Contributors

Saturday, January 1, 2022

பாகிஸ்தான், ஈரான், துருக்கி முத்தரப்பு ஒத்துழைப்பு

The TI rail link between Pakistan, Iran and Turkey is a major challenge to US efforts to isolate Iran.


பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் இரயில்வே அமைச்சர்கள் மற்றும் இஸ்லாமாபாத்தில் ஈரானிய தூதுவர் கலந்துகொண்ட நிகழ்வில், டிசம்பர் 21, 2021 செவ்வாய்க்கிழமை முதல் சரக்கு ரயில் பாகிஸ்தான் தலைநகரில் இருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக துருக்கிக்கு இயக்கப்படும் முதல் சரக்கு ரயில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புறப்பட்டது.

பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (ECO) மூன்று நாடுகளின் வர்த்தக உறவுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் இது அமைந்தது.

இஸ்லாமாபாத்தில் இருந்து துருக்கிய நகரத்திற்கு 6,540 கிமீ பயணம் முடிவுற 10 நாட்களே ஆகும், இதுவே கடல் வழியாக சொல்வதாயின் 21 நாட்கள் எடுக்கும். ஆக, இந்த ரெயில் பயணம் கடல் வழிக்கு தேவையான நேரத்தை விட பாதி குறைவாகவே எடுக்கும்.

அரிசி, பேரீச்சம்பழம் மற்றும் இளஞ்சிவப்பு உப்பு ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் ரயில் செவ்வாய்கிழமை பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள மார்கலா ஸ்டேஷனில் இருந்து ஒரு டசனுக்கும் அதிகமான கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு போஸ்பரஸ் ஜலசந்தியில் உள்ள துருக்கிய நகரத்திற்கு சென்றது.

இது பாகிஸ்தானுக்குள் 1,990 கி.மீ தூரத்தை கடக்கும், குவெட்டா வழியாக ஈரானிய எல்லையில் உள்ள டஃப்டான் (Taftan) வழியாகவும், தெஹ்ரான் மற்றும் தப்ரிஸ் வரை 2,603 கி.மீ தூரம் வழியாக அங்காரா ஊடாக இஸ்தான்புல்லை சென்றடையும்.

மூன்று நாடுகளும் இஸ்லாமாபாத்-தெஹ்ரான்-இஸ்தான்புல் (ITI) கன்டெய்னர் ரயில் சேவையை 2009 இல் தொடங்கின, ஆனால் அது சோதனை ஓட்டங்களாக மட்டுமே இருந்தது, முழுமையாக செயல்படவில்லை.

இருப்பினும், ஆரம்ப சரக்கு ரயில்களை பயணிகள் சேவைகளுடன் பின்தொடரவும், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியுடன் (பிஆர்ஐ) இணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இணைக்கும் நாடுகடந்த பாதையை இயக்கவும் திட்டமிட்டனர்.

"பாகிஸ்தானில் இருந்து ஈரான் மற்றும் துருக்கிக்கு கண்டெய்னர் ரயில் தொடங்க வேண்டும் என்பது பிராந்திய நாடுகளின் நீண்டகால கனவு, அது மீண்டும் நனவாகியது," என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் அசம் கான் ஸ்வாதி திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 

ECO இரயில் நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவதுவதோடு பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு பங்களிக்கும் என்றார்.

"பிராந்திய வணிக ஒருங்கிணைப்புக்கு இஸ்லாமாபாத்-தெஹ்ரான்-இஸ்தான்புல் ரயில் போன்ற முக்கியமான திட்டங்கள் மிகவும் தேவைப்படுகின்றன" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறினார்.

"மிகவும் பயனுள்ள வாகனங்களில் ஒன்றாக,உறுப்பு நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்த ECO ரயில் நிச்சயமாக உதவும்" என்று பாகிஸ்தான் பிரதமரின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத் வைபவத்தில் உரையாற்றும் போது கூறினார்.

ITI, விரிவாக்கத்தின் மூலம், சீனாவின் சின்ஜியாங் தன்னாட்சிப் பகுதியுடன் சேவை இணைக்கப்படும், இது இனரீதியாக துருக்கிய உய்குர் முஸ்லிம்கள் வசிக்கும் மற்றும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரங்களை இணைக்கும் ஒரு டிரில்லியன் டாலர் திட்டமான BRI ஐ மேலும் அதிகரிக்கும்.

குறிப்பாக ஈரானிய போக்குவரத்தை BRI இன் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது மற்றும் மேற்கு ஆசிய நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நெருக்கமான ஈடுபாட்டை நாடியுள்ளது. மறுபுறம், ஐடிஐ இரயில் பாதை, அமெரிக்கத் தடைகளைத் தாண்டி ஈரானுக்கு உதவும்.

தெஹ்ரானைப் பொறுத்தவரை, இது ஒரு கவர்ச்சிகரமான மாற்று வர்த்தக பாதையாகும், ஏனெனில் ECO நாடுகள் உள்நாட்டு நாணயங்களில் வர்த்தகம் செய்யக்கூடியதாக இருக்கும்.

