Tuesday, April 26, 2022

லெபனானில் ரமலானை கொண்டாடும் இஸ்லாமியர்கள், முஸ்லிம் அல்லாதவர்கள்

 Muslims, non-Muslims enjoying Ramadan festivities in Lebanon

கிறிஸ்துமஸைப் போலவேலெபனானில் ரமலான் ஒரு தேசிய நிகழ்வாகக் கருதப்படுகிறதுஅதன் உற்சவங்கள் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் வரும் நோன்பை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தனித்துவமான வழிகளில் கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதன் தனித்துவமான மரபுகள் மற்றும் நடைமுறைகளுடன் இந்த புனித மாதத்தை வரவேற்கிறது.

ரமலான் பிறை கண்டவுடன் உற்சவங்கள் தொடங்கி விடுகின்றன மற்றும் ஆன்மீக ஒழுக்கம், தொண்டு, தாராள மனப்பான்மை மற்றும் பிரார்த்தனைக்கான நேரம் தொடங்கிவிடுகிறது.

பகலில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் விடியற்காலையில் இருந்து சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருப்பதையும், எந்த திரவத்தையும் (தண்ணீர் உட்பட) சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்ப்பதையும், புகைபிடித்தல், வம்பளப்பது மற்றும் வாக்குவாதம் செய்வது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதையும் நீங்கள் காணலாம். இருப்பினும், ரமழானின் உயிர்த்துடிப்புடன் இருப்பது இரவுகள் என்றால் மிகையாகாது.

அரபு உலகம் முழுவதும், அந்தி சாயும் நேரத்தில் இப்தார் (நோன்பு முறித்தல்) முடிந்தவுடன் பண்டிகைகள் தொடங்குகின்றன, ஏனெனில் அமைதியான, மெதுவான உணவு மந்த நிலைக்குப் பிறகு சுற்றுப்புறங்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றன.

லெபனானில் ரமலான் வித்தியாசமானது ஆனால் மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். மக்கள்தொகையில் 40% ஆனோர் கிறிஸ்தவர்கள் என்பதால், ரமலான் உற்சவ காலத்தில்  நீங்கள் லெபனானில் ஒரு புதிய அனுபவத்தை பெறுவீர்கள். அவர்களால் பகல் நேரத்தில் கண்ணியமான கண் அசைவின் மூலம் ஒரு கண்ணியமான உணவைப் பெற முடியும்.

லெபனிய முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 21ம் இரவை லைலத்துல் கத்ர் இரவாக பொதுவாக அனுஷ்டித்த போதிலும் அம்மாதத்தின் கடைசி பத்து இரவுகளையும் புனித குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், பாவமன்னிப்பு தேடுதல் போன்ற விடயங்களில் தம்மை ஈடுபடுத்தி, பள்ளிவாசல்களில் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

புனித மாதம் வந்துவிட்டால், மேற்கு ஆசிய நாடான லெபனானில் சில சுவாரஸ்யமான ரமலான் பழக்க வழக்கங்களை பார்ப்போம்.

முஸாஹராதி (வைகறையில் எழுப்புபவர்)

ரமழானின் விடியற்காலையில், அரபு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக லெபனானில் முசாஹராதி ஒரு பொதுவான காட்சியாகும். அவர் வைகறையில் எழுப்புபவர் என்றும் குறிப்பிடப்படுகிறார், அவர் சஹருக்கு முஸ்லிம்களை எழுப்ப விடியற்காலையில் தனது டிரம்மை அடித்துக்கொண்டு வீதி வீதியாக வலம்வருவார்.

முஸாஹராதிக்கு நன்றி, தங்கள் சஹர் உணவைத் தவறவிட மாட்டார்கள் என்பதை அறிந்து மக்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.

அவர் விடியற்காலையில் காற்றை நிரப்பும் கணீர் என்ற குரல் கொண்டவர், மக்களை எழுந்திருங்கள், சஹர் நேரமாகிவிட்டது, சாப்பிடுங்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு (விடியல் தொழுகை) தயார் செய்து ரமழானின் புதிய நாளைத் தொடங்குங்கள் என்றவாறு பாடிக்கொண்டு, வீதியெங்கும் அலைவார்.

