Contributors

Tuesday, February 7, 2023

மாறிவரும் உலக ஒழுங்கில் ஈரான் வகிக்கும் முக்கிய பங்கு

 Iran plays a key role in the changing world order


By Elham Abedini, journalist and researcher in the field of international relations
 

ஈரானில் அண்மையில் நிகழ்ந்த அமைதியின்மை குறித்து கட்டுரைகள் எழுதாத, அதைப் பற்றி விரிவாகப் பேசாத ஊடகங்களையோ, சிந்தனையாளர்களையோ காண்பது அரிது. ஆனால் இந்த அவதானம் அல்லது அதன் மீதான ஊடக ஆக்கிரமிப்பு, குறிப்பிட்ட இந்த பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் குறைந்தது மூன்று கோணங்களில் இருந்து "ஈரான்" பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்தின எனலாம்.

முதலாவதாக, குறைந்தபட்ச இழப்புகளுடன் அதிகபட்ச சலுகைகளைப் பெறுவதற்காக JCPOA இன் மீள்கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானைக் கட்டாயப்படுத்த முடியும் என்ற மேற்கு நாடுகளின் நம்பிக்கைகள் அனைத்தும் ஈரான் கீறிய அதன் சிவப்புக் கோடுகளில் இருந்து பின்வாங்க மறுத்ததால் தோல்வியடைந்தது. இதன் விளைவாக, மேற்கத்திய ஆய்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சமீபத்திய மாதங்களில் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற விரும்புவதாகக் கூறி பிரச்சினையை எழுப்ப முயற்சிக்கின்றனர். அவர்கள் இதற்காக தங்கள் ஊடகங்களையும், மனித உரிமைப் பிரச்சினையையும் நெம்புகோலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஈரானின் அணுசக்தி அமைப்பு (AEOI), IAEA ஆளுநர்கள் குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஃபோர்டோ செறிவூட்டல் ஆலையில் 60% யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கியது. ஈரானின் பாதுகாப்பு உத்திகளில் அணு ஆயுதங்களுக்கு இடமில்லை என்று ஈரானிய அதிகாரிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தாலும், இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் கமேனி கூட இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் அணு மற்றும் இரசாயன ஆயுதங்கள் உட்பட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து ஆணையிட்டுள்ளார் என்றாலும் கூட மேற்குலகம் இந்தப் பிரச்சினையை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

காலப்போக்கில், அன்றைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் வார்த்தைகள், அந்நாட்டின் உறுதியான கொள்கையாக வெளிப்பட்டது, "ஈரான் அவர்களின் அணுசக்தி திட்டத்தின் ஒவ்வொரு நட் மற்றும் போல்ட்டையும் அகற்றும் ஒரு விருப்பத்தை நாம் உருவாக்கினால் ... நான் அதை வரவேற்கிறேன்," என்று கூறியிருந்தார். பல ஆண்டுகளாக அனைத்துவிதமான தடைகளுக்கும், அழுத்தங்களுக்கும் இலக்காகி வரும் நாடான ஈரான், இப்போது தனது சொந்த விஞ்ஞானிகளையும் அறிவையும் நம்பி இவ்வளவு சிக்கலான தொழில்நுட்பத்தை அடைய முடிகிறது என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு யதார்த்தமாகும். 

இதற்கிடையில், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் போன்ற அரசியல்வாதிகள் ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரானவர்களாக கருதும் நபர்களை அதிகாரப்பூர்வமாக சந்திக்கின்றனர். மற்றொரு பிரச்சினை, ஈரானில் சிக்கலான, இன்னோரன்ன கலவரங்களை முன்னெடுப்பதற்கு ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் மனித உரிமைகள் தடைகள் உட்பட பல்வேறு கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய அதிகாரிகள் தங்கள் முன்னெடுப்புகளில் பிழைகளைச் செய்த விதம் மற்றும் இந்த விரைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் தொடர்பாக மற்றொரு விரிவான கட்டுரை எழுதப்பட வேண்டும் என்றாலும், இந்த அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன என்பதை சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும். முதல் காரணம், இந்த அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் சிந்தனைக் குழுக்களில் தீவிரமாக இருக்கும் பரப்புரையின் அழுத்தத்தின் கீழ், ஈரானில் நடப்பன பற்றி தவறான பகுப்பாய்வு செய்தார்கள். இரண்டாவது காரணம் என்னவென்றால், அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் ஹாஸ் போன்ற பல ஆய்வாளர்களின் கூற்றுப்படியும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணத்தின்படியும் ஈரான் சர்வதேச அரங்கில் குறைந்தபட்சம் ஒரு சக்தியாக கருதப்படுகிறது. மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் சேர்ந்து, மேற்கு நாடுகளுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஈரான் பலவீனமாக்கப்பட்டால் , வளமிக்க பிராந்திய நாடுகளைச் சுரண்டுவதற்கு இந்த நாடுகள் பிராந்தியத்தில் கால் பதிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, ஈரானை உள்நாட்டுப் பிரச்சினைகளால் மூழ்கடிப்பது, பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, சர்வதேச அளவில் மனித உரிமைப் பிரச்சினைகளை எழுப்புவது, அதையும் தாண்டி ஈரானை உள்நாட்டுப் போருக்குள் சிக்கவைத்து சிதைப்பது போன்றவை பிராந்தியத்தில் மேற்குலகின் நலன்களைப் பாதுகாக்க உதவும் கைங்கரியங்களாகும்.

