Friday, October 28, 2022

இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானிய பெண்களின் சாதனைகள்

Achievements of women after the Islamic Revolution

ஆடை களைதல் தான் பெண் உரிமை என்பது போன்ற ஒரு மாயையை மேலை நாடுகளும் அவற்றின் தயவில் இயங்கும் ஊடகங்களும் பெரும் பிரச்சாரம் ஒன்றை முடுக்கிவிட்டுள்ள ஒரு காலகட்டத்தில், பெண்மைக்கு உண்மையான மதிப்பளிக்கும் சில முஸ்லிம் நாடுகள் இன்னும் உலகில் இருக்கவே செய்கின்றன.

பெண்ணுரிமை பற்றி பேசும் பல பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூட உண்மையில் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கத்தான் போராடுகின்றனரா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

பெண் உரிமைகளில் வன்முறை, அடிமைத்தனம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான உரிமையும் கல்வி கற்கும் உரிமை; சொத்துரிமை; வாக்களிக்கும் உரிமை; கௌரவமாக வாழும் உரிமை மற்றும் நியாயமான மற்றும் சமமான ஊதியம் பெறும் உரிமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, எங்கோ ஒரு நாட்டில் ஒரு யுவதி ஹிஜாப் எனும் (உடலின் முக்கிய பாகங்களை மறைக்கும்) ஆடையை கழட்டி எறிவது அவளது தனியுரிமை என்றும், அவ்வாறான செயலை தடுக்கும் சட்டங்களைக் கொண்டுள்ள நாடுகளை விமர்சித்து, அவற்றுடன் ஊடக போர் புரிவது நியாயமல்ல.

ஆண்கள் கழுத்தில் இருந்து கால்வரை ஆடை அணிவதை கண்ணியமென கருதும் இவர்கள் பெண்கள் தம் ஆடைகளைக் குறைத்து, உடல் அங்கங்களை அதிகமாக வெளிக்காட்டும் ஆடை அணிவதே நாகரீகம் என்று உலக மாந்தரை மூளை சலவை செய்து வைத்துள்ளனர்.

சில முஸ்லிம் நாடுகளில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பொதுவெளியில் அரைகுறை ஆடை அணிவது தடையாகும்... 

ஆகவே, பெண் உரிமை, பெண் சுதந்திரம் பற்றி குரல் எழுப்புவோர், மேலை நாடுகளின் பிரச்சாரங்களுக்கு ஆளாகாமல், திறந்த மனத்துடன் விடயங்களை அணுக வேண்டியது தார்மீக கடமையாகும்.

ஈரானின் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தலைமைத்துவம் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு "கல்வி", "சுகாதாரம்", "வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு", "ஊடகம்", "விளையாட்டு", "முடிவெடுத்தல்" ஆகிய துறைகளில் மற்றும் "சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் நெருக்கடிகள் மேலாண்மை துறைகளில் "ஈரானிய பெண்களின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்வித் துறையில், ஈரானிய பல்கலைக்கழகங்களில் கற்போரில் 60% க்கும் அதிகமானோர் பெண்களாவர்; ஆசிரிய உறுப்பினர்களில் பெண்களின் பங்கு 33.3 சதவீதத்துக்கும் அதிகமாகவும். மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்களில் 34 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் மற்ற எல்லா துறைகளிலு படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் ஈரானிய இளம் பெண்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஈரானியப் பெண்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள். இஸ்லாமிய குடியரசிற்கு இது ஒரு ஆச்சரியமான வளர்ச்சி. நாட்டின் பெண்களுக்கு கல்வி என்பது ஒரு வலுவான சமூக மதிப்பைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், அவர்கள் அதிக சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் அதை கருதுகின்றனர்.

ஈரானின் பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வரும் இளம் பெண்களின் எண்ணிக்கை, நாட்டின் பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் ஏற்கனவே கணிசமான மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஈரானியப் பெண்கள் பல்கலைக்கழகப் படிப்பை வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியே செல்வதற்கும், தொழில்முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் அதிக சுதந்திரம் மற்றும் சமூக மரியாதையைப் பெறுவதற்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

பாரிஸை தளமாகக் கொண்ட சமூக அறிவியல் பேராசிரியரான டாக்டர்  பெய்வந்தி ஈரானின் கல்வி முறை தொடர்பான சிக்கல்களைப் பின்தொடர்பவராக இருக்கின்றார். ரேடியோ பர்தாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரானின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே பெண்களின் வலுவான இருப்பு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று கூறினார்.