ECO என்பது 1985 இல் ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கியால் நிறுவப்பட்ட 10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார அரசுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பைக் குறிக்கிறது.

இஸ்லாமிய குடியரசுடனான அனைத்து சர்வதேச வர்த்தக முறைகளையும் துண்டிப்பதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக "அதிகபட்ச அழுத்தம்" என்ற கொள்கையை பின்பற்றி வருகிறது. இருப்பினும், ஈரானை அதன் அண்டை நாடுகளுடன் வர்த்தகம் செய்வதிலிருந்து தனிமைப்படுத்தி நிறுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது.

டிசம்பர் மாத தொடக்கத்தில், ஈரானின் சாலை பராமரிப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பின் அதிகாரி ஒருவர், பாரசீக வளைகுடாவை கருங்கடலுடன் இணைக்கும் போக்குவரத்து வழியை அமைப்பதில் இஸ்லாமிய குடியரசு, அஸர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் உடன்பாட்டை எட்டியுள்ளது என்றார்.

ஜோர்ஜியாவும் ஈரானும் ஒப்பந்தத்தில் இரு முக்கிய கட்சிகள். ஈரான் பாரசீக வளைகுடா வழியாக சுதந்திர  நீருடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் ஜார்ஜியா கருங்கடலுக்கு கிழக்கே இரண்டு முக்கிய வர்த்தக துறைமுகங்களைக் கொண்டுள்ளது" என்று ஜாவத் ஹெடாயாதி கூறினார்.

"மறுபுறம், ஜார்ஜியாவும் அஸர்பைஜானும் தங்கள் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன, எனவே இந்த இரு நாடுகளுடனும் ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் முயற்சித்தோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஈரானுடன் வலுவான வர்த்தக உறவுகளைக் கொண்டிருப்பதுடன், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய இரண்டும் அஸர்பைஜானின் நெருங்கிய நட்பு நாடுகளாக இருப்பதால், இந்தப் போக்குவரத்துப் பாதை ITI உடன் இணைக்கலாம் மற்றும் பிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கலாம்.

கடந்த மாதம், ஈரானும் பாகிஸ்தானும் தங்களது முதல் பண்டமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது ஈரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவுக்கு பாக்கிஸ்தான் அரிசியை பரிமாறிக்கொள்ளும் திட்டமாகும். இது இரு பெரிய அண்டை நாடுகளுக்கு இடையிலான வணிகத்திற்கான மிகப்பெரிய தடையை சமாளிக்கும் தேடலில் ஒரு பாய்ச்சலை குறிக்கிறது.

ஈரானும் பாகிஸ்தானும் தங்களது முதல் பண்டமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன,

அரிசி பண்டமாற்று வர்த்தகம் தவிர, இரு தரப்பினரும் எல்லைச் சந்தைகளை நிர்மாணிக்கவும், சர்வதேச சரக்கு போக்குவரத்து ஒப்பந்தத்தின் (டிஐஆர்) ஒத்துழைப்பின் கீழ் பாக்கிஸ்தான் ஐரோப்பிய மற்றும் காகசியன் சந்தைகளை அடையவும், ஈரான் சீன சந்தையை அணுகவும் ஒப்புக்கொண்டனர். .

வணிகம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை எளிதாக்கும் நோக்கத்துடன் தங்கள் எல்லையில் வசிப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் ஏப்ரலில், ஈரானும் பாகிஸ்தானும் தங்களது மூன்றாவது அதிகாரப்பூர்வ எல்லைக் கடவையைத் திறந்தன,

பாகிஸ்தானின் குவாடார் துறைமுகத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் பிஷின்-மண்ட் கிராசிங் உள்ளது, இதை சீனாவின் சின்ஜியாங் மாகாணத்துடன் இணைக்க $60 பில்லியன் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது.

ஈரானும் பாகிஸ்தானும் தங்களது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் கையெழுத்திடும் என்று நம்புகின்றனர், இது இருதரப்பு வர்த்தகத்தை இப்போது 1 பில்லியன் டாலரில் இருந்து ஆண்டுக்கு 5 பில்லியன் டாலராக உயர்த்தும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

ஈரான் துருக்கியுடன் மிக நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளையும் கொண்டுள்ளது, அவை இப்போது சுமார் $10 பில்லியனில் இருந்து ஆண்டுக்கு $30 பில்லியனாக உயர்த்துவதற்கு உறுதியளித்துள்ளன.

கடந்த திங்களன்று, தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் (NIOC) நிர்வாக இயக்குனர் Mohsen Khojasteh-Mehr, துருக்கிக்கு ஈரானிய இயற்கை எரிவாயு வழங்குவதற்கான 25 ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.


துருக்கி அதன் அனைத்து ஆற்றல் தேவைகளுக்கும் இறக்குமதியைச் சார்ந்துள்ளது. ஈரான் அங்காராவின் இயற்கை எரிவாயு வாங்குதலின் முக்கிய விநியோகத்தராகும், இயற்கை எரிவாயு துருக்கியின் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை உருவாக்க பங்களிப்பு செய்கிறது.