சமீப காலமாக மேற்கத்திய முக்கிய ஊடகங்களின் செயல்பாடும், ஈரானுக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதற்கு அவர்கள் அணிவகுத்து நிற்கும் விதம், நம்பத்தகுந்த ஊடகங்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் ஊடகங்கள் போலிச் செய்திகளைக் கூட வெளியிடத் தயங்காமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், அதே சமயம் சிந்திக்கத் தூண்டுவதாகவும் உள்ளது. ஈரானில் உண்மை நிலையை மறைப்பதற்கு தயாரிக்கப்பட்ட செய்திகளின் எண்ணிக்கை சாதாரண அளவை விட அதிகமாக உள்ளது, மேலும் இது ஒரு பரவலான ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையாகவும் மாறியுள்ளது. 

இசுலாமியப் புரட்சித் தலைவர் உடல்நலம் கெட்டு இருப்பதாகவும், அவரது பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட போலிச் செய்தி இதற்கு மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்றாகும். மறுநாள் ஈரான் முழுவதிலும் இருந்து மாணவர் பிரதிநிதிகளை அவர் சந்தித்தபோது இது பொய் என விரைவாக அம்பலமானது. அதன்பிறகு, சிஎன்என் போன்ற பிற ஊடகங்களும் ஈரானில் நடந்த கலவரங்கள் குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு, கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு இந்த முயற்சியில் இணைந்தன. 

இஸ்லாமியப் புரட்சித் தலைவர் இஸ்பஹான் மக்களுடனான சந்திப்பில், “இஸ்லாமியக் குடியரசுடன் மேற்கத்திய நாடுகளும் திமிர்பிடித்த சக்திகளும் கொண்டுள்ள பிரச்சனைக்குக் காரணம், இஸ்லாமியக் குடியரசு சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருவது தான். அது செழித்து வளர்கிறது. முழு உலகமும் இந்த முன்னேற்றத்தைக் கண்டு அதை ஒப்புக்கொண்டுள்ளது. இதை மேற்குலகால் சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் அதை பொறுத்துக்கொள்ள தயாராக இல்லை. அங்குதான் பிரச்சினை இருக்கிறது. நாம் எந்த முன்னேற்றமும் அடையாமல் இருந்திருந்தால், அப்பிராந்தியத்தில் வலுவான இருப்பை வெளிப்படுத்தத் தவறியிருந்தால், அமெரிக்கா மற்றும் திமிர்பிடித்த சக்திகளின் முன் நமது குரல் நடுங்கினால், அவர்களின் ஆக்ரோஷமான, நிர்ப்பந்தமான நடத்தையை ஏற்க நாங்கள் தயாராக இருந்திருந்தால், எம்மீது செலுத்தப்படும் அழுத்த குறைந்ததாக இருந்திருக்கும். நிச்சயமாக, அவர்கள் வந்து எங்களை ஆதிக்கம் செலுத்தியிருப்பார்கள், எனினும் குறைவான தடைகள் மற்றும் இந்த வகையான அழுத்தங்கள் மற்றும் சவால்கள் இருந்திருக்கும்.