"கடந்த தசாப்தத்தில் ஈரானிய பெண்களின் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றம் ஒரு சமூக நிகழ்வாக கருதப்பட வேண்டும், ஏனென்றால் சமூக உறவுகள், தொழிலாளர் சந்தை மற்றும் சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்களின் நிலை ஆகியவற்றிற்கான அதன் தாக்கங்கள் ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிக மிக முக்கியமானவை." என்று டாக்டர் பெய்வந்தி கூறினார்.

1979 இஸ்லாமிய புரட்சி மற்றும் நாட்டின் கல்வி நிறுவனங்களின் இஸ்லாமியமயமாக்கலுக்குப் பிறகுதான் பாரம்பரிய அல்லது பழமைவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கல்வியைத் தொடர்வதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர், என்றும் அவர் தெரிவித்தார். "புரட்சிக்கு முன்பே தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்பிய நவீன நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் [புரட்சிக்குப் பிறகும்] அதைத் தொடர்ந்தன. புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் இப்போது நாம் காணும் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். "இதற்கு முன் தங்கள் பெண்களை படிக்க அனுப்பாத பாரம்பரிய குடும்பங்கள் - ஆசிரியர்கள் ஆண்களாக இருந்ததால் அல்லது பள்ளிக்கூடம் இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணாக செயல்பட்டதனால் - பள்ளிக்கூடங்களை இஸ்லாமியமயமாக்கியதில் இருந்து மிகப்பெரிய நன்மையை பெண்கள் பெற்றுக்கொண்டனர்என்று கூறினார்.

வளர்ந்து வரும் பெண் பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கை ஈரானின் தொழிலாளர் சந்தையில் ஏற்கனவே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல துறைகளில் நுழைந்துள்ளனர். வணிக உலகிலும் பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு வியத்தகு அளவில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தற்போது உத்தியோகங்களில் 10 சதவிகிதம் இடம்பிடித்து உள்ளனர். ஆனால் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களில் 60 சதவிகிதம் பெண்களாக இருப்பதன் காரணமாக, தொழில் பெறும் பெண்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வரலாற்று மாற்றம் என்கிறார் டாக்டர் பெய்வந்தி. "புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், வேலை செய்த பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது, ​​அந்த பெண் அலுவலக ஊழியர்கள் மற்றும் செயலாளர்களுக்கு பதிலாக, ஈரானிய பெண்கள் தொழிற்சாலை பொறியாளர்களாகவும் நிபுணர்களாகவும் மாறி வருகிறார்கள்," என்று அவர் கூறினார். "எனவே உண்மையில், ஈரானின் தொழிலாளர் சந்தை ஆண்களுக்கு மாற்றீடாக பெண் நிபுணர்களின் வருகையை எதிர்கொள்கிறது, மேலும் ஆண்-சார்ந்த கட்டமைப்புடைய ஈரானிய சமூகத்தில், இது ஒரு பெரிய மாற்றமாகும். ஈரானில் இப்போது பெண் நிபுணர்கள், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், அதிகரித்துள்ளனர். 

டெஹ்ரானில் வெளியிடப்படும் கல்வி மற்றும் கலாச்சார இதழான "லோஹ்" இன் நிர்வாக ஆசிரியர் முகமது காயித், பல ஈரானிய பெண்கள், முன்னர் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய உயர் தொழில்முறை பதவிகளுக்கு உயர்ந்து வருவதாக கூறுகிறார். "ஈரானில், அலுவலகம் அல்லது வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் - பெரும்பாலும் ஆண்களாக இருக்கும் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை நிர்வகிக்கக்கூடிய நிலையில் இருப்பது ஒரு பொதுவான காட்சியாகி மாறி வருகிறது," என்று அவர் கூறினார்.

ஈரானின் குடும்ப அமைப்புகளிலும் இப்போது மாற்றத்தை உணர முடிகிறது. சமீபத்திய ஆண்டுகளில், சராசரி திருமண வயது உயர்ந்துள்ளது மற்றும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் நேரடி விளைவாக இந்த மாற்றங்களை பெய்வந்தி கருதுகிறார். "கடந்த தசாப்தத்தில், ஈரானில் உள்ள அனைத்து மக்கள்தொகை குறிகாட்டிகளும் பெண்களுக்கான மேம்பட்ட நிலைமைகளின் திசையில் வேகமாக மாறிவிட்டன," என்று அவர் கூறினார். "குடும்பங்கள் சிறியவை, பெண்கள் திருமணத்திற்கு அவசரப்படுவதில்லை, உயர்கல்வி பெற்ற பெண்களுக்கு அதிக சமூக கடமைகள் உள்ளன."

