Contributors

Saturday, January 7, 2023

சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவோம்...!

 Media war against Iran and the social responsibility


கடந்த 16 செப்டம்பர் 2022 அன்று, 22 வயதான ஈரானியப் பெண் மஹ்சா அமினி, கைதுசெய்யப்பட்டு, உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரானில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் வெடித்தன என்பதை நாம் அறிவோம். கலவரங்களை வியாபிக்கச் செய்வதற்கு ஈரானின் எதிர் சக்திகள் பயன்படுத்தியது ஊடகங்களை, குறிப்பாக, சமூக ஊடகங்களை என்பது குறிப்பிடத்தக்கது. மேலை நாட்டவர் ஏனைய நாட்டவர்களுக்கு கற்றுத்தரும் எந்த ஊடக நெறிமுறையும் இதன்போது கடைபிடிக்கப்படவில்லை. ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டிய சமூக ஊடகங்களை ஈரானுக்கு எதிரான, அழிவுக்கான ஆயுதமாகவே அவற்றைப் பயன்படுத்தின என்றால் மிகையாகாது.

நாம் வாழும் இந்த சகாப்தத்தின் முக்கிய அம்சம், தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றம், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் அபார வளர்ச்சி. இக்காலகட்டத்தில் நம் வாழ்வில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான தாக்கம் என்ன? நாம் வாழும் விதம் எவ்வாறு அமைந்துள்ளது? மற்றும் நம் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறோம்? போன்ற விடயங்களில் முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இணங்க நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் செலவழிப்பதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கம் என்பதை புரிந்துகொள்கிறோம்.

அல்லாஹுத்தஆலா அனைத்தையும் அறிந்தவன் என்பதால், அவன் குர்ஆனை இறக்கி, அதன் நடைமுறைப் பயன்பாட்டை ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் மூலம் நமக்குக் காட்டித் தந்துள்ளான். எனவே, இறுதிக் குறிக்கோளை மறந்துவிடாமல், எந்தப் புதிய முன்னேற்றங்களையும் சமூகம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் கருவிகளுடன் அல்லாஹு தஆலா கடைசி நாள் வரை மானுடர்களை சித்தப்படுத்தியுள்ளான்.

முன்பெல்லாம் ஒரு செய்தி ஒருவனை சென்றடைய நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் காலம் எடுக்கும். இப்போது அவ்வாறல்ல, சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்ற புதிய தகவல்தொடர்பு முறைகளுக்கு வழிவகுத்த இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரவலான பயன்பாடு மனித வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவனுக்கு ஒரு செய்தியை உடனடியாகவே வழங்கக்கூடிய ஆற்றலை இந்த தொழில்நுட்பம் மனிதனுக்கு வழங்கியுள்ளது. இது நமது காலத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆகும்.

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாசிப்பு மற்றும் எழுதுதலின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தாலும், பெரும்பாலும் அவற்றின் உள்ளடக்கம் மற்றும் தரம் மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. எனவே, இந்த ஊடகங்களின் தீங்கு விளைவிக்கும் அம்சங்களுக்கு இரையாகிவிடாமல் இருக்க ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் மற்றும் அதுபோன்ற போன்ற சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இது சம்பந்தமாக சில அத்தியாவசிய போதனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், தீங்கிழைக்கும் செயல்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும்.


செய்திகளை அனுப்புவதற்கு முன்னெச்சரிக்கை தேவை

ஒரு செய்தி எமக்கு கிடைக்கும் போது செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய எந்த முயற்சியும் எடுக்காது,  சிந்தனையற்ற விதத்தில் Forward பொத்தானை அழுத்துவது ஒரு பொதுவான போக்காக ஆகிவருகிறது. செய்திகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், அனுப்பியவரின் நோக்கத்தை அறியாமல் அல்லது பெறுநர்களில் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மற்றவர்களுக்கு அனுப்புவதில் இருந்து தவிர்ந்து கொள்வோம். இவ்வாறு அனுப்பப்படும் செய்திகள் பலசமயங்களில் தெளிவற்றவையாக, தனிநபர்களை இலக்குவைக்கப்பட்டவையாக இருப்பதை அவதானிப்பீர்கள்; அவற்றின் பின்னணியில் உள்ள உண்மை அரிதாகவே அறியப்படுகிறது.

