Contributors

Monday, November 6, 2023

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களே, அநியாயத்திற்கு துணைபோகாதீர்கள்

The British Relationship With Zionism, Israel and Its Consequences for Palestinians

சியோனிசம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான அதன் விளைவுகளுடன் பிரிட்டிஷ் உறவு

BY JONATHAN WOODROW MARTIN

Photograph Source: Prime Minister’s Office – OGL 3

பாலஸ்தீனியர்களுக்கு உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் நீதி மற்றும் சமாதானம் கோரி ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து) முழுவதும் ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம், பிரதான எதிர்க்கட்சியின் தலைமை மற்றும் ஊடகங்கள் மற்றும் பெருநிறுவன எந்திரங்கள் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முற்றிலும் இருட்டடிப்பு செய்வதில் யாருக்கும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

ஐ.நா. பொதுச்சபையின் சிறப்பு அமர்வில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இங்கிலாந்து கலந்து கொள்ளாத நிலையில், அக்டோபர் 27 வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலுக்கான இந்த ஆதரவு மீண்டும் உலக அரங்கில் எடுத்துக்காட்டப்பட்டது.

ஜோர்டானால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், "உடனடி, நீடித்த மற்றும் நீடித்த மனிதாபிமான போர்நிறுத்தத்தை" குறைந்தபட்சமாக வலியுறுத்த அழைப்பு விடுத்தது.

காஸாவிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பாலஸ்தீனிய குடிமக்களைக் கொல்வது, ஊனமாக்குவது, வலுக்கட்டாயமாக புலம்பெயர்த்துவது மற்றும் கைது செய்வது, நக்பாவுக்குப் பிறகு இதுவரை காணாத அநீதி அளவை எட்டியுள்ள நிலையில், இந்த நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு இங்கிலாந்தின் புறக்கணிப்பு ஒரு நடுநிலை நடவடிக்கை அல்ல.

இது இஸ்ரேல் அரசாங்கமும் ஆயுதப் படைகளும் வெறுக்கத்தக்க பாரிய போர்க்குற்றங்களைச் செய்வதற்கு தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் அரசியல் ஆதரவு நடவடிக்கையாகும். இந்த அரசியல் ஆதரவுடன், "பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், விரிவடைவதைத் தடுக்கவும்" நமது கடற்படை மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சியோனிசம் மற்றும் அது உருவாக்கிய இஸ்ரேல் உடனான இந்த பிரிட்டிஷ் கூட்டணி, 1917 இல் பால்ஃபோர் பிரகடனத்திலிருந்து 1948 இல் இஸ்ரேலின் வன்முறை உருவாக்கம் வரை உறுதியாக உள்ளது.

பிரிட்டன் 1948 இல் பாலஸ்தீனத்தையும் அதன் பொறுப்புக்களையும் விட்டு வெளியேறிய போதும், இந்த செயல்முறையில் போர் வெடிக்கவும், நக்பா (பேரழிவு) பாலஸ்தீனியர்களுக்கு ஏற்படவும் அனுமதித்தபோதும், அதன் சாம்ராஜ்யம் மங்கியபோதும், பிரிட்டன் பிராந்தியத்தில் ஒரு சிடுமூஞ்சித்தனமான மற்றும் கொடிய பாத்திரத்தை தொடர்ந்து வகித்து வருகிறது.

1917 ஆம் ஆண்டின் பால்ஃபோர் பிரகடனம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பின்வருமாறு வெளியிடப்பட்டது;

"பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்காக ஒரு தேசத்தை நிறுவுவதற்கு ஆதரவாக மாட்சிமை பொருந்திய அரசாங்கம் கருதுகிறது, மேலும் இந்த நோக்கத்தை அடைவதற்கு வசதியாக அவர்களின் சிறந்த முயற்சிகளைப் பயன்படுத்தும்; பாலஸ்தீனத்தில் இருக்கும் யூதர்கள் அல்லாத சமூகங்களின் சிவில் மற்றும் மத உரிமைகள், அல்லது வேறு எந்த நாட்டிலும் யூதர்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் அரசியல் அந்தஸ்து ஆகியவற்றை பாதிக்கக்கூடிய எதையும் செய்யக்கூடாது என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது.

