Contributors

Wednesday, August 27, 2025

அல்-அக்ஸா நினைவுகூரல்: உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களைப் பாதுகாக்கும் நாள்

 Al-Aqsa remembered: Day to protect mosques worldwide


Al-Aqsa remembered: Day to protect mosques worldwide

பள்ளிவாசல்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக மையங்களாக, வழிகாட்டுதலின் முக்கிய அமைப்பாக செயல்பட வேண்டும், அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மத பின்னணியைச் சேர்ந்த மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதையே உலக மஸ்ஜித் தினம் மையப்படுத்துகிறது.

 

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆலோசனை மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஒப்புதலின் பேரில், அல்-அக்ஸா மஸ்ஜித் எரிக்கப்பட்ட ஆண்டு நிறைவான ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சர்வதேச மஸ்ஜித் தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

 

ஆகஸ்ட் 21, 1969 அன்று ஆஸ்திரேலிய கிறிஸ்தவ சியோனிஸ்டான டெனிஸ் மைக்கேல் ரோஹனால் அல்-அக்ஸா மஸ்ஜித் மீது நடத்தப்பட்ட தீ வைப்பு தாக்குதலின் ஆண்டு நினைவுகூரல் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயத்துல்லாஹ் இமாம் கொமெய்னி அவர்களால் உலக மஸ்ஜித் தினம் நிறுவப்பட்டது.

 

குத்ஸில் அமைந்துள்ள மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான அல்-அக்ஸா மஸ்ஜித் மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மதீனாவில் உள்ள மஸ்ஜிதுல் நபவிக்கு அடுத்தபடியாக இஸ்லாத்தின் மூன்றாவது புனித தளமாகும். இருப்பினும், அல்-அக்ஸா மஸ்ஜித் சியோனிச குடியேற்றக்காரர்களால் தொடர்ந்து அவமானங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகிறது, மேலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் அனைத்து பாலஸ்தீனர்களையும் புனித தளத்திற்குள் நுழைவதைத் தடுக்கின்றனர். இந்த வளாகம் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் இடையிலான பதட்டத்தின் வெடிப்பு புள்ளியாக உள்ளது, மத விடுமுறை நாட்களில் அடிக்கடி மோதல்கள் வெடிக்கின்றன. சியோனிச ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்தீனிய விடுதலைக்கான நீண்டகால போராட்டத்தில் புனித மஸ்ஜித் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகிறது, ஆட்சி அடிக்கடி அல்-அக்ஸா மஸ்ஜித் மீது தாக்குதல்களுக்கு உத்தரவிடுகிறது.

 

17 ஆகஸ்ட் 2024 இல் இஸ்ரேலிய ஆட்சி கடலோரப் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் கூட விட்டுவைக்கவில்லை, கண்மூடித்தனமாகவும் இலக்கின்றியும் அவற்றின்மீது குண்டுகளை வீசியது. விடியற்காலையில் தொழுகையின் போது தராஜ் மாவட்டத்தில் உள்ள அல்-தாபினில் உள்ள ஒரு மஸ்ஜிதில் இஸ்ரேலிய ஆட்சி குண்டு வீசியதில் குறைந்தது 100 பேர் வரை கொல்லப்பட்டனர், அவர்களில் பலரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

 

2024 உலக மஸ்ஜித் தினம் கொண்டாடப்படும் நிலையில், அவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை கடந்த 320 நாட்களில் காசாவில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை குண்டுவெடிப்பில் மொத்தம் 610 மஸ்ஜித்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக காஸா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

அக்டோபர் 7, 2024 முதல், இஸ்ரேலிய ஆட்சி மஸ்ஜித்கள் உட்பட காசாவின் ஒவ்வொரு பகுதியிலும் குண்டுவீசி வருகிறது. காசா ஊடக அலுவலகத்தின் கூற்றுப்படி, 2024 இல் கடந்த 11 மாதங்களில் மொத்தம் 824 மசூதிகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன, இதில் 610 மஸ்ஜித்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

 

2019 ஆம் ஆண்டின் பாலஸ்தீனிய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, காசா பகுதியில் 1,117 மஸ்ஜித்கள் இருந்தன, அதாவது இதுவரை அனைத்து மஸ்ஜித்களிலும் 55 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன.

 

காசாவின் பெரும்பான்மை முஸ்லீம் மக்களுக்கு அவற்றின் மத முக்கியத்துவத்திற்கு அப்பால், இந்த மஸ்ஜித்களில் பல பெரும் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனெனில் அவற்றின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது.

 

இஸ்லாமிய சமூகங்களில் மஸ்ஜித்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன, அவை மரியாதைக்குரியவை, அதன் தூய்மையை கெடுத்தல் மற்றும் இழிவுபடுத்துதல் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை ஆழமாக புண்படுத்துகிறது.