மேலும், கல்வியறிவு விகிதம் 99.3 சதவீதத்தை எட்டியதால், பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே கல்வியறிவின்மை கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

95 சதவீதத்திற்கும் அதிகமான பிறப்புகள் மகளிர் மகப்பேறியல் மருத்துவ நிபுணர்களால் நிறைவேற்றப்படுகியது. நாட்டில் உள்ள ஒவ்வொரு 100,000 பெண்களுக்கும் பயிற்றப்பட்ட 60 மருத்துவச்சிகள் மற்றும் 2.8 மகப்பேறு மருத்துவர்கள் உள்ளனர்.

அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் பதவிகளில், நாட்டின் அரசாங்க மேலாளர்களில் 25.2 சதவீதம் பேர் உயர், நடுத்தர பதவி மற்றும் அடிப்படை நிர்வாக நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களாக உள்ளனர். நாட்டில் 1,121 பெண்கள் நீதிபதிகளாக பணிபுரிகின்றனர், நாடாளுமன்ற அங்கத்தவர்களாக 16 பெண்கள் உள்ளனர். பல பெண்கள் ராஜதந்திரிகளாகவும் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர். ஈரானின் இராஜதந்திரியாக ஐ.நா.வில் ஸஹ்ரா எர்ஷாதி பணியாற்றுகின்றார்.

தாஹா முஸம்மில் 

Monday, October 24, 2022

73 பிரிவுகள் உருவாகும் என்ற ஹதீஸின் உண்மை நிலை என்ன...?

What is the true status of the hadith that there will be 73 sects...?

இஸ்லாத்தின் எதிர் சக்திகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடிய ஒரே ஆயுதம் "இஸ்லாமிய உலகின் ஒற்றுமை மட்டுமே" என்பதை இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாக புரிந்துவைத்துள்ளனர்; ஆகவேதான், அவர்கள் முஸ்லிம்கள் எக்காலத்திலும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.

இந்நிலையை உணர்ந்து இஸ்லாமிய ஒற்றுமைப் பற்றி பேசினால், அது ஒருபோதும் நடக்காது, “எனது உம்மத் 73 குழுக்களாக பிரிந்து போகும், அதிலொன்று மட்டுமே சுவர்க்கம் செல்லும் மற்ற அனைத்தும் நரகம் செல்லும்" என்று றஸூலுல்லாஹ்வே கூறிவிட்டார்கள், அதனால் இதற்கான முயற்சியில் ஈடுபடுவது வீண் என்பதுபோல் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் நம்பிக்கையாளர்களில் 73 பிரிவுகளைப் பற்றி அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஹதீஸில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: யூதர்கள் 71 பிரிவுகளாக பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 பிரிவுகளாக பிரிந்தனர், மேலும் எனது சமூகம் 73 பிரிவுகளாகப் பிரியும் (இப்னு மாஜா, அபு தாவுத், அல் -திர்மிதி மற்றும் அல்-நிஸாயி). இன்னும் பல பதிப்புகளிலும் வருகிறது.

இந்த ஹதீஸை நாம் புரிந்து கொண்டுள்ளது சரியா என்று ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصًا دَخَلَ الْجَنَّةَ

1478 الدعاء للطبراني

அபு சயீத் அல்-குத்ரி அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உண்மையாகச் சொல்பவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்படுவார்." (துஆ லித்தபரானி 1478)

இவ்வாறு கூறப்பட்டிருக்கையில், எனது உம்மத் 73 கூட்டமாக பிரியும், அதில் ஒன்றே சுவர்க்கம் செல்லும் மற்ற அனைத்தும் நரகம் செல்லும் என்ற ஹதீஸின் உண்மை நிலை என்ன?

நாம் இதை சற்று ஆராய்வோமேயானால், இந்த ஹதீஸ் முஸ்லிம் உம்மாவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறது: ஒன்று இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றது நரகவாசிகள்.

ஒன்று தோன்றவிருக்கும் பிரிவுகளின் எண்ணிக்கை பற்றியது (எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரியும்) என்ற இரட்சிப்பின் பகுதி. மற்றது 72 பிரிவுகள் தண்டிக்கப்படும் எனும் தண்டனை பகுதி.

