Contributors

Monday, January 13, 2025

உலகளாவிய ஆணவத்தின் கான்கிரீட் சுவரில் ஒரு விரிசலை உருவாக்கியது இஸ்லாமியப் புரட்சி

 US holds an old deep grudge against Iran: Leader

அடக்குமுறை பஹ்லவி ஆட்சிக்கு எதிராக கோம் மக்களின் 1978 வரலாற்று எழுச்சியின் ஆண்டு நிறைவில், ஆயதுல்லாஹ் கமனேயி ஜனவரி 8, 2025 அன்று இமாம் கொமைனி ஹுசைனியாவில் கோம் மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிரான ஈரானின் தற்போதைய நிலைப்பாட்டை இஸ்லாமிய புரட்சியுடன் தொடர்புபடுத்திய தலைவர், இஸ்லாமியப் புரட்சி காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார வாய்ப்பை அமெரிக்கா இழந்ததன் விளைவாக இஸ்லாமியக் குடியரசு மீதான அவர்களின் விரோதப் போக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

டே 19 (ஜனவரி 9, 1978) எழுச்சியிலிருந்து படிப்பினைகளைப் பெற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களின் "இடைவிடாத, கணிசமான மற்றும் பயனுள்ள" முயற்சிகளை அடையாளம் கண்டு, "எதிரியின் அதிகார மாயையின் முகத்திரையை கிழித்தெறிந்து பொதுமக்கள் கருத்தைப் பாதுகாப்பதை இன்றைய அவசரத் தேவைகளாக அடையாளம் கண்டார்.

கோமில் நடந்த 19 டே எழுச்சி (19 Dey Uprising) பல்வேறு படிப்பினைகளையும் நுட்பங்களையும் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஆயத்துல்லாஹ் கமனேயி, அந்த நாளிலிருந்து மிக முக்கியமான படிப்பினை என்னவென்றால், வாஷிங்டன் எந்த வகையான ஈரானை விரும்புகிறது மற்றும் எதிர்பார்க்கிறது என்பதை அது வெளிப்படுத்துகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

டிசம்பர் 31, 1977 அன்று ஜனாதிபதி கார்ட்டர் தெஹ்ரானுக்கு விஜயம் செய்ததையும், முகம்மது ரேசா பஹ்லவி மீதான அவரது நயவஞ்சகமான பாராட்டையும், அத்துடன் பஹ்லவி ஈரானை ஒரு "ஸ்திரப்பாட்டின் தீவு" என்று கார்ட்டர் சித்தரித்ததையும் எடுத்துக்காட்டிய இமாம் கமனேயி, "1977 இல் கார்ட்டர் அமெரிக்காவிற்கு விரும்பத்தக்கதாக கருதிய ஈரான், வெளியுறவுக் கொள்கையின் அர்த்தத்தில், முற்றிலும் அமெரிக்காவிற்கு அடிபணிந்து மற்றும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் ஈரானையாகும். உள்நாட்டில், அது அனைத்து எதிர்ப்பு இயக்கங்களையும் கடுமையாக ஒடுக்கியதையும், அத்துடன் ஆட்சியில் இருந்து எந்தவொரு மாறுபட்ட கண்ணோட்டங்களையும் சகிக்கவில்லை."

அந்தக் காலகட்டத்தில், அளப்பரிய எண்ணெய் வருவாய்களும், அப்பட்டமான பொருளாதார அடுக்குகளும் கொண்ட ஒரு இலட்சிய ஈரானை தமக்கு சேவை செய்யக்கூடிய நாடாக அமெரிக்கா கற்பனை செய்தது என்று குறிப்பிட்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, வளர்ச்சியடையாத ஒரு தேசத்தை அவர்கள் விரும்பினர், அதே நேரத்தில் கலாச்சார ரீதியாக, ஊழல், ஒழுக்கக்கேடு மற்றும் மேற்கத்திய சீரழிவு ஆகியவை அன்றாடம் பெருகும் ஒரு சமூகத்தை அவர்கள் எதிர்பார்த்தனர்.

