Thursday, February 14, 2019

ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது


Imam’s ‘Strategic’ Statement on 40th Anniversary
ஈரான் புரட்சிகர கொள்கைகளிலிருந்து பின்வாங்க கூடாது
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40ஆண்டு நிறைவை முன்னிட்டு இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் விடுத்துள்ள "இஸ்லாமிய புரட்சின் இரண்டாம் கட்டம்" என்ற செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
இஸ்லாமியப் புரட்சியானது  ஈரானின் பாதுகாப்பு, உறுதிப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் ஈரான் தனது தேசிய மற்றும் புரட்சிகர பெருமானங்களில் இருந்தும் ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்றும் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனேய் வலியுறுத்தியுள்ளார்.
ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், ஒரு சில நாடுகளே புரட்சியின் ஊடாக மாற்றங்களை மேற்கொண்டன. எழுச்சிபெற்ற அவ்வாறான நாடுகளில் ஒரு சில நாடுகளே தம் இலக்கை அடைவதற்கு இறுதிவரை போராடி, ஆட்சி மாற்றத்துக்கு அப்பால், தமது புரட்சி பெறுமானங்களை காத்துக்கொண்டுள்ளன.
இருப்பினும், ஈரானிய தேசத்தின் புனிதமிக்க இஸ்லாமிய புரட்சியானது - இந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகள் அனைத்திலும் மக்கள்மயப்பட்ட ஒரே புரட்சியாகும் - நாற்பது ஆண்டுகளாக பெருமையுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே புரட்சி, அதனது பெறுமானங்களையும் கண்ணியத்தையும் துரோகிகளிடமிருந்து காப்பாற்றிக்கொண்டுள்ளது; மேலும் அது அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து, அதன் கண்ணியம் மற்றும் புரட்சியின் அசல் நோக்கங்களையும் பாதுகாத்துள்ளது.
இனி நாம் புரட்சியின் இரண்டாவது கட்டமாக சுய வளர்ச்சி சமூகம்-செயலாக்கம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புதல் என்பதற்குள் நுழையவேண்டும்.
உலகு சடவாதத்தின் அடிப்படையில் கிழக்கெனவும் மேற்கெனவும் பிளவுபட்டு இருந்தவேளை, எவரும் எதிர்பாரா வண்ணம் இஸ்லாத்தின் அடிப்படையிலான மகோன்னத புரட்சி வலிமையுடன் களத்தில் நுழைந்தது; ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டமைப்பை உடைத்தெறிந்து, காலாவதியான பழைமைவாத சிந்தனையை கிழித்தெறிந்தது. பொருள்முதல்வாதத்துக்கும் சன்மார்க்கத்துக்கும் இடையில் ஓரிணைப்பை ஏற்படுத்தி, ஒரு புதிய சகாப்தத்தின் வருகையை இஸ்லாமிய புரட்சி கட்டியம் கூறியது.
இஸ்லாமிய புரட்சி வெற்றியின் 40 ஆண்டு விழாவைக்  கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதன் மீது விரோத போக்குக்கொண்டிருந்த இரண்டு மையங்களில் ஒரு மையம் ஏற்கனவே சரிந்து விட்டது; இரண்டாவது மையமும் மீள முடியாத சிக்கல்களின் ஊடாக சீக்கிரமே சரியக்கூடிய அடையாளங்களை வெளிக்காட்டி வருகின்றது. இந்நிலையில் இஸ்லாமிய புரட்சி அதனது கோர்ப்பாடுகளைத் தக்கவைத்துக்கொண்டு, குறிக்கோளை நோக்கி துரிதமாக  முன்னேறி வருகிறது.
புரட்சியின் குறிக்கோள்களான சுதந்திரம், அறநெறி, ஆன்மீகம், நீதி, கண்ணியம், பகுத்தறிதல் மற்றும் சகோதரத்துவம் ஆகிய எதுவும் காலாவதியாவது கிடையாது. காலவோட்டத்தில் எழுச்சிப்பெரும் அல்லது வீழ்ச்சியடையும் சமூகத்துக்கோ அல்லது தலைமுறைக்கோ அது மட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. மக்கள் இந்தப் பெறுமானங்களை  அசட்டை செய்வர் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியாது.
தொடங்கியதில் இருந்தே, இந்த புரட்சி மூர்க்கத்தனமானதாகவோ அல்லது இரத்தத்தை ஓட்டுவதாகவோ ஒருபோதும் இருந்ததில்லை; அது செயலூக்கமற்றதாகவோ அல்லது தயக்கம் கொண்டதாகவோ இருந்ததில்லை; சண்டித்தனத்துக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ அஞ்சாது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களை காப்பதற்காக தொடர்ந்தும் போராடி வருகின்றது.

