக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நடுநிலைக் கொள்கையில் உறுதியாய் இருக்கும் என்பதை, தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு செலுத்தலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு  தெளிவுபடுத்தும்படி அவர் வலியுறுத்தினார்.


Monday, February 18, 2019

சீன பெருஞ்சுவரை விட 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோர்கான் (பாரசீக) பெருஞ்சுவர்.


The Great Wall of Gorgan

உலகில் கட்டப்பட்ட மிகச் சிக்கலான எல்லை பாதுகாப்பு சுவர்களில் ஒன்று என்று இது கருதப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பினது மரபுரிமைப் பட்டியலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

காஸ்பியன் கடலின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து அல்போர்ஸ் மலைத்தொடரின் அருகில், உலகின் மிகப் பெரிய அரணாக இருந்த, 195 கிலோமீட்டர் நீளமான கோர்கான் பெருஞ்சுவர் கைவிடப்பட்டு, புதைந்துபோன மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.
இந்தச் சுவர் பற்றி எந்த பண்டைய சரித்திர நூலும் குறிப்பிட்டிருக்கவில்லை; இது தொடர்பான எந்த கல்வெட்டும் இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை; இது பொறிக்கப்பட்ட எந்த நாணயமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த வரலாற்றுப் பதிவுகளும்  இந்த அற்புதமான கட்டுமானம் பற்றி எதையுமே அறிவித்திருக்கவில்லை என்பது ஆச்சரியமான விடயமே. அனேகமாக நம்மில் அநேகர் இதுவரை இச்சுவர் பற்றி கேள்விப்பட்டே இருக்கமாட்டார்கள்.

வட ஈரானில் அமைந்துள்ள இந்த பெருஞ்சுவரானது (The Great Wall of Gorgan) கி.பி. 4ம் மற்றும் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்  கட்டப்பட்டுள்ளது என்று இதன் ஒருபகுதியை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதோடு புதிய ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
ஈரானின் வடகிழக்காக, காஸ்பியன் கடலின் தென்கிழக்கு பகுதியில், கோர்கான் மாகாணத்தில் இந்த எல்லை பாதுகாப்பு சுவர் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது.
இந்தச் சுவர் சசானிய பேரரசினால் பகைவர்களிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பதற்காகவும் அந்நிய இராணுவ படையெடுப்பு அச்சுறுத்தகளில் இருந்து சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளது என்றும்  நம்பப்படுகிறது.
உலகில் கட்டப்பட்ட மிகவும் சிக்கலான எல்லைப்புற பாதுகாப்பு சுவர்களில் ஒன்றாகவும் இது விவரிக்கப்படுகிறது. சசானிய பேரரசு யுகம் நாகரீகத்தின் உச்சநிலையில் இருந்துள்ளதை இந்த சுவர் எடுத்துக்காட்டுவதாக ஈரானிய மக்கள் நம்புகின்றனர்.
195 கிமீ நீளமான இந்த சுவர் 6-10 மீ (20-33 அடி) அகலமும் கொண்டது, மேலும் 38 கோட்டை அரண்களைக் கொண்டுள்ளது.

செந்நிற கற்களினால் எழுப்பட்டுள்ளதன் காரணமாக இச்சுவர் "சிகப்பு நாகம்" என்று ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படுகிறது. சசானிய பேரரசின் பொறியியல் திறன் மற்றும் இராணுவ அமைப்பிற்கு கோர்கான் பெருஞ்சுவர் ஒரு தனிப்பட்ட சாட்சியமாகும்.
இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகளில், செங்கல் உற்பத்திக்கான நீரை பெறுவதற்காக, கால்வாய்கள் அமைக்க வேண்டியிருந்தது. கோர்கான் ஆற்று நீரை, நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் ஊடாக பெற்றுக்கொண்டனர். பாரசீகத்துக்கே பிரத்தியேகமான வியத்தகு "கனாத்" (Qanat) நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் மூலம் பெறப்படும் நீரே இச்சுவருக்காகவும் குடிநீராகவும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்கான் எனும் இப்பிரதேசம் சரித்திராசிரியர்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தங்கச் சுரங்கம் போன்றதொன்றாகும். இந்தச் சுவர் அவர்களது ஆவலை மென்மேலும்  தூண்டும் ஒன்றாகவும் உள்ளது.

இந்தச் சுவரினது அற்புதமான மற்றும் சிக்கலான வடிவமைப்பு, சீன பெருஞ்சுவரின் நீளத்துடன் ஒப்பிடுகையில், அதற்கு அடுத்தபடியானது என்று கூறலாம். சீன பெருஞ்சுவரின் ஆரம்ப வடிவங்களைவிட, கோர்கான் பெருஞ்சுவர் இன்னும் திடமானதாகவும் உறுதியானதாகவும் கட்டப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லா சிறப்புகளுக்கும் மேற்குலக பெருமைப் பாடும் இவ்வுலகில், ரோமானியர்களுடன் சமமாக அல்லது அவர்களை விடவும்  இராணுவ வலிமை, நிறுவன திறன்கள், பொறியியல் மற்றும் நீர் மேலாண்மை திறன் கொண்டவர்களாக பாரசீகர்கள் இருந்துள்ளனர் என்பதை தயக்கத்துடனாவது ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

- தாஹா முஸம்மில்   

தகவல்களும் படங்களும்:


Thursday, February 14, 2019

ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது


Imam’s ‘Strategic’ Statement on 40th Anniversary
ஈரான் புரட்சிகர கொள்கைகளிலிருந்து பின்வாங்க கூடாது
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40ஆண்டு நிறைவை முன்னிட்டு இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் விடுத்துள்ள "இஸ்லாமிய புரட்சின் இரண்டாம் கட்டம்" என்ற செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாமியப் புரட்சியானது  ஈரானின் பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஈரான் தனது தேசிய மற்றும் புரட்சிகர பெருமானங்களில் இருந்தும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்றும் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், ஒரு சில நாடுகளே புரட்சியின் ஊடாக மாற்றங்களை மேற்கொண்டன. எழுச்சிபெற்ற அவ்வாறான நாடுகளில் ஒரு சில நாடுகளே தம் இலக்கை அடைவதற்கு இறுதிவரை போராடி, ஆட்சி மாற்றத்துக்கு அப்பால், தமது புரட்சி பெறுமானங்களை காத்துக்கொண்டுள்ளன.
இருப்பினும், ஈரானிய தேசத்தின் புனிதமிக்க இஸ்லாமிய புரட்சியானது - இந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் அனைத்திலும் மக்கள்மயப்பட்ட ஒரே புரட்சியாகும் - நாற்பது ஆண்டுகளாக பெருமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே புரட்சி, அதனது பெறுமானங்களையும் கண்ணியத்தையும் துரோகிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டுள்ளது; மேலும் அது அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து, அதன் கண்ணியம் மற்றும் புரட்சியின் அசல் நோக்கங்களையும் பாதுகாத்துள்ளது.
இனி நாம் புரட்சியின் இரண்டாவது கட்டமாக சுய வளர்ச்சி சமூகம்-செயலாக்கம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புதல் என்பதற்குள் நுழையவேண்டும்.
உலகு சடவாதத்தின் அடிப்படையில் கிழக்கெனவும் மேற்கெனவும் பிளவுபட்டு இருந்தவேளை, எவரும் எதிர்பாரா வண்ணம் இஸ்லாத்தின் அடிப்படையிலான மகோன்னத புரட்சி வலிமையுடன் களத்தில் நுழைந்தது; ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்தெறிந்து, காலாவதியான பழைமைவாத சிந்தனையை கிழித்தெறிந்தது. பொருள்முதல்வாதத்துக்கும் சன்மார்க்கத்துக்கும் இடையில் ஓரிணைப்பை ஏற்படுத்தி, ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது.
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40 ஆண்டு விழாவைக்  கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதன் மீது விரோத போக்குக்கொண்டிருந்த இரண்டு மையங்களில் ஒரு மையம் ஏற்கனவே சரிந்து விட்டது; இரண்டாவது மையமும் மீள முடியாத சிக்கல்களின் ஊடாக சீக்கிரமே சரியக்கூடிய அடையாளங்களை வெளிக்காட்டி வருகின்றது. இந்நிலையில் இஸ்லாமிய புரட்சி அதனது கோர்ப்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டு, குறிக்கோளை நோக்கி துரிதமாக  முன்னேறி வருகிறது.
புரட்சியின் குறிக்கோள்களான சுதந்திரம், அறநெறி, ஆன்மீகம், நீதி, கண்ணியம், பகுத்தறிதல் மற்றும் சகோதரத்துவம் ஆகிய எதுவும் காலாவதியாவது கிடையாது. காலவோட்டத்தில் எழுச்சிப்பெரும் அல்லது வீழ்ச்சியடையும் சமூகத்துக்கோ அல்லது தலைமுறைக்கோ அது மட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. மக்கள் இந்தப் பெறுமானங்களை  அசட்டை செய்வர் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.
தொடங்கியதில் இருந்தே, இந்த புரட்சி மூர்க்கத்தனமானதாகவோ அல்லது இரத்தத்தை ஓட்டுவதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை; அது செயலூக்கமற்றதாகவோ அல்லது தயக்கம் கொண்டதாகவோ இருந்ததில்லை; சண்டித்தனத்துக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ அஞ்சாது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களை காப்பதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றது.

