Contributors

Monday, November 25, 2019

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் - உண்மை நிலை அறிவோம்


Protest demonstrations in Iran – let us know the reality



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒரு சில பகுதிகளில் அண்மையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதை நாம் அறிவோம். பெட்ரோல் விலையில் 50% அதிகரிப்பே இந்த ஆர்ப்பாட்டங்களுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களை பார்க்கையில், இஸ்லாமிய குடியரசு முற்றுமுழுதாக முடங்கிப்போயுள்ளது போன்றும்  இஸ்லாமிய அரசு ஒருசில நாட்களில் வீழ்ந்துவிடும் என்பது போன்றும் ஒரு பிரம்மையை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் ஊடகங்கள் மூலமாக மேற்கொண்ட முயற்சி தெளிவாகத் தெரிகிறது.

றஸூலுல்லாஹ்வின் மீலாத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய குடியரசில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 'சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை வாரம்' நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இவ்வருடம் இலங்கையில் இருந்து நானும் சகோதரர் அஸ்-ஷெய்க் எஸ்.எல்.மதனியும் அங்கு விஜயம் செய்திருந்தோம். உலகின் 93நாடுகளில் இருந்தும் சுமார் 350க்கும் அதிகமான பேராளர்கள் இதில் கலந்துகொண்டனர். பலஸ்தீன் விடுதலை உட்பட இஸ்லாமிய உலகு எதிர்கொண்டுள்ள சவால்களை முறியடிப்பது தொடர்பாக இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் (நவம்பர் 13-23) நாங்கள் ஈரான் இஸ்லாமிய குடியரசின் பல நகரங்களுக்கு விஜயம் செய்தோம். அதிகாரிகளையும் சந்தித்தோம் பொதுமக்களையும் சந்தித்தோம். பல விடயங்களையும் கேட்டு அறிந்துகொண்டோம். சிலர் அதிருப்தியுற்று இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.


மக்கள் வாழ்வதற்கு அவசியமான அனைத்து பொருட்களும் அங்கேயே உற்பத்தி செய்யப்படுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நான் அறியவில்லை. (ஆனால் வெளிநாட்டு ஆடம்பர பொருட்களுக்கு பன்மடங்கு அதிக விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்). அப்படியிருக்க இந்த ஊடக பிரசாரங்களை பார்க்கையில் எனக்கே வியப்பாக இருந்தது. அங்கு எங்கும் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எமது நாட்டிலும் நாம் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதையும் அதுவே கலகமாக மாறுகையில், வன்முறையாக மாறுகையில், அத்துமீறல்கள் இடம்பெறுகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதையும் சர்வ சாதாரணமாக காண்கிறோம். இதுவே அங்கும் இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டங்களுக்கு பின்னணியில் வெளிநாட்டுக் கரங்கள் இருந்து செயல்பட்டு வந்துள்ளது இப்போது அறியவந்துள்ளது. சின்ன பிரச்சினையையும் ஊதி பெரிதாக்கி நாட்டில் கலவரங்களை ஏற்படுத்த ஈரானின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதி என்றே ஈரானிய தலைமைத்துவம் அதனை அடையாளம் கண்டுள்ளது.


இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து உரையாற்றிய இமாம் ஆயத்துல்லாஹ் காமனேயி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை கண்டித்த அதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஈரானில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அரசியமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அங்கு எந்த தடையும் கிடையாது. அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறை அல்ல. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை ஈரான் சந்தித்துள்ளது. இவ்வார்ப்பாட்டங்களுக்கு எதிராகவும் மக்கள் பேரணிகளை நடத்தி, இஸ்லாமிய அரசுக்கு தமது விசுவாசத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதை அங்கு காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஈரான் மீதான மனிதாபிமானமற்ற பொருளாதார தடை, அதிகபட்ச அழுத்தம் ஆகியவற்றுக்கு மத்தியில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உலகிலேயே அதிகுறைந்த விலையில் மக்களுக்கு எரிபொருளை வழங்கும் நாடு ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலை காரணமாக ஒருசிலர் அண்டை நாடுகளுக்கு எரிபொருளை பாரிய அளவில் கடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வந்துள்ளனர். பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாஹா முஸம்மில் 



Monday, November 11, 2019

முஸ்லிம்களின் கண்ணியத்தை மீட்டு தரவல்லது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே


Islamic Unity is the only thing that can restore 
the dignity of Muslims



இன்றைய முஸ்லிம்கள் ஏராளமான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் அவலநிலைக்கான அடிப்படைக் காரணங்களாக புனித குர்ஆனின் உண்மையான போதனைகளில் இருந்து தூரப்பட்டிருத்தல், மார்க்கப் பற்றின்மை, கல்வியில் அசட்டை, தேசியவாதம், பிரதேசவாதம், குறுங்குழுவாதம், குரோத மனப்பான்மை, மத தப்பெண்ணங்கள், அதிகார மோகம், சகிப்பின்மை, தீவிரவாதம் மற்றும் பொருளாயத நலன்கள் பால் அதிக கவனம் என்பவற்றோடு; எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையின்மை எனலாம். இவை அனைத்தும் முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். இதனால் எல்லா வளமும் இருந்தும் முஸ்லிம்கள் இன்று மரியாதை இழந்து, கௌரவம் இழந்து மற்றும் தம்மிடமிருந்த அதிகாரம் அனைத்தும் இழந்தது இஸ்லாத்தின் எதிரிகளிடம் தஞ்சமடையும் நிலை உருவாகி உள்ளது.