 

உலக மஸ்ஜித் தினம் அல்-அக்ஸா மஸ்ஜித் தீ வைப்பு தாக்குதலை நினைவுகூருகிறது, இது மத தள பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

 

ஆகஸ்ட் 21, 1969 அன்று, முஸ்லிம்களின் முன்னாள் மற்றும் முதல் கிப்லா என்ற முக்கியத்துவம் வாய்ந்த இடமான அல்-அக்ஸா மஸ்ஜித் ஒரு தீவிரவாதியின் தீ தாக்குதலுக்கு உட்பட்டது. தீ கிட்டத்தட்ட 1500 சதுர மீட்டர் பரவி மஸ்ஜிதை மிகையாக சேதப்படுத்தி, வரலாற்று அம்சங்களை அழித்தது மற்றும் கட்டமைப்பு சரிவை ஏற்படுத்தியது, இஸ்லாமிய நாடுகளின் சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியது.

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன் 271ம் தீர்மானத்தின் அடிப்படையில் இத் தாக்குதலுக்கு காரணியான இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தது. உலக மஸ்ஜித் தினம் இப்போது அல்-அக்ஸா மஸ்ஜிதின் முக்கியத்துவத்தையும் அதை இஸ்லாத்தின் மூன்றாவது புனித தளமாக எடுத்துக்காட்டுகிறது.

 

மஸ்ஜித் என்பது இஸ்லாமிய தொழுகை இல்லம் ஆகும், இது அரபு மொழியில் "ஸஜ்தா செய்யும் இடம்" அல்லது "சிரம் பணிந்த இடம்" என்பதிலிருந்து பெறப்பட்டது. ஆரம்பகால மஸ்ஜித்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா முற்றத்தை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

 

வயதெல்லையை பொருட்படுத்தாது அனைத்து முஸ்லிம்களுக்கும் வழிகாட்டுகின்ற மற்றும் தொடர்புகளை வளர்க்கின்ற பள்ளி வாசல்கள் வழிபாட்டுத் தலங்களாகவும், சமூகக் கூட்டங்கள் ஒன்று சேரும் புனித ஸ்தலமாகவும் போற்றப்படுகின்றன.

 

இஸ்லாமிய வரலாறு முழுவதும், மஸ்ஜித்கள் புனிதமாகவும், ஆன்மீகத்திற்கும் லௌகிகத்திற்கும் இடையிலான இணைப்பை உறுதிப்படுத்தும் பாலமாகவும் மற்றும் மனிதனின் ஆன்மீக வளர்ச்சியை மேம்படுத்தும் மையமாகவும் மதிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லீம் உலகை பாதிக்கும் சமூக, அரசியல் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதிப்பதற்கான மன்றங்களாக அவை செயல்படுகின்றன.

Al-Aqsa remembered: Day to protect mosques worldwide

ஈரானில் ஏராளமான மஸ்ஜித்கள் மற்றும் புனித ஸ்தலங்கள் உள்ளன, அவற்றின் சமச்சீர் வடிவமைப்புகள், வடிவியல் அலங்காரங்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களுக்கு புகழ் பெற்றவை. நசீர் அல்-முல்க் மஸ்ஜித், ஷேக் சஃபி அல்- தீன் கானேகா, ஷா-இ செராக் மஸ்ஜித், இமாம் மஸ்ஜித், யாஸ்தின் ஜாமே மஸ்ஜித், வகீல் மஸ்ஜித், தப்ரீஸின் நீல மஸ்ஜித், கோஹர் ஷாத் மஸ்ஜித், ஆகா போசோர்க் மஸ்ஜித் மற்றும் ஜம்கரன் மஸ்ஜித் ஆகியவை முக்கிய எடுத்துக்காட்டுகள்.

 

மஸ்ஜித் கட்டிடக்கலை பிராந்திய ரீதியாக வேறுபடுகிறது, பொதுவாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் உள்ளூர் மரபுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிப்லாவை (மக்காவின் திசையை) குறிக்கும் ஒரு மாடமான மிஹ்ராப் மற்றும் பிரசங்கங்களை வழங்குவதற்கான பிரசங்க மேடையான மிம்பர் போன்ற சில அம்சங்கள் வேறுபடுவதில்லை, அவை ஒத்த மாதிரியைக் கொண்டுள்ளன. மினரத்கள், தொழுகைக்கான அழைப்பு (அதான்) அறிவிக்கப்படும் உயரமான கோபுரங்களும் பொதுவான அம்சங்களாகும். வுழு செய்வதற்கான தூய்மை வசதிகள் அவசியம் கொண்டிருக்கும்.

