Contributors

Thursday, March 7, 2019

இஸ்லாமிய எழுச்சியும் கொராஸானின் கறுப்புக் கொடியும்

The Islamic Resurgence and The Black Banners of Khorasan - Kevin Barrett


சமீபத்தில் நான் பாலஸ்தீனிய இன்திபாதா தொடர்பான ஆறாவது சர்வதேச மாநாட்டில் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐந்து நாட்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகரான தெஹ்ரானில் கழித்தேன். இந்த மாநாட்டில் உலகெங்கிலும் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர உயர் பதவிகள் வகிப்போரும் அடங்குவர்.
பல முன்னணி பாலஸ்தீனிய விடுதலை போராட்டக் குழுக்களின் உயர் மட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இவர்களில் ஹமாஸ், இஸ்லாமிய ஜிகாத், ஃபத்தாஹ், மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் பிரதிநிதிகளாகும். வெவ்வேறு வழிகளில் செயற்படும் விடுதலைத் தாகம் கொண்ட இந்த அனைத்து  பாலஸ்தீனிய சுதந்திர போராளிகளின் பிரதானிகளை  ஒன்றிணைப்பதற்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் அர்ப்பணிப்புடனான முயற்சி பாராட்டத்தக்கது. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தீரத்துடன் எதிர்த்து போராடும் ஹிஸ்புல்லாஹ் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்த ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனே சியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் யூத மேலாதிக்க இனவெறி அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் பற்றி தெளிவு படுத்தினார். ஜியோனிஸவாதிகளை இனப்படுகொலை வெறியர்கள் என்று வர்ணித்த அவர், ஜியோனிஸத்தை புற்றுநோய் கட்டி என்றும் அதனை வெட்டி அகற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். அபகரிக்கப்பட்ட அத்தனை பலஸ்தீன நிலங்களும் வளங்களும் விடுவிக்கப்படும்வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்தார்.
இந்த மாநாடு பாலஸ்தீனத்தை விடுவிக்கும் அனைத்து போராளிகளையும் ஒன்றாக இணைக்கும் நோக்கத்தை கொண்டது - குறிப்பாக முஸ்லிம்களை. ஜியோனிஸ்டுகளின் "நாகரீகங்களின் மோதல்" என்ற சதியினால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிமாக முஸ்லிம்களேயாகும். முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக ஜியோனிஸ்டுகள் 'பிளவுபடுத்தி ஆக்கிரமித்தல்' என்ற  ஒரு மூலோபாயத்தை செயற்படுத்தி வருகின்றனர் என்பதையும் பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை மையமாகக் கொண்ட இஸ்லாமிய ஒற்றுமையே இந்த சதி திட்டத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி என்பதையும் மாநாட்டில் பங்குபற்றிய அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டின்போது முஸ்லிம் உலகின் மிக முக்கியமான சிந்தனையாளர்களை சந்திக்கும்  அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியது. அவர்களில் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞரான ஷேக் இம்ரான் ஹுசைன் மற்றும் ஜியோனிச சதியினை அம்பலப்படுத்தி, 'மெஸியானிக் எஸ்கொட்டாலஜி' என்ற புத்தகத்தை எழுதியுள்ள இளம் சிந்தனையாளர் யூசுஃப் ஹிந்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். இவர்களுடனான எனது உரையாடல் சமீப காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள பிரபல்யம்வாய்ந்த "கோராசானின் கறுப்பு பதாகைகள்" ஹதீஸ் மீது மீண்டும் எனது சிந்தனையைத் திருப்பியது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: "கொராஸானில் இருந்து கறுப்பு கொடிகளை ஏந்தியவண்ணம் (படையணிகள்) வரும்; எந்த சக்தியாலும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது, இறுதியாக அவர்கள் அல்-குத்ஸை (பைத்துல் முகத்தஸை) அடைந்து அங்கு அவர்கள் (வெற்றிக்)கொடிகளை ஏற்றுவார்கள்." (திர்மிதீ)