எதிர்காலம்: இளைஞர்களுக்கு ஒரு செய்தி
மகோன்னதமான இஸ்லாமிய ஈரானை கட்டியெழுப்பும் பொறுப்பு இளைஞர்களிடமே உள்ளது. அவர்கள் தான் கடந்த தலைமுறையின் அனுபவங்களில் பாடம்பெற்று தமது சொந்த அனுபவங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல வேண்டும்.
எதிர்வரும் காலம் உங்களுடையது. உங்களது புரட்சியை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் உள்ளீர்கள். புரட்சியின் உயர்ந்த இலட்சியத்தை வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டியது உங்களது கடமை. இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையை எதிர்நோக்கி ஒரு நவீன இஸ்லாமிய நாகரீகத்தை தோற்றுவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, கடந்த காலத்தைப் பற்றிய நல்ல அறிவை வளர்த்து, அதன் மூலம் படிப்பினைப் பெற வேண்டும். இந்த மூலோபாயம் புறக்கணிக்கப்பட்டால், சத்தியத்தின் இடத்தை பொய்மை ஆக்கிரமித்துவிடும் மேலும் எதிர்காலத்தில் அடையாளம் காணமுடியா அச்சுறுத்தல்களினால் அவதியுற நேர்ந்திடும். புரட்சியின் எதிரிகள், கடந்த காலத்தில் செய்து வந்தது போல், இன்றும் கூட பணம் மற்றும் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி, எமக்கு எதிராக பொய்களை பரப்பும் அவர்க்களது முயற்சிகளில் உத்வேகம் கொண்டுள்ளனர்.
இஸ்லாமியப் புரட்சி நாட்டினுடைய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துள்ளதுடன் பல முனைகளில் முன்னேற்றத்திற்கான "இயந்திரம்" என செயல்பட்டதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளது.
தேர்தல்களிலும் நாட்டின் ஏனைய அரசியல் விவகாரங்களிலும் மக்களது பங்களிப்பை ஊக்குவித்து, தொண்டு நடவடிக்கைகள் மற்றும் இன்ன பிற சமூக விடயங்களில் ஈடுபாடுகொள்ளச் செய்துள்ளது புரட்சியின் மற்றுமொரு முக்கிய சாதனையாகும்.
இன்னும், மேற்குலகினது  குறிப்பாக அமெரிக்காவினது குற்றச் செயல்கள், பலஸ்தீன் விவகார பின்னணி, பாலஸ்தீனிய தேசத்தின் வரலாற்று அடக்குமுறை, யுத்தவெறி நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள், பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு போன்ற அனைத்து தீயவற்றையும் நீங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள்.
எதிர்காலத்தை உருவாக்கும் நபர்களால் கருத்தில்கொள்ளப்பட  வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால் நாம் இயற்கை மற்றும் மனித வளங்களின் அடிப்படையில் தனித்துவமான நாடொன்றில் வாழ்கிறோம் என்பதாகும். ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இந்த வளங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாது உள்ளன அல்லது சிறிதளவே பயன்படுத்தப்படுகின்றன. துடிப்புள்ள இளைஞர்களின் புரட்சிகர முயற்சியினால் இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் ஒழுக்க முன்னேற்றத்தை முன்னோக்கி ஒரு உண்மையான பாய்ச்சலைக் ஏற்படுத்த முடியும்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் தீங்காகவே அமையும்
புரட்சியின் முதல் நாளுக்கும் இன்றைக்கும் இடையிலான ஒரு ஒப்புவமை வரைந்து  காட்டிய இமாம், எமது சுதந்திர வேற்கையின் உறுதிப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி, முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் அமெரிக்காவினதும் ஈரானின் ஏனைய எதிரிகளினதும் எதிர்ப்புக்களைத் தடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
புரட்சியின் ஆரம்ப நாட்களைப் போலவே, இறையாண்மை கொண்ட ஈரான் திமிர் பிடித்த ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்கிறது. இன்று அந்த எதிர்ப்பில் சில அர்த்தமுள்ள  மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