ஈரான் 1996 இல் கையெழுத்திட்ட விநியோக ஒப்பந்தத்தின் கீழ் துருக்கிக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை ஒரு குழாய் மூலம் விற்பனை செய்கிறது. எரிவாயு ஏற்றுமதிகள் தப்ரிஸ் முதல் அங்காரா வரை செல்லும் 2,577 km (1,601 மைல்கள்) குழாய் வழியாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.presstv.ir/Detail/2021/12/21/673117/Iran-freight-train-Silk-Road-ECO


Monday, December 27, 2021

முஸ்லிம் நாடுகளை வதைக்கும் சவூதி அரேபியா...!

Despotism Defeats Democracy


பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு பணமில்லா ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.

இன்றைய உலகில், மக்களை ஏமாற்றுவதற்காக, வார்த்தை ஜாலம் புரியும் சந்தேகத்திற்கு இடமில்லாத பல சர்வாதிகாரிகள் கூட ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்வது ஒரு ஃபேஷனாகிவிட்டது.

அமெரிக்காவில் ஆளும் ஜனநாயகக் கட்சியினரோ அல்லது எதிர்கட்சியினரோ எந்த ஜனநாயக அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. பிறப்புரிமை மற்றும் ஜனநாயகத்தைக் கோரும் மக்களைக் கொன்று குவிக்கும் வெறித்தனமான சர்வாதிகாரிகளை இவ்விரு தரப்பினரும் தீவிரமாக ஆதரிக்கின்றனர், எனினும் ஒடுக்கும் சர்வாதிகார ஆய்ச்சியாளர்களை ஜனநாயகவாதிகளாக காட்டி, பெருமை காட்டுவதில் மட்டும் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை.

மக்களை அடக்கி ஒடுக்கும் பஹ்ரைன் ஷேய்க் தன்னை ஒரு ஜனநாயகத்தின் காவலர் போல் காட்டிக்கொள்கிறார்.

எகிப்தில், அந்த நாட்டின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேயொரு அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்து, மோசடியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ராணுவ ஜெனரல், தன்னை ஒரு சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்ளாமல் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவர் என்றும் தன்னைக் காட்டிக் கொள்கின்றார்.

அரபு உலகில் வெட்கம் கெட்ட சர்வாதிகாரிகள் உள்ளனர், அவர்கள் மக்களின் உரிமைகளை ஒருபோதும் மதிப்பதும் இல்லை, ஜனநாயகம் என்ற கருத்தையே அவர்கள் வெறுக்கிறார்கள், ஜனநாயக பற்றி பேசுவோரை சிறையில் அடைக்கிறார்கள். அவர்கள் மோசடியாக சேர்த்துள்ள செல்வங்களைக் கொண்டு எதிர்மறையான செல்வாக்கைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்குவது கிடையாது. ஜனநாயகத்தின் சில வடிவங்களை ஓரளவு கொண்ட சக அரபு நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது அவர்களது வாடிக்கையாய் மாறியுள்ளது.

லெபனான் மீது ஏற்றுமதியை தடையை விதித்ததன்  மூலம், லெபனான் மற்றும் அதன் ஜனநாயக நிறுவனங்களின் மீது பிராந்தியத்தின் மூர்க்கத்தனமான குல, மதவெறி மற்றும் சர்வாதிகார ஆட்சியான சவுதி அரேபியா அழுத்தம் கொடுத்து வருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட லெபனான் தகவல் அமைச்சரான ஜார்ஜ் கோர்டாஹியை பதவி நீக்கம் செய்ய, சவுதியின் அழுத்தம் பிற நாடொன்றின் உள்விவகாரத்தில் தலையிடும் செயலாகும்.

ஒரு சகோதர நாட்டின் மீது சவூதி அரேபியா இவ்வாறு நடந்துகொள்வது ஏன்?

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது ஆய்வாளராக கலந்துகொண்ட கோர்டாஹி, லெபனான் இடைக்கால அமைச்சரவையில் சேர்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பு யெமன் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் சவுதி-எமிரேட்ஸ் இணைந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தாராம், யெமன் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பேச்சு வார்த்தை மூலம் பிணக்கை தீர்ப்பதற்கு அழைப்பு விடுத்து பேசினாராம், இரு சகோதர அண்டை நாடுகளுக்கு இடையிலான சண்டையில் அமெரிக்கா-இஸ்ரேல் தலையிடுவதையும் கண்டித்திருந்தாராம்.

இந்த அழுத்தத்தின் காரணமாக அமெரிக்க ஆதரவுடன் லெபனானை பணயக்கைதியாக வைத்திருக்கும் பணக்கார அரபு சர்வாதிகாரத்திற்கு பணமில்லா ஜனநாயகம் பரிதாபகரமாக பணிந்தது.

லெபனானின் சுதந்திர ஊடகங்கள் என்று அழைக்கப்படும் ஒரு சில பத்திரிகைகள் மற்றும் உண்மையான சுதந்திரமாக சிந்திக்கும் அரசியல்வாதிகள் கோர்டாஹியை ஆதரித்து, மக்கள் உரிமைகளை மதிப்பதாகக் கூறினாலும், துரதிர்ஷ்டவசமாக, சவூதி அரேபியாவின் சர்வாதிகார அழுத்தத்திற்கு மற்றும் மக்களை பிரதிநிதித்துவபடுத்தாத அரபு மன்னர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பணிந்தன.