மறுபுறம், இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகள் ஒன்றுபட்டுள்ளனர். முஸ்லிம்களின் பலவீனத்திலேயே அவர்களின் வல்லாதிக்கம் தொடர முடியும் என்பதை அவர்கள் மிக நன்றாக அறிவார்கள். எனவே அவர்கள் முஸ்லிம்களைப் பிளவுபடுத்துவதற்கான சதித்திட்டங்கள் தீட்டுவதில் சளைக்காது, தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது சதித்திட்டத்தில் சிக்கியுள்ள முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமையை உதாசீனம் செய்து சகோதர முஸ்லிம் நாடுகளுடன் சண்டையிட்டு அந்த நாட்டு மக்களையும் வளங்களையும் அழிவுக்குள்ளாக்கிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது வளங்களையும் அழித்துக்கொண்டிருப்பத்தை காண்கிறோம். இதனால் முழு இஸ்லாமிய உலகும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது.


ஐ.நா.சபையில் பெரும் எண்ணிக்கை கொண்ட அங்கத்துவம் இஸ்லாமிய நாடுகளுக்கே உண்டு. இருந்தும் என்ன பயன்…? தமக்குள் ஒற்றுமை இல்லாததன் காரணமாக செல்லாகாசுகளாக சிதறி கிடக்கின்றன. இதன் விளைவாக எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் சீண்டப்பட்டு, அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

புனித குர்ஆன் எமது ஒற்றுமையை வலியுறுத்துவதோடு எதிரிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் எமக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.  ஆயினும் இன்றைய இஸ்லாமிய உலகு, முஸ்லிம்களிடமிருந்து தூரப்பட்டு, இஸ்லாத்தின் எதிரிகளிடம் மண்டியிட்டு இருப்பதையே காண்கிறோம்.

எந்தவொரு சமூகத்தினதும் வெற்றி அதன் உறுப்பினர்களிடையே உள்ள பரஸ்பர ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திலேயே பொதிந்துள்ளது. ஒரு வலுவான ஐக்கிய சமுதாயம், வெல்ல முடியாத சக்தியாக மாறி, அவர்களின் வழியில் வரும் எந்த ஓர் இடையூறினையும் சமாளிக்கக் கூடிய வல்லமையைத் பெறுகிறது. அத்தகைய ஒன்றுபட்ட சமுதாயத்தை எதிர்ப்பதற்கு யாரும் துணிவதில்லை.

அல்லாஹ் அவனது அருள் மறையாம் புனித குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

     “இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்...” (புனித குர்ஆன் 3:103).

புனித குர்ஆன் எமது ஒற்றுமையை வலியுறுத்தும் அதேசமயம் பிரிவினால் ஏற்படும் விளைவு பற்றியும் எமக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.

 இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்…” (புனித குர்ஆன் 8/46)

இந்த புனித வசனங்களை நாம் பயான்களிலும் குத்பாக்களிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்; சன்மார்க்க புத்தகங்களில் படித்துக் கொண்டும் இருக்கின்றோம்; இருந்தும் முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்ட சமுதாயமாகவே இருந்து வருகிறது.

இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் உம்மாவை ஷியா-சுன்னி என்று பிரித்து அவர்கள் ஒருவருக்கொருவர் மோத வைப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

இந்த சதித்திட்டத்தை சரியாக புரிந்துகொண்ட ஈரான் இஸ்லாமிய குடியரசு முஸ்லிம் உலகை ஒன்றுபடுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

ரபீயுல் அவ்வல் மாதம் 12ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிறந்த தினமாக சுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த நாம் நினைவு கூறும் அதேவேளை ஷியா முஸ்லிம்கள் 17ம் நாளை ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் பிறந்த தினமாக நினைவு கூறுகின்றனர்.


வரலாற்றுரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு இஸ்லாமிய சமூகங்களும் தமக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு, ஒன்றுபடும் சந்தர்பமாக ரபீயுல் அவ்வல் மாதம் 12-17 ஐ ஒற்றுமை வாரம் என்று ஈரானிய தலைவர்கள் பிரகடனப்படுத்தி, உலக முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தும் மாநாடுகளையும் வருடாந்தம் நடாத்தி வருகின்றனர். (றஸூலுல்லாஹ்வின் மீலாதை கண்ணியப்படுத்த இதைவிட சிறந்த வழி வேறு என்ன இருக்க முடியும்).

பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து, சிரியா, லெபனான், யெமன், பஹ்ரைன், மத்திய ஆபிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, காஷ்மீர், மியன்மார் மற்றும் இதுபோன்ற எத்தனையோ இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அநியாயங்களை எண்ணி கவலைப் படுகிறோம், அழுகிறோம், ஒப்பாரி வைக்கிறோம். இவை எமது உணர்வுகளின் வெளிப்பாடு தான் ஆயினும், வெளிப்படும் உணர்வுகளால் மாத்திரம் எமது பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை என்பது உணரப்பட வேண்டும்.

பிரச்சினைகளின் மூல காரணங்களை அறிந்து, அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தற்போது எம்மத்தியில் இருக்கும் பிரதான சவால்.

எம்மிடையில் ஒற்றுமை இன்மையே பிரச்சினைகளின் மூல காரணங்களில் பிரதானமானது என்பதை எம்மில் பலர் அறிவோம். எமக்குள் இருக்கும் சிறிய வேற்றுமைகளை வளர்ப்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் கண்ணும் கருத்துமாய் உள்ளனர் என்பதை ஏனோ நாம் உணரத் தவறிவிடுகிறோம்.


முஸ்லிம்கள் மத்தியில் எதிரும் புதிருமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பினரையும் போஷிக்கும் 'மறைகரம்', அனேகமாக, ஒன்றாகவே இருக்கும் என்பது சற்று ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும். அமேரிக்கா சுன்னிகள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்துவரும் அதேவேளை பிரித்தானியா ஷியாக்கள் மத்தியில் தீவிரவாதிகளை உருவாக்கி போஷித்து வருகிறது. இதற்காக அவர்கள் கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதே இவர்களது நோக்கம் ஆகும். துரதிஷ்டம் என்னவென்றால் முஸ்லிம்களில் சில தரப்பினர் இவர்களது இந்த சூழ்ச்சி வலையில் சிக்குண்டு இருப்பதாகும்.

"அமெரிக்க சியோனிச பிசாசுகளை துரத்தியடிக்கூடியது இஸ்லாமிய ஒற்றுமை மட்டுமே. முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சனைகளை உருவாக்க அமேரிக்கா சுன்னிகளைத் தூண்டுகிறது, பிரித்தானியா ஷியாக்களைத் தூண்டுகிறது. இரண்டுமே ஒரு கத்தரிக்கோலில் உள்ள இரண்டு கத்திகளை போன்றது." - ஆயத்துல்லாஹ் காமேனி

இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு இப்போதுள்ள ஒரே வழி, இஸ்லாமிய நாடுகள் தம்மிடையே உள்ள பிணக்குகளை தாமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும்.

முஸ்லிம் நாடுகள் மத்தியில் இவ்வாறான ஒரு சுமுக நிலை ஏற்படுமாயின், இஸ்லாமிய உலகு முகம் கொடுத்துள்ள ஏராளமான சவால்களை சுலபமாக வெற்றி கொள்ள முடியும். முஸ்லிம்கள் இழந்துள்ள செல்வாக்கையும் கண்ணியத்தையும், மிகக் குறுகிய காலத்துள் மீளப்பெறவும் முடியும்.

இந்த இஸ்லாமிய வழிமுறையை விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளிடம் மண்டியிடுவதால் பிரச்சினை பூதாகார உருவெடுக்குமே அல்லாமல், தீரப்போவதில்லை என்பதை உலக நிகழ்வுகள் துல்லியமாக காட்டிக்கொண்டு இருக்கின்றன.

இங்கே "ஒற்றுமை" என்பதன் மூலம் முஸ்லிம்கள் அனைவரும் அவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டுள்ள ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிகி, ஜாபரி, ஸைதி போன்ற அனைத்து சிந்தனை பள்ளிகளையும் கைவிட்டு ஒரே கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது புனித குர்ஆனும் ஹதீஸுமாகும். கண்ணியத்துக்குரிய ஸஹாபாக்கள், இமாம்கள் மத்தியிலும் கருத்துமுரண்பாடுகள் இருந்துள்ளன. இஸ்லாத்தில் கருத்துமுரண்பாடுகள் வரவேற்கத்தக்க விடயமாகும். ஒற்றுமை என்பதன் மூலம் இங்கு நாம் எதிர்பார்ப்பது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதாகும்.

இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தவேண்டியது உலமாக்களினதும் முஸ்லிம் அறிவுஜீவிகளினதும் கடமையாகும்.

