Contributors

Monday, July 22, 2019

ஈரான் தொடர்பான உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள் - உலக சக்திகளுக்கு ஈரானின் தெளிவான செய்தி

Change your course viz-a-viz Iran – Iran’s clear message to W.Powers


ஐந்து வல்லரசு நாடுகளும் ஜெர்மனியும் இணைந்து ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் செய்து கொண்ட JCPOA ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தன்னிச்சையாக வெளியேறி, இஸ்லாமிய ஈரானை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற எண்ணத்தில், கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து மத்தியகிழக்கு பிரதேசத்தில், குறிப்பாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அது மட்டுமல்லாமல் விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்புகிறோம், அடிப்போம், அழிப்போம் என்றெல்லாம் அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தது. இவை எதற்குமே ஈரான் அஞ்சவில்லை. எத்தகைய அத்துமீறல்களுக்கும் பதிலடி கொடுப்போம் என்பதற்கு அறிகுறியாக ஈரான் அமெரிக்க புலனாய்வு ட்ரோன் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியது.
நிலைமை இவ்வாறு இருக்கையிலேயே ஜூலை 4ம் திகதி பிரிட்டன், ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த Grace 1 என்ற ஈரானிய எண்ணைதாங்கி கப்பலை, அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இணங்க, சட்டவிரோதமாக கைப்பற்றியது. இது ஈரானை வேண்டுமென்றே வம்புக்கிழுக்கும் செயலாகும்.

ஈரானுக்கு சொந்தமான இக்கப்பலை விடுவிக்க ஈரான் எல்லா ராஜதந்திர நடவடிக்கையையும் எடுத்தது; முடியுமான அத்தனை கோரிக்கைகளையும் விடுத்தது. இவை எதற்கும் பிரிட்டன் செவிசாய்க்காத நிலையில் ஈரான் அதற்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது, நிச்சயமாக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியாக கூறியது.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று பிரிட்டிஷ் கடற்படையினர்  
ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஈரானிய எண்ணெய் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதை கேள்விப்பட்டபோது, போல்டன், அவரது அளவுகடந்த மகிழ்ச்சியை "சிறந்த செய்தி: ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை மீறி சிரியாவிற்கு ஈரானிய எண்ணெயுடன் சென்ற கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கரை இங்கிலாந்து தடுத்து வைத்துள்ளது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் பிரெக்ஸிட் என்றும், பிரதமர் ராஜினாமா என்றும், புதிய பிரதமர் தெரிவுக்கான ஓட்டம் என்றும் ஒரு அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டிருக்கும் நிலையில் அது அமெரிக்க சதிவலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒழுங்கற்ற முறையில் வெளியேறும் விளிம்பில் உள்ளது, அதன் நெருங்கிய ஐரோப்பிய பங்காளிகளை அந்நியப்படுத்தியும் இருக்கிறது. அதே சமயம் டிரம்ப்பின் அமெரிக்காவுடனான அதன் உறவு கணிசமான அளவு சிதைந்தும் உள்ளது. இதன் விளைவாக, பிரிட்டன், அதைச் சமாளிக்க முடியாத தருணத்தில், ஒரு சர்வதேச நெருக்கடியின் நடுவில் இழுத்து விடப்பட்டுள்ளது.

ஜிப்ரால்டர் விவகாரத்தின் விளைவுகள் இப்போது தெளிவாகி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் ஸ்டெனா இம்பீரோ (Stena Impero) என்ற பிரிட்டிஷ் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். பிரிட்டனின் ஜிப்ரால்டர் "கடற்கொள்ளை"க்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் முன்னர் உறுதியளித்திருந்தது. இது அந்த சம்பவத்துடன் ஒரு வெளிப்படையான தொடர்பை கொண்டிருக்கவில்லை என்றாலும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இன்றைய நெருக்கடிக்கு தூண்டுதலான ஈரானுடனான 2015 - JCPOA அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான டிரம்ப்பின் முடிவை பிரிட்டன் எதிர்த்தும் இருந்தது. பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடை ஆகியவற்றை உள்ளடக்கிய "அதிகபட்ச அழுத்தம்" என்ற டிரம்ப்-போல்டன் கொள்கை, மிகவும் மிதமான ஈரானியர்களை கூட தீவிரமயமாக்கியுள்ளதால் பிரிட்டன் இவ்விடயத்தை மிகவும் எச்சரிக்கையுடனேயே அவதானித்துக் கொண்டிருந்தது.

JCPOA அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளை பிரிட்டன் ஆதரித்தபோதும், தெரேசா மே மற்றும் வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் இரு வழிகளையும் கொண்டிருக்க முயன்றனர் - டிரம்பின் காதலையும் விரும்பினார்.

ஈரானின் பிராந்திய நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணைத் திட்டம் பற்றிய வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்தனர், மேலும் ஈரானை, ஒப்புக்கொண்ட அணுசக்தி தடைகளைத் தவிர்த்தபோது, அதை கண்டித்தனர்.

ஆக, அவர்கள் ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் ஈரானையும் திருப்த்திப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டனர் எனலாம்.

பிரித்தானிய கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் அதனை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனுடன் இணைந்து அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் ஈரானிய எண்ணெய் கப்பல் தடுத்து வைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர்களது இரட்டை நிலைப்பாட்டை அவர்களாகவே உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். ஈரான் இஸ்லாமிய குடியரசும் அநியாயத்துக்கு அடிபணிய மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாய் உள்ளது.

தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்ற அச்சம் பலர் மனதிலும் தோன்றியிருக்கும். ஆனால் நல்லவேளை  அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஒரு யுத்தம் ஏற்படுவதை அமரிக்காவும் விரும்பவில்லை, ஈரானும் விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கும் விடயமாகும்.

ஆனாலும் யுத்தம் ஒன்று ஏற்பட்டு, ஈரான் அழிவை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சவூதி அரேபியாவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது எனலாம்.

மேலும் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவமானது, பிராந்தியத்தியத்தில் உள்ள ஏனைய அரபு நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியது. தமது நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், நிச்சயமாக ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தும்; அதனால் தமது நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்று உணர்ந்த ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சவுதி தலைமையிலான ராணுவ கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், தெஹ்ரானுக்கு தமது தூதுக்குழுவையும் அனுப்பி வைத்தது. இது சவுதிக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்தது.

சவுதியின் சுய விருப்பு வெறுப்புக்காக தமது நாட்டு நலன்களை பணயம் வைக்க அமெரிக்காவும் தயாரில்லை, சூழவுள்ள அரபு நாடுகளும் தயாரில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இதனை சரியாக புரிந்து கொண்டு சவுதி அரேபியா தன்னிலையை மாற்றி, பிராந்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுதல் சகலருக்கும் நன்மை பயக்கும். இதுவே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.



Wednesday, July 17, 2019

யெமன் யுத்தத்தினால் சவூதி அரேபியாவுக்கு பெருத்த அவமானம்...!

Saudi disgraced by war on Yemen 

யெமனின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க, சவூதி சார்பு அப்துல் றப்பு மன்சூர் ஹாதி, நாட்டில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்கேடுகள் காரணமாக ஹௌதி போராளிகள் மேற்கொண்ட புரட்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் 2015ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு தப்பியோடினார். அதனால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் சவூதி ஆதிக்கம் நிலைகுலையலாயிற்று.
மீண்டும் மன்சூர் ஹாதியை பதவியில் அமர்த்துவதற்காக, சவூதி அரேபியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து ஒன்பது நாடுகளின் கூட்டணியை அமைத்துக்கொண்டு திடுதிப்பென யெமன் மீது தாக்குதலை தொடுத்தது.
சவுதி தலைமையிலான இந்த தாக்குதல், ஆரம்பத்தில் ஹௌதி இலக்குகள் என்று ஆரம்பித்து, மேற்கு யெமனில் பொதுமக்கள் இலக்குகள் வரை விரிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தலைமையிலான தரைப்படைகளை தெற்கில் நிறுத்தியதுடன் பொருளாதாரத் தடை, கப்பல் போக்குவரத்து தடை என்று சவூதி தலைமையிலான கூட்டுப்படை நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மன்சூர் ஹாதியை மீண்டும் பதவியில் அமர்த்துவோம் என்று சவூதி அரேபியா சூளுரைத்தது. இப்பிராந்தியத்திலேயே வறிய நாடான யெமன், நவீன அமெரிக்க ஆயுதங்களை வைத்துள்ள சவுதியின் நெருக்குவாரங்களுக்கு அடிபணியும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் சவூதி அரேபியா மட்டுமல்ல உலக வல்லரசுகளே திகைக்கும் அளவுக்கு ஹௌதிகள் திருப்பித் தாக்கினர். 39 நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டும் சவுதியினால் ஹௌதிகளின் உறுதியை தகர்க்க முடிய வில்லை.
சவுதிக்கு இது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஈரான் ஹௌதிகளின் பின்னணியில் நின்று அவர்களுக்கு உதவி வருவதாக சவூதி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
அதே சமயம், யெமனின் அன்ஸாருல்லாஹ் காவலர்கள் வெற்றி மீது வெற்றிகளை அடுக்குக்கொண்டு செல்கின்றனர். சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய இரு நாடுகளினதும் எல்லா அத்துமீறல்களையும் அனைத்து முனைகளிலும் பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். சவூதி தலைமையிலான தாக்குதல் நடத்தியவர்களும் அவர்களது கூலிப்படையினரும் யெமனின் தெற்கு முன்னணியில் துவம்சம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், எஞ்சிய படையினர்  முக்கிய துறைமுக நகரமான ஏடனை நோக்கி விரட்டப்பட்டுள்ளனர்.
வடக்கில், சவுதி எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி, யெமன் ஆயுதப்படைகள் மற்றும் சமூக குழுக்கள் இணைந்து, நஜ்ரான் மற்றும் ஜிஸானின் பெரும் பகுதியை சவுதி கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர். "விடுவித்தல்" என்ற சொல் இங்கே நிச்சயமாக பொருந்தும், ஏனென்றால் மேற்கூறிய இரண்டு மாகாணங்களும் வரைபடத்தில்  சவுதி இராச்சியத்தின் ஒரு பகுதியாக காட்டப்பட்டாலும், அவை, வஹாபி படையினரால் 1934 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்படும் வரை, யெமனின் முக்கிய பகுதியாகவே இருந்து வந்தன என்பதுவே சரித்திரம்.
ஆரம்பத்தில் சவுதிக்கு உதவிய கட்டார் மற்றும் மொராக்கோ அரேபியாவுடனான உறவுகள் மோசமடைந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது (இந்த மாதம்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமது படைகளை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது.
சவுதியின் முட்டாள் தனமான செயலினால் நான்கு ஆண்களாக தொடரும் யுத்தத்தினால் பல்லாயிரம் யெமன் உயிர்கள் பலியாயின என்பது மட்டுமல்லாமல் சவூதி அரேபியா, உலக நாடுகள் மத்தியில் அவமானப்பட்டுக் கிடக்கிறது என்பதோடு உலக முஸ்லிம்களின் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளது.
சவூதி அரேபியா, அரேபிய உலகில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய இராணுவத்தைக் கொண்டிருக்கலாம், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றாலும், அவற்றினால், மத்தியகிழக்கில் மிகவும் வறிய நாடான யெமனை தம் இஷ்டப்படி ஆட்டுவிக்க முடியவில்லை. அரேபிய தீபகற்பத்தின் தெற்கில் ஒரு வியட்நாம் போர் சூழ்நிலை உருவாகிவருவதாகத் தெரிகிறது. இங்கே மன உறுதியுடன் அல்லாஹ்வின் மீதான பூரண நம்பிக்கையும் கொண்ட போராளிகளிடம் படையெடுப்பாளர்களின் உலகாயத பொருள் வளம் தோல்வி கண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக, இறை தூதரினால் ஆசீர்வதிக்கப்பட்ட அரபு பிரதேசம் என்று அழைக்கப்பட்ட நிலத்தின் வீரம் மிக்க  பாதுகாவலர்கள் பாரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி படையெடுப்பை தொடர்ந்த இனப்படுகொலை ஆதரிப்பவர்களால் கூட சவுதியின் அடாவடித்தனத்தை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை.
ஆசிர் மாகாணத்தில், பனீ சவுத் ஆட்சியின் கீழ் உள்ள உள்ள அபா சர்வதேச விமான நிலையம், யெமனியரின் கோபத்தின் விளைவை எடுத்துக்காட்டும் இடமாக காட்சியளிக்கிறது. சவுதியினால் ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தை அன்ஸாருல்லாஹ் படையினர் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அதிகாலையில், சவுதி விமானப்படையால் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த அபா சிவில் விமான நிலையம், யெமன் ஏவுகணைப் படைகளின் துல்லியமான தாக்குதலுக்கு உள்ளானது. யெமன் ஆயுதப் படைகளால் மிகவும் இரகசியமாக உருவாக்கப்பட்ட, முற்றிலும் புதிய மற்றும் அறியப்படாத ஏவுகணை, விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தை வெடித்து சிதறடித்து, விமான நிலையம் செயற்பட முடியாத நிலையை உருவாக்கியது.
தாக்குதலுக்குப் பிறகு, அபாவின் விமான கால அட்டவணைகள் மாற்றப்பட்ட படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அபாவை நோக்கி வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன. யெமனில் சவுதி வான்வழித் தாக்குதல்களினால் பல பொதுமக்கள் உயிரிழப்பது வழக்கமாயினும் அன்ஸாருல்லாஹ்க்களின் கோபுரத்தின் மீதான தாக்குதலின் துல்லியம் பூஜ்ஜிய இறப்புக்கு காரணமாக அமைந்தது. தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குள், சவூதி அரச ஊடகங்கள் கூட பதிலடி தாக்குதல் நடந்ததாகவும் விமான நிலையத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டன.
அன்சாருல்லாவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், முஹம்மது அப்துல் சலாம் இதுபற்றி குறிப்பிடுகையில்,  "சவுதியின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, முற்றுகை, சனா விமான நிலையத்தை மூடல், அரசியல் தீர்வை நிராகரித்தல் மற்றும் அமைதியான தேர்வுககளை உதாசீனம் செய்தல் ஆகியவை எம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன" என்று ஏவுகணைத் தாக்குதலுக்கு தெளிவான வார்த்தைகளில் பதிலளித்தார்.
அபா விமான நிலையத்தின் மீதான இந்த ஏவுகணை தாக்குதல் சவுதிக்கு பேரதிர்ச்சியைத் தந்தது மட்டுமல்லாமல் அதனை வெட்கித் தலைகுனிய வைத்தது எனலாம். ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, யெமன் ராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தி, அபா விமான நிலையத்தின் ரேடார் அமைப்பை குறிவைத்து அழித்தது. யெமன் இந்த தாக்குதலுக்கு காசிஃப் -2 கே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தியது. இந்த ரக ட்ரோன்கள், தம்மைத் தாமே அழித்துக்கொண்டு, எதிரிகளின் இலக்குகள் மீதும் எதிரி படைகள் மீதும் கூராயுதங்களை பொழியும் விதத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். இது ஒப்பீட்டளவில் மலிவான ஆனால் மிகவும் பயனுள்ள கொரில்லா தாக்குதல் தந்திரமாகும், யெமன் இதனை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. அபா சர்வதேச விமான நிலையம், இப்போது அதன் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் அமைப்பு இல்லாமல், முற்றிலும் இயங்க இயலாது ஆக்கப்பட்டுள்ளதானது சவூதி ஆட்சியாளர்களுக்கு பெருத்த அவமானமாகும்.
அடுத்த நாள் (ஜூன் 15 அன்று), காசிஃப் -2 கே ட்ரோன்களின் மற்றொரு அலை ஜிசான் மற்றும் அபா விமான நிலையத்தை மீண்டும் ஒரு முறை தாக்கியது. ஜிசான் விமான நிலையத்தில், சவுதி ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) திட்டத்தின் கட்டுப்பாட்டு அறை அழிக்கப்பட்டது, அதேசமயம் அபாவில் யெமன் ட்ரோன்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தை அழித்தன. இரு விமான நிலையங்களும் தற்காலிகமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான வழிசெலுத்தல் கண்காணிப்பு மையங்களால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இன்னும் அனைத்து சவுதி போர் இயந்திரத்தில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை. யெமன் ஆயுதப்படைகள் ஜூன் 17 அன்று மீண்டும் தாக்கின. அவர்கள் ஆளில்லா மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாமல், அதே அபா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் தாக்குவதிலும் வெற்றி பெற்றனர். ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இரண்டு முறை முன்பு நடந்ததைப் போலவே, ஆசிர் மாகாண தலைநகருக்குச் செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக, ஆனால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஜூன் 19 அன்று, யெமனின் பாதுகாவலர்கள் மற்றொரு  ஏவுகணையை ஏவினர், இந்த முறை ஜிசான் மாகாணத்தின் அல்-ஷாகிக் பகுதியில் ஒரு பெரிய சவுதி மின் நிலையத்தைத் தாக்கியது. ஏவுகணைத் தாக்குதல் மின் நிலையத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, சவுதி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போர்க்குற்றங்களுக்கு மற்றுமொரு பதிலடியாக இது அமைந்தது.
அதே நாளில், நஜ்ரானில் ஒரு இராணுவக் கூட்டத்தின் நடுவே தாக்கிய பத்ர்-எஃப் ஏவுகணைத் தாக்குதலில் டஜன் கணக்கான சவுதி துருப்புக்களும் வெளிநாட்டு கூலிப்படையினரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 20 அன்று, யேமன் ஆயுதப்படைகளின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ஜிசான் சர்வதேச விமான நிலையம் மீண்டும் யேமன் போர் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக அறிவித்தார். இந்த முறை ஆளில்லா வான்வழி வாகனங்கள் சவுதியின் ஹங்கர் விரிகுடாவை தாக்கியது. யேமனில் பொதுமக்கள் மற்றும் சிவிலியன்  உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்பட்ட அமெரிக்க-சவுதி போர் இயந்திரத்தின் ஒரு பகுதியான, ஒரு காலத்தில் அஞ்சப்பட்ட, ட்ரோன்கள் இப்போது யெமனின் ஒரு புதிய மற்றும் மிகவும் திறமையான ஆளில்லா விமானத்தால் அழிக்கப்படுகின்றன.
நடைபெற்று வரும் மிகவும் திறமையான மற்றும் துல்லியமான யெமன் வான்வழித் தாக்குதல்கள் மூலம், யெமன் புரட்சியின் தலைவர் சயீத் 'அப்துல்-மாலிக் அல்-ஹூதி ஏப்ரல் மாதத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படையெடுப்பாளர்கள் ஹுதைதா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் சவுதி வசதிகள் தாக்கப்படும் என்று அவர் அப்போது சூளுரைத்திருந்தார். இவ்வளவு குறுகிய காலத்தில் அது நடைபெறும் என்று யாரும் எதிர்பாக்கவில்லை.
ஜூன் 20 அன்று, யஹ்யா சாரி இந்த அச்சுறுத்தலை மீண்டும் தெளிவான வகையில் வெளியிட்டார், யெமனின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சவூதி அரேபியாவில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தாக்க முடியும் என்று எச்சரித்திருந்தார். "சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க தயாரிப்புகளாலும் இடைமறிக்கும் உபகரணங்களாலும் சமாளிக்க முடியாத உயர் தொழில்நுட்பங்கள் இப்போது எங்களிடம் உள்ளன; எமது தாக்குதல்கள் வெறும் ஆசிர், நஜ்ரான் அல்லது ஜிசான் ஆகியவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது" என்றும் கூறினார்.
எல்லா முரண்பாடுகளையும் மீறி, யெமன் போரில் அன்ஸாருல்லாஹ் படையினர் வென்று வருகின்றனர் என்பது நிச்சயமாக மிகைப்படுத்தல் அல்ல. இது உலகெங்கிலும் உள்ள பல செய்தி பண்டிதர்களுக்கும் தம்மை ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோருக்கும் ஆச்சரியமாக இருக்கக் கூடும், ஆனால் யெமன் நிச்சயமாக வெற்றி பெறும், இன்ஷாஅல்லாஹ்.
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன். (4/45)


Sunday, July 14, 2019

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இல்லை


Iran will never submit to US's tantrums

ஈரானில் இஸ்லாமிய புரட்சி வெற்றி பெற்ற காலம் தொடக்கம் இன்று வரை அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை இல்லாதொழிப்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவது கண்கூடு.

ஆரம்ப காலம் தொட்டே பொருளாதாரத் தடை, யுத்த திணிப்பு, ராணுவ அச்சுறுத்தல், ஆட்சி கவிழ்ப்பு சதி, உள்நாட்டு கலகங்கள் என்று எத்தனையோ முயற்சிகளை செய்து பார்த்துவிட்டனர். எதிலும் அவர்களால் இன்றளவிலும் வெற்றிபெற முடியவில்லை.
திணிக்கப்பட்ட யுத்தம் நல்ல அனுபவத்தையும் பெற்று கொடுத்தது. தன் நிலையை சரியாக புரிந்துகொண்ட ஈரானிய தலைவர்கள் தமக்கு அத்தியாவசியமான அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முடிவில் உறுதியாய் இருந்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். குறிப்பாக தமது தேசிய பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஆயுதங்களையும் உற்பத்தி செய்து, அடுத்தவர் தயவில் வாழும் நிலையில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் இஸ்லாமிய குடியரசின் மீதான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளதை உணரக்கூடியதாக உள்ளது. இதற்காக அது பல போலியான காரணங்களை முன்வைத்தும் வருகிறது. அமெரிக்காவினது நோக்கம் சூழவுள்ள பிற்போக்குவாத அரபு ஆட்சியாளர்களை போன்று ஈரான் இஸ்லாமிய குடியரசும் அதன் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்பதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அதனை வளரவிடக் கூடாது என்பதுமாகும்.
ஈரானின் அணு ஆராய்ச்சி சிவிலியன் தேவைக்காக அன்றி வேறில்லை என்பதை ஈரானிய தலைவர்கள் பல முறை ஆணித்தரமாக கூறியுள்ளனர். மேலும் ஈரான் அணுவாயுத பரம்பல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது என்பது மட்டுமல்லாமல் IAEA எனும் ஐ.நா.அமைப்பின் தீவிர கண்காணிப்பின் கீழும் உள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈரான் அவ்வொப்பந்தத்தை மீறவில்லை என்று அவ்வமைப்பு கூட உறுதிப்படுத்தியுள்ளது.
"மனித பேரழிவை ஏற்படுத்தும் அணுவாயுத தயாரிப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால் அது ஹராம்" என்று ஈரானின் அதி உயர் தலைவர் இமாம் ஆயத்துல்லாஹ் காமனேய் பத்வாவும் வழங்கியுள்ளார்.
எனினும், உலக நாடுகளின் அச்சத்தை போக்குவதற்காக ஈரான் இஸ்லாமிய குடியரசு, பல ஆண்டுகால பேச்சுவார்த்தைகளின் பின், அமெரிக்கா உட்பட உலகின் பலம் வாய்ந்த ஆறு நாடுகளுடன் இணைந்து - அனைத்து சட்டவிரோத பொருளாதாரத் தடைகளும் அகற்றப்படும் என்ற நிபந்தனைகளின் கீழ் - 2015ம் ஆண்டு ஜெனீவாவில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அப்போது 20% அணு செறிவாக்கல் நிலையை எட்டியிருந்த ஈரான், அதனை 3.67% அளவுக்கு குறைத்துக் கொள்ளவும் இணங்கியது.

இவ்வாறு இருக்கையில் தான் கடந்த ஆண்டு அமேரிக்கா அவ்வொப்பந்தத்தில் இருந்து தாம் வெளியேறுவதாகக் கூறி தன்னிச்சையாக விலகிக்கொண்டது மட்டுமல்லாமல் சர்வதேச மரபுகள் அனைத்தையும் மீறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

அமெரிக்காவின் சண்டித்தனத்துக்கு அடிபணியும் நிலையில் ஈரான் இஸ்லாமிய குடியரசு இல்லை.  இந்த பொருளாதார தடைகளினால் ஈரான் கஷ்டங்களை அனுபவித்து வருகிறது என்பது உண்மையே. இருந்தாலும் இந்த சோதனைகள் அனைத்தையும் சமாளிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு என்பதை அதன் புரட்சிக்கால வரலாறு பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஈரானிடம் அச்சுறுத்தல்கள் மூலம் காரியம் சாதிக்க முடியாது என்பதையும் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் எனும் ஒரு தெளிவான செய்தியை, அமெரிக்க ராணுவ ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியன் மூலம் ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளது. 

அமெரிக்கா வரை சென்று ஈரானால் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும் ஈரானை சூழவுள்ள அமெரிக்க ராணுவத்தலங்களையும், பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்களையும் மேலும் அமேரிக்கா காப்பாற்ற நினைக்கும் இஸ்ரேலையும் தாக்கி பாரிய சேதங்களையும் விளைவிக்கும் ஆற்றல் ஈரானுக்கு உண்டு என்பதை அமேரிக்கா நன்கு அறிந்து வைத்துள்ளது.

அதனது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் இஸ்லாமிய குடிரசு தனது முழு வலிமையையும் பயன்படுத்தும் என்பதை அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் ஊடாக அது நன்கு உணர்த்தியுள்ளது.

இந்த விமான இழப்பு அமெரிக்காவுக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அமேரிக்கா, தனது முகத்தை காப்பாற்றிக்கொள்ள, ஈரானில் முக்கியமற்ற ஒரு சில இடங்களை தாக்குவதற்கு ஈரானிடமே அனுமதி வேண்டி, மூன்றாம் தரப்பு ஒன்றை தூதனுப்பும் வெட்கம் கெட்ட செயலையும் செய்துள்ளது.

இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானை நோக்கி, "தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், எந்த முன்நிபந்தனையும் இன்றி பேசுவோம்" என்று திரும்பத்திரும்ப அழைப்பதாகும். இந்த அழைப்பை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்தது.
இது இவ்வாறு இருக்கையில், JCPOA எனும் சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஐரோப்பிய தரப்பினருக்கு ஒப்பந்தத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டை கௌரவிக்க ஈரான் 60 நாள் காலக்கெடு கொடுத்தது. ஐரோப்பிய தரப்பினர் அதனை மதிக்கத் தவறியதால் இஸ்லாமிய குடியரசு அதன் யுரேனியம் செறிவூட்டல் நிலையை, 2015 ல் ஜெனீவாவில் ஒப்புக் கொண்ட 3.67 சதவீத வரம்பிலிருந்து 5 வீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 
மொசாட் மற்றும் சிஐஏ முகவர்களால் பல அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட போதிலும், அதன் யுரேனியம் செறிவூட்டல் அளவை 20 சதவீதமாக உயர்த்திய ஈரான், பின்னர் அதை தரமிறக்க இணங்கியது, குறிப்பாக வியன்னாவை தளமாகக் கொண்ட சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்லாமிய குடியரசின் அணுசக்தி திட்டத்தின் அமைதியான தன்மையை மீண்டும் உறுதிப்படுத்திய நிலையிலும், அமெரிக்கா மற்றும் சக்தி வாய்ந்த மூன்று ஐரோப்பிய நாடுகள் (பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன்) உட்பட மேற்கு நாடுகள் தாங்கள் உறுதியளித்த அனைத்து தடைகளையும் நீக்காமல் ஈரானை ஏமாற்றலாம்அச்சுறுத்தி காரியம் சாதிக்கலாம், அதன் அணு ஆய்வை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டன.
மேலும், உலகின் அதி பயங்கர அணுவாயுதங்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதைத் தொடர்ந்து விஷயங்கள் மோசமான நிலைக்கு திரும்பின. ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக வெளியேறிய அவர், தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் அழைப்பதானது தம்மை ஏமாற்ற நினைக்கும் மற்றுமொரு சதியாகவே ஈரான் கருதியது.
ட்ரம்ப் உடன் அவரது குண்டர்கள் குழுவும் ஈரான் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன்ஈரானை அச்சுறுத்தும் வகையில் பிராந்தியத்தில் அவர்களின் இராணுவ பலத்தையும் காட்சிப்படுத்தவும் துவங்கின. அதே நேரத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மூன்று ஐரோப்பிய நாடுகளும் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன. ஐ.நா.வின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் மீறப்படுவதை பற்றி ஐ.நா.வும் அலட்டிக்கொள்ளவில்லை.
குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் கல்லறையை நோக்கி செல்வதை உணர்ந்த இஸ்லாமிய குடிரசுசம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்பந்தத்தை மதிக்குமாறு 60 நாட்கள் கெடு கொடுத்தது. எனினும் அவர்கள் தமது கடமையினை மதிக்க தவறினர். ஈரான் வேறு வழியின்றி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் சதவீதத்தை அதிகரிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் சட்டபூர்வமான, நியாயமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த முறுகல் நிலைக்கான முழு பொறுப்பையும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளுமே எடுக்க வேண்டும்.

எவ்வாறிருப்பினும், ஈரான் இஸ்லாமிய குடியரசு அதனது அணு ஆய்வை சிவிலியன் தேவைக்காக அன்றி, ஒருபோதும் அணு ஆயத்தங்களை நோக்கி நகர்த்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.


-       -  தாஹா முஸம்மில்