இப்னு அல்-வஸீர்  அல்-அவாசிம் என்ற அவரது புத்தகத்தில், இந்த உம்மத்தின் சிறப்பைப் பற்றிப் சிலாகித்து கூறுவதுடன் எந்தவொரு முஸ்லிமையும் காஃபிர் என்று குற்றம் சாட்டுவதில் ஈடுபடுவதற்கு எதிராக எச்சரிக்கை செய்கிறார்.. மேலும் அவர்: "[சொற்றொடர்களால்] தவறாக வழிநடத்தப்படாதீர்கள், "ஒரு குழுவினரைத் தவிர மற்ற அனைவரும் நரக நெருப்பில் இருப்பார்கள்" என்பது ஒரு தவறான மற்றும் ஆதாரமற்ற  இடை சொறுகளாகும் மேலும் அது இறை நம்பிக்கை அற்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்" என்று குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் இப்னு ஹஸ்ம் கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்: "இந்த பிற்பகுதி இட்டுக்கட்டப்பட்டது; இது எந்தத் தோழர்களாலும் கூறப்பட்டதாகவோ அல்லது றஸூலுல்லாஹ்விடம் இருந்து கேட்கப்பட்டதாகவோ' வகைப்படுத்தப்படவில்லை.

இதற்கு மாறாக,  ஒரு ஹதீஸின் மற்றொரு பதிப்பு உள்ளது.

10 ஆம் நூற்றாண்டின் புவியியலாளரான முகத்தஸி என்பவர் "72 பிரிவுகள் சொர்க்கம் செல்லும், ஒன்று நரகம் செல்லும்" என்று உள்ள ஹதீஸைக் குறிப்பிடுகின்றார் என்று ராய் முத்தஹிதே (இஸ்லாத்தில் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம்) என்ற புத்தகத்தில் எழுதுகின்றார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை (இஸ்னத்) நம்பகமானது என்றும் கூறுகின்றார். ஆக, முன் சொல்லப்பட்ட ஹதீஸுக்கும் இதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

முத்தஹிதேயின் கூற்றுப்படி, 72 கூட்டத்தினரை மத நம்பிக்கையின் அடிப்படைகளில் பிரிவு என்று அர்த்தப்படுத்தினால், அவர்கள் இந்த எண்ணிக்கையை நிச்சயமாக எட்ட மாட்டார்கள் ஏனெனில் இவர்களின் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையில் பெரிய மாற்றங்கள் எதையும் காண முடியாது; அடிப்படைக்கு அப்பாற்பட்ட விடயங்களில் என்றால் கூட்டத்தின் எண்ணிக்கை பல நூறைத் தாண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்ற அடிப்படையில் இருந்து விலகிய எந்த ஒரு முஸ்லிம் பிரிவும் உலகில் கிடையாது.

அவ்வாறாயின் இந்த 73  என்ற எண் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எங்கிருந்து வருகிறது என்று சிலர் கேட்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்த ஹதீஸைக் குழுவாத விளக்கங்களுக்கு அப்பால் இன்னும் புறநிலையாகப் பார்க்கும் நல்ல போக்கு இப்போது ஏற்பட்டு உள்ளது. பிரத்தியேகமான வழிகளைக் காட்டிலும் பிரிவுகளின் பன்மையை உள்ளடக்கிய வெளிச்சத்தில் பார்க்கும் முயற்சியும் உள்ளது. சமீப காலமாக, இந்த ஹதீஸின் பின்னணியை அலசி ஆராய்ந்து அதன் தாக்கங்களை ஆராயும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பிட்ட ஹதீஸின் மற்றொரு பார்வை என்னவென்றால், இவ்விடத்தில் 73 என்பது உண்மையில் எண்ணிக்கையைக் குறிப்பதல்ல; மாறாக நாம் ஏராளமான என்ற சொல்லுக்கு பதிலாக பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ('ஆயிரத்தெட்டு' பிரச்சனைகள்) போன்ற ஒன்றாகும். ஆக, இது சூழ்நிலைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லேயாகும் என்று அடையாளப்படுத்துகின்றனர். முத்தஹிதே இதற்கான விரிவான பல வரலாற்று உதாரணங்களைத் தருகிறார். "70 என்பது ஏராளமான என்பதை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. அதை நாம் 'உருப்படிகளின் எண்ணிக்கை' என்று கொள்ளல் ஆகாது என்று கூறுகின்றார்.

ஒரு முஃமினுக்கு துன்பத்தில் உதவி செய்பவரை இறைவன் 73 துன்பங்களில் இருந்து நீக்கிவிடுவான்’ என்று ஒரு ஹதீஸை ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். இங்கே இறைவனின் தாராளமான வெகுமதியை குறிக்கும் சொல்லாக 73 இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மதம் சார்ந்த விடயங்கள் இதுபோன்ற குறியீட்டு மொழியிலும் எழுதப்படுகிறது, என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எனது சமுதாயம் 70 குழுக்களாகப் பிரியும்; அவர்கள் அனைவரும் ஜன்னாவில் (சொர்க்கத்தில்) இருப்பார்கள். காஃபிர்களைத் தவிர" [அத்-தைலமி தனது முஸ்னத் அல்-ஃபிர்தவ்ஸில் பதிவு செய்துள்ளார்].