 

எழுத்தணிகலை, வடிவியல் அலங்காரங்கள் மற்றும் மலர் உருவங்கள் பெரும்பாலும் மஸ்ஜித் சுவர்களை அலங்கரிக்கின்றன, இது இஸ்லாமிய கலை மரபுகளைப் பிரதிபலிக்கிறது. இந்த அலங்கார கூறுகள் பிரதிநிதித்துவ உருவகங்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக அருவமான வடிவமைப்புகள் மற்றும் குர்ஆனின் வசனங்களில் கவனம் செலுத்துகின்றன.

 

மஸ்ஜித்களின் இடம் சார்ந்த அமைப்பு கூட்டு பிரார்த்தனையை அனுமதிக்கும் முகமாக பொதுவாக ஒரு பெரிய, திறந்த தொழுகை மண்டபத்தை முக்கியமாக கொண்டுள்ளது. பள்ளிவாசலில் அமைதியான மற்றும் ஆன்மீக சூழலை உருவாக்குவதற்கு இயற்கை ஒளி பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது, பள்ளிவாயில் முற்றங்கள் பிரார்த்தனை மற்றும் சமூக தொடர்புகளுக்கு ஏராளமான இடத்தை வழங்குகின்றன.

 

மஸ்ஜித்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் ஆன்மீகத்தின் செயல்களாகக் கருதப்படுகிறது, இதனால் நம்பிக்கை, கற்றல் மற்றும் சமூக ஈடுபாட்டின் மையங்களாக அவற்றின் தொடர்ச்சியான பங்கு உறுதி செய்யப்படுகிறது.

 

சமகால மஸ்ஜித்கள் பெரும்பாலும் நவீன வசதிகளை கொண்டிருக்கும் அதே வேளை, பாரம்பரிய கட்டிடக்கலை கூறுகளைத் தக்கவைத்துக் கொள்கின்றன, மாறிவரும் தேவைகள் மற்றும் சூழல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இஸ்லாமிய கட்டிடக்கலையின் தற்போதைய பரிணாம வளர்ச்சி பிரதிபலிக்கின்றன.

 

உலக மஸ்ஜித் தினத்தை நிறுவுவது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையில் மஸ்ஜித்களின் முக்கியத்துவத்தை, குறிப்பாக அல்-அக்ஸா மஸ்ஜிதின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

 

நீதி மற்றும் சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதில் மஸ்ஜித்கள் வரலாற்று ரீதியாக ஒரு பங்கைக் கொண்டிருப்பதால், இது ஒற்றுமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகும்.

 

சமகாலத்தில், இஸ்லாமிய உம்மத் எதிர்கொள்ளும் பல சவால்களைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களிடையே ஒற்றுமைக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இஸ்லாமிய போதனைகளின் மையமான அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகிய கொள்கைகள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நிலைநிறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

 

முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பகிரப்பட்ட விழுமியங்களை நினைவில் கொள்வதும், அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவதும் தலையாய கடமையாகும்.

 

Friday, August 22, 2025

கர்பலா - உணர்ச்சியுடன் கலந்த புரிதல் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சியின் உண்மையான செய்தியை மறைக்கின்றன: இஸ்லாமிய அறிஞர் ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் வல்முஸ்லிமீன் ஹமீத் கராத்தி

Emotional Interpretations Obscure True Message of Imam Hussein’s Uprising: Scholar Hojat-ol-Islam Hameed Qara'ati


இக்னா, இஸ்லாமிய ஈரானின் ஒரு பிரபலமான ஊடகம், ஜூலை 14, 2025 வெளியிட்ட ஆக்கம் இது. இவ்வாக்கம் புனித கர்பலாவின் தொனிப்பொருளை, விதிவிலக்காக, ஒரு புது கண்ணோட்டத்தில் நோக்குகிறது.

 

பொதுவாக முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து தினங்களை உலகெங்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கிறார்கள். பல்வேறு வழிகளில் தங்களது துயரத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். 1300 வருடங்களுக்கு முன்பு ஈராக் தேசத்து கர்பலா மைதானத்தில் நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக ஈந்ததை நினைவூட்டும் சடங்காக இந்த துக்க தின அனுஷ்டித்தல்கள் அமைந்துவிட்டன. ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் இலட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோருக்கு ஹுஸைன் (அலை) அவர்களின் உயிர்த் தியாகத்தின் தாத்பர்யமே தெரியாததுதான் விந்தை.

