Contributors

Monday, July 9, 2018

சவூதி அரேபியா குறித்து அறியவேண்டிய 10 குறிப்புக்கள்

10 Points one should know about Saudi

1. சவூதி அரேபியா தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகவும், ஷரீஆவை அமூல்படுத்தி வரும் நாடாகவும், முஸ்லிம் உம்மத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாகவும் நீண்டகாலமாக காட்சிப்படுத்துவதில் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த அடையாளக் காட்சிப்படுத்தலை அரங்கேற்றுவதற்கு அது பயன்படுத்தி வரும் மிக முக்கிய கருவிதான் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை நடைமுறைப்படுவதாகும். சவூதி அரேபியா இப்னு சவூதின் வம்சாவழி
ஆட்சியைத் தக்கவைக்க பாடுபடும் வெறும் மன்னராட்சி மட்டுமே என்றிருந்தாலும்கூட அது உருவாக்கம் பெற்ற நாள் முதல் தனது போலியை மறைப்பதற்கு இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டது என்பதே உண்மை. எனவே மன்னராட்சியை தக்கவைப்பதே அதன் முழு முதல் இலக்கு. ஏனைய அனைத்தும் அதற்கான அலங்காரங்கள் மட்டுமே. அதனால்தான் எதிர்க்கருத்துக்கள் அங்கே அனுசரிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சவூதி அரேபியாயை ஒரு சர்வாதிகார மன்னராட்சி என்றே அழைக்கலாம்.

