Wednesday, April 24, 2024

இன்று இலங்கை வரும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி

 President of the Islamic Republic of Iran Ebrahim Raisi is on an official visit of Sri Lanka today 

By தாஹா முஸம்மில் 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அரசியல் ரீதியாக மாறிவரும் மத்தியகிழக்கின் தற்போதைய நிலையில் ரயீஸியின் வருகையானது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1960 டிசம்பர் 14 இல் பிறந்த இப்ராஹிம் ரயீசுல் ஸாதாத்தி பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் ஈரானிய அரசியல்வாதி, முஸ்லிம் சட்ட நிபுணர் மற்றும் 2021 ஜனாதிபதி தேர்தலில் 2021 ஆகஸ்ட் 3 அன்று ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக ஈரானிய மக்களால் தெரிவுசெய்யப்பட்டார்.

ஈரானின் நீதித்துறை அமைப்பில் துணைத் தலைமை நீதிபதி (2004–2014), அட்டர்னி ஜெனரல் (2014–2016) மற்றும் தலைமை நீதிபதி (2019–2021) போன்ற பல பதவிகளில் உயர் பதவிகளை ரயீஸி வகித்துள்ளார். 1980கள் மற்றும் 1990களில் தெஹ்ரானின் வக்கீல் மற்றும் துணை வழக்கறிஞராகவும் இருந்தார். அவர் 2016 முதல் 2019 வரை "அஸ்தானே குத்ஸ் ரஸாவி"யின் பாதுகாவலராகவும் தலைவராகவும் இருந்தார். அவர் தென் கொராசன் மாகாணத்தில் இருந்து நிபுணர்கள் சபையின் உறுப்பினராக உள்ளார். முதல் முறையாக 2006 நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மஷ்ஹத் வெள்ளிக்கிழமை தொழுகைத் தலைவரும் இமாம் ரெஸா பள்ளிவாயனின் கிராண்ட் இமாமுமான அஹ்மத் ஆலமுல்லஹுதாவின் மருமகன் ஆவார்.

இப்ராஹிம் ரயீஸி 2021 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 62.9% வாக்குகளைப் பெற்று 2021 ஈரானிய ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேயி அவர்களின் நெருங்கிய சகாவான இவர் பிராந்திய நாடுகளுடன் நட்பையும் சகோரத்துவத்தையும் தமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக கருதி செயல்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இப்ராஹிம் ரயீஸி மஷ்ஹதின் நோகன் மாவட்டத்தில் பிறந்தார். ரயீஸி 5 வயதாக இருக்கும்போது அவரது தந்தை, செயத் ஹாஜி, உயிர்நீத்தார். ரயீஸி இமாம் ஹுசைன் இப்னு அலி (அலை) அவர்களின் வழித்தோன்றல் என்பது குறிப்பிடத்தக்கது.



ரயீஸி தனது ஆரம்பக் கல்வியை மஷ்ஹதின் "ஜவாதியே பள்ளியில்" முடித்தார்பின்னர் ஹவ்ஸாவில் (இஸ்லாமிய செமினரி) இணைந்து படிக்கத் தொடங்கினார். 1975 இல்அவர் கோம் செமினரியில் தனது கல்வியைத் தொடர "அயதுல்லா புரூஜெதி மத்ரஸா"வுக்கு சென்றார். அவர் ஆயதுல்லாஹ்  முதஹ்ஹரி பல்கலைக்கழகத்தில் தனியார் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் தனது 15வது வயதில் கோம் செமினரியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் நவ்வாப் பள்ளியில் சிறிது காலம் படிக்க முடிவு செய்தார். அதன் பிறகுஅவர் ஆயத்துல்லாஹ் சையத் முஹம்மது மூசவி நெஜாத் பள்ளிக்குச் சென்று கற்ற அதேவேளை மற்ற மாணவர்களுக்கு கற்பிக்கும் சேவையிலும் ஈடுபட்டார். 1976 இல்அவர் அயதுல்லா புருஜெர்த்தி பள்ளியில் தனது படிப்பைத் தொடர்வதற்காக கோம் சென்றார். அவர் செய்யத் ஹொசைன் புருஜெர்த்திமுர்தஸா முதஹஹரி,, அபுல்காசிம் கஸ்ஸாலிஹுசைன் நூரி ஹமதானிஅலி மிஷ்கினி மற்றும் முர்தஸா பசந்திதே ஆகியோரின் மாணவராக இருந்துள்ளார்.