- தாஹா முஸம்மில்






Sunday, October 27, 2019

அணிசாரா நாடுகளினால் அமெரிக்க அராஜகத்தை எதிர்க்க முடியும் – ரூஹானி




சர்வதேச நாணய அமைப்பில் அமெரிக்கா அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவதாகவும், டாலரை தவறாகப் பயன்படுத்துவதாகவும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி வெள்ளிக்கிழமை விமர்சித்தார், அணிசேரா இயக்கம் வாஷிங்டனின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கும் அதன் பொருளாதாரத் தடைகளை பயனற்றதாக மாற்றுவதற்கும் சக்திபடைத்தது என்று கூறினார்.

அணிசாரா நாடுகள் அமைப்பின் 18வது உச்சிமாநாடு கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 25ம் திகதி) அஸர்பைஜான் தலைநகரான பாக்குவில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி ஹஸன் உரையாற்றுகையில்  "சர்வதேச நாணய அமைப்பில் அமெரிக்காவின் ஆதிக்கம் கடந்த பல தசாப்தங்களாக மிதமிஞ்சியதாக உள்ளது, குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் சுயாதீன நாடுகளுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பதற்காக, டாலரை அது தவறாகப் பயன்படுத்துகிறது.

இந்நாடுகளில் பெரும்பாலானவை அணிசாரா நாடிகள் அமைப்பின்  உறுப்பு நாடுகளாகும். அவற்றின் மீது பல்வேறு தடைகளை அமல்படுத்தும் அமேரிக்கா அதேவேளை சர்வதேச நாணய அமைப்புகளுக்கான அணுகலையும் மட்டுப்படுத்துகின்றது," என்று தெரிவித்தார்.

அத்தகைய அமெரிக்க நடவடிக்கைகள் "சுயாதீன நாடுகளின் நியாயமான சுதந்திரம் மற்றும் உரிமைகளை" நேரடியாக மீறுவதாக அவர் மேலும் கூறினார், மேலும் அணிசாரா நாடுகள் "அமெரிக்கா பயன்படுத்தும் அத்தகைய கருவிகளின் தாக்கத்தை சமன்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்றும் வலியுறுத்தினார்.

பொருளாதார நிலைத்தன்மையின் தேவைகளுக்கு சர்வதேச அர்ப்பணிப்பு, இருதரப்பு மற்றும் பலதரப்பு நாணய ஒப்பந்தங்களின் அடிப்படையில் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல், வங்கி சேவைகளில் சுயாதீனமான மற்றும் மாற்று முயற்சிகளைப் பயன்படுத்துதல் மற்றும் குறியீட்டு நாணயங்களின் அதிக பயன்பாடு ஆகியவை அந்த முடிவை அடைவதற்கான வழிகளில் உள்ளன என்று ரூஹானி குறிப்பிட்டார்.

"நிச்சயமாக, இவை அனைத்தும் சர்வதேச நாணய சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதி விதிகளை நிலைநிறுத்துவதற்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும்" என்று ஈரானிய ஜனாதிபதி கூறினார், ஈரான் உட்பட பல அணிசாரா அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த முக்கியமான பிரச்சினையை தங்கள் நிகழ்ச்சி நிரலில் வைத்துள்ளன.

பல்வேறு பிராந்தியங்களில் இடம்பெற்றுவரும் தற்போதைய மோதல்கள் மற்றும் சுயாதீன நாடுகளின் தேசிய இறையாண்மையை வெவ்வேறு வடிவங்களில் மீறுவதை சுட்டிக்காட்டிய ரூஹானி, உலகம் "பன்முகத்தன்மையை நோக்கி விரைவாக நகர்கிறது" என்றார்.

சுயாதீன நாடுகளின் மீது அதன் சட்டவிரோத அரசியல் இலக்குகளை திணிப்பதற்காக இன்று அமெரிக்கா அடக்குமுறை பொருளாதார கருவிகளைப் பயன்படுத்துகிறது" என்று ஈரானிய ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிசேரா இயக்கம், "தற்போதைய உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடிப்பதில் மற்றும் கட்டமைப்பிற்குள் அதன் உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தின் சார்பாக முன்னோடியாக இருக்கும் சாத்தியத்தை கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.

நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 74 ஆவது கூட்டத்தொடரை ஒட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸுடனான சந்திப்பில், பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் ஈரானிய தேசத்திற்கு எதிராக அமெரிக்கா செய்து வரும் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்பதையிட்டு  ரூஹானி கண்டித்து பேசினார்.  உலக  அமைப்பு அதனது மௌனத்தை களைத்து அதன் பொறுப்புகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான வாஷிங்டனின் கடுமையான பொருளாதார அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடைகளைப் பற்றி குறிப்பிடுகையில், ஜனாதிபதி "ஒரு ஆக்கிரமிப்பு கொள்கை கொண்ட  அரசாங்கம் முழு நாட்டிற்கும் எதிராக இந்த குற்றங்கள் அனைத்தையும் செய்து வருகிறது, அதே நேரத்தில் ஐ.நா அமைதி காக்கின்றது."

