Tuesday, March 21, 2023

மூவாயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படும் பாரசீக புத்தாண்டு

The Persian New Year is a three thousand year old celebration.

நவ்ருஸ் என்பது ஈரானிய புத்தாண்டு ஆகும்இது பொதுவாக பாரசீக புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது. பல்வேறு இன-மொழியியல் மக்கள் குழுக்களால் உலகளவில் இப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நவ்ரூஸ் எனும் பாரசீக புதுவருடம் இரவும் பகலும் சமமான நீளம் கொண்ட வசந்த உத்தராயணத்தைக் குறிக்கிறது. இது வழக்கமாக மார்ச் 20 அல்லது 21 அன்று நிகழும். வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வசந்தமாக மாறும் நாள், அது ஒரு புதிய தொடக்கமாக உணரப்படுகிறது. ஈரானில் அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பொது விடுமுறைகள் மற்றும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

பாரசீகம் என்பது ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை கட்டியாண்டது என்பதை நாம் அறிவோம். அதற்கென சில பண்பாட்டு நாகரீக பழக்கவழக்கங்கள் இருந்தனஅதிலொன்றுதான் வசந்த காலத்தின் முதல் நாளைக் கொண்டாடும் நவ்ரூஸ் பண்டிகையாகும். பாரசீக சாம்ராஜ்யத்துக்கு உட்பட்டிருந்த அனைத்து பிரதேசங்களிலும் இன்றுவரை இந்தப் பண்டிகை அதன் தனித்துவமான ஈரானிய பாரம்பரியங்களுடன் குறைந்தது 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.


வசந்த காலத்தின் முதல் நாளை சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மிகத்துல்லியமாக கணிப்பிட்டு வைத்துள்ள ஈரானியர்களின் ஆற்றல்விண்ணியலாளர்களை இன்றளவிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இத்தினத்திற்காக மக்கள் தங்கள் வீடுகளில் ஒரு சிறப்பு அட்டவணையை தயார் செய்கிறார்கள், அங்கு அவர்கள் ஏழு அடையாள உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களை வைத்திருக்கும் சிறிய உணவுகளை வைக்கிறார்கள். இந்த உணவுகளின் பெயர்கள் அனைத்தும் பாரசீக மொழியில் 'சீன்' என்ற எழுத்தில் தொடங்குகின்றன, எனவே அட்டவணை 'ஏழு சீன்கள்' (ஹஃப்ட்-சீன்) என்று அழைக்கப்படுகிறது. உணவுகளில் பொதுவாக கோதுமை அல்லது பீன்ஸ் முளைகள் (சப்ஸே), வினிகர் (செர்கே), ஆப்பிள்கள் (சிப்), பூண்டு (சர்), கோதுமை சார்ந்த புட்டு எனப்படும் சமனு, சுமாக் எனப்படும் சிவப்பு மசாலா மற்றும் சென்ஜெட், ஒரு வகையான காட்டு ஆலிவ் ஆகியவை அடங்கும். பிராந்தியத்தில் பொதுவாக கிடைக்கக்கூடியவை. மற்ற குறியீட்டு பொருட்களில் பொன் மீன்கள், வர்ணம் பூசப்பட்ட முட்டைகள், மெழுகுவர்த்திகள் மற்றும் கண்ணாடி ஆகியவை அடங்கும். ஏழு சீன்கள் வாழ்க்கை, அன்பு, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.

இந்த பண்டிகையைக் கொண்டாடும் பல நாடுகளின் முன்முயற்சியின் பேரில்2010 ஆம் ஆண்டின் A / RES / 64/253 என்ற தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இத்தினம் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

சமாதான கலாச்சாரம்” என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ், ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், அல்பேனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு, மாசிடோனியா, ஈரான் (இஸ்லாமிய குடியரசு), இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் எடுத்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ‘சர்வதேச நவ்ருஸ் தினம்’ பிரகடனப்படுத்தப்பட்டது.

