Friday, October 11, 2019

சவுதி அரேபியா உண்மையில் அமைதியை விரும்புகின்றதா?


Is Saudi Arabia really after peace?

சவூதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் "ஈரானுடனான சகல பிணக்குகளையும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்துக்கொள்ளவே சவூதி விரும்புகிறது" என்று CBS செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த விருப்பத்திற்கு சாதகமாக ஈரானிய உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் பதிலளித்தனர். சவூதி அரேபியாவுடன் உரையாடலைத் தொடங்குவதற்கான யோசனையை தெஹ்ரான் வரவேற்பதாக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் லரிஜானி தெரிவித்தார்.

"அமைதி" என்பது உண்மையில் ஒரு அழகான சொல். இதன் பொருள் பதற்றம், தொல்லைகள், கொந்தளிப்பு, அதிர்ச்சி மற்றும் நவீன அரசியல் பிதற்றொலி, துரோகம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபடுவதாகும்.

இது இஸ்லாத்தின் சாராம்சமாகும், இஸ்லாம் என்பது "அமைதிக்கு" ஒரு பொருளாகும், இந்த வார்த்தை புனித குர்ஆனில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது, அங்கு சர்வவல்லமையுள்ள இறைவன் சொர்க்கத்தில் நிலவும் நிரந்தர சமாதானத்தின் செய்திகளையும் அளிக்கிறார்.

ஆயினும்கூட, அந்த சொல்லின் முக்கியத்துவம் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கு மற்றும் சொல்லப்படாத நன்மைகள் எத்தனையோ இருந்த போதிலும், வன்முறை, போர்கள், இரத்தக்களரி மற்றும் இனப்படுகொலைகளால் சிதைந்திருக்கும் நவீன உலகில் அமைதி வெளிப்படையாக தெரிவதற்கு இல்லை.

முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களால் கூட தங்கள் பகுதிகளிலோ அல்லது அண்டை நாடுகளுடனான உறவுகளிலோ சமாதானத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை.

ஏன் இப்படி? இஸ்லாத்தின் முற்போக்கான போதனைகளில் உறுதியான நம்பிக்கை இல்லாததால், அவர்கள் சாத்தானின் சோதனையில் சிக்கி, பாவமான செயல்களில் ஈடுபடுவதோடு, நிச்சயமாக, சாத்தானிய சக்திகளுக்கு - குறிப்பாக அமெரிக்காவுக்கு - சேவகம் புரிவோராக ஆகியுள்ளார்.

இதனால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான விளைவு என்னவென்றால் பரஸ்பர அவநம்பிக்கை, தேசத்துரோகம், மற்றவர்களின் நிலங்களை அபகரிக்கும் ஆசை, சக முஸ்லிம்களை ஒடுக்குதல் மற்றும் அவர்களின் தீய எஜமானர்களின் இசைக்கு நடனமாடுவது.

சிரியா மற்றும் ஈராக்கை மிகவும் கொடூரமான கொலைகார பயங்கரவாத சக்திகள் சிலவற்றின் மூலம் ஸ்திரமின்மைக்கு இட்டுச்சென்றதற்கு இதுவே காரணம்; பாக்தாத்தில் உள்ள சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைச் தீயை சர்வதேச ஊடகங்கள் மூலமும் சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலமும் கொழுந்துவிட்டு எரியச்செய்யப்பட்டுள்ளது, பாலஸ்தீன் சியோனிஸ்டுகளுக்கு விற்கப்படுதல், எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசாங்கம் தூக்கியெறியப்படுதல், லிபியாவில் உள்நாட்டுப் போர், ஆப்கானிஸ்தானில் அப்பாவிகள் மீது தொடுக்கப்பட்ட போர், சிறுபான்மை ஆட்சியால் பஹ்ரைன் மக்கள்  அடக்கி ஒடுக்கப்படுத்தல், வெளிநாடுகளில் வதியும் எமது உடன்பிறப்புகள் தொடர்பான அக்கறையின்மை, அவர்களது அவலநிலை பற்றிய அலட்சியம், ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் பகுத்தறிவற்ற பகை, கடைசியாக யேமனுக்கு எதிரான சவுதி-ஐக்கிய அரபு எமிரேட் யுத்தம்; இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்றது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பை அழிப்பதோடு, நாட்டை பஞ்சம் மற்றும் தொற்று நோய்களில் மூழ்கடித்துள்ளது.

