Contributors

Tuesday, December 9, 2025

ஃபராபி: இஸ்லாமிய தத்துவத்தை வடிவமைத்த புத்தகங்களின் இரண்டாம் குரு

 Farabi: Second Teacher whose books shaped Islamic philosophy


Farabi: Second Teacher whose books shaped Islamic philosophy

 

 

 

இஸ்லாமிய தத்துவ வரலாற்றில் “இரண்டாம் குரு” எனப் போற்றப்படும் அபு நசர் அல்-ஃபராபி (878 – 950), இடைக்கால இஸ்லாமிய அறிவுசார் உலகின் அடிப்படைத் தத்துவஞானிகளில் ஒருவராக விளங்கினார். ஈரானில் பிறந்து, டமஸ்கஸில் இறந்த அவர், தர்க்கவியல், அறிவியல் மற்றும் அரசியல் சிந்தனை ஆகிய துறைகளில் ஆழமான பங்களிப்புகளைச் செய்தார்.

 

அல்-ஃபராபியின் சிந்தனைகள், இஸ்லாமிய உலகின் அறிவியல் மற்றும் தத்துவ மரபுகளை ஆழமாக வடிவமைத்தன. அவரது படைப்புகள், அறிவின் இயல்பு, மனித சமூகம், அரசியல் ஒழுங்கு, மற்றும் அறிவியல் முறைகள் குறித்த கேள்விகளை விரிவாக ஆராய்ந்தன.

 

இஸ்லாமிய தத்துவ வரலாற்றில், அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு மிகச் சிறந்த தத்துவஞானியாக அல்-ஃபராபி கருதப்படுகிறார். இடைக்கால இஸ்லாத்தின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவராக அவர், தத்துவம் மற்றும் அறிவியலின் அடிப்படை அடித்தளங்களை நிறுவியதோடு, பின்னர் வந்த இஸ்லாமிய மற்றும் மேற்கத்திய சிந்தனையாளர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.

 

குராசான் மாகாணத்தைச் சேர்ந்த இவர், முக்கிய நகரமான "ஃபராப்" இற்கு அருகிலுள்ள "வாசிஜ்" கிராமத்தில் பிறந்தார். தத்துவ மேதையின் அடையாள சின்னமாகிய மாறிய "ஃபராப்" எனும் இப் புகழ்பெற்ற பெயர் இந்த நகர்ப்புற மையத்திலிருந்தே அவருக்கு கிடைத்தது.

 

இடைக்கால இஸ்லாமிய தத்துவம் அதன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அரிஸ்டாட்டிலியனிசம் (Aristotelianism) மற்றும் நியோபிளேட்டோனிசம் (Neoplatonism) எனும் இரு சிந்தனைகளிலும் பிணைந்துள்ளது. ஆனால் நியோபிளேட்டோனிசத்தின் செல்வாக்கு பத்தாம் மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளில் அல்-ஃபராபியின் தத்துவ கோட்பாட்டில் மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளின் மையமான, மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு இடமளிக்கக்கூடிய, இஸ்லாத்தின் மூலங்களான அல் குர்ஆன் மற்றும் சுன்னாவில் வேரூன்றியுள்ள ஒரு அரசியல் தத்துவத்தை உருவாக்க "ஃபராப்" ஒரு சிறந்த நகரம் (Plato's concept of an ideal city) என்ற பிளேட்டோவின் கருத்தை அல்-ஃபராபி விரிவுபடுத்தினார். இக் கோட்பாடுகளில் வெளிப்படும் அல்-ஃபராபியின் பரந்த ஆளுமை இவரை "இஸ்லாமிய நியோபிளேட்டோனிசத்தின் தந்தை" என்றும் "இஸ்லாமிய அரசியல் தத்துவத்தின் நிறுவனர்" என்றும் ஞானிகள் அழைத்தனர். மேலும் "இரண்டாம் குரு," மற்றும் "கிரேக்க முறையான தர்க்கத்தின் மேம்பாட்டாளர்" போன்ற கௌரவமான பட்டங்கள் வழங்கப்பட்ட அல்-ஃபராபி வரலாற்றாசிரியர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் இஸ்லாமிய பாரம்பரியத்தின் முதன்மையான தத்துவஞானியாக பெரிதும் கருதப்படுகிறார்.


அல்-ஃபராபி தனது ஆரம்பகாலத்தில் நீதித்துறையில் பணியாற்றியவர். எனினும், தத்துவத் தேடல் மற்றும் மெய்யியல் சிந்தனைக்கான அவரது ஆழமான ஈடுபாடு, வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

நாற்பது வயதில், அவர் தனது அதிகாரப்பூர்வப் பதவியை விட்டு விலகி, அக்காலத்தின் அறிவுசார் மையமாக விளங்கிய பாக்தாத்திற்குப் பயணமானார். அங்கு, புகழ்பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதலின் கீழ், தர்க்கவியல் மற்றும் தத்துவ ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டார்.

 

இந்தக் காலகட்டத்தில், அரிஸ்டாட்டிலின் படைப்புகள் அவருக்கு தனித்துவமான ஈர்ப்பை ஏற்படுத்தின. அவற்றின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம், அவரது சிந்தனைகளின் தத்துவ அடித்தளத்தை வலுப்படுத்தி, பின்னர் இஸ்லாமிய உலகின் அறிவுசார் மரபில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

Second Teacher whose books shaped Islamic philosophy

“முதல் குரு” எனப் போற்றப்படும் அரிஸ்டாட்டிலின் படைப்புகளுடனான அல்-ஃபராபியின் ஆழமான ஈடுபாடு, அவரை அரிஸ்டாட்டிலின் சிந்தனைக் களத்தின் நேரடி வாரிசாக நிலைநிறுத்தியது. இதன் விளைவாக, அவர் “இரண்டாம் குரு” என்ற பெருமைமிகு பட்டத்தைப் பெற்றார்.

 

அல்-ஃபராபி, கணிதம், இறையியல், ரசவாதம், இராணுவ மூலோபாயம், இசை, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் தனது அறிவை விரிவுபடுத்தினார். இத்தகைய பரந்த அறிவுசார் பங்களிப்புகள், அவரை இடைக்கால இஸ்லாமிய உலகின் பல்துறை அறிஞராக உயர்த்தின.

 

தத்துவம் மற்றும் தர்க்கவியல் துறைகளில், குறிப்பாக பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் குறித்த அவரது விரிவான விளக்கங்கள், அல்-ஃபராபியின் மேன்மையை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு, அவர் தத்துவ மரபின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியதோடு, இஸ்லாமிய அறிவுசார் உலகின் அடித்தளங்களை வலுப்படுத்திய முக்கிய சிந்தனையாளராகவும் விளங்கினார்.

 

அவரது மிகவும் புகழ்பெற்ற படைப்புகளில் அரசியல் தத்துவம் குறித்த தொலைநோக்கு கட்டுரையான "நல்லொழுக்கமான நகரத்தின் மக்களின் கருத்துக்கள்" (The Opinions of the People of the Virtuous City), "ரிசாலா ஃபில்-அக்ல்" (Risala fi'l-Aql" - Treatise on the Intellect), புத்திசாலித்தனத்தின் பகுப்பாய்வு; மற்றும் மனித செழிப்புக்கான பாதையை கோடிட்டுக்காட்டும் "தஹ்சில் அல்-சாதா" (Tahsil al-Sa'ada - The Attainment of Happiness -மகிழ்ச்சியை அடைதல்) போன்றவை அடங்கும்.

 

அவர் மருத்துவத்தைத் தவிர ஒவ்வொரு அறிவியல் துறையிலும் நூல்களை எழுதினார், கணிதம் மற்றும் இசையியலில் அதிகாரப்பூர்வமான குறிப்புகளை நிறுவினார்.

 

முன்னைய விரிவுரையாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்ட அல்-ஃபராபி அவரது கோட்பாடுகளை வெறுமனே விளக்குவதற்கு மட்டுமல்லாமல், ஒருங்கிணைக்கவும் முயன்றார்.

 

அவரது முதன்மையான படைப்பில், "அல்-ஜாம்' பைன் ராய் அல்-ஹகிமெய்ன்" (Al-Jam` bayn Ra'yay al-Hakimayn - The Harmonization of the Opinions of the Two Sages -இரண்டு ஞானிகளின் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு), அவர் பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டிலின் தத்துவ அமைப்புகளை சமரசம் செய்ய முயன்றார், அவர்களின் முக்கிய கருத்துக்களுக்கு ஒரு அடிப்படை பொதுத்தன்மை மற்றும் பகிரப்பட்ட, ஆன்மீக உத்வேகத்தை வலியுறுத்தினார்.