தாயேஷ் மற்றும் தக்ஃபிரி பயங்கரவாத குழுக்கள் தமது ஆட்சேர்ப்பு கருவியாக இந்த ஹதீஸை பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்ல, கறுப்புக் கொடியை ஏந்திக்கொண்டு அப்பாவிகளை கொலை செய்தும் போதை மயக்கத்தில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டவர்களின் உட்புற உறுப்புக்களை சப்பித் துப்பும் அளவுக்கு கொடியவர்களாக மாறி, இஸ்லாத்தின் எதிரிகளுடன் இணைந்து பலஸ்தீன் விடுதலைப் போராளிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அக்கொடியின் மகத்துவத்தையே இல்லாமலாக்கினர்.
இந்த பயங்கரவாதிகள் ஏந்திவந்த கறுப்பு கொடியானது ஒரு போலியான கொடியாகும். மேலும், முஸ்லிம்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக, 9/11 சம்பவத்தை வடிவமைத்த அதே ஜியோனிச உளவியலாளர்களான போர்க்கால வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட கொடியே இதுவாகும். (ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அந்த கோராஸான் கறுப்புக் கொடிக்கும் இந்தக் கொடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.)
"கொராஸானின் கறுப்பு கொடி" ஹதீஸ் ஜியோனிஸ்டுகளை மனோதத்துவ ரீதியாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக போலியான கொடியினை உருவாக்கி, தமது ஏவலாளிகளான தாயேஷ் மற்றும் தக்பீரி பயங்கரவாத குழுக்களை அதனை ஏந்தச் செய்தது. உண்மையான கொடியின் மகத்துவத்தை கெடுக்க இஸ்லாம் விரோத சியானிஸ சக்திகள் செய்த சாகசமே அதுவாகும். இவர்களது பயங்கரவாதத்தை  வெறுக்கின்ற உலக முஸ்லிம்களில் 95% மானோர் பாலஸ்தீனத்தை விடுவிப்பதற்கான கறுப்பு கொடியை எப்போதோ ஒரு நாள்  வெறுக்கக்கூடும் என்ற எண்ணக்கருவில்  உருவான திட்டம்தான் இதுவாகும். கொராஸானின் கறுப்புக்கொடி பற்றி ரசூலுல்லாஹ்வின் முன்னறிவிப்பின் தாக்கத்தை முஸ்லிம்களிடமிருந்து இல்லாதொழிக்க என்ன அற்புதமாக சிந்தித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.
காயமுற்ற நிலையில், இஸ்ரேலிய மருத்துவ மனைகளில் சிகிச்சைபெற்றுவரும் தாயேஷ் போராளிகளை இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹு சென்று நலன் விசாரிக்கின்றார் என்றால் இவர்கள் பைத்துல் முகத்திஸை விடுவிக்கும் கொராஸான் படையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வருவதற்கு பெரிய சிந்தனை எதுவும் அவசியமில்லை. மேலும், இவர்களில் எவரும் கொராஸானை சேர்ந்தோருமல்ல. இவர்கள் போலி, தான்தோன்றி கலீஃபாவான அபூபக்கர் அல்-பக்தாதியின் தலைமையில் (அமெரிக்க மற்றும் ஜியோனிச நிபுணர்களின்  மேற்பார்வையின் கீழ்)  ஈராக்கில் அமைந்துள்ள புக்கா ராணுவ முகாமில் விசேடமாக தயார் செய்யப்பட்டவர்களாகும்.
இந்த புக்கா முகாம் எங்கோ இருக்கிறது, கொராஸான் எங்கோ இருக்கிறது. மேலும் இந்த தாயேஷ் குழுவினரிடம் இஸ்லாமிய ராணுவம் கொண்டிருக்கவேண்டிய எந்தப் பண்பும் இருக்கவில்லை.
எல்லா அடையாளங்களையும் முன்னறிவிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் இறுதி நாளை (ஆகிர் ஸமான்) நெருங்குவதுபோலவே தெரிகிறது. கொராஸானின் விடுதலை ராணுவம் எந்த நேரத்திலு வரலாம் என்று ஷேய்க் இம்ரான் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்தார். அது எந்த வகையான ராணுவமாக இருக்கப்போகிறது...?
கொராஸான் எங்குள்ளது என்பதை முதலில் பார்ப்போம். கொராஸான் இன்று, ஈரானில் ஒரு முக்கிய மாகாணமாக உள்ளது. அதன் தலைநகரான மஷ்ஹத், நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இமாம் ரீஸா (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் இங்குள்ளதால் மிகவும் பிரசித்தமான இடமாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியை கூட கொராஸான் என்பதை குறிக்கும்.