ஈரானிய ஜனாதிபதி தனது உரையில், புதிய உலகின் தேவைகளுக்கு ஏற்ப அதன் உறுப்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அணிசாரா அமைப்பு வகிக்கக்கூடிய திறமையான பங்கை சுட்டிக் காட்டினார்.

"சர்வதேச அரங்கில் இருமுனை அமைப்பு வீழ்ச்சியடைந்த நிலையில், அமெரிக்கா அதன் இராணுவ, பொருளாதார மற்றும் ஊடக சக்தியை ஆகியவற்றைக்கொண்டு புதிய உலகளாவிய அமைப்பின் கோஷத்தின் கீழ் ஓர் ஒற்றை முறை மேலாதிக்க ஒழுங்கை உலகில் திணிக்க முயன்றது."

எவ்வாறாயினும், சர்வதேச அமைப்பில் ஒருதலைப்பட்சத்தைத் எதிர்த்து நிற்கும் தங்கள் விருப்பத்தை அணிசாரா நாடுகள் நிரூபித்துள்ளன, "ஏகாதிபத்தியத்தை திணிப்பதற்கான அமேரிக்கா வைத்துள்ள முக்கிய கருவிகள் உண்மையில் அதற்கு எதிராகவே திரும்பியுள்ளன."

அமேரிக்கா தனது ஆதிக்கத்தை திணிப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் "விரிவான மற்றும் அழிவுகரமான போர்களை" நடத்தியது என்று ரூஹானி கூறினார்.

இந்த போர்கள் பிராந்திய நாடுகளுக்கு நூறாயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் ஆயிரக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன, மேலும் பிராந்தியத்திலும் உலகிலும் குறுங்குழுவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் தீப்பிழம்பை எரியூட்டியுள்ளன.

"ஆயினும்கூட, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் குறிக்கோள்களை அடைந்து கொள்ளத் தவறியது மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தின் முறிவை ஏற்படுத்தியதோடு பிராந்திய சுதந்திர நாடுகள் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைத் தொடரும் தன்னம்பிக்கையை அதிகரித்தது," என்றும் ஈரானிய ஜனாதிபதி கூறினார்.

"அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் மீதான பொது நம்பிக்கை வெகுவாகக் குறைந்து இறுதியாக மக்களின் அரசியல் தோன்றுவதற்கு வழிவகுத்தது. அதன் கொள்கைகள் அமெரிக்க மேலாதிக்கம் மற்றும் ஒருதலைப்பட்சத்தின் முடிவின் தொடக்கத்தையே இது குறிக்கின்றது."

அணிசாரா அமைப்பின் உறுப்பு நடுகள் உலகில் ஒரு பெரிய மக்கள் தொகை, பரந்த நிலப்பரப்பு மற்றும் பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் வாக்கு பலம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளன என்று ரூஹானி வலியுறுத்தினார், மேலும் இந்த இயக்கம் எதிர்கால பல்துருவ உலகில் ஒரு புதிய சக்தியைக் காணலாம்.

"இது நடக்க வேண்டுமானால் பிராந்தியத்தினதும் உலகினதும் புதிய யதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இன்றைய உலகின் புதிய கருவிகள் மற்றும் வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களைப் போலவே ஈரான் இஸ்லாமிய குடியரசு அணிசாரா நாடுகளின் அமைப்புக்கு, அதன் வெற்றிக்கு மற்றும் அதன் விழுமிய இலக்குகளை அடைவதற்கு எல்லா முயற்சிகளிலும் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று ரூஹானி மீண்டும் வலியுறுத்தினார்.




Tuesday, October 22, 2019

இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்!





- எஸ். நவாப்ஸாதே

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பது ஒரு பிரபலமான பழமொழியாகும். எதற்கும் அஞ்சாது, எவருக்கும் அடிபணியாது, அச்சுறுத்தல்களைக் கண்டு கலங்காது தமது இலக்குகளை அடையும்வரை தொடர்ந்து பயணிக்கும் ஒரு குழுவினருக்கு இது பொருந்தும். அந்த இலக்கு கல்வியாக இருக்கலாம், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாக இருக்கலாம், வர்த்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு பெரும் அரசியல் கொள்கை மாற்றமாக இருக்கலாம்; அதனை அடையும்வரை அவர்களது வைராக்கியம் நீங்குவதில்லை.

உலக அளவில், ஈரானிய இஸ்லாமிய குடியரசு தேசத்தின் மட்டுமல்ல, பிராந்திய மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பினை உணர்ந்த நேர்மையான அமைப்பின் முன்மாதிரியாக விளங்குகிறது.  எந்தவொரு சவாலுக்கு முகம்கொடுக்கும் அதனது மனவுறுதி சதி, சுரண்டல், பொருளாதார பயங்கரவாதம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றப்பாதையில்  இட்டுச்செல்கிறது.


கடந்த நாற்பது ஆண்டுகளில், இஸ்லாமியப் புரட்சி வழங்கியுள்ள எஃகு போன்ற இந்த மனவுறுதி எல்லாம்வல்ல இறைவன் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, தங்கள் தாயகங்களை ஆக்கிரமிப்பவர்கள்  வெல்லமுடியாதவர்கள் என்ற மாயையை துடைத்தெறிந்து, தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் அவர்கள் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான உயிரோட்டமான போராட்டத்திற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்கிறது.


ஈரான் இஸ்லாமிய புரட்சியின் விளைவாக, இந்தியப் பெருங்கடலின் கரையிலிருந்து பாலஸ்தீன நிலம் உட்பட மத்திய தரைக்கடல் கடற்கரை வரை இப்பகுதியிலும் அதற்கு அப்பாலும் சுதந்திர இயக்கங்கள் தழைத்தோங்கி வருகின்றன. இஸ்லாமிய புரட்சின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழிகாட்டலை முன்னுதாரணமாகக் கொண்ட இவர்களது விடுதலைக்கான போராட்டம், சியோனிஸவாதிகளினது எகிப்தில் நைல் நதி முதல் ஈராக்கில் யூப்ரடீஸ் நதி வரை 'கிரேட்டர் இஸ்ரேலை' என்ற கனவை தகர்த்தெறிந்துள்ளது.


அக்டோபர் 5, சனிக்கிழமையன்று, அத்தகைய ஒரு பிரபலமான இயக்கம், ‘இஸ்லாமிய ஜிஹாத்’, காசாவில் நிறுவப்பட்ட 32 வது ஆண்டு நிறைவைக் குறித்தது ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சியோனிச அமைப்பின் சட்டவிரோத இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.


"சபிக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், டொனால்ட் ட்ரம்பின் நூற்றாண்டின் சதி உட்பட எங்கள் எதிரிகளிடமிருந்து எழும் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்", என்று காஸாவில் ஒன்றுதிரண்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.

இஸ்லாமிய ஜிகாத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய பிரமாண்ட பேரணியில் அவ்வியக்க பொதுச்செயலாளர் ஸியாத் அன்-நகாலே உரையாற்றுகையில் "எப்போதும் ஒடுக்கப்பட்ட காஸா, இப்போது ஒரு யுத்த வலிமையின் சமன்பாடுகளில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக மாறியுள்ளது; இது இந்த மக்களின் அசைக்கமுடியாத மனவுறுதியை பிரதிபலிக்கிறது", என்று குறிப்பிட்டார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயதுல்லா சையத் அலி கமேனியைச் சந்திக்க கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜியாத் அன்-நக்காலே, பாலஸ்தீனிய மக்கள் தங்களின் இறுதி வெற்றியில் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சமாதானம் எனும் போர்வையில் பிற்போக்குத்தனமான அரேபிய தலைவர்களுடன்  இணைந்து அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் எந்த சியோனிஸ சதியினையும் முறியடிப்போம் என்றும் சூளுரைத்தார். தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் உள்ள மாபெரும் மின்னணு கடிகாரம், வேகமாக நெருங்கி வரும் இஸ்ரேலின் முடிவை ஒவ்வொரு வழிப்போக்கர்களுக்கும் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது கொண்டு வரப்படும் சவுதி முன்முயற்சி அல்லது பஹ்ரைன் மாநாடு போன்ற ஏமாற்றும் சாத்தானிய  வடிவமைப்புகளை அவர் கண்டித்தார்: "இன்று சிலர் பாலஸ்தீனியர்களுக்கும் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும்,எதிரியுடன் நாம் நிம்மதியாக பேச முடியும்,  அமைதி சாத்தியமாகும் என்று வைத்திருக்கும் நம்பிக்கையே நாம் தற்போது எதிர்கொள்ளும் மிக மோசமான விஷயம் ஆகும்" என்றார்.

அமெரிக்க – பிரிட்டிஷ் - இஸ்ரேலிய ஆதரவுடைய சவூதி அரேபியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான அன்சருல்லாஹ் இயக்கம் மனவுறுதியுடன் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பதையும் இணைத்து அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்து வருகின்றனர்; அவர்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றனர்.

யெமன் மக்களின் தினசரி மேம்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சவூதி ஆட்சியின்னது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட  பேட்ரியட் பாதுகாப்பு பேட்டரிகளை துல்லியமாக துளைக்க முடியுமாக இருந்தால், இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன விடுதலை குழுக்கள் ஏன் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை பெற்று, சியோனிஸ்டுகளின் இரும்பு அரண்களை (iron domes) தகர்த்தெறிய முடியாது?