ஹிஜாஸில் உள்ள முஸாஹராதியின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இஸ்லாமிய சகாப்தங்களில், குறிப்பாக மம்லுக் மற்றும் ஒட்டோமான் காலங்களில் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாக அவரது செயல்பாடு தெரிகிறது.

ரமலானை கொண்டாடும் முஸ்லிமல்லாதோர்

லெபனானில், ரமலான், கிறிஸ்மஸ் போன்ற ஒரு தேசிய விழாவாகவும் கருதப்படுகிறது. இந்த நாட்டில், ரமலான் பண்டிகைகள் அனைத்து சமூகத்தினராலும் கொண்டாடப்படுகின்றது, அவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இப்தார் விருந்தில் அனைத்து சமூக தலைவர்கள் மற்றும் மத பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இப்தார் விருந்தில், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள், நோன்பு நோற்பவர்கள் மற்றும் நோன்பு நோற்காதவர்கள், அருகருகே அமர்ந்திருப்பர். உண்ணாவிரதம் இருப்பவர்களின் தனித்தன்மைகள் மதிக்கப்படுகின்றன. இரு தரப்பிலும் சமரசம் மற்றும் சகிப்புத்தன்மை அவர்கள் மத்தியில் உள்ளது.

தொண்டு நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்கின்றன, இதில் பல்வேறு மத சமூகங்கள் மற்றும் பிரிவுகளில் இருந்து விருந்தினர்கள் அழைக்கப்படுவைத்து வழமையாகும்.

 லெபனானில் திரிபோலி ரமழானின் போது இரவில் உயிர் பெறுகிறது

திரிபோலியில் ரமலான் மிகவும் அழகாக இருக்கும். வித விதமான இனிப்பு பண்டங்கள், உணவு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை அனுபவிக்க நாடு முழுவதிலுமிருந்து மக்கள் வருவதால், புனித மாதத்தில், மகிழ்ச்சியான சூழ்நிலையில், திரிபோலி ஒரு புதிய உத்வேகம் பெற்றுவிடும்.

சூரிய அஸ்தமனத்தில், முஸ்லிம் குடும்பங்கள் கிறிஸ்தவ அண்டை வீட்டாருடன் இப்தார் உணவை உண்டுகளிப்பார்கள் மற்றும் ஹகாவதி அல்லது கதைசொல்லிகளைக் கேட்பதற்காக சிற்றுண்டி விடுதிகளில் நீண்ட நேரம் தரித்திருப்பார்கள், சிலர் சூஃபிகளின் கனவுப்போன்ற சுழல் நிகழ்ச்சியைக் காண பூங்காவிற்குச் செல்வார்கள். இப்தாருக்குப் பிறகு மக்கள் இரவில் நீண்ட நேரம் நல்லமல்கள் செய்யும் உற்சாகத்தை பெற்றுவிடுகின்றன.ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் பண்டிகை காலங்களில் லெபனான் நகரம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

அதிகாலை 2.15 ஆகிவிட்டது, திரிபோலி பழைய நகரத்தில் வசிக்கும் மக்களை சஹருக்கு முன் எழுப்புவதற்காக ஒரு முஸாஹராட்டி டிரம்ஸை அடித்துக் கொண்டிருந்தார். அமைதியாக இருந்த நகரத்தின் தெருக்கள் திடீரென உயிர்ப்பற்று எழ தொடங்குகின்றன. சமையலின் வாசனையானது, வழிப்போக்கர்களுக்கு வீடுகளில் உணவைப் பகிர்ந்துகொள்வதை அறிய முடிகிறது.

இப்தாருக்கான லெபனான் சிறப்பு இனிப்புகள்

ரமழானின் இன்றியமையாத பகுதியாக, சஹர் மற்றும் இப்தார் உணவுகள் உலகெங்கிலும் முஸ்லிம்கள் மத்தியில் முக்கியமானவையாக உள்ளன, இது மக்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கு மற்றொரு காரணத்தை வழங்குகிறது.