சவூதியின் வாரிசு MBS (முகமது பின் சல்மான்) சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய லெபனான் பிரதமர் ச'அத் அல்-ஹரிரியை வரவழைத்து, அவரை நிர்பந்தித்து தனது ராஜினாமாவை தொலைக்காட்சியில் அறிவிக்கும்படி கட்டாயப்படுத்தியதையும் இந்த கட்சியினர் மறந்துவிட்டனர்.

மன்னர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிவதாயின் லெபனானின் ஜனநாயக மாண்பு எங்கே? தேர்தல்கள், வாக்குப்பெட்டிகள், அரசியல் கட்சிகள், மக்கள் உரிமைகள், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு என்ன நேர்ந்தது? மற்றும் தற்போதைய நிகழ்வுகளின் வெளிப்படையான மற்றும் நேரடியான பகுப்பாய்வுகளின் அர்த்தங்களுக்கு என்னவாயிற்று.?

கோர்டாஹி விவகாரத்தில் லெபனான் ஜனநாயகத்தை தோற்கடித்த பாரசீக வளைகுடா சர்வாதிகாரம் இப்போது அப்பாவிகளின் இரத்தத்தை கோருகிறது.

சமீபத்தில், லெபனானின் உள்துறை அமைச்சர் பஸ்ஸாம் மவ்லவி, பஹ்ரைனின் அடக்குமுறை ஆல்-இ கலீஃபா சிறுபான்மை ஆட்சியின் அழுத்தத்தின் பேரில், தனது நாட்டின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை கேலிக்குள்ளாக்கினார். மக்களின் பிறப்புரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஜனநாயகக் கோரிக்கையை எழுப்பியதற்காக  லெபனானில் புகலிடம் பெற்றிருந்த பஹ்ரைனின் பிரபலமான அல்-வெஃபாக் கட்சியின் உறுப்பினர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இது ஏனெனில், கடந்த டிசம்பர் 11 அன்று, பஹ்ரைனின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான தங்கள் குறைகளை தெரிவிக்க, தெற்கு லெபனான் நகரங்களில் ஒன்றில் பஹ்ரைன் மக்களின் இந்த ஒடுக்கப்பட்ட குழு செய்தி மாநாட்டை நடத்தியதாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அரபு நாடுகளில் உள்ள தங்கள் சர்வாதிகார வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து, ஜனநாயக ஆட்சியின் சாயல் கொண்ட லெபனான் கூட தலைவணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்கு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது வருத்தமாக இல்லையா?

பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் மக்கள் ஆதரவற்ற மற்றும் பிரதிநிதித்துவமற்ற, இந்த இழிந்த பணக்கார ஆட்சிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்தது கேவலம் இல்லையா...?

https://kayhan.ir/en/news/98082/despotism-defeats-democracy

Friday, December 24, 2021

இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகர் இமாம் கொமெய்னி கிறிஸ்தவர்களுக்கு 1979ம் ஆண்டு விடுத்த புரட்சிகர கிறிஸ்துமஸ் செய்தி

Imam Khomeini, the founder of the Islamic Republic, delivered a revolutionary Christmas message to Christians in 1979. 


இமாம் கொமெய்னி 1979ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது விடுத்த ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்தியில், அன்பையும் அமைதியையும் பரப்பிய மற்றும் நீதியை நிலைநாட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்ட சர்வவல்லமையுள்ள இறைவனின் தூதராக இயேசு நாதர் இருந்தார் என்று கூறினார்.

ஈரானின் அனைத்து மத சிறுபான்மையினரும் தங்கள் மத மற்றும் சமூக நடவடிக்கைகளைச் செய்ய சுதந்திரம் உடையவர்கள் என்று இமாம் கொமெய்னி வலியுறுத்தினார், மேலும் இஸ்லாமியக் குடியரசு அவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதை அதன் கடமையாகக் கருதுகிறது; ஈரானிய முஸ்லிம்களைப் போலவே அவர்களும் ஈரானியர்கள் மற்றும் மரியாதைக்குரியவர்கள். (Sahifeh-ye-Imam, Vol.4, page 419)

இஸ்லாமிய அரசாங்கம் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் ஒரு ஜனநாயக அரசாங்கம் என்றும், அதன் கீழ், அனைத்து மத சிறுபான்மையினருக்கும் சமமான முழுமையான சுதந்திரம் உள்ளது என்றும், ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்க முடியும் என்றும் இமாம் கோமேனி கூறினார். ( Sahifeh-ye-Imam, Vol.4, பக்கம் 390)

இமாம் கொமெய்னி, இயேசு நாதரைப் பின்பற்றுபவர்களையும், கிறிஸ்தவ உலகத்தையும் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சி பெறுமாறும், காலனித்துவ மற்றும் சுரண்டும் சக்திகளின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை எதிர்கொள்வதற்கு ஏகத்துவக் கொடியின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