நிச்சயமாக, அவர்கள் அதைச் செய்வார்கள்; அதைப் பெறுவது அவர்களின் உரிமை. ஏனெனில் அது இஸ்லாத்தின் மீதான மன உறுதி, மற்றும் தன்னம்பிக்கை. ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டையும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தேசத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தில், பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா அமெரிக்கா, பிரிட்டிஷ், மற்றும் பிரஞ்சு வழங்கிய நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் செலவில் கொள்வனவு செய்திருந்த அதிநவீன உயர்ந்த ரக போராயுதங்களை வைத்திருந்தாலும், அன்ஸாருல்லாஹ்க்கள் நொறுக்கி வருகின்றனர்.

எனவே பிரிட்டிஷாரினால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்; பாலஸ்தீனியர்களும் தங்கள் யேமன் மற்றும் லெபனான் இஸ்லாமிய சகோதரர்களும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளை, இஸ்லாத்தின் முதலாவது கிப்லா பைத்துல் முகத்தஸ் உட்பட அவர்களின் முழு தாயகத்தையும் விடுவிப்பதில் உறுதியாக உள்ளனர்.




Friday, October 11, 2019

சவுதி அரேபியா உண்மையில் அமைதியை விரும்புகின்றதா?


Is Saudi Arabia really after peace?

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் "ஈரானுடனான சகல பிணக்குகளையும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்துக்கொள்ளவே சவூதி விரும்புகிறது" என்று CBS செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த விருப்பத்திற்கு சாதகமாக ஈரானிய உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் பதிலளித்தனர். சவூதி அரேபியாவுடன் உரையாடலைத் தொடங்குவதற்கான யோசனையை தெஹ்ரான் வரவேற்பதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் லரிஜானி தெரிவித்தார்.

"அமைதி" என்பது உண்மையில் ஒரு அழகான சொல். இதன் பொருள் பதற்றம், தொல்லைகள், கொந்தளிப்பு, அதிர்ச்சி மற்றும் நவீன அரசியல் பிதற்றொலி, துரோகம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவதாகும்.

இது இஸ்லாத்தின் சாராம்சமாகும், இஸ்லாம் என்பது "அமைதிக்கு" ஒரு பொருளாகும், இந்த வார்த்தை புனித குர்ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது, அங்கு சர்வவல்லமையுள்ள இறைவன் சொர்க்கத்தில் நிலவும் நிரந்தர சமாதானத்தின் செய்திகளையும் அளிக்கிறார்.

ஆயினும்கூட, அந்த சொல்லின் முக்கியத்துவம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு மற்றும் சொல்லப்படாத நன்மைகள் எத்தனையோ இருந்த போதிலும், வன்முறை, போர்கள், இரத்தக்களரி மற்றும் இனப்படுகொலைகளால் சிதைந்திருக்கும் நவீன உலகில் அமைதி வெளிப்படையாக தெரிவதற்கு இல்லை.

முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களால் கூட தங்கள் பகுதிகளிலோ அல்லது அண்டை நாடுகளுடனான உறவுகளிலோ சமாதானத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

ஏன் இப்படி? இஸ்லாத்தின் முற்போக்கான போதனைகளில் உறுதியான நம்பிக்கை இல்லாததால், அவர்கள் சாத்தானின் சோதனையில் சிக்கி, பாவமான செயல்களில் ஈடுபடுவதோடு, நிச்சயமாக, சாத்தானிய சக்திகளுக்கு - குறிப்பாக அமெரிக்காவுக்கு - சேவகம் புரிவோராக ஆகியுள்ளார்.

இதனால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால் பரஸ்பர அவநம்பிக்கை, தேசத்துரோகம், மற்றவர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆசை, சக முஸ்லிம்களை ஒடுக்குதல் மற்றும் அவர்களின் தீய எஜமானர்களின் இசைக்கு நடனமாடுவது.

சிரியா மற்றும் ஈராக்கை மிகவும் கொடூரமான கொலைகார பயங்கரவாத சக்திகள் சிலவற்றின் மூலம் ஸ்திரமின்மைக்கு இட்டுச்சென்றதற்கு இதுவே காரணம்; பாக்தாத்தில் உள்ள சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைச் தீயை சர்வதேச ஊடகங்கள் மூலமும் சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலமும் கொழுந்துவிட்டு எரியச்செய்யப்பட்டுள்ளது, பாலஸ்தீன் சியோனிஸ்டுகளுக்கு விற்கப்படுதல், எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசாங்கம் தூக்கியெறியப்படுதல், லிபியாவில் உள்நாட்டுப் போர், ஆப்கானிஸ்தானில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்ட போர், சிறுபான்மை ஆட்சியால் பஹ்ரைன் மக்கள்  அடக்கி ஒடுக்கப்படுத்தல், வெளிநாடுகளில் வதியும் எமது உடன்பிறப்புகள் தொடர்பான அக்கறையின்மை, அவர்களது அவலநிலை பற்றிய அலட்சியம், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் பகுத்தறிவற்ற பகை, கடைசியாக யேமனுக்கு எதிரான சவுதி-ஐக்கிய அரபு எமிரேட் யுத்தம்; இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பை அழிப்பதோடு, நாட்டை பஞ்சம் மற்றும் தொற்று நோய்களில் மூழ்கடித்துள்ளது.