கொராஸான் என்பதற்கான இவ்விரு அர்த்தங்களும் - ஈரானினதும் ஆப்கனிஸ்தானினதும் குறிப்பிட்ட பகுதியை உள்ளடக்கிய பாரிய நிலப்பரப்பு - "கறுப்பு கொடிகள்" தீர்க்கதரிசனத்தின் (ஹதீஸின்) அர்த்தத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை வழங்குகின்றது. 1979 ஆம் ஆண்டில் தோன்றிய இரண்டு மிக முக்கியமான இஸ்லாமிய விடுதலைப் படைகளை உருவாக்கிய புவியியல் இடத்தின் சரியான மையத்தில் கொராஸான் உள்ளது: ஈரான் இஸ்லாமிய புரட்சியானது ஷாவின் அமெரிக்க கைப்பாவை ஆட்சியை துடைத்தெறிந்து, சர்வதேச ரீதியில் இஸ்லாமிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதேசமயம், ஆப்கானிய விடுதலைப் போராட்ட சக்திகள் அந்த நாட்டிலிருந்து ரஷ்ய கம்யூனிஸ்டுகளை வெளியேற்றி சாதனை புரிந்தன. இவ்விரண்டு நிகழ்வுகளும், உலகில் வல்லாதிக்கம் செலுத்திவந்த இரண்டு சக்திகளினது சித்தாந்தத்தின் இருதயத்தையே குத்திக் கிழித்தன.
கொராஸானின் ஒரு பக்கத்தில், ஈரானிய இஸ்லாமிய புரட்சியாளர்கள் அமெரிக்க (முதலாளித்துவ) பேரரசுக்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். மறுபுறத்தில், ஆப்கானிய இஸ்லாமிய போராளிகள் ரஷ்ய (கம்யூனிச) சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒரு மரண அடியைக் கொடுத்தனர். இந்த நிகழ்வுகள் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் இரண்டு பெரிய மேற்கத்திய ஏகாதிபத்திய சித்தாந்தங்களின் சரிவையும் வீழ்ச்சியையும் அடையாளம் காட்டின. ஆகவே, இந்த ஹதீஸின் எளிய மற்றும் மிக வெளிப்படையான விளக்கம் என்னவெனில், அல் குத்ஸை விடுவிக்கும் "முஸ்லிம் இராணுவம்" என்பது 1979 ல் கொராஸானின் இரு பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் தோன்றிய இஸ்லாமிய விழிப்புணர்வு கொண்ட ஓர்  ஐக்கியப்பட்ட இராணுவமாகும்.
1979 இஸ்லாமியப் புரட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய சில மேற்கத்திய அறிவுஜீவிகளில் ஒருவராக மைக்கேல் ஃப்யூகோல்ட் இருந்தார். இவர் தரம்கெட்ட மேற்கத்திய துறையின் தயாரிப்புக்கு ஒரு முன்மாதிரியாகும். எனவே அதை நன்றாக அவதானித்து, பகுப்பாய்வு செய்யவும் தகுதியும்பெற்றிருந்தார். (அதன் வீழ்ச்சியையம்  முன்னறிவித்தல் செய்தார்). புரட்சிகர இஸ்லாத்தின்  மீள்வருகை உலகை அதிரவைக்கும் ஒரு நிகழ்வாக ஃபூகோல்ட் கண்டார். இவர் முன்னறிவித்ததை சற்று ஆராய்வோமாயின், கொராஸானை சூழவுள்ள பிரதேசங்களில் 1979ம் ஆண்டு எழுந்த இஸ்லாமிய எழுச்சியானது உலகின் இரண்டு மேலாதிக்க சிந்தனைகள் - அடிப்படையில் இரண்டு இறைமறுப்பு சிந்தனைகள் - சாத்தானிய ஃப்ரீமசோனிக்-யூத மெஸியனியவாதத்தின் பொருள்முதல்வாத வெளிப்பாடுகள் சிதைந்து