Friday, April 19, 2024

ஈரானிய ஏவுகணைகளால் ஏற்பட்ட அழிவை குறைத்துக் காட்ட முயற்சிக்கும் இஸ்ரேல்

Israel tries to downplay the destruction caused by Iranian missiles

By Ivan Kesic

ஏப்ரல் 14 அதிகாலையில், இஸ்லாமிய புரட்சி காவலர் படை (IRGC) பதிலடி கொடுக்கும் "Operation True Promise" ஐ நடத்தியது, அது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவ தளங்களை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் குறிவைத்தது, ஈரானின் பதில் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை இஸ்ரேல் குறைத்துக்காட்ட முயற்சிக்கிறது...?

ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக கட்டடம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த பல்முனை மற்றும் மிகப்பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஈரான் இதை பெருவெற்றியாக கருதுகிறது.

சிரியாவில் ஈரானின் தூதரக வசதிகள் மீதான இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல், IRGC யின் குத்ஸ் படையின் ஒரு தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா ஜாஹெடி, அவரது துணை ஜெனரல் முகமது ஹாதி ஹாஜி ரஹிமி மற்றும் ஐந்து பிற IRGC அதிகாரிகளின் உயிர் தியாகத்தில் முடிந்தது. சர்வதேச சட்டம் மற்றும் வியன்னா மரபுகளை மீறிய இந்த தாக்குதல், மூத்த ஈரானிய அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களினது திட்டவட்டமான கண்டனத்தை ஈர்த்தது, அவர்கள் "உறுதியான எமது பழிவாங்கல்" நிச்சயம் என்று சூளுரைத்தனர்.

எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் அது நேரடியாக விடையிறுக்கும் என்று தெஹ்ரான் ஒரு செய்தியை அனுப்பிய நிலையில், இந்த முன்னோடியில்லாத நடவடிக்கை ஈரானின் மூலோபாய பொறுமையையும் மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் அரை நூற்றாண்டு மீறமுடியாத பாதுகாப்பு என்ற எண்ணத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.

பல பக்கங்களில் உள்ள அரசியல் நிறமாலையின் வர்ணனையாளர்கள் இந்த நடவடிக்கையின் மூலம் ஈரான் டெல் அவிவ் ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீது மூலோபாய தடுப்பு நிலையை சாதித்தது என்ற மதிப்பீட்டில் ஒருமனதாக உள்ளனர்.

ஆனால் இஸ்ரேலிய ஆட்சி அதிகாரிகளும் அவர்களுடைய செய்தி ஊடகமும் ஈரானிய தொலைதூர ஏவுகணைகளின் திறனையும் அவை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படுத்திய பேரழிவையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த பெரும்பிரயத்தனம் செய்கின்றன.

இஸ்ரேலிய ஆட்சியும் ஊடகங்களும் என்ன கூறின?

இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவ ஆதாரங்கள், அவற்றின் ஊடக நிறுவனங்கள் மூலமாக, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளால் 300 முதல் 350 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் சுமார் 170 ஆளில்லா விமானங்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளடங்குவதாகவும், அவற்றில் ஒரு சில மட்டுமே தடையைக் கடந்து சென்றதாகவும் கூறுகின்றன.