 

‘கர்பலா எனும் போதே உள்ளத்தில் எழுப்பப்படும் உணர்ச்சி, கவலையும் சோகத்தையும் கலந்த ஒரு உணர்வுசார் நிகழ்வாகவே கருதப்படுவது, அதன் ஆழமான கருப்பொருளை வெளிக்கொணர்வதனை கடினமாக்கியுள்ளதாகவும் அந்நிகழ்வில் புதைந்துள்ள தாத்பர்யமான ஆன்மீக கருத்தையும் மறைப்பதாகவும் இஸ்லாமிய ஈரானின் பிரபல மார்க்க அறிஞர்கள் கவலையடைகிறார்கள். இக்னாவில் வெளியிட்டுள்ள இவ்வாக்கம் இதனையே பின்வருமாறு கூறுகிறது;

ஈரானிய அறிஞர்களில் ஒருவரான ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் வல்முஸ்லிமீன் ஹமீத் கராத்தி, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சியின் உணர்ச்சிகரமான விளக்கங்கள் அவரது மரபைப் பற்றிய ஆழமான புரிதலைத் தடுக்கின்றன என்றும், அவரது உதாரணத்தை மக்கள் அர்த்தமுள்ளதாக பின்பற்றுவதை கடினமாக்கியுள்ளன என்றும் கூறுகிறார்.

 

Emotional Interpretations Obscure True Message of Imam Hussein’s Uprising: Scholar

 

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சியில் இருந்து கற்றுக்கொள்வதற்கான தடைகள் குறித்து இக்னாவிடம் பேசிய, பக்கீர் அல்-ஒலும் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் ஆசிரிய உறுப்பினருமான இஸ்லாமிய அறிஞர் ஹுஜ்ஜதுல்-இஸ்லாம் வல்முஸ்லிமீன் ஹமீத் கராத்தி பல முக்கிய தடைகளை அடையாளம் கண்டார். "இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் கலந்த தகவல்களின் வெளிப்பாட்டின் பற்றாக்குறை மற்றும் அறிவார்ந்த ஈடுபாடு இல்லாதது முக்கிய தடைகளில் ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.

 

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் புரட்சியை விளக்குவதில் நம்பகத்தன்மையற்ற தனிநபர்களின் தலையீடு மற்றும் நம்பகத்தன்மையற்ற ஆதாரங்களின் பங்களிற்பிக்கு எதிராக அவர் எச்சரித்தார், அவை இரண்டாவது பெரிய தடை என்று ஹமீத் கராத்தி சுட்டிக் காட்டினார். "மூன்றாவது சவால்," ஹமீத் கராத்தி தொடர்கையில், "ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் எழுச்சியின் அகநிலை, அவர்களுடன் கர்பலா போரில் பங்கேற்ற அவர்களின் குழு, பயன்படுத்திய உத்தி ஆகியவை பற்றிய பொறுப்பற்ற விளக்கங்கள் மற்றும் அவற்றின் பிரபலம்."

 

‘அதீத உணர்ச்சிவசப்படுதல் மற்றொரு கடுமையான தடை என்று அவர் குறிப்பிட்டார் – எங்கு உணர்வுகளும் பேரார்வமும் பகுத்தறிவை விட அதிகமாக இருக்குமோ அங்கு தெளிவு பிறப்பது கடினமே. "உணர்ச்சி என்பது இன்பம் மற்றும் துன்பம் இரண்டிலும் இயற்கையான மனித வெளிப்பாடு," என்று அவர் விளக்கிய அவர் மேலும் கூறுவதாவது, "ஆனால் உணர்ச்சி, பகுத்தறிவு மற்றும் சிந்தனைமிக்க பிரதிபலிப்பை மழுங்கச் செய்யக்கூடாது. பகுத்தறிவுதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது" என்றார்.

 

உணர்ச்சிகள் முக்கியமானவை மற்றும் தவிர்க்க முடியாதவை என்றாலும், ஆன்மீக புரிதல் உணர்ச்சியிலிருந்து பகுத்தறிவை நோக்கி நகர வேண்டும், மாற்றமாக அல்ல என்று ஹமீத் கராத்தி வாதிட்டார். "நீண்ட காலமாக அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல் என்பது தனிப்பட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மனிதகுலத்தின் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாக மாறியிருக்கிறது," என்றும் ஹமீத் கராத்தி கூறினார்.

 

கி.பி 680 இல் கர்பலா போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது தோழர்கள் ஷஹீதாக்கப்பட்ட இஸ்லாமிய மாதமான முஹர்ரம் மாதத்தின் 10 வது நாளான ஆஷுராவின் நிகழ்வுகளைப் பற்றி குறிப்பிடுகையில், "இந்த நிகழ்வு சக்திவாய்ந்த மற்றும் மனதை இளக்குகிற காட்சிகளால் நிரம்பியுள்ளது, ஆனால் அதைப் பற்றிய நமது பார்வை அதன் உணர்ச்சிகரமான அம்சங்களுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது." என்று எச்சரித்தார்.

