Contributors

Tuesday, July 30, 2019

இஸ்லாமிய எழுத்தணி கலை - தோற்றமும் வளர்ச்சியும்


Islamic calligraphy
இஸ்லாமிய எழுத்தணி கலை என்பது ஒரு பொதுவான இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் நிலங்களில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கையெழுத்து நடைமுறையாகும்.
இதில் அரபு இஸ்லாமிய எழுத்தணி கலை, ஒட்டோமான் இஸ்லாமிய எழுத்தணி கலை, பாரசீக இஸ்லாமிய எழுத்தணி கலை மற்றும் சீன  கலை வடிவங்கள் அடங்கும்.
இது அரபு மொழியில் கத் இஸ்லாமி (خط إسلامي) என்று அழைக்கப்படுகிறது, இதன் பொருள் இஸ்லாமிய வரி வடிவமைப்பு என்பதாகும்.
இஸ்லாமிய எழுத்தணி கலையின் வளர்ச்சி குர்ஆனுடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது; இஸ்லாமிய எழுத்தணி கலை குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான மற்றும் கிட்டத்தட்ட உலகளாவிய எழுத்தணி கலை வடிவமாகும்.
இருப்பினும், இஸ்லாமிய கையெழுத்து என்பது கண்டிப்பாக மதப் பாடங்கள், பொருள்கள் அல்லது இடங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை.
அனைத்து இஸ்லாமிய கலைகளையும் போலவே, இதுவும் பல்வேறு வகையான சூழல்களில் உருவாக்கப்பட்ட பலவிதமான படைப்புகளை உள்ளடக்கியது.
இஸ்லாமிய கலையில், கையெழுத்து பரவல் அதன் பாரம்பரியத்துடன் நேரடியாக தொடர்புடையது அல்ல; மாறாக, இது இஸ்லாத்தில் எழுதுதல் மற்றும் எழுதப்பட்ட உரை என்ற கருத்தின் மையத்தை பிரதிபலிக்கிறது.
உதாரணமாக, ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "இறைவன் படைத்த முதலாவது பொருள் எழுதுகோலாகும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது. (திர்மிதி, அபூ தாவூத், அஹ்மத்)
இஸ்லாமிய எழுத்தணி கலை இரண்டு முக்கிய வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது: ஒன்று குஃபி மற்றது  நாஸ்க் வடிவமைப்புகளாகும். ஒவ்வொன்றிலும் பல வேறுபாடுகள் உள்ளன, அத்துடன் பிராந்திய ரீதியாக குறிப்பிட்ட எழுதும் பாணிகளும் உள்ளன.
மத்திய கிழக்கில் காலனித்துவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் தொடங்கி நவீன கலைகளில் இஸ்லாமிய எழுத்தணி கலை இணைக்கப்பட்டுள்ளது, அத்துடன் 'காலிகிராஃபிட்டி' எனும் சமீபத்திய பாணியும் அடங்குகிறது.
கருவிகள் மற்றும் ஊடகங்கள்
இஸ்லாமிய எழுத்தணி கலையின் பாரம்பரிய கருவி கலம் (பேனா), பொதுவாக உலர்ந்த நாணல் அல்லது மூங்கில் ஆகியவற்றினால் செய்யப்பட்ட பேனா. மை, பெரும்பாலும், வர்ணங்களில் தேர்வு செய்யப்படுவதால் அதன் அழுத்தம் பெரிதும் மாறுபடும், இது எழுத்து வடிவங்களில் மாறுபட்ட தன்மையை உருவாக்குகிறது. சில உலோக-முனை பேனாவைப் பயன்படுத்தியும் எழுதப்படுவதுண்டு.
காகிதங்கள் மட்டுமல்லாது ஓடுகள், பாத்திரங்கள், தரைவிரிப்புகள் மற்றும் கல் போன்ற பல வகையான அலங்கார ஊடகங்களுக்கு இஸ்லாமிய எழுத்தணி கலையை பயன்படுத்தலாம்.
கடதாசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பாப்பிரஸ் மற்றும் தோல்காகிதம் ஆகியவை எழுத்துக்கு பயன்படுத்தப்பட்டன. (பாபிரஸ் (Papyrus) எனபது பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் நதியின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்).
9 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து காகிதத்தின் வருகை, எழுத்தணி கலையில் புரட்சியை ஏற்படுத்தியது. அக்கால கட்டத்தில்  ஐரோப்பாவில் உள்ள மடாலயங்களில் சில பத்து நூல் தொகுதிகளை பொக்கிஷமாகக் பாதுகாத்திருந்தாலும், முஸ்லீம் உலகில் உள்ள நூலகங்களில் அதுபோன்ற ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.
பல நூற்றாண்டுகளாக, எழுதும் கலையானது இஸ்லாமிய கலையில் ஒரு மையச் சின்னச் செயல்பாட்டை நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய எழுத்தணி கலையின் கல்வி மரபு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆரம்பகால வரலாற்றின் பெரும்பகுதியான பாக்தாத்தில் தொடங்கியிருந்தாலும், அது இறுதியில் இந்தியா மற்றும் ஸ்பெயின் வரை பரவியது.
இவற்றுக்கு மற்றொரு ஆதாரமாக நாணயங்கள் இருந்தன. 692 இல் தொடங்கி, இஸ்லாமிய கலிபா பைசண்டைன் கிறிஸ்தவ உருவங்களை கொண்ட நாணயங்களை அரபு மொழியில் பொறிக்கப்பட்ட இஸ்லாமிய சொற்றொடர்களை கொண்டு மாற்றுவதன் மூலம் நாணயத்தில் சீர்திருத்தம் மேற்கொண்டார். இது குறிப்பாக தினார் அல்லது அதிக மதிப்புள்ள தங்க நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, நாணயங்களில் குர்ஆனின் சொற்கள் பொறிக்கப்பட்டன.
பத்தாம் நூற்றாண்டளவில், இஸ்லாத்தை ஏற்றிருந்த பாரசீகர்கள்,  பட்டுத்துணிகளில் குர்ஆன் வசனங்களை விரிவான வடிவில் நெசவு செய்யத் தொடங்கினர். அரபு உரைகளை உள்ளடக்கிய ஜவுளி மிகவும் விலைமதிப்பற்றதாக காணப்பட்டதால், சிலுவைப்போராளிகள் அவற்றை ஐரோப்பாவிற்கு மதிப்புமிக்க உடைமைகளாக கொண்டு சென்றனர். ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடமேற்கு பிரான்சில் கெய்னுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜோஸ்-சுர்-மெரின் அபேயில் செயின்ட் ஜோஸ்ஸின் எலும்புகளை சுற்றிக் கட்டுவதற்காக சுவைர் டி செயிண்ட்-ஜோஸ்ப பாரசீக பட்டுத்துணி யையே யன்படுத்தினார்.
இஸ்லாமிய எழுத்தணி  மிகவும் மதிக்கத்தக்கது என்பதால், பெரும்பாலான படைப்புகள், மதச்சார்பற்ற அல்லது சமகால படைப்புகளைத் தவிர்த்து, நன்கு நிறுவப்பட்ட கையெழுத்து எழுத்தாளர்களால் அமைக்கப்பட்ட மாதிரிகளை பின்பற்றி வரையப்பட்டுள்ளன. இஸ்லாமிய பாரம்பரியத்தில், எழுத்தணி கலைஞர்கள் சான்றிதழ் பெறுவதற்காக, அவர்களின் மாதிரிகள் ஆசிரியரின் ஆய்வுக்கு  உட்படுத்தலுடன், மூன்று நிலைகளில் விரிவான பயிற்சி பெற வேண்டும்.
