Wednesday, March 9, 2022

இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அடியார்களின் ஆபரணம்)

Imam Zain al-Abidin the 4rth Imam 

Tongue – The Barometer of Truth

By: Seyyed Ali Shahbaz

"ஆபாச பேச்சுக்கள் பேசுவதை நீங்கள் நாவின் உரிமை என்று கருதுகிறீர்கள். நாவை நல்லவற்றுக்காக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், பயனளிக்காதவற்றை பேசுவதைத் தவிர்த்து, மக்களிடம் கருணையை வெளிப்படுத்துங்கள், அவர்களைப் பற்றி நல்லதை பேசுங்கள்."


இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், நாவின் உரிமைகளைப் பற்றிய சிறந்த விளக்கத்தை அளிக்கின்றன, நாவை நாம் எப்படி தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்ற படிப்பினை சமூக வாழ்வின் நடைமுறைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள துறவி ஒருவரால் சொல்லப்பட்டதல்ல.

இந்த அறிவுபூர்வமான வார்த்தைகள் சமூகத் தேவைகள் என்ற சாக்குப்போக்கில் விதிகளை வசதியாக மீறும் ஏதோ ஒரு தத்துவஞானியின் நடைமுறைச் சாத்தியமற்ற மனதின் விளைபொருளுமல்ல.

மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் நல்லதையும் தீயதையும் வேறுபடுத்தி அறியும் அறிவாற்றலுடன் பேச்சு ஆற்றலையும் வழங்கியுள்ளான். நா எனும் நம் உடலின் சிறிய உறுப்புக்கு இந்த குறிப்பிடத்தக்க வரையறை கூறப்பட்டது, தனது கண்முன்னே அவரது நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்களின் (கர்பலா) படுகொலை அல்லது மிருகத்தனமான சிறைவாசம் என்ற அச்சுறுத்தலுக்கு அஞ்சாத ஒருவரால் ஆகும்.

நீதிமன்றத்தின் அதிகாரமும் ஆடம்பரமும் கொண்ட ஓர் இரத்தவெறி பிடித்த கொடுங்கோலனினால் கூட அவர் உறுதியாக நம்பிய கொள்கைகளிலிருந்து அவரது நாவின் போக்கை மாற்ற முடியவில்லை, முஸ்லிம் உம்மத்தின் நன்மைக்காக தனது மனதை வெளிப்படுத்த அவர் ஒருபோதும் தயங்கவில்லை.

அவர் வேறு யாருமல்ல, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 4 வது உத்தம வாரிசு ஆவார், அவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் ஷபான் 5 ஆம் தேதி உலக முஸ்லிம்களான நாம் கொண்டாடுகிறோம்.

அவரது பாட்டனார் அமீர் அல்-மு'மினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி), இமாம் அலி இப்னு அபீ தாலிப் (அலை) நினைவாக அலி என்று பெயரிடப்பட்டார், அவர் தனது இறை பக்தி, இறை தியானம், பொறுமை, விவேகம் மற்றும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு சிரம்பணிதல் காரணமாக ஸைன் அல்-ஆபிதீன் (இறையடியார்களின் ஆபரணம்) என்ற புனைப்பெயறில் அழைக்கப்பட்டார்.

அவரது தந்தை நபியின் பேரன் தியாகிகளின் தலைவர் மற்றும் சொர்க்கத்தின் இளைஞர்களின் தலைவர் இமாம் ஹுசைன் (அலை) அவரது தாயார் பாரசீக இளவரசி ஷாஹர்பானோ ஆக இருந்ததன் அடிப்படையில் அவர் "இப்னுல்-கியாரதைன்" (இரண்டு நல்லொழுக்கமுள்ள நபர்களின் மகன்) என்றும் அழைக்கப்பட்டார்.

ஹிஜ்ரி 38 (கி.பி. 657) இல் மதீனாவில் பிறந்த அவருக்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கூட அறிமுகம் தேவையிருக்கவில்லை.

அவரது இரண்டு படைப்புகள் உலகப்புகழ்வாய்ந்தது.

