Contributors

Saturday, June 23, 2018

தறுதலை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தோம் - ஜவாத் ஸரீப்

Iran will not hold negotiations with US as 'rogue' state: Zarif
சர்வதேச சட்டத்தை பலமுறையும் மீறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு "தறுதலை" அரசாக மாறியுள்ளது. தனது வார்த்தைகளை மீறும்பலதரப்பு உடன்படிக்கைகளை மதிக்கத்தவறிசெயலிழக்க சதிசெய்யும் ஒரு நாட்டுடன் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது”- 
புதனன்று (20/06/2018) ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட "அமெரிக்க வெளியுறவு கொள்கை நெருக்கடி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில்தற்போதுள்ள பன்னாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டன் வாபஸ்  பெற்ற பின்னர் ஈரானுடனான "புதிய" உடன்படிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போவால் சமீபத்தில் முன்வைக்கப்பட்ட  ஒரு  12 அம்ச நிபந்தனைக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீப் பதிலளித்தார்.
"சில சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வாபஸ் வாங்குவது என்பது மற்றவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, சர்வதேச அமைப்புகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளோடு சேர்ந்துஅமெரிக்க அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு உதாரணங்களாக உள்ளன. அவை சர்வதேச ஒழுங்கை துரதிருஷ்டவசமாகஇருண்டதாகிவிட்டனஎன்று குறிப்பிட்டுள்ளார்.

"வெளிப்படையாகஅத்தகைய கொள்கைகளை தொடர்வது சர்வதேச சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்கா ஒரு தறுதலைத்தனமான அரசாகவும் சர்வதேச சட்டங்களை மதிக்காத ஒரு நாடாகவும் மாற்றிவிடும்" என்றும் தெரிவித்துள்ளார்.
விரிவான கூட்டு திட்டம் (JCPOA) என்று அழைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமேரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதானது அது பன்முக உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறிய மூன்றாவது முறையாகும். வாஷிங்டனின் இந்த மீறலானது பன்னாட்டு ஒப்பந்தங்களைச் சிக்கலாக்கி சர்வதேச இராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளையும் கணிசமாக பாதிப்பதாக உள்ளது. இதற்கு முன் அது வெளியேறிய NAFTA, உலகளாவிய வர்த்தக அமைப்புமற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில பகுதிகளும் அடங்கும் என்றும் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க வெளிவிவகார அலுவலர்கள் பங்கு பற்றிநூற்றுக்கணக்கான மணிநேர இருதரப்பு இருதரப்பு பேச்சுவார்த்தைகள்பலதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகிவற்றைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்பாட்டில்அமெரிக்காவினால் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுசாசனத்தின்  25 வது பிரிவின் கீழ்  ஒரு சர்வதேச உறுதிப்பாடாக  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாகவும் அனாவசியமாகவும் வெளியேறுவதாயின்மற்றொரு சுற்று தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தை நம்பகமான தரப்பாக எவ்வாறு  கருத முடியும்? " என்றும் ஜவாத் ஸரீப் கேள்வி எழுப்பினார்.
அதன் வார்த்தையினதும் கையொப்பத்தினதும் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது அமெரிக்க அரசாங்கத்திடமே அன்றி ஒத்துழைப்பு வழங்கி உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படும் மற்ற தரப்பு அல்ல என்பதை திரு. பாம்போ மறந்துவிட்டார் என்று ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
தெஹ்ரான் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ள மறுத்தால்இஸ்லாமியக் குடிரேசின்ன் மீது "வரலாற்றில் வலுவான பொருளாதாரத் தடைகளை" திணிப்பதன் மூலம் வாஷிங்டன் ஈரான் மீது நிதி அழுத்தத்தை அதிகரிக்கும் என்று மே 21 ம் தேதி பாம்போ கூறினார்.
ஈரான் பிரதான சக்திகளுடன் கையெழுத்திட்டுள்ள அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களுக்கு பின்னர்தெஹ்ரானுடனான "புதிய உடன்படிக்கைக்கு" 12 கடுமையான நிபந்தனைகளை பாம்போ விதித்தார்.
அவரது நிபந்தனைகளில் ஒன்றுசிரியாவில் பெரும்பாலும் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய மற்றும் பிராந்திய கூட்டாளிகள் உதவுகின்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு உதவி வரும் ஈரான் அதன் இராணுவ ஆலோசகர்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுவும் ஒன்றாகும்.
கடந்த 17 மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் "உளறல்களும்  மற்றும் அறிவுக்கொவ்வாத முடிவுகளும் நடத்தைகளும்" வாஷிங்டனின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கிய காரணியாகிவிட்டது என்று ஜவாத் ஸரீப் கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளில் அனைத்து அமெரிக்க நிர்வாகங்களும் ஈரானிய நாட்டினரை நம்பிக்கை இலக்கச்செய்துஅவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அநீதிவன்முறைபயங்கரவாதம்போர் ஆகியவற்றிற்கும் மேற்கு ஆசியாவில் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தியதற்காகவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளை மீறியதற்காகவும் பொறுப்பு கூறவேண்டும் என்ற வாதத்தையும் ஜவாத் ஸரீப் முன்வைத்தார்.
இதற்கு பதிலாகஅமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஈரானின் நியாமான  கோரிக்கைகளின் விரிவான பட்டியலை ஜரிஃப் முன்வைத்தார். வாஷிங்டன் அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துதல் என்ற அதன் கொள்கையை கைவிட்டுஉடனடியாக JCPOA உடன்படிக்கை மீறல்களை நிறுத்திகடந்த தசாப்தங்களில் ஈரான் மக்களுக்கு எதிரான அதன் தேவையற்ற மற்றும் சட்டவிரோத செயல்களை ஒப்புக் கொள்ளுவதுடன் அணுவாயுதங்களில் தங்கியிருத்தலையும் மரபு மீறிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் கோட்பாட்டையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பவை முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிலவாகும்.
ஈரானிய வெளியுறவு மந்திரி பாரசீக வளைகுடாவில் பிராந்திய நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் வெளிநாட்டு குறுக்கீடு இல்லாமல் வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் இலக்காகக்கொண்ட ஒரு "பிராந்திய உரையாடல் கருத்துக்களம்" உருவாக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
"பிராந்திய நாடுகளின் இறைமை சமத்துவம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில், பிராந்திய நாடுகளை நெருக்கமாக பிணைத்து நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; அச்சுறுத்தல்களைத் தவிர்த்து சர்ச்சைகளுக்கு சமாதான தீர்வு, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச எல்லைகளை மீறாமலும் மற்றவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிப்போம் என்றும் ஜவாத் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. "சில சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வாபஸ் வாங்குவது என்பது மற்றவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, சர்வதேச அமைப்புகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளோடு சேர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு உதாரணங்களாக உள்ளன."

    ReplyDelete