'கூஃபி' எழுத்து முறையானது அரபு எழுத்துக்களின் பழமையான வடிவமாகும். இது கோணங்களைக்கொண்ட கடுமையான பழைய நபதஈன் எழுத்து முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. தொன்மையான கூஃபி அட்சரங்கள், புள்ளிகள் அல்லது உச்சரிப்பு அடையாளங்கள் இல்லாமல் சுமார் 17 எழுத்துக்களைக் கொண்டிருந்தது. குர்ஆன் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை உச்சரிக்க வாசகர்களுக்கு உதவுமுகமாக 7 ஆம் நூற்றாண்டில் உச்சரிப்புக்கான அடையாளங்கள் சேர்க்கப்பட்டதனால், அரபு எழுத்துக்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தன.
கூஃபி எழுத்துருக்கள் 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கின் கூபாவில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது, அதில் இருந்தே அதன் பெயர் வந்தது. (சில அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள்). இந்த பாணி பின்னர் பல வகைகளாக வளர்ந்து, அதன் நேரான மற்றும் ஒழுங்கான எழுத்துக்கள் காரணமாக, கூஃபி எழுத்துரு அலங்காரம் கல் செதுக்குதலிலும் நாணயங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.
இது 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை குர்ஆனை நகலெடுக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய எழுத்து முறையாக இருந்தது, மேலும் 12 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் பாணி நடைமுறைக்கு வந்ததும்  இதன்  பொதுவான பயன்பாடு வழக்கொழிந்தது. இருப்பினும், மேலதிக பாணிகளை வேறுபடுத்துவதற்கு இது ஒரு அலங்கார உறுப்பு என தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
கூஃபி எழுத்துரு பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை என்பதால் எழுத்துக்களின் கோண, நேரியல் வடிவங்கள் மட்டுமே பொதுவான அம்சமாகும். ஆரம்பகால கூஃபி எழுத்துரு தரப்படுத்தலின் குறைபாடு காரணமாக, பிராந்தியங்களுக்கிடையில் இது சதுர மற்றும் கடினமான வடிவங்களிலிருந்து பூக்கள் மற்றும் அலங்காரங்கள் வரை மிகவும் பரவலாக வேறுபடுகிறது.
பொதுவான வகைகளில் சதுர கூஃபி, 'பன்னாய்' எனப்படும் ஒரு நுட்பமாகும். இந்த கையெழுத்து பாணி நவீன அலங்காரங்களிலும் பிரபலமானது.
ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் போலியான கூஃபி கல்வெட்டுகள் அலங்காரங்களுக்காக பயன்படுத்தப்பட்டன. போலி-கூஃபி இணைக்கப்படுவதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை. எனினும், 13 முதல் 14 ஆம் நூற்றாண்டின் மத்திய கிழக்கு முஸ்லிம் எழுத்தணி கலையினை மேற்கத்தியர்கள் தவறாக இயேசுவின் காலத்தில் பயன்படுத்திய எழுத்து முறைகளுடன் தொடர்புபடுத்த முயற்சித்ததாக தெரிகிறது, இதனால் ஆரம்பகால கிறிஸ்தவர்களை இந்தக் கலையுடன் இணைத்து பிரதிநிதித்துவப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாஸ்க்
நாஸ்க் எனும் வளைவுடனான எழுத்துரு பயன்பாடு கூஃபி எழுத்து வடிவத்துடன் இணைந்தது. வரலாற்று ரீதியாக இவ்வாறான எழுத்துரு பொதுவாக முறைசாரா நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியுடன், மாற்றங்களின் வேகத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய எழுத்தணி தேவைப்பட்டது, மேலும் 10 ஆம் நூற்றாண்டில் நாஸ்க் என்ற நன்கு வரையறுக்கப்பட்ட வளைவு எழுத்து முதலில் தோன்றியது. நாஸ்க் என்பதை "நகலெடுப்பது" என்று மொழிபெயர்க்கிறார், ஏனெனில் இது புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை படியெடுப்பதற்கான தரநிலையாக மாறியது. குர்ஆன் வசனங்கள், உத்தியோகபூர்வ ஆணைகள் மற்றும் தனியார் கடிதப் பரிமாற்றங்களில் என்று இந்த எழுத்துருவானது எங்கும் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்பட்டது. இதுவே நவீன அரபு அச்சின் அடிப்படையாக மாறியது
எழுத்தணி கலை தரநிலைப்படுத்தலில் இப்னு முக்லா  (886 - 940 கி.பி) முன்னோடியாக இருந்து, பின்னர் அபு ஹயான் அத்-தவ்ஹீதி  (1009 கி.பி. இறப்பு) அவர்களால் விரிவுபடுத்தப்பட்டது என்பது பொதுவான கருத்து. இது பிழையானது என்று தோன்றினாலும், நாஸ்க் பாணியின் கண்டுபிடிப்பாளராக இப்னு முக்லா, முஸ்லிம் எழுத்தணி கலை உலகில் மிகவும் மதிக்கப்படும் ஒருவராக இன்றளவிலும்  இருக்கின்றார். இப்னு முக்லாவின் கையெழுத்து பொதுவாகவே வட்டமானதாக, தெளிவாக எழுதப்பட்ட காரணத்தினால் பல அறிஞர்கள் அவரே  இந்த கலையை நிறுவினார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆயினும், உண்மையில், இப்னு முக்லாவின் மாணவரான இப்னுல் பவ்வாப் என்பவரே இதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இப்னு முக்லா எழுத்துக்களை வடிவமைப்பதற்கான முறையான விதிகளையும் விகிதாச்சாரங்களையும் நிறுவினார், அவை 'அலிஃப்பை X-உயரமாகப் பயன்படுத்துகின்றன.
நாஸ்கின் மாறுபட்ட வடிவங்கள் பின்வருமாறு:
1.      ஸுலுத் வடிவம் 10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது, பின்னர் அஹ்மத் தயிப் ஷா அவர்களால் இன்னும் மெருகூட்டப்பட்டது. இந்த வடிவத்திலான எழுத்துக்கள் பரந்த இடைவெளியுடன் நீண்ட செங்குத்து கோடுகளைக் கொண்டுள்ளன. ஸுலுத் என்பது "மூன்றாவது" என்று பொருள்படும் பெயர், x-உயரத்தைக் குறிக்கிறது, இது 'அலிஃப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
2.      ரிக்கா என்பது நாஸ்க் மற்றும் ஸுலுத்திலிருந்து மருவிய ஒரு கையெழுத்து வடிவம், இது முதலில் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது குறுகிய கோடுகளை கொண்ட எளிய வடிவமாகும்.
3.      முஹக்காக் என்பது திறமையான எழுத்தணி கலைஞர்களால்  பயன்படுத்தப்படும் கம்பீரமான பாணி. இது மிக அழகான கையெழுத்துகளில் ஒன்றாக கருதப்பட்டது, அதே போல் எழுதுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாகும். முஹக்காக் பொதுவாக மன்னர் மம்லுக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டு முதல் "பிஸ்மில்லாஹ்" போன்ற குறுகிய சொற்றொடர்களுக்கு மட்டுமே ட்டுப்படுத்தப்பட்டது.

பிராந்திய வடிவங்கள்
இஸ்லாத்தின் பரவலுடன், அரபு எழுத்துக்கள் ஒரு பரந்த புவியியல் பகுதியில் நிறுவப்பட்டன, பல பகுதிகள் அவற்றின் தனித்துவமான வடிவங்களையும் வளர்த்துக் கொண்டன. 14 ஆம் நூற்றாண்டு முதல், துருக்கி, பாரசீகம் மற்றும் சீனா போன்ற பிரதேசங்களிலும் உருவாகத் தொடங்கின.
1. திவானி வடிவம் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உஸ்மானிய துருக்கியர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரபு கையெழுத்துப் வடிவமாகும். இந்த வடிவம் ஹவ்ஸாம் ரூமி என்பவரால் உருவாக்கப்பட்டது, மேலும் முதலாவது சுலைமான் (1520–1566) இன் கீழ் திவானி வடிவம் அதன் பிரபலத்தின் உச்சத்தை அடைந்தது. [23] எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளிகள் பெரும்பாலும் குறுகலானவை, மேலும் கோடுகள் வலமிருந்து இடமாக மேலே செல்லும் அமைப்பை கொண்டது. ட்ஜாலி எனப்படும் பெரிய வேறுபாடுகள் புள்ளிகளின் அடர்த்தியான அலங்காரங்கள் மற்றும் இடையில் உள்ள இடைவெளி ஒலிக்குறியீட்டு அடையாளங்களால் நிரப்பப்படுகின்றன. இது ஒரு கச்சிதமான தோற்றத்தை அளிக்கிறது. திவானி அதன் கனமான வடிவமைப்பு காரணமாக எழுதவும் படிக்கவும் கடினமாக உள்ளதன் காரணமாக ரகசியத்தன்மையை உறுதிசெய்து மோசடி செய்வதைத் தடுப்பதற்காக நீதிமன்ற ஆவணங்களை எழுதுவதற்கான சிறந்த எழுத்துருவாக மாறியது.
2. நாஸ்டாலிக் என்பது மற்றுமொரு வடிவமாகும். இது முதலில் பாரசீக மொழி இலக்கிய படைப்புகளை எழுத வடிவமைக்கப்பட்டுள்ளது. நாஸ்டாலிக் என்பது நாஸ்க் வடிவின் பிற்கால வளர்ச்சியாகவும், ஈரானில் பயன்படுத்தப்பட்ட முந்தைய தாலிக் எழுத்துருவின் கலப்பாகவும் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு தெற்காசியாவில் மிக விரைவாக பிரபலமடைந்த ஒன்றாக உள்ளது.         
 
'லிக் என்ற பெயர் "தொங்குதல்" என்று பொருள்படும், மேலும் இந்த வடிவத்தில் உள்ள உரை வரிகள் சற்றே சாய்ந்ததாக இருப்பதை குறிக்கிறது. எழுத்துக்கள் குறுகிய செங்குத்து கோடுகளை கொண்டதாகவும் மற்றும் பரந்த கிடைமட்ட கோடுகளை கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் வடிவங்கள் ஆழமானவை, கொக்கி போன்றவை, மேலும் அதிக வேறுபாட்டைக் கொண்டவை. ஷிகாஸ்டே எனப்படும் ஒரு வேறுபட்ட முறையும் 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த அற்புத எழுத்தணி கலையை கட்டட கலையுடன் இணைத்த பெருமை பாரசீகத்தையே சாரும்.
3. சீனி என்பது சீனாவில் உருவாக்கப்பட்ட ஒரு வடிவமாகும். நாணல் எழுதுகோலுக்கு பதிலாக குதிரைவால் முடியினால் செய்யப்பட்ட தூரிகையைப் பயன்படுத்தி, எழுதப்பட்ட இந்த சீன கையெழுத்து வடிவம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாரம்பரியத்தில் ஒரு பிரபலமான நவீன எழுத்தணி கலைஞர் ஹஜ்ஜி நூர்தீன் மி குவாங்ஜியாங் என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, July 22, 2019

ஈரான் தொடர்பான உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள் - உலக சக்திகளுக்கு ஈரானின் தெளிவான செய்தி

Change your course viz-a-viz Iran – Iran’s clear message to W.Powers


ஐந்து வல்லரசு நாடுகளும் ஜெர்மனியும் இணைந்து ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் செய்து கொண்ட JCPOA ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி தன்னிச்சையாக வெளியேறி, இஸ்லாமிய ஈரானை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற எண்ணத்தில், கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து மத்தியகிழக்கு பிரதேசத்தில், குறிப்பாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் பதற்ற நிலை நீடித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அது மட்டுமல்லாமல் விமானம் தாங்கி போர் கப்பல்களை அனுப்புகிறோம், அடிப்போம், அழிப்போம் என்றெல்லாம் அமெரிக்கா பயமுறுத்தி பார்த்தது. இவை எதற்குமே ஈரான் அஞ்சவில்லை. எத்தகைய அத்துமீறல்களுக்கும் பதிலடி கொடுப்போம் என்பதற்கு அறிகுறியாக ஈரான் அமெரிக்க புலனாய்வு ட்ரோன் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியது.
நிலைமை இவ்வாறு இருக்கையிலேயே ஜூலை 4ம் திகதி பிரிட்டன், ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த Grace 1 என்ற ஈரானிய எண்ணைதாங்கி கப்பலை, அமெரிக்காவின் தூண்டுதலுக்கு இணங்க, சட்டவிரோதமாக கைப்பற்றியது. இது ஈரானை வேண்டுமென்றே வம்புக்கிழுக்கும் செயலாகும்.