யேமனின் மக்கள் இயக்கமான 'அன்ஸாருல்லாஹ்'  சவூதி அரேபியாவிற்கு எதிரான அதன் பதிலடி நடவடிக்கையை - ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை - நிறுத்துவதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இப்போது அன்ஸாருல்லாஹ் விடுத்த யுத்தநிறுத்த கோரிக்கையை  "சாதகமாக" கருதுவதாக சவூதி ஆளும் வர்க்கத்தினர் கூறுகிறார்கள்.

சவூதி பாதுகாப்பு பிரதி மந்திரி காலித் பின் சல்மான் தனது ட்விட்டர் செய்தியில் "யேமன் அறிவித்த யுத்தநிறுத்த கோரிக்கையை ரியாத் சாதகமாக பார்க்கிறது" என்று கூறிவிட்டு  பின்னர்  "யெமனிகள்  எங்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக நிற்க வேண்டும்," என்றும் கூறுகின்றார். இது "சவூதி அரேபியா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள விரும்புகிறது" என்று கூறிய அவர்களது நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


சவூதி அரேபியா இவ்வாறான முரண்பாடான அறிக்கைகள் மூலம் அன்ஸாருல்லாஹ்வை ஏமாற்ற  முயற்சிக்கிறது என்பது வெளிப்படையானது.

யேமனின் சனாவை தளமாகக் கொண்ட சட்டபூர்வ அரசாங்கத்தின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது. சூடான் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவிக்கட்ட கூலிப்படைகளைக் கொண்டு சவுதி அரசு மேற்கொண்டுவரும் புதிய ஆக்கிரமிப்புகள் சவுதிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது இதுபோன்ற துரோக நகர்வுகள் மூலம் சவுதிகள் எந்த வகையான அமைதியை' நாடுகின்றனர்? யெமன் மீதான யுத்தத்தின் நான்கரை ஆண்டுகளில் யுத்த அச்சுறுத்தல்கள் மூலம் தங்கள் நோக்கங்களை அடையத் தவறிவிட்டதால்,  "சமாதானப் பேச்சுவார்த்தைகள்" என்று கூறிக்கொள்வதன் மூலம் மூலம் அவர்கள் அதை அடைய நினைக்கிறார்களா? இதுதான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்களது அறிவு இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றே கூறவேண்டும்.

அப்காயிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மரண அடியைக் கொடுத்தது அன்ஸாருல்லாஹ் அல்ல என்று கூறுகின்றனர்; எமது சக்தியை அவர்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எமக்கு இறைவனின் உதவி இருக்கின்றது.


அமெரிக்க ஆயுதங்கள் அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். பரிதாபத்துக்குரிய அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. முட்டாள்தனமான எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டு அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர்வார்களேயானால் எமது பதில் தாக்குதல்கள் பரந்த அளவில் இடம்பெறும் என்றும் அழிவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அதனை எந்தவொரு பாதுகாப்பு முறையும் தடுக்க முடியாது என்றும் அன்ஸாருல்லாஹ் போராளிகள் கூறியுள்ளனர்.

அன்ஸாருல்லாஹ், இஸ்லாத்தின் கொள்கைகளில் உண்மையான விசுவாசிகளாவர். திணிக்கப்படும் சமாதானம் திணிக்கப்பட்ட போரை விட மோசமானது என்பதையும்  சவுதி அரச கும்பலின் துரோகத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். யெமனில் நஜ்ரான், ஜீஸான் மற்றும் ஆசிர் பிரதேசங்களை சவூதி 1934ம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்து, அதனுடன் இணைத்து கொண்டதையும் அவர்கள் மறக்கவில்லை. அன்ஸாருல்லாஹ் யுத்தநிறுத்த கோரிக்கையை விடுத்தது பலவீனமான நிலையில் இருந்து அல்ல என்பதை சவூதி புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, பிராந்திய நாடுகள் தொடர்பாக சவூதி அரேபியா கொண்டுள்ள அதனது கொள்கையை மாற்றிக்கொண்டு, அமெரிக்காவின் மற்றும்  சியோனிஸ்டுகளின்  தீய திட்டங்களுக்கு முகவர்களாக செயல்படாமல், இஸ்லாமிய சகோரத்துவத்தை பேணுவார்களேயானால் இஸ்லாமிய உலகு நன்மையடைம் என்பது திண்ணம்.