இந்த பிரகடனத்தின் உண்மையான பொருள் என்ன என்பது குறித்த விவாதத்தில் பெரும்பாலும் இல்லாதது என்னவென்றால், இந்த பிரகடனத்தை முதலில் வெளியிட பிரிட்டனுக்கு எந்த தார்மீக அல்லது சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்ற புரிதல் ஆகும். 1917 வாக்கில், பிரிட்டன் நிலம் மற்றும் மக்கள் அடிப்படையில் தனது சாம்ராஜ்ஜியத்தின் உச்சத்தை அடைந்தது, அது மிருகத்தனமான வன்முறை மற்றும் சுரண்டல் முறையில் சட்டவிரோதமாக ஆட்சி செய்தது.

முதலாம் உலகப் போரின் முடிவில், ஒட்டோமான் பேரரசிடமிருந்து பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டையும், தற்கால ஈராக் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட அண்டை பகுதிகளையும் பிரிட்டன் கைப்பற்றியது. இந்தப் பேரரசும் பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் ஆட்சியும் சட்டத்திற்குப் புறம்பானவை, ஏனெனில் அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட உள்ளூர் மக்களால் எதிர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் நிலைகுலைந்த, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்ஸ், பாலஸ்தீனத்திற்கு விரைவில் சுயாட்சியையும் சுதந்திரத்தையும் வழங்குமாறு பிரிட்டனைக் கட்டாயப்படுத்தியது.

ஆணைக்குள், பால்ஃபோர் பிரகடனம் சேர்க்கப்பட்ட போதிலும் ஆணை மற்றும் லீக் ஆஃப் நேஷன்ஸ் பாலஸ்தீனை மற்றொரு சக்திக்கு வழங்குவதற்கு பிரிட்டனை அங்கீகரிக்கவில்லை, இதனாலேயே சியோனிச தலைவர்கள் ‘பூர்வீக மக்களுக்கு’ என்று தெளிவாக சித்தரித்தனர்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் அவர்கள் எதிர்கொண்ட ஆபாசமான மற்றும் கொடிய நிறுவன யூத-விரோதத்திற்கு யூத சமூகத்திலிருந்து வந்த பல பதில்களில் ‘சியோனிசம்’ மிகவும் பரவலாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஜேர்மன் நாஜி தலைமையிலான யூத-எதிர்ப்பு, மற்றும் ஐரோப்பா தழுவிய யூத வெறுப்பு, காரணமாக ஐரோப்பாவில் யூத மக்களின் ஹோலோகாஸ்டில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

பாலஸ்தீனியர்கள் 1920கள் முழுவதிலும் இங்கிலாந்து மற்றும் சியோனிஸ்டுகளால் தங்கள் தாயகத்தைக் கைப்பற்றுவதற்கு எதிராகவும், 1930 களில் ஒரு தொடர்ச்சியான கிளர்ச்சியின் மூலமாகவும் கிளர்ந்தெழுந்தனர்; இதில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் சியோனிச மக்கள் மையங்கள் மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் மூலம் வன்முறை எதிர்ப்பு உட்பட அகிம்சை தந்திரோபாயங்களின் பாரிய பயன்பாடு அடங்கும்.

பிரிட்டிஷ் அதிகாரிகள் மக்கள் புரட்சியை வன்முறை மூலம் முறியடிக்க அறிமுகப்படுத்திய மற்றும் வன்முறையாக உடைக்க பயன்படுத்திய பல 'அவசரகால' சட்டங்கள் இஸ்ரேலால் அது உருவாக்கப்பட்ட பின்னரம் அவ்வாறே வைக்கப்பட்டன, மேலும் அவை பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் நிலத்தின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அதன் விளைவாக நிறவெறிக்கு எதிராக அகிம்சை எதிர்ப்பு வடிவத்தில் இருக்கும் எந்தவொரு எதிர்ப்பிற்கும் பாலஸ்தீனியர்களை தண்டிக்க இன்றளவிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சியோனிசத்தை ஆதரிப்பதற்கான இந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் பேரரசின் கருவிக்குள் இருந்த பநோக்கம் பல்வேறுபட்டது. முதலாம் உலகப் போரின் முடிவில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் லாயிட் ஜார்ஜ் பால்ஃபோர் பிரகடனத்தையும் சியோனிசத்தின் கருத்தாக்கத்தையும் ஆதரித்த பல கிறிஸ்தவ சியோனிஸ்டுகளில் ஒருவராக இருந்தார்.