முகமது இபின் அஹ்மத் அல்-பிஷாரி அல்-மக்திசி தனது அஹ்சன் அத்-தகாசிம் என்ற புத்தகத்தில் இரண்டு விதமாக குறிப்பிடப்படும் இந்த ஹதீஸ் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: "72 குழுவினர் சொர்க்கத்தில் இருப்பார்கள், ஒரு குழுவினர் நரக நெருப்பில் இருப்பார்கள்" மற்றது "72 குழுவினர் நரக நெருப்பில் இருப்பார்கள், ஒரு குழுவினர்  [நரக நெருப்பிலிருந்து] காப்பாற்றப்படுவார்கள்" என்ற ஹதீஸின் இரண்டு வெவ்வேறு சொற்றொடர்களைக் குறிப்பிட்டு, பின்னர், அவர் இவ்வாறு கூறுகிறார்: "இரண்டாவதாக கூறப்பட்டுள்ள ஹதீஸின் வாசகம் பிரபலமானது, அதே சமயம் முதல் கூறப்பட்டுள்ள வாசகம் மிகவும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர் சங்கிலியைக் கொண்டுள்ளது."

மற்றுமொரு இஸ்லாமிய அறிஞரான இப்னு அல்-வஸீர் என்பவர் குறிப்பிட்ட ஹதீஸின் இரண்டாவது பகுதியான  "72 குழுவினர் நரக நெருப்பில் இருப்பர், ஒரு குழுவினர் [நரக நெருப்பிலிருந்து] காப்பாற்றப்படுவர்" என்பதை நிராகரிக்கின்றார். அவரைப் பொறுத்தவரை இது பிற் சேர்க்கையாகும். ஏனென்றால், இந்த கூடுதல் சொற்றொடர் உம்மத்தினரிடையே தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குஃப்ர் [நம்பிக்கையின்மை] குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுக்கிறது.

சில கடந்த கால மற்றும் தற்போதைய அறிஞர்கள் இந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியை அதன் அறிவிப்பாளர் சங்கிலியின் அடிப்படையில் மறுத்துள்ளனர், மற்றவர்கள் அதன் பொருள் மற்றும் உரையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். உதாரணமாக, அபு முகமது இப்னு ஹஸ்ம் என்பவர், அகீதாவில் உள்ள வேறுபாடுகள் காரணமாக மற்றவர்களை வழிதவறியவர்கள் என்று குற்றம் சாட்டுபவர்களின் குற்றச்சாட்டுகளை, குறிப்பிட்ட சில ஆதாரங்களின் அடிப்படையாகக்கொண்டு மறுத்துரைக்கின்றார்.

சொர்க்கத்தின் பால் நம்பிக்கை ஊட்டும் இவ்வாறான ஹதீஸ்கள் பல உள்ளன என்பதை நாம் அறிவோம். நிச்சயமாக அல்லாஹுத்தஆலா மிக்க கருணையாளன் என்பதை நான் மறந்துவிடல் ஆகாது. அதேநேரம், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "எனது உம்மத் 73 குழுக்களாகப் பிரியும் என்று கூறுகின்றார்கள், இங்கு "எனது உம்மத்" என்று கூறுவதை ஈண்டு கவனிக்கவும். அல்லாஹ்வின் மீது பூரண விசுவாசம் கொள்ளாத எவரும் றஸூலுல்லாஹ்வின் உம்மத்தில் அடங்கமாட்டார்கள் என்பது தெளிவு.

இரண்டு பிரபலமான இஸ்லாமிய ஆளுமைகள், அல்-பாக்தாதி (இ. 1037) மற்றும் அல்-ஷஹ்ரஸ்தானி (இ. 1153) ஆகியோர் 'பிரிவு' மற்றும் எண்கள் ஆகியவற்றின் பின்னணிகள் பற்றிய வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கின்றனர். இதற்கு நிலையான விளக்கம் என்று ஒன்று கிடையாது; ஒவ்வொருவரும் அவரவர் பின்னணி மற்றும் வாழ்ந்த காலத்தின்படி அவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் மதவாத நம்பிக்கைகள் மற்றும் பின்னணிகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

தாம்தான் தூய இஸ்லாத்தை பின்பற்றுகிறோம், ஏனையவர்கள் வழிகேடர்கள் என்று சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் உண்மையை அடக்கி கட்டுப்படுத்த முடியாது. நமது சமூகங்களின் குறுகிய எல்லைகளுக்கு வெளியே அடியெடுத்து வைக்கும் போது, மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம்.