எனவே, ஒரு செய்தியை அதன் உள்ளடக்கத்தை நிரூபிக்காமல் பரப்புவது மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பாவத்திற்கு வழிவகுக்கும்; ஒரு பொய்யைப் பரப்புவதும் அதற்கு ஆதரவாக இருப்பதும் பாவமான செயல் ஆகும். உள்ளடக்கம் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை செய்திகளைப் பகிரக்கூடாது. எந்தவொரு விஷயத்திலும் தவறான செய்திகள் அல்லது தவறான தகவல்கள் மற்றவர்களுக்கு தேவையற்ற கவலையையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும், மேலும் இது பொய்யைப் பரப்புவதற்கு சமமாக இருக்கும். நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஒரு நபர் ஒரு பொய்யர் என்று கருதப்படுவதற்கு தாம் கேட்டதை எந்த ஆய்வுமின்றி மற்றவரிடம் கூறுவது போதுமானது. (முஸ்லிம்)

'இஸ்லாம்' தொடர்பான செய்திகளை பகிரும்போது அதிக முன்னெச்சரிக்கை அவசியம்

இஸ்லாமிய இயல்புடைய செய்திகள் இன்னும் கூடுதலான முன்னெச்சரிக்கையை வேண்டி நிற்கின்றன. அல்குர்ஆனின் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அவற்றின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் (தமது கொள்கைகளுக்கு ஏற்றவிதத்தில்) செய்யப்பட்டு தவறான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன, சில சமயங்களில் அவை சுத்தப் பொய்யானவையாக இருப்பதையும் காண்கிறோம்; இதற்காக இவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதையும் பார்க்கிறோம்.

எந்த அடிப்படையுமற்ற, புனையப்பட்ட நன்மைகளை உறுதியளிக்கும் போலி செயல்கள் தொடர்பான செய்திகள், பலருக்கு முன்னனுப்புவதற்கான தலைப்புடன் பகிரப்படுகின்றன. சில சமயங்களில் 'இந்தச் செய்தியை குறைந்தபட்சம் இவ்வளவு  நபர்களுக்கு நீங்கள் அனுப்பவில்லை என்றால், உங்களுக்கு இது போன்ற தீயது நடக்கும்' என்ற எமோஷனல் பிளாக்மெயில் மற்றும் தவறான மிரட்டல்களும் அத்துடன் சேர்க்கப்படுகின்றன; இயற்கையாகவே இதுபோன்ற அனைத்து செய்திகளும் ஒரு முழு ஏமாற்று வேலை என்பதை புரிந்துகொள்வோம்.

செய்திகளின் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதி செய்யாமல், வெளித்தோற்றத்தில் இஸ்லாமிய போதனைகள் கொண்ட செய்திகளை அனுப்பும்போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆதாரப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் கூட சிந்தனையுடன் பகிரப்பட வேண்டும்.

இன்னொருவரின் ஆக்கத்தைத் திருடாதிருப்போம்

சமூக ஊடகங்களில் நாம் அவதானிக்கும் இன்னுமொரு மோசமான செயல் என்னவென்றால் பிறரின் ஆக்கமொன்றை தன்னுடைய ஆக்கமாக காட்டி, தனது பெயரில் வெளிடுவதாகும். இது மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும். ஓர் ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால், பொது நண்மைக்கருதி அதை மற்றவர்களுக்கும் அறியச்செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஆக்கத்திற்கு உரியவரின் பெயரிலேயே அதை பதிவிடுங்கள். அதனால் நீங்கள் குறைந்துபோய் விட மாட்டீர்கள்.

பகிர்வதற்கான அனுமதி?

சில நேரங்களில், செய்திகள் தனிப்பட்ட இயல்புடையவையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தனிநபர் அல்லது நிறுவனம் அல்லது ஒரு நாட்டைப் பற்றிய தகவல் அல்லது செய்தியாகவும் இருக்கலாம். அனுப்பியவர் அந்தத் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள சம்மதிப்பாரா என்பதை பகிர்வதற்கு முன் ஒருவர் சிந்திக்க வேண்டும். செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள குறிப்பிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்க்கொள்ள வேண்டும்; இல்லையெனில், பகிர்வது முற்றிலும் நெறிமுறையற்றது. ஒருவரின் தனிப்பட்ட கருத்தை எவ்வித மாற்றமும் செய்யாது பகிர்ந்தாலும் கூட,  நாமும் அதற்கு பொறுப்புதாரியாவோம்.

ஒரு பயனுள்ள செய்தி என்பதை உறுதி செய்தல்

நாம் விலகி நின்று புறநிலையாக சிந்தித்துப் பார்த்தால், சமூக ஊடகப் பயன்பாடுகளில் பெறப்படும் செய்திகளில் பெரும்பாலானவை பயனற்ற இயல்புடையவை என்ற முடிவுக்கே வருவோம். நல்ல செயல்களில் ஈடுபட கிடைக்கும் சந்தர்ப்பத்தை, பயனற்ற அல்லது சில சந்தர்ப்பங்களில் தீங்கு விளைவிக்கும் முயற்சியிலும் எமது விலைமதிப்பற்ற நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பதில் இருந்து நாம் தவிர்ந்துகொள்வோம்.