Dey 19 ஆம் தேதி எழுச்சியானது "அமெரிக்காவிற்கான சிறந்த ஈரானை" அமெரிக்காவின் பிடியிலிருந்து விடுவித்தது என்று அவர் வலியுறுத்தினார். எவ்வாறிருப்பினும், "ஈரான் குறித்த அந்த பார்வைக்காக அமெரிக்கா இன்னும் ஏங்குகிறது, ஆனால் கார்ட்டர் இந்த கனவை கல்லறைக்கு எடுத்துச் சென்றதைப் போலவே, மற்ற அமெரிக்கர்களும் கூட கல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய புரட்சியின் வெற்றி உலகளாவிய ஆணவத்தின் கான்கிரீட் சுவரில் ஒரு விரிசலை உருவாக்கி மேற்கின் தடையை ஆட்டம்காணச் செய்துள்ளது. "எதிரிகளின் பிரச்சாரத்திற்கு எதிராக நமது பொதுக் கருத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதே 19 ஆம் டே எழுச்சியின் மற்றொரு படிப்பினையாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

1978 ஜனவரியில் ஒரு பத்திரிகையில் இமாம் கொமைனி அவர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டதைக் குறிப்பிட்டு, அமெரிக்கா மற்றும் பஹ்லவி ஆட்சியால் பயன்படுத்தப்பட்ட பிரச்சாரத்தின் பாத்திரத்தை தலைவர் எடுத்துரைத்தார்.

இமாம் கொமேனி இஸ்லாமிய புரட்சியின் வெற்றியை, "ஆணவத்தின் மிக முக்கியமான கோட்டையில்" இருந்து வெளிவந்ததை ஃபிர்அவ்னின் அரண்மனையில் நபி மூஸா (ஸல்) எழுப்பப்பட்ட கதையுடன் ஒப்பிட்டார். "அமெரிக்கர்கள் அதிர்ச்சியடைந்தனர், மாபெரும் இஸ்லாமிய புரட்சி அவர்களின் நலன்களின் கோட்டையிலிருந்து எழுந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

"நம்பிக்கையாளர்களின் தளபதியின் [இமாம் அலி] புனித அடக்கத்தலத்திற்கு அருகில் இருந்து, மக்களின் இதயங்களுக்கு அரவணைப்பையும் நம்பிக்கையையும் கொண்டு வந்த இமாம் கொமைனியின் நாவின் ஜுல்பிகாரை மௌனமாக்க அவர்கள் விரும்பினர். எனினும் அவர்களால் அது முடியவில்லை. கோம் மக்கள், அமெரிக்க மற்றும் பஹ்லவி ஆட்சியின் துர்பிரசாரத்தை எழுச்சியின் மூலம் முறியடித்தனர்."

ஜனவரி 9 நிகழ்வுக்குப் பிறகு நஜாப்பிலிருந்து இமாம் கொமேனியின் செய்தியை புரட்சியின் தலைவர் விவரித்தார், அதில் அவர் ஈரானிய தேசத்திற்கு வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியை வழங்கினார், இது மறைந்த இமாம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை ஆழமாக வலியுறுத்தியதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

"புரட்சியின் வெற்றியை இமாம் கொமைனி வாக்குறுதியளித்த அந்த நேரத்தில், அத்தகைய ஒரு மகத்தான இயக்கம் வெற்றி பெறும் என்று யார் நம்பியிருக்க முடியும்? அல்லது இஸ்லாமிய குடியரசு போன்ற ஒரு சக்திவாய்ந்த மற்றும் முன்னோடி நிறுவனம் இந்த பிராந்தியத்தில் உருவாகி, பல மேற்கத்திய ஆக்கிரமிப்புகள் மற்றும் தீங்கிழைக்கும் நோக்கங்களை முறியடிக்கும் என்று யார் நினைத்திருப்பர்? ஒரு நாள், மேற்கத்திய நாடுகளிலும், வாஷிங்டனிலும் கூட, அமெரிக்க கொடிகள் தீக்கிரையாக்கப்படும் என்று எவராலும் கற்பனை செய்திருக்க முடியுமா?"

அமெரிக்கா அதன் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளை ஒருங்கிணைக்க பிரச்சார கருவிகளைப் (ஊடகங்களை) பயன்படுத்துவதில் அதிவேக அதிகரிப்பை ஆயத்துல்லாஹ் கமனேயி சுட்டிக்காட்டினார், "காசாவில், அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தனர், ஆனாலும் அவர்களின் [இராணுவ] தளவாடங்களைக் கொண்டு விடுதலை போராளிகளை அவர்களால் அகற்ற முடியவில்லை. லெபனானில், அவர்கள் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற தளபதிகள் போன்ற தலைவர்களைக் கொன்றனர், ஆனால் ஹெஸ்பொல்லா ஒழிக்கப்படவில்லை, அழிக்கப்படவும் முடியாது."