வரலாறு முழுவதும், சமூகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டுள்ளது. இன்றும், பல வழிகளில் நம்பிக்கைகளின் பன்முகத்தன்மையைக் கற்றுக்கொள்வதற்கும் கொண்டாடுவதற்கும் உலகளாவிய போக்கு அதிகரித்து வருகிறது.

இஸ்லாத்தின் மூலாதாரங்களை ஆராய்ந்த பல அறிஞர்கள் தாம் புரிந்துகொண்ட கோணத்தின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு முஸ்லிம் பிரிவினரும் தங்கள் பிரிவு மட்டுமே 'இரட்சிக்கப்பட்டது' என்றும் மற்ற அனைத்து பிரிவுகளும் நரகத்திற்கு விதிக்கப்பட்டவை  என்றும் கூறுகின்றனர். இவற்றில் உண்மை யார் பக்கம் உள்ளது என்பதை ஆராய்தல் முடிவு காண முடியாத சிக்கலான பிரச்சினைகள் என்பதை இந்த விவாதம் நமக்கு உணர்த்துகிறது.

ஆகவே, முஸ்லிம்களின் பன்முகத்தன்மையை எமது கொள்கையின் அடிப்படையில் சரி, பிழை பார்க்காமல் மரியாதை, பணிவு, பொறுப்பு மற்றும் புரிந்துணர்வுடன் நோக்க வேண்டும். 

தாஹா முஸம்மில் 

Friday, October 14, 2022

ஈரானுக்கு எதிராக முடுக்கிவிப்பட்டுள்ள துர் பிரசாரங்கள்

Whither the Islamic Republic of Iran?

இஸ்லாமிய விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வீதிக்கு இறங்கிய ஈரானிய மாதர்கள் 

-    தாஹா முஸம்மில்

உலகில் எத்தனையோ ஆட்சி முறைகள் உள்ளன. சோசலிசம், கொம்யூனிசம், ஜனநாயகம், மன்னராட்சி என்று இன்னும் எத்தனையோ இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் எதோ ஒரு அடைப்படை உள்ளது. இவற்றில் குறிப்பிட்ட ஆட்சி முறைதான் சிறந்தது என்று கூறுவதற்கு நடைமுறையில் எந்த உதாரணமும் கிடையாது. தாம் பின்பற்றும் முறைதான் சிறந்தது என்று நியாயப்படுத்துவதற்கு சில நாடுகள் முயற்சி செய்தாலும் கூட.

யதார்த்தம் என்னவென்றால், பிராந்திய மற்றும் உலக அளவில் புதிய கலாச்சார அடித்தளங்கள் மற்றும் கொள்கைகளை திட்டமிடுவதன் மூலம் மேற்கு நாடுகளால் மிகவும் சரியானது என்று கருதப்படும் ஆளுகை மாதிரிகளை ஈரான் இஸ்லாமிய குடியரசு சவாலுக்கு உட்படுத்தி, இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட ஆட்சி முறையை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே ஈரானின் எதிரிகள் இஸ்லாமிய ஆட்சிமுறையையும் அதன் அடிப்படையிலான அரசையும் தாக்குவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

உலக வல்லாதிக்க சக்திகள் அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் தமக்கென, தமது நலம்காக்கவென சில, பல குழுக்களை அமைத்து, போஷித்து வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த ரகசியம். இவை ஸ்லீப்பிங் செல்ஸ்களாக, மேலிடத்து உத்தரவு வரும்வரை காத்திருக்கும். இதுபோன்ற குழுக்கள் இஸ்லாமிய ஈரானிலும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு மேற்குலகால் ஈரானுக்கு எதிராக முடுக்கிவிப்பட்டுள்ள பிரசாரங்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூகப் பாத்திரங்களுடன் பிணைத்து வேண்டுமென்றே உலகெங்கும் பரப்பப்பட்டு வருகின்றன.

பெண் உரிமை மற்றும் ஒரு பெண்ணின் மதிப்பு என்பது அவர்களின் உடலை அவர்களே நிர்வகிப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய சன்மார்க்க கண்ணோட்டத்தில், பெண்கள் என்போர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் மற்றும் புதிய தலைமுறையினரை சிறந்த முறையில் உருவாக்கும் கல்வியாளர்களாக மதித்து கண்ணியப்படுத்தப்படுகிறார்கள்.