எந்தவொரு செய்தியையும் எழுதுவதற்கு அல்லது அனுப்புவதற்கு முன், “அந்த செய்தியால் இவ்வுலகில் யாருக்காவது ஏதேனும் நன்மை உண்டா?” என்று ஒருவர் சிந்திக்க வேண்டும். இல்லையாயின், இது ஒரு பயனற்ற செயலாகும், இவ்வாறான செயலை சகலரும் தவிர்க்க வேண்டும். பயனற்ற செயல் என்பது நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதாகும்.

ஒரு பயனற்ற செயல் தான் என்றாலும், அது அனுமதிக்கப்பட்டதாயின் என்ன தீங்கு என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம்; வெளிப்படையான தீங்கு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அடையக்கூடிய பயன் ஏதும் இல்லை என்றால், அதனால் உண்மையில் ஏற்பட்டது இழப்பேயாகும். பயனற்ற தன்மை ஒருவரை தவறின் எல்லைக்குக் கொண்டு வந்துவிடுகிறது, எனவே அதைத் தவிர்ப்பது சிறந்தது,

ஒரு தெளிவான செய்தி?

மேலே உள்ள அனைத்து வழிகாட்டுதல்களும் முறையாகப் பின்பற்றப்பட்டாலும் கூட, ஒரு செய்தி அதைப் பெறுபவர்களிடையே ஏதேனும் தவறான புரிதலை அல்லது தவறான எண்ணத்தை ஏற்படுத்துமா என்பதை ஒருவர் கருத்தில் கொள்ள வேண்டும்? இறுதியாகக் தகவல்களைப் பகிர்வது தவறான புரிதலை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதா? சமூகங்களுக்கிடையே பிரச்சனைகளைத் தோற்றுவிக்குமா என்பதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட செய்தி தவறான புரிதலை ஏற்படுத்துமா என்று ஒருவருக்கு உறுதியாக தெரியவில்லை என்றால் அல்லது சிறிய சந்தேகம் இருந்தால், அதை பகிரவோ அல்லது பிரசுரிக்கவோ கூடாது. இந்த விஷயத்தில் நாம் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும், ஏனெனில் சமூகத்தில் பிரச்சனை ஏற்படாதிருக்க பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. சமூகத்தில் குழப்பம் ஏற்படுத்துவது கொலையை விட கொடியது என்று இறைவன் எம்மை எச்சரிக்கின்றான்.

அனுமதியின்றி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்தல் அல்லது எடுத்தல்

மக்களின் தனிப்பட்ட உரையாடல்களை அவர்களின் அனுமதியின்றி பதிவு செய்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஊடக தர்மத்திற்கு எதிரானது; அது ஒரு நம்பிக்கை துரோகமும் கூட. ஒரு நபர் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது பொதுவாக விவாதிக்கப்படும் தலைப்புகள் ஒரு குறிப்பிட்ட சூழலில் மற்றும் அங்கு இருப்பவர்களுடன் தொடர்புடைய பின்னணியுடனானதாக இருக்கும். அத்தகைய உரையாடல்களில் இருந்து சில பகுதிகள் பகிரப்பட்டால், அது மிகப்பெரிய தவறான புரிதலை ஏற்படுத்தும் மற்றும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் தனிப்பட்ட சூழலில் இருக்கும்போது அவரின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் மற்றும் தெளிவான அனுமதி வழங்கப்பட்டால் மட்டுமே அவரின் குரலை பதிவு செய்ய வேண்டும். தனிப்பட்ட அல்லது முறைசாரா கூட்டமொன்றில் புகைப்படம் எடுப்பதற்கும் அல்லது வீடியோ எடுப்பதற்கும் இதே கொள்கை பொருந்தும்.

ஊடகத் துறையில் பொறுப்புக்கூறல்

தாம் எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொறுப்புக்கூறும்  தார்மீக பொறுப்பு எந்த ஓர் எழுத்தானுக்கும் உண்டு என்பதை மனதில் ஆழமாக பதித்துக்கொள்ள வேண்டும். இன்றில்லையாயினும்என்றாவது ஒரு நாள் நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டி வரலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். டிஜிட்டல் துறையில் நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் அழியா இடம்பெறுகின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆக, சமூக ஊடகத் தளங்களை உலக சமானத்திற்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தேசிய அபிவிருத்திக்காக மக்கள் நலனுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம்.

- தாஹா முஸம்மில்

Monday, January 2, 2023

ஆயுதங்களைக் காட்டி உலகை அச்சுறுத்திய காலம் மலையேறிவிட்டது

 Gone are the days of threatening the world with weapons

-          தாஹா முஸம்மில்

ஜெனரல் காஸிம் சுலைமானி பாக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகில் ஜனவரி 3, 2020, அதிகாலை வேளையில் அமெரிக்க ட்ரான் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.