டிசம்பர் 24, 1979 அன்று உலக கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி இமாம் கொமெய்னி வெளியிட்ட மிகவும் பிரபலமான செய்திகளில் இதுவும் ஒன்றாகும். வரலாற்றுச் செய்தியில் கூறப்பட்ட சில விடயங்கள் பின்வருமாறு:

உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிறிஸ்தவ நாடுகளுக்கும், ஈரானிய கிறித்தவர்களுக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

ஏசு கிறிஸ்து ஒரு சிறந்த தூதராக இருந்தார், அவரது நோக்கம் நீதியையும் கருணையையும் நிலைநிறுத்துவதாகும், மேலும் அவர் தனது பரலோக வார்த்தைகளாலும் செயல்களாலும் கொடுங்கோலர்களைக் கண்டித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தார்.


பாதிரியார்களே, மதகுருமார்களே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களே, அடக்குமுறையாளர்களுக்கு எதிராக உலகில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள், இறைவனுக்காகவும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும், ஈரானில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அடக்குமுறையாளர்களைக் கண்டித்தும் உங்கள் தேவாலயங்களில் ஒரு முறை மணியோசை எழுப்புங்கள்

நீதிக்காகப் பசியாகவும் தாகமாகவும் இருப்பவர்கள், நீதிக்காகப் போராடுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

இயேசு கிறிஸ்து மற்றும் அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனைகளுக்கு எதிராக செயற்படும், தேசங்களின் உரிமைகளை பறிக்கும் ஒடுக்குபவர்களுக்கும் மற்றும் அவர்களது ஒற்றர்களுக்கும் கேடுதான்.

கிறிஸ்துவின் தேசமே, இயேசுவைப் பின்பற்றுபவர்களே, எழுந்து, இறைவனின் ஆவியானவரான இயேசு கிறிஸ்துவின் கண்ணியத்தையும், கிறிஸ்தவ தேசத்தையும் பாதுகாத்து, தெய்வீக போதனைகளின் எதிரிகளையும், தெய்வீக கட்டளைகளை நிறைவேற்றுங்கள்; உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் மற்றும் அதன் மதகுருமார்கள் பற்றிய தவறான எண்ணத்தை ஊட்ட எதிரிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.


தேவாலயங்களில் வல்லரசுகளின் தலைவர்களின் பிரசன்னம் அல்லது அவர்களின் உளவாளிகள் மற்றும் அவர்களுக்காக துரோகமிழைப்போர் செய்யும்  பிரார்த்தனைகளால் ஏமாந்துவிடாதீர்கள்.

இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தெய்வீக போதனைகளுக்கு எதிரான, மக்களை அடக்கி ஆள அதிக பலம் அல்லது உலகின் மேலாதிக்கத்தை பெறவேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வேண்டுவதில்லை. அடக்குமுறையாளர்களின் இந்த பாசாங்குத்தனத்தால் ஈரானிய தேசம் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.

மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட உறுதி கொள்ளுங்கள், மேலும், உலகில் ஒடுக்கப்பட்டவர்களே, அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுபட எழுந்து ஒன்றுபடுங்கள், ஏனெனில் பூமி இறைவனுடையது, அதன் வாரிசுகள் ஒடுக்கப்பட்ட மக்களே அன்றி வேறில்லை.

====

ஈரானில் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களில் கிறிஸ்தவமும் ஒன்றாகும். அவர்களின் மத விதிகளின்படி தமது வாழ்க்கையையே அமைத்துக்கொள்ள எந்தத் தடையும் கிடையாது.  கிறிஸ்துமஸ் ஒரு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் ஆர்மீனிய மரபுவழி ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பின்பற்றும் ஆர்மீனியர்கள் அல்லது கிழக்கின் அசிரிய தேவாலயத்தைப் பின்பற்றும் அசீரியர்கள். ஆவர் .ஆர்மீனியர்கள் ஜனவரி 6 ஆம் தேதி கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள், அவர்கள் எபிபானியையும் (Epiphany), மற்ற கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இருப்பினும், இந்த பண்டிகை நிகழ்வின் அரவணைப்பும், அழகும் ஆண்டின் கடைசி மாதத்தில் குளிர்காலத்தின் உறையும் குளிரையும் பொருட்படுத்தாது அடுத்த மாதம் ஜனவரி 6 ஆம் திகதி வரை அனைவரையும் ஈர்த்துவிடும்.

இத்தினத்தை குறிக்குமுகமாக கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மிகவும் உற்சாகமாக கழிப்பர். கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்வர்.