"99 சதவீத இடைமறிப்பு விகிதம் இப்படித்தான் இருக்கும்" என்ற விவரிப்புடன் அவர்கள் காட்சிகளை வெளியிட்டனர், அதில் ஜெட் விமானங்கள் அதிகபட்சமாக நான்கு ஷாஹெட்-136 ட்ரோன்கள் மற்றும் அறியப்படாத மாதிரியின் இரண்டு குரூஸ் ஏவுகணைகளை அழிக்க வானில் இருந்து வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகக் காட்டியது.

வெளியிடப்பட்ட மற்றொரு காட்சிகளில், F-35 அடிர் போர் விமானம் இஸ்ரேல் வான்வெளியை வெற்றிகரமாக பாதுகாத்ததாகக் கூறப்பட்ட பின்னர் நெவாடிம் விமானத் தளத்திற்குத் திரும்புகிறது, அவ்விதத்தில் ஒரு வெற்றிகரமான இடைமறிப்பு நடவடிக்கை மற்றும் விமானத் தளத்தில் சிறிதளவு அல்லது எந்த சேதமும் இல்லை என்பதாகக் காட்ட முயற்சிக்கிறது.

ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலால் ஏற்பட்ட பள்ளங்கள் என்று காட்டும் மிகவும் கேள்விக்குரிய நம்பகத்தன்மை அற்ற புகைப்படங்களுடன் அவர்கள் கூற்றுக்களை ஆதரிக்க முயன்றுள்ளனர்.

அன்றைய தினத்தின் பிற்பகுதியில், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் சில நாடுகள் ஈரானிய ஏவுகணைகளை இடைமறிப்பதில் இஸ்ரேலிய ஆட்சிக்கு உதவுகின்றன என்பது தெரியவந்தது.

ABC நியூஸிடம் பேசிய ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, குறைந்தது ஒன்பது ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளை கடந்து அதன் இரண்டு விமான தளங்கள், நெவாடிமில் ஐந்து மற்றும் ரமோனாவில் நான்கு என தாக்கியதாகவும், ஒரு ஓடுபாதை, கட்டிடங்கள் மற்றும் ஒரு சி-130 போக்குவரத்து விமானத்தை சேதப்படுத்தியதாகவும் கூறினார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் பின்னர் C-130 விமானம் சேதமடைந்ததை மறுத்தனர் மற்றும் இரண்டு விமான தளங்களிலும் சேதம் சிறியது என்றும், மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றும் ஒரே ஒரு சிறுமி மட்டுமே காயமடைந்தார் என்றும் கூறினார்.

தாக்குதலுக்கு மறுநாள், பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அமெரிக்க அதிகாரிகள், ஈரான் இஸ்ரேல் மீது ஏவிய தொலைதூர ஏவுகணைகளில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உந்துசக்தியைப் பெறவில்லை அல்லது நொறுங்கிவிட்டன என்று கூறினர்.

மேற்கத்திய பிரதான ஊடகங்கள் இந்த நிகழ்வு குறித்த இஸ்ரேலிய விளக்கத்தையும், அத்துடன் "99 சதவீத இடைமறிப்பு" குறித்த கேலிக்கூத்தான கூற்றையும் எந்த விமர்சனமோ அல்லது ஆய்வோ இல்லாமல் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

ஈரான் நள்ளிரவுக்கு சற்று முன்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் ஏராளமான தற்கொலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, சியோனிச அமைப்பை தாக்கி அதன் “உண்மையான வாக்குறுதி”யை நிறைவேற்றியது. குறிப்பிட்ட தாக்குதலானது இஸ்ரேலின் 'அடித்துவிட்டு ஓடும் காலம்' முடிந்துவிட்டன என்பதை நிரூபிக்கிறது.

கிடைக்கக்கூடிய சான்றுகள் என்ன தெரிவிக்கின்றன?

தூதரகத் தாக்குதல் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, இரகசியமாக மூடி மறைக்கப்பட்ட ஒன்றல்ல; இது சில நாட்களுக்கு முன்னரே ஈரானிய அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகளால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது, மேலும் தாக்குதல் நடந்த நாள் குறித்து அமெரிக்காவும் 72 மணி நேரத்திற்கு முன்பே அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

தவிர, Press TV உட்பட அனைத்து முன்னணி ஈரானிய ஊடகங்களும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் தங்கள் இலக்கை அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே ஈரான் ஆளில்லா விமானங்களை சரமாரியாக ஏவியதாக செய்தி வெளியிட்டன.

ஈரானிய இராணுவ தரப்பு முதலில் ஏவப்பட்ட ஆயுதங்களின் துல்லியமான வகைகள் மற்றும் எண்ணிக்கையை அறிவிக்கவில்லை, பெரும்பாலும் அவை "டஜன் கணக்கான" ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் என்று கூறின.

ஒரு உள்ளூர் செய்தி நிறுவனம் ஒரு வெளிநாட்டு செய்தி வலையமைப்பை ஆதாரம் காட்டி தாக்குதலின் போது 500 ட்ரோன்கள் ஏவப்பட்டதைப் பற்றிய தகவலை வெளியிட்டது, ஆனால் உள்நாட்டு இராணுவ ஆதாரம் எதையும் குறிப்பிடவில்லை.

இந்த கூற்று அந்த நேரத்தில் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது மற்றும் மில்லியன் கணக்கான இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களையும் ஆட்சி அதிகாரிகளையும் நிலத்தடி பதுங்கு குழிகளுக்கு மற்றும் பாதுகாப்பான வீடுகளுக்கு அனுப்பியதானது பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தை நிறைவு செய்தது.

பின்னர், இஸ்லாமிய குடியரசு காவல் படையினர் (IRGC) குறைந்தது 20 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 20 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு டஜன் டிரோன்கள் ஏவப்பட்டதைக் காட்டும் மூன்று காட்சிகளை வெளியிட்டது.

ஈராக்கில் பதிவு செய்யப்பட்ட தனியார் காட்சிகள் ஒரேயொரு டிரோனையும், ஒரு குரூஸ் ஏவுகணையையும்தான் காட்டின. எனவே ஆரம்பத்தில் பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானத் திரள்கள் பற்றி சுயாதீனமான காட்சிச் சான்றுகள் ஏதும் இல்லை.

இஸ்ரேலிய தணிக்கையையும் மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இருந்து கசியவிடப்பட்ட காட்சிகள், ஈரானிய பாலிஸ்டிக் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் ஏற்பட்ட பல சக்திவாய்ந்த வெடிப்புகளைக் காட்டின.

நெவாடிம் (Nevatim) அல்லது ரமோனி(Ramon)ல் உள்ள Negev விமானத் தளத்தில் மட்டும், வெவ்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட குறைந்தது நான்கு படங்கள், குறைந்தபட்சம் ஐந்து ஈரானிய ஏவுகணைகள் திட்டமிடப்பட்ட இலக்கை 11 வினாடிகளுக்குள் நொறுக்கின என்பதைக் காட்டின.

இரண்டு பெரிய விமானத் தளங்களின் செயற்கைக்கோள் படங்கள் ஏவுகணைகள் ஏனோ தானோ என்று ஏவப்படவில்லை, அவற்றால் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டுமானங்கள் துல்லியமாக தாக்கப்பட்டன என்பதை நிறுவின.

தகவலறிந்த ஆதாரம் ஒன்று பிரஸ் டிவியிடம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் இலக்கு கொள்ளப்பட்டன என்றும் எதுவும் இடைமறிக்கப்படவில்லை என்றும் கூறியது. அது புதிதாக காட்சிப்படுத்தப்பட்ட Fattah ஏவுகணை தானா என்று குறிப்பிடவில்லை என்றும் அது கூறியது.