ஈரானியர்கள் தங்கள் குடும்பத்துடன் நவ்ரூஸ் இரவைக் கழிக்கிறார்கள். பாரம்பரிய புத்தாண்டு இரவு உணவு அரிசி மற்றும் மூலிகைகள் கொண்ட மற்றும் அதில் வெண்சதை கொண்ட மீனும் அடங்கியிருக்கும். பல குடும்பங்களில் புத்தாண்டைக் குறிக்க குழந்தைகளுக்கு பணப் பரிசு வழங்குவது வழக்கம். மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று பாரம்பரிய பரிசுகளை வழங்குவார்கள். இந்த பரந்த பிராந்தியத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படும் நவ்ருஸ் பண்டிகையின் ஆரம்பகால தோற்றங்கள் சில ஜோராஸ்ட்ரியனிசத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. இது பண்டைய ஜோராஸ்ட்ரியன் காலண்டரில் புனிதமான நாட்களில் ஒன்றாகும்.

ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அஜர்பைஜான், முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசு மாசிடோனியா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் இப்பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுகின்றன. இத்தினத்தில் பாரம்பரிய கவிதை, பாடல் மற்றும் நடனம் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் பங்கேற்கவும் மக்கள் தெருக்களில் நிரம்பி வழிகிறார்கள். குதிரை சவாரி, மல்யுத்தம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறும்.

மனிதகுலத்தின் உள்ளார்ந்த கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ நாடுகளால் "நவ்ரூஸ்" வசந்த காலத்தின் முதல் நாளாக மற்றும் இயற்கையின் புதுப்பித்தலைக் குறிக்கும் நாளாக கொடாடப்படும் ஒரு புராதன பண்டிகை ஆகும். நவ்ரூஸ் உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்களால் கொண்டாடப்படுகிறது.

"இது குடும்பங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சமாதானம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான நட்புறவு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது" என்று ஐ.நா. குறிப்பிடுகிறது.

ஜோராஸ்ட்ரிய பாரம்பரியத்தின் படி வசந்தத்தின் வருகை மிகுந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒன்றாகும். இது தீமைக்கு எத்திரான போராட்டத்தில் நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது மற்றும் துக்கம் களைந்து மகிழ்ச்சி பொங்கச் செய்வதைக் குறிக்கிறது. குறிப்பாககுளிர்காலத்தில் நிலத்தடிக்கு விரட்டப்பட்டதாகக் கருதப்பட்ட 'ராபித்வினாஎன அழைக்கப்படும் நல் ஆவிநவ்ருஸ் நாளில் நண்பகலில் கொண்டாட்டங்களுடன் புத்துயிர் பெறுகிறது என்று அவர்களால் நம்பப்படுகிறது.

புராணக் கதைகள்

இக்கொண்டாட்டம் தொடர்பான பல புராணக் கதைகள் இன்றளவிலும் சமூகத்தில் பேசப்படும் ஒன்றாக இருக்கின்றது. பாரசீக மன்னரான ஜம்ஷித்தின் புராணக்கதை உட்பட பல்வேறு வகையான உள்ளூர் மரபுகளுடன் நவ்ருஸை தொடர்பு படுத்தி பேசப்படுகிறது. ஈரானில் இன்றுவரை, நவ்ருஸ் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் ‘நவ்ருஸ் ஜம்ஷிடி’ என்று அழைக்கப்படுகிறது. புராணத்தின் படி, ஜம்ஷித் ஒரு தேரில் காற்றில் பறந்து செல்கிறார், இது அவரது குடிமக்களை வியப்பில் ஆழ்த்தியது, அந்த நாளை அவர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடினர். இதே போன்ற புராணக் கதைகள் இந்திய மற்றும் துருக்கிய மரபுகளிலும் உள்ளன, அதே நேரத்தில் 'நவ்ரூஸ்' தொடர்பான புராணக்கதைகள் மத்திய ஆசிய நாடுகளில் பிரபலமாக உள்ளன.

நவ்ருஸ் நாளில், பல்வகை உணவு தயாரித்து விருந்து படைத்தல், மூத்த குடும்ப உறுப்பினர்கள் வீடுகளுக்கும் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துக்களையும் அன்பளிப்புகளையும் பரிமாறிக்கொள்ளல் போன்றன பொதுவாக இடம்பெறும் சம்பிரதாயமாகும். பரந்த அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மரபு ரீதியான விளையாட்டுக்கள் போன்றனவும் இத்தினத்தையொட்டி இடம்பெறும். குழந்தைகளுக்கு பெரும்பாலும் விளைட்டுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன, மேலும் பல வர்ணம் பூசப்பட்ட முட்டைகளுடன் விளையாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. 

குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் தமக்குள் ஒரு குறியீட்டு உணவைப் பகிர்ந்து கொள்கின்றனபெரும்பாலும் பல உள்ளூர் பொருட்கலவையில் செய்யப்பட்ட சமைத்த அரிசி மற்றும் காய்கறிகளைக் அது கொண்டிருக்கும். கிர்கிஸ்தானில்இந்த உணவு சமைத்தல் ஒரு பொது விழாவாகும். முக்கியமாக நூருஸ் கெட்ஜே அல்லது சோன் கெட்ஜே என்று பெயர் கொண்ட இவ்விழாவில்காளைகளின் இறைச்சியிலிருந்து ஒரு வகை சூப் தயாரிப்பதற்காக நகரங்களில் விசேடமான பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

நவ்ரூஸ் உணவு மேசை (Sofreh-ye Haft Sin)

நவ்ரூஸ் உணவு மேசையைத் தயார்படுத்தல் ஒரு விசேடமான பாரம்பரியமாகும். அதில் பல குறியீட்டு பொருள்கள் வைக்கப்படுகின்றன. இங்கு வைக்கப்படும் பொருட்கள் பிராந்தியத்திலிருந்து பிராந்தியத்திற்கு சற்று வேறுபடுகின்றன என்றாலும்மிகவும் பொதுவான அம்சங்கள்: நீர்மெழுகுவர்த்திகள்பச்சை முளைகளினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (அல்லது சப்ஸே)கோதுமை முளைகள்முகம்பார்க்கும் கண்ணாடிகள்முட்டை மற்றும் பல்வேறு பழங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டிருக்கும். 

இந்த பொருள்கள் புதிய ஆண்டிற்கான தூய்மைபிரகாசம்தாராளம்மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன. ஈரானில்இந்த அட்டவணை “சோஃப்ரே-யே ஹாஃப்ட் சின்” என்று குறிப்பிடப்படுகிறதுஇவை ஒவ்வொன்றும் ‘’ எழுத்தில் தொடங்கும் ஏழு பொருள்களைக் கொண்டதாய் இருக்கும். இதேபோன்ற அட்டவணை இந்தியாவின் சில பகுதிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் நவ்ருஸ் கொண்டாட்டங்கள் (Nowruz in Iran)

பாரசீக புத்தாண்டு நவ்ருஸைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ஈரானியர்கள் தங்கள் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்கிறார்கள். இது "தூசி துடைத்தல் வைபவம்" என்று அழைக்கப்படுகிறதுமேலும் பழையன கழிந்துபழைய வருடத்திற்கு விடை சொல்லிபுத்தாண்டை வரவேற்பதை இது குறிக்கிறது.

வசந்தத்தின் வருகை என்றால் குளிர் காலம் முடிந்துவெப்ப காலம் வருவதைக் குறிப்பதாகும். ஆனால் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்குகுறிப்பாக ஈரானுக்குஇதை விட அதிகமான முக்கியத்துவமிக்க விஷயங்கள் உள்ளன. ஈரானிய மக்களைப் பொறுத்தவரைவசந்தத்தின் வருகை என்பது ஒரு நீண்ட கால பாரம்பரியம்வரலாற்றில் வேரூன்றிய ஒரு கொண்டாட்டம் மற்றும் இயற்கை அன்னையின் வளர்ச்சியையும் வீரியத்தையும் மகிமைப்படுத்துவதாகும்.

கானே தேகானி! (KHANEH TEKANI)

இவை அனைத்தும் மார்ச் மாத தொடக்கத்தில் ‘வசந்த சுத்தம்’ மூலம் தொடங்குகின்றன. ‘கானே தேகானி’ என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரியம், இதற்கு ‘வீட்டை அசைத்தல்’ என்ற அர்த்தம். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஈரானியர் வீட்டிலும் பொதுவாக இடம்பெறும் ஒன்றாகும். தரைவிரிப்புகள் கழுவப்படுகின்றன, ஜன்னல்கள் துடைக்கப்படுகின்றன, வெள்ளிப் பொருட்கள் மெருகூட்டப்படுகின்றன, திரைச்சீலைகள் உலர்த்துவதற்கா துப்புரவாளர்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் பழைய தளபாடங்கள் பழுதுபார்க்கப்படுகின்றன அல்லது புதியதாக மாற்றப்படுகின்றன.