 

அல்-ஃபராபியின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான இஹ்சா அல்-உலும் (Ihsa' al-Ulum - The Enumeration of the Sciences -அறிவியலின் கணக்கெடுப்பு), அக்காலத்தில் நிலவிய அனைத்து அறிவுத் துறைகளையும் முறையாக வகைப்படுத்திய விரிவான தொகுப்பாகும். இதன் மூலம், ஒரு கலைக்களஞ்சிய வடிவமைப்பை உருவாக்கிய முதல் முஸ்லீம் அறிஞராக அவர் வரலாற்றில் நிலைபெற்றார்.

 

தர்க்கவியல் துறையில், அவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. அரிஸ்டாட்டிலின் தர்க்க அமைப்பை முழுமையாகக் கற்றறிந்த அவர், அதனை இஸ்லாமிய அறிவுசார் சூழலில் புதிதாக விளக்கி, விரிவுபடுத்தினார்.

 

அறிவியலை “கருத்தாக்கம்” (தசாவூர் - Conceptualization) மற்றும் “ஒப்புதல்” (தஸ்தீக் - Assent) என வகைப்படுத்தியதும், “அவசியமான” (வாஜிப் - Necessary) மற்றும் “சாத்தியமான” (மம்கின் - Possible) இருப்பு ஆகியவற்றின் தத்துவப் பிளவை அறிமுகப்படுத்தியதும், அல்-ஃபராபியின் சிந்தனையின் முக்கிய முன்னேற்றங்களாகும். இத்தகைய கருத்தியல் புதுமைகள், பின்னர் வந்த இஸ்லாமிய தத்துவஞானிகளின் சிந்தனைகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

 

அல்-ஃபராபியின் கண்டுபிடிப்புகள், அரிஸ்டாட்டிலிய தர்க்கத்திற்கு புதிய உயிரோட்டத்தையும் நீடித்த கட்டமைப்பையும் வழங்கின. அவரது அயராத அறிவுசார் முயற்சிகள், தர்க்கவியல் அறிவியலை முறையாகவும் ஆழமாகவும் நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தன.

 

இதன் விளைவாக, அவிசென்னா (இப்னு சீனா) மற்றும் நசீர் அல்-தீன் அல்-தூசி போன்ற பின்னர் வந்த பிரமுகர்கள், தர்க்கத்தின் அறிவியலை அதன் முதிர்ந்த வடிவத்தில் செம்மைப்படுத்தி, மேலும் விரிவுபடுத்தும் பாதையை திறம்படக் கண்டடைந்தனர். இவ்வாறு, அல்-ஃபராபியின் பங்களிப்புகள், இஸ்லாமிய தத்துவ மரபில் மட்டுமல்லாது, பரந்த அறிவுசார் உலகிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.

 

அல்-ஃபராபியின் புத்தகங்கள் மற்றும் கருத்துக்களின் எதிரொலிகள் அடுத்தடுத்த விஞ்ஞான மற்றும் மத சூழலில் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தின. இந்த மகத்தான தாக்கம் "முஸ்லிம்களின் தத்துவஞானி" என்ற அவரது பட்டத்தை நியாயப்படுத்துகிறது.

 

இஸ்லாமிய உலகில் தத்துவத்தை உட்பொதிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார், கடுமையான பகுத்தறிவு சொற்பொழிவுக்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான முக்கிய இணக்கத்தை நிரூபித்தார்.

 

அவரது தொகுப்பு மிகவும் தேர்ச்சி பெற்றதாக இருந்தது, தத்துவமும் தர்க்கமும் மேம்பட்ட மதக் கல்வியின் ஒருங்கிணைந்த கூறுகளாக மாறியுள்ளது.

 

ஒப்பிடத்தக்க அந்தஸ்தில் பிற அறிஞர்கள் தோன்றியிருந்தபோதிலும், இஸ்லாமிய தத்துவம் மற்றும் தர்க்கவியல் வளர்ச்சியின் பாதையில் அல்-ஃபராபி செலுத்திய ஆழமான மற்றும் அடிப்படைச் செல்வாக்கை யாராலும் முழுமையாக பிரதிபலிக்க முடியவில்லை.

 

இது, அவரது தனித்துவமான புலமை, சிந்தனையின் உண்மைத் தன்மை, மற்றும் துல்லியமான அறிவுசார் கணிப்பு ஆகியவற்றின் அபூர்வமான ஒருங்கிணைப்புக்கான உறுதியான சான்றாகும். இவ்வகையான அறிவுசார் மேன்மை, அல்-ஃபராபியை இடைக்கால இஸ்லாமிய உலகின் மிகச் சிறந்த தத்துவஞானிகளில் ஒருவராக நிலைநிறுத்தியது.

 

அல்-ஃபராபியின் நூல்களின் நீடித்த தாக்கத்தை மிகைப்படுத்த இயலாது. அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றான நல்லொழுக்கமுள்ள நகரத்தின் மக்களின் கருத்துக்கள் (Al-Madina al-Fadila - (The Opinions of the People of the Virtuous City), சிறந்த நிர்வாகத்திற்கான தத்துவ அடிப்படையிலான செயல்திட்டத்தை வழங்கியது. இந்த நூல், பல நூற்றாண்டுகளாக அரசியல் சிந்தனையின் வளர்ச்சியை ஆழமாகப் பாதித்தது.

 

மேலும், இரண்டு ஞானிகளின் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு (Kitab al-Jam‘ bayn Ra’yay al-Hakimayn - The Harmonization of the Opinions of the Two Sages) போன்ற நூல்களில், கிரேக்க தத்துவத்தை இஸ்லாமிய இறையியலுடன் சமரசப்படுத்தியதன் மூலம், அல்-ஃபராபி இஸ்லாமிய புலமையில் பகுத்தறிவு விசாரணைக்கு நிரந்தர இடத்தை உருவாக்கினார். இவ்வாறு, அவர் தத்துவமும் இறையியலும் இடையிலான உரையாடலைக் கட்டியமைத்து, இஸ்லாமிய அறிவுசார் மரபின் அடித்தளங்களை வலுப்படுத்தினார்.

 

"அறிவியலின் கணக்கெடுப்பு (The Enumeration of the Sciences)" இல் அறிவியலின் அவரது அற்புதமான வகைப்பாடு மனித அறிவை முறையாக ஒழுங்கமைத்தது, அதே நேரத்தில் அரிஸ்டாட்டிலிய தர்க்கத்திற்கு அவரது புரட்சிகர விளக்கங்கள் அவிசென்னா போன்ற பிற்கால அறிஞர்கள் கட்டியெழுப்பும் கட்டமைப்பை உருவாக்கியது.

 

இறுதியில், அல்-ஃபராபியின் மரபு என்பது அவர் பண்டைய ஞானத்தை வெறும் பாதுகாப்பில் மட்டுமே நிறுத்தவில்லை என்பதிலேயே உள்ளது. அதனை அவர் ஒரு ஆற்றல்மிக்க அறிவுசார் பாரம்பரியமாக மாற்றினார். இதன் மூலம், தத்துவமும் தர்க்கவியலும் இஸ்லாமிய உலகிலும் அதற்கு அப்பாலும் கல்வி மற்றும் அறிவியல் ஆய்வின் அடிப்படைத் தூண்களாக நிலைநிறுத்தப்பட்டன.

 

அவரது பங்களிப்புகள், பண்டைய கிரேக்க சிந்தனையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தியதோடு, அதனை இஸ்லாமிய அறிவுசார் சூழலில் புதிதாக வடிவமைத்து, பரந்த உலகின் அறிவியல் மரபில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின. இவ்வாறு, அல்-ஃபராபி, பண்டைய ஞானத்தின் காவலராக மட்டுமல்லாது, அதன் புதுப்பித்த உருவாக்கியாகவும் வரலாற்றில் நிலைபெற்றார்.