போவதையும் அவற்றுக்கு பதிலாக மார்க்க அடிப்படையிலான ஒரு கலாசாரம் மேலோங்குவதையும் எழுச்சிபெற்ற இஸ்லாம் மையம்கொள்வதையும் அவர் அறிந்திருந்தார் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அவ்வாறாயின் இந்த கொராஸானிய படையினால் அல்-குதஸை விரைவாக மீட்டு, பூலோகத்தில் இஸ்லாத்தை மறுபடியும் ஸ்தாபித்து, முஸ்லிம்களின் கலாச்சாரத்தை காத்து, ஏனைய இறை மார்க்கங்களையும்  பாதுகாக்க முடியாதுள்ளது ஏன்...? என்ற கேள்விக்கு வெளிப்படையான ஒரே பதில்: முஸ்லிம்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையின்மையே.
ஈரானின் இஸ்லாமிய குடியரசை தனிமைப்படுத்தவும், அதனை  அண்டை முஸ்லிம் நாடுகளிடமிருந்து பிரிக்கவும் மேற்குலகம் ஒரு கொடூரமான "கட்டுப்படுத்தும்" மூலோபாயத்தை பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானிலும் இதேபோன்ற பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் மூலோபாயத்தையும் மேற்கொண்டது. இவர்கள் மத்தியில் இஸ்லாமிய ஒற்றுமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சகிப்புத்தன்மையற்ற, ஊழல் மிகுந்த குழுக்களுக்கு நிதியளித்தல் மற்றும் நவீன ஆயுதங்கள் வழங்கல் போன்ற உத்தியைக் கையாண்டு, குழுக்கள் மத்தியில் பகையை வளர்த்து, அவர்களுக்குள்ளேயே சண்டையை மூட்டியது..
இன்று, "மேற்கு கொராஸான் " (ஈரான் இஸ்லாமிய குடியரசு) மற்றும் "கிழக்கு கொராஸான்" (ஆப்கானிய சுதந்திர போராளிகள்) ஒன்றுபடாதவாறு பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையை நான் ஜியோனிச சாம்ராஜ்ஜியத்தின் வெற்றிகரமான வஹாபிஸ பயன்பாடு மற்றும் பிற முரண்பாடான அணுகுமுறைகளால் முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காகவும், ஷியா எதிர்ப்பு மற்றும் ஈரான் எதிர்ப்பு (Shia-Phobia and Irano-Phobia) பரப்பவும் காரணமாக இருந்தது என்று கருதுகிறேன்.
உலக முஸ்லிம்கள் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை உணர்ந்து, இறை நம்பிக்கைக் கொண்ட அனைவரும், தஜ்ஜாலையும் உலகின் சர்வாதிகாரத்தை ஜெருசலத்தில் ஸ்தாபிக்கும் தஜ்ஜாலின் திட்டத்தையும் உணர்ந்து எழுச்சிபெறும்போது, கிழக்கு மற்றும் மேற்கு கொராஸான் ஐக்கியப்படும்; சத்திய இஸ்லாத்தின் போராளிகளால் தூய இஸ்லாத்தின் வெற்றிக்கொடி, பைத்துல் முகத்தஸில் ஏற்றப்படும்,   இன் ஷா அல்லாஹ்.
பிரகடனம் செய்வீராக: சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. திண்ணமாக அசத்தியம் அழியக் கூடியதே!” (17/81)
(இந்தக்கட்டுரை கிரஸண்ட் இன்டர்நஷனல், ஜமாத்துல் ஆகிர் 021438 சஞ்சிகையில் வெளியான கெவின் பறே என்பவரின் கட்டுரையைத் தழுவிய தமிழாக்கமாகும்.)
தமிழில் : தாஹா முஸம்மில்    