 

உணர்ச்சியின் மூலம் மட்டுமே பெறப்படும் அறிவு தற்காலிகமானது என்று சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில், "சுவாரஸ்யமாக, நம்பகமான வரலாற்று ஆதாரங்கள் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் நடத்தை, பேச்சுகள் மற்றும் நடவடிக்கைகள் பெரும்பாலும் தர்க்கம் மற்றும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் வெளிப்படுத்தி காட்டுகின்றன. தன்னைப் பின்பற்றுபவர்களையும், எதிரிகளையும் சிந்தித்து செயல்பட இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் நடத்தையால் இன்னும் சிலர் வழிநடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், எதிரிகளை எதிர்கொண்டபோதும் அவர்களுடன் கோபத்தோடு பேசாமல், இரக்கத்தோடு அணுகினார்கள்."

 

இந்த பகுத்தறிவு மற்றும் கொள்கை அணுகுமுறை, மகாத்மா காந்தி போன்ற முஸ்லிம் அல்லாத தலைவர்கள் கூட இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை உத்வேகத்தின் ஆதாரமாகப் பார்த்தார்கள் என்பதை விளக்குகிறது என்று ஹமீத் கராத்தி கூறினார். "போரின் குழப்பத்திலும் இமாமின் பகுத்தறிவு தெளிவாகவும் தனித்தும் நிற்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

 

ஒரு வரலாற்று நபரைப் பின்தொடரும்போது இரண்டு மட்டங்களில் பகுத்தறிவு தேவைப்படுகிறது என்று கூறிய அவர், "முதலில், அந்த நபரின் வீர பண்புகளைத் தாண்டி அவரின் நிலையான மற்றும் கொள்கை ரீதியான நடத்தைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, வெவ்வேறு சவால்களுக்கு அவர்களின் அணுகுமுறையை பகுப்பாய்வு செய்ய நமது சொந்த பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் பின்பற்றத் தகுந்த செயல் மற்றும் தர்க்கத்தின் மாதிரியைப் பிரித்தெடுக்க முடியும்."

 

ஹமீத் கராத்தியின் இக்கருத்துக்கு ஒப்பான கருத்தை ஈரானின் மற்றுமொரு அறிஞர் டாக்டர் நெமத்துல்லா சஃபாரி ஃபோரோஷானி, ஆஷுரா என்பது ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, அது ஷியா இஸ்லாமின் ஆன்மீக மற்றும் இறையியல் அடித்தளமாகும் என்று வலியுறுத்துகிறார். கும்மில் ஒரு அறிஞர் அமர்வில் பேசிய அவர், வரலாற்று பகுப்பாய்வை மட்டுமே நம்பியிருப்பது மதச்சார்பற்றதாக மாறும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, அஷுராவின் முக்கியத்துவத்தை முழுமையாக புரிந்துகொள்ள ஃபிக்ஹ் (இஸ்லாமிய சட்டவியல்), இறையியல், சமூகவியல், மற்றும் காவிய ஆய்வுகள் உள்ளிட்ட ஒரு பல்துறை அணுகுமுறைக்கு அவர் வாதிடுகிறார். அவரின் கருத்தில் அடங்கியுள்ள முக்கிய கூறுகளாவன:

  • ஆஷுரா என்பது கடந்த கால அவலம் மட்டுமல்ல, அது ஷீஆ அடையாளத்தின் ஒரு அடிப்படைத் தருணம்.
  • ஹதீஸ், இல்ம் அல்-ரிஜால் போன்ற இஸ்லாமிய அறிவியலை வரலாற்றாசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
  • அறிவார்ந்த ஈடுபாட்டின் நான்கு நிலைகளான பரிச்சயம், தேர்ச்சி, நிபுணத்துவம் மற்றும் வாழ்நாள் முழுவதுமான இறை நம்பிக்கை ஆகியவற்றை அவர் கோடிட்டுக் காட்டுகிறார்.
  • இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தியாகம் ஒரு வரலாற்று சத்தியம் மட்டுமல்ல, எதிர்ப்பு மற்றும் நீதியின் நிலைத்திருக்கும் மற்றும் தொடரும் அடையாளமாகும்.

 

ஈரானிய அறிஞர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் நஜாஃப் லக்சாய் ஆகியோரும், இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் யஸீதுக்கு எதிரான எழுச்சி நவீனகால கொடுங்கோல் ஆட்சி மற்றும் அநீதியை எதிர்ப்பதற்கான காலமற்ற வரைபடமாக செயல்படுகிறது என்று வாதிடுகிறார்கள். குர்ஆனிய ஆட்சி குறித்த ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய லக்சாய், யஸீதின் ஆட்சியை ஃபிர்அவ்னின் அடக்குமுறை ஆட்சியுடன் ஒப்பிடுகிறார், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் யஸீதின் தலைமையை சட்டவிரோதமானது மற்றும் இஸ்லாத்திற்கு ஆபத்தானது என்று கருதுவதாகவும் வலியுறுத்துகிறார். அவர் தெரிவிப்பதாவது:

  • இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மதீனாவிலிருந்து வெளியேறுவதை நியாயப்படுத்த குர்ஆன் வசனமான அல்-கசாஸ் 21 ஐ மேற்கோள் காட்டி, யஸீதுக்கு விசுவாசத்தை மறுத்தார்.
  • யஸீதின் சொந்த எழுத்துக்கள் மத விழுமியங்களை கேலி செய்தன, இது இவனை எதிர்க்க இமாமின் முடிவை வலுப்படுத்தின.
  • இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் மரபு உலகளாவிய ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்பைத் தூண்டுகிறது என்றும், இன்றும் சத்தியத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்க மக்களை வலியுறுத்துகிறது என்றும் அறிஞர் முடிக்கிறார்.

 

இக்கருத்துக்களை திறம்பட புரிந்துகொண்டு கர்பலா என்பது வெறும் வரலாறு அல்ல - அது ஒரு தார்மீக திசைகாட்டி என்பதை ஒரு கிளர்ச்சியூட்டும் நினைவூட்டலாக நோக்குவோம்.

 

https://iqna.ir/en/news/3493836/emotional-interpretations-obscure-true-message-of-imam-hussein%E2%80%99s-uprising-scholar

 

 

 

 

 

 

 

Friday, August 15, 2025

அர்பயீன் யாத்திரை: அன்பு மற்றும் அர்ப்பணிப்பை உணர்த்தும் உலகின் மிகப்பெரிய யாத்திரை

 Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

ஸியாரத் அர்பயீன் என்பது ஈராக்கில் உள்ள புனித நகரமான கர்பலாவில் நடைபெறும் வருடாந்த யாத்திரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள் ஈராக்கின் கர்பலாவுக்கு வருகிறார்கள், பெரும்பாலும் அருகிலுள்ள நகரமான நஜாஃப்பிலிருந்து பாதயாத்திரையாக அங்கு வருகிறார்கள்.

 

இமாம் ஹுஸைன் இப்னு அலீ (அலை) அவர்கள் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கும் 40 நாட்களைக் கொண்ட அர்பயீன் யாத்திரை, உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய அமைதியான கூட்டமாக கருதப்படுகிறது.

 

ஈராக்கில் சுன்னி சமூகத்தை ஆதரித்த ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் (1979-2003) அவருடைய ஆட்சிக் காலத்தில் அர்பயீன் யாத்திரையை அரசியல் அச்சுறுத்தலாகக் கருதி தடை செய்தார். 2003 ஆம் ஆண்டில் சதாம் பதவி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே இந்த யாத்திரை புமீண்டும் உயிர்பெற்றது, இந்த பல நாள் நிகழ்விற்கான மொத்த வருகை எண்ணிக்கை அந்த ஆண்டில் இரண்டு மில்லியன் பங்கேற்பாளர்களிலிருந்து 2008 ஆம் ஆண்டில் ஒன்பது மில்லியனாக அதிகரித்தது, மேலும் 2014 ஆம் ஆண்டில் சுமார் இருபது மில்லியனாக அதிகரித்து, அந்த ஆண்டின் புனித யாத்திரையை வரலாற்றில் இந்து திருவிழாவான கும்பமேளாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கூட்டமாக ஆக்கியது. இந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் இருபத்தி இரண்டு மில்லியனை எட்டியதாக ஈராக் அரசு தரப்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டில், அல்-கோயி அறக்கட்டளை சுமார் இருபத்தி இரண்டு மில்லியன் யாத்ரீகர்களை மதிப்பிட்டுள்ளது. கும்பமேளா உலகின் மிகப்பெரிய கூட்டமாக கருதப்பட்டாலும் இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடத்தப்படுகிறது. இருப்பினும் அர்பயீன் யாத்திரை வருடா வருடம் இருபதிற்கும் மேற்பட்ட மில்லியன் மக்களால் கூடப்படுவதால், இது “உலகின் மிகப்பெரிய வருடாந்திர கூட்டம் ஆக கருதப்படுகிறது. கடந்த 3 வருடங்களில்- 2022, 2023, 2024- அர்பயீன் யாத்ரீகர்களின் வருகை அண்ணளவாக;

  • 2022 - 22.1 மில்லியன்
  • 2023 - 22 மில்லியன்
  • 2024 - 21.4 மில்லியன்

 

ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளுக்குப் பிறகு நாற்பது நாட்களை அர்பயீன் குறிக்கிறது. ஹிஜ்ரி 61 (கி.பி. 680) இல் இந்த நாளில், உமய்யா கலீபா யஸீத் இப்னு முஆவியாவின் (ஆட்சி. 680-683) இராணுவத்திற்கு எதிரான கர்பலா போரில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தனது உறவினர்கள் மற்றும் அவரது சிறிய கூட்டத்தாருடன் கொல்லப்பட்டார்.

 

இஸ்லாமிய நாட்காட்டியின் இரண்டாவது மாதமான சஃபர் மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஈராக்கின் வறண்ட பாலைவனங்கள் மனிதகுலத்தின் அன்பு மற்றும் ஒற்றுமையின் மிகப்பெரிய வெளிப்பாட்டின் கட்டமாக இந்த ஸியாரத் அர்பயீன் மாற்றுகிறது. அரபு மொழியில், "அர்பயீன்" என்றால் "நாற்பது" என்று பொருள், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இறந்த 40 வது நாளை இது குறிக்கும், மேலும் "ஸியாரத்" என்றால் "வருகை" என்று பொருள். ஹஜ் (மக்காவுக்கு புனித யாத்திரை) போன்று ஸியாரத் அர்பயீன் யாத்திரை ஒரு இஸ்லாமிய கடமையாக கருதப்படவில்லை என்றாலும், இது ஷியாவின் ஆன்மீக வாழ்க்கையில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கிறது.

 

மூன்றாவது ஷியா இமாமும் நபிகள் நாயகத்தின் பேரனுமான இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் கி.பி 680 இல் கர்பலா போரில் ஷஹீதானார். அவர்களின் மரணத்தை கௌரவிக்கும் வகையில் இந்த யாத்திரை வருடாந்தம் மேற்கொள்ளப்படுகிறது. முஸ்லீம் வரலாற்றாசிரியர்களால் பெரும்பாலும் இறை நிந்தனையாளர் மற்றும் ஒழுக்கக்கேடானவர் என்று சித்தரிக்கப்படும் அன்றைய ஆட்சியாளரான யஸீதுக்கு விசுவாசத்தை உறுதிமொழி எடுக்க மறுத்த இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், ஒரு சிறிய குடும்பம் மற்றும் விசுவாசமான தோழர்களுடன், கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக 40,000 பேர் கொண்ட இராணுவத்தை எதிர்த்து நின்றார். அவரது தியாகம் - அவரது குழந்தை மற்றும் அன்புக்குரியவர்களுடன் - தைரியம், நீதி மற்றும் தியாகத்தின் காலமற்ற அடையாளமாக மாறியது. ஷியா கோட்பாட்டில், கர்பலா நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான நித்திய போராட்டத்தையும், சுய தியாகத்தின் உச்சத்தையும் குறிக்கிறது.

 

ஸியாரத் அர்பயீன் கர்பலாவின் இயக்கத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. ஆஷுரா நாளின் முக்கியத்துவத்திற்கு ஒத்த இந்த நாள் பல காரணங்களுக்காக சிறப்பு பெறுகிறது – அஹ்லுல் பைத்கள் இந்த நாளில் கர்பலா நாட்டை அடைந்து இஸ்லாத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த ஸையித் அல்-ஷுஹதா இமாம் ஹுஸைன் (அலை) அவர்களுக்கும் அவர்களின் விசுவாசமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தியாகத்தை மதித்து நினைவுகூரும் நாளாகும்.

 

நஜாஃப் முதல் கர்பலா வரை: நம்பிக்கையின் நடைப்பயணம்

 

அர்பயீன் பயணம் பெரும்பாலும் புனித நகரமான நஜாப்பில் தொடங்குகிறது, அங்கு யாத்ரீகர்கள் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தந்தையும் ஷியா முஸ்லிம்களின் முதல் இமாமுமான இமாம் அலீ (அலை) அவர்களின் ஸியாரத்திற்கு வருகை தருகிறார்கள். அங்கிருந்து கர்பலாவை நோக்கி 50 மைல் (80 கிலோமீட்டர்) மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர். ஈராக்கின் கடுமையான வெயிலின் கீழ் திறந்த பாலைவனத்தின் வழியாக அமையப்பெறும் இந்த நடைப்பயணம் முழுமையடைவதற்கு பல நாட்கள் எடுக்கும். இருப்பினும், வயது, உடல்நலம் அல்லது பிராந்திய எல்லைகளை கடந்து, யாத்ரீகர்கள் விடாமுயற்சியுடன் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர் - தங்கள் இறைபக்தியால், ஆன்மீகத்தால் ஒன்றுபடுகிறார்கள்.