முதலாவது “சஹிஃபத் அஸ்-ஸஜ்ஜாதியா”, இது இறைவனிடம் அவர் செய்யும் மன்றாட்டங்களின் தொகுப்பாகும், இது இறைவனின் மிக உயர்ந்த அருட்கொடைகள் முதல் உலக வாழ்க்கையின் விஷயங்கள் வரை, ஒளியின் எடை போன்ற அறிவியல் உலகின் அதிசயங்கள் உட்பட. போன்ற அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது - அவர் வாழ்ந்த காலத்தில் மனிதகுல ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒன்று.

இரண்டாவதாக, "நாவின் உரிமைகள்" குறிப்பிடப்பட்ட "ரிசாலத் அல்-ஹூக்கூக்" (உரிமைகள் பற்றிய ஒப்பந்தம்) ஆகும். ஒரு மனிதனின் சொந்த உடல் உறுப்புகள் உட்பட சமுதாயத்தில் ஒரு மனிதனின் ஒவ்வொரு நிமிட உரிமையையும் விளக்குமாறு அவர் தனது சீடர்களில் ஒருவரிடம் கட்டளையிட்ட ஒரு படைப்பு அது, ஒருவர் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார் அல்லது தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்க தெய்வீக நம்பிக்கையைத் தவிர வேறில்லை.

ஐ.நா.வின் குறைபாடுகள் நிறைந்த மனித உரிமைகள் பிரகடனம் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும், இந்த சாசனம் மிகவும் விரிவானதாகவும், முழுமையானதாகவும், உலகில் பாராட்டப்படுதில் ஆச்சரியமில்லை.

கர்பலாவின் சோகத்தை மீண்டும் மீண்டும் விபரித்தல் அவசியமில்லை; இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அலை) அவர்கள் எவ்வாறு சிறைக்கு உட்படுத்தப்பட்டார்; கூஃபா மற்றும் டமாஸ்கஸில் உள்ள கொடுங்கோலர்களின் நீதிமன்றங்களுக்கு அவர் எப்படி இழுத்துச் செல்லப்பட்டார்; எவ்வளவு பொறுமையாக அதைத் தாங்கினார்; தியாகியான தனது தந்தையின் பணியின் வெற்றியைப் பிரகடனப்படுத்துவதற்கும், கலீபா என்று தன்னைத் தானே அடையாளம் கட்டிக்கொண்ட ஒருவனை ஒரு புறஜாதியாக அம்பலப்படுத்துவதற்கும் தனது நாவைப் பயன்படுத்தி யஸீத்தின் சட்டவிரோத ஆட்சியின் அடித்தளத்தையே அவர் ஆட்டம் காணச் செய்தார்.

உமையா கொடுங்கோலர்களின் கொந்தளிப்பான சகாப்தத்தில் அவர் உம்மத்தை திறம்பட வழிநடத்திய அவரது 34 ஆண்டுகால இமாமத்தின் புகழ்பெற்ற நிகழ்வுகளை விவரிப்பது கடுமையான காரியமாகும். உமையாக்கள் அனைவரும் தங்கள் ஆட்சியைப் போலவே, பொய்கள், வஞ்சகம், தேசத்துரோகம், வசை, இரத்தம் சிந்துதல் மற்றும் உண்மையை வெளிப்படுத்துவதைத் தவிர ஒவ்வொரு அருவருப்பான வார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு நாவை தவறாகப் பயன்படுத்தினர் என்பது சரித்திரம்.

ஆகவே, தார்மீகத்தில் திவால் அடைந்துள்ள இன்றைய உலகில் இந்த மறுக்க முடியாத உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அவரது மாசற்ற அஹ்ல் அல்-பைத் ஆகியோரைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம், மனிதகுலத்தின் எதிரிகளைப் பின்பற்றி சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடாது.

மனிதர்கள் தங்கள் நாவை சரியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும், அதன் உரிமைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற  இமாம் ஸைனுல் ஆபிதீன் (அலை) அவர்களின் அழைப்பிற்கு செவிசாய்ப்பது நம் மீது கடமையாகும், ஏனென்றால் சரியாக பயன்படுத்தப்படாவிட்டால், அந்த நியாய தீர்ப்பு நாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் நாக்கு அதன் உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக புகார் செய்யும். நன்மை தீமை இரண்டும் நாவினால் பரவும். ஒரு நபரின் ஆளுமையை அளவிடுவதற்கான உண்மையான மானி நாக்கு என்பது கவனிக்கத்தக்கது.

இந்த உணர்திறன் உறுப்பின் உதவியுடன், உணவுகளின் இனிப்பு, கசப்பு, புளிப்பு மற்றும் காரம் ஆகியவற்றை ஒருவர் புரிந்து கொள்ள முடியும் என்பது உண்மையே, ஆனால் இமாம் ஸைனுல் ஆபிதீன் (அலை) அவர்கள் அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை வலியுறுத்துகிறார், அமைதி, புரிதல், செழிப்பு மற்றும் பரிபூரணத்தை, குடும்பத்தில், சமூகத்தில், மற்றும் மனித குலத்தில் ஊக்குவிக்க, கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவிக்க நமது நாக்கு முக்கியமானது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூளை அல்லது புத்தி, மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்துகிறது, உண்மையில் ஒரு சிக்கல் மற்றும் அதன் சரியான அவிழ்ப்பு நாக்கைச் சார்ந்துள்ளது, மேலும் சந்தேகங்கள், நிச்சயமற்ற தன்மை, தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு ஆகியவற்றைப் பரப்புவதற்கு நம் நாக்கை சமூகத்தில் உண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், உண்மைகளை சிதைப்பதற்கும் பயன்படுத்தினால். இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அலை) அவர்களை உண்மையாக பின்பற்றுபவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் நிச்சயமாக தகுதியற்றவர்கள் ஆவோம்.

இறுதியாக இமாம் ஸைன் அல்-ஆபிதீன் (அலை) அவர்களின்  ஓர் அழகான நன்றி அறிக்கையுடன் இந்த கட்டுரையை முடிக்கலாம் என்று விரும்புகிறேன்:

"யா அல்லாஹ், உனது மாபெரும் அருட்கொடைகளை முன் முன் என் நன்றி மிகச் சிறியது, என் மீதான உனது தாராள மனப்பான்மைக்கு முன் (அதைப் பற்றிய) என் புகழ்ச்சியும் அற்பமானது! உனது தயாளத்தன்மை என்னை விசுவாசத்தின் ஒளிகளின் ஆடைகளால் போர்த்தியுள்ளது, உனது மகா கிருபை சாந்தம் மற்றும் வலிமையின் மெல்லிய திரைகளை என் மீது இறக்கியது! உனது கருணை என்னை அசைக்க முடியாத, உடைக்க முடியாத கழுத்து சரத்தால் என்னை அலங்கரித்தது! நீ எனக்களித்த வரங்கள் ஏராளம் - எண்ணிட முடியாத அளவுக்கு என் நாக்கு பலவீனமானது! உனது உதவிகள் ஏராளம் - என் புரிதல் அவற்றைப் பற்றிக்கொள்வதில் குறைவுபடுகிறது.

அப்படியானால் நான் எப்படி நன்றி செலுத்துவது? நான் நன்றி செலுத்தவும் உனது தயவு தேவை. "புகழ் உனக்கே" என்று நான் சொல்லும் போதெல்லாம், "புகழ் அனைத்தும் உனக்கே உரியது!" என்று கூறுவது என் மீது கடமையாகிறது. யா அல்லாஹ், உனது கருணையால் எங்களுக்கு உணவளித்து, உனது அருளால் எங்களை வளர்த்தாய், எனவே எங்களுக்கு உனது உதவிகளையும் பூர்த்தி செய்வாயாக; வெறுக்கப்படும் பழிவாங்கும் குணத்தை எங்களிடமிருந்து விரட்டிவிடு, மற்றும் இரண்டு வசிப்பிடங்களின் பங்குகளை (உலகம் மற்றும் மறுமை வாழ்க்கை), எங்களுக்கு உனது மிக உயர்ந்த மற்றும் மகத்தான, உடனடி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட இரண்டையும் தந்தருள்வாயாக.! ஓ சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வே, உனது கருணையால், தயாளனாக விளங்குபவனே; கருணையாளர்களில் மிக்க கருணையாளன் நீயே...!

https://kayhan.ir/en/news/100776/tongue-%E2%80%93-the-barometer-of-truth

No comments:

Post a Comment