எதிர்காலம்: இளைஞர்களுக்கு ஒரு செய்தி
மகோன்னதமான இஸ்லாமிய ஈரானை கட்டியெழுப்பும் பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது. அவர்கள் தான் கடந்த தலைமுறையின் அனுபவங்களில் பாடம்பெற்று தமது சொந்த அனுபவங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல வேண்டும்.
எதிர்வரும் காலம் உங்களுடையது. உங்களது புரட்சியை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் உள்ளீர்கள். புரட்சியின் உயர்ந்த இலட்சியத்தை வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டியது உங்களது கடமை. இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை எதிர்நோக்கி ஒரு நவீன இஸ்லாமிய நாகரீகத்தை தோற்றுவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்ல அறிவை வளர்த்து, அதன் மூலம் படிப்பினைப் பெற வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், சத்தியத்தின் இடத்தை பொய்மை ஆக்கிரமித்துவிடும் மேலும் எதிர்காலத்தில் அடையாளம் காணமுடியா அச்சுறுத்தல்களினால் அவதியுற நேர்ந்திடும். புரட்சியின் எதிரிகள், கடந்த காலத்தில் செய்து வந்தது போல், இன்றும் கூட பணம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி, எமக்கு எதிராக பொய்களை பரப்பும் அவர்க்களது முயற்சிகளில் உத்வேகம் கொண்டுள்ளனர்.
இஸ்லாமியப் புரட்சி நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளதுடன் பல முனைகளில் முன்னேற்றத்திற்கான "இயந்திரம்" என செயல்பட்டதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளது.
தேர்தல்களிலும் நாட்டின் ஏனைய அரசியல் விவகாரங்களிலும் மக்களது பங்களிப்பை ஊக்குவித்து, தொண்டு நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற சமூக விடயங்களில் ஈடுபாடுகொள்ளச் செய்துள்ளது புரட்சியின் மற்றுமொரு முக்கிய சாதனையாகும்.
இன்னும், மேற்குலகினது  குறிப்பாக அமெரிக்காவினது குற்றச் செயல்கள், பலஸ்தீன் விவகார பின்னணி, பாலஸ்தீனிய தேசத்தின் வரலாற்று அடக்குமுறை, யுத்தவெறி நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு போன்ற அனைத்து தீயவற்றையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள்.
எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களால் கருத்தில்கொள்ளப்பட  வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நாம் இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான நாடொன்றில் வாழ்கிறோம் என்பதாகும். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இந்த வளங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாது உள்ளன அல்லது சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன. துடிப்புள்ள இளைஞர்களின் புரட்சிகர முயற்சியினால் இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் ஒழுக்க முன்னேற்றத்தை முன்னோக்கி ஒரு உண்மையான பாய்ச்சலைக் ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் தீங்காகவே அமையும்
புரட்சியின் முதல் நாளுக்கும் இன்றைக்கும் இடையிலான ஒரு ஒப்புவமை வரைந்து  காட்டிய இமாம், எமது சுதந்திர வேற்கையின் உறுதிப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் அமெரிக்காவினதும் ஈரானின் ஏனைய எதிரிகளினதும் எதிர்ப்புக்களைத் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போலவே, இறையாண்மை கொண்ட ஈரான் திமிர் பிடித்த ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்கிறது. இன்று அந்த எதிர்ப்பில் சில அர்த்தமுள்ள  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்காலத்தில் வெளிநாட்டு முகவர்களின் ஊடுருவலை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக அல்லது தெஹ்ரானில் சியோனிச ஆட்சியின் தூதரகம் மூடப்படுதல் காரணமாக, அல்லது அமெரிக்க உளவு மையம்  (தெஹ்ரானில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம்) அம்பலப்படுத்தப்படுதல் காரணமாக அமெரிக்கர்கள் எம்மை எதிர்த்து வந்தனர்.   