ஈரானிய ஆயுதப்படைகளின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்கரி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் ஒரு பெரிய இஸ்ரேலிய உளவுத்துறை தளம் மற்றும் நெவாடிம் விமான தளத்தை ஈரான் தாக்கியது என்றும், சியோனிச ஆட்சியின் வான் பாதுகாப்பு அதை தடுக்க தவறியதால் தாக்குதல்கள் "அதன் இலக்குகளை அடைந்தன" என்றும் கூறினார்.

இஸ்ரேலிய மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கின் ஊடகங்களின் நகைப்புக்குரி கூற்று

ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மிகவும் வெற்றிகரமாக இடைமறித்ததாக இஸ்ரேலின் கூற்றுக்கள் சரிபார்க்கப்பட்ட எண்கள், முரண்பாடான உத்தியோகபூர்வ அறிக்கைகள், தணிக்கை முயற்சிகள், ஆதாரங்களை பொய்யாக்குதல், பல்வேறு கையாளுதல்கள் மற்றும் ஆட்சியின் ஆவேசமான எதிர்வினைகள் ஆகியவற்றால் பொய்ப்பிக்கப்படுகின்றன.

முதலாவதாக, 300-350 எதிரி இலக்குகள் மற்றும் அனைத்து ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட 99 சதவிகிதம் வீழ்த்தப்பட்டது என்ற கூற்றுக்கள், மூன்றே மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் உத்தேசிக்கப்பட்ட இலக்குகளைத் தாக்கியதைக் குறிக்கிறது, இது உண்மைக்கு புறம்பானது, குறைந்தது ஒன்பது வெற்றிகரமான தாக்குதல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேல் தரப்பின் உண்மையான பாதிப்பை நிர்ணயிக்க முடியாது ஏனெனில் இஸ்ரேலிய ஆட்சி தனிப்பட்ட காட்சிகளையும் புகைப்படங்களையும் தணிக்கை செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றை இணையத்தில் வெளியிட வேண்டாம் என்று குடியேற்றக்காரர்களை பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளது.

ட்ரோன் அல்லது ஏவுகணை ஒன்று  கூட தமது பிராந்தியங்களை அடையவில்லை என்று அவர்கள் ஆரம்பத்தில் கூறினாலும், பின்னர் இஸ்ரேலின் ஹீப்ரூ ஊடகங்கள் ஹெர்மன் தளத்திற்கு அருகாமையில் ஆளில்லா விமானங்களால் ஏற்பட்ட சேதத்தை ஒப்புக் கொண்டன.

கோலன் குன்றுகளில் உள்ள தளங்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக அண்டை நாடுகளில் இருந்தும் தீவிர அறிக்கைகள் வந்தன, அநேகமாக வானத்தில் பாலிஸ்டிக் தடயங்கள் எதுவும் இல்லாததால், தாழ்வாக பறக்கும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் அவை கடுமையாக தாக்கப்பட்டன.

ஈரானிய அறிக்கைகளோ அல்லது சுயாதீனமான உறுதிப்படுத்தல்களோ இல்லாத நிலையில், 50 வெவ்வேறு ஏவுதல்களின் ஈரானிய காட்சிகள் மற்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் சுட்டு வீழ்த்தப்பட்ட இஸ்ரேலிய காட்சிகள் மட்டுமே உள்ளன என்பதால், "நூற்றுக்கணக்கான" எதிரி இலக்குகளின் இஸ்ரேலிய புள்ளிவிபரங்களை ஆதரிப்பதற்கு அங்கே எதுவும் இல்லை.

120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 99 சதவீத இடைமறிப்புகள் பற்றிய இஸ்ரேலின் கூற்றுகள் உண்மையாக இருக்குமானால், அந்த பிராந்திய நாடுகளின் வானத்தில் பரவலாக (வான வேடிக்கை போன்று) தெரியும் இடைமறிப்பு வெடிப்புத் தடயங்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் ஒன்று கூட பதிவு செய்யப்படவில்லை.

