Friday, November 25, 2022

ஈரானின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் அமெரிக்கா, மேற்கு நாடுகள் தலையிடுகின்றன” ஈரானிய தூதர்

“America, West interfering in internal problems of Iran” Iranian Ambassador Hashem Ashjazadeh in conversation with the Daily Mirror sheds light on the current civil protests in Iran


Iranian Ambassador Hashem Ashjazadeh


கோப்புப் படம்: ஆகஸ்ட் 19, 1953 அன்று ஈரான் முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்தனதெஹ்ரான் தெருக்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர். சிஐஏ மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையால் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தில் ஈரானிய பிரதமர் முகமது மொசாடேக் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். ஈரானின் தலைவராக ஷா மீண்டும் நிறுவப்பட்டார். படம் (AFP)

அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஆதரவு ஷா (மன்னர்) பதவியிலிருந்து (மக்களால்) தூக்கி எறியப்பட்டு 1979 ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றிபெற்றத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஈரானுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

1951 ஆம் ஆண்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முகமது மொசத்தேக் ஈரானின் எண்ணெய் தொழில்துறையை தேசியமயமாக்கியதை அடுத்து, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) ஏற்பாடு செய்த சதியில் 1953 ஆம் ஆண்டு பதவி கவிழ்க்கப்பட்டு, ஷா பதவியில் அமர்த்தப்பட்டார்.

ஈரானின் எண்ணெய் வளங்களைக் அன்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அமெரிக்க CIA வின் தயவை நாடியது மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து, பிரதமர் மோசத்தேக் அவர்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து, சில நேர்மையற்ற மதகுருமார்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்தது.

Mohammad Mossadegh

ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, மோசத்தேக் கைது செய்யப்பட்டு, தனது வாழ்நாள் முழுவதையும் வீட்டுக் காவலில் கழித்தார். 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியால் தூக்கியெறியப்படும் வரை ஆட்சியில் ஷாவே இருந்தார். 1953 ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதை 2013 ஆகஸ்ட் 19 அன்று, CIA முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து ஷா தூக்கியெறியப்பட்டதிலிருந்தும், அமெரிக்க ராஜதந்திரிகளை பணயக் கைதிகளாக வைத்திருந்த காரணத்தினால் ஏற்பட்ட அவமானத்திற்காக அமெரிக்கா ஒருபோதும் ஈரானுக்கும் அதன் மக்களுக்கும் மன்னிக்க தயாராக இருக்கவில்லை.

ஷா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், ஈரான் அரசாங்கம் ஷரியாவின் (முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை நிர்வகிக்கும் இஸ்லாமிய மதச் சட்டங்களின் தொகுப்பு) அடிப்படையில் "கவர்னர்" (வெலாயத்) அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் என்ற தனித்துவமான கொள்கையைப் பின்பற்றுகிறது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 1979 அரசியலமைப்பு, ஈரானின் பாதுகாவலரை உச்ச தலைவராக ஆக்கியது. ஆயதுல்லாஹ் கொமெய்னி இஸ்லாமிய குடியரசின் முதல் தலைவராவார்.

இதையடுத்து, ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் அதன் மக்கள் மீது அமெரிக்கா ஒருதலைப்பட்ச தடைகளை விதித்தது. பொருளாதாரத் தடைகள் வெளிநாட்டு வர்த்தகம், நிதிச் சேவைகள், எரிசக்தித் துறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து. தடைகளில் ஈரான் மற்றும் ஈரானுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியக் காப்பீட்டாளர்களால் காப்பீடு மற்றும் மறுகாப்பீடு வழங்குவதற்கான தடையும் அடங்கும்.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளை அடுத்து, 2020ல் ஈரான் 3.45 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையில் விழுந்ததாக IMF மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. IMF படி, நாடு 2019 இல் $6.11 பில்லியன் வர்த்தக மிகையாக கொண்டிருந்தது. 

டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியரான அப்பாஸ் கெப்ரியாயிசாதேவின் அறிக்கையின் படி, அமெரிக்கத் தடைகள் "ஈரானில் புற்றுநோயாளிகளை மறைமுகமாகக் கொல்கின்றன", கடுமையான மருந்துப் பற்றாக்குறையை உருவாக்கி விலைவாசி உயர்வை உருவாக்குகின்றன.

எனினும், பொருளாதாரத் தடைகள் மற்றும் பல சிரமங்கள் அவர்கள் மீது குவிந்திருந்தாலும், ஈரானிய மக்கள் அமெரிக்காவின் தந்திரங்களுக்கும் சதிகளுக்கும் எதிராக தங்கள் அரசாங்கத்துடன் நின்றனர். 

ஷாவை வீழ்த்திய புரட்சிக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஈரான் மீண்டும் கொந்தளிப்பை எதிர்கொள்கிறது. தற்போதைய அமைதியின்மை ஈரானிய புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட முதல் பெரிய எழுச்சியாகும், இந்த முறை ஈரானியர்கள் இளம் பெண் - மெஹ்சா  அமினியின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பாக ஈரானியர்கள் சிலர் தெருக்களில் இறங்கினர்.