இன்று அவர்களது கோபத்துக்கான காரணம் மாறியுள்ளது. சியோனிச அரசின் எல்லையில் இஸ்லாமிய ஈரானின் சக்திவாய்ந்த பிரசன்னம்மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களின் இதயத்திலேயே பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பிற்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவு மற்றும் இந்த பிராந்தியம் முழுவதும் சியோனிஸ எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் வானுயர பறக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் கொடி என்று காரணங்கள் மாறியுள்ளன.
அந்நாட்களில், ஒரு சில ஈரானிய நயவஞ்சகர்களின் உதவியோடும் சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கொண்டு இஸ்லாமிய ஈரானை வெற்றிகொண்டுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இன்று அதற்காக பல நாடுகளின் துணை அவசியம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியால் இதிலும் அவர்கள் நிச்சயமாக தோல்வியடைவர்.
வாஷிங்டனுடனான உரையாடல் எந்தவொரு பயனும் தராது மேலும் ஐரோப்பிய நாடுகளில் பல ஏமாற்றுப்பனவாகவும் நம்பத்தகாததாகவும் உள்ளன.
புரட்சியின் பெறுமானங்களை பாதுகாத்துக்கொண்டு, அந்த அரசாங்கங்களுடன் "தீர்க்கக்கூடிய" பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முயற்சியுங்கள்; அவர்களுடைய வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் உறுதியுடன் செயல்படுங்கள் என்று இமாமவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அமெரிக்காவுடனான எந்த பிரச்சினையையும் பேச்சுவார்தைகளினூடாக தீர்க்கமுடியாததாக இருப்பதோடு, அவ்வாறான பேச்சுவார்த்தை எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமேயன்றி, பயனளிக்கப்போவதில்லை.
பலஸ்தீனுக்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவும்  பிராந்தியத்தில் அதனது சக்திவாய்ந்த பிரசன்னமுமே அமெரிக்காவின் பிரதான பிரச்சினை.
(சியோனிஸ) எதிர்ப்பு சக்திகளுக்கு அதி சக்திவாய்ந்த நவீன ஈரானிய ஆயுதங்கள் சென்றடைவதைத் தடுப்பதில் வாஷிங்டன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஈரானை எதிர்கொள்வதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு தேவை என்று வாஷிங்டன் கருதுகிறது. ஆயினும் இஸ்லாமிய ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் எந்த முயற்சியும், அல்லாஹ்வின் உதவியால், தோல்வியிலேயே முடியும்.
அல்லாஹ்வின் அருளால் உலகில் இஸ்லாமிய குடியரசு இன்று ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த அடைவுக்காக இஸ்லாமிய புரட்சிக்கே நன்றி சொல்ல வேண்டும். தேசிய முன்னேற்றத்தை துரிதப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஈரானிய இளைஞர்களை கேட்டுக்கொண்டதோடு பிப்ரவரி 11 ம் தேதி இஸ்லாமியப் புரட்சியின் 40 வது ஆண்டு நிறைவை குறிக்கும் பேரணிகளில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக ஈரானியர்களுக்கு ஆயத்துல்லாஹ் காமனெய்  நன்றி தெரிவித்தார்.

https://www.presstv.com/Detail/2019/02/13/588466/Iran-Leader-Statement-Islamic-Revolution-Second-Step