சிரியாவையும் ஈராக்கையும் துண்டாடும் நோக்கத்துடன் அமெரிக்க சியோனிச கூட்டணியால் உருவாக்கப்பட்டதே ISIS எனும் பயங்கரவாத அமைப்பு என்பதை ஆரம்பத்தில் பலர் அறிந்திருக்கவில்லை. சவூதி அரேபியாவும் அதற்கு தாராளமாக நிதி உதவி வழங்கியது.

இஸ்லாமிய கிலாஃபா ஒன்றை அமைப்பதற்கான ஒரு போராட்டக்குழுவாகவே பலரும் அதை நினைத்திருந்தனர். காலப்போக்கில் அதனது பயங்கவாத நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக துளங்க தொடங்கின. எனினும் அதன் உண்மை சொரூபம் தெரிய வரும் போது காலம் கடந்திருந்தது. ஆனால் ஈரான் இஸ்லாமிய குடியரசு ISIS இன் இயல்தன்மையை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டது.

திடீரென தோன்றிய ஒரு போராட்டக்குழு, அதி நவீன ஆயுதங்களுடன், ராணுவரீதியாக பலம் பெற்றிருந்த ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பிராந்தியங்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆட்சி அமைப்பதானது, அமேரிக்கா, இஸ்ரேல் போன்றவற்றின் துணையின்றி நடப்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

ISIS பயங்கரவாத தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈராக் மற்றும் சிரிய அரசாங்கங்கள் ஈரானின் உதவியை நாடின. இவர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நன்கு உணர்ந்திருந்த ஈரானும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியது. இதற்கு ஜெனரல் காஸெம் சுலைமானி மிகைத் திறமையாக தலைமை வகித்து, இப்பிராந்தியத்தில் ISIS தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ISIS ஒழிக்கப்பட்டதானது எண்ணெய் வளம் கொண்ட இப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய திட்டத்திற்கு கிடைத்த பெரும் தோல்வியாகும். இதை சகித்துக்கொள்ள முடியாத அமேரிக்கா ஈரான் இஸ்லாமியக் குடியரசைப் பழிவாங்க எண்ணியது. அமெரிக்க மற்றும் சியோனிசத்தின் சதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று, அந்த சதியை முறியடித்த அந்த செயல் வீரரான ஜெனரல் காஸெம் சுலைமானியை கோழைத்தனமான முறையில் பழிவாங்கியது.

தூதுவனாகச் செல்லும் ஒருவரை கொலைசெய்வது மிகவும் இழிவான செயலாகும். அந்த இழிவான செயலை செய்யும்படி நானே உத்தரவிட்டேன் என்று ட்ரம்ப் பெருமையடித்தது, அதைவிட கேவலமானது.

ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதக் குழுவானது இப்பகுதியில் செயல்பட்ட சியோனிஸ்ட் மற்றும் அமெரிக்க கூலிப்படையினராகும், அது தோன்றிய வேகத்திலேயே அழிந்து போகும் என்று அமெரிக்க சியோனிச கூட்டணி ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. இப்பகுதியில் ஐ.எஸ்.ஐ.எல்ஊடாக தமது ஆதிக்கம் நிலைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். போராட்டத்தில் காயமடைந்தவர்களை, இஸ்ரேலிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, சிகிச்சையளித்ததானது ISIS அமெரிக்க, சியோனிச கூலிப்படை என்பதற்கு உறுதியான சாட்சியாகும்.

பிராந்தியத்தில் இவ்வாறான குழப்பங்கள், போர் சூழல் மற்றும் பாதுகாப்பின்மையால் பயனடைபவர்கள் முதலில் சியோனிஸ்டுகள் பின்னர் அமெரிக்கர்கள் மட்டுமே; ஈராக், சிரியா, லெபனான், யெமன் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பாதுகாப்பற்ற சூழல் தொடருமாயின் பிராந்தியத்தில் உள்ள எவரும் அதனால் பயனடைய மாட்டார்கள்.

தமது சதித்திட்டங்களை செயல்படுத்த சொந்த நாட்டவர்களையே பலியிட தயங்காத ஏகாதிபத்திய கும்பல் தமது திட்டங்கள் தவிடுபொடியாக காரணமாக நின்ற ஒரு சிறந்த மனிதரை பழிவாங்க நினைத்தது.

தியாகி சுலைமானி ஒரு தனித்துவமானவர், துணிச்சலான தளபதி என்று சிலர் நினைக்கிறார்கள், அது உண்மைதான், ஆனால் அவர் மக்களின் உள்ளங்களில் நிலைத்திருக்க அது மட்டும் காரணமல்ல, எல்லா சூழலிலும் அவருடைய விவேகம் முக்கியமானது.