ஈரானின் மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றாலும், மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்படுகிறார்கள். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்த பாராளுமன்றத்திலும் அரசியலமைப்பு ரீதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை முஸ்லிம்களுடன் ஒருபோதும் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. அவர்களது மதத்தைப் பின்பற்ற பூரண உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. பல கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அரச செலவில் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 21, 2021

அமெரிக்க நலன்களுக்கு ஈரானியர்கள் சேவை செய்ய வேண்டுமாம்

US and West ‘waged decades of war on Iran by other means’: Analyst

அமெரிக்கா மற்றும் மேற்கு 'ஈரான் மீது பல தசாப்த காலப் போரை வேறு வழிகளில் நடத்திவருகின்றன': ஆய்வாளர்

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானின் மீது பல தசாப்தங்களாக வேறு வழிகளில் போர் தொடுத்துள்ளனஅமெரிக்க எழுத்தாளரும் அரசியல் வர்ணனையாளருமான ஸ்டீபன் லெண்ட்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

2015ல் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் (JCPOA) அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான பேச்சுக்கள் "நன்றாக நடக்கவில்லை" என்று கடந்த வெள்ளியன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போது, சனிக்கிழமையன்று பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் லென்ட்மன் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் நடத்திய நிகழ்வில் சல்லிவன் கூறுகையில், "நாம் விரும்பும் விதத்தில் பேச்சுவார்த்தை செல்லாததால் [கூட்டு விரிவான செயல் திட்டத்திற்கு (JCPOA)] திரும்புவதற்கான பாதையில் நாம் இன்னும் இல்லை என்று கூறியிருந்தார்.

வியன்னாவில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை மேசையில் "சில முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக சல்லிவன் கூறினார், ஆனால் 2018 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதிலிருந்து ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை "முன்னோக்கி" நகர்த்தியுள்ளது.

"JCPOA உடன்படுக்கைக்கு திரும்புவது பரஸ்பர இணக்கத்திற்கு திரும்புவதன் மூலம் அந்த திட்டத்தை மீண்டும் ஒரு கட்டத்திற்குள் கொண்டுவருவது, இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் பார்க்க விரும்புவதை விட கடினமானது நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று சல்லிவன் கூறினார். "2018 இல் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுவது என்ற (புத்திசாலித்தனமற்ற) பேரழிவு முடிவின் பிரதிபலனையே நாங்கள் அனுபவிக்கின்றோம்"

JCPOA வில் இருந்து மே 2018 இல் ட்ரம்ப் வெளியேறினார். டிரம்ப் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை குறிவைத்து "அதிகபட்ச அழுத்தம்" பிரச்சாரம் ஒன்றை அமுல்படுத்தினார், இது ஈரானின் நிலையை மேலும் கடினமாக்கியது, ஒரு "புதிய ஒப்பந்தத்தை" செய்வதற்கு ஈரானை இணங்கச்செய்து,  பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தத் தவறியது.

ஈரான் மற்றும் JCPOA வில் மீதமுள்ள ஐந்து தரப்பினர் - ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா - ஆகியவற்றுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஒப்பந்தத்திற்குத் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்ததை அடுத்து, பொருளாதாரத் தடைகளை அகற்றும் நோக்கத்துடன் ஏப்ரல் மாதம் ஆஸ்திரிய தலைநகரில் பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதற்கிடையில், ஈரானின் சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச்செல்லும் தலைவர் அலி பாக்கரி கானி கடந்த வெள்ளிக்கிழமை 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் மூன்று ஐரோப்பியத் தரப்பினரும், "தீவிரமான, முடிவு சார்ந்த" பேச்சுக்களுக்கு தெஹ்ரானின் கண்ணோட்டத்தை அடிப்படையாக ஏற்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையின் முடிவில், தெஹ்ரான் மீது விதிக்கப்பட்ட அமெரிக்க தடைகளை நீக்கி ஒப்பந்தத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் பலதரப்பு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மீதமுள்ள ஐந்து நாடுகள் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் விளக்குகையிலேயே பாக்கரி கானி மேற்கண்டவாறு கூறினார்.

ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான வேகம் எதிர் தரப்பின் விருப்பத்தைப் பொறுத்தது. "ஈரான் இஸ்லாமிய குடியரசின் நியாயமான கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை மறுபுறம் ஏற்றுக்கொண்டால், புதிய சுற்று பேச்சுவார்த்தை பயனளிப்பதாக இருக்கும், மேலும் குறுகிய காலத்தில் நாம் ஒரு ஒப்பந்தத்தை அடைய முடியும்." என்றார்.

லேண்ட்மன் "JCPOA பேச்சுக்கள் வியன்னாவில் எங்கும் இலக்கை நோக்கி செல்வதாகத் தெரியவில்லை, அது ஈரான் மீதான நீண்டகால அமெரிக்க/மேற்கத்திய விரோதப் போக்கை பிரதிபலிக்கிறது. இந்த ஆட்சிகள் எல்லாவற்றையும் கோருகின்றன, பதிலுக்கு எதையும் வழங்கவில்லை, ஆனால் இவர்களது வெற்று வாக்குறுதிகள் மீறப்படும்" என்று கூறினார்

ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சியின் பின்னர், நாட்டையும் அதன் மக்களையும் அமெரிக்காவின் ஆதிக்கக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்ததில் இருந்து இவ்வாறுதான் இருந்து வருகிறது. போரை விரும்பும் இரு வலதுசாரி கட்சிகளும் ஈரானில் தாம் இழந்ததை மீண்டும் பெற விரும்புகின்றன. அவர்கள் ஈரானின் அபரிமிதமான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்ய சாதாரண ஈரானியர்கள் சுரண்டப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஈரான் மீது பல தசாப்தங்களாக பல்வேறு வழிகளில் போரை நடத்தி வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

"JCPOA ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே ஒபாமா / பிடென் ஆட்சி அதை மீறியது," என்று அவர் கூறினார்.

