Tuesday, October 22, 2019

இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்!





- எஸ். நவாப்ஸாதே

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பது ஒரு பிரபலமான பழமொழியாகும். எதற்கும் அஞ்சாது, எவருக்கும் அடிபணியாது, அச்சுறுத்தல்களைக் கண்டு கலங்காது தமது இலக்குகளை அடையும்வரை தொடர்ந்து பயணிக்கும் ஒரு குழுவினருக்கு இது பொருந்தும். அந்த இலக்கு கல்வியாக இருக்கலாம், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாக இருக்கலாம், வர்த்தகமாக இருக்கலாம் அல்லது ஒரு பெரும் அரசியல் கொள்கை மாற்றமாக இருக்கலாம்; அதனை அடையும்வரை அவர்களது வைராக்கியம் நீங்குவதில்லை.

உலக அளவில், ஈரானிய இஸ்லாமிய குடியரசு தேசத்தின் மட்டுமல்ல, பிராந்திய மக்களின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பினை உணர்ந்த நேர்மையான அமைப்பின் முன்மாதிரியாக விளங்குகிறது.  எந்தவொரு சவாலுக்கு முகம்கொடுக்கும் அதனது மனவுறுதி சதி, சுரண்டல், பொருளாதார பயங்கரவாதம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் அனைத்தையும் சமாளித்து முன்னேற்றப்பாதையில்  இட்டுச்செல்கிறது.


கடந்த நாற்பது ஆண்டுகளில், இஸ்லாமியப் புரட்சி வழங்கியுள்ள எஃகு போன்ற இந்த மனவுறுதி எல்லாம்வல்ல இறைவன் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாகும். விடுதலைக்காக போராடும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, தங்கள் தாயகங்களை ஆக்கிரமிப்பவர்கள்  வெல்லமுடியாதவர்கள் என்ற மாயையை துடைத்தெறிந்து, தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வரும் அவர்கள் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான உயிரோட்டமான போராட்டத்திற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு நல்லதொரு முன்னுதாரணமாக திகழ்கிறது.


ஈரான் இஸ்லாமிய புரட்சியின் விளைவாக, இந்தியப் பெருங்கடலின் கரையிலிருந்து பாலஸ்தீன நிலம் உட்பட மத்திய தரைக்கடல் கடற்கரை வரை இப்பகுதியிலும் அதற்கு அப்பாலும் சுதந்திர இயக்கங்கள் தழைத்தோங்கி வருகின்றன. இஸ்லாமிய புரட்சின் தந்தை இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் வழிகாட்டலை முன்னுதாரணமாகக் கொண்ட இவர்களது விடுதலைக்கான போராட்டம், சியோனிஸவாதிகளினது எகிப்தில் நைல் நதி முதல் ஈராக்கில் யூப்ரடீஸ் நதி வரை 'கிரேட்டர் இஸ்ரேலை' என்ற கனவை தகர்த்தெறிந்துள்ளது.


அக்டோபர் 5, சனிக்கிழமையன்று, அத்தகைய ஒரு பிரபலமான இயக்கம், ‘இஸ்லாமிய ஜிஹாத்’, காசாவில் நிறுவப்பட்ட 32 வது ஆண்டு நிறைவைக் குறித்தது ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சியோனிச அமைப்பின் சட்டவிரோத இருப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்.


"சபிக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், டொனால்ட் ட்ரம்பின் நூற்றாண்டின் சதி உட்பட எங்கள் எதிரிகளிடமிருந்து எழும் எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்", என்று காஸாவில் ஒன்றுதிரண்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.