தனது உரையின் மற்றொரு பகுதியில் தற்போதைய ஈரானிய மக்கள் பற்றி குறிப்பிடுகையில், தலைவர் ஈரானை உலகின் "மூலோபாய உச்சம்" என்றும், இயற்கை வளங்கள் மற்றும் சராசரிக்கும் அதிகமான மனித வளங்கள் போன்ற மதிப்புமிக்க ஆசீர்வாதங்களைக் கொண்டுள்ளது என்றும் விவரித்தார்.

"சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பல தசாப்தங்களாக, ஈரான் அடிப்படையில் அமெரிக்காவுக்குச் சொந்தமாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய புரட்சி நாட்டை அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுவித்தது, அதனால்தான் அவர்கள் இஸ்லாமிய புரட்சி மீதான தங்கள் வெறுப்பை காட்டுகிறார்கள்f."

இஸ்லாமிய குடியரசு, ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகள் இருந்தபோதிலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது உறவுகளை ஏற்படுத்தவோ ஏன் மறுக்கிறது என்பது குறித்து சில தனிநபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இஸ்லாமிய புரட்சியின் தலைவர் பதிலளித்தார். "புரட்சிக்கு முந்தைய ஈரான் அமெரிக்க உடைமையின் கீழ் இருந்தது, ஆனால் இஸ்லாமிய புரட்சி ஈரானின் அந்த மகத்தான அரசியல் மற்றும் பொருளாதார வாய்ப்பை அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது. ஆகவே, புரட்சியை நோக்கிய அவர்களின் வெறுப்பு [ஆழமாக வேரூன்றியுள்ளது], இது ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமாக வேறுபடுகிறது."

ஈரான் உட்பட பிற நாடுகளின் முடிவுகளில் அவர்களின் நலன்கள் மற்றும் பரிசீலனைகள் காரணியாக இருப்பதை உறுதி செய்வதே அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஆணவத்தின் முதன்மை கோரிக்கைகளில் ஒன்று என்று ஆயத்துல்லாஹ் கமனேயி விவரித்தார். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு அடிபணிவதில் உள்ள அபாயங்களை வலியுறுத்திய அவர், "அமெரிக்காவின் அதிகப்படியான தேவைக்கு அடிபணிவது ஜனநாயகத்தையும் நாட்டில் ஜனநாயகத்தின் தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது". "மக்கள் தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்காக அதிகாரிகளை தேர்தல்கள் மூலம் வாக்களித்து தெரிவு செய்துள்ளனர், அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கவல்ல. எனவே, முடிவெடுப்பவர்கள் ஈரானிய தேசம் மற்றும் இஸ்லாமிய குடியரசின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், அமெரிக்கா மற்றும் சியோனிஸ்டுகளின் நலன்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் அடிப்படையில் நமது தேசத்திற்கும் இஸ்லாமிய குடியரசிற்கும் விரோதமானவர்கள், ஈரானை அழிக்க விரும்புகிறார்கள்."

கடந்த 46 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மற்றும் செலவுகள் செய்து இருந்தபோதிலும் ஈரான் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற அமெரிக்கா தவறிவிட்டதை அவர் மேலும் சுட்டிக்காட்டினார், ஈரானிய தேசம் மற்றும் இஸ்லாமிய குடியரசு மீதான அவர்களின் வெறுப்புக்கு இது மற்றொரு காரணம் என்று கூறினார். "அமெரிக்கா இந்த நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, அந்த தோல்வியை ஈடுசெய்ய முயல்கிறது. இதன் விளைவாக, அவர்கள் ஈரானிய மக்களுக்கு எதிராக தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் பகைமையைப் பின்தொடர்கின்றனர்."

தனது உரையை நிறைவு செய்த இமாம் கொமேனி, சிரியா உள்ளிட்ட பிராந்திய நிகழ்வுகள் பாலஸ்தீன பிரச்சினையை மறைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். "எதிர்ப்பின் மையம் சியோனிச ஆட்சியின் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்பதில் தங்கியுள்ளது".

எதிர்ப்பின் தற்போதைய வளர்ச்சி மற்றும் பலப்படுத்தலை வலியுறுத்தி, அவர் கூறினார், "காசாவில் எதிர்ப்பு, மேற்குக் கரையில் எதிர்ப்பு, லெபனானில் எதிர்ப்பு, யேமனில் எதிர்ப்பு, மற்றும் சியோனிச ஆட்சியின் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் அவர்கள் உறுதியாக நிற்கும் மற்றும் எதிர்க்கும் இடங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர் கூறினார்.

https://www.tehrantimes.com/news/508467/US-holds-an-old-deep-grudge-against-Iran-Leader

No comments:

Post a Comment