"வெள்ளை மாளிகையில் வஞ்சகத்தைக் கட்டுப்படுத்தும் கடும்போக்குவாதிகளுக்கு, பாதுகாப்பு கவுன்சில் 2231 தீர்மானத்தினால் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றும் எண்ணம் இல்லை. — அதன் மேலாதிக்கப் பிரிவின் கீழ் ஒப்பந்தம் சர்வதேச மற்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பிணைக்கப்படுவதைப் புறக்கணிக்கிறது" என்று ஆய்வாளர் கூறினார்.

"வியன்னா பேச்சுக்களில் எட்டப்படும் முடிவு என்னவாக இருந்தாலும் ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டனின் நீண்டகால நோக்கத்தை மாற்ற முடியாது. இஸ்லாமிய குடியரசின் மீதான போர் சாத்தியமில்லை என்றாலும், அது தற்செயலாக அல்லது வடிவமைப்பால் இடம்பெறக்கூடும், ஏனெனில் அமெரிக்காவின் அடக்கி ஆளும் கொள்கை அதை நோக்கியே தள்ளும்” என்று அவர் கூறினார்.

https://www.presstv.ir/Detail/2021/12/18/672940/US-and-West-%E2%80%98waged-decades-of-war-on-Iran-by-other-means%E2%80%99

Tuesday, December 14, 2021

பாரசீக சிற்றோவியம் : ஓர் அற்புத கலைப்படைப்பு

Persian Miniature: A wonderful work of art

ஒரு பாரசீக சிற்றோவியம் என்பது, தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் மத்திய கிழக்கின் பகுதியிலிருந்து மத அல்லது புராணக் கருப்பொருள்களை சித்தரிக்கும் ஒரு துல்லியமான ஓவிய வடிவமாகும். பாரசீக சிற்றோவியக் கலை 13 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை செழித்து வளர்ந்தது, இன்றுவரை தொடர்கிறது, பல சமகால கலைஞர்கள் குறிப்பிடத்தக்க பாரசீக சிற்றோவியங்களை உருவாக்குகின்றனர். இந்த நுட்பமான, பசுமையான ஓவியங்கள் நிபுணத்துவமிக்க கைகளினால் மற்றும் மிக நுண்ணிய தூரிகை மூலம் மட்டுமே அடையக்கூடிய துல்லியமான விவரங்களின் நிலை, பொதுவாக பார்ப்பவரை பிரமிக்க வைக்கும்,

இந்த ஓவியம் ஒரு புத்தக விளக்கப்படமாக இருந்தாலும் அல்லது அத்தகைய படைப்புகளின் ஆல்பத்தில் வைக்கப்படும் ஒரு தனி கலைப் படைப்பாக இருந்தாலும் சரி, அது பாரசீக பாரம்பரியத்தின் தோற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒளியேற்றப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் உள்ள சிற்றோவியங்கள் மேற்கத்திய மற்றும் பைசண்டைன் மரபுகளுடன் இந்த நுட்பங்கள் பரவலாக ஒப்பிடப்படுகின்றன.


சுவர் ஓவியம் பாரசீக பாரம்பரியத்தில் சமமாக நன்கு நிறுவப்பட்ட ஒன்றாக இருந்தாலும், சிற்றோவியங்கள் நீண்ட காலம் நீடித்து, பாதுகாப்பாக இருக்கும் நிலை இன்னும் சிறப்பாக உள்ளது, இதன் காரணமாக, பாரசீக சிற்றோவியங்கள் மேற்குலகில் மிகவும் பிரபலமான கலை வடிவமாகும்.

பாரசீக சிற்றோவியங்கள் பல அம்சங்களில் தனித்துவமானவையாகும். முதலாவது விவரத்தின் அளவு மற்றும் நிலை; இந்த ஓவியங்களில் பல மிகச் சிறியவை, ஆனால் அவை வியத்தகு, சிக்கலான காட்சிகளைக் கொண்டுள்ளன, அவை பார்வையாளரை மணிக்கணக்கில் வசீகரிக்கும். பாரம்பரியமாக, ஒரு பாரசீக சிற்றோவியம் தங்கம் மற்றும் வெள்ளி தகடுகளில் உயிர்துடிப்புள்ளவையாக வரையப்பட்டு இருக்கும், மேலும் கண்கவர் வண்ணங்கள் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டவையாகவும் இருக்கும்.

ஆரம்பத்தில், பாரசீக சிற்றோவியங்கள் கையெழுத்துப் பிரதிகளுக்கான புத்தக ஒளியேற்றப்பட்ட விளக்கப்படங்களாகவே அமைந்திருந்தன. ஒரு பாரசீக சிற்றோவியம் சொல்லும் விடயம் மிகவும் புதிரானதாக இருக்கும், மேற்கத்திய கலையின் தோற்றத்திற்கும் உணர்விற்கும் பழக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புரிவதற்கு சங்கடமாக உணரும் விதங்களில் கூறுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து மேலெழுதப்பட்டவையாக அமைந்திருக்கும்.

ஒரு சிற்றோவியம் வரைந்து முடிப்பதற்கு சில சமயங்களில் ஒரு வருடம் வரை எடுத்துக்கொள்வதால், அதிக விலைக்கு விலைபோகும்; செல்வந்த புரவலர்களால் மட்டுமே இந்த சிற்றோவிய விளக்கப்படங்களை வாங்க முடியும். காலப்போக்கில், மக்கள் இந்த கலைப் படைப்புகளை தாங்களாகவே சேகரிக்கத் தொடங்கினர், அவற்றை தனித்தனி புத்தகங்களாக பாதுகாத்து வைக்கலாயினர். இந்த சேகரிப்புகளில் பல, ஈரானின் புகழ்பெற்ற கம்பளங்கள் போன்று, பாரசீக கலையின் எடுத்துக்காட்ட்டாக அதிர்ஷ்டவசமாக இன்றுவரை உயிர்வாழ்கின்றன,

பாரசீக சிற்றோவியங்கள் அநேகமாக சீனக் கலையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம், ஆரம்ப உதாரணங்களில் காணப்படும் பாரசீக சிற்றோவியங்கள் சில சீனக் கருப்பொருள்கள் கொண்டுள்ளதை அவதானிக்கலாம். ஆரம்பகால பாரசீக கலையில் சித்தரிக்கப்பட்ட பல புராண உயிரினங்கள், உதாரணமாக, சீன புராணத்தில் உள்ள விலங்குகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இருப்பினும், காலப்போக்கில், பாரசீக கலைஞர்கள் தங்கள் சொந்த பாணி மற்றும் கருப்பொருள்களை உருவாக்கினர், மேலும் பாரசீக சிற்றோவியங்கள் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பல ஆசிய கலை அருங்காட்சியகங்கள் தங்கள் சேகரிப்பில் பாரசீக சிற்றோவியங்களைக் கொண்டுள்ளன, மேலும் இந்த தனித்துவமான கலை வடிவத்தின் எடுத்துக்காட்டுகளை நேரில் கண்ணால் பார்ப்பது அரிதாக கிடைக்கும் வாய்ப்பாகும். பாரசீக சிற்றோவியம் ஒன்றை ஒருவர் எவ்வளவு நேரம் பார்க்கின்றாரோ அவ்வளவு விவரங்களும் கருப்பொருள்களும் வெளிப்படும். ஒரு சிற்றோவியத்தைப் பற்றிய ஆய்விற்கு ஒரு நாள் முழுவதும் எடுக்கும், பல விவரங்களை அறிய கிடைக்கும், மேலும் பல அருங்காட்சியகங்கள் அவற்றின் பாரசீக சிற்றோவியங்களில் உள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் கருப்பொருள்களுக்கான விரிவான வழிகாட்டிகளை வசதியாகக் கொண்டுள்ளன, இதனால் பார்வையாளர்கள் தாங்கள் பார்ப்பதைப் பற்றி மேலும் அறியக்கூடிதாய் இருக்கும்.


கமால் உத்-தின் பெஹ்சாத் ஹெராவி, கமால் அல்-தின் பிஹ்சாத் அல்லது கமாலுத்தீன் பெஹ்சாத் (c. 1450 - c. 1535) என்றும் அழைக்கப்படுபவர், பாரசீக சிற்றோவிய கலைஞர். இவர் ஆரம்பகால சஃபாவிட் ஆட்சியின்போது ஹெராட் மற்றும் தப்ரிஸில் உள்ள அரச கலையகங்களின் தலைவராவார்.

பெஹ்சாத் பாரசீக சிற்றோவிய கலைஞர்களில் மிகவும் பிரபலமானவர், அவர், அவரது சொந்த சிந்தனை பாணியில் கையெழுத்துப் பிரதிகளை உருவாக்கும் கிதாப்கானா எனப்படும் ஒரு பயிற்சி பட்டறையின் இயக்குனராகவும் இருந்தார். அந்த கால பாரசீக ஓவிய வடிவியல் கட்டிடக்கலை கூறுகளின் அமைப்பை பொதுவாக பயன்படுத்தியதாய் அமைந்திருந்தது.

பெஹ்சாத் பெரும்பாலும் திறந்த, வடிவமற்ற வெற்றுப் பகுதிகளைப் பயன்படுத்தினார். அதைச் சுற்றியே அவரது கற்பனை செயல் நகர்கிறது. மேலும் அவர் தனது படைப்பை சுற்றி ஒரு பார்வையாளரின் கண்ணை நகர்த்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். உருவங்கள் மற்றும் பொருட்களின் அசைவுகள் தனித்துவமானதாகவும் இயற்கையாகவும், வெளிப்பாடாகவும், உயிரோட்டம் உள்ளதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை படத் தளம் முழுவதும் ஒருவரின் கண்ணை நகர்த்திக் கொண்டே இருக்கும்.

https://www.tasnimnews.com/en/news/2018/02/12/1652847/persian-miniature-a-richly-detailed-miniature