2. சவூதியைப்பொருத்தவரையில் அது தனது பல்வேறு இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இஸ்லாத்தை வசதியாகப் பயன்படுத்துகிறது. உலகில் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிர்மாணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு தனக்கு இஸ்லாமியச் சாயத்தைப் பூசிக் கொள்ளும் சவூதி, இஸ்லாத்தின் வாழ்வா-சாவா போராட்டங்கள், நெருக்கடிகள் என்று வருகின்றபோது நேர் எதிரான திசையில் பயணிப்பதை எவரும் அவதானிக்கலாம். தன்னை ஒரு இஸ்லாமிய தேசமாகக்கோரும் சவூதி, இதுவரையில் குறைந்தது ஒடுக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சமூகத்திற்காகவேனும் உண்மையாக உதவி அவர்களின் விடுதலைக்காக உழைத்தது கிடையாது. சியோனிச இஸ்ரேலின் விவகாரமாகட்டும், ஈராக் ஆக்கிரமிப்பாகட்டும், சோவித் ஆப்கானிய ஆக்கிரமிப்பாகட்டும், மேற்குலகின் தேவையை பூர்த்தி செய்யும் நிலஎண்ணெய் உற்பத்தி பராமரிப்பாகட்டும் இவை அனைத்திலும் மேற்குலகுக்கு சேவகம் செய்வதையே தனது குறிக்கோளாக் கொண்டு சவூதி இயங்கியிருக்கின்றது. மேலும் சில முஸ்லிம் உம்மத்தின் முக்கிய விவகாரங்களிலும், அது சந்தித்த மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் அவையெல்லாம் ஏதோ இஸ்லாத்தின் கடப்பாட்டுடன் சம்பந்தப்படாத விடயங்கள் மாதிரி கணித்து தனது தேசிய நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு தன் கண்களை இறுக மூடியபடியே சவூதி செயற்பட்டு வருகின்றது.
பலஸ்தீனப்பிரச்சனை, ரொஹிங்கா முஸ்லிம்களின் அவலம், சிரியாவின் கொடூர யுத்தம் போன்றவற்றினால் சொல்லொண்ணா துயரத்தில் கதறும் முஸ்லிம்களை மீட்கும் ஆளுமை சவூதிக்கு இருந்தாலும் அதனை தனது
கடமையாக ஒரு கணமும் சவூதி கருதியது கிடையாது. எனினும் தனது எல்லை என்று வருகின்றபோது, தனது தேசிய நலன் என்று வருகின்றபோது யெமனிலும், பஹ்ரேனிலும் களத்தில் நேரடியாக குதிப்பதற்கு சவூதி ஒரு கணமும் தாமதிக்கவில்லை. இத்தகைய உதாரணங்கள் ஏனைய நாடுகளைப்போன்று சவூதியும் வெறும் தேசியவாத நாடே என்பதற்கு சான்றாகும்.
3. சவூதி அரேபியா, உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் தனது நியாயாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக தன்னை சுன்னி முஸ்லிம்கள் மீது ஷிஆக் கொள்கையைத் திணிக்க எத்தணிக்கும் ஈரானின் சதிமுயற்சிக்கு எதிராக போராடும் முக்கிய போராளியாக காட்ட முற்படுகிறது. குண்டுவெடிப்புக்கள், கிளர்ச்சிகள் என எது இடம்பெற்றாலும் அவற்றை ஈரானியச் சதி என்றே அது காட்சிப்படுத்துகிறது. ஈரானும், சவூதியும் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவதற்காக இஸ்லாத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி களங்கப் படுத்துகின்றனவே தவிர அவர்கள் முழுக்க முழுக்க தேசிய நலன்களை குறிக்கோளாக் கொண்டவர்களே. உதாரணமாக அரபு வசந்தம் பஹ்ரேனில் வீசத்தொடங்க சவூதி நேரடியாக தனது இராணுவச் சப்பாத்துக்களை அங்கே பதித்தது. பெரும்பான்மையான
ஷியாக்களைக்கொண்ட பஹ்ரேனில் சிறுபான்மை சுன்னி முடியாட்சி நிலைநாட்டிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வீதிக்கு வந்த மக்களின் போராட்டமாக அதனை சவூதி ஒரு வினாடியும் அணுக முற்படவில்லை. மாறாக ஈரானின் சதி என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அனைத்தையும் அடக்கி, நேரடியாக களமிறங்கி, தனது தேசிய, இராஜ தந்திர நலனை அது முதன்மைப்படுத்திமை அதன் தேசியவாத யதார்த்தத்திற்கு சிறந்த சான்றாகும்.
4. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கை அதன் எஜமானர்களான மேற்குலகின் நலன் தழுவியது. அது மேற்குலக வெளிநாட்டுக்கொள்கைக்கு அடிபணிந்தது. சவூதி அரேபியா மேற்கின் முன்னெடுப்புகள் அனைத்துக்கும், அது ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தபோதிலும், அதற்கு முழுமையாக ஆதரவளித்து வருகிறது. அது பலஸ்தீனத்தின் மீதான யூத சியோனிச ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டதுடன் மாத்திரமல்லாமல் அதனை சுமூக நிலைப்படுத்துவதற்காக