 

https://en.wikipedia.org/wiki/Al-Farabi

https://www.britannica.com/biography/al-Farabi

https://en.mehrnews.com/news/238992/Second-Teacher-whose-books-shaped-Islamic-philosophy

 

 

 

Tuesday, November 25, 2025

ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா: இஸ்லாத்தின் மிகவும் மதிப்பிற்குரிய பெண்மணி

 Lady Fatima al-Zahra: Islam’s most revered woman


Lady Fatima al-Zahra: Islam’s most revered woman

இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மகள் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி), அவரது தனித்துவமான இறையச்சம், அன்பு, பரிவு மற்றும் அசைக்க முடியாத வலிமைக்காக நினைவுகூரப்படுகிறார், அப் பண்புகள் அவரை தார்மீக ஒருமைப்பாடு மற்றும் ஆன்மீக தியாகத்தின் அடையாளமாக மாற்றியுள்ளது.

 

நேற்றைய தினம் (24 நவம்பர்) உலக பெண்களின் நாயகி, இறை தூதரின் அன்பு மகள், விசுவாசிகளின் தளபதி அலி (அலை) அவர்களின் மனைவி மற்றும் பரிசுத்தவான்களான இமாம்கள் ஹஸரத் ஹஸன் (அலை), ஹஸரத் ஹுஸைன் (அலை) அவர்களின் தாயார் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்களின் தியாகத்தைக் குறிக்கிறது.

 

அன்னை பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி), இஸ்லாமிய பாரம்பரியத்தில் "சுவர்கத்து பெண்களின் தலைவி" என்று அழைக்கப்படுகிறார், இமாம் அலி (அலை) அவர்களின் அர்ப்பணிப்புள்ள மனைவி மற்றும் பரிசுத்தவான்களான இமாம்களின் தாயார் ஆவார். ஹிஜ்ராவுக்கு முந்தைய 18 ஆம் ஆண்டில் ஜமாதுல் ஆகிர் 20 ஆம் திகதி மக்காவில் பிறந்தார். அவரது பெற்றோர், உன்னதமான அன்னை கதீஜா (ரழி) மற்றும் அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல்) ஆகியோர் அவர்களுக்கு பாசத்தையும் அக்கறையையும் பொழிந்தனர், மேலும் அவர் இருவருடனும் ஆழமான பற்று கொண்டிருந்தார்.

 

தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் அவரது தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட பாத்திமா (ரழி), நபித்துவ குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதிலிருந்தே, அவர் நபிகள் நாயகம் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களை நேரில் கண்டவர், மேலும் நபிகளாரின் ஒவ்வொரு கஷ்டத்திலும் ஆதரவை வழங்கி அவருடன் உறுதுணையாக இருந்தார்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்களின் வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தினார், இஸ்லாத்தில் பெண்மையின் சிறந்த முன்மாதிரியாக அவரது குணாதிசயத்தை வடிவமைத்தார். நபி (ஸல்) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் முன்மாதிரியாக இருந்தார் என்றால், பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்கள் அனைத்து பெண்களுக்கும் சரியான, மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். பாத்திமா (ரழி) அவர்கள் ஏக இறைவன் அல்லாஹ்வின் மீதான ஆன்மீகத்தின் வெளிப்பாடாகவும், ஆன்மீக தூய்மை மற்றும் புனிதத்தின் பிரதிபலிப்பாகவும் இருந்தார், அவர் நடத்தையில் மட்டுமல்ல, தார்மீக குணத்தன்மையிலும் தனது தந்தையை ஒத்திருந்தார்.

 

பாத்திமா (ரழி) அவர்கள் ‘அஸ்-ஸஹ்ரா "பிரகாசமான மற்றும் ஒளிரும்" என்ற பொருள் கொண்ட பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார், மேலும் அன்னை கதீஜா (ரழி) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதான அவரது ஆழ்ந்த அக்கறையை பிரதிபலிக்கும் ஹஸரத் பாத்திமா (ரழி) அவர்கள், உம்மு அபிஹா- "அவரது தந்தையின் தாய்"- என்றும் அழைக்கப்பட்டார்.

Hazrat Zahra (as), leader of all the women of the world

ஹஸரத் பாத்திமா (ரழி) அவர்களின் பண்புகள்

 

அன்னை பாத்திமா (ரழி) அவர்கள் "உலகின் அனைத்து பெண்களின் தலைவி" என்று மதிக்கப்படுகிறார், ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் பரம்பரை மற்றும் மரபு அவர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பற்றி வெளிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கும், அதன் போதனைகளின் மிக உயர்ந்த உருவகமாக அவர் திகழ்கிறார். அவரது வாழ்நாளில், அவர் அர்ப்பணிப்புள்ள மகள், விசுவாசமான மனைவி மற்றும் அரவணைக்கும் தாய் போன்ற பாத்திரங்களை முழுமையாக நிறைவேற்றினார்.

 

அவருடைய தாராள மனப்பான்மை ஒப்பிட முடியாதது; அவருடைய வீட்டு வாசலுக்கு வந்த யாரும் வெறுங்கையுடன் வெளியேறவில்லை. அவர் தனது வாழ்நாள் முழுவதும், இமாம் அலி (அலை) அவர்களிடம் எதையும் கோரவில்லை. செல்வாக்கு மிக்க, அழிக்க முடியாத வழிகளில் வரலாற்றை தொடர்ந்து வடிவமைக்கும் சிறப்பம்சம் கொண்ட, விதிவிலக்கான குழந்தைகளை ஒரு தாயாக அவர் கண்ணியத்துடன் வளர்த்தார். அன்னை பாத்திமா (ரழி) அவர்கள் பொறுமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார், பொறுமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார். தன் தந்தையையும், தன் கணவரையும், தன்னையும் குறிவைத்து நடத்திய தாக்குதல்கள் மற்றும் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், அல்லாஹ் மீது நம்பிக்கை வைப்பதில் அவர் அசைக்க முடியாதவராகவும், தன் நியமங்களில் உறுதியாகவும் இருந்தார்.

 

அவரது அறிவுசார் மற்றும் ஆன்மீக அந்தஸ்து அவர் நிகழ்த்திய இரண்டு புகழ்பெற்ற பிரசங்கங்களில் ஒன்றான ஃபடக் பிரசங்கத்தில் தெளிவாகத் வெளிப்படுகிறது, அங்கு அவர் ஓரிறை கொள்கை (தொளஹீத்) பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை திறம்பட வெளிப்படுத்தினார், நபியின் பணியைப் பற்றிய தனது புரிதலை மக்களுக்கு உணர்த்தினார், மேலும் இமாமத்தின் கருத்தைப் பற்றிய சுருக்கமான மற்றும் சக்திவாய்ந்த விளக்கத்தை வழங்கினார்.

 

ஹஸரத் பாத்திமா (ரழி) அவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள்

 

நபி (ஸல்) அவர்களின் குழந்தைகள் அனைவரிலும், பாத்திமா (ரழி) அவர்கள் இளையவர், அவர் அவரை தன்னிலிருந்து பிரிக்க முடியாத, மனித வடிவத்தில் ஒரு தேவதையாக கருதினார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. எந்தவொரு பயணத்திற்கு முன்பும், அவர் பார்த்த கடைசி வீடு பாத்திமா (ரழி) அவர்களுடையது, திரும்பி வந்ததும், அவர் நுழையும் முதல் வீடும் அதுதான்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பாத்திமாவுக்கு (உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ) காயப்படுத்துகிறாரோ அவர் எனக்குத் தீங்கு விளைவிக்கிறார். எவரேனும் எனக்குத் தீங்கு செய்தால், அவர் அல்லாஹ்வுக்கு தீங்கு செய்கிறார்; எவரேனும் அல்லாஹ்வுக்கு தீங்கு செய்தால், அவர் அல்லாஹ்வை நிராகரிப்பு செய்கிறார். ஓ, பாத்திமா! உங்களுக்கு கோபம் ஏற்பட்டால், அது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகும்; நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அது அல்லாஹ்வையும் மகிழ்விக்கிறது" என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாத்திமா என் இதயத்தின் அமைதி.

 

ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் அவர் பாத்திமாவின் வீட்டைக் கடந்து செல்லும்போது, "நபித்துவத்தின் குடும்பத்தினரும், தூதரின் மூலாதாரமுமான, உங்கள் மீது சாந்தி உண்டாவதாக" என்று கூறுவார்.

