Saturday, April 27, 2019

எமது பிராந்தியத்தில் அமெரிக்காவினால் அதன் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது - இமாம் காமனெய்


US will never achieve its goal in our region - Imam Khamane'i

ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய் அவர்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதி நடவடிக்கைகள் தொடர்பாக அடிக்கடி மக்கள் மத்தியில் உரையாடுவார். அவர்களின் அவ்வாறான உரைகளில் இருந்து அமெரிக்க முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பமொன்றை (ஏப்ரல் 8, 2019) கீழே தருகின்றோம்:

 மேற்காசிய நாடுகளில் (மத்திய கிழக்கில்) ஏழு டிரில்லியன் டாலர்களை, மில்லியன்களுமல்ல, பில்லியன்களுமல்ல, ட்ரில்லியன்கள்; நாம் ஏழு ட்ரில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளோம்; ஆம் ட்ரில்லியன்கள் செலவிட்டபோதும் எந்த நன்மையையும் அடையவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆம், எந்த நன்மையையும் அடையவில்லை என்று அவர் சொன்னது உண்மைதான். அவர்கள் எவ்வளவு செலவு செய்தபோதும் எவ்வளவு முயற்சித்தபோதும் எமது பிராந்தியத்தில் அவர்களால் நிச்சயமாக எதனையும் அடைந்துகொள்ள முடியாது என்பதை அமேரிக்கா இப்போதிருந்து நன்றாக புரிந்துகொள்ளட்டும்.

அவர் வாயாலேயே கூறிய இந்த விடயம் தோல்வியின் அறிகுறியில்லையா...? இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது. மருட்சியினால் உந்தப்பட்டு, எவ்வளவு முயற்சி செய்தும் கூட, பெரிய ஷெய்த்தானால் இப்பகுதியில் அதனது இலக்குகளை அடைய முடியவில்லை.

அவர்கள் நிறைய பணம் செலவழித்தும் பயனில்லை. அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

"நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்". (8/36)

அவர்கள் ஏராளமான பணத்தை செலவு செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு நன்மையைக் கூட அறுவடை செய்யவில்லை. சாத்தானிய சக்திகள் இப்பகுதியில் எவ்வளவு செலவழித்த போதும், விளைவு அதுவாகவே இருக்கும். எவ்வளவு செலவு செய்தபோதும், எவ்வளவு முயற்சித்தபோதும் எமது பிராந்தியத்தில் அவர்களால் நிச்சயமாக எதனையும் அடைந்துகொள்ள முடியாது என்பதை அமேரிக்கா இப்போதிருந்து நன்றாக புரிந்து கொள்ளட்டும்.

இரண்டு நாட்களுக்கு முன், ட்ரம்ப் பாரசீக வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு [சவுதி, பஹ்ரைன், எமிரேட்ஸ்] ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை எம்மாலும் அணுகி, படிக்க முடிந்தது. அந்த கடிதத்தில், சில பணிக்காக அவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர்களுக்கு எழுதி இருந்தார். மேலும் அவர் "நான் உங்களுக்காக ஏழு டிரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளேன்" என்றும் குறிப்பிட்டிருந்தார். பாவப்பட்ட மனிதனே, ஏழு ட்ரில்லியன் டொலர்களை உண்மையிலேயே செலவு செய்தீர்களா...? எதற்காக செலவு செய்தீர்கள்...? ஈராக்கையும் சிரியாவையும் உங்கள் வசப்படுத்திக்கொள்ள செலவு செய்திருக்கலாம், ஆனால் அதிலும் நீங்கள் தோல்வியே அடைந்தீர்கள். அவர்கள் எதையாவது செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கடிதத்தில் கூறுகிறார்: அவருடைய கடிதத்தில் இன்னும் பல "உத்தரவுகளும்" அடங்கி இருந்தன.  குறிப்பிட்ட அந்த கடிதத்தை அந்த நாடுகளின் அனைத்து அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அதுபோன்ற "உத்தரவுகளை" இஸ்லாமிய குடியரசிற்கும் முன்வைக்க அவர்கள் விரும்புகிறார்கள்; ஆனால் அவர்களால் அது  முடியாது; ஏனெனில் அவர்கள் பகைமையை வெளிப்படுத்தி, ஈரான் இஸ்லாமிய குடியரசை அகற்ற முயலுகிறார்கள். இந்த இஸ்லாமிய முறையை நீக்குவதற்குத்தான் அவர்களது இந்தப் போராட்டம்.

அரசியல் ரீதியாக, கலாசார ரீதியாக மற்றும் ராணுவ ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்வி கண்ட எமது எதிரிகள், இப்போது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளனர். இறைவனின் அருளால், இதிலும் எதிரிகள் தோற்கடிக்கப்படுவர் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த போரில் வெற்றிபெற அவர்கள் சகல முயற்சியையும் செய்கிறார்கள்: அவர்கள் கபடத்தனமாக ஈரானிய மக்களுக்கு செய்தி அனுப்புகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, புத்தி சுயாதீனமற்ற ஒருவனைப்போல, ஈரானிய மக்களை விழித்து கூறுகின்றார்:  "உங்களது அரசு உங்களது பணத்தை சிரியாவிலும் ஈராக்கிலும் செலவு செய்கின்றது" என்று. அது பற்றிய அறிவு அவருக்கு கிடையாது.

இந்த தகுதியற்றவர்களின் எஜமான் [டோனால்ட் டிரம்ப்] தான் சொல்கிறார்: "நாங்கள் ஏழு டிரில்லியன் டாலர்களை அப்பிராந்தியத்தில் செலவழித்தோம் - அதாவது, சிரியாவிலும் ஈராக்கிலும் - எதையும் சாதிக்கவில்லை" என்று.

இஸ்லாமிய குடியரசு அதுபோல் எந்த விரயத்தையும் செய்யவில்லை. சிரிய  மற்றும் ஈராக் அரசாங்கங்கள் எங்கள் நண்பர்கள், அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் அந்த நாடுகளை அச்சுறுத்தின; அதனால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்தோம். எதிர்காலத்திலும் நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்: எமது நட்பு நாடுகளாய் இருக்கும் எந்த அரசாங்கத்திற்கும் நாம் உதவுவோம். இது பணம் சம்பந்தப்பட்ட விடயமல்ல; நட்பு நாடுகளுக்கிடையில் இடம்பெறும் சாதாரண கொடுக்கல், வாங்கலாகும். (ட்ரம்ப்) அவரின் பேச்சின் ஊடாக ஈரானிய மக்களை இஸ்லாமிய குடியரசின் கொள்கைக்கு எதிராகவும் இஸ்லாமிய குடியரசு முறைமைக்கு எதிராகவும் திரும்பிவிடலாம் என்றும் கனவு காண்கின்றார். அது கனவாகவே இருக்கும்.


No comments:

Post a Comment