இக்கருத்து பெரும்பாலும் பிரிட்டிஷ் ஸ்தாபகத்திற்குள் பரவலாக இருந்த தீவிரமான யூத-எதிர்ப்புவாதத்துடன் கலந்திருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் வெள்ளையர் அல்லாத மக்களை இனவெறியுடன் நடத்துவதுடன், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முயற்சித்ததற்காக, பிரிட்டனுக்கு எதிராக நிற்கத் துணிந்த அரேபியர்களைத் தண்டிக்கவும் பிளவுபடுத்தவும் மற்ற ஸ்தாபக பிரமுகர்கள் விரும்பினர்.

ஏனையோர் பிரிட்டனின் பெருகிய பெரிய ஆனால் பலவீனமான சாம்ராஜ்ஜியத்தைப் பாதுகாப்பதில் பூகோளஅரசியல் காரணங்களுக்காக சியோனிசத்தை ஆதரித்தனர், குறிப்பாக, இந்தியா மீதான பிரிட்டனின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவும், சூயஸ் கால்வாய் வழியாக எகிப்திலிருந்து இந்தியாவுக்கு ஒரு நில மற்றும் கடல் வழித்தடத்தை உறுதி செய்வதற்காகவும், இதன் மூலம் ஒரு பெரிய அளவிலான சர்வதேச மற்றும் பிரிட்டிஷ் வர்த்தகம் மற்றும் இராணுவ நகர்வுகளுக்கு வாய்ப்பை வழங்கியது. பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மற்றும் / அல்லது நேச சியோனிச ஆட்சியின் கீழ் வைத்திருப்பது இந்த கடல் மற்றும் தரை வழிகளைப் பாதுகாக்க உதவும்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1948 இல் பாலஸ்தீனியர்களின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்புக்குப் பிறகு, பிரிட்டன் சூயஸ் நெருக்கடியிலிருந்து இஸ்ரேலுடன் தொடர்ந்து கூட்டுச் சேர்ந்தது. வரலாற்று பாலஸ்தீனம்/இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனியர்களின் தொடர்ச்சியான மற்றும் தொடர்ந்து உருவான அடக்குமுறைக்கு ஒப்புதல் வழங்கியது.

தற்காலத்தில், பிரிட்டன் உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும், ஆயுதக் கட்டுப்பாடுகள் தொடர்பாக உயர்ந்த பேச்சு மற்றும் மனித உரிமைகளை ஒழுங்குபடுத்தும் பிரிட்டிஷ் சட்டம் இருந்தபோதிலும், பல மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை இஸ்ரேலுக்கு தொடர்ந்து பாய்கிறது. இதனுடன், வழக்கமான கடற்படை மற்றும் வான்வழி கூட்டு பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வலுவான கட்டமைப்பு இந்த ஆண்டுதான் கையெழுத்தானது.

நவீன பிரிட்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டணியின் வலிமை குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆயுதங்கள், தளவாடங்கள், இராணுவ தொழில்நுட்ப அறிவு மற்றும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திற்கு அரசியல் மற்றும் இராஜதந்திர மறைப்பு மற்றும் நிறவெறியுடன்  நாம் இப்போது காணும் பயங்கரங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இடம்பெற்றுவரும் தெளிவான இனப்படுகொலை முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக, தற்போதைய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் "நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினார். காஸாவில் எரிபொருள், மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்களை துண்டித்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று முடமாக்குவது, அதே நேரத்தில் இங்கிலாந்து வழங்கிய பயங்கர ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்வது மற்றும் ஊனமாக்குவது என்ற கூட்டுத் தண்டனையுடன் இஸ்ரேல் எடுத்து வரும் வன்முறை நடவடிக்கை பொதுமக்களை நேரடியாக குறிவைக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் கூட, இவ்வாறு கூறப்பட்டது மற்றும் ஆதரிக்கப்பட்டது மிக மோசமான செயலாகும்..