அக்காலத்தில் வெளிநாட்டு முகவர்களின் ஊடுருவலை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக அல்லது தெஹ்ரானில் சியோனிச ஆட்சியின் தூதரகம் மூடப்படுதல் காரணமாக, அல்லது அமெரிக்க உளவு மையம்  (தெஹ்ரானில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம்) அம்பலப்படுத்தப்படுதல் காரணமாக அமெரிக்கர்கள் எம்மை எதிர்த்து வந்தனர்.   இன்று அவர்களது கோபத்துக்கான காரணம் மாறியுள்ளது. சியோனிச அரசின் எல்லையில் இஸ்லாமிய ஈரானின் சக்திவாய்ந்த பிரசன்னம்மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களின் இதயத்திலேயே பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பிற்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவு மற்றும் இந்த பிராந்தியம் முழுவதும் சியோனிஸ எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் வானுயர பறக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் கொடி என்று காரணங்கள் மாறியுள்ளன.
அந்நாட்களில், ஒரு சில ஈரானிய நயவஞ்சகர்களின் உதவியோடும் சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கொண்டு இஸ்லாமிய ஈரானை வெற்றிகொண்டுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இன்று அதற்காக பல நாடுகளின் துணை அவசியம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியால் இதிலும் அவர்கள் நிச்சயமாக தோல்வியடைவர்.
வாஷிங்டனுடனான உரையாடல் எந்தவொரு பயனும் தராது மேலும் ஐரோப்பிய நாடுகளில் பல ஏமாற்றுப்பனவாகவும் நம்பத்தகாததாகவும் உள்ளன.
புரட்சியின் பெறுமானங்களை பாதுகாத்துக்கொண்டு, அந்த அரசாங்கங்களுடன் "தீர்க்கக்கூடிய" பிரச்சினைகளை மட்டுமே தீர்க்க முயற்சியுங்கள்; அவர்களுடைய வெற்று அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் உறுதியுடன் செயல்படுங்கள் என்று இமாமவர்கள் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
அமெரிக்காவுடனான எந்த பிரச்சினையையும் பேச்சுவார்தைகளினூடாக தீர்க்கமுடியாததாக இருப்பதோடு, அவ்வாறான பேச்சுவார்த்தை எமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமேயன்றி, பயனளிக்கப்போவதில்லை.
பலஸ்தீனுக்கான இஸ்லாமிய குடியரசின் ஆதரவும்  பிராந்தியத்தில் அதனது சக்திவாய்ந்த பிரசன்னமுமே அமெரிக்காவின் பிரதான பிரச்சினை.
(சியோனிஸ) எதிர்ப்பு சக்திகளுக்கு அதி சக்திவாய்ந்த நவீன ஈரானிய ஆயுதங்கள் சென்றடைவதைத் தடுப்பதில் வாஷிங்டன் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
அரசியல் ரீதியாக ஈரானை எதிர்கொள்வதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு தேவை என்று வாஷிங்டன் கருதுகிறது. ஆயினும் இஸ்லாமிய ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் எந்த முயற்சியும், அல்லாஹ்வின் உதவியால், தோல்வியிலேயே முடியும்.
அல்லாஹ்வின் அருளால் உலகில் இஸ்லாமிய குடியரசு இன்று ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த அடைவுக்காக இஸ்லாமிய புரட்சிக்கே நன்றி சொல்ல வேண்டும். தேசிய முன்னேற்றத்தை துரிதப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஈரானிய இளைஞர்களை கேட்டுக்கொண்டதோடு பிப்ரவரி 11 ம் தேதி இஸ்லாமியப் புரட்சியின் 40 வது ஆண்டு நிறைவை குறிக்கும் பேரணிகளில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக ஈரானியர்களுக்கு ஆயத்துல்லாஹ் காமனெய்  நன்றி தெரிவித்தார்.

https://www.presstv.com/Detail/2019/02/13/588466/Iran-Leader-Statement-Islamic-Revolution-Second-Step


No comments:

Post a Comment