ஈரானின் அணு ஆயுதங்களை நோக்கி பயணிக்கிறது அல்லது பிராந்தியத்தை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் ஈரானில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற அவர்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு அப்பாற்பட்டது என்பது இந்த அறிக்கைகளிலிருந்தும் தெளிவாகிறது. சவூதி அரேபியாவில் அல் சவூத் மற்றும் பஹ்ரைனில் அல் கலீஃபா, பாலஸ்தீனில் சியோனிச ஆட்சியின் இனச்சுத்திகரிப்பு மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் கண்காணிக்கப்படாமல் செல்லும் அந்த ஆட்சியின் அணு ஆயுதங்கள் ஆகியவற்றில் மேற்குலகின் இரட்டைத் தரநிலைகள் மிகத்தெளிவாக காணப்படுகின்றன.

புதிய நிர்வாகம் ஈரானில் பதவியேற்றது முதல், அது "செயல்திறன், ஆற்றல்மிக்க இராஜதந்திரம்" மற்றும் "அண்டை நாடுகளுடன் உறவு" கொள்கைகளை அதன் நிகழ்ச்சி நிரலில் வைத்துள்ளது. இந்த சில மாதங்களில், ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பல வர்த்தக, மூலோபாய ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகியுள்ளன, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஈரான் மாறியுள்ளது, மேலும் ஈரானுக்கும் இந்த நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர வருகைகள் அதிகரித்துள்ளன. மேற்கின் கொள்கை ஈரானை "தனிமைப்படுத்துவது" என்றாலும், ஈரான் இப்போது அதன் அண்டை நாடுகளிடையே புதிய மூலோபாய பங்காளிகளைத் தேடுகிறது. அதே சமயம், ஈரான் மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறவும் இல்லை. இது இஸ்லாமிய குடியரசின் புதிய நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வர விரும்பாத கடுமையான நிர்வாகம் என்ற மேற்குலகின் பிரச்சாரம் பொய் என்பதை நிரூபித்துள்ளது. 

வெளியுறவுக் கொள்கை மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈரானின் நடவடிக்கைகள் மேற்கின் அனைத்து தத்துவார்த்த மற்றும் நடைமுறை முயற்சிகளுக்கும் எதிர் திசையில் உள்ளன. எனவே, ஈரானில் குழப்பத்தைத் தூண்டுவதற்கும் "பலவீனமான ஈரானை" உருவாக்குவதற்கும் அவர்களின் முழு முயற்சியையும் இந்த கட்டமைப்பில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது. இப்போது, முன்னெப்போதையும் விட, உலகம் ஒரு புதிய ஒழுங்கிற்கு மாறுவதையும், மேற்கிலிருந்து கிழக்கிற்கு அதிகாரம் மாறி வருவதையும் உணர்ந்து வருகிறது. இந்த செயல்பாட்டில், ஈரான் செல்வாக்கு மிக்க பங்கை வகித்து வருகிறது. சிரியா, ஈராக் மற்றும் அமெரிக்கர்களின் கொல்லைப்புறத்தில் உள்ள வெனிசுலாவில் கூட மாறிவரும் சமன்பாடுகளில் இதற்கான எடுத்துக்காட்டுகளைக் காணலாம். எனவே, ஈரானை எதிர்கொள்வது என்பது சர்வதேச சக்தியின் மாறிவரும் வடிவவியலின் செயல்முறையின் வேகத்தை குறைந்தபட்சம் குறைப்பது மேற்கத்திய நாடுகளின் முக்கிய தந்திரங்களில் ஒன்றாகும் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

https://english.khamenei.ir/news/9346/Islamic-Revolution-s-dynamism-has-triggered-maximum-aggression

Friday, February 3, 2023

ஈரான் இஸ்லாமிய புரட்சி உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை

The Iranian Islamic Revolution was a major turning point in world history


தொகுப்பு - முகமது ஜவாத் கோர்பி

ஒரு சம்பவம் நடந்து சுமார் அரை நூற்றாண்டை நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்றளவிலும் ஆராயப்பட்டுக்கொண்டு இருக்குமாயின் நிச்சயமாக அது ஈரான் இஸ்லாமிய புரட்சியாகும்.

நவீன உலகில் இதுபோன்ற ஒரு புரட்சி, அதுவும் ஒரு மதத்தை முன்னிலைப் படுத்தி, ஆயுதம் ஏந்தா மாக்களால், ஒரு தலைமைத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, வெற்றிபெற்ற ஒரு புரட்சி இதுவாகவே இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

1978 இல், இமாம் கொமெய்னி தலைமையிலான ஈரானிய மக்களின் இஸ்லாமிய இயக்கம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, இமாம் கொமெய்னி யுடன் சமரசம் செய்துகொள்வதில் ஏமாற்றமடைந்த ஷாவின் ஆட்சி, அவரது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அல்லது தஞ்சமடைந்திருந்த அவரை ஈராக்கிலிருந்து நாடு கடத்த சில அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நியூயார்க்கில் நடந்த ஈரான் மற்றும் ஈராக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இமாம் கொமெய்னியை ஈராக்கில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. 24 செப்டம்பர் 1978 அன்று, ஈராக் துருப்புக்கள் நஜாப்பில் உள்ள இமாம் கொமெய்னியின் வீட்டை முற்றுகையிட்டனர். முற்றுகை பற்றிய செய்தி ஈரான், ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள முஸ்லிம்களை கோபப்படுத்தியது. இமாம் கொமெய்னி  அவர்களை சந்தித்த ஈராக் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான தலைவர், இமாம் ஈராக்கில் தங்க விரும்பினால் அவர் ஷாவுக்கு எதிரான தனது செயற்பாடுகளையும் அரசியலையும் கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதற்கு இமாம் அவர்கள், முஸ்லிம் உம்மா மீது அவருக்கு இருந்த பொறுப்பு காரணமாக, அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அமைதியாக இருக்க அல்லது ஷாவுடன் சமரசம் செய்ய ஒருபோதும் அவர் தயாராக இருக்கவில்லை.

இமாம் கொமெய்னி, எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிட தயாராய் இருக்கவில்லை, போராட்டத்தைத் தொடர தீர்மானித்தார், ஈராக்கை விட்டு சிரியாவுக்குச் செல்ல முடிவு செய்தார், ஆனால் ஈராக்-சிரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் விமான சேவைகள் இடம்பெறவில்லை. ஆகவே அவர் குவைத் ஊடாக சிரியா செல்ல முடிவு செய்தார். அவர் குவைத்துக்கு வருவதற்கு விசா வழங்கப்பட்ட நிலையில் கூட, குவைத் அதிகாரிகள் அவர் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பித்தனர்.

அன்றிரவு இரவு இமாம் பாஸ்ராவில் தங்கி  (ஈரானியர்கள் விசா இன்றி பிரான்ஸ் செல்லக்கூடிய ஏற்பாடு அப்போது நடைமுறையில் இருந்ததால்) பாரிஸுக்கு பறக்க முடிவு செய்தார். ஈரான் நாட்டு மக்களுக்கு அப்போது அவர் அனுப்பிய செய்தியில், தான் பிரான்ஸ் செல்வதற்கான காரணங்களை குறிப்பிட்டார். “இப்போது நான் இமாம் அலியின் (அலை) அருகாமையை  விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், மேலும் வெளிநாட்டவர்களாலும் அவர்களுடன் தொடர்புடையவர்களாலும் தாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களாகிய உங்களுக்கு சேவை செய்ய இஸ்லாமிய பிரதேசங்களில் எனக்கு சுதந்திரம் இல்லை. மேலும் எனக்கு விசா வழங்கப்பட்டிருந்தும் கூட குவைத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நான் பிரான்ஸ் செல்கிறேன், நான் எங்கிருந்தாலும், எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனது தெய்வீக கடமை மற்றும் இஸ்லாம் அதனூடாக முஸ்லிம்களின் உயர் நலன்களை நிறைவேற்றுவதுதான். இப்போது இஸ்லாமிய இயக்கம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதால் நீங்களும் நானும் பெரும் பொறுப்பொன்றை சுமந்தவர்களாக இருக்கின்றோம்; நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது”, என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இமாமும் அவரது தோழர்கள் சிலரும் அக்டோபர் 6, 1978 இல் பாக்தாத்துக்குச் சென்று, அடுத்த நாள் அவர் பிரான்ஸுக்கான பயணத்தைத் தொடங்கினார், அதன் பிறகு சிறிது காலம் தலைநகர் பாரிஸில் தங்கிய அவர் Neauphle-le-Château எனும் கிராமத்திற்கு தனது இருப்பிடத்தை மாற்றினார்.

'இமாம் அரசியலில் ஈடுபடக்கூடாது' என்ற பிரெஞ்சு ஜனாதிபதியின் கருத்தை எலிசி மாளிகை அதிகாரிகள் இமாமிடம் தெரிவித்தனர். அதற்கு இமாமின் கூர்மையான எதிர்வினை மற்றும் பதில் என்னவென்றால், அத்தகைய வரம்பு ஜனநாயகத்திற்கான பிரான்சின் கொள்கைக்கு முரணானது, மேலும் அவர் தனது நோக்கத்தை விட்டுக்கொடுப்பதை விட விமான நிலையங்களுக்கு இடையில், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சஞ்சரிப்பதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஷாவின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக, பாரிஸில் இமாம் தங்கியிருப்பது புரட்சியின் வேகத்தை துரிதப்படுத்தியது மற்றும் பல நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு நாளும் இமாமின் இருப்பிடத்திற்குப் படையெடுத்தனர், மேலும் அந்த சிறிய கிராமம் உலக செய்திகளின் மையமாக மாறியது. அந்நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இமாம் நாடுதிரும்ப விரும்பினார். இமாம் நாட்டுக்குத் திரும்புவதை அப்போதைய ஈரானிய அரசு தடைசெய்திருந்த நிலையில் பல விமான நிறுவனங்கள் அவரை ஏற்றிவர தயக்கம் காட்டின. இமாம் கொமெய்னி நாட்டில் இருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையில் இருந்த பிரான்ஸ் அரசு அவரின் பயணத்துக்காக விமானம் ஒன்றை வழங்கியது. பல்லாண்டுகால அஞ்ஞாதவாசத்தை முடித்துக்கொண்டு இமாம் 1979 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தெஹ்ரானை வந்தடைந்தார்.

அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த கிஸ்கார்ட் டி எஸ்டாயிங், இமாமை பிரான்சில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவு பிறப்பித்ததாக தனது நினைவுக் குறிப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில், அந்த நாட்களில் நம்பிக்கையிழந்திருந்த ஷாவின் இராஜதந்திர பிரதிநிதிகள், மக்களின் ஒரு தீவிரமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத எதிர்வினை ஆபத்தை Giscard d'Estaing க்கு அறிவுறுத்தினர், ஐரோப்பாவிலும் ஈரானிலும் ஏற்படக்கூடிய இத்தகைய எதிர்வினையின் பின்விளைவுகளில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டதாக அறிவித்தனர். பி

ரான்ஸில் இமாம் கொமெய்னி  நான்கு மாதங்கள் தங்கியிருந்த போது, Neauphle-le-Château உலகின் மிக முக்கியமான செய்தி மையமாக மாறி இருந்தது. இமாம் கொமெய்னி யின் பல்வேறு நேர்காணல்கள் இஸ்லாமிய அரசாங்கம் பற்றிய அவரது கருத்துக்கள் மற்றும் அவரது இயக்கத்தின் எதிர்கால நோக்கங்கள் அவரது குறிக்கோளை உலகிற்கு வெளிப்படுத்தியது.

இவற்றினூடாக பெரும் எண்ணிக்கையிலான உலக மக்கள் இமாமின் சிந்தனை மற்றும் அவரது எழுச்சியைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டனர், மேலும் இந்த நிலையத்திலிருந்துதான் அவர் ஈரானில் இஸ்லாமிய புரட்சி இயக்கத்தின் மிக முக்கியமான காலகட்டத்தை வழிநடத்தினார்.

ஷாவினால் நியமிக்கப்பட்ட ஷெரீப்-இமாமியின் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அதன் பிறகு ஷா ராணுவ அதிகாரியான அஸாரியாவை பிரதமராக நியமித்து ராணுவ சட்டத்தை பிறப்பித்தார்.

இந்த நடவடிக்கைகள் மூலமாக மக்கள் எழுச்சியைப் கட்டுப்படுத்த முடியவில்லை, ராணுவத்தால் கொலைகள் அதிகரித்தன. விரக்தியடைந்த ஷா அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களின் உதவியை நாடினர், ஆனால் அவர்களின் திட்டங்கள் எதுவும் பயனளிக்கவில்லை.

"ஷாவின் முடியாட்சிக்கு எதிரான மக்களின் முறைசாரா வாக்கெடுப்பு" என்று அழைக்கப்படும் ஷா-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கானவர்களின் பங்கேற்றனர், தாஸுஆ மற்றும் அஷுரா (மொஹரம் 9 மற்றும் 10) நிகழ்வுகளில் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஷாபுர் பக்தியார், தேசிய முன்னணியின் முக்கிய நபர், அமெரிக்காவின் கடைசி பகடை, பிரதமராக ஷாவினால்   அறிமுகப்படுத்தப்பட்டார். குவாடலூப்பில் நகரில் நான்கு தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் பக்தியாருக்கு ஆதரவாக தங்கள் கூட்டுக் கருத்துக்களை தெரிவித்தனர்.

இவ்வாறு நடந்துகொண்டிருந்ததைத் தொடர்ந்து, நேட்டோவின் துணைத் தளபதியான ஜெனரல் ஹுய்சர் ஈரானுக்கு ஓர் இரண்டு மாத இரகசிய பயணத்தை மேற்கொண்டார். 1953 இல் முஹம்மத் முசத்தேக் ஆட்சியைக் கலைத்து, ஷாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது போலவே, இந்த அரசாங்கத்தை ஒழுங்கமைக்கவும், வேலைநிறுத்தங்களை முறியடிக்கவும், ஷாவை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான சதித்திட்டத்தை நிறைவேற்றம் செய்யவும், பக்தியருக்கு இராணுவப் படைகளின் ஆதரவைப் பெறுவதே தனது நோக்கம் என்பதை அவர் பின்னர் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தினார். ஆனால், போராட்டங்களைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இமாம் கொமெய்னியின் செய்திகள், ஹுய்சரின் அனைத்துத் திட்டங்களையும் சிதறடித்தன.

டிசம்பர் 1978 இல், இமாம் கொமெய்னி  தாம் அஞ்ஞாதவாசத்தில் இருக்கும் நிலையிலேயே புரட்சிகர சபையை நிறுவினார். ஷா ஜனவரி மாதம் நாட்டை விட்டு வெளியேறினார், இரண்டு நாட்களுக்குப் பிறகு, பக்தியாரின் அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாட்சி கவுன்சில் கூடியது. ஷா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி தெஹ்ரானில் உள்ள மக்களை மகிழ்வித்தது, பின்னர் நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் குவிந்து, அவர் வெளியேற்றப்பட்டதைக் கொண்டாடினர். அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் மற்றும் ஷாவின் இராணுவத்தின் ஜெனரல்களுடன் ஹூய்சரின் வழக்கமான சந்திப்புகளால் வேலைநிறுத்தங்களை அடக்குவதற்கும் மக்களின் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பக்தியாருக்கு உதவ முடியவில்லை.

இஸ்லாமிய புரட்சி மகத்தான வெற்றி பெற்றது. "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம், இஸ்லாம் ஒன்றே எமக்கு வேண்டும்" என்பதே போராட்டத்தின் அடிநாதமாக இருந்தது. இமாம் கொமெய்னி நாடு திரும்பி பத்து நாட்களில் அதாவது, 1979 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இஸ்லாமிய அரசொன்றை நிறுவினார்.

இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இஸ்லாமிய அரசை எவ்விதத்திலாவது வீழ்த்தியே ஆகவேண்டும் எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. புரட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் ஈராக்கின் சதாம் ஹுசைனை அமெரிக்கா தூண்டியது மட்டுமல்லாமல் தீவிரமாக ஆதரித்தது. ஆனால் எட்டு வருட போருக்குப் பிறகு, சதாம் போர்நிறுத்தத்தை ஏற்க வேண்டியிருந்தது மற்றும் சதாம் ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் கீழ் அமெரிக்க வெளியுறவு செயலாளராகவும், ஜனாதிபதிகள் ரிச்சர்ட் நிக்சனின் கீழ் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகவும் இருந்த Alexander Meigs Haig Jr இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

ஜனாதிபதி கார்ட்டர் ஈரானுக்கு எதிரான போரை ஃபஹ்த் மூலம் தொடங்க ஈராக்கியர்களுக்கு பச்சை விளக்கு காட்டினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹெய்க்கின் தகவலின்படி, சவூதி இளவரசர் ஃபஹ்த் (பின்னர் மன்னர் ஃபஹ்த்) மத்திய கிழக்கில் அமெரிக்க கையை வலுப்படுத்த வேண்டும் என்று நம்புவதாகவும், தடைப்பட்ட பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு, சதாமின் படையெடுப்பிற்கு அனுமதி வழங்கினார். உண்மை என்னவென்றால், ஜிம்மி கார்ட்டர், சமாதானம் செய்பவர் போல் காட்டிக்கொண்டு போரை ஊக்குவித்தார்.

59வது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அலெக்சாண்டர் ஹெய்க் வெளியிட்டுள்ள அறிக்கை, ஈரான் மீது படையெடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டர் சதாம் ஹுசைனுக்கு பச்சை சமிக்ஞை கொடுத்ததைக் குறிக்கிறது.

http://echoofislam.itfjournals.com/article_1738_0.html