இஸ்ரேலுக்கும் அதனைச்சூழவுள்ள நாடுகளுக்குமிடையே பேச்சுக்களை முன்னின்று நடத்தியது. சவூதியின் வெளிநாட்டுக்கொள்கைளை சாராம்சப் படுத்தினால் அது வரலாற்று ரீதியாக பிரித்தானியாவின் நேரடி முகவராக தொழிற்பட்டதுடன் சில சதாப்தங்களாக அமெரிக்க வெளிநாட்டுக்கொள்கைக்கும் - பிரித்தானியாவுக்குமிடையே சிக்குண்டிருந்து, தற்போது ஒப்பீட்டளவில் அமெரிக்க சார்பு முகவராக முன்னின்று தொழிற்பட்டு வருகின்றது.
5. சவூதி அரேபியா தனதாட்சியை மனிதச் சட்டங்களைக்கொண்டும், ஷரீஆச் சட்டங்களைக்கொண்டும் தொகுக்கப்பட்ட ஒருவகையான கலவையைக் கொண்டு மேற்கொண்டு வருகிறது. சவூதியின் அரசியலமைப்பு தொடர்பான அரபு நூலொன்றிலே நூலாசிரியர் இந்த பித்தலாட்டம் தொடர்பாக இவ்வாறு விபரிக்கிறார். “சட்டம்(கானூன்) அல்லது சட்டவாக்கம்(தஸ்ரீஃ) போன்ற பதங்கள் இஸ்லாமிய ஷரீஆவிலிருந்து பெறப்பட்ட சட்டங்களுக்கு மாத்திரம்தான் பிரயோகிக்கப்படுகின்றன. மனிதச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும் முறைமைகள்(அன்திமாஹ்) அல்லது அறிவுறுத்தல்கள்(தஃலீமாத்) அல்லது அரசாணைகள்(அவாமிர்) போன்றவற்றிற்கு அப்பதங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை...”.
6. சவூதியில் காணப்படும் சமய கட்டமைப்புக்கள் அனைத்தும் சவூதி முடியாட்சிக்கு நியாயாதிக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும், அதன் முடிவுகளை நியாயப் படுத்துவதற்காகவுமே இயங்குகின்றன. வஹ்ஹாபி மத்ஹபின் ஸ்தாபகா,; பதின்னெட்டாம் நூற்றாண்டு அறிஞர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் வழித்தோன்றல்கள் சவூதி மன்னர்
பரம்பரைக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வருவதன் ஊடாக சவூதி மன்னராட்சியை சட்டபூர்வமாக்குகின்றனர். அதியுயர் ஆன்மீகத் தலைமைப்பதவிகள் சவூதின் குடும்பத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய, பெரும்பாலும் திருமண பந்தங்களினூடாக தொடர்புபட்;ட நபர்களுக்கே வழங்கப்படுகின்றன. இவ்வாறு உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அறிஞர்கள் உலகின் பல பாகங்களில் மஸ்ஜித்களை நிறுவுதல் போன்ற செய்கைகளை மேற்கோள் காட்டி சவூதியை இஸ்லாத்தின் காவலனாக சித்தரிக்கும் பணியை கச்சிதமாக செய்து வருகின்றனர். சில பொழுதுகளில் அரச குடும்பம் கடைப்பிடிக்கும் சில கொள்கைகள் தொடர்பாக மக்களிடமிருந்து எழும் நியாயமான அதிருப்த்திகளை இந்த செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் அறிஞர்களே தமது பத்வாக்களைக் கொண்டு சாந்தப்படுத்துகின்றனர். சவூதியின் உயர் முப்தி அரபுலகெங்கும் புரட்சிகள் வெடித்த காலகட்டத்தில் எதிர்ப்பு மனுக்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் எதிராக பத்வா வழங்கியமையும் இந்தத் தரத்தில்தான் சாரும்.
7. சவூதி நீதித்துறை நீண்டகாலமாக சந்தேகத்திற்குரியதாகவே தொழிற்பட்டுவருகிறது. அது முரண்பாடுகள் நிறைந்ததும் சவூத் குடும்பத்தின் மன்னராட்சிக்கு எதிராகத் தோன்றும் எதிர்ப்பலைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவுமே பயன்பட்டு வந்துள்ளது. அங்கே நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளில் பாதிக்கும் மேலானவைகளை மிக குறுகலான சட்டவுரிமையைப்பெற்றுள்ள பிற நாட்டுக் குடியேறிகளுக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு குடியேறி ஒரு குற்றச்செயலுக்காக சந்தேகிக்கப்பட்டவுடனேயே அவர் ஆரம்பத்திலிருந்தே தவறாக நடத்தப்படுவதுடன் இறுதியாக சட்டத்தின் பிடியிலும் மோசமாக கையாளப்படுகிறார். அவர்களுக்கு இருக்கின்ற குறுகலான சட்ட உரிமைகள் காரணமாக தம்மை நீதியின் முன் முறையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாத நிலையை குடியேறிகள் சந்திக்கின்றனர். போதுமான சட்ட உதவிகள் பெறமுடியாத நிலையில் நியாயப்படுத்த முடியாத குற்றத்தின் உண்மை நிலைக்கு சமமற்ற
தண்டனைகளால் குடியேறிகள் பலர் மிகக்கடுமையாகத் தண்டிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு பல நீதிமன்றத் தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியவை. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 வயதே நிரம்பிய ஒரு இளம் யுவதி வன்மையான கூட்டுப்பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டபோது அந்தப்பெண்ணுக்கே 200 கசையடிகளும், ஆறு மாத சிறைவாசமும் விதித்த சவூதி நீதிமன்றம் அதற்கான காரணமாக அந்தப்பெண் மஹ்ரமான ஆண் துணையின்றி இருந்ததற்கான தண்டனையே இது என்று தீர்ப்பளித்தமை இதற்கொரு உதாரணம். அதே சவூதி அரேபியா மஹ்ரமின்றிய நிலையில் பல்லாயிரக்கணக்கான வேற்று நாட்டுப் வீட்டுப்பணிப்பெண்களை சவூதிக்குள் அனுமதித்து அவர்கள் சவூதி இல்லங்களில் விதம் விதமாக வதைப்படுவதை சவூதி எந்த முகத்துடன் அனுமதிக்கிறது என்ற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா?
8. இன்று ஷேய்ஹ் நிம்ரின் மரண தண்டனை குறித்து உலக ஊடகங்கள் அதிகம் பேசுகின்றன. அவர் அரபுலகப் புரட்சிகளைத் தொடர்ந்து 2011 இல் சவூதி இடம்பெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தவர். மக்கள் நல புரக்கணிப்புகள், ஒடுக்குமுறைகள், தெளிவான பாரபட்சங்கள் என்பவற்றின் விளைவால் எழுந்த மக்களின் அபிலாசைகளுக்கான கோரிக்கைகளாக இந்த ஆர்ப்பாட்டங்களை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ரெஹ்ரானிலிருந்து இயக்கப்பட்ட சதிவேலை என்று அதனை முழுமையாக மூடிமறைத்து ஷியா-சுன்னி குறுங்குழுவாத முரண்பாட்டை முன்வைத்து அதனை அடக்கியது சவூதி. சோம்பேறித்தனமான ஊடகவியலாளர்களும் உண்மை நிலைபற்றியும் மக்கள் கோரிக்கைகளின் பல்பரிமாணங்கள் பற்றியும் கருத்திற்கொள்ளாது வெறும் ஷியா-சுன்னி குறுங்குழுவாதத்தை அடிப்படையாக வைத்தே இது குறித்து அதிகம் எழுதினார்கள்.
இஸ்லாத்தை முரண்பாடுகளும், உரசல்களும் நிறைந்த ஒன்றாக சித்தரித்து, ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை கொச்சைப்படுத்தி, அதனூடாக மதஒதுக்கல் சிந்தனையும், மேற்குலக தலையீட்டையும் நியாயப்படுத்தும் சிலரின் நிகழ்ச்சி நிரலும் இதன் பின்னால் இருக்கின்றது.
9. அல் கையிதா உறுப்பினர்கள், மற்றும் அரசுக்கெதிராக சதி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அதே சவூதிதான் அல்கையிதா மற்றும் ஏனைய பல ஜிஹாதிய குழுக்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்பை வைத்திருந்தது. அவற்றை தமது இராஜதந்திர நகர்வுகளுக்காக உருவாக்கியதிலிருந்து ஆயுத உதவி, நதியுதவி போன்ற வளங்களை வழங்கியும் ஒத்துழைத்து வந்தது. வருகிறது. அல்கையிதாவுடன் இணைவதற்காக சென்ற பல இளைஞர்களுக்கு இராணுவப்பயிற்சி வழங்குவதில் சவூதி மிக முக்கிய பங்காற்றியது. ஆனால் ஆப்கான் ஜிஹாதிற்கு பின்னரான காலத்தில் அவ்வாறு சென்ற இளைஞர்கள் சவூதியின் உண்மை நிலையை உணரத்தொடங்கினர். அது வெறுமனவே சவூதியின் தேசியநலனில் மாத்திரம்தான், இன்னும் சொல்லப்போனால் மன்னர்
குடும்பத்தின் நலனில் மாத்திரம்தான் அக்கறையுடையது என்ற யாதார்த்தம் அவர்களுக்கு வெளிச்சமானது. மேலும் சவூதி தனது இருப்புக்காக முழுக்க முழுக்க மேற்குலக நலன்களைத் தழுவியே இயங்கி வருகிறது என்ற உண்மை அவர்களுக்கு ஐயமறப் புலப்பட்டது. விளைவு, அவர்கள் சவூதி மன்னராட்சிக்கு எதிராக தமது ஆயுதங்களைத் திருப்பத் தொடங்கி தற்போது வரை அப்போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
10. சவூதி தன்னகத்தே அதிகளவான கனிய வளங்களையும், இராணுவ வளங்களையும் கொண்டிருந்தாலும் உலகத்தின் அதன் செல்வாக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அது உலகில் கொண்டுள்ள செல்வாக்கு முஸ்லிம்களின் முக்கிய புனிதஸ்தளங்களான மக்கா-மதீனாவை தனதெல்லைக்குள் வைத்திருக்கிறது என்ற அடையாள ரீதியான செல்வாக்குடன் மட்டுப்படுத்தபட்டது. பிராந்தியத்தைப் பொருத்தவரையில் பலஸ்தீனுக்கான இரு-அரசுத் தீர்வினை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களை நடத்துவதில் முன்னின்றமை, அமெரிக்க இராணுவத்தளங்களை அமைக்க தனது எல்லையைத் திறந்து விட்டமை போன்ற ஒரு சிலவற்றைச் சொல்லலாம். சுருங்கக் கூறின் சவூதின் அரச குடும்பத்தினரிடையே அதிகார சமநிலையைப் பேணிக்கொண்டு, மக்கள் மீதும் அவர்களின் முழுமையான வளங்களின் மீதும் உரிமை கொண்டாடிக்கொண்டு, மக்கா-மதீனாவைக் காட்டி உம்மத்தை தொடாந்து ஏமாற்றலாம் என கனவு கண்டுகொண்டு, தனது சொந்த இருப்புக்காக மேற்குலகின் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டத்தில் கைகோர்த்துக்கொண்டு இயங்குகின்ற மிகக்குறுகிய மனப்பான்மை கொண்ட அரசே சவூதி அரேபியா.சர்வாதிகார நாடு. .

Saturday, June 30, 2018

ஜலாலுத்தீன் ரூமி - மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்பை ஏற்படுத்திய மெஞ்ஞானி

Jalaluddin Rumi

லாலுத்தீன் முகம்மது பல்கி என்றும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி என்றும் பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் 1207ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் திகதி பாரசீக சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட கொராஸான் மாகாணத்தின் போல்க் பிரதேசத்தில் பிறந்தார். இவர் பாரசீக மொழியில் இறைவனுக்காக பணியாற்றுபவர் என்ற பொருள்கொண்ட 'மௌலவி' என்றும் அழைக்கப்படுகின்றார்.

அவரின் தந்தையார் பகாவுத்தீன் முகம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க சூபி ஞானியாகத் திகழ்ந்தார்கள். போல்கின் பெரும் பகுதி அப்போது பாரசீக கலாச்சார மையமாக இருந்தது. இங்கு பல நூற்றாண்டுகளாக சூபிசம் வளர்ந்து, வேரூன்றியிருந்தது. சூபிசம் ரூமியின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதில் அவரது தந்தைக்கு பெரும் பங்குண்டு.
 
மௌலானா அவர்களுக்கு 11 வயதாக இருந்தபோது, அடிக்கடி நிகழ்ந்த மங்கோலிய படையெடுப்புகளின் காரணமாக அவரது குடும்பம் கொராஸானை விட்டு வெளியேறி, பக்தாதுக்கும் மக்காவுக்கும் டமஸ்கஸுக்கும் குடிபெயர்ந்து, சில ஆண்டுகளில் துருக்கியில் உள்ள கொன்யா பிரதேசத்தின் 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறி, நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்துவந்தது. இதன் காரணமாக அவர் ' மௌலானா ரூமி' என்று அழைக்கப்பட்டார்.


ரூமி, அக்காலத்தில் ஏனைய முஸ்லிம்கள் போலவே அரபுமொழி, குர்ஆன், இறையியல், சட்டம், அஹதீத் (நபி முஹம்மத் (ஸல்) நபிமொழிகள்), வரலாறு, தத்துவம், கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றை கற்றுவந்தார்கள்.

அவர் மற்றும் அவரது தந்தை இருவரும் குர்ஆனின் வெளிப்பாடுகளில் உறுதியான விசுவாசிகளாக இருந்தனர்,  ஆனால் அந்த காலகட்டத்தில் குர்'ஆனின் உள்ளார்ந்த அர்த்தங்களில் கவனம் கொள்ளாது, வெளிவாரியான அர்த்தத்தில் மட்டும் கவனம் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களை விமர்சித்துவந்தனர். குருட்டுத்தனமான பின்பற்றலையும் எதிர்த்து வந்தனர். இவர்களது ஆரம்ப கால கவிதைகள், இது தொடர்பாக, மக்களை விழிப்பூட்டுவதாக அமைந்திருந்தன.

அவரது தந்தையின் மரணத்தின் போது, அவர் ஒரு சிறந்த கல்விமானாகி, 24 வயதில் நாட்டின் மிக உயர்ந்த அறிஞர்களில் ஒருவராக தனது தந்தையைப்போன்று அந்தஸ்தில் உயர்ந்தார். தனது நேரத்தை கற்பித்தல் மற்றும் பொது மக்களுக்கு மார்க்க விரிவுரைகளை வழங்குவதில் செலவிட்டார். 35 வயது வரை அவரது வாழ்க்கை இவ்வாறே கழிந்தது.

1244 ஆம் ஆண்டில், ரூமி, ஷம்ஸ் என்று (அல்லது ஷாம்ஸி தப்ரிஸி) என்று அழைக்கப்பட்ட ஒரு சூபி ஞானியை சந்தித்தார். இவர்கள் இருவரும் வெகு சீக்கிரமே உற்ற நண்பர்களாக ஆயினர். அப்போது ரூமி, ஷம்ஸிடம் எதோ ஒரு விசேட தன்மை இருப்பதை அறிந்துகொண்டார். அதன் பிறகு ரூமியினது வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது. அதிகமதிகம் தனிமையை விரும்பினார்; சமூகத்தில் இருந்து ஒதுங்கலானார்; முன்பு போன்று வாத விவாதங்களில் கலந்துகொள்வதையும் தவிர்த்தார்.

இவர்கள் இருவருக்குமிடையிலான உறவு அவரது குடும்பத்தாரிலும் ஷம்ஸின் ஏனைய மாணவர்களிடத்திலும் பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் இவ்வுறவு தொடர்ந்தது. அதன் பிறகு ஒருநாள் ஷம்ஸ் தப்ரிஸி யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று எவருக்கும் தெரியவில்லை. அவர் ஒரு வேலை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் சீடர்கள் கருதினர். ஆயினும் ரூமி அதனை நம்ப மறுத்தார். அவர் தனது நண்பரைத் தேடி பல ஆண்டுகளாக, பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்தார். நண்பரின் இழப்பை ரூமியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  இந்த இழப்பே அவரது கவிதையின் மூலம் அவரது ஆத்துமாவின் வெளிப்பாட்டிற்கு வழிவகுத்தது. "திவானே ஷம்ஸே - தப்ரிஸி" என்ற நூலாகப் பெயர் பெற்றது.

இந்த நூல் 40,000-க்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த "கஸல்" கவிதைகள், வெளித்தோற்றத்தில், ஷம்ஸ் தப்ரிசியை விளித்துப் பாடப்பட்டது போன்று தோன்றினாலும் உண்மையில் அவை இறை காதலை விவரிக்கும் கவிதைகளாக இருப்பதை உணர்ந்துகொள்வது கடினமல்ல. இது பாரசீக மொழியில் எழுதப்பட்ட மற்றும் பாரசீக இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இதனை "திவானே கபீர்" என்றுமழைப்பர். இதன் மூலப்பிரதியில், பல்வேறு வடிவங்களில் 44,282 கவிதை வரிகள் உள்ளன. ரூமியின் படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன, ஆனால் சில சமயங்களில் அவர் துருக்கிய, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும்  பயன்படுத்தி உள்ளார்.

ஜலாலுத்தீன் ரூமி மீது ஷாம்ஸி தப்ரிஸி தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் என்பது வாஸ்த்தவமே என்றாலும், அவர் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த பற்று, இறை காதலாக பிரவாகிக்க ஷம்ஸ் ஒரு தூண்டுகோலாய் இருந்துள்ளார் என்பதுவே உண்மை. அதுவே ரூமியின் உள்ளிருந்து  ஆத்மாவாக வெளிவந்தது.

ரூமி அரிதாகவே தனது சொந்த கவிதைகளை எழுதினார். அவரின் மற்றுமொரு புகழ்பெற்ற படைப்பான  மஸ்னவியில் உள்ள ஆறு கவிதை புனைவை, அவர் பாடப்பாட  அவரது மாணவர் ஹுசாம் சுலாபியை எழுதப் பணித்தார்.

ரூமி கவிதை வரிகளை, நடனம் ஆடுவதுபோன்று சுழன்று சுழன்று வரும் நிலையிலேயே பாடுவார். இந்த  நடனம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பினை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

மஸ்னவியின் ஆறு பாகங்களில் மொத்தம் 25600 பாடல்கள் எழுதி முடிந்தபோது, மௌலனா அவர்கள் தமது 68 வது வயதில் 1273ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதியன்று (ஹிஜ்ரி 672 ஜமாதுல் ஆகிர் 5ம் நாள்) இறையடி சேர்ந்தார். "மஸ்னவி" முற்றுப்பெறாத நிலையிலே மௌலானா இறையடி சேர்ந்தாலும், எந்தக்குறையுமின்றி பூரணமானதாகவே அது காணப்படுகின்றது.

அவரது கவிதைகளின் கருத்தாழத்தை அறியவேண்டுமாயின் நவீன பாரசீக மொழியில் சிறந்த அறிவுடன் இறைத் தூதரின் வாழ்க்கை மற்றும் குர்'ஆணிய போதனை ஆகியவற்றில் நன்கு பரிச்சயம் உடையோரால் மட்டுமே முடியும்.

A.J. Arberry தன்னுடைய 'Rumi, Poet and Mystic' என்ற புத்தகத்தில் ரூமி பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
"மௌலானா ரூமி பாரஸீகத்து மெய்நிலை கண்ட ஞானத்தை மிக உன்னதமாக வெளியிட்டவர்கள். ஸூபி பாடல்கள் என்ற பரந்த காட்சியைக் கண்ணோட்டமிடுவோமாயின் அவற்றிடை அவர்களை உன்னதமான மலைச்சிகரமாகவே பார்க்கிறோம். அவர்களுக்கு முன்னும், பின்னும் வந்த கவிஞர்களை அவர்களோடு ஒப்பிடின் சாதாரணக் குன்றுகளாகவே தென்படுகின்றனர். மௌலானா அவர்களுடைய முன்மாதிரி, சிந்தனை, மொழி ஆகியவற்றின் பலம், மௌலானா அவர்களுக்குப் பின்னர் மிகவும் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த பாரஸீக மொழியைப் படிக்கும் திறனுள்ள ஸூபி ஒவ்வருமே தன்னகரில்லாத மௌலானா அவர்களுடைய தலைமையை ஒப்புக்கொண்டே வந்துள்ளனர். "

மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் கவிதைகள் உலகின் அனைத்து பிரதான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதும் யுனெஸ்கோ 2007ம் ஆண்டை ரூமி ஆண்டாக பிரகடனப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கத்து.

ரூமியின் கவிதை தொடர்ச்சியான ஆன்மீக அனுபவங்களின் தொடர் - இயற்கை அழகின் பிரதிபலிப்பு, ஒரு பாடல், ஒரு நடனம், ஒரு சிந்தனை, ஓர் உணர்வு ... நம்மை மனிதனாக உருவாக்கும் எதையும், திறந்த அல்லது மூடிய கண்களூடாக பார்க்க முடிகின்ற ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கிறது.


- தாஹா முஸம்மில் 

Saturday, June 23, 2018

தறுதலை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தோம் - ஜவாத் ஸரீப்

Iran will not hold negotiations with US as 'rogue' state: Zarif
சர்வதேச சட்டத்தை பலமுறையும் மீறுவதன் மூலம் அமெரிக்கா ஒரு "தறுதலை" அரசாக மாறியுள்ளது. தனது வார்த்தைகளை மீறும்பலதரப்பு உடன்படிக்கைகளை மதிக்கத்தவறிசெயலிழக்க சதிசெய்யும் ஒரு நாட்டுடன் ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது”- 
புதனன்று (20/06/2018) ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட "அமெரிக்க வெளியுறவு கொள்கை நெருக்கடி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில்தற்போதுள்ள பன்னாட்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வாஷிங்டன் வாபஸ்  பெற்ற பின்னர் ஈரானுடனான "புதிய" உடன்படிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்போவால் சமீபத்தில் முன்வைக்கப்பட்ட  ஒரு  12 அம்ச நிபந்தனைக்கு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முஹம்மத் ஜவாத் ஸரீப் பதிலளித்தார்.
"சில சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வாபஸ் வாங்குவது என்பது மற்றவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது, சர்வதேச அமைப்புகளை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளோடு சேர்ந்துஅமெரிக்க அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு உதாரணங்களாக உள்ளன. அவை சர்வதேச ஒழுங்கை துரதிருஷ்டவசமாகஇருண்டதாகிவிட்டனஎன்று குறிப்பிட்டுள்ளார்.

"வெளிப்படையாகஅத்தகைய கொள்கைகளை தொடர்வது சர்வதேச சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்கா ஒரு தறுதலைத்தனமான அரசாகவும் சர்வதேச சட்டங்களை மதிக்காத ஒரு நாடாகவும் மாற்றிவிடும்" என்றும் தெரிவித்துள்ளார்.
விரிவான கூட்டு திட்டம் (JCPOA) என்று அழைக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமேரிக்கா தன்னிச்சையாக வெளியேறியதானது அது பன்முக உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறிய மூன்றாவது முறையாகும். வாஷிங்டனின் இந்த மீறலானது பன்னாட்டு ஒப்பந்தங்களைச் சிக்கலாக்கி சர்வதேச இராஜதந்திரத்திற்கான வாய்ப்புகளையும் கணிசமாக பாதிப்பதாக உள்ளது. இதற்கு முன் அது வெளியேறிய NAFTA, உலகளாவிய வர்த்தக அமைப்புமற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில பகுதிகளும் அடங்கும் என்றும் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க வெளிவிவகார அலுவலர்கள் பங்கு பற்றிநூற்றுக்கணக்கான மணிநேர இருதரப்பு இருதரப்பு பேச்சுவார்த்தைகள்பலதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆகிவற்றைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்பாட்டில்அமெரிக்காவினால் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுசாசனத்தின்  25 வது பிரிவின் கீழ்  ஒரு சர்வதேச உறுதிப்பாடாக  ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாகவும் அனாவசியமாகவும் வெளியேறுவதாயின்மற்றொரு சுற்று தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தை நம்பகமான தரப்பாக எவ்வாறு  கருத முடியும்? " என்றும் ஜவாத் ஸரீப் கேள்வி எழுப்பினார்.
அதன் வார்த்தையினதும் கையொப்பத்தினதும் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் உள்ளது அமெரிக்க அரசாங்கத்திடமே அன்றி ஒத்துழைப்பு வழங்கி உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படும் மற்ற தரப்பு அல்ல என்பதை திரு. பாம்போ மறந்துவிட்டார் என்று ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
தெஹ்ரான் அதன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ள மறுத்தால்இஸ்லாமியக் குடிரேசின்ன் மீது "வரலாற்றில் வலுவான பொருளாதாரத் தடைகளை" திணிப்பதன் மூலம் வாஷிங்டன் ஈரான் மீது நிதி அழுத்தத்தை அதிகரிக்கும் என்று மே 21 ம் தேதி பாம்போ கூறினார்.
ஈரான் பிரதான சக்திகளுடன் கையெழுத்திட்டுள்ள அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து அமெரிக்கா வெளியேறிய சில வாரங்களுக்கு பின்னர்தெஹ்ரானுடனான "புதிய உடன்படிக்கைக்கு" 12 கடுமையான நிபந்தனைகளை பாம்போ விதித்தார்.
அவரது நிபந்தனைகளில் ஒன்றுசிரியாவில் பெரும்பாலும் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய மற்றும் பிராந்திய கூட்டாளிகள் உதவுகின்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் சட்டபூர்வமான அரசாங்கத்திற்கு உதவி வரும் ஈரான் அதன் இராணுவ ஆலோசகர்களை திரும்பப் பெற வேண்டும் என்பதுவும் ஒன்றாகும்.
கடந்த 17 மாதங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் "உளறல்களும்  மற்றும் அறிவுக்கொவ்வாத முடிவுகளும் நடத்தைகளும்" வாஷிங்டனின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் முக்கிய காரணியாகிவிட்டது என்று ஜவாத் ஸரீப் கூறினார்.
கடந்த 70 ஆண்டுகளில் அனைத்து அமெரிக்க நிர்வாகங்களும் ஈரானிய நாட்டினரை நம்பிக்கை இலக்கச்செய்துஅவர்களுக்கு எதிராக மேற்கொண்ட அநீதிவன்முறைபயங்கரவாதம்போர் ஆகியவற்றிற்கும் மேற்கு ஆசியாவில் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தியதற்காகவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளை மீறியதற்காகவும் பொறுப்பு கூறவேண்டும் என்ற வாதத்தையும் ஜவாத் ஸரீப் முன்வைத்தார்.
இதற்கு பதிலாகஅமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஈரானின் நியாமான  கோரிக்கைகளின் விரிவான பட்டியலை ஜரிஃப் முன்வைத்தார். வாஷிங்டன் அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துதல் என்ற அதன் கொள்கையை கைவிட்டுஉடனடியாக JCPOA உடன்படிக்கை மீறல்களை நிறுத்திகடந்த தசாப்தங்களில் ஈரான் மக்களுக்கு எதிரான அதன் தேவையற்ற மற்றும் சட்டவிரோத செயல்களை ஒப்புக் கொள்ளுவதுடன் அணுவாயுதங்களில் தங்கியிருத்தலையும் மரபு மீறிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் கோட்பாட்டையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பவை முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிலவாகும்.
ஈரானிய வெளியுறவு மந்திரி பாரசீக வளைகுடாவில் பிராந்திய நெருக்கடிகளை தீர்ப்பதற்கும் வெளிநாட்டு குறுக்கீடு இல்லாமல் வலுவான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் இலக்காகக்கொண்ட ஒரு "பிராந்திய உரையாடல் கருத்துக்களம்" உருவாக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
"பிராந்திய நாடுகளின் இறைமை சமத்துவம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில், பிராந்திய நாடுகளை நெருக்கமாக பிணைத்து நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்; அச்சுறுத்தல்களைத் தவிர்த்து சர்ச்சைகளுக்கு சமாதான தீர்வு, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச எல்லைகளை மீறாமலும் மற்றவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளிப்போம் என்றும் ஜவாத் ஸரீப் குறிப்பிட்டுள்ளார்.