Hazrat Zahra (as), leader of all the women of the world

 

இமாம் அலி (அலை) மற்றும் ஹஸரத் பாத்திமா (ரழி) ஆகியோரின் திருமணம்

 

இமாம் அலி (அலை) மற்றும் ஹஸரத் பாத்திமா (ரழி) ஆகியோருக்கு இடையிலான திருமணம் சிறந்த இஸ்லாமிய ஒன்றியமாக நினைவுகூரப்படுகிறது. அவர்களின் வீடு ஆன்மிகம், பணிவு, இறையச்சம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது. இமாம் அலி (அலை) அவர்களின் ஆழ்ந்த அறிவு மற்றும் ஆன்மீக வலிமைக்காக கௌரவிக்கப்படும் அதே வேளை, பாத்திமா மீது அவர் வெளிப்படுத்திய ஆழ்ந்த பாசமும் மென்மையான மரியாதையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

இமாம் அலி (அலை) அவர்கள் ஒருமுறை கூறினார், "நான் அவளைப் பார்க்கும்போது, என் துயரங்களும் கவலைகளும் மறைந்துவிடுகின்றன." இமாம் அலி (அலை) அவர்கள் காலத்தில் பல திருமணங்கள் வழக்கமாக இருந்தபோதிலும், இமாம் அலி (அலை) பாத்திமாவின் வாழ்நாளில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார், அவரது உணர்வுகளையும் கண்ணியத்தையும் மதித்தார், இது பாத்திமா (ரழி) அவர்கள் மீது இமாம் அலி (அலை) அவர்கள் கொண்ட ஆழமான அன்பை விவரிக்கிறது.

 

ஹஸரத் பாத்திமா (ரழி) அவர்களின் உயிர்த்தியாகம்

 

அவரது வீட்டின் மீதான தாக்குதல், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் கருச்சிதைவு மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான சோகமான நிகழ்வுகளைத் தொடர்ந்து பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்கள் தனது 18 வயதில் காலமானார்.

 

அவர் உயிர்த்தியாகம் செய்த திகதி குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சுன்னிகளிடையே நிலவும் மிகவும் பொதுவான கருத்துப்படி, அவர் நபிகள் நாயகம் இறந்து 75 நாட்களுக்குப் பிறகு, ஜமாதுல் அவ்வல் 13 ஆம் திகதி காலமானார் என்றும், ஷியா பாரம்பரியத்தில் மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கருத்துப்படி, அவர் நபிகள் நாயகம் காலமான 95 நாட்களுக்குப் பிறகு, ஜமாதுல் ஆகிர் 3 ஆம் தேதி, ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் ஷஹீதானார் என்றும் கூறப்படுகிறது.

Hazrat Zahra (as), leader of all the women of the world

அன்னை பாத்திமா ஸஹ்ரா (ரழி) அவர்களால் இமாம் அலி (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்ட உயில்

 

ஹஸரத் ஸஹ்ரா (அலை) அவர்கள் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, இமாம் அலி (அலை) அவர்களை தனது 3 உயில்களை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவர் இமாம் அலி (அலை) அவர்களிடம் கூறினார்,

1.  ஓ அலி, நீர் தனிப்பட்ட முறையில் என் இறுதிச் சடங்குகளை         செய்வீராக.

           2.  என்னை அதிருப்திப்படுத்தியவர்கள் எனது இறுதிச் சடங்கில் கலந்து         கொள்ள அனுமதி மறுப்பீராக.

3.  என் உடலை இரவு வேளையிலேயே கப்ருக்கு எடுத்துச் சென்று               அடக்கம் செய்வீராக.

 

இவ்வாறாக, இமாம் அலி (அலை) அவர்கள் ஸஹ்ரா (அலை) அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்து, அவரது உறவினர்கள் மற்றும் மகன்களுடன் பிரத்தியேகமாக இரவில் ஜன்னதுல்-பாகி இற்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பாத்திமா (ஸல்) அவர்களின் இறுதிச்சடங்கில் முஃமின்களின் தளபதி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் கல்லறையில் உரையாற்றும் போது, அல்லாஹ்வின் தூதரே! தயவுசெய்து என் கௌரவத்தையும் உங்களை மிக விரைவில் சந்திக்கப் போகும், உங்களுக்கு அருகில் புதைக்கப்பட்ட உங்கள் மகளின் கௌரவத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மகளின் மரணம் என்னை ஆறுதலும் பொறுமையும் இழந்தவராக விட்டுவிட்டது. நான் என் சுய கட்டுப்பாட்டையும் சகிப்புத்தன்மையையும் இழந்துவிட்டேன்.

Hazrat Zahra (as), leader of all the women of the world

 

Tuesday, November 18, 2025

தெஹ்ரான் சர்வதேச குறும்பட விழா

Tehran International Short Film Festival

Tehran International Short Film Festival kicks off

 

ஈரானின் சினிமா, பொதுவாக பாரசீக சினிமா என அழைக்கப்படுகிறது. இது அந்த நாட்டில் உருவாகும் சினிமா மற்றும் திரைப்படக் கலைகளை குறிக்கிறது. வருடந்தோறும் பல வணிகத் திரைப்படங்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. அதே சமயம், ஈரானிய கலைத் திரைப்படங்கள் உலகளவில் பெரும் மரியாதையும் புகழையும் பெற்றுள்ளன.

 

1990களில், சீனாவுடன் இணைந்துள்ள ஈரான், உலகின் சிறந்த திரைப்பட ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. பல திரைப்படவிமர்சகர்கள் இன்று கூட ஈரானை கலை ரீதியாக உலகின் மிகச் சிறந்த தேசிய சினிமாக்களில் ஒன்றாக மதிக்கின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் ஈரானிய படைப்புகளை கௌரவித்துள்ளன. பிரபல ஆஸ்திரிய இயக்குநர் மைக்கேல் ஹனேகே, ஜெர்மன் இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் மற்றும் உலகின் பல விமர்சகர்கள் ஈரானிய சினிமாவை மிக முக்கியமான கலைச் சினிமா மரபுகளில் ஒன்றாகப் பாராட்டியுள்ளனர்.

 

 

இன்றைய நிலையில், ஈரானிய திரையரங்குகளில் பெரும்பாலும் உள்ளூர் வணிகப் படங்களே ஓடுகின்றன. மேற்கத்திய படங்கள் அரிதாக மட்டுமே திரையிடப்படுகின்றன. சமகால ஹாலிவுட் திரைப்படங்கள் பொதுவாக அரசு தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன.

 

உள்நாட்டில் தயாராகும் வணிகப் படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையுடைய ஈரானிய கலைச் சினிமா, சர்வதேசத்தில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. இவ்விரண்டு சினிமாக்களும் வெவ்வேறு பார்வையாளர்களை ஈர்க்கின்றன; ஈரானின் வணிகச் சினிமா பெரும்பாலும் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களை குறிவைக்கின்றது. இந்தப் படங்கள் உள்ளூர் சந்தைக்காக உருவாக்கப்படுவதால், மேற்கத்திய உலகில் அவை பெரிதாக அறியப்படுவதில்லை.

 

ஈரானிய சினிமா என்பது சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ஒரு துறை ஆகும், இது அதன் மனிதாபிமான, யதார்த்தவாத மற்றும் கவிதை கலைத் திரைப்படங்களுக்கு பெயர் பெற்றது, இது பெரும்பாலும் சமூக நாடகங்கள் மற்றும் மனிதநேயத்தில் கவனம் செலுத்துகிறது. யதார்த்தவாதம் மற்றும் கவிதையின் கலவையால் வகைப்படுத்தப்பட்ட ஈரானிய சினிமா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது, பல விமர்சகர்கள் இதை உலகின் மிக முக்கியமான தேசிய சினிமாக்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். திரைப்படங்கள் பெரும்பாலும் மனித நிலையைப் பற்றிய ஆழமான செய்திகளை வழங்க எளிமையான கதைக்களங்கள், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம், பாலின பிரச்சினைகள் மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட கருப்பொருள்களுடன் ஆராய்கின்றன. முக்கிய இயக்கங்களில் இஸ்லாமிய புரட்சிக்கு முந்தைய "ஈரானிய புதிய அலை" மற்றும் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னரான "புதிய ஈரானிய சினிமா" ஆகியவை அடங்கும், அப்பாஸ் கியாரோஸ்டாமி மற்றும் அஸ்கர் ஃபர்ஹாடி போன்ற ஈரானிய இயக்குனர்கள் சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளனர்.