அவர் விவேகமுள்ள மனிதர், விஷயங்களைப் பகுப்பாய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்வதில் விற்பன்னர், அவர் பிராந்தியத்தின் மற்றும் உலக அரசியலை மிகச்சரியாக புரிந்து கொண்டவர், மேலும் அவர் தீவிர போக்கை கடைபிடித்த ஒருவரல்ல, வலது அல்லது இடது சாய்வு அவரிடம் இருக்கவில்லை.

எந்தப்பிரிவினரும் தியாகி சுலைமானியை சொந்தம் கொண்டாட முடியாது, தியாகி சுலைமானி ஒரு தேசிய ஹீரோ மற்றும் முழு ஈரானிய தேசத்திற்கும், பிராந்திய நாடுகளுக்கும், புரட்சிகர முஸ்லிம்களுக்கும் ஒரு கௌரவ சின்னம். எதிரிகள் இந்த மனிதரை எம்மிடம் இருந்து பிரித்துவிட்டால் தமது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இருக்கும் தடை நீங்கிவிடும் என்று தப்புக்கணக்குப் போட்டனர்.  ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாற்றமாக இந்த தேசிய நாயகன் ஒரு நித்திய நாயகனாக மாறினார், ஈரானிய வரலாற்றில் தியாகி சுலைமானி சிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

பிராந்தியத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்ட பெரும் முயற்சிகளை மேற்கொண்ட ஒருவராகும், அதனால் முழு பிராந்திய மக்களும் தியாகி சுலைமானிக்கு நிறைய கடமைப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஆணவ சக்தியாலும் சியோனிசத்தாலும் பயிற்றுவிக்கப்பட்ட கொடூரமான ஐ.எஸ்.ஐ.எல் பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைக்க விரும்பியது. மற்றும் அமெரிக்கா, சியோனிசம் மற்றும் பிராந்தியத்தில் தங்கள் மக்களின் நலன்களை பணயம் வைத்த அரபுத் தலைவர்கள் தங்கள் கூட்டு சதிகளை முறியடித்ததற்காக தியாகி சுலைமானியை பழிவாங்கினார்கள்.

சுலைமானி மற்றும் அல்-முஹந்திஸ் ஆகியோரின் உயிர்த்தியாகம் ஈரான் மற்றும் ஈராக்கிய மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமெரிக்க வெறுப்பை அதன் உச்சகட்டத்துக்கு இட்டுச் சென்றது எனலாம்; மில்லியன் கணக்கானோர் இவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டதானது, வெள்ளை மாளிகையில் இருப்போருக்கு செருப்பால் அடித்தது போலாகும்.

இந்த சம்பத்தின் பின்னர் அமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஈராக் பாராளுமன்றத்தின் முடிவு ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவாகும்.

மேலும் சுலைமானியைக் கொன்று பிராந்தியத்தில் தமக்கிருந்துவரும் தடையை உடைப்பதே எதிரியின் குறிக்கோளாக இருந்தது, ஆனால் நடந்ததோ முற்றிலும் முரணானது; அது பிராந்தியத்தில் அமெரிக்க எதிர்ப்பின் உணர்வை மென்மேலும் அதிகரித்தது.

சுலைமானியின் உயிர்த்தியக்கத்திற்குப் பின் அப்பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கர்கள் முழுமையாக வெளியேறும் வரை அவர்கள் மீதான வெறுப்பு அதே உற்சாகத்துடன் தொடரும் என்பதை பிராந்திய மக்கள் மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளனர். சுலைமானியின் தியாகத்திற்குப் பிறகு, “சுலைமானியின் கையைத் துண்டித்தால், நாங்கள் உங்கள் கால்களைத் துண்டிப்போம் என்பதை மக்கள் மீண்டும் வலியுறுத்தினர். நீங்கள் இங்கிருந்து முற்றாக வெளியேறும் வரை எமது எதிர்ப்பை தொடர்வோம் என்று மக்கள் சபதம் எடுத்தனர்".

பிற நாடொன்றுக்கு சமானத் தூதராக செல்லும் ஒருவரைக் கொல்லும் ட்ரம்பின் இந்த முட்டாள்தனமான மற்றும் இழிவான செயலின் விளைவுகளில் ஒன்று, நீதி நியாயத்தில் நம்பிக்கைக்கொண்ட மக்கள் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் அமெரிக்க நிர்வாகம் கெடுத்துக் கொண்டது எனலாம். இப்போது ட்ரம்ப் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுள்ளார். ஆயுதங்களைக் காட்டி உலகை அச்சுறுத்திய காலம் மலையேறிவிட்டது; ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவ தளமொன்றை ஈரான் தாக்கி அழித்த சம்பவம் ஞாபகம் இருக்கும்.

அமெரிக்காவின் பச்சோந்தித்தனத்தை உலகம் நன்றாக புரிந்துகொண்டுள்ளது. பின்வரும் காலம் ஏகாதிபத்தியத்திற்கு முடிவுகட்டப்பட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய கௌரவமான ஸ்திரத்தன்மைக்கு ஒரு சிறந்த காலமாக அமையும் என்று நம்பலாம்.

Friday, December 30, 2022

ஈரானைப் பற்றி நீங்கள் இதுவரை அறியாத விடயங்களும் அதற்கு எதிரான சதிகளும்

Things You Didn't Know About Iran and Conspiracies Against It

By Ali Abadi


ஈராக்கிய இஸ்லாமிய எழுத்தாளரும், பல புத்தகங்களை எழுதியவருமான அலி அல்-முஃமினின் இடுகை ஒன்றில் ஈரானிய மக்கள் பெறும் "அதிசயத்தக்க அரசாங்க நிவாரணங்கள்" பற்றி அவர் குறிப்பிடுகிறார்.

திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் ஈரானின் மஷ்ஹத் நகரில் வசித்து வரும் இவர் ஈரானிய தாயிடமிருந்து ஈரானிய குடியுரிமையைப் பெற்ற ஈராக்கிய இளைஞன் ஆவார். அவர் தனது அனுபவத்தை பின்வருமாறு விவரிக்கின்றார்.

ஈராக்கியரான இவர் முன்பு ஸ்டாக்ஹோமில் மூன்று ஆண்டுகள் மற்றும் துபாயில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவர் ஈரானின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சேவைகளைப் பற்றி விவரிக்கையில்,

ஈரானிய அரசு தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 300,000 டொமன்கள் (சுமார் $8) நிதியுதவி வழங்குகிறது. குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கும் ஒருவர் மாதத்திற்கு 1,500,000 டோமன்களைப் பெறுகிறார், இது 40 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயமாகும். இந்த தொகை அவருக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சேவைகளின் செலவுகளையும் ஈடுகட்ட போதுமானது. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • 1- தடங்கலற்ற மின்சாரத்திற்கான கட்டணம்: மாதத்திற்கு 120,000 டோமன்கள், இது 3.00 அமெரிக்க டொலருக்கு சமமான உள்ளூர் நாணயம்.
  • 2- தண்ணீருக்கான கட்டணம்: மாதத்திற்கு 80,000 டோமன்கள், இது 2.10 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 3-      சமையல் எரிவாயுக்கான கட்டணம், அதாவது, வீட்டின் குழாய் வழியாக வழங்கப்படும் எரிவாயு, சராசரியாக மாதத்திற்கு 110,000 டோமன்கள், இது 3 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 4-   உள்ளூர் மற்றும் தேசிய பயன்பாடு உட்பட லேண்ட்லைன் தொலைபேசி கட்டணங்கள்: மாதத்திற்கு 30,000 டோமன்கள், இது 0.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 5-      வரம்பற்ற வைஃபை கட்டணம்: மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 6-      மூன்று தொலைபேசி லைன்களுக்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: சராசரியாக மாதத்திற்கு 90,000 டொமன்கள், இது 2.60 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 7- மூன்று மொபைல் லைன்களுக்கான வரம்பற்ற இணையத்திற்கான கட்டணம் - அவருக்கு, அவரது மனைவி மற்றும் அவரது மூத்த மகனுக்கு: மாதத்திற்கு 60,000 டொமன்கள், இது 1.80 அமெரிக்க டொலருக்கு சமம்.
  • 8-      அவர்களின் காருக்கான பெட்ரோலின் மானிய விலை (டேங்கை நான்கு முறை நிரப்புதல்): சராசரியாக மாதத்திற்கு 420,000 டோமன்கள், இது 11 அமெரிக்க டொலருக்கு சமம்.    மேலதிக பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள். ஈரானிய அரசாங்கம் ஒவ்வொரு தனிப்பட்ட காருக்கும் மாதத்திற்கு 60 லிட்டர்களை லிட்டருக்கு 1,500 டோமன்கள் என்ற குறைக்கப்பட்ட விலையில் வழங்குகிறது, இது உலகில் பெட்ரோலின் அதிகுறைந்த விலை. (பெட்ரோல் உற்பத்தி செய்யும் அண்டை அரபு நாடுகளில் கூட விலை இதைவிட அதிகம்).
  • 9-  ஐந்து நபர்களுக்கான உடல்நலக் காப்பீட்டுத் தொகைகள்: மாதத்திற்கு 300,000 டொமன்கள், 8 அமெரிக்க டொலருக்கு சமம். (காப்பீடு அனைத்து செயல்பாடுகள், சிகிச்சைகள், மருந்து, எக்ஸ்ரே மற்றும் பிற மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியது.)

இவ்வாறு, மின்சாரம், தண்ணீர், எரிவாயு, தகவல் தொடர்பு, இணையம், உடல்நலக் காப்பீடு மற்றும் பெட்ரோல் உட்பட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்ட ஒரு குடிமகன் ஒவ்வொரு மாதமும் செலவிடும் மொத்தத் தொகை சுமார் 1,300,000 டொமன்கள் ஆகும், இது 34 அமெரிக்க டொலருக்கு சமம்.

இதன் பொருள் ஈரானிய அரசால் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவு பல்வேறு சேவைகளுக்கான அவரது செலவுகளை விட அதிகம். ஓர் அரசு இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது வளர்ந்த மேற்கத்திய மற்றும் பணக்கார அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் மிகவும் அரிதான ஒன்றாகும். இவற்றைத் தவிர, கல்வி, சமூக பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு துறைகளுக்கு அரசு உதவி வழங்குகிறது.

மக்கள் நலன் மீது இவ்வாறெல்லாம் அக்கறை செலுத்தும் ஒரு நாட்டில் சில ஈரானியர்கள் தங்கள் நாட்டின் நிலைமைக்கு எதிராக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? என்று சிலர் மனதில் கேள்வி எழுவது நியாயமானதே.

இஸ்லாமிய புரட்சியைத் தொடர்ந்து கடந்த நான்கு தசாப்தங்களாக ஈரானுக்கு எதிரான தொடர் பிரச்சாரம், கடுமையான பொருளாதாரத்தடை, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற இன்னோரன்ன எதிர் நடவடிக்கைகள் ஈரானிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இஸ்லாத்தின் அடிப்படையிலான சில ஒழுக்கக்கட்டுப்பாடுகளும் ஈரானில் உள்ளன. இவ்வாறிருக்கையில், மேலைத்தேய தாராண்மைவாத கொள்கையினால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று மேற்குலக ஊடகங்கள் செய்யும் விஷமப் பிரச்சாரம், வெளிநாட்டு வாழக்கை முறையை முன்னுதாரணமாகக் கருதும் சில மேட்டுக்குடி ஈரானிய மக்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளது. அவ்வாறானோருக்கு மேற்கத்தேய ஊடகங்கள் வழங்கி வரும் ஆதரவு, ஈரானின் உண்மை நிலையை அறிய முடியாதவாறு உலக மக்களையும் தடுமாறச் செய்துள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க முற்றுகையால் சுமத்தப்பட்ட அழுத்தங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ள போதிலும், மக்களுக்கு நிலையான சேவைகளை வழங்குவதில் ஈரான் மிகவும் உறுதியாகவும் உள்ளது..

நாட்டு மக்களுக்கு ஈரானிய அரசாங்கம் என்ன என்ன சேவைகளை வழங்குகிறது என்பதை அறியாத சிலரால் இன்று கண்டிக்கப்படுகிறது. ஈரான் இஸ்லாமிய குடியரசு அதன் தொடக்கத்திலிருந்தே, இஸ்லாமிய நோக்கங்களுக்கிணங்க நாட்டில் வறுமையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து, சேவை மட்டத்தில் அதன் மக்களுடன் இணக்கமான உறவை கையாண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பது பொதுவாக எல்லோரும் அறிந்த உண்மை, ஆனால் ஓர் அரசால் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஈரானிய எதிர்ப்பு பிரச்சாரம் பின்வரும் தலைப்புகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது நாம் அவதானிக்கின்றோம்:

·         ஈரானில் உள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சனையின் மீது இலக்கு வைக்கப்பட்ட பிரச்சார யுத்தத்தை நடத்தி, அதை பெரிதுபடுத்துதல், ஈரானிய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் விரக்தியின் விளிம்பில் உள்ளனர் போன்ற உணர்வுகளை அதிகப்படுத்துதல் மற்றும் அவ்வாறான கதையை ஊக்குவித்தல்

·        அபிவிருத்தி, தொழில்நுட்ப வளர்ச்சி அல்லது சாதனைகளை இழிவுபடுத்துதல் அல்லது சிறுமைப்படுத்துதல் அல்லது ஈரானிய அரசு வழங்கும் சேவைகளை மட்டம் தட்டுதல்.

·         பிராந்தியத்திலேயே ஈரானிய மக்கள் தான், குறிப்பாக பெண்கள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் என்ற உண்மையை மறைத்து,  ஈரானிய பெண்கள் பல துறைகளில் (நிர்வாகம், சட்டமியற்றுதல், அறிவியல், கலை மற்றும் விளையாட்டு) முக்கிய இருப்பைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையை மறைத்து துர்பிரசாரங்களை மேற்கொண்டு வருதல். மக்கள் ஆட்சேபனைகளை எழுப்பும் பல பிரச்சினைகளை கையாளும் போது ஈரானிய ஆட்சி நெகிழ்வுத்தன்மையைக் கடைபிடிப்பதையும், அதை சரிசெய்யும் திறனையும் கொண்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பயனுள்ளது.

·         ஈரானிய மக்கள் படும் கஷடத்திற்கு அமெரிக்கா அல்ல, ஈரானே காரணம்; முன்னைய ஆட்சியாளர்களில் அரசியல் "நெகிழ்வு" இல்லாததால் தான்  இந்த நிலை, அமெரிக்காவின் மேலாதிக்கப் போக்கினால் அல்ல என்று கூறும் அளவிற்கு மூளைச்சலவை செய்வது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களே பொறுப்புக்கூற வேண்டும், ஆக்கிரமிப்பாளன் அல்ல என்ற மனநிலையை ஏற்படுத்துவது.

·         ஈரான் மேற்குல நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடல்ல, சர்வதேச அளவில், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச சமூகத்திற்கு வெளியே உள்ளது. ஈரான் மேற்குலக தரநிலைகள் மற்றும் சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்பதுதான் இவர்களது எதிர்பார்ப்பு. இவர்களது ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, ஈரான் சுதந்திரமாக செயல்படுவதே ஈரானிய மக்களுக்கு தேவையான மருந்துகள் கூட சென்றடைவதைத் தடுக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்குவது..

பாலஸ்தீன் மீட்புக்காக செலவுசெய்தல், லெபனானிலும் பலஸ்தீனிலும் போராட்டக்குழுக்களுக்கு ஆதரவு வழங்குதல், அவற்றுக்காக செலவு செய்தல் ஈரானின் செல்வத்தை வீணடிக்கும் செயல் என்று மனதில் பதியச் செய்தல். ஈரானுக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத லெபனான் மற்றும் காஸாவில் போராட்டக்குழுக்களை ஆதரிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, ஆகவே "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற கோஷத்தை ஒலிக்கச் செய்தல்.

லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் விடுதலை போராட்ட குழுக்களுக்கு ஈரானின் ஆதரவு, ஈரானுக்கு எதிரான கடுமையான அச்சுறுத்தல்களை முறியடித்தது என்பது இந்த "லெபனானும் வேண்டாம், காஸாவும் வேண்டாம்" என்ற சூத்திரத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அறியமாட்டார்கள்.

ஈரான் பல திட்டங்களில் வெற்றிகரமான முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், இஸ்லாமிய குடியரசு சில விஷயங்களில் தவறான பொருளாதார நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே, இமாம் செய்யிதலி காமனெய் பலமுறை இதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமாக, அனுபவத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்; அது நம்பிக்கையை மீட்டெடுக்கும். ஈரானை அடிமைப்படுத்தும் நோக்கத்தோடு எதிரிகள் உள்நுழையக்கூடிய ஓட்டைகளை கண்டறிந்து அடைக்க வேண்டும்.

எனினும், பரந்து விரிந்து வாழ்ந்தாலும், தங்கள் நாட்டைப் பற்றிய தவறான பிம்பத்தால் ஏமாற்றப்பட்ட ஈரானியர்கள் சிலர் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாதது. அமெரிக்கமயமாக்கலாக மாறியுள்ள உலகமயமாக்கல் என்பது, தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய ஈரானியர்களின் சுயாதீனமான அனுமானங்களைக் காட்டிலும் உயர்வானது எனும் மாயை, மேற்குலகின் கலாச்சாரம் மற்றும் ஈரானின் யதார்த்தத்தைப் பற்றிய அதன் கற்பனையான பார்வைக்கு நெருக்கமாகத் தோன்றும் பொய்யான பார்வை மற்றும் கனவுகள் கொண்ட ஒரு கலவையான யதார்த்தமாகும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்..

இங்கு, ஈரானிய ஊடகங்களும், கலாச்சார விவகாரங்களில் அக்கறை கொண்ட அதிகாரிகளும் பொதுச் சிந்தனையை சரிசெய்வதில் முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். தற்புகழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக இலக்கை நோக்கிய ஊடகத்தை வளர்த்து, மேற்கத்திய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இலக்காகக்கூடிய, வெளிநாட்டு ஊடகங்களால் மூளைச்சலவை செய்யக்கூடிய நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

https://messageofwisdom.blogspot.com/2022/12/irans-wonders-and-intensive-propaganda.html?m=1