இஸ்லாமிய ஜிகாத்தின் ஆயுதப் பிரிவான அல்-குத்ஸ் படைப்பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய பிரமாண்ட பேரணியில் அவ்வியக்க பொதுச்செயலாளர் ஸியாத் அன்-நகாலே உரையாற்றுகையில் "எப்போதும் ஒடுக்கப்பட்ட காஸா, இப்போது ஒரு யுத்த வலிமையின் சமன்பாடுகளில் கணக்கிடப்பட வேண்டிய ஒரு சக்தியாக மாறியுள்ளது; இது இந்த மக்களின் அசைக்கமுடியாத மனவுறுதியை பிரதிபலிக்கிறது", என்று குறிப்பிட்டார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான ஆயதுல்லா சையத் அலி கமேனியைச் சந்திக்க கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜியாத் அன்-நக்காலே, பாலஸ்தீனிய மக்கள் தங்களின் இறுதி வெற்றியில் பூரண நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சமாதானம் எனும் போர்வையில் பிற்போக்குத்தனமான அரேபிய தலைவர்களுடன்  இணைந்து அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் எந்த சியோனிஸ சதியினையும் முறியடிப்போம் என்றும் சூளுரைத்தார். தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் உள்ள மாபெரும் மின்னணு கடிகாரம், வேகமாக நெருங்கி வரும் இஸ்ரேலின் முடிவை ஒவ்வொரு வழிப்போக்கர்களுக்கும் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.

அவ்வப்போது கொண்டு வரப்படும் சவுதி முன்முயற்சி அல்லது பஹ்ரைன் மாநாடு போன்ற ஏமாற்றும் சாத்தானிய  வடிவமைப்புகளை அவர் கண்டித்தார்: "இன்று சிலர் பாலஸ்தீனியர்களுக்கும் ஆக்கிரமிப்பாளனான இஸ்ரேலிய ஆட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும்,எதிரியுடன் நாம் நிம்மதியாக பேச முடியும்,  அமைதி சாத்தியமாகும் என்று வைத்திருக்கும் நம்பிக்கையே நாம் தற்போது எதிர்கொள்ளும் மிக மோசமான விஷயம் ஆகும்" என்றார்.

அமெரிக்க – பிரிட்டிஷ் - இஸ்ரேலிய ஆதரவுடைய சவூதி அரேபியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான அன்சருல்லாஹ் இயக்கம் மனவுறுதியுடன் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பதையும் இணைத்து அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்து வருகின்றனர்; அவர்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வருகின்றனர்.

யெமன் மக்களின் தினசரி மேம்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சவூதி ஆட்சியின்னது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட  பேட்ரியட் பாதுகாப்பு பேட்டரிகளை துல்லியமாக துளைக்க முடியுமாக இருந்தால், இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன விடுதலை குழுக்கள் ஏன் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை பெற்று, சியோனிஸ்டுகளின் இரும்பு அரண்களை (iron domes) தகர்த்தெறிய முடியாது?

நிச்சயமாக, அவர்கள் அதைச் செய்வார்கள்; அதைப் பெறுவது அவர்களின் உரிமை. ஏனெனில் அது இஸ்லாத்தின் மீதான மன உறுதி, மற்றும் தன்னம்பிக்கை. ராஜதந்திரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இரண்டையும் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு தேசத்தை வெற்றிபெறச் செய்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தில், பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட சவுதி அரேபியா அமெரிக்கா, பிரிட்டிஷ், மற்றும் பிரஞ்சு வழங்கிய நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் செலவில் கொள்வனவு செய்திருந்த அதிநவீன உயர்ந்த ரக போராயுதங்களை வைத்திருந்தாலும், அன்ஸாருல்லாஹ்க்கள் நொறுக்கி வருகின்றனர்.

எனவே பிரிட்டிஷாரினால் உருவாக்கப்பட்ட இஸ்ரேல் அதன் அழிவுக்கான நாட்களைக் கணக்கிடட்டும்; பாலஸ்தீனியர்களும் தங்கள் யேமன் மற்றும் லெபனான் இஸ்லாமிய சகோதரர்களும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளை, இஸ்லாத்தின் முதலாவது கிப்லா பைத்துல் முகத்தஸ் உட்பட அவர்களின் முழு தாயகத்தையும் விடுவிப்பதில் உறுதியாக உள்ளனர்.




No comments:

Post a Comment