Wednesday, April 10, 2019

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளிவிடும் - ஈரான் வெளிவிகார அமைச்சர்

Iran Declares U.S. Centcom a ‘Terrorist Group’


அமெரிக்க அரசு பயங்கரவாதத்தை போஷிக்கும் அரசு என்றும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவை (Centcom) பயங்கரவாத அமைப்பாகவும் ஈரான் இஸ்லாமிய குடியரசு பிரகடனப்படுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரகடனப்படுத்தியத்தைத் தொடர்ந்து, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டமைச்சர் ஜவாத் ஸரீப் அவர்களால் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் முன்மொழியப்பட்டதை ஏற்று இஸ்லாமிய குடியரசின் அதி உயர் தேசிய பாதுகாப்பு சபை இந்த பிரகடனத்தை செய்துள்ளது.


பிராந்தியத்தில் பயங்கரவாத குழுக்களுக்கு அமெரிக்க இராணுவப் படைகள் இரகசிய ஆதரவு வழங்கி வருவதையும் பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபடுவதையும் சுட்டிக்காட்டி, அமேரிக்க ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகளையும் வெளிநாட்டமைச்சர் ஸரீப் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். 

அமெரிக்க பொருளாதாரத் தடைக்கு பதிலளிக்கும் முகமாக இஸ்லாமிய குடியரசின் மஜ்லிஸ், 2017ம் ஆண்டு ஈரானின் ஏவுகணை திட்டத்துக்கும் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பாதுகாப்பு பொறிமுறைக்கும் அமோக ஆதரவை வழங்கியது.

கடந்த ஞாயிறன்று (7/04/2019) ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், வாஷிங்டன் இஸ்லாமிய புரட்சிக் காவலர்களை பயங்கரவாதிகள் என பிரகடனப்படுத்தினால், ஈரான் அமெரிக்காவிற்கு எதிராக அதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


"எமது காவல்படையினருக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தகுந்த விடையளிப்போம்" என்று உறுதிப்படைக் கூறினர். "இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளை உருவாக்குவதும் அவர்களுக்கு துணை போகிறவர்களும் அமெரிக்க தலைவர்களே; அவர்களது முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்காக நிச்சயமாக அவர்கள் வருந்துவர்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் பாதுகாப்புப் படையினரை பயங்கரவாதிகள் என்று முத்திரையிடும் முதல் முட்டாள்தனத்தை டிரம்ப் செய்துள்ளார். கடந்த ஆண்டு 2015 செய்துகொள்ளப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டு ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர் நிறுவப்பட்ட ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ஐ.ஆர்.ஜி.சியின் நிதிச் சொத்துக்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நீதித்துறைத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யத் இப்ராஹிம் ரயீஸி, இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக அமெரிக்காவினால் முன்னர் எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் போலவே இதுவும் தோல்வியடையும் என்று குறிப்பிட்டார்.

"உலகில் பயங்கவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பதோடு ஆயுத கலாசாரத்தை உருவாக்கும் ஒரு நாடு, மக்களுக்கு உதவுவதற்கும் இஸ்லாமிய இயக்கங்களை பாதுகாப்பதற்கும் ஒரு முன்னோடியாக திகழ்கின்ற பிறிதொரு நாட்டின் அதிகாரபூர்வமான ஆயுதப்படையை பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிடுகின்றது. உலக நாடுகள் மத்தியில், அரசுகளின் பார்வையில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு மதிப்பும் கிடையாது" என்றும் இப்ராஹிம் ரயீஸி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் அமெரிக்காவின் இரத்தக் கறைபடிந்த சரித்திரத்தை நன்கு அறிந்திருக்கும் உலக மக்கள் எமது உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் பதில் நடவடிக்கையினை நிச்சயமாக ஏற்றுக்கொள்வர் என்றும் ஆயத்துல்லாஹ் ரயீஸி கூறினார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போ மற்றும் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதியின் உள்வட்டத்தில் இணையுமுன்னரே ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துவந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிய ஈரானின் எதிரிகள் என்பது தெளிவு.

"உண்மையில், அவர்கள் அமெரிக்காவை ஒரு புதை குழிக்குள் தள்ளிவிட முற்படுகின்றனர். இதனால் ஏற்படும் பேரழிவை ட்ரம்பம் நன்றாக அறிந்திருக்க வேண்டும்" என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஸரீப் ஞாயிறன்று தனது ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் எம்மை "பயங்கரவாத அமைப்பு" என்று பெயரிட்டால் எமது செயல்திட்டத்தில் அதுபோன்ற மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஆர்.ஜி.சி யின் தலைமைத் தளபதி ஞாயிறன்று எச்சரித்தார்.

"அமெரிக்கர்கள் இத்தகைய மட்டரக நடவடிக்கைகளை எடுத்தால், நமது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்றால், ஈரானின் இஸ்லாமிய நடைமுறைக கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் எங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்." என்று மேஜர் ஜெனரல் முஹம்மத் அலி ஜபரி கூறினார்.

ஈரானிய ஆயுதப் படைகளின் ஒரு பிரிவான ஐ.ஆர்.ஜி.சி 1980-1988 ஆண்டுகளில் சத்தாமினால் திணிக்கப்பட்ட யுத்தத்தில் நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்கைக் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு தசாப்தங்களாக, ஐ.ஆர்.ஜி.சி இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான, எதிரிகளால் உந்தப்பட்ட சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அது கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கூட தீவிர பங்களிப்பை செய்துவருகிறது.

ஈரானில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படும் முக்கிய அமைப்பாக IRGCயின் குத்ஸ் படைப்பிரிவு இருந்து வருகிறது.  ஈராக் மற்றும் சிரியாவில் தாயெஸ் மற்றும் ஏனைய பயங்கரவாதிகளை ஒழிப்பதிலும் அது முக்கிய பங்கு வகித்தது.

பல அரசியல் ஆய்வாளர்களின் பார்வையாளர்கள் தக்பீரி பயங்கரவாதிகள் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகிறார்கள்; இது முஸ்லீம் நாடுகளை பலவீனப்படுத்தி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஆட்சியின் நலன்களை காக்கும் அமைப்பாகும்.

ஐ.ஆர்.ஜி.சி இந்த பிராந்தியத்தில் ஒரு சக்திவாய்ந்த அமைப்பு என்பதை நிரூபித்துள்ளது. இதனை முன்னுதாரமாகக் கொண்டு, பல பிரபலமான போராளி குழுக்கள் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பிரசன்னத்துக்கும் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் எதிராக உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment