Contributors

Thursday, June 13, 2024

ஹஜ் என்பது ஓர் உல்லாச பயணமல்ல - இமாம் கொமெய்னி (ரஹ்)

Hajj is not a leisure journey - Imam Khomeini (RA)

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்த புனித யாத்திரையின் உண்மை நோக்கம் என்ன என்பதையும் ஹஜ்ஜை நிலைநிறுத்த தங்கள் பொருள் மற்றும் ஆன்மீக வாழ்வின் ஒரு பகுதியை ஏன் செலவிட வேண்டும் என்பதையும் கண்டறிவதாகும்.

இவற்றை ஆய்ந்தறியாத நபர்களால் அல்லது பக்கச்சார்பான ஆய்வாளர்களால் இதுவரை ஹஜ் யாத்திரையின் தத்துவமாக வரையப்பட்டிருப்பது என்னவென்றால், இது ஒரு கூட்டு வழிபாடு மற்றும் ஒரு யாத்திரையுடனான ஒரு சுற்றுலா பயணம்.

ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும், எவ்வாறு புனித போராட்டத்தில் ஈடுபட வேண்டும், முதலாளித்துவம் மற்றும் கம்யூனிசம் ஆகியவற்றுக்கும் ஹஜ் யாத்திரைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்களின் உரிமைகளையும், அடக்கி ஆள்பவரிடமிருந்து நலிந்தவர்களையும் பாதுகாப்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது…? முஸ்லிம்கள் மீது செலுத்தப்படும் உளரீதியான மற்றும் உடல்ரீதியான  அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதில் ஹஜ் யாத்திரைக்கு என்ன தொடர்பு இருக்கிறது...? முஸ்லிம்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாகவும், மூன்றாவது உலகளாவிய சக்தியாகவும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஹஜ் யாத்திரைக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா...? மாறாக, ஹஜ் யாத்திரை என்பது 'கஃபா' மற்றும் மதீனா நகரத்தைப் பார்வையிடும் ஒரு பயணமாக மட்டுமே இருக்க வேண்டுமா...? போன்ற கேள்விகள் எம்முள் எழ வேண்டும்.

வரலாறு முழுவதும் இஸ்லாமிய சமூகங்களின் உணர்வுகளை மழுங்கடித்து, அவர்களை கட்டிப்போட்டுள்ள ஆபத்துகளில் ஒன்று ஹஜ் யாத்திரையின் யதார்த்தத்துடன் ஒத்துப்போகாத உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் கொடுத்து மக்கள் மத்தியில் அந்த உபரிகளையே ஊக்குவித்தல் மற்றும் பரப்புதல் ஆகும்.

இவர்களால் கொடுக்கப்படும் இந்த தவறான விளக்கங்கள் இந்த வழிபாட்டுச் செயலின் யதார்த்தங்கள், போதனைகள் மற்றும் ஞான அறிவு ஆகியவற்றை அறியாமையுடன் கலக்கச் செய்து முஸ்லிம்களில் மந்தநிலை, மூடநம்பிக்கை போன்றவற்றை ஏற்படுத்தி அவர்களில் உள்ள மாற்றத்தை உருவாக்கும் திறனை பயன்படுத்த விடாது, பின்தங்கியிருக்க காரணமாகின்றன.

ஹஜ் எனும் இந்த முக்கியமான இஸ்லாமிய கடமையின் போது  அனைத்து முஸ்லிம்களையும் ஒரே இடத்தில் ஒன்றுதிரட்டி, ஒரு பாரிய இஸ்லாமிய மாநாட்டு வடிவத்தில், சமூக மற்றும் அரசியல் விளைவுகளை உணரச் செய்ய பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரு சுற்றுலா பயணம் போல் கருதச் செய்துள்ளனர்.

முஸ்லிம்களை மகிழ்விக்கவும், களிப்புறச் செய்யவும், அங்குள்ள  கட்டிடங்கள் மற்றும் மக்களைப் பார்த்துவிட்டு, விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டு தத்தமது நாடுகளுக்குத் திரும்பவும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் ஹஜ் யாத்திரை செய்ய வேண்டும் என்றா இஸ்லாம் கோருகிறது...?

இமாம் கொமெய்னி அவர்களின் பார்வையில், ஹஜ் தொடர்பான இந்த தவறான விளக்கங்கள் இரண்டு குழுக்களால் முன்வைக்கப்பட்டு தொடர்கின்றன.

முதல் குழு, அறியாமையில் உள்ளவர்கள்: இஸ்லாமிய சமூகங்களின் உண்மையான தேவை தொடர்பான புரிதலும் அறிவும் இல்லாத காரணத்தால், ஹஜ் யாத்திரையை சில இடங்களை தரிசிப்பதற்காகவும் மற்றும் அதன் முக்கியத்துவத்தை சில சடங்குகளுக்குள் சுருக்கி, வரையறுத்து கட்டுப்படுத்துகிறார்கள். இவர்களது இந்த அறியாமை, புனித ஹஜ் யாத்திரையின் தத்துவத்தையும் அதனால் ஏற்படுத்தக்கூடிய சமூக மற்றும் அரசியல் தாக்கத்தையும் அதன் கருத்தியல் மற்றும் ஆன்மீக நோக்கங்களுடன் புரிந்து கொள்வதிலிருந்து தடுக்கிறது.

இரண்டாவது குழு தமது பொருளாதார மற்றும் அரசியல் நலன் காரணங்களுக்காக ஹஜ் யாத்திரையை பயன்படுத்த முயற்சிக்கும் பக்கச்சார்பான ஆய்வாளர்கள் ஆகும். இந்த குழு யாத்ரீகர்கள்  ஹஜ்ஜின் உண்மையான நலன்களையும் அபிலாஷைகளையும் அடையவிடாது, அல்லது விரும்பிய மற்றும் வளமான முறையில் அதன் தாத்பரியத்தை  உணரவிடாது இந்த மாபெரும் இறை வழிபாட்டை அவர்கள் தங்கள் மார்க்கப் பிரிவினரின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப விளக்குகிறார்கள். இந்த ஆய்வாளர்கள், இன்றும்கூட, மதத்தின் பெயரில் இஸ்லாமிய போர்வை போர்த்திக்கொண்டு, பொதுமக்களின் கருத்தை குழப்ப முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய புரட்சியின் வெற்றியின் பின்னர் ஹஜ் யாத்திரையின் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை எதிர்க்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதே நபர்கள்தான். இன்றும், அவர்கள் காலத்தின் கட்டாயமான முஸ்லிம் ஒற்றுமையை எதிர்ப்பவர்களாகவும் இஸ்லாமிய பிரிவுகளின் அடிப்படை நெருக்கத்தை மறைப்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தான் புனித ஹஜ்ஜை சடங்குகளுக்கு முடக்கி சில இடங்களை தரிசிக்கும் பொழுதுபோக்கு பயணம் போல் நம்பச் செய்துள்ளார்கள்.

இந்த இரு குழுக்களும் நம்பமுடியாத அனுமானங்களையும் விளக்கங்களையும் வழங்குவதன் மூலம், ஹஜ் யாத்திரைக்கும் சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற கூற்றை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவர்களுக்கு முஸ்லிம்கள் உலகளாவிய அதிகாரத்தை அடைவதோ, திமிர்பிடித்த உலக சக்திகளுக்கு எதிரான புனித போராட்டத்தில் ஈடுபடுவதோ அல்லது தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டெடுப்பதோ அவசியமில்லை. அவர்களின் பார்வையில், இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கூலிகளுக்கு எதிராக போராடுவது ஒரு தவறான செயலாகும்.

உண்மையான ஹஜ் யாத்திரையில் மறைந்திருக்கும் உண்மைகள்

ஹஜ் யாத்திரைக்கு கொடுக்கப்பட்டு வரும் மேற்கூறப்பட்ட  தவறான விளக்கங்களின் ஆபத்துகள் குறித்து எச்சரித்த உடனேயே, இமாம் கொமெய்னி இந்த மாபெரும் வழிபாட்டின் மகத்துவம் பற்றி குறிப்பிடுகிறார்:

"... ஹஜ் யாத்திரை என்பது மனிதர்கள் நெருங்கி வந்து கஃபா எனும் புனித இல்லத்தின் உரிமையாளனுடன் இணைவதுதான் ... மேலும் ஹஜ் யாத்திரை என்பது வெறுமனே கிரியைகள், சம்பிரதாயங்கள் மற்றும் ஜெப சொற்களின் தொடர் அல்ல. ஒரு நபர் இறைவனை சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் இறுகிய இயக்கம் போன்றவற்றின் ஊடாக அடைவதில்லை. தெய்வீக போதனைகளின் மையத்தில் ஹஜ் யாத்திரை உள்ளது. அதில் இருந்து இஸ்லாத்தின் கொள்கையின் உள்ளடக்கத்தை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நாம் தேட வேண்டும். ஹஜ் யாத்திரை என்பது பொருள் மற்றும் எண்ணங்களின் தீமைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு முக்கிய கடமையாகும்; மேலும் அது ஒரு நபரில் மற்றும் உலகில் அன்பை உருவாக்கும் ஒரு முழுமையான சமூக வாழ்க்கையின் அனைத்து காட்சிகளின் வெளிப்பாடும் ஆகும்.

இன்னும் ஹஜ் யாத்திரையில் உள்ளவை உண்மை வாழ்க்கையுடன் தொடர்புபட்ட  சடங்குகளாகும்... மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் "உம்மா" எனும் உலகளாவிய சமூக சபையுடன் இணைவதற்கு, எந்தவொரு இனத்திலிருந்தும் தேசத்திலிருந்தும் வந்தபோதும், இப்ராஹிம் (அலை) அவர்களின் “கவ்ம்” எனும் வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஆகவே, "உம்மா" என்ற ஒன்றுபட்ட சக்தியாக மாறி, இந்த ஏகத்துவ வாழ்க்கையின் பயனை அடைவதற்கு ஹஜ் யாத்திரை எம்மை தயார் படுத்துகிறது, அதற்கான பயிற்சியை வழங்குகிறது. அதற்கான ஒத்திகையே இந்த புனித கடமையாகும்.

ஹஜ் யாத்திரை என்பது குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்களின் பொருள் மற்றும் ஆன்மீக ஆற்றல்கள் மற்றும் திறன்களை பிரதிபலிக்கும் அற்புத காட்சி; மேலும் அது அனைவரும் பயனடையக்கூடிய ஆசீர்வதிக்கப்பட்ட குர்ஆன் போதனைகளின் சாராம்சம் ஆகும்.

சன்மார்க்க சிந்தனையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய தேசமான "உம்மா" வின் நிலையினை நன்கு அறிந்தவர்கள் ஹஜ்ஜின் கடமையில் புதைந்து கிடைக்கும் அரும்பெரும் பொக்கிஷங்களை அடைந்துகொள்வதற்கு, ஞானக் கடலில் மூழ்கவேண்டும், சுழியோட வேண்டும். அவ்வாறன்றி அவற்றை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லை.

ஹஜ் யாத்திரையின் தத்துவம் மற்றும் விளைவுகள் பற்றி  இந்த விளக்கங்களில், இமாம் கொமெய்னி (ரஹ்) விவரிக்கிறார். இந்த பெரிய இறை வழிபாட்டுச் செயலையும் அதன் விளைவுகள் மற்றும் அறுவடைகளின் மகத்துவத்தையும் இலகுவான, புரியும் மொழியில்  தெளிவுபடுத்துகின்றார்.

உண்மையான ஹஜ் யாத்திரையை விளக்கிய பின்னர், இமாம் கொமெய்னி (ரஹ்) மகத்தான சமூக மற்றும் அரசியல் விளைவுகளைக் கொண்ட இந்த மாபெரும் வழிபாட்டுச் செயல் எவ்வாறு அதன் இயல்பு தன்மையில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளது, வெறும் சரித்திர கதையாக்கப்பட்டுள்ளது என்பதையிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார்.

புனித குர்ஆனில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை நாம் புரியாதுள்ளது போன்றே ஹஜ்ஜின் தாத்பரியங்களையும்  அறியாதிருக்கிறோம் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

உயிர்த்துடிப்புள்ள குர்’ஆன் வசனங்களின் அர்த்தத்தை எந்தளவு மறைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஹஜ்ஜின் மகத்துவமும் வக்கிர சிந்தனையின் மண்ணின் கீழ் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது ...

புனித குர்ஆனின் வழிகாட்டுதல், வாழ்வொழுங்கு மற்றும் வாழ்க்கையை உருவாக்கும் தத்துவத்தின் மொழி எவ்வாறு திகில், மரணம் மற்றும் கல்லறை ஆகியவற்றின் மொழியாக தரம் குறைக்கப்பட்டுள்ளதோ, ஹஜ் யாத்திரை அதே கதியை அனுபவிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது…

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் மக்காவுக்குச் சென்று, இஸ்லாத்தின் புனித ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் மற்றும் அன்னை ஹாஜரா (அலை) அவர்கள்  கால்தடங்களில் கால் பதிக்கின்றனர். இருப்பினும், இப்ராஹிம் (அலை) யார், முகமது (ஸல்) யார், அவர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் நோக்கம் மற்றும் குறிக்கோள் என்ன; அவர்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கேள்வியெழுப்புவதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை.

நிச்சயமாக, ஒர் உயிர் துடிப்பற்ற ஹஜ், இயக்கம் அற்ற ஹஜ், ஒற்றுமையை வெளிப்படுத்தாத ஹஜ் மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளை அழிக்க அழைப்பு விடுக்காத ஹஜ் உண்மையான ஹஜ் யாத்திரை அல்ல.

சுருக்கமாக கூறின், அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்ஜின் உண்மையான தாத்பரியங்களின்பால் கவனம் செலுத்த வேண்டும், குர்ஆன் போதனைகளை வாழ்க்கை முறையாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும், மேலும் இவை இரண்டும் உயிரோட்டம் பெற வேண்டும்.

ஹஜ் யாத்திரையின் சரியான மற்றும் உண்மையான தத்துவத்தை, விளக்கங்களை முன்வைப்பதன் மூலம், ஆஸ்த்தான ஆலிம்களின், மத அறிஞர்களின் தன்னிச்சையான அனைத்து மூடநம்பிக்கைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிதைவுகளிலிருந்து விடுபட வேண்டும்.

குர்ஆன் உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கை புத்தகம் ஆகும். தனிப்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மட்டுமல்ல, இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் நியதிகள் மற்றும் கொள்கைகளுடன் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கைக்கான வழிகாட்டியாகும். அதன் போதனைகளின் உலகளாவிய தன்மையையும், வாழ்க்கையை உருவாக்கும் நியதிகளையும் கொண்ட சத்தியத்தின் சிறந்த புத்தகமான குர்ஆன் இன்று மரணித்தவர்கள் ஆன்மாக்களுக்கான பாராயண புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது பெரும் கவலைக்குரிய விடயமாகும். அதுபோல் இந்த மகத்தான ஹஜ் கடமையில் இருந்து சமூக மற்றும் அரசியல் தத்துவங்கள் தூரப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த வேதனையையும் துக்கத்தையும் தெரிவித்திருந்தார்கள்.

Saturday, June 8, 2024

'ஹிஸ்புல்லாவை, ஹமாஸை இஸ்ரேலால் வெல்ல முடியாது': இஸ்ரேலிய ஜெனரல்

 'Israel cannot win against Hezbollah or Hamas': Israeli general

ByAl Mayadeen English

Source: Israeli media

இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் யிட்சாக் பிரிக் கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்ந்து வரும் அதன் பலவீனத்தால் ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸிடம் தோல்வியடையும் என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஹமாஸுடனான போரில் தோல்வியைச் சந்திக்க நேரிடும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரிலும் அவர்கள் நிச்சயமாக அதே விதியையே சந்திப்பார்கள் என்று இஸ்ரேலிய ரிசர்வ் மேஜர் ஜெனரலும் இராணுவ ஆய்வாளருமான யிட்சாக் பிரிக் வெள்ளிக்கிழமை ஜெருசலேம் போஸ்டுக்கான ஒரு பதிப்பில் தெரிவித்தார்.

IOF (இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை) இனால் இரண்டு எதிர்ப்புப் பிரிவினரையும் தோற்கடிக்க முடியாது என்று பிரிக் வலியுறுத்தி கூறினார், இது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை வெற்றியைத் நாடாததால் அல்ல, "சிறிய மற்றும் பலவீனமான" இராணுவத்தை மேற்கோள் காட்டி, அதனிடம் "உபரி சக்திகள் இல்லை" என்பதால் அவர்களால் வெற்றிபெற முடியாது என்றார்.

"போர் தொடரும் ஒவ்வொரு நாளும் எங்கள் நிலைமை மோசமடைகிறது," என்று அவர் கூறினார், IOF மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் இரண்டும் உள்நாட்டில் சரிவையே நோக்கி செல்கிறது.

போர் அமைச்சரவை இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்

அத்தகைய இக்கட்டான நேரங்களில் இஸ்ரேலிய அமைப்பின் நிர்வாகத்திற்கு போர் அமைச்சரவை தான் பொறுப்பு. எனினும், அதன் உறுப்பினர்களின் "ஒரே ஒரு தினசரி குறிக்கோள்" போரை தொடர வேண்டும் என்பதாகும், அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை பாதுகாக்கும் வகையிலேயே முடிவுகள் எடுக்கின்றனர். போரினால் ஏற்படும் விளைவை அவர்கள் சிந்திப்பதில்லை.

"அவர்களின் இவ்வாறான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அவர்கள் ஆடுகளைப்போல இஸ்ரேல் மக்களை பலிபீடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்," என்று அவர் கூறினார், அவர்கள் இஸ்ரேலிய மக்களை பற்றி கவலைப்படவில்லை, மாறாக தங்கள் சொந்த நிலை பற்றியே கவலைப்படுகின்றனர் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

"இஸ்ரேல்" "எகிப்துடனான அவர்களின் உறவுகள் உட்பட உலக நாடுகளின் மீது தமக்கு இருந்த செல்வாக்கை இழந்து வருகிறது" இவை அனைத்தையும் ரஃபாவின் படையெடுப்பு நடப்பதற்கு முன்பே அவர் கற்பனை செய்ததாக இஸ்ரேலிய பிரிகேடியர் ஜெனரல் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இஸ்ரேலிய மக்கள் "அழிவை நிறுத்த வேண்டும் மற்றும் நம்மை வழிதவறிச் செலுத்தும் இந்த போர்வெறியர்களிடமிருந்து உடனடியாக விலகி இருக்க வேண்டும்."

பிரிக்கின் கூற்றுப்படி, இஸ்ரேலிய அரசாங்கம் குடியேறியவர்களை படுகுழிக்கு இட்டுச் செல்கிறது, இஸ்ரேலிய ஆட்சியின் தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக குடியேறிய காலனித்துவ திட்டத்தை தியாகம் செய்கிறார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

வன்முறை மூலம் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்டெடுக்க முடியாது என்பதையும் இந்த நேரத்தில் ஒரே தீர்வு அமைச்சரவை போர்நிறுத்தத்தை அறிவிப்பது மட்டுமே என்பதையும் உணர்ந்துகொள்வது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ரஃபா முற்றுகை ஒரு 'பெரும் தவறு'

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகருக்குள் நுழைவது "இஸ்ரேலுக்கு" பலனளிக்க போவதில்லை என்று பிரிக் முன்பு மாரிவ் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி இருந்தார்.

ரஃபாவிற்குள் நுழைவது ஒரு "பெரும் தவறு"  இது "இஸ்ரேலை" உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்துவைத்து மட்டுமல்லாது எகிப்துடன் சமாதானத்தை பணயம் வைக்கும் என்று பிரிக் கருதினார், இந்த நடவடிக்கையானது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுவனம் காசாவில் பாலஸ்தீனிய ஏதிர்ப்பணியால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்பதை நிரந்தரமாகவே தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தனது சந்திப்புகளை குறிப்பிட்டு காட்டிய இஸ்ரேலிய ரிசர்வ் பிரிகேடியர் ஜெனரல், ரஃபாவிற்குள் நுழைவது ஏன் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை பிரதமரிடம் பலமுறை விளக்கியதாகக் கூறினார்.

நான் கூறிய காரணங்களை நம்பியது போல் காட்டிய நெதன்யாகு தன்னை ஏமாற்றியதாக அவர் வெளிப்படுத்தினார். ஆனால் எமது சந்திப்பு முடிவடைந்தவுடன், நெதன்யாகு "இஸ்ரேலின்" நலன்களை விட தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்தார்.

இஸ்ரேலிய இராணுவம் "மாயைகளைப் பரப்புகிறது, இஸ்ரேலியர்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறது, உண்மையைச் சொல்லவில்லை" என்று பிரிக் இஸ்ரேலிய பொது வானொலியிடம் கூறினார்.

சண்டையை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய பிரிக், இஸ்ரேலிடம் "ஹமாஸைத் தோற்கடிக்க முடியாத ஒரு சிறிய இராணுவமே உள்ளது" அது முழு அளவிலான போரைத் தொடங்கினால் இந்த இராணுவம் நிச்சயமாக சிக்கலைச் சந்திக்கும் என்றும் ஒப்புக்கொண்டார்.

https://english.almayadeen.net/news/politics/-israel-cannot-win-against-hezbollah-or-hamas---israeli-gene 

வெற்றிக்கு பதிலாக அவமானம் 

Yisrael Beiteinu கட்சியின் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், எட்டு மாதப் போருக்குப் பிறகு, "நாங்கள் ["இஸ்ரேல்"] மொத்த வெற்றிக்குப் பதிலாக மொத்த அவமானத்தைப் பெற்றுள்ளோம்" என்று வலியுறுத்தினார்.

போர் முழுவதும் அரசாங்க நடத்தையை விமர்சிக்கும் ஒரு அறிக்கையில், லிபர்மேன் "இஸ்ரேலிய அரசாங்கம் வடக்கை இழந்தது, மேலும் ஹிப்புல்லாஹ்விற்கு தொடர்ந்து அடிபணிகிறது, அது (ஹிப்புல்லாஹ்) விரும்பியதைச் செய்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

போர் தொடங்கி எட்டு மாதமாகியும், அரசாங்கம் ஹமாஸை அகற்றவும் இல்லை, காஸாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்கவும் தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.

https://english.almayadeen.net/news/politics/-israel--achieved-total-shame-instead-of-total-victory--lieb 

Thursday, June 6, 2024

புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்கும் நீண்ட பயணத்தில் உயிர் நீத்த தியாகிகள்

Martyrs who lost their lives in the long journey to create 

a New World Order

கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒரு நாட்டின் நிலை என்னவாக இருக்கும் என்பதை சொல்லித்தான் புரியவேண்டும் என்பதில்லை. இவற்றுக்கு மேலாக போர் அச்சுறுத்தல், உள்நாட்டு கலவரங்கள், எதிரிகளின் சூழ்ச்சிகள் போன்ற இன்னோரன்ன சவால்கள் அனைத்தையும் சமாளித்து மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றாமல் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது இலேசான காரியமல்ல. டாக்டர் ரயீஸியின் அரசாங்க இதை திறம்பட செய்தது என்பதற்கு அவரின் அரசாங்கம் பெரும் மக்கள் அபிமானத்தை பெற்றிருந்தது என்பதே போதிய சான்றாகும்.

புதிய உலக ஒழுங்கு ஒன்றை உருவாக்கும் நீண்ட பயணத்தில் கடந்த மே மாதம் 19 ஆம் திகதி ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி டாக்டர் இப்ராஹிம் ரயீஸி மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹொசைன் அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தொன்றின் காரணமாக உயிர் தியாகிகளாகினர் என்பதை நாம் அறிவோம்.

பலஸ்தீன் விவகாரம் உலகின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இவர்களது இழப்பானது ஈரானுக்கு மட்டுமல்ல முழு இஸ்லாமிய உலகுக்கும் பேரிழப்பாகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

டாக்டர் ரயீஸியின் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே வெளியுறவு கொள்கையில் ஒரு வித்தியாசமான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. வேறுபட்ட உலக ஒழுங்கை உருவாக்க தங்கள் வெளியுறவுக் கொள்கையில் தீவிர இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்தது. ஈரானை பகைமை உணர்வுடன் நோக்கிவந்த பல பிராந்திய நாடுகளுடன் நேச உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளித்து அதில் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டது.

டாக்டர் ரைசியின் அரசாங்கம் நவீன காலனித்துவத்தின் கையகப்படுத்தலுக்கு எதிரான எதிர்ப்பு முன்னணியின் ஒற்றுமை மற்றும் உலகளாவிய பரவலை ஊக்குவித்தது மற்றும் ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முறிவடைந்திருந்த உறவுகளை இராஜதந்திரத்தின் மூலம் மீண்டும் நிறுவுவது உட்பட தடுக்கப்பட்ட சர்வதேச உறவுகளை மீண்டும் தொடங்கியது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் நிர்வாக கொள்கைவகுப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் ஓர் ஆவணம் உண்டு; அதுதான் இமாம் அலீ (அலை) அவர்கள் மாலிக் அல்-அஸ்தருக்கு நிர்வாகம் தொடர்பாக எழுதிய கடிதமாகும். அதில் இமாம் அலீ (அலை) அவர்கள் அரச நிர்வாகத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தலையீட்டை அகற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஏனெனில் இது பெரும்பாலும் ஊழல் மற்றும் பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த அறிவுரையை பின்பற்றுவதன் மூலம், ஊழலை திறம்பட ஒழிக்க முடியும் என்று டாக்டர் ரயீஸி பூரணமாக நம்பினார். தமது நிர்வாகத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் அண்டவிடவில்லை.

இமாம் அலீ (அலை) அவர்களின் அறிவுறுத்தல்: "நிர்வாகத்தில் நீதியைப் பேணுங்கள், அதை உங்கள் மீது கடமையாக்கிக்கொள்ளுங்கள், மக்களின் ஒப்புதலைப் பெறுங்கள், சலுகை பெற்ற சிலர் கடினமான தருணங்களில் உங்களுடன் இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்: அவர்கள் நீதியைப் புறக்கணிக்க முயற்சிப்பார்கள், அவர்கள் தங்களுக்குத் தகுதியானதை விட அதிகமாகக் எதிர்பார்ப்பார்கள், அவர்களுக்குச் செய்த உதவிகளுக்கு நன்றி காட்ட மாட்டார்கள்."

விசுவாசிகளின் தளபதி அலீ (அலை) அவர்களின் கூற்றுப்படி, பொருளாதார மற்றும் சமூக கொள்கை வகுக்கையில் தனிநபர்களின் திருப்தியை விட பொது மக்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது. இந்த கொள்கை ஜனாதிபதி ரயீஸியின் ஆட்சியில் கடுமையாக பின்பற்றப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.

பொதுவாக இப்ராஹிம் ரயீஸி என்று அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் இப்ராஹிம் ரைஸுல்சாத்தி என்பதாகும். 1960 டிசம்பர் 14 அன்று பிறந்த இவர் ஓர் ஆலிமும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 2021 முதல் ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக பணியாற்றினார், 2024 இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறக்கும் வரை பதவிவகித்தார்.

இப்ராஹிம் ரயீஸி 1960 டிசம்பர் 14 அன்று மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் சன்மார்க்க குடும்பமொன்றில் பிறந்தார். அவருக்கு 5 வயதாக இருந்தபோது இவரது தந்தை செயத் ஹாஜி, மரணமடைந்தார்.

ரயீஸி தனது 15வது வயதில் கோம் சன்மார்க்கப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். அதன் பிறகு, அவர் ஆயத்துல்லாஹ் சையத் முஹம்மது மூசவி நெஜாத் பள்ளியில் கற்றுக்கொண்டிருக்கம் அதேவேளை அங்கு அவர் மற்ற மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்டார். 1976 இல், அவர் ஆயத்துல்லாஹ் புரூஜெர்த்தி பள்ளியில் தனது படிப்பைத் தொடர கோம் சென்றார்.

அவர் தலைசிறந்த ஆலிம்களான செய்யத் ஹொசைன் புருஜெர்தி, முர்தஸா முதஹ்ஹரி, அபுல்காசிம் கஸ்ஸாலி, ஹொசைன் நூரி ஹமதானி, அலி மேஷ்கினி மற்றும் முர்தஸா பசந்திதே ஆகியோரின் மாணவர் ஆவார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், ரயீஸி ஈரானின் நீதித்துறை அமைப்பில் பல பதவிகளில் பணியாற்றினார், துணைத் தலைமை நீதிபதி (2004-2014), அட்டர்னி ஜெனரல் (2014-2016), மற்றும் தலைமை நீதிபதி (2019-2021) பதவிகளை வகித்த ரயீஸி, 2006 தேர்தலில் முதல் முறையாக, தெற்கு கொராசன் மாகாணத்தில் இருந்து நிபுணர்கள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மக்களின் 63% வாக்குகளுடன் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

ஈரானிய அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியின் மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும். அதுவரை முதல் துணை ஜனாதிபதி பொறுப்பேற்பார்.

 

ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்

ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (23 ஏப்ரல் 1964 - 19 மே 2024) ஒரு முற்போக்கான அரசியல்வாதியும் மற்றும் சிறந்த இராஜதந்திரியும் ஆவார், அவர் ரயீஸியின் அரசாங்கத்தில் 2021 முதல் 2024 இல் இறக்கும் வரை ஈரானின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார். 2011 மற்றும் 2016 க்கு இடையில் அவர் அரபு மற்றும் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சராக இருந்தார்.

அமீர்-அப்துல்லாஹியன் ஈரானிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானியின் சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆலோசகராக இருந்தார்.

அவர் வெளியுறவு அமைச்சகத்தின் சர்வதேச உறவுகள் கலாசாலையில் பேராசிரியராக இருந்தார்.

அமீர்-அப்துல்லாஹியன் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் அரசியல் அறிவியல் பீடத்தில் சர்வதேச உறவுகளில் முதுமாணி பட்டம் மற்றும் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.


லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இணைந்த எதிர்ப்பு முன்னணி மற்றும் பலஸ்தீன விடுதலை போராட்டத்தில் இஸ்ரேலுடன் மோதலில் இருக்கும் இணைந்த பிற நீரோட்டங்களை அமீர்-அப்துல்லாஹியன் ஆதரித்தார்.

- தாஹா முஸம்மில்