குறைந்தபட்சம் 20 சரிபார்க்கப்பட்ட ஏவுதல்கள் மற்றும் குறைந்தபட்சம் 9 வெற்றிகரமான தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், பெரும்பாலான ஏவுகணைகள் வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்துவிட்டன மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலும் தோல்வியடைந்தன என்ற ஈரானின் உத்தியோகபூர்வ கூற்றுக்களை அனைத்து ஆதாரங்களும் ஆதரிக்கின்றன.

இஸ்ரேல் ஏன் இடைமறித்ததற்கான ஆதாரங்களை முன்வைக்கவில்லை?

டிரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதற்கான சொற்ப சான்றுகளுக்கு மாறாக, ஏவுகணைகளை இடைமறித்ததற்கான எந்த தொழில்நுட்ப ஆதாரத்தையும் இஸ்ரேலிய இராணுவ ஆதாரங்கள் தொலைதூர வெளியிடவில்லை, மாறாக குறைந்தது மூன்று ஏமாற்றுகளைப் பயன்படுத்த முயன்றன.

அவர்களின் ஊடகங்களில் சில ஈரானிய பல-நிலை ஏவுகணைகளின் ஆரம்ப கட்டங்களை "தோல்விகள்" என்று காட்ட முயற்சித்தன, அவை பார்வைக்கு முற்றிலும் அப்படியே இருந்தாலும், இது ஒரு செயலிழப்பு வெடிப்பு அல்லது இடைமறிப்பு தகர்ப்பு சாத்தியத்தை விலக்குகிறது.

அவர்கள் நெகேவ் பாலைவனத்தில் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதாகக் கூறப்படும் பள்ளத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டு, எந்த முக்கிய இலக்கும் தாக்கபடவில்லை என்று காட்டினர், இருப்பினும் விளிம்புகளில் உள்ள வடிவமும் கருவிகளும்  அல்ல என்றும் அது அவர்களாலேயே தோண்டப்பட்ட துளை என்றும் சாட்சியமளிக்கின்றன.

"வெற்றிகரமான தாக்குதல்கள்" குறித்த ஈரானின் அறிக்கைகள் விமானத் தளத்தின் "முழுமையான அழிவு" என்ற கூற்றுக்களாக வியத்தகு முறையில் தவறாக விளக்கப்பட்டன, மேலும் நெவாடிம் விமானத் தளத்தில் எஃப்-35 தரையிறங்கும் காலை காட்சிகள் அவற்றின் சொந்த திரித்தலை மறுப்பதாக கருதப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு முன்னர் இஸ்ரேலிய ஆட்சி மற்றும் குடியேறிய மக்களின் பீதி நிறைந்த நகர்வுகள் அவர்களின் வான் பாதுகாப்பு முறைகளில் அவர்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டியது.

ஈரானின் பதில் தாக்குதலு முன் இரண்டு வாரங்களாக, ஒரு வெகுஜன பீதி இருந்தது, அச்சத்தின் காரணமாக மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கியதால் கடைகள் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தன, பள்ளிகள் மூடப்பட்டன, தஞ்சமிடங்கள் நிரம்பியிருந்தன, மூன்று மேற்கத்திய சக்திகள் இராணுவ உதவிக்கு அழைக்கப்பட்டன.

பின்னர், ஈரானிய தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலிய ஆட்சி ஈரானின் "99 சதவீதம் தோல்வியுற்ற" ஏவுகணைத் திட்டத்தின் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு உலகைக் கேட்டுக்கொண்டது.

இன்று, அயர்ன் டோம் போன்ற குறுகிய-தூர அமைப்புகளின் பலவீனம் நிரூபிக்கப்பட்ட பின்னர், கோட்பாட்டளவில் சிறந்த பாதுகாப்புடைய விமானத் தளங்கள் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க நீண்டதூர வான் பாதுகாப்பு அமைப்புகள் இரண்டையும் சங்கடப்படுத்தியது.

https://www.presstv.ir/Detail/2024/04/17/723856/how-why-israel-downplaying-havoc-wreaked-iranian-missiles