ஈரானுக்கு சொந்தமான இக்கப்பலை விடுவிக்க ஈரான் எல்லா ராஜதந்திர நடவடிக்கையையும் எடுத்தது; முடியுமான அத்தனை கோரிக்கைகளையும் விடுத்தது. இவை எதற்கும் பிரிட்டன் செவிசாய்க்காத நிலையில் ஈரான் அதற்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது, நிச்சயமாக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியாக கூறியது.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று பிரிட்டிஷ் கடற்படையினர்  
ஜிப்ரால்டாவுக்கு அருகாமையில் சர்வதேச கடலில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஈரானிய எண்ணெய் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதை கேள்விப்பட்டபோது, போல்டன், அவரது அளவுகடந்த மகிழ்ச்சியை "சிறந்த செய்தி: ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை மீறி சிரியாவிற்கு ஈரானிய எண்ணெயுடன் சென்ற கிரேஸ் 1 என்ற சூப்பர் டேங்கரை இங்கிலாந்து தடுத்து வைத்துள்ளது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.


இங்கிலாந்தில் பிரெக்ஸிட் என்றும், பிரதமர் ராஜினாமா என்றும், புதிய பிரதமர் தெரிவுக்கான ஓட்டம் என்றும் ஒரு அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்து கொண்டிருக்கும் நிலையில் அது அமெரிக்க சதிவலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒழுங்கற்ற முறையில் வெளியேறும் விளிம்பில் உள்ளது, அதன் நெருங்கிய ஐரோப்பிய பங்காளிகளை அந்நியப்படுத்தியும் இருக்கிறது. அதே சமயம் டிரம்ப்பின் அமெரிக்காவுடனான அதன் உறவு கணிசமான அளவு சிதைந்தும் உள்ளது. இதன் விளைவாக, பிரிட்டன், அதைச் சமாளிக்க முடியாத தருணத்தில், ஒரு சர்வதேச நெருக்கடியின் நடுவில் இழுத்து விடப்பட்டுள்ளது.

ஜிப்ரால்டர் விவகாரத்தின் விளைவுகள் இப்போது தெளிவாகி வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியில் ஸ்டெனா இம்பீரோ (Stena Impero) என்ற பிரிட்டிஷ் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றினர். பிரிட்டனின் ஜிப்ரால்டர் "கடற்கொள்ளை"க்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் முன்னர் உறுதியளித்திருந்தது. இது அந்த சம்பவத்துடன் ஒரு வெளிப்படையான தொடர்பை கொண்டிருக்கவில்லை என்றாலும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலை தவிர்க்கப்பட்டிருக்கலாம். இன்றைய நெருக்கடிக்கு தூண்டுதலான ஈரானுடனான 2015 - JCPOA அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான டிரம்ப்பின் முடிவை பிரிட்டன் எதிர்த்தும் இருந்தது. பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடை ஆகியவற்றை உள்ளடக்கிய "அதிகபட்ச அழுத்தம்" என்ற டிரம்ப்-போல்டன் கொள்கை, மிகவும் மிதமான ஈரானியர்களை கூட தீவிரமயமாக்கியுள்ளதால் பிரிட்டன் இவ்விடயத்தை மிகவும் எச்சரிக்கையுடனேயே அவதானித்துக் கொண்டிருந்தது.

JCPOA அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளை பிரிட்டன் ஆதரித்தபோதும், தெரேசா மே மற்றும் வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் இரு வழிகளையும் கொண்டிருக்க முயன்றனர் - டிரம்பின் காதலையும் விரும்பினார்.

ஈரானின் பிராந்திய நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணைத் திட்டம் பற்றிய வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்தனர், மேலும் ஈரானை, ஒப்புக்கொண்ட அணுசக்தி தடைகளைத் தவிர்த்தபோது, அதை கண்டித்தனர்.

ஆக, அவர்கள் ஒரே நேரத்தில் அமெரிக்காவையும் ஈரானையும் திருப்த்திப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டனர் எனலாம்.

பிரித்தானிய கப்பலை தடுத்து வைத்துள்ள ஈரான் அதனை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டனுடன் இணைந்து அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை விடுத்துள்ளன. இதன்மூலம் ஈரானிய எண்ணெய் கப்பல் தடுத்து வைக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய இவர்களது இரட்டை நிலைப்பாட்டை அவர்களாகவே உலகுக்கு தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர். ஈரான் இஸ்லாமிய குடியரசும் அநியாயத்துக்கு அடிபணிய மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாய் உள்ளது.

தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? என்ற அச்சம் பலர் மனதிலும் தோன்றியிருக்கும். ஆனால் நல்லவேளை  அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஒரு யுத்தம் ஏற்படுவதை அமரிக்காவும் விரும்பவில்லை, ஈரானும் விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கும் விடயமாகும்.

ஆனாலும் யுத்தம் ஒன்று ஏற்பட்டு, ஈரான் அழிவை சந்திக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சவூதி அரேபியாவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்தது எனலாம்.