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் நீங்கள் யாரை ஜெயிக்கணும்? எதை வெல்லப் போகிறீர்கள்?  நிச்சயமாக, இஸ்ரேலியர்களுக்கு நீண்டகால பாதுகாப்போ சமாதானமோ இருக்கப்போவதில்லை என்பது நிச்சயம், அவர்கள் பலஸ்தீன மக்களையும் அவர்கள் வீடு என்று அழைக்கும் இடத்தையும் அழித்து, இஸ்ரேலியர் நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். இஸ்ரேல் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் எதை இழக்க வேண்டும், பாலஸ்தீனியர்களைப் பொறுத்தவரை முற்றிலும் எல்லாவற்றையும் இழக்க வேண்டுமா? அவர்களின் வாழ்க்கை, வீடுகள், எஞ்சியிருக்கும் நிலம், ஒரு மக்களாக, கலாச்சாரமாக அவர்களின் இருப்பு அனைத்தையும் இழக்க வேண்டுமா?

ஜோர்டான் ஆற்றிலிருந்து மத்தியதரைக் கடல் வரை தற்போது வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை, தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனியர்களுக்குத் திரும்புவதற்கான உரிமை மற்றும் இஸ்ரேல் செய்த பாரிய போர்க்குற்றங்களுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட நீதி மற்றும் இழப்பீடு செயல்முறை ஆகியவையே அமைதி, நீதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரே ஒரு வழி என்பதை அமைதிக்கு உண்மையாக அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு நபரும் அறிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் மீது ஹமாஸ் போர்க்குற்றங்கள் செய்திருந்தால் அவையும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.

தங்கள் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை திகிலுடனும் பயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பாலஸ்தீன நண்பர் சமீபத்தில் என்னிடம் இவ்வாறு கூறினார், "குண்டுவீச்சை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அவர்கள் கேட்க மாட்டார்கள், இஸ்ரேலியர் தங்களை தற்காத்துக் கொள்வதாகவும் உங்கள் அரசாங்கம் கூறியதைக் கேட்டு நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். நான் இங்கிலாந்து அரசாங்கத்தை வெறுக்கிறேன், நான் அதை மிகவும் வெறுக்கிறேன். அவர்கள்தான் என் நிலத்தை ஆக்கிரமிப்பதற்குக் காரணம், இப்போது அவர்கள் என் மக்களை கொலைசெய்பவர்களை ஆதரிக்கிறார்கள்".

அவர்களின் வரலாற்றை அறிந்து, இந்த பாரிய மற்றும் புரிந்து கொள்ள முடியாத வன்முறையின் கீழ் என்ன நடக்கிறது என்பதையும் அனுபவிக்கும் துன்பங்களையும் பார்க்கும்போது, தைரியம், நம்பிக்கை மற்றும் அமைதிக்கான ஏக்கம் நிறைந்த பாலஸ்தீன மக்கள், ஏன் இங்கிலாந்து அரசாங்கத்தை வெறுக்கக்கூடாது?

இஸ்ரேலுடனான இந்த நிபந்தனையற்ற கூட்டணிக்கும் மற்றும் நமது நாட்டிற்கும் மிக முக்கியமாக பாலஸ்தீனியர்களுக்கும் என்ன அர்த்தம் உள்ளது என்பதைப் பற்றி சிந்தியுங்கள், கேள்விகளைக் கேளுங்கள், பதில்களைக் கோருங்கள் என்று இங்கிலாந்தில் உள்ள சக மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

நம் உலகில், முழு மனிதர்களாக தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்கும் பாலஸ்தீனியர்களுக்காக குரல் கொடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நமது அரசாங்கமும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், முழு ஸ்தாபனமும், இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அதற்காக தெருக்களிலும் ஆன்லைனிலும் நாம் தொடர்ந்து கோர வேண்டும்.

Jonathan Woodrow Martin is a graduate of HCRI institute at The University of Manchester and can be reached at jwoodrowm@gmail.com.

கட்டுரையாளர்: ஜொனாதன் வுட்ரோ மார்ட்டின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் எச்.சி.ஆர்.ஐ நிறுவனத்தில் பட்டம் பெற்றவர், jwoodrowm@gmail.com.

https://www.counterpunch.org/2023/11/02/the-british-relationship-with-zionism-israel-and-its-consequences-for-palestinians/

தமிழில்: தாஹா முஸம்மில்

 

 

 

No comments:

Post a Comment