அரபு நாடுகளில், குறிப்பாக லெபனானில், புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் தனித்துவமான உணவுகள் மற்றும் இனிப்புகள் உள்ளன.

பின்வரும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் சில சிறப்பு ரமலான் ரெசிபிகளாகும், லெபனான் மக்கள் பொதுவாக ரமழானின் போது இஃப்தார் உணவுக்காக பின்வருவனவற்றை தயார் செய்கிறார்கள்.

கெல்லாஜ்

ரமலான் சீசனில் கெல்லாஜ் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இது அஷ்டா கிரீம் நிரப்பப்பட்ட ஒரு லேசான மா கலவையாகும், ஆழமாக வறுத்தெடுக்கப்பட்டு, ஒரு கணம் சிரப்பில் ஒரே நேரத்தில் ஊறவைக்கப்படுகிறது. ஒரு தூய அற்புதமான சுவை...!

 மFப்ரூக்கே

ரவை மாவு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றை மாவுடன் கலந்து மஃப்ரூக்கே தயாரிக்கப்படுகிறது. பால்கட்டி மற்றும் வறுத்த கொட்டைகள் அதன் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. Mafroukeh ஒரு தட்டில் பரிமாறப்படலாம் அல்லது பல வடிவங்களில் வடிவமைக்கப்படலாம்.

ரமலான் காலத்தில் பொதுவாக தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு, சாய்பியேட், பால்கட்டி நிரப்பப்பட்ட பேஸ்ட்ரியின் முறுமுறுப்பான அடுக்குகளால் ஆனது. Chaaybiyet பொதுவாக ஒரு முக்கோண வடிவில் வடிவமைக்கப்படுகிறது மற்றும் நொறுக்கப்பட்ட பிஸ்தா மற்றும் மிட்டாய் செய்யப்பட்ட ஆரஞ்சு சுளைகளால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் நிச்சயமாக இனிப்பு சிரப்பால் மூடப்பட்டிருக்கும்! அதை குளிராகவோ அல்லது சூடாகவோ பரிமாறலாம்.

டௌகியே

Daoukiyeh பெய்ரூட்டின் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். இது முதன்முதலில் 80 களில் பெய்ரூட்டில் உள்ள ஒரு சிறிய பேஸ்ட்ரி கடையான Al-Daouk இனிப்புகளால் உருவாக்கப்பட்டது, மேலும் குடும்பத்தின் கடைசி பெயரால் பெயரிடப்பட்டது.

Daoukiyeh என்பது அஷ்டா (பால்கட்டி)வின் ஒரு அடுக்கு மற்றும் பிஸ்தா பேஸ்டின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் முந்திரி பருப்புகளின் அடுக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பிஸ்தாவின் நிறம் Daoukiyeh க்கு அதன் சிறப்பு பச்சை நிறத்தை அளிக்கிறது. இன்று, Daoukiyeh நாடு முழுவதும் உள்ள பல பேஸ்ட்ரி கடைகளில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் வழங்கப்படுகிறது.

கத்தாயேஃப்

கத்தாயேஃப் என்பது ரமழானில் மிகவும் பொதுவாக தயாரிக்கப்படும் சுவையான உணவாகும். இந்த அரபு உணவானது பேன்கேக் போன்ற மாவை வால்நட் மற்றும் சர்க்கரை கலவை அல்லது இனிப்பு அக்காவி சீஸ் அல்லது அஷ்டா (ரோஸ் வாட்டருடன் உறைந்த கிரீம்) போன்ற பல்வேறு நிரப்புகளுடன் தயாரிக்கின்றனர். மேலே குறிப்பிட்ட பொருட்களால் நிறைக்கப்பட்டு செய்யப்பட்ட கத்தாயேஃப் பின்னர் வறுக்கப்பட்டு, சர்க்கரை பாகில் முக்கி பரிமாறப்படும்.

மொத்தத்தில் புனித ரமலான் மாதம் முழுவதும் ஒரு புதுமையான அனுபவத்தை லெபனானில் பெறுவீர்கள் என்பது நிச்சயம்.

https://en.mehrnews.com/news/186023/Muslims-non-Muslims-enjoying-Ramadan-festivities-in-Lebanon

No comments:

Post a Comment