மேலும் அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவமானது, பிராந்தியத்தியத்தில் உள்ள ஏனைய அரபு நாடுகளுக்கும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியது. தமது நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின், நிச்சயமாக ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தும்; அதனால் தமது நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரும் என்று உணர்ந்த ஐக்கிய அரபு ராஜ்ஜியம் சவுதி தலைமையிலான ராணுவ கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது மட்டுமல்லாமல், தெஹ்ரானுக்கு தமது தூதுக்குழுவையும் அனுப்பி வைத்தது. இது சவுதிக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்தது.

சவுதியின் சுய விருப்பு வெறுப்புக்காக தமது நாட்டு நலன்களை பணயம் வைக்க அமெரிக்காவும் தயாரில்லை, சூழவுள்ள அரபு நாடுகளும் தயாரில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இதனை சரியாக புரிந்து கொண்டு சவுதி அரேபியா தன்னிலையை மாற்றி, பிராந்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுதல் சகலருக்கும் நன்மை பயக்கும். இதுவே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.



Wednesday, July 17, 2019

யெமன் யுத்தத்தினால் சவூதி அரேபியாவுக்கு பெருத்த அவமானம்...!

Saudi disgraced by war on Yemen 

யெமனின் ஜனாதிபதியாக இருந்த அமெரிக்க, சவூதி சார்பு அப்துல் றப்பு மன்சூர் ஹாதி, நாட்டில் நிலவிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்கேடுகள் காரணமாக ஹௌதி போராளிகள் மேற்கொண்ட புரட்சிக்கு முகம்கொடுக்க முடியாமல் 2015ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு தப்பியோடினார். அதனால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் சவூதி ஆதிக்கம் நிலைகுலையலாயிற்று.
மீண்டும் மன்சூர் ஹாதியை பதவியில் அமர்த்துவதற்காக, சவூதி அரேபியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து ஒன்பது நாடுகளின் கூட்டணியை அமைத்துக்கொண்டு திடுதிப்பென யெமன் மீது தாக்குதலை தொடுத்தது.
சவுதி தலைமையிலான இந்த தாக்குதல், ஆரம்பத்தில் ஹௌதி இலக்குகள் என்று ஆரம்பித்து, மேற்கு யெமனில் பொதுமக்கள் இலக்குகள் வரை விரிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட் தலைமையிலான தரைப்படைகளை தெற்கில் நிறுத்தியதுடன் பொருளாதாரத் தடை, கப்பல் போக்குவரத்து தடை என்று சவூதி தலைமையிலான கூட்டுப்படை நிலைமையை இன்னும் சிக்கலாக்கியது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மன்சூர் ஹாதியை மீண்டும் பதவியில் அமர்த்துவோம் என்று சவூதி அரேபியா சூளுரைத்தது. இப்பிராந்தியத்திலேயே வறிய நாடான யெமன், நவீன அமெரிக்க ஆயுதங்களை வைத்துள்ள சவுதியின் நெருக்குவாரங்களுக்கு அடிபணியும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் சவூதி அரேபியா மட்டுமல்ல உலக வல்லரசுகளே திகைக்கும் அளவுக்கு ஹௌதிகள் திருப்பித் தாக்கினர். 39 நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டும் சவுதியினால் ஹௌதிகளின் உறுதியை தகர்க்க முடிய வில்லை.
சவுதிக்கு இது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. ஈரான் ஹௌதிகளின் பின்னணியில் நின்று அவர்களுக்கு உதவி வருவதாக சவூதி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
அதே சமயம், யெமனின் அன்ஸாருல்லாஹ் காவலர்கள் வெற்றி மீது வெற்றிகளை அடுக்குக்கொண்டு செல்கின்றனர். சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய இரு நாடுகளினதும் எல்லா அத்துமீறல்களையும் அனைத்து முனைகளிலும் பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். சவூதி தலைமையிலான தாக்குதல் நடத்தியவர்களும் அவர்களது கூலிப்படையினரும் யெமனின் தெற்கு முன்னணியில் துவம்சம் செய்யப்படுவது மட்டுமல்லாமல், எஞ்சிய படையினர்  முக்கிய துறைமுக நகரமான ஏடனை நோக்கி விரட்டப்பட்டுள்ளனர்.
வடக்கில், சவுதி எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி, யெமன் ஆயுதப்படைகள் மற்றும் சமூக குழுக்கள் இணைந்து, நஜ்ரான் மற்றும் ஜிஸானின் பெரும் பகுதியை சவுதி கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர். "விடுவித்தல்" என்ற சொல் இங்கே நிச்சயமாக பொருந்தும், ஏனென்றால் மேற்கூறிய இரண்டு மாகாணங்களும் வரைபடத்தில்  சவுதி இராச்சியத்தின் ஒரு பகுதியாக காட்டப்பட்டாலும், அவை, வஹாபி படையினரால் 1934 ஆம் ஆண்டு ஆக்கிரமிக்கப்படும் வரை, யெமனின் முக்கிய பகுதியாகவே இருந்து வந்தன என்பதுவே சரித்திரம்.
