Contributors

Wednesday, March 1, 2023

அமெரிக்காவுக்கோ அல்லது அதன் கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கோ "ஈரானின் மனித உரிமைகள் பற்றி பேச எந்த தார்மீக தகுதியும் இல்லை"

Iran Roasts Rights Bodies in Geneva Address

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் திங்களன்று அமெரிக்கா மற்றும் வாஷிங்டன் தலைமையிலான "சில நாடுகள்" தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப மனித உரிமைகள் என்ற கருத்தை கையாள்வதை கடுமையாக விமர்சித்தார்.

"ஐ.நா மனித உரிமைகள் வழிமுறைகளினால் உண்மையான உரையாடல், ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் திறனை வளர்க்கும் மரியாதைக்குரிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பங்களிக்க முடியும்," என்று சுவிஸ் நகரில் மனித உரிமைகள் பேரவையின் 52வது அமர்வில் அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

"மனித உரிமை சபை உட்பட மனித உரிமை நிறுவனங்கள், வருந்தத்தக்க வகையில் அமெரிக்கா தலைமையிலான ஒரு சில நாடுகளின் வெளியுறவுக் கொள்கையின் கருவியாக மாற்றப்பட்டுள்ளன."

சம உரிமைகள் மற்றும் மக்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே உறவுகளை மனித உரிமை சபை ஊக்குவிக்க வேண்டும், எனினும் "நடைமுறையில், மனித உரிமை கவுன்சில் சில சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளது, அவை நாடுகளிடையே நட்புறவு கொள்கைகளுக்கோ அல்லது அத்தகைய நோக்கங்களுக்கோ ஒருபோதும் சேவையும் செய்யாது, பங்களிப்பும் செய்யாது." என்று அமீர்-அப்துல்லாஹியான் குறிப்பிட்டார்.

"உறுப்பு நாடுகளிடையே 'ஒத்துழைப்பு மற்றும் உண்மையான உரையாடல் கொள்கைகளை' நிலைநிறுத்துவதன் மூலம் மனித உரிமை கவுன்சில் அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மீட்டெடுக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகள் அவற்றுடன் ஒத்துப்போகாத மற்ற நாடுகளுக்கு எதிராக முற்றிலும் அரசியல் அடிப்படையில் விதித்துள்ள ஒருதலைப்பட்ச தடைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், சட்டவிரோதமானவை மற்றும் மனிதாபிமானமற்றவை, அவை இலக்கு வைக்கப்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமைகளை முழுமையாகவும் அப்பட்டமாகவும் மீறுகின்றன,” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் தொடர்ச்சியான நிர்வாகங்கள் அவை செய்த அட்டூழியக் குற்றங்களுக்காக பொறுப்புக் கூற வேண்டும். அமெரிக்காவின் சட்டவிரோத ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு இணங்கும் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள் குற்றத்தில் பங்காளிகளாக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும், ”என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கோ அல்லது அதன் மிருகத்தனமான கொள்கைகளை பின்பற்றும் நாடுகளுக்கோ "ஈரானின் மனித உரிமைகள் பற்றி பேச எந்த தார்மீக தகுதியும் இல்லை" என்று அமீர்-அப்துல்லாஹியான் கூறினார்.

"ஈரானிய மக்களின் மருத்துவ உரிமை, கல்வி மற்றும் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமைகளை பறித்துக்கொண்டு, ஈரானியர்களின் மனித உரிமைகளுக்காக குரல் எழுப்புவதாக கூப்பாடு போடுவது ஒரு சுத்த பாசாங்குத்தனமாகும்." என்று அவர் கூறினார்.

Iranian FM meets with UN Secretary General Antonio Guterres

"இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தலையீடுகள், சதியின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதால், முறையான மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா மட்டுமே பொறுப்பாகும்."

பயங்கரவாதம் பற்றி பேசுகையில் "உலகெங்கிலும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் தோற்றம் தற்போதைய சகாப்தத்தின் முக்கிய சவால்களில் ஒன்றாகும் என்று அமீர்-அப்துல்லாஹியான் குறிப்பிட்டார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ளது. தாயேஷ் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜெனரல் சுலைமானியின் தியாகத்தையும் போராட்டத்தையும் மறந்துவிடலாகாது. பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்துவிட்டோரை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த ஈரான் இஸ்லாமிய குடியரசு எந்த முயற்சிகளையும் எடுக்க தயங்காது".

"எனது நாட்டில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் ஈரான்-எதிர்ப்பு பயங்கரவாத குழுக்களின் பங்கு தெளிவாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

"சில ஐரோப்பிய நாடுகள் இரட்டைத் தரங்களைப் பயன்படுத்தி 'பயங்கரவாதத்தை சுத்தப்படுத்துவதில்' ஈடுபட்டன. ஈரானில் அமைதியின்மையின் போது வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு கணிசமான நிதி மற்றும் தளவாட வசதிகளை அவை வழங்கின".

ஈரானில் சமீபத்திய கலவரங்களின் போது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பல பாரசீக மொழி தொலைக்காட்சி ஊடகங்கள் வெறுப்பைத் தூண்டுபவையாகவும் வன்முறையைப் பரப்புபவையாகவும் செயல்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசில் பெண்களை ஒடுக்குவது குறித்த மேற்கத்திய ஊடகங்களின் பிரச்சாரத்தை மறுத்த அமீர்-அப்துல்லாஹியான், “இந்த ஆண்டுகளில், நமது பெண்கள், அறிவியல் மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவம், சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் பிறர் பொறாமைப்படும் அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர், மேலும் சாதனைகளை பதிவு செய்துள்ளனர். அரசியல், சர்வதேச, சமூக, அறிவியல் விடயங்களிலும் தொழில்நுட்ப மற்றும் வணிகப் துறைகளிலும் ஈரானியப் பெண்களின் திறமையான மற்றும் ஆற்றல்மிக்க உருவத்தை உலகிற்குச் சித்தரித்துள்ளது.

"எங்களைப் பொறுத்தவரை, 'மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு' மதிப்பளித்தல் என்பது நமது தேசிய பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, நமது மத நம்பிக்கைகளில் ஆழமாக உட்பொதிக்கப்பட்ட ஒரு முக்கிய மதிப்புமாகும். மேலும் சிறந்த பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் அயராது பணியாற்றி வருகிறோம். எங்களுடைய நீண்ட வரலாற்றில் நாம் மனச்சோர்வடையவோ அல்லது முரண்பாடுகளால் திசைதிருப்பப்படவோ கூடாது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம், என்றும் அவர் தெரிவித்தார்.

https://kayhan.ir/en/news/112898/iran-roasts-rights-bodies-in-geneva-address

 

No comments:

Post a Comment