 

சினிமா துறையை மேம்படுத்த ஆண்டுதோறும் குறும்பட போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தெஹ்ரானின் கிழக்கில் உள்ள ஈரான் மால் சினிப்ளெக்ஸில் ஒக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை 42 வது தெஹ்ரான் சர்வதேச குறும்பட விழா தொடங்கியது, இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 95 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டன என்று விழாவின் செயலாளர் ஷோய்பி கூறினார்.

 

இந்த ஆண்டு திரைப்பட விழாவின் பதிப்பு திரைப்பட தயாரிப்பாளர் பெஹ்ரூஸ் ஷோய்பியின் வழிகாட்டுதலின் கீழ் "பகுத்தறிவு மற்றும் அறிவுசார்வாதம்" என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவின் சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிட்ட சிரியா, யேமன், ஈராக், ஸ்பெயின், பாலஸ்தீனம், லெபனான், ஐஸ்லாந்து, சிலி, கம்போடியா, நார்வே, நியூசிலாந்து, செக் குடியரசு, அயர்லாந்து, மெக்ஸிகோ, கொலம்பியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புனைக்கதை குறும்படங்கள் போட்டியிட்டன.

 

ஈரான், சீனா, அமெரிக்கா, இத்தாலி, அர்ஜென்டினா, துருக்கி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு குறும்படங்களும் சர்வதேச போட்டிப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன என்று தெஹ்ரான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 

மால்டோவா, குரோஷியா, தென்னாப்பிரிக்கா, ஈக்வடார், அஜர்பைஜான், பனாமா, நேபாளம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணப்படங்கள் சர்வதேச போட்டிப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிட்ட அனிமேஷன் குறும்படங்கள் பின்லாந்து, இங்கிலாந்து, கஜகஸ்தான், ரஷ்யா, ஜோர்டான், போர்த்துக்கல், ஆர்மீனியா, பெல்ஜியம், எஸ்டோனியா, பிரான்ஸ், தஜிகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை.  

 

கனடா, ஜெர்மனி, ஜப்பான், போலந்து, கிரீஸ், டென்மார்க், உஸ்பெகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறும்படங்களும் சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிட்டன.

 

தெஹ்ரான் சர்வதேச குறும்பட விழா (TISFF) குறும்படங்களுக்கான ஆசியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் ஒன்றாக விளங்குகிறது, இது படைப்பாற்றல் சிறப்பு, கண்டுபிடிப்பு மற்றும் சினிமாவில் பல்வேறு குரல்களை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்புக்காக கொண்டாடப்படுகிறது.

 

அதன் புகழ்பெற்ற வரலாற்றின் போது, TISFF உலகளாவிய கதைசொல்லலுக்கான ஒரு துடிப்பான மையமாக உருவெடுத்துள்ளது, இது உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சமர்ப்பிப்புகளை ஈர்த்துள்ளது - வளர்ந்து வரும் திறமை மற்றும் தொலைநோக்கு சினிமா குரல்களுக்கான ஒரு மைல்கல்லாக அதன் இணையற்ற நற்பெயரின் பிரதிபலிப்பாகும்.

 

வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஆதரிப்பதற்கும், பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், TISFF இலவச திரைப்பட சமர்ப்பிப்பை அனுமதிக்கிறது, திறமையான திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் தனித்துவமான பார்வையைப் பகிர்ந்து கொள்வதில் நிதி தடைகள் ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை உறுதி செய்கிறது.

 

குறும்படத் தயாரிப்பு மற்றும் கல்வியில் ஒரு முன்னணி அமைப்பான ஈரானிய இளைஞர் சினிமா சங்கத்தால் (IYCS) ஏற்பாடு செய்யப்பட்ட TISFF, ஈரான் முழுவதும் 57 கிளைகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் செழிப்பான வலையமைப்பை உள்ளடக்கிய விரிவான உள்கட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து பயனடைகிறது.

 

42 வது தெஹ்ரான் சர்வதேச குறும்பட விழா (TISFF) அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை மாலை ஈரான் மாலில் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் விருதுகள் வென்றவர்கள், தேசிய மற்றும் சர்வதேச பிரிவுகளில் அதன் சிறந்த வெற்றியாளர்களை அறிவித்தது.

 

Tehran Short Film Festival awards winners at closing ceremony

இந்த நிகழ்வில் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான துணைத் தலைவர் ஜஹ்ரா பெஹ்ரூஸ் அசார் கலந்து கொண்டார்; ஈரானிய இளைஞர் சினிமா சங்கத்தின் தலைவர் பெஹ்ரூஸ் ஷோய்பி; திரைப்பட தயாரிப்பாளர் ஹமீத் ஜெபேலி; ஒளிப்பதிவாளர் சைஃபுல்லா சமாடியன்; மற்றும் தியேட்டர் ஹவுஸ் புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மெஹ்தி அஷ்னா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

சர்வதேச பிரிவில், அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜுவான் ஜபல் சிறந்த AI திரைப்படத்திற்கான விருதையும், $500 பரிசையும் “The Valley” படத்திற்காக வென்றார்.

 

சிறந்த பரிசோதனை படத்திற்கான விருதை கிளாடியா முங்க்ஸ்கார்ட்-பாம்க்விஸ்ட் “A Visualization of a Cut” என்ற படத்திற்குப் பெற்றார், அதே நேரத்தில் ஈரானின் முகமது தராஹோமி “Whispering Rocks” இற்கு $1,500 பெற்றார்.

 

ஆர்மீனியாவைச் சேர்ந்த நடாலியா மிர்சோயன் எழுதிய “Winter in March” சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதையும், அஜர்பைஜானைச் சேர்ந்த இகோர் ஸ்மோலாவின் “My Name Is Oil” சிறந்த ஆவணப் படத்திற்கான விருதையும், சீனாவைச் சேர்ந்த கெரன் அபுகாசிமுவின் “Baozhda” சிறந்த புனைகதை திரைப்படத்தையும் வென்றது.

 

தேசிய பிரிவில், பஹ்ராம் மற்றும் பஹ்மன் ஆர்க் ஆகியோரின் “Goodbye Trash” சிறந்த இயக்குனர் மற்றும் பார்வையாளர்கள் விருதை வென்றது. மொஹ்சென் அஸ்டெக்பூர் எழுதிய “Life for All” சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்டது.

 

சிறந்த தழுவல் படத்திற்காக சமத் கோர்பன்சாதேவின் “Agh Bash”, சிறந்த அனிமேஷன் படத்திற்காக மிராலி ஹொசைனி-அஸ்லியின் “Without Him” மற்றும் “2002 படமும் " அப்பாஸ் ஷகௌரியின் “Underground Notes” சிறந்த சோதனைப் படத்திற்கான விருதையும் சிறந்த ஆவணப்படத்திற்கான ஹனிஃப் காசெம் அலிசாதே மற்றும் அமீர் பசிரோஃப்டே ஆகியோரின் “Roubaroo” மற்றும் சிறந்த தேசிய திரைப்படமாக சஜாத் மோஷ்டாக்கின் “The Colonel’s Anthem” ஆகியவையும் வெற்றிப் படங்களாக தெரிவு செய்யப்பட்டன.

 

விழாவின் பெரிய பரிசு, $2,000, சிலியைச் சேர்ந்த மார்ட்டின் சீகரின் “The Cannon” படம் தட்டிச் சென்றது, இது இப்போது அகாடமி விருதுகளுக்கு தகுதி பெற்றுள்ளது.

 

சினிமா மற்றும் குறும்படத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஈரானிய இளைஞர் சினிமா சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் TISFF விழா, தற்போது Oscar Awards அமைப்பின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன் மூலம், இந்த விழாவின் முதன்மை பரிசின் (Grand Prize) வெற்றியாளர் நேரடியாக ஆஸ்கார் பரிசிற்கான தகுதி பெறுகிறார்.

 

  

Tuesday, October 14, 2025

ஈரானில் ஹபீஸ் ஷிராசி தினம் அனுசரிக்கப்படுகிறது

 Iran marks Day of Hafez Shirazi

Iran marks Day of Hafez Shirazi

ஈரானின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரின் நினைவாக ஹபீஸ் தினம் அக்டோபர் 12ம் திகதி அனுசரிக்கப்படுகிறது, அவரது அன்பு, ஷியா சித்தாந்தம் மற்றும் மனித நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள வாசகர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்கின்றன.

 

14 ஆம் நூற்றாண்டில் ஷிராஸில் பிறந்த ஹபீஸ், எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க பாரசீக கவிஞர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். ‘ஹபீஸின் திவான் இல் தொகுக்கப்பட்ட அவரது படைப்புகள், அன்பு, ஆன்மீகம், இயற்கை மற்றும் சத்தியத்தைத் தேடுதல் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்கின்றன. கவிதையின் பாடல் வடிவமான கஸால் தேர்ச்சி பெற்றதற்காக அறியப்பட்ட ஹபீஸின் கவிதைகள் அவற்றின் ஆழமான அழகு, நுட்பமான உருவகங்கள் மற்றும் தத்துவ ஆழத்திற்காக கொண்டாடப்படுகின்றன.

 

அக்டோபர் 12 ஆம் தேதி ஈரானில் ஹபீஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் வாசகர்கள் இந்த நாளில் ஷிராஸில் உள்ள ஹபீஸின் கல்லறையில் இந்த நிகழ்வைக் குறிக்க ஈரானுக்கு வருகை தருகிறார்கள்.

ஹபீஸின் கவிதைகளைப் படிக்கவும், சிறப்பு விழாக்களை நடத்தவும் மக்கள் அவரது கல்லறையில் கூடுகிறார்கள்.

 

1935 இல் கட்டப்பட்ட ஹபீஸின் கல்லறை நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு கட்டிடக் கலைஞரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரே கோடார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. கல்லறை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டங்கள் ஷிராஸின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் ஷிராசியின் வாழ்க்கை

வரலாற்றில் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றான (1315-1390) இல் பிறந்த காஜே ஷம்சதீன் முகமது ஹபீஸ் ஷிராசி சிறந்த ஈரானிய கவிஞர்கள் மற்றும் ஷியா ஆன்மீகவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் ஹபீஸ் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், அவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். அவருக்கு "லிசான் உல்-கெய்ப்" (Lisan Ul-Gheyb) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இதன் பொருள் வெளிப்படாத மொழி என்பதாகும்.

ஹபீஸ் ஈரானிலும் உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டாலும், அவரது வாழ்க்கை மர்மமாகவே இருந்துள்ளது. அவரது வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன, ஆனால் இந்த விஷயத்தில் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை.

 

கணிதம், வானியல் மற்றும் கவிதை ஆகியவற்றில் மிக முக்கியமான தடம்பதித்த ஈரானிய சிரேஷ்ட கவிஞர்களில் ஒருவரான ஒமர் கய்யாம் போன்ற பல எழுத்தாளர்களால் ஹபீஸ் செல்வாக்கு பெற்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும், பல விமர்சகர்கள் ஹபீஸை மிகவும் சுவையான தேனை தயாரிக்க வெவ்வேறு பூக்களின் மீது பறக்கும் தேனீயாக அடையாளப்படுத்துகிறார்கள்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் இன் கவிதைகள்

பொதுவாக, ஹபீஸ் "கஸல்" என்று அழைக்கப்படும் ஆன்மீகவாத கவிதைகளை எழுதுவார். இது 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரபு கவிதையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. ஹபீஸின் கவிதைகள் வளமான கற்பனை மற்றும் குறியீட்டின் கலவையைக் கொண்டுள்ளன. அவரது கவிதைகள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமானவை, இது அவரது ஆன்மாவிற்கான தேடலைக் குறிக்கிறது.

பின்வரும் கவிதை ஹஃபீஸின் புகழ்பெற்ற கஸல்களில் ஒன்றாகும்:

That beautiful Shirazi Turk, took control and my heart stole,
I'll give Samarkand & Bukhara, for her Hindu beauty mole.
O wine-bearer bring me wine, such wine not found in Heavens
By running brooks, in flowery fields, spend your days and stroll.
Alas, these sweet gypsy clowns, these agitators of our town
Took the patience of my heart, like looting Turks take their toll.
Such unfinished love as ours, the Beloved has no need,
For the Perfect Beauty, frills and adornments play no role.
I came to know Joseph's goodness, that daily would increase
Even the chaste Mistress succumbed to the love she would extol.
Whether profane or even cursed, I'll reply only in praise
Sweetness of tongue and the lips, even bitterness would enthrall.
Heed the advice of the wise, make your most endeared goal,
The fortunate blessed youth, listen to the old wise soul.
Tell tales of song and wine, seek not secrets of the world,
None has found and no-one will, knowledge leaves this riddle whole.
You composed poems and sang, Hafiz, you spent your days well
Venus wedded to your songs, in the firmaments' inverted bowl.

மேலே கூறப்பட்ட இக் கவிதை ஒரு காதலிக்கு தீவிர பாராட்டை வெளிப்படுத்தும் நன்கு அறியப்பட்ட பாடல் ஆகும். இது பாரசீக கவிதையின் மையப் பகுதியாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் செல்வாக்கு செலுத்துகிறது, ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே போன்ற நபர்களால் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இக் கவிதை ஹபீஸின் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும் மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பரவலாக இக் கவிதை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் இன் திவான்

ஹபீஸின் புகழ்பெற்ற புத்தகம் திவான் (கவிதைகளின் தொகுப்பு). அவரது புத்தகம் ஈரானியர்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றது, எனவே ஒவ்வொரு ஈரானிய குடும்பமும் அதை தங்கள் வீட்டில் வைத்திருக்கிறது. ஈரானிய மக்கள் நவ்ரூஸ் அல்லது யால்டா நைட் போன்ற வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹபீஸின் திவான்களைப் படிக்க கூடுகிறார்கள்.

 

ஹபீஸ் தனது கவிதைகளைத் தொகுக்கவில்லை, மாறாக முகமது கோலந்தம் தனது தொகுப்பிற்கு ஒரு முன்னுரையை எழுதினார், ஹபீஸ் இறந்து சுமார் 21-22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 813 அல்லது கி.பி 1410 இல் அதை முடித்தார் என்று சிலர் கூறுகின்றனர்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் மற்றும் கோதே

ஜெர்மன் இலக்கியத்தின் மிகவும் புகழ்பெற்ற கவிஞரான ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே (1749-1832), கிழக்கு இலக்கியம் குறிப்பாக, பாரசீக இலக்கியத்தில் அவரது ஆர்வத்தை அதிகரிக்க காரணியாக அமைவது ஹபீஸ் கவிதைகளில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஆர்வம் ஆகும். ஹபீஸைப் பின்பற்றுவதில் கோதேயின் முதல் உந்துதல் காதல் கவிதைகளை இயற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாக இருந்தது, ஆனால் பின்னர் ஹபீஸின் கவிதைகளின் ஆன்மீக அம்சங்கள் அவரை ஈர்த்தன.

 

ஹபீஸின் கவிதைகள் தொகுப்பு மீது கோதேயின் எழுத்துக்களுக்கு மிகவும் ஆழமாக செல்வாக்கு செலுத்தின, அவர் ஹபீஸைப் பின்பற்றுவதற்காக தனது கவிதைத் தொகுப்பை இயற்றி மற்றும் அதற்கு "மேற்கு-கிழக்கு திவான்" என்று பெயரிட்டார்.

 

ஆஸ்திரியாவின் கிளஜென்பர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே ஹபீஸால் ஈர்க்கப்படாமல் மதிப்புமிக்க மேற்கு-கிழக்கு திவானை எழுதியிருக்க மாட்டார் என்பதை மறுக்க முடியாது என்று கூறினார்.

 

கோதே தனது 65 வயதில் ஹபீஸின் மொழிபெயர்ப்பைக் கண்டார், அது அவரது வாழ்க்கையை மாற்றியது. மிகப்பெரிய ஈரானிய கவிஞராக ஹபீஸ், கோதேயின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறினார்.

 

கோதே ஹபீஸின் ஆன்மீக சொற்கள் மற்றும் மொழியின் பிம்பத்தை நிறுவ முடிந்தது. ஹபீஸைப் பற்றிய அவரது புரிதல் அவரை ஒரு வாரத்தில் 15 புதிய கவிதை வரிகளை இயற்ற வைத்தது. கோதே மேற்கத்திய கவிதைகளை கிழக்கத்திய உள்ளடக்கத்துடன் இயற்றினார் என்று அவர் மேலும் கூறினார்.

 

கிழக்கத்திய இலக்கியம் மற்றும் பழைய ஏற்பாட்டை அவர் ஒன்றிணைத்து மேற்கத்திய மக்களுக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றியதாக அவர் கூறினார், இருப்பினும் புத்தகம் கிழக்கு கருப்பொருளைக் கொண்டிருந்தது.

 

பின்னர், பாரசீக இலக்கியத்தின் பிற கூறுகளில் அவர் ஆர்வம் காட்டினார். அவர் கிழக்கு புத்தகங்களிலிருந்து பாரசீக-அரபு எழுத்துக்களை நகலெடுக்க முயன்றார் என்று பேராசிரியர் கூறினார்.

 

மேற்கு-கிழக்கு திவான் கோதே இரு பிராந்தியத்தின் புரிதலை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கவும், மனிதன் தனது இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவும் முயற்சிக்கிறார்.

 

தொகுத்தவர் மொஹதேசே பக்ரவன்

தமிழில் மஹ்ஜுபா முஸம்மில்

https://en.mehrnews.com/news/237591/From-Shiraz-to-the-World-Hafez-s-poetry-touches-human-soul

 

 

Tuesday, September 23, 2025

சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான்: பாரம்பரியம், வண்ணங்கள் மற்றும் விருந்தோம்பலின் தாயகம்

 

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality


Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

 

செப்டம்பர் 07 சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் தேசிய தினத்தைக் குறிக்கிறது - தென்கிழக்கு ஈரானில் உள்ள இந்த தனித்துவமான மாகாணத்தின் வளமான பாரம்பரியம், வண்ணமயமான மரபுகள் மற்றும் அன்பான விருந்தோம்பலை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கொண்டாட்டம்.

 

ஈரானின் 31 மாகாணங்களில் தென்கிழக்கில் அமையப்பெற்ற, 180,726 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் அந்நாட்டின் இரண்டாவது பெரிய மாகாணமாகும். அதன் பரந்த பாலைவனங்கள் மற்றும் இதமான கடற்கரைகளுக்கு மட்டுமல்ல, அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இதன் தலைநகரம் சகேடன் நகரம் ஆகும். இந்த மாகாணம் நாட்டின் தென்கிழக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் உள்ளது. இவ்விரு நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பிராந்தியம் நீண்ட காலமாக பாரம்பரியங்களின் இணைப்பு வழியாக இருந்து வருகிறது.

வரலாறு

பெஹிஸ்தூன் மற்றும் பெர்செபோலிஸ் (Behistun and Persepolis) இல் உள்ள கல்வெட்டுகளில், சிஸ்தான் மகா டேரியஸ் (Darius the Great) இன் கிழக்கு பிராந்தியங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிமு 128 ஆம் ஆண்டில் இந்த பகுதியைக் கைப்பற்றிய மத்திய ஆசிய பழங்குடியினரான சாகா (சாகா அல்லது சகஸ்தான்) என்பதிலிருந்து சிஸ்தான் என்ற பெயர் பெறப்பட்டது. அர்சாசிட் வம்சத்தின் போது (கிமு 248 முதல் கி.பி 224 வரை) இந்த மாகாணம் சுரேன்-பஹ்லவ் குலத்தின் இருப்பிடமாக மாறியது. சசானிய காலத்திலிருந்து ஆரம்ப இஸ்லாமிய காலம் வரை, சிஸ்தான் கணிசமாக செழித்தது.

பாரசீகத்தின் முதலாம் அர்தாஷிரின் ஆட்சியின் போது, சிஸ்தான் சசானியர்களின் அதிகார வரம்பின் கீழ் வந்தது, கி.பி 644 இல், பாரசீகப் பேரரசு வீழ்ச்சியடையும் இறுதி தருணங்களில் இருந்ததால் அரபு முஸ்லிம்கள் கட்டுப்பாட்டைப் பெற்றனர். இரண்டாவது சுன்னி கலீபா உமர் இப்னு அல்-கத்தாப்பின் ஆட்சியின் போது, இந்த பிரதேசம் அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது மற்றும் ஒரு அரபு தளபதி ஆளுநராக நியமிக்கப்பட்டார். பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய சந்ததியினரின் தந்தையான புகழ்பெற்ற பாரசீக ஆட்சியாளர் யாகூப்- லைத் சஃபாரி, இந்த மாகாணத்தின் ஆளுநரானார். கி.பி 916 ஆம் ஆண்டில், பலுசெஸ்தான் கெர்மானின் ஒரு பகுதியாக மாறியபோது டேலமிட்களாலும் (Daylamids) பின்னர் செல்ஜுகிட்களாலும் (Seljuqids) ஆளப்பட்டது. சஃபரித்கள், சமனிட்கள், கஸ்னாவிட்கள் மற்றும் செல்ஜுகித்கள் (Saffarids, Samanids, Qaznavids, and Seljuqids) போன்ற வம்சங்களும் இந்த பிரதேசத்தை ஆட்சி செய்தன. கி.பி 1508 ஆம் ஆண்டில், சஃபாவிட் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் ஷா இஸ்மாயில் சிஸ்தானைக் கைப்பற்றினார். பின்னர், இது கஜார் ஈரானின் ஒரு பகுதியாக மாறியது.

 

பாரம்பரிய ஆடை

சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மக்கள் தங்கள் வண்ணமயமான வாழ்க்கை முறைக்கு பிரபலமானவர்கள். ஆண்கள் தலைப்பாகைகளுடன் நீண்ட வெள்ளை ஆடைகளை அணிகிறார்கள், அதே நேரத்தில் பெண்களின் ஆடைகள் எம்பிராய்டரி மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் பிரகாசிக்கின்றன, இது பல நூற்றாண்டுகளின் கைவினைத்திறனை பிரதிபலிக்கிறது.

மாகாணத்தின் அடையாளம் அதன் மக்களின் ஆடைகளில் வலுவாக பிரதிபலிக்கிறது. ஆண்கள் பொதுவாக பரந்த கால்சட்டை மற்றும் தலைப்பாகையுடன் பிரஹான் எனப்படும் நீண்ட, தளர்வான வெள்ளை ஆடையை அணிகிறார்கள், இது எளிமை மற்றும் நேர்த்தியைக் குறிக்கிறது.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

இருப்பினும், பெண்களின் ஆடைகள் வண்ணங்கள் நிறைந்தவை. அவர்களின் நீண்ட ஆடைகள் எம்பிராய்டரி மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தலைமுறைகளாக பயன்படுத்தப்படும், பாரம்பரியமான சூசான்-டூசி எனப்படும்  ஒரு பண்டைய கலையை கொண்ட இந்த ஆடைகள் பிராந்தியத்தின் சூடான வெப்ப காலநிலைக்கு மிகவும் பொருத்தமானவை.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

இந்த வகையான ஆடை இந்த மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை, மேலும் இது கெர்மன் மற்றும் ஹார்மோஸ்கன் போன்ற பிற மாகாணங்களில் வசிக்கும் பழங்குடியினரிடையேயும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சில குடிமக்களிடையேயும் பிரபலமாக உள்ளது, இவ்வாடை பாரம்பரியம் ஒரு பொதுவான இன, கலாச்சார, வரலாற்று மற்றும் இன வேர்களில் இருந்து தொடர்கிறது.

சமையல் மற்றும் உள்ளூர் உணவுகள்

சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானின் சமையல் கலை அதன் புவியியலைப் போலவே வேறுபட்டது. தபஹாக் (ஒரு வகை  இறைச்சி உணவு), பருப்பு அடாஸ் (மசாலா பயறு) மற்றும் ஓலட் போன்ற பல்வேறு ரொட்டிகள் போன்ற பாரம்பரிய உணவுகள் உள்ளூர் மேசைகளில் பொதுவானவை. கடலோரப் பகுதிகளில், கடல் உணவுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன, அதே நேரத்தில் பேரீச்சம்பழம், மாம்பழம் மற்றும் சிட்ரஸ் பழங்கள் மிகவும் மதிப்புமிக்க விவசாய தயாரிப்புகளில் ஒன்றாகும். தேநீர் விருந்தோம்பலின் அடையாளமாக உள்ளது, இது ஒவ்வொரு வீட்டிலும், ஒன்று கூடலிலும் வழங்கப்படுகிறது.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

நன்கு அறியப்பட்ட சிறந்த உணவு பலூச்சி பிரியாணி ஆகும், இது பெரும்பாலும் இறைச்சி, மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவு, இது உள்ளூர் சுவை மற்றும் தெற்காசிய தாக்கங்களை பிரதிபலிக்கிறது.

புனித ரமலான் மாதத்திற்கு ஈரான் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்கள் உள்ளன. இந்த மரபுகளில் ஒன்று ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் குறிப்பிட்ட உணவுகள் மற்றும் சுவையான உணவுகள் ஆகும், இதன் மூலம் இஃப்தார் மற்றும் சஹர் நேரங்கள் ஒரு சிறப்பு நிறத்தையும் சுவையையும் பெறுகின்றன. சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானின் உள்ளூர் உணவு வகைகள் பல ஈரானிய சுவைகளை ஈர்த்துள்ளன, ஏனெனில் இந்த உணவுகள் சமைக்கும் விதம் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகிறது.

கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் மரபுகள்

விருந்தோம்பல், பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் வலுவான குடும்ப பிணைப்புகள் ஆகியவை சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மக்களிடையே பெறுமதியாக இருக்கும் பழக்கவழக்கங்களாகும். கதைசொல்லல், கவிதை மற்றும் வாய்வழி மரபுகள் அவர்களின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. பல பழக்கவழக்கங்கள், இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் பண்டைய மரபுகள் இரண்டையும் பிரதிபலிக்கின்றன, இது மாகாணத்தின் கலாச்சார கட்டமைப்பை தனித்துவமாக்குகிறது.

சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தானில் உள்ள கலாச்சார நம்பிக்கைகள் வலுவான குடும்ப உறவுகள், ஆழமாக வேரூன்றிய இஸ்லாமிய மரபுகள், விருந்தோம்பலின் வளமான வரலாறு மற்றும் கவிதை, இசை மற்றும் எம்பிராய்டரி போன்ற துடிப்பான வாய்வழி மற்றும் கலை மரபுகளை மையமாகக் கொண்டுள்ளன. கோதுமையை நடவு செய்வது போன்ற மகிழ்ச்சியைச் சுற்றியுள்ள நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் பீபி நவ்ரூஸின் வருகை தொடர்பான குறிப்பிட்ட புத்தாண்டு மரபுகள் ஆகியவை அவற்றில் அடங்கும். இந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இப்பகுதிக்கு தனித்துவமானவை, பண்டைய மரபுகளை அவற்றின் முக்கியமாக சுன்னி இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் நவீன வாழ்க்கையுடன் வளர்ந்து வரும் ஈடுபாட்டுடன் கலக்கின்றன.

நாட்டுப்புற இசை மற்றும் நடனம்

இசையும் நடனமும் மக்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவை. சோர்னா (ஒரு காற்றுக் கருவி) மற்றும் டோஹோல் (டிரம்) போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் விழாக்களுக்கு ஆற்றலையும் தாளத்தையும் கொண்டு வருகின்றன. லீபி மற்றும் டோ-சாபி போன்ற நடனங்கள் குழுக்களாக நிகழ்த்தப்படுகின்றன, பெரும்பாலும் திருமணங்கள் மற்றும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகின்றன, இது மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சமூக உணர்வைக் குறிக்கிறது. சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் நாட்டுப்புற கலாச்சாரத்தில் பாரம்பரிய சூப் பாசி (மர நடனம்) மற்றும் வாள் நடனம் ஆகியவை அடங்கும், இது ஒற்றுமை மற்றும் வரலாற்று வலிமையைக் குறிக்கும் ஒரு சடங்கு, ஆற்றல்மிக்க காட்சியில் குச்சிகள் மற்றும் வாள்களால் நிகழ்த்தப்படுகிறது.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

கைவினைப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள்

இந்த மாகாணம் அதன் கைவினைப்பொருட்களுக்கு பரவலாக அறியப்படுகிறது. சூசான்-டூசி, மட்பாண்டங்கள், ஒட்டக கம்பளி தயாரிப்புகள், கையால் நெய்யப்பட்ட விரிப்புகள் கல்போர்கன் போன்ற கிராமங்களிலிருந்து பாரம்பரிய மட்பாண்டங்கள் மற்றும் வெள்ளி நகைகளின் மென்மையான எம்பிராய்டரி பார்வையாளர்களுக்கு மிகவும் நேசத்திற்குரிய நினைவுப் பொருட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு துண்டும் பலூச்சி மற்றும் சிஸ்தானி மக்களின் திறமை, பொறுமை மற்றும் கலை ஆன்மாவை பிரதிபலிக்கிறது.

 

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

பழங்கள் மற்றும் விவசாய பொருட்கள்

தெற்கில் அதன் மிதவெப்பமண்டல காலநிலையின் சிறப்பம்சமே பலுசெஸ்தான் ஈரானின் வெப்பமண்டல பழ உற்பத்தியின் முக்கிய மையங்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. சரவன் மற்றும் ஈரான்ஷாஹர் ஆகியவற்றிலிருந்து வந்த பேரீச்சம்பழங்கள் நாடு முழுவதும் பிரபலமானவை, அவை இனிப்பு மற்றும் தரத்திற்கு பெயர் பெற்றவை.

இந்தியப் பெருங்கடல் மற்றும் ஓமான் கடலுக்கு அருகிலுள்ள சாதகமான காலநிலையே குறிப்பாக வாழைப்பழங்கள், மாம்பழங்கள், பப்பாளி மற்றும் கொய்யா போன்ற வெப்பமண்டல பழங்களை வளர்ப்பதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது. இது பேரீச்சம்பழத்தின் முக்கிய உற்பத்தி மையமாகும். பழ வகைகள், மாதுளை, சிட்ரஸ் பழங்கள் மற்றும் அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் போன்ற சில குளிர்ந்த காலநிலை பழங்கள் கூட அதன் குளிர்ந்த பகுதிகளில் உள்ளன. இந்த மாகாணத்தில் குறிப்பிடத்தக்க கிரீன்ஹவுஸ் துறையும் உள்ளது, தக்காளி, வெள்ளரிகள் மற்றும் குடை மிளகு போன்ற காய்கறிகளை உற்பத்தி செய்கிறது, மேலும் கோதுமை, பார்லி மற்றும் அரிசி போன்ற பயிர்கள் பிற பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

சபஹாரில் இருந்து வரும் மாம்பழங்கள் மற்றொரு சின்னமான தயாரிப்பு, பெரும்பாலும் கோடையில் அறுவடை செய்யப்பட்டு உள்நாட்டிலும் தேசிய அளவிலும் ருசிக்கப்படுகின்றன. வாழைப்பழங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்களுடன், இந்த தயாரிப்புகள் உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு அன்பான நினைவுப் பொருட்களாகவும் செயல்படுகின்றன.

இயற்கை ஈர்ப்புகள்

அதன் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு அப்பால், சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் பிரமிக்க வைக்கும் இயற்கை நிலப்பரப்புகளுக்கு தாயகமாக உள்ளது. சபஹாருக்கு அருகில் அமைந்துள்ள பெரிஸ் மற்றும் பியர் கடற்கரை மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும். பெரிஸின் பாறைகள் ஓமான் கடலைக் கடலை நோக்கிப் பார்க்கின்றன, டர்க்கைஸ் நீர் வியத்தகு பாறை அமைப்புகளைச் சந்திக்கும் காட்சிகளை உருவாக்குகிறது. சிறிய மீன்பிடி கப்பல் தளம் அழகை அதிகரிக்கிறது, உள்ளூர் மீனவர்கள் வேலை செய்வதைக் காணவும், ஈரானின் மிகவும் அழகிய கடலோரக் காட்சிகளில் ஒன்றை அனுபவிக்கவும் பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

Sistan and Baluchestan: Land of Heritage, Colors, Hospitality

சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் ஈரானின் வரைபடத்தில் வெறுமனே ஒரு புவியியல் பிராந்தியமல்ல. இது வண்ணங்கள், இசை, சுவைகள் மற்றும் மரபுகளின் நிலம் - கலாச்சாரம் மற்றும் வரலாறு அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு நிலம். அதன் அன்பான இதயம் கொண்ட மக்கள், மாறுபட்ட பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுடன், இந்த மாகாணம் ஈரானின் கலாச்சார பூமியாக, ஒரு தனித்துவமான இரத்தினமாக மின்னுகிறது, ஒவ்வொரு பார்வையாளரையும் அதன் மறக்க முடியாத விருந்தோம்பலை அனுபவிக்க அழைக்கிறது.