ஆரம்பத்தில் சவுதிக்கு உதவிய கட்டார் மற்றும் மொராக்கோ அரேபியாவுடனான உறவுகள் மோசமடைந்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது (இந்த மாதம்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமது படைகளை வாபஸ் வாங்கிக்கொண்டுள்ளது.
சவுதியின் முட்டாள் தனமான செயலினால் நான்கு ஆண்களாக தொடரும் யுத்தத்தினால் பல்லாயிரம் யெமன் உயிர்கள் பலியாயின என்பது மட்டுமல்லாமல் சவூதி அரேபியா, உலக நாடுகள் மத்தியில் அவமானப்பட்டுக் கிடக்கிறது என்பதோடு உலக முஸ்லிம்களின் வெறுப்பையும் சம்பாதித்து உள்ளது.
சவூதி அரேபியா, அரேபிய உலகில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய இராணுவத்தைக் கொண்டிருக்கலாம், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றாலும், அவற்றினால், மத்தியகிழக்கில் மிகவும் வறிய நாடான யெமனை தம் இஷ்டப்படி ஆட்டுவிக்க முடியவில்லை. அரேபிய தீபகற்பத்தின் தெற்கில் ஒரு வியட்நாம் போர் சூழ்நிலை உருவாகிவருவதாகத் தெரிகிறது. இங்கே மன உறுதியுடன் அல்லாஹ்வின் மீதான பூரண நம்பிக்கையும் கொண்ட போராளிகளிடம் படையெடுப்பாளர்களின் உலகாயத பொருள் வளம் தோல்வி கண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக, இறை தூதரினால் ஆசீர்வதிக்கப்பட்ட அரபு பிரதேசம் என்று அழைக்கப்பட்ட நிலத்தின் வீரம் மிக்க  பாதுகாவலர்கள் பாரிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி படையெடுப்பை தொடர்ந்த இனப்படுகொலை ஆதரிப்பவர்களால் கூட சவுதியின் அடாவடித்தனத்தை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை.
ஆசிர் மாகாணத்தில், பனீ சவுத் ஆட்சியின் கீழ் உள்ள உள்ள அபா சர்வதேச விமான நிலையம், யெமனியரின் கோபத்தின் விளைவை எடுத்துக்காட்டும் இடமாக காட்சியளிக்கிறது. சவுதியினால் ஒருபோதும் மறக்க முடியாத பாடத்தை அன்ஸாருல்லாஹ் படையினர் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அதிகாலையில், சவுதி விமானப்படையால் இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த அபா சிவில் விமான நிலையம், யெமன் ஏவுகணைப் படைகளின் துல்லியமான தாக்குதலுக்கு உள்ளானது. யெமன் ஆயுதப் படைகளால் மிகவும் இரகசியமாக உருவாக்கப்பட்ட, முற்றிலும் புதிய மற்றும் அறியப்படாத ஏவுகணை, விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தை வெடித்து சிதறடித்து, விமான நிலையம் செயற்பட முடியாத நிலையை உருவாக்கியது.
தாக்குதலுக்குப் பிறகு, அபாவின் விமான கால அட்டவணைகள் மாற்றப்பட்ட படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன. அபாவை நோக்கி வந்த விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்பட்டன. யெமனில் சவுதி வான்வழித் தாக்குதல்களினால் பல பொதுமக்கள் உயிரிழப்பது வழக்கமாயினும் அன்ஸாருல்லாஹ்க்களின் கோபுரத்தின் மீதான தாக்குதலின் துல்லியம் பூஜ்ஜிய இறப்புக்கு காரணமாக அமைந்தது. தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்குள், சவூதி அரச ஊடகங்கள் கூட பதிலடி தாக்குதல் நடந்ததாகவும் விமான நிலையத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டன.
அன்சாருல்லாவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், முஹம்மது அப்துல் சலாம் இதுபற்றி குறிப்பிடுகையில்,  "சவுதியின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, முற்றுகை, சனா விமான நிலையத்தை மூடல், அரசியல் தீர்வை நிராகரித்தல் மற்றும் அமைதியான தேர்வுககளை உதாசீனம் செய்தல் ஆகியவை எம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகின்றன" என்று ஏவுகணைத் தாக்குதலுக்கு தெளிவான வார்த்தைகளில் பதிலளித்தார்.
அபா விமான நிலையத்தின் மீதான இந்த ஏவுகணை தாக்குதல் சவுதிக்கு பேரதிர்ச்சியைத் தந்தது மட்டுமல்லாமல் அதனை வெட்கித் தலைகுனிய வைத்தது எனலாம். ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு, யெமன் ராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தி, அபா விமான நிலையத்தின் ரேடார் அமைப்பை குறிவைத்து அழித்தது. யெமன் இந்த தாக்குதலுக்கு காசிஃப் -2 கே ரக ட்ரோன்களைப் பயன்படுத்தியது. இந்த ரக ட்ரோன்கள், தம்மைத் தாமே அழித்துக்கொண்டு, எதிரிகளின் இலக்குகள் மீதும் எதிரி படைகள் மீதும் கூராயுதங்களை பொழியும் விதத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். இது ஒப்பீட்டளவில் மலிவான ஆனால் மிகவும் பயனுள்ள கொரில்லா தாக்குதல் தந்திரமாகும், யெமன் இதனை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. அபா சர்வதேச விமான நிலையம், இப்போது அதன் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் ரேடார் அமைப்பு இல்லாமல், முற்றிலும் இயங்க இயலாது ஆக்கப்பட்டுள்ளதானது சவூதி ஆட்சியாளர்களுக்கு பெருத்த அவமானமாகும்.
அடுத்த நாள் (ஜூன் 15 அன்று), காசிஃப் -2 கே ட்ரோன்களின் மற்றொரு அலை ஜிசான் மற்றும் அபா விமான நிலையத்தை மீண்டும் ஒரு முறை தாக்கியது. ஜிசான் விமான நிலையத்தில், சவுதி ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) திட்டத்தின் கட்டுப்பாட்டு அறை அழிக்கப்பட்டது, அதேசமயம் அபாவில் யெமன் ட்ரோன்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தை அழித்தன. இரு விமான நிலையங்களும் தற்காலிகமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான வழிசெலுத்தல் கண்காணிப்பு மையங்களால் பின்னர் உறுதி செய்யப்பட்டது.
சவூதி ஆட்சியாளர்களின் மிருகத்தனத்துக்கு எடுத்துக்காட்டு 
இன்னும் அனைத்து சவுதி போர் இயந்திரத்தில் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை. யெமன் ஆயுதப்படைகள் ஜூன் 17 அன்று மீண்டும் தாக்கின. அவர்கள் ஆளில்லா மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தியது மட்டுமல்லாமல், அதே அபா சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் தாக்குவதிலும் வெற்றி பெற்றனர். ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் இரண்டு முறை முன்பு நடந்ததைப் போலவே, ஆசிர் மாகாண தலைநகருக்குச் செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக, ஆனால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
ஜூன் 19 அன்று, யெமனின் பாதுகாவலர்கள் மற்றொரு  ஏவுகணையை ஏவினர், இந்த முறை ஜிசான் மாகாணத்தின் அல்-ஷாகிக் பகுதியில் ஒரு பெரிய சவுதி மின் நிலையத்தைத் தாக்கியது. ஏவுகணைத் தாக்குதல் மின் நிலையத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, சவுதி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் போர்க்குற்றங்களுக்கு மற்றுமொரு பதிலடியாக இது அமைந்தது.
அதே நாளில், நஜ்ரானில் ஒரு இராணுவக் கூட்டத்தின் நடுவே தாக்கிய பத்ர்-எஃப் ஏவுகணைத் தாக்குதலில் டஜன் கணக்கான சவுதி துருப்புக்களும் வெளிநாட்டு கூலிப்படையினரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 20 அன்று, யேமன் ஆயுதப்படைகளின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ஜிசான் சர்வதேச விமான நிலையம் மீண்டும் யேமன் போர் ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக அறிவித்தார். இந்த முறை ஆளில்லா வான்வழி வாகனங்கள் சவுதியின் ஹங்கர் விரிகுடாவை தாக்கியது. யேமனில் பொதுமக்கள் மற்றும் சிவிலியன்  உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்பட்ட அமெரிக்க-சவுதி போர் இயந்திரத்தின் ஒரு பகுதியான, ஒரு காலத்தில் அஞ்சப்பட்ட, ட்ரோன்கள் இப்போது யெமனின் ஒரு புதிய மற்றும் மிகவும் திறமையான ஆளில்லா விமானத்தால் அழிக்கப்படுகின்றன.
நடைபெற்று வரும் மிகவும் திறமையான மற்றும் துல்லியமான யெமன் வான்வழித் தாக்குதல்கள் மூலம், யெமன் புரட்சியின் தலைவர் சயீத் 'அப்துல்-மாலிக் அல்-ஹூதி ஏப்ரல் மாதத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படையெடுப்பாளர்கள் ஹுதைதா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் சவுதி வசதிகள் தாக்கப்படும் என்று அவர் அப்போது சூளுரைத்திருந்தார். இவ்வளவு குறுகிய காலத்தில் அது நடைபெறும் என்று யாரும் எதிர்பாக்கவில்லை.
ஜூன் 20 அன்று, யஹ்யா சாரி இந்த அச்சுறுத்தலை மீண்டும் தெளிவான வகையில் வெளியிட்டார், யெமனின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சவூதி அரேபியாவில் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் தாக்க முடியும் என்று எச்சரித்திருந்தார். "சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க தயாரிப்புகளாலும் இடைமறிக்கும் உபகரணங்களாலும் சமாளிக்க முடியாத உயர் தொழில்நுட்பங்கள் இப்போது எங்களிடம் உள்ளன; எமது தாக்குதல்கள் வெறும் ஆசிர், நஜ்ரான் அல்லது ஜிசான் ஆகியவற்றுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட மாட்டாது" என்றும் கூறினார்.
எல்லா முரண்பாடுகளையும் மீறி, யெமன் போரில் அன்ஸாருல்லாஹ் படையினர் வென்று வருகின்றனர் என்பது நிச்சயமாக மிகைப்படுத்தல் அல்ல. இது உலகெங்கிலும் உள்ள பல செய்தி பண்டிதர்களுக்கும் தம்மை ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோருக்கும் ஆச்சரியமாக இருக்கக் கூடும், ஆனால் யெமன் நிச்சயமாக வெற்றி பெறும், இன்ஷாஅல்லாஹ்.
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன். (4/45)