மஹ்சா அமினி, முறையற்ற விதத்தில் ஹிஜாப் அணிந்ததாகக் கூறி ஈரானின் அறநெறிப் பொலிசாரால் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அவரது மரணம் ஏற்கனவே இருந்த உடல் நிலையின் விளைவாகும் என்று போலீசார் கூறினர். ஆனால், அவரது குடும்பத்தினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை; அடித்ததால்தான் அமினி இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

நவம்பர் 1 ஆம் தேதி, அரசு சார்பு செய்தி நிறுவனமான ISNA தலைநகர் தெஹ்ரானில் 315 எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டப்பட்டதையும், பிற மாகாணங்களில் 700 க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டதையும் வெளிப்படுத்தியது.

சர்ச்சை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், Daily Mirror, இலங்கையில் உள்ள ஈரானின் தூதுவர் ஹாஷிம் அஷ்ஜசாதேவிடம், நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் ஆடை அணியாததற்காக இளம் பெண் காவலில் இருக்கையில் மரணமடைந்தது குறித்து உரையாடியது.

பொலிஸ் காவலில் இருந்தபோது மஹ்சா அமினியின் துரதிர்ஷ்டவசமான மரணம் அனைத்து ஈரானியர்களுக்கும் கசப்பான மற்றும் வேதனையான செய்தி என்று ஈரானிய தூதர் அஷ்ஜசாதே கூறினார்.

இதனையடுத்து, யுவதியின் மரணம் தொடர்பில் ஜனாதிபதியே விசேட விசாரணை மற்றும் நீதி விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கோரினார். அவர் மஹ்சா அமினியின் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் மற்றும் விசாரணைக்கு உறுதியளித்தார்.

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, இந்த குற்றத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள், நாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வெளிநாட்டு ஆதரவு குழுக்களால் வன்முறையாக மாற்றப்பட்டது; பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் இடம்பெற்றன. அயல்நாடுகளுடன் ஸ்தாபிக்கப்பட்ட தொடர்பைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட, இது பிரச்சனையை மோசமாக்கியது. ஒரு முறையான சிவில் எதிர்ப்பின் திசையை அவர்கள் நயவஞ்சகமாக தலையீட்டு நிகழ்ச்சி நிரல்களை நோக்கி வன்முறையாக மாற்றினர்.

சிவில் எதிர்ப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையும் ஒன்றல்ல, இவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. இன்று நாம் பார்ப்பது அப்பாவி பொதுமக்களையும் பொதுச் சொத்துக்களையும் குறிவைக்கும் வன்முறையைத்தான்.

நேர்காணலின் பகுதிகள்:

கே. போராட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை எதிர்த்தவர்கள் குறிப்பிட்ட நாட்டின் முகவர்களால் தாக்குவதற்கும் வழிநடத்தப்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்களா? அச் சம்பவங்களைக் குறிப்பிட்டு தெளிவுபடுத்த முடியுமா?

மஹ்சா அமினியின் துரதிர்ஷ்டவசமான மரணத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல கூட்டங்கள். போராட்டங்கள் அமைதியானவை. ஆனால் சில பகுதிகளில் வன்முறை வெடித்து கவலையையும் அழிவையும் ஏற்படுத்தியது. எனது கருத்துப்படி, இந்தச் செயல்கள் அப்போதைய பிரதமர் மொசத்தேக் அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்னர் அமெரிக்க CIA வால் தூண்டப்பட்ட நிகழ்வுகளை நினைவூட்டுகிறது.

கள உண்மைகளின் அடிப்படையில், இந்த வன்முறைச் செயல்கள் அமெரிக்காவால் தூண்டப்பட்டவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மீண்டும் இந்தக் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உள்விவகாரங்களில் தலையிடத் தொடங்கியுள்ளன.

பிற வெளிப்புற சக்திகளும் வெளிநாட்டு ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களும் தங்கள் முகவர்களை வன்முறையில் பங்கேற்க தனிநபர்களை தூண்டுவதற்கு வழிநடத்துகின்றன. பாரசீக மொழியில் ஒளிபரப்பப்படும் இணையதளங்கள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி நெட்வொர்க்குகளும் பங்களித்தன, அவை இளைஞர்களையும் மக்களையும் வன்முறைச் செயல்களில் ஈடுபடத் தூண்டின. 

கலவரம் மற்றும் வன்முறையாக மாறிய போராட்டங்களின் போது, பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சில தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டு ஆதரவுடன் இயங்கும் ஊடகங்களின் உதவியுடன் பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டன மற்றும் அவர்களுடன் உடன்படாத பொதுமக்களுக்கு எதிராகவும், மக்களை வன்முறைக்கு தூண்டுவதன் மூலம் காவல்துறைக்கு எதிராகவும். சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிகள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

கே. போராட்டங்களில் வெளிநாட்டுக் கரம் ஈடுபட்டதாக நீங்கள் கூறுவது எது? தீ வைப்பு, உயிர் இழப்பு மற்றும் காயங்கள் ஆகியவற்றின் தன்மையையும் விளக்க முடியுமா? இறுதியாக, எதிர்ப்பாளர்களில் சிலர் என்ன வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்? மொத்தத்தில், ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, எதிர்ப்பாளர்களிடம் ஆயுதங்கள் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?