 

வழியில், ஆயிரக்கணக்கான மௌகிப்கள் (Mawkibs - தன்னார்வ சேவை நிலையங்கள்) சாலையில் வரிசையாக நின்று, இலவச உணவு, தண்ணீர், மருத்துவ உதவி மற்றும் ஓய்வு நிலையங்களை வழங்குகின்றன. இங்கு விருந்தோம்பலுக்கு எல்லையே இல்லை; ஏழைகள் கூட தங்களால் முடிந்ததை கொடுக்கிறார்கள் - வீட்டில் சமைத்த உணவு முதல் சோர்வடைந்த பயணிகளுக்கு எளிய கால் மசாஜ் வரை. ஈராக்கியர்கள், ஈரானியர்கள் மற்றும் டஜன் கணக்கான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையங்களை நடத்துகிறார்கள், இது இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற மதிப்புகளை உள்ளடக்கியது.

 

அர்பயீன் இன் உள்ளார்ந்த அர்த்தம்

தமிழில் "நாற்பது" என்று பொருள் படும் "அர்பயீன்", பாரம்பரிய 40 நாள் துக்க காலத்தின் முடிவைக் குறிக்கிறது. ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரை, புனித யாத்திரை என்பது ஒரு மத சடங்கை விட மேலானது - இது இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் தன்னை இழந்து பாதுகாத்த இஸ்லாமிய மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு உறுதிமொழியாகும். "லப்பைக் யா ஹுஸைன்" ("நான் இங்கே இருக்கிறேன், ஓ ஹுஸைன்") என்ற பயணிகளின் கோஷம் சாலை முழுவதும் எதிரொலிக்கிறது, இது உண்மை மற்றும் நீதிக்கான தனது பணியைத் தொடர யாத்ரீகர்களின் தயார்நிலையைக் குறிக்கிறது.

 

Arbaeen Walk: World’s largest pilgrimage of love and devotion

 

ஒற்றுமைக்கான உலகளாவிய செய்தி

ஸியாரத் அர்பயீன் யாத்திரையை தனித்துவமாக்குவது அதன் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உள்ளார்ந்த அர்த்தம். ஷியா, சுன்னி, கிறிஸ்தவர் மற்றும் நாத்திகர்கள் என அனைத்து மதங்களையும் சேர்ந்த பார்வையாளர்கள் ஒன்றாக நடந்து, உணவு மற்றும் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் தேசியக் கொடிகள் ஒருமித்த குரலில் அசைந்து, ஒரு சக்திவாய்ந்த செய்தியை வெளிப்படுத்துகின்றன: இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் மரபு அனைத்து மனிதகுலத்திற்கும் சொந்தமானது.

 

பலருக்கு, அர்பயீன் என்பது கற்றல் மற்றும் உரையாடலுக்கான நேரம். யாத்ரீகர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள், சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான பிணைப்புகளை வலுப்படுத்துகிறார்கள். இன்றைய உலகில் சமாதான சகவாழ்வுக்கு இது ஒரு உயிர்ப்புள்ள சிறந்த உதாரணம்.

 

கர்பலா வருகை

களைத்துப்போன பயணிகளுக்கு, கர்பலாவின் தங்க குவிமாடங்களின் காட்சி பிரமிக்க வைக்கிறது. இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் மற்றும் அவரது சகோதரர் ஹஸ்ரத் அப்பாஸ் (அலை) ஆகியோரின் அடக்கஸ்தலங்களுக்கு இடையிலான இடமான பய்ன் அல்-ஹரமைன் (Bayn al-Haramayn) இற்க்குள் நுழையும்போது கண்ணீர் ததும்புகிறது. இங்கே, அவர்கள் பெருந்திரள் துக்க அனுஷ்டானங்களில் கலந்துகொள்கிறார்கள், துஆ பிரார்த்தனைகளை ஓதுகிறார்கள், தொண்டு செயல்களைச் செய்கிறார்கள் - ஒவ்வொரு யாத்ரீகரும் தங்கள் ஆன்மீக தொடர்பை ஆழமாக வலுப்படுத்துகிறார்கள்.

 

இது ஏன் முக்கியமானது

அர்பயீன் யாத்திரை என்பது உலகின் மிகப்பெரிய வருடாந்திர கூட்டம் மட்டுமல்ல - இது தன்னலமற்ற தன்மை, ஒற்றுமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் ஒரு நெகிழ்ச்சியான வெளிப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தைகளில்: "ஹுஸைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுஸைனைச் சேர்ந்தவன். ஹுஸைனை நேசிப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்."

 

மில்லியன் கணக்கானவர்கள் தாயகம் திரும்புகையில், அவர்கள் தங்களுடன் ஒரு புனிதமான பயணத்தின் நினைவுகளை மட்டும் சுமக்கவில்லை, மாறாக இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இஸ்லாத்தை பாதுகாக்க தனது உயிரைக் கொடுத்த கொள்கைகளின்படி வாழ்வதற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும் ஏந்திச் செல்கின்றனர்.

https://en.mehrnews.com/news/234993/Arbaeen-Walk-World-s-largest-pilgrimage-of-love-and-devotion