வீடு முழுவதும் பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருக்கும் வரை ஒவ்வொரு மூலை முடுக்குகளெல்லாம் துடைக்கப்பட்டுமெருகூட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த சடங்கில் ஈடுபடுவர். இது ஒரு புதிய ஆண்டுக்கான ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. துடைக்கப்படும் தூசியுடன்துரதிர்ஷ்டமும் கழுவி நீக்கப்பட்டுசுபீட்சம் உண்டாகிறது என்பது மக்களின் நம்பிக்கை.

இதன் பின்னர் ஷாப்பிங் நேரம். சந்தைகள் மற்றும் ஷாப்பிங் மையங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து வழியும். புத்தாடையுடன் கனி வர்க்கங்கள்இனிப்பு வகைகள் மற்றும் மிட்டாய்கள்உளர் விதைகள்பூக்கள் மற்றும் ஹாஃப்ட் சீன் மேசைக்கு அவசியமான அனைத்தும் வாங்க மக்கள் முண்டியடிப்பர். ஹாஃப்ட் சீன் எனும் மேசை, புத்தாண்டில் ஒரு ‘கட்டாயம்’ இருக்கவேண்டிய ஒன்றாகும்.

புத்தாண்டு சடங்குகளில் ஏழு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கும். ஆப்பிள்பசும் புல்கோதுமை பண்டம்சிவப்பு வகை பெர்ரிபூண்டுவிணாகிரி மற்றும் நாணயம் ஆகியன அலங்காரங்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக புனித குர்ஆன் மற்றும் ஹாபிஸின் கவிதைத் தொகுதி ஆகியனவும் சுப்ராவில் (விரிப்பில்) வைக்கப்பட்டிருக்கும். சிலர் ஈரானின் தேசிய நூலான பிர்தவ்ஸியின் ஷாஹ்-நாமேயினையும் வைப்பதுண்டு.

இப்பண்டிகை சொராஸ்திரிய வேரைக் கொண்டிருந்தபோதும், இஸ்லாத்தின் வருகையின் பின், பாரசீகர்கள் எவ்வாறு தம்மை இஸ்லாமியப்படுத்திக் கொண்டார்களோ, அதுபோல் இப்பண்டிகையின் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து அம்சங்களும் களையப்பட்டு, இஸ்லாமிய மனம் கமழும் ஒன்றாக மாறியது. (ஈரானிலுள்ள சொராஸ்திரியார்கள் அவர்களுக்கே உரிய முறையில் இதனைக் கொண்டாடுவர்.)

சஹார்ஷன்பே சூரி (CHAHARSHANBE SOORI)

நவ்ருஸுக்கான ஏற்பாடுகள் ‘சஹார்ஷன்பே சூரி’ என்ற தினத்தில் ஆரம்பித்துவிடுகிறது. ‘சஹார் ஷன்பே சூரி’ என்பது ஈரானிய ஆண்டின் கடைசி புதன்கிழமை ஆகும். இந்த தினம் விழாக்கோலம் பூண்டிருக்கும் மேலும் சிறப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளால் நிறைந்திருக்கும்குறிப்பாக நெருப்பின் மேலால் குதிப்பது அவற்றில் ஒன்று. சூரியன் மறையும் வேளைமக்கள் தீமூட்டிஅதன் மேலால் குதித்து குதூகலிப்பர். அவர்கள் இவ்வாறு செய்யும்போதுஸார்தி-யே மன் அஸ் தோசோர்கி-யே தோ ஆஸ் மன்அதாவது என் மஞ்சள் உன்னுடையதுஉனது சிவப்பு என்னுடையது என்று பாடுகிறார்கள். இந்த சடங்கில்அவர்கள் தங்கள் கவலைகளையும் சிக்கல்களையும் போக்கும்படி இறைவனிடம் கேட்கிறார்கள்அதற்கு பதிலாக அவர்களுக்கு ஆற்றலையும் சுகத்தையும் கோருகிறார்கள்.

ஆண்டின் கடைசி நாள் நிறைவு பெற்றுபுத்தாண்டு ஆரம்பிக்கையில் எல்லோரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் ஒன்றாக இருப்பதற்காக தத்தம் வீடுகளுக்கு விரைந்து செல்வர். புத்தாண்டு என்பது அந்த சிறப்பு தருணங்களை குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியையும் அன்பையும் பகிர்ந்துகொண்டாடுவது தானே.

- தாஹா முஸம்மில் 

 

No comments:

Post a Comment