இந்த பயங்கர கலவரங்களின் போது, பல பொது மற்றும் தனியார் சொத்துக்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன அல்லது சூறையாடப்பட்டன. கலகக்காரர்கள் பயன்படுத்திய ஆயுதங்களால் சில சட்ட அமலாக்க முகவர்களும் சாதாரண மக்களும் தங்கள் உயிர்களை இழந்தனர் அல்லது காயமடைந்தனர்.

கே. பாரசீக மொழியில் ஒளிபரப்பப்படும் இணையதளங்கள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் இளைஞர்களைத் தூண்டுவதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். இவற்றில் சில தளங்கள் மற்றும் குறிப்பிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி நெட்வொர்க்குகளை நீங்கள் குறிப்பிட முடியுமா?

பாரசீக மொழி BBC, VOA, Iran International மற்றும் Manoto ஆகியவை முக்கிய வெளிநாட்டு தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் சில ஆகும்.

கே. போராட்டங்கள் வெடித்ததில் வெளிநாட்டு தலையீடு இருந்ததாக நீங்கள் கூறுவது எதனை?

அமைதியான முறையில் சிவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நமது நாட்டை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட செயற்பாட்டாளர்கள் பிற மாநிலங்களில் கிளர்ச்சி மற்றும் வன்முறையை நோக்கிய உள்நாட்டு போராட்டங்களை வழிநடத்தினர்.

அமைதியான போராட்ட இயக்கத்தில் ஊடுருவிய பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, விரோதமான வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக அறியப்படுகிறது, இது விஷயங்களை இன்னும் சிக்கலாக்கியது.

சிவில் எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதம் அல்லது அப்பாவி பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை குறிவைக்கும் வேறுவிதமான வன்முறைகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது.

அமினியின் மரணத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றன.

அமெரிக்காவும் சில மேற்கத்திய சக்திகளும் ஈரானில் உள்ள உள்நாட்டுப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிடத் தொடங்கின, கலவரம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களை ஆதரித்தன.

ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள் போன்ற பிற வெளிப்புற சக்திகள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் எரி பொருட்களை வழங்குதல், பொதுக் கட்டிடங்களைத் தாக்குதல், சாலைத் தடைகளை உருவாக்குதல், வாகனப் போக்குவரத்தைத் தடுத்தல்  மற்றும் சட்டம் ஒழுங்குப் படைகளைத் தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களுக்குத் தூண்டினர்.

பாரசீக மொழியில் ஒளிபரப்பப்படும் இணையதளங்கள் மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி நெட்வொர்க்குகளும் ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறைக்குத் தூண்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன.

கே. பொது/அரசு சொத்துக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?

கலவரத்தின் போது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது அல்லது சூறையாடப்பட்டது. ஒரு சில சட்ட அமலாக்க முகவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆயுதமேந்திய கலகக்காரர்களால் தங்கள் உயிர்களை இழந்தனர் அல்லது காயமடைந்தனர். வங்கிகள், ஏடிஎம்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் (நோயாளிகளை ஏற்றிச்செல்லும்போது கூட) போன்ற பொது சேவைகள் தாக்கப்பட்டன. பொது போக்குவரத்து, போலீஸ் கார்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மத இடங்கள் ஆகியவையும் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உட்பட்டன. அவற்றில் பல சாம்பலாக்கப்பட்டன.

ஈரானில், மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, வெளிநாட்டு சக்திகளின் ஈடுபாடு அமைதியான போராட்டங்களின் திசையை மாற்றியது, மரணம் மற்றும் அழிவுக்கு வழிவகுத்தது.

1953 ஆகஸ்ட் 19, அன்று, CIA ஆல் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நிதியுதவி பெற்ற தெருப் போராட்டங்கள் எப்படி மொசத்தக்கை அகற்றி ஷாவை ஈரானின் தலைவராக நியமித்தது என்பது எங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது.

ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தபோது நாட்டை விட்டு வெளியேறிய ஷா, உடனடியாக நாடு திரும்பினார், ஆட்சியைப் கைப்பற்றி, தனது நன்றியைக் காட்டுவதற்காக ஈரானின் எண்ணெய் வயல்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்க கையெழுத்திட்டார்.

தற்போதைய தெருப் போராட்டங்களின் ஊடுருவல் மற்றும் நடந்து வரும் வன்முறைகள் ஈரானைச் சீர்குலைக்கவும், மற்றொரு கைப்பாவை ஆட்சியை நிறுவவும், ஈரானின் எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் தொடர்ச்சியாகும்.

https://www.dailymirror.lk/hard-talk/America-West-interfering-in-internal-problems-of-Iran-Iranian-Ambassador-Hashem-Ashjazadeh-in-conversation-with-the-Daily-Mirror-sheds-light-on-the-current-civil-protests-in-Iran/334-249063

No comments:

Post a Comment