யேமனின் மக்கள் இயக்கமான 'அன்ஸாருல்லாஹ்'  சவூதி அரேபியாவிற்கு எதிரான அதன் பதிலடி நடவடிக்கையை - ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை - நிறுத்துவதாக அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இப்போது அன்ஸாருல்லாஹ் விடுத்த யுத்தநிறுத்த கோரிக்கையை  "சாதகமாக" கருதுவதாக சவூதி ஆளும் வர்க்கத்தினர் கூறுகிறார்கள்.

சவூதி பாதுகாப்பு பிரதி மந்திரி காலித் பின் சல்மான் தனது ட்விட்டர் செய்தியில் "யேமன் அறிவித்த யுத்தநிறுத்த கோரிக்கையை ரியாத் சாதகமாக பார்க்கிறது" என்று கூறிவிட்டு  பின்னர்  "யெமனிகள்  எங்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக நிற்க வேண்டும்," என்றும் கூறுகின்றார். இது "சவூதி அரேபியா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள விரும்புகிறது" என்று கூறிய அவர்களது நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


சவூதி அரேபியா இவ்வாறான முரண்பாடான அறிக்கைகள் மூலம் அன்ஸாருல்லாஹ்வை ஏமாற்ற  முயற்சிக்கிறது என்பது வெளிப்படையானது.

யேமனின் சனாவை தளமாகக் கொண்ட சட்டபூர்வ அரசாங்கத்தின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது. சூடான் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவிக்கட்ட கூலிப்படைகளைக் கொண்டு சவுதி அரசு மேற்கொண்டுவரும் புதிய ஆக்கிரமிப்புகள் சவுதிக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது இதுபோன்ற துரோக நகர்வுகள் மூலம் சவுதிகள் எந்த வகையான அமைதியை' நாடுகின்றனர்? யெமன் மீதான யுத்தத்தின் நான்கரை ஆண்டுகளில் யுத்த அச்சுறுத்தல்கள் மூலம் தங்கள் நோக்கங்களை அடையத் தவறிவிட்டதால்,  "சமாதானப் பேச்சுவார்த்தைகள்" என்று கூறிக்கொள்வதன் மூலம் மூலம் அவர்கள் அதை அடைய நினைக்கிறார்களா? இதுதான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்களது அறிவு இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றே கூறவேண்டும்.

அப்காயிக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மரண அடியைக் கொடுத்தது அன்ஸாருல்லாஹ் அல்ல என்று கூறுகின்றனர்; எமது சக்தியை அவர்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எமக்கு இறைவனின் உதவி இருக்கின்றது.


அமெரிக்க ஆயுதங்கள் அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். பரிதாபத்துக்குரிய அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. முட்டாள்தனமான எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டு அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர்வார்களேயானால் எமது பதில் தாக்குதல்கள் பரந்த அளவில் இடம்பெறும் என்றும் அழிவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அதனை எந்தவொரு பாதுகாப்பு முறையும் தடுக்க முடியாது என்றும் அன்ஸாருல்லாஹ் போராளிகள் கூறியுள்ளனர்.

அன்ஸாருல்லாஹ், இஸ்லாத்தின் கொள்கைகளில் உண்மையான விசுவாசிகளாவர். திணிக்கப்படும் சமாதானம் திணிக்கப்பட்ட போரை விட மோசமானது என்பதையும்  சவுதி அரச கும்பலின் துரோகத்தையும் அவர்கள் நன்கு அறிவார்கள். யெமனில் நஜ்ரான், ஜீஸான் மற்றும் ஆசிர் பிரதேசங்களை சவூதி 1934ம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்து, அதனுடன் இணைத்து கொண்டதையும் அவர்கள் மறக்கவில்லை. அன்ஸாருல்லாஹ் யுத்தநிறுத்த கோரிக்கையை விடுத்தது பலவீனமான நிலையில் இருந்து அல்ல என்பதை சவூதி புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, பிராந்திய நாடுகள் தொடர்பாக சவூதி அரேபியா கொண்டுள்ள அதனது கொள்கையை மாற்றிக்கொண்டு, அமெரிக்காவின் மற்றும்  சியோனிஸ்டுகளின்  தீய திட்டங்களுக்கு முகவர்களாக செயல்படாமல், இஸ்லாமிய சகோரத்துவத்தை பேணுவார்களேயானால் இஸ்லாமிய உலகு நன்மையடைம் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment