Contributors

Sunday, July 14, 2019

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இல்லை


Iran will never submit to US's tantrums

ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை இல்லாதொழிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது கண்கூடு.

ஆரம்ப காலம் தொட்டே பொருளாதாரத் தடை, யுத்த திணிப்பு, ராணுவ அச்சுறுத்தல், ஆட்சி கவிழ்ப்பு சதி, உள்நாட்டு கலகங்கள் என்று எத்தனையோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டனர். எதிலும் அவர்களால் இன்றளவிலும் வெற்றிபெற முடியவில்லை.
திணிக்கப்பட்ட யுத்தம் நல்ல அனுபவத்தையும் பெற்று கொடுத்தது. தன் நிலையை சரியாக புரிந்துகொண்ட ஈரானிய தலைவர்கள் தமக்கு அத்தியாவசியமான அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முடிவில் உறுதியாய் இருந்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். குறிப்பாக தமது தேசிய பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஆயுதங்களையும் உற்பத்தி செய்து, அடுத்தவர் தயவில் வாழும் நிலையில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் இஸ்லாமிய குடியரசின் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. இதற்காக அது பல போலியான காரணங்களை முன்வைத்தும் வருகிறது. அமெரிக்காவினது நோக்கம் சூழவுள்ள பிற்போக்குவாத அரபு ஆட்சியாளர்களை போன்று ஈரான் இஸ்லாமிய குடியரசும் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்பதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அதனை வளரவிடக் கூடாது என்பதுமாகும்.
ஈரானின் அணு ஆராய்ச்சி சிவிலியன் தேவைக்காக அன்றி வேறில்லை என்பதை ஈரானிய தலைவர்கள் பல முறை ஆணித்தரமாக கூறியுள்ளனர். மேலும் ஈரான் அணுவாயுத பரம்பல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது என்பது மட்டுமல்லாமல் IAEA எனும் ஐ.நா.அமைப்பின் தீவிர கண்காணிப்பின் கீழும் உள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் அவ்வொப்பந்தத்தை மீறவில்லை என்று அவ்வமைப்பு கூட உறுதிப்படுத்தியுள்ளது.
"மனித பேரழிவை ஏற்படுத்தும் அணுவாயுத தயாரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால் அது ஹராம்" என்று ஈரானின் அதி உயர் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் காமனேய் பத்வாவும் வழங்கியுள்ளார்.
எனினும், உலக நாடுகளின் அச்சத்தை போக்குவதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு, பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளின் பின், அமெரிக்கா உட்பட உலகின் பலம் வாய்ந்த ஆறு நாடுகளுடன் இணைந்து - அனைத்து சட்டவிரோத பொருளாதாரத் தடைகளும் அகற்றப்படும் என்ற நிபந்தனைகளின் கீழ் - 2015ம் ஆண்டு ஜெனீவாவில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அப்போது 20% அணு செறிவாக்கல் நிலையை எட்டியிருந்த ஈரான், அதனை 3.67% அளவுக்கு குறைத்துக் கொள்ளவும் இணங்கியது.

இவ்வாறு இருக்கையில் தான் கடந்த ஆண்டு அமேரிக்கா அவ்வொப்பந்தத்தில் இருந்து தாம் வெளியேறுவதாகக் கூறி தன்னிச்சையாக விலகிக்கொண்டது மட்டுமல்லாமல் சர்வதேச மரபுகள் அனைத்தையும் மீறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இல்லை.  இந்த பொருளாதார தடைகளினால் ஈரான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறது என்பது உண்மையே. இருந்தாலும் இந்த சோதனைகள் அனைத்தையும் சமாளிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு என்பதை அதன் புரட்சிக்கால வரலாறு பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஈரானிடம் அச்சுறுத்தல்கள் மூலம் காரியம் சாதிக்க முடியாது என்பதையும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் எனும் ஒரு தெளிவான செய்தியை, அமெரிக்க ராணுவ ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியன் மூலம் ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. 

அமெரிக்கா வரை சென்று ஈரானால் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும் ஈரானை சூழவுள்ள அமெரிக்க ராணுவத்தலங்களையும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்களையும் மேலும் அமேரிக்கா காப்பாற்ற நினைக்கும் இஸ்ரேலையும் தாக்கி பாரிய சேதங்களையும் விளைவிக்கும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு என்பதை அமேரிக்கா நன்கு அறிந்து வைத்துள்ளது.

அதனது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இஸ்லாமிய குடிரசு தனது முழு வலிமையையும் பயன்படுத்தும் என்பதை அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் ஊடாக அது நன்கு உணர்த்தியுள்ளது.

இந்த விமான இழப்பு அமெரிக்காவுக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அமேரிக்கா, தனது முகத்தை காப்பாற்றிக்கொள்ள, ஈரானில் முக்கியமற்ற ஒரு சில இடங்களை தாக்குவதற்கு ஈரானிடமே அனுமதி வேண்டி, மூன்றாம் தரப்பு ஒன்றை தூதனுப்பும் வெட்கம் கெட்ட செயலையும் செய்துள்ளது.

இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானை நோக்கி, "தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், எந்த முன்நிபந்தனையும் இன்றி பேசுவோம்" என்று திரும்பத்திரும்ப அழைப்பதாகும். இந்த அழைப்பை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது.
இது இவ்வாறு இருக்கையில், JCPOA எனும் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐரோப்பிய தரப்பினருக்கு ஒப்பந்தத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை கௌரவிக்க ஈரான் 60 நாள் காலக்கெடு கொடுத்தது. ஐரோப்பிய தரப்பினர் அதனை மதிக்கத் தவறியதால் இஸ்லாமிய குடியரசு அதன் யுரேனியம் செறிவூட்டல் நிலையை, 2015 ல் ஜெனீவாவில் ஒப்புக் கொண்ட 3.67 சதவீத வரம்பிலிருந்து 5 வீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 
மொசாட் மற்றும் சிஐஏ முகவர்களால் பல அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், அதன் யுரேனியம் செறிவூட்டல் அளவை 20 சதவீதமாக உயர்த்திய ஈரான், பின்னர் அதை தரமிறக்க இணங்கியது, குறிப்பாக வியன்னாவை தளமாகக் கொண்ட சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை மீண்டும் உறுதிப்படுத்திய நிலையிலும், அமெரிக்கா மற்றும் சக்தி வாய்ந்த மூன்று ஐரோப்பிய நாடுகள் (பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) உட்பட மேற்கு நாடுகள் தாங்கள் உறுதியளித்த அனைத்து தடைகளையும் நீக்காமல் ஈரானை ஏமாற்றலாம்அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம், அதன் அணு ஆய்வை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டன.
மேலும், உலகின் அதி பயங்கர அணுவாயுதங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதைத் தொடர்ந்து விஷயங்கள் மோசமான நிலைக்கு திரும்பின. ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அவர், தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் அழைப்பதானது தம்மை ஏமாற்ற நினைக்கும் மற்றுமொரு சதியாகவே ஈரான் கருதியது.
ட்ரம்ப் உடன் அவரது குண்டர்கள் குழுவும் ஈரான் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன்ஈரானை அச்சுறுத்தும் வகையில் பிராந்தியத்தில் அவர்களின் இராணுவ பலத்தையும் காட்சிப்படுத்தவும் துவங்கின. அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மூன்று ஐரோப்பிய நாடுகளும் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. ஐ.நா.வின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மீறப்படுவதை பற்றி ஐ.நா.வும் அலட்டிக்கொள்ளவில்லை.
குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் கல்லறையை நோக்கி செல்வதை உணர்ந்த இஸ்லாமிய குடிரசுசம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்பந்தத்தை மதிக்குமாறு 60 நாட்கள் கெடு கொடுத்தது. எனினும் அவர்கள் தமது கடமையினை மதிக்க தவறினர். ஈரான் வேறு வழியின்றி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் சதவீதத்தை அதிகரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முறுகல் நிலைக்கான முழு பொறுப்பையும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளுமே எடுக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும், ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனது அணு ஆய்வை சிவிலியன் தேவைக்காக அன்றி, ஒருபோதும் அணு ஆயத்தங்களை நோக்கி நகர்த்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.


-       -  தாஹா முஸம்மில்




Sunday, July 7, 2019

ஈரானின் பண்டைய பொறியியல் அற்புதம் 'யக்சால்'


Iran's ancient engineering marvel Yakhchāl

'யக்சால்' ஒரு பண்டைய பாரசீக குளிர்சாதன பெட்டிஆகும், இது மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே உணவு மற்றும் பனியை கூட சேமித்து வைக்க உதவியது.
நவீனகால மனிதகுலத்துடன் ஒப்பிடும்போது பண்டைய மனித நாகரிகங்கள் அவ்வளவாக வளர்ச்சியடைந்து இருக்கவில்லை என்று யாராவது வாதிட முயற்சித்தால், எமது முன்னோர்கள் எவ்வாறான வியத்தகு தொழில்நுட்பங்களை  பயன்படுத்தினர் என்பதற்கு ஆதரவாக சில எடுத்துக்காட்டுகளை நாங்கள் கண்டுபிடித்தோம். அவர்கள், பல சமயங்களில், அவர்கள் கண்டுபிடித்த அக்கால  தொழில்நுட்பத்தின் தனித்துவமானவர்கள் என்பதோடு அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் அதனை பயன்படுத்தி உள்ளனர்.

பொறியியலைப் பொறுத்தவரை, எகிப்தின் பிரமிடுகள், கெமர் சாம்ராஜ்யத்தின் அங்கோர் வாட் அல்லது துருக்கியின் கபடோசியா பிராந்தியத்தில் உள்ள டெரிங்குயு போன்ற முழு நிலத்தடி நகரங்களாக இருந்தாலும், ஒவ்வொரு கண்டத்திலும் கட்டடக்கலை அதிசயங்கள் எங்கும் காணப்படுகின்றன.
ஸ்மார்ட் மற்றும் நிலையான பொறியியலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மத்திய கிழக்கிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக இருப்பதற்கும் மனித கலாச்சாரங்களை வளர்ப்பதற்கும் பெயர் பெற்றது. அங்கு, கி.மு. 4 ஆம் நூற்றாண்டில், பண்டைய பாரசீகர்கள் ' யக்சால்' என்று அழைக்கப்பட்ட கட்டட அமைப்பை உருவாக்கினர்.
யக்சால் ஒரு கல்லறையாகவோ, மன்னரையாகவோ அல்லது புதைகுழியாகவோ அல்லது மக்கள் தாங்கும் இடமாகவோ இருக்கவில்லை. அதற்கு பதிலாக கடுமையான கோடைகாலத்தில் வேறொரு முக்கியமான தேவையை அது நிறைவேற்றியது. அதிகப்படியான வெப்பமும் மற்றும் வறண்ட காலநிலையும்  இப்பகுதியில் வசித்த மக்களை வாட்டி வதைத்தன. ஆகவே பண்டைய பாரசீகர்களுக்கு, கோடை காலங்களில் உணவை குளிர்விக்கவும் சேமிக்கவும் சில வழிமுறைகள் தேவைப்பட்டன, யக்சால்கள் அதற்கான தீர்வை வழங்கின. யக்சால் என்ற சொல் "பனி குழி" என்பதைக் குறிக்கிறது. இந்த வியக்கத்தக்க கட்டிட அமைப்பு பனியை (ஐஸ்) மட்டுமல்லாமல் பல வகையான உணவுகளையும் சேமித்து வைக்கக்கூடிய சீதோஷ்ண நிலையை வழங்கி, பல்வகையான உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுவிடும் நிலையில் இருந்து காத்தது.

வெளிப்புறத்தில், ஒரு யக்சால் அமைப்பு அதன் குவிமாட வடிவத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்டமாக காட்சியளிக்கும். ஆனால், சுட்டெரிக்கும் பாலைவன பிரதேசத்தில், யக்சால் கட்டிடத்தின் உள்ளே, அதன் நிலத்தடி அறைகளில் பனி மற்றும் உணவு பொருட்களை குளிர்ச்சியாகவோ அல்லது உறைந்து போகவோ கூட செய்யும்.

பண்டைய பாரசீகர்கள் பாலைவனத்தின் நடுவில் பனியை கட்டியாக சேமித்து வைத்தனர் என்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகத் தோன்றலாம், ஆயினும்  அவர்களின் தொழில்நுட்பம், சாராம்சத்தில் அவ்வளவு சிக்கலானதாக இருக்கவில்லை.

பொதுவாக ஒரு யக்சால் கட்டிடம் சுமார் 60 அடி உயரம்  கொண்டதாகவும், உள்ளே சேமிப்பதற்கான சுமார் 6000 கனமீட்டர் அளவில் இருக்கும். கட்டமைப்புகளுக்குள் இருக்கும் குளிரூட்டும் முறை காற்றை உள்ளீர்த்து, 'கனாட்' எனப்படும் நிலத்தடி நீரூற்றின் மூலம் இடம்பெறுகிறது. https://thoothu2018.blogspot.com/2018/11/3000-qanat.html

இந்த குளிரூட்டல் முறையானது யக்சலுக்குள் வெப்பநிலை எளிதில் குறைய செய்து, ஒரு பெரிய குளிர்சாதன பெட்டியின் உள்ளே நிற்பது போன்ற குளிர்ச்சியான உணர்வைத் தருகிறது. அதன் சுவர்கள் மணல், களிமண் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் ஆட்டின் மயிர் போன்ற பிற கூறுகளை கொண்ட ஒரு சிறப்பு மூலப்பொருளை பயன்படுத்தி, வெயிலிலிருந்து பாலைவன பகல் நேர உஷ்ணமோ அல்லது சூரிய ஒளியோ  உள்ளே புகாதவாறு திறமையான முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்த கட்டமைப்புகள் அவற்றின் கீழே அகழிகளைக் கொண்டிருந்தன. உருகிய பனியிலிருந்து வரும் நீரை சேகரிக்க கூடியதாகவும் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. சேகரிக்கப்பட்ட இந்த நீர் பின்னர் இரவு நேர பாலைவன குளிர்ந்த வெப்பநிலையை பயன்படுத்தி பனிக்கட்டியாக சேமிக்கப்பட்டது. இது ஒரு மீள்சுழற்சி முறையாகும்.

அரச உயர் மாநில அதிகாரிகளுக்கும் யக்சல்கள் அடிப்படை உணவு வளங்கள், உபசரிப்புகள் மற்றும் பனிக்கட்டிகளை சேமித்து வழங்கியது மட்டுமல்லாமல், இந்த சேவையை சமூகத்தின் மிகவும் ஏழ்மையானவர்கள் கூட அடையக்கூடியதாக இருந்தது. நவீன காலங்களில் யக்சால்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் சில கட்டமைப்புகள் பாலைவன புயல்களால் சேதமடைந்து அரிக்கப்பட்டு அழிந்து போய் உள்ளன என்றாலும் ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளான தஜிகிஸ்தான் போன்ற இடங்களில் அப்படியே இருப்பதை காணலாம்.

நவீன கால சமையலறைகளில் காணப்படும் குளிர்சாதனப் பெட்டிகளைக் குறிக்கும் பொதுவான சொல்லாக யக்சால் என்ற வார்த்தையின் பயன்பாடு இப்பகுதியில் இன்றளவிலும் நீடிக்கிறது.




Wednesday, July 3, 2019

ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடப்பதே சகல தரப்பினருக்கும் சிறந்ததாகும்.


It is best for all parties to respect the agreement 
reached with Iran

அமேரிக்கா வல்லரசு என்பதால் எல்லா நாடுகளும் அதற்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானிடம் பலிக்கவில்லை.
ஈரானின் நவீன வரலாற்றிலிருந்து ஒருவர் எதையும் கற்றுக் கொள்ள முடிந்தால், ஈரானியர்கள் தமது பாதுகாப்புக்கு வல்லரசுகளின்  தங்கியிராமல்  தங்களை நம்பியிருக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்வார். இந்த வல்லரசுகள் தங்கள் சொந்த நலனுக்காக ஒரு கணத்தின் அறிவிப்பில் எல்லா வாக்குறுதிகளையும் விற்றுவிடுவார்கள் - ஏமாற்றிவிடுவார்கள் - என்பது ஈரானியர் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
ஏகாதிபத்தியம் உலகில் ஏற்படுத்திய சேதத்தின் பாரிய பங்கை ஈரானும் அனுபவித்தது - கஜார் ஆட்சி காலத்தில் ஈரான் மீது ரஷ்ய மற்றும் பிரிட்டிஷ் கூட்டு கட்டுப்பாடு, பின்னர் 1917-19க்கு இடையில் முதலாம் உலகப் போரில் ஈரானின் நடுநிலைமையை எதிர்த்து, பிரிட்டிஷ் படை ஆக்கிரமிப்பதன் மூலமும் உணவுப்பொருட்களை பறிமுதல் செய்வதன் மூலமும்  ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தின் காரணமாக ஈரானிய மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் (பாரி ரூபினின் தி மிடில் ஈஸ்ட்: அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்திற்கான வழிகாட்டி, பக். 508)
இதைத் தொடர்ந்து 2ம் உலக யுத்தத்திலும் சதித்திட்டம் நடத்தியது. இந்த யுத்தத்தில் ஈரான் நடுநிலை வகித்தபோது, அப்போதிருந்த ஆட்சியை சதித்திட்டத்தின் மூலம் கவிழ்த்து, முகமது ரிஸா ஷாவை ராஜ்யத்தின் அரியணையில் அமர்த்தியது. ஈரானிய எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கியதன் காரணமாக ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்த  முஸத்தேக்  அரசாங்கத்தை கவிழ்த்து, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு சதியின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை நாம் குறிப்பிட தேவையில்லை.
 வெளிநாட்டு சக்திகளால் முறியடிக்க முடியாது போனது, 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி ஊடாக மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதில் ஈரான் வெற்றிபெற்ற அந்த நேரத்திலாகும். அதன்பிறகு கூட, அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் பாரசீக வளைகுடாவின் அரபு நாடுகள் கூட ஈரானுக்கு எதிராக சதாம் ஹுசைனை தூண்டி, போரில் அவருக்கு எல்லா உதவிகளையும் செய்தன. அவருக்கு ஆயுதங்கள் மற்றும் ரசாயன ஆயுதங்கள் மற்றும் உளவுத்தகவல்களை வழங்கி சதாம் ஹுசைனை ஊக்குவித்தன.
எச்சரிக்கை நிலையில் பெற்ற ஒரு பாடம்
இந்த வரலாற்று நிகழ்வுகளை (இன்னும் பல நிகழ்வுகளை) கணக்கில் எடுத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் பிற உலகளாவிய சக்திகள், அதாவது காலனித்துவ வரலாற்று சாதனை படைத்தவர்கள் எடுக்கும் எந்தவொரு நகர்வுகளிலும் ஈரானியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதில் ஆச்சரியமில்லை. விரிவான கூட்டு செயல் திட்டம் (JCPOA அல்லது ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்) ஈரானுடனான உறவுகளில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை, மிகச் சிறப்பான ஒன்றாக சரித்திரத்தில் பதிந்திருக்கக் கூடும், ஆனால் அதற்கு பதிலாக, ஐரோப்பியர்கள் ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறின.
அமெரிக்கர்கள், ட்ரம்பின் ஈரான் கொள்கை காரணமாக ஒப்பந்தத்தை விட்டு விலகினர். அது மட்டுமல்லாமல், ஐரோப்பியர்கள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்குப் பதிலாக, ஈரானிடம் இருந்து இன்னும் பால் கறக்க முயற்சிக்கிறார்கள் - ஈரான் ஏற்கனவே செய்து முடித்த ஒப்பந்தத்திற்கு அதிகமானவற்றை வழங்கினால், அவர்கள் தங்கள் கடமைகளுக்கு கட்டுப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். இதன் பொருள் என்னவென்றால், இராணுவமயமாக்கல் அதிகரித்து இருக்கும் நிலையில், பாரசீக வளைகுடா அரபு முடியாட்சிகளின் நன்மைக்காக, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தில் சலுகைகளைச் சேர்க்குமாறு அவர்கள் கேட்கிறார்கள். இது பிராந்தியத்தின் சமீபத்திய பதட்டங்களுக்கு காரணமாகும்.
அத்தகைய கொந்தளிப்பான சுற்றுப்புறத்திலும் - அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சமீபத்தில் கிழக்கு மற்றும் மேற்கில் அதன் அண்டை நாடுகளை ஆக்கிரமித்து இராணுவ தளங்களை கட்டியுள்ள இடத்தில் - பிராந்தியத்தின் மிகவும் நிலையான நாடான ஈரான், தன்னுடைய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் சலுகைகளை வழங்குவதை விட, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு மற்றும் தற்காப்பு திறன்களை நம்பியிருப்பது மிக சிறந்த உத்தியாகும்.
ஏற்கனவே கூறப்பட்ட விடயங்களைப் பார்க்கும்போது, பொய்யுரைக்கும் வரலாற்றைக் கொண்ட, அவர்களின் ஒப்பந்தங்களுக்கு இணங்கவில்லையெனில், பிற மக்களின் இழப்பில் தங்கள் சொந்த பொருளாதார நலன்களை அதிகரித்துக்கொள்ள  போருக்குச் செல்லும் பல நாடுகளை ஈரான் சமாளிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட  பஞ்சத்தை ஒருவர் மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதால் 20 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் செத்து மடிந்தனர். இதைக் குறிப்பிடுகையில் சர்ச்சில்: நான் இந்தியர்களை வெறுக்கிறேன்; அவர்கள் மிருகத்தனமான மதத்தைக் பின்பற்றும் மிருகத்தனமான மக்கள்; முயல்களைப் போல இனப்பெருக்கம் செய்த அவர்களுடைய சொந்த தவறே பஞ்சத்துக்கான காரணம் என்று கூறினார். இந்த வல்லரசுகளின் இயல்பே இதுதான்.
ஈரான் கடைபிடித்த புத்திசாலித்தனமான உத்தி
RQ-4 ஆளில்லா உளவு விமானத்தை (ட்ரோனை) வீழ்த்துவதில் ஈரான் ஒரு புத்திசாலித்தனமான உத்தியை கையாண்டது. அவ்வாறு செய்வதன் மூலம், ஆக்கிரமிப்பாளனுக்கு - அமெரிக்கா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பு அல்லது தேசிய கௌரவம் என்ற விடயங்களில் சமரசம் செய்யத் தயாராக இல்லை - என்று எச்சரிக்கை விடுப்பதில் தெஹ்ரான் வெற்றிகரமாக காய் நகர்த்தியது.
ஈரான் ஒரு யுத்தத்தை விரும்பவில்லை. பொதுவாக, இராணுவ கண்காணிப்பு ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது பதற்றம் அதிகரிக்க வழிவகுக்குமேயன்றி இராணுவ விரிவாக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை ஈரான் அறியும். (சர்வதேச வான்பரப்பிலேயே தனது விமானம் பறந்தது என்று அமெரிக்கா கூறினாலும் அமெரிக்க மண்ணிலிருந்து 8000 மைல் தொலைவில் அமெரிக்க விமானத்தின் சிதைந்த பகுதிகள் ஈரானிய அதிகாரிகளால் ஈரானிய கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அமேரிக்கா வல்லரசு என்பதால் எல்லா நாடுகளும் அதற்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் ஈரானிடம் பலிக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.).
இந்த முடிவின் புத்திசாலித்தனம் என்னவென்றால், ஈரான் இராணுவ மோதலுக்கு  வழிவகுக்காது, வழங்கவேண்டிய செய்தியை கச்சிதமாக வழங்கியது. ட்ரோன் உடன் சென்ற, 38 அமெரிக்க ராணுவ வீரர்கள் அடங்கிய விமானத்தை சுட்டு வீழ்த்தியிருந்தால் அது நிலைமையை மோசமாக்கி இருக்கும். ஈரானுக்கு வேண்டப்பட்டதெல்லாம் ஒரு தெளிவான எச்சரிக்கையை ட்ரம்புக்கு வழங்கவேண்டும் என்பதே ஆகும். இது ட்ரம்பிற்கு தெளிவாக கிடைத்துவிட்டது.
ட்ரோனுடன் கூடவே 38 ராணுவ வீரர்களுடன் பறந்த விமானத்தை சுட்டு வீழ்த்துவதை ஈரான் தவிர்த்தது. அதற்காக ட்ரம்ப் ஈரானிய அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார் .
(இருப்பினும் "சர்வதேச வான்பரப்பில்" பறக்கும் விமானமாக இருந்திருந்தால்  ஈரானிய அதிகாரிகளுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது என்பது இங்கு கவனிக்கத்தக்கது).
அதோடு, ஈரான் தனது எல்லைக்கு அருகில் பறக்கும் எந்தவொரு விமானத்தையும் அடையாளம் காணும் உரிமையைக் கொண்டுள்ளது. ஈரானின் வான் எல்லைக்கு 12 கடல் மைல் வரை அனுமதியற்று பறக்கும் எந்த விமானத்தையோ ட்ரோனையோ சுட்டு வீழ்த்தும் சட்டப்பூர்வ உரிமை ஈரானுக்கு உண்டு. மனித உயிழப்புகளின்றி நடத்தப்பட்ட ட்ரோன் மீதான ஈரானின் தாக்குதல், பதிலடி கொடுக்கும் எந்த சட்டபூர்வ அதிகாரத்தையும்  அமெரிக்காவுக்கு அளிக்காது. (அமெரிக்க வான் எல்லை அதன் நில எல்லையில் இருந்து 200 மைல் வரை நீண்டுள்ளது. தமது எல்லைக்கு இவ்வளவு நெருக்கமாக பறக்கும் அடையாளம் காணப்படாத ட்ரோனை அமெரிக்காவும் அநேகமாக சுட்டு வீழ்த்தியிருக்கும்.)
இன்னும் சொல்வதென்றால், தனது சொந்த திறன்களை நம்பியிருப்பதன் மூலம் சுயாதீனமாக அடைய முடிந்ததை ஈரான் மற்ற நாடுகளுக்கு தெளிவாகக் காட்டியது எனலாம். ஈரான் உலகின் முன்னணி இராணுவ சக்தியின் விமானத்தை அதன் வான்வெளியை மீறியதற்காக தயக்கமின்றி சுட்டு வீழ்த்தியதன் மூலம் அதனது இறையாண்மையை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்ற செய்தியை தெளிவாக உணர்த்தியுள்ளது.
அமேரிக்கா ஈரானை அதன் இராணுவ வலிமை மற்றும் பிராந்திய பிரசன்னத்தைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது என்றாலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களையும், 25,000 அமெரிக்க துருப்புக்களையும் ஈரானின் இலக்கு வரம்பிற்குள் வைத்திருப்பதன் மூலம் அமேரிக்கா அதன் பலத்தை பலவீனமாக மாற்றியுள்ளது.
ஈரானுடனான ஒரு போர் பிராந்தியத்தில் பேரழிவினை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஈரானுடனோ, ஹிஸ்புல்லாஹ்வுடனோ அல்லது அன்ஸாருல்லாஹ்வுடனோ மேற்கொள்ளப்படும் போர் நிச்சயமாக எவருக்கும் எந்த நன்மையையும் பயக்காது.
ஈரான் தன் வல்லமையை இதுவரை முழுமையாக வெளிக்காட்டவில்லை. சதிகார அரபு முடியாட்சிகளுக்கு ஈரான் எந்த அதிர்ச்சி வைத்தியத்தை வைத்துள்ளது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.
இப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக ஈரானுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை மதித்து நடப்பதே சகல தரப்பினருக்கும் சிறந்ததாகும்.
கட்டுரையாளர் கரீம் ஷராரா ஒரு லெபனான் PhD மாணவர், இவர் 2013 முதல் தெஹ்ரானில் வசித்து வருகிறார், ஈரானிய விவகாரங்களை மையமாகக் கொண்டு தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.