மஹ்சா அமினியின் மரணம் ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிகாரிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர் ஒரு ஈரானிய பிரஜை. மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான இயக்கங்களின் பிரச்சார சத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்த வழக்கு நீதித்துறை அமைப்பில் தொடரப்படுகிறது.

"வன்முறை" மற்றும் "எதிர்ப்பு" ஆகியவற்றுக்கு இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இன்று தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களின் சில தெருக்களில் ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகள் பொதுச் சொத்துக்களை அழிக்க வழிவகுத்தது மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது. புனித குர்'ஆணை கிழித்தெறிதல், தீயிட்டு கொளுத்துதல் போன்ற சம்பவங்கள் நிச்சயமாக சுயபுத்தியுள்ள எந்த முஸ்லிமும் செய்யத்துணியாத ஒன்றாகும். எதிரிகளின் சைபர்ஸ்பேஸ் (Cyberspace) தந்திரங்களில் பரிச்சயம் இல்லாத இளைஞர்கள் சிலர் துரதிர்ஷ்டவசமாக இவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகிவிடுகின்றனர்.

நாட்டு மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒரு பொறுப்புவாய்ந்த அரசாங்கத்துக்கு உள்ளது. கிளர்ச்சியாளர்கள் மக்களைத் தூண்டிவிட்டு, தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகளை பரப்புவதற்கு சைபர்ஸ்பேஸை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கும் முயற்சியே இணையத்தை தற்காலிகமாக முடக்குவதற்கான காரணமாகும். எதிர்ப்பாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும். மேலும், இஸ்லாமிய அரசுக்கு எதிரான இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் எதிர்ப்பாளர்கள் நாட்டில் கலவரங்களை ஒழுங்கமைப்பதற்காக சமூக வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால், குடிமக்கள் உயிர் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வலைதள ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருதப்படுகிறது. இணைய சேவைகளை கட்டுப்படுத்துவது ஈரான் இஸ்லாமிய குடியரசின் உள்ளார்ந்த நோக்கமல்ல என்பது வெளிப்படையானது, மேலும் பெரிய அளவிலான குழப்பங்கள் முடிவுக்கு வந்து நாட்டில் முழுமையான அமைதியை நிறுவுவதன் மூலம், இந்த கட்டுப்பாடு இயல்பாகவே மறைந்துவிடும்.

போலீஸ் வாகனங்களை எரிப்பது, போலீஸ்காரரின் கழுத்தை அறுப்பது மற்றும் நாட்டின் பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள், எந்தவொரு சாத்தியமான மற்றும் கணிக்க முடியாத தாக்குதலுக்கு எதிராக காவல்துறை தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றது என்பது யதார்த்தம். ஆர்ப்பாட்டங்களின் போது சில தீய சக்திகள் (கூலிப்படைகள்) அதற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபடுவதை நாம் அறிவோம். ஆர்ப்பாட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் ஆயுதங்களால் காயமடையவில்லை அல்லது கொல்லப்படவில்லை என்று ஈரானிய அரசு உறுதியாக கூறுகிறது; அவர்கள் கலகத்தில் ஈடுபட்ட சில இயக்கங்கள் இஸ்லாம் விரோத வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.


சமீபத்திய கலவரங்களின் போது, மஹ்ஸா அமினியின் இறப்பை புறக்கணித்து விட்டு, இஸ்லாமியக் குடியரசு அமைப்புக்கு எதிராக, மேற்குலகின் அதிகாரபூர்வ (அரசியல்) மற்றும் அதிகாரபூர்வமற்ற (ஊடக) நிறுவனங்களால் அனைத்து வகையான பொய்ச் செய்திகளையும் தயாரித்து கட்டவிழ்த்துவிடப்பட்டதை நாங்கள் கண்டோம். உதாரணமாக, மேற்குலகின் அதிகார எந்திரத்தால் ஆதரிக்கப்படும் புரட்சிக்கு எதிரான ஊடகங்கள், அமினியின் மண்டையில் அடிபட்டது போன்று  நிரூபிக்கும் தெளிவற்ற காட்சி படங்களை வெளியிட்டது, இது, குறுகிய காலத்திலேயே மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக சமீபத்திய தடயவியல். நம்பகமான மருத்துவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்ட அறிக்கை) பொய்யென நிரூபிக்கப்பட்டது.

கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட தலைவர்களில் பெரும்பாலோர் குர்திஸ்தானின் கோம்லே கட்சி (Kurdistan Komle party) போன்ற பிரிவினைவாத குழுக்களையும், முஃபாக்கீன் போன்ற பயங்கரவாத குழுக்களையும் சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

எட்டு ஆண்டுகால ஈரான்-ஈராக் போரின் போது ஈரானின் எதிரியின் பக்கம் இருந்த இதே குழுக்களின் கைகளில் ஆயிரக்கணக்கான ஈரானிய பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றதன் மூலம் இரத்தத்தால் கறைபட்டுள்ளன. ஒஸ்லோவில் உள்ள ஈரானிய தூதரகம் முன் குர்திஸ்தான் கோம்லே கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நோர்வே காவல்துறையினருக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டது, இது பலர் கைது செய்ய வழிவகுத்தது, மேலும் புரட்சிக்கு எதிரான குழுக்களுக்கும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பலருக்கு காயமும் ஏற்பட்டது.

"பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்பன மரியாதைக்குரிய வார்த்தைகள், ஆனால் அவை பல சமயங்களில் துஷ்பிரயோகிக்கப்படுகின்றன. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெறுவதற்கு பெண்களின் பங்களிப்பு மகத்தானது; ஏனெனில், புரட்சிக்கு முந்தைய ஆட்சி பெண்களை பாலியல் கருவியாகவும் பெண்களின் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தை கூறி, பெண் என்ற பெருமைக்குரிய சொல்லை தமது தேவையை நிறைவேற்றிக்கொள்ள ஷாவின் அரசு தம்மை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதை உணர்ந்தததும் அவர்கள் புரட்சியில் பங்கேற்ற முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

ஈரான் மக்கள் "குழப்பம்" மற்றும் "தார்மீக எல்லைகளைத் தாண்டுதல்" மற்றும் "மனித விழுமியங்களை அவமதித்தல்" ஆகியவற்றை சுதந்திரத்தின் எடுத்துக்காட்டுகளாகக் கருதவில்லை, அதை அவர்களின் சிவப்புக் கோடாகக் கருதுகின்றனர். "பெண்கள் சுதந்திரம்" என்ற சொல்லுக்கு இஸ்லாமியக் குடியரசு வழங்கும் அர்த்தம், சமூக வாழ்க்கையில் அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாத்து, சமூகத்தை அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதாகும். இஸ்லாத்தில் பெண்களின் நிலையும் மதிப்பும் மேற்கத்திய சமூகங்களில் வழங்கப்படும் அதன் மதிப்பிலிருந்து வேறுபட்டது.

குர்திஸ்தான் மற்றும் ஸஹிதான் போன்ற மாகாணங்களில் "ஈரானை பிளவுபடுத்தும்" நோக்கத்துடன் மேற்குலகம் மற்றும் சியோனிச ஆட்சியால் ஆதரிக்கப்படும் ஈரான் எதிர்ப்பு ஊடகங்கள் தொடர்ச்சியான துர்பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவால் போஷிக்கப்படும் பாகிஸ்தானின் பழங்குடி மற்றும் பாலைவனப் பகுதிகளில் இயங்கிவரும் "ஜெய்ஷ் அல்-அட்ல்" என்ற பயங்கரவாதக் குழு, ஸஹிதானில் வசிக்கும் சிலருக்கு ஆயுதங்களை விநியோகித்து, காவல் நிலையங்கள் மீது தாக்குதல்களை ஏற்பாடு செய்தது. "ஜெய்ஷ் அல்-அட்ல்" குழு, ஸஹிதானில் சமீபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது என்பது ஒரு முக்கியமான விஷயம்.

அமெரிக்கா, சியோனிச ஆட்சி மற்றும் அவற்றின் நாடுகளான ஐரோப்பிய மற்றும் பிராந்திய நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல் அழுத்தங்களுக்கு எதிராக ஈரான் இஸ்லாமிய குடியரசு பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவை மக்களைப் பழிவாங்கும் நோக்கில் இஸ்லாமிய ஈரானில் குழப்பத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்று ஊடகமாகும்.

மேற்கத்திய மற்றும் எதிரி ஊடகங்களின் உள்ளார்ந்த மற்றும் மோதல் அணுகுமுறை தொடர்பாக பரிச்சயம் கொண்ட, போதிய ஊடக கல்வியறிவு உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இத்தகைய தந்திரோபாயங்களின் ஏமாற்றத்திற்கு ஆளாகவில்லை. என்றாலும், குறைந்த அனுபவமுள்ள சிலர் இந்த தூண்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலைக்குரியது.