Wednesday, February 27, 2019

குர்'ஆன் வழங்கும் மனித உரிமைகள்

Holy Qur'an and Human Rights




உலகம் முழுவதும் வாழும் சுமார் இரண்டு பில்லியன் அளவிலான  முஸ்லிம்களின் வாழ்வில் புனித குர்ஆன் மையஸ்தானத்தில் இருக்கின்றது.

அதே நேரம் முஸ்லிம்கள் தம் வாழ்வின் ஆதாரமாகக் கருதும் இந்தக் குர்ஆனை, உலகில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கும் ஒரு நூலாக காட்டுவதற்கு நூற்றாண்டு காலமாக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதை நாம் அறிவோம். கடந்த நூற்றாண்டில் இந்தப்பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

மனித உரிமை மீறலில் மிக மோசமான மீறல் என்னவென்றால் மக்களை அடிமைப்படுத்துவதாகும். இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஈரானிய மக்களை கொடுங்கோலன் ஷாவிடம் இருந்து விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரம் என்னவென்று உணரச்செய்தார் மர்ஹூம் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள். இறைவன் அருளால் ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக, இஸ்லாமிய மனங்கமழும் உன்னத காற்றை சுவாசிக்கின்றனர்.

'இஸ்லாத்தை இனி ஒருபோதும் ஓர் அரசியல் சக்தியாக எழுவதற்கு  முடியாதவாறு முதுகெலும்பை முறித்துவிட்டோம்' என்று எண்ணியிருந்த காலனித்துவ சக்திகள் ஈரானில் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் தலைமையில் வெற்றிபெற்ற இஸ்லாமிய புரட்சியின் விளைவாக உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு கண்டு அச்சம் கொள்ளத் தொடங்கின.

இஸ்லாமிய நாடுகளில் தங்களது முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மன்னர்களும் அமீர்களும் ஷேக்குகளும் சுல்தான்களும் வீழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை சிந்திக்கும் இந்த சக்திகள் கதிகலங்கி போயுள்ளன.

உலகின் வளங்கள் அனைத்தும் வெள்ளை இனத்தவர்களுக்கே சொந்தம் என்ற வெளிப்படையான ரகசிய திட்டத்தின் அடிப்படையில் செயலாற்றி வரும் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவினாலும், உலகின் சக்தி வளங்களை பாரிய அளவில் கொண்டுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆட்சி அதிகாரம் தம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஈரானில் ஏற்பட்டதுபோன்ற ஓர் இஸ்லாமிய புரட்சி சவுதியிலும் ஏற்படுமாயின், அவ்விரு நாடுகளும் கொள்கையளவில் ஒன்றுபடுமாயின், அதன் விளைவு என்னவாய் இருக்கும் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கவும் முடியாது. இதன் காரணமாகவே இவ்விரு இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றையொன்று பகைக்கும் நாடுகளாக எப்போதும் வைத்திருக்கும் முயற்சியில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் தீவிரமாக இறங்கியுள்ளன.


"ஷீஆக்களை எதிர்ப்பதற்கு தீவிரவாத சுன்னிகளுக்கு அமேரிக்காவும் சுன்னிகளை எதிர்ப்பதற்கு தீவிரவாத ஷீஆக்களுக்கு பிரிட்டனும் உதவி வருகின்றன" என்று இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் பலமுறை கூறியுள்ளார். 

இவர்களது இந்த பிரித்தாளும் கொள்கையினை வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் உணரத்தலைப்பட்டுள்ளது. இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய உயிரோட்டமுள்ள மார்க்கம் என்பதை இஸ்லாத்தின் எதிரிகளும் அறிவர். இவர்களது துர்பிரச்சாரங்களையும் மீறி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியுள்ளதானது இவர்களை இன்னும் கிலிகொள்ளச் செய்துள்ளது.

இஸ்லாம் மூர்க்கத்தனமானது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது; அது மனித உரிமையினை மதிக்காத மதம் என்றெல்லாம் தொடர்ச்ச்சியாக இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை ஆராய்ந்து, அதன் பொய்த்தன்மையை உணர்ந்த மக்களே இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களாகும்.
இஸ்லாம் மூர்க்கத்தனமானதா? பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதா? அது மனித உரிமையினை மதிக்காத மதமா? என்பதை குர்ஆன் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

புனித குர் ஆனை ஆராய்பவர்கள் அது உலக மக்களை இயற்கை நியதிக்கு முரணான பாரம்பரியம், சர்வாதிகாரம், பழங்குடிவாதம், இனவெறி, பாலியல் அடிமைத்தனம் போன்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, மனிதனை உண்மையான சுதந்திரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதை அறிந்துகொள்வர்.

புனித குர் ஆன் அனைத்து மனிதர்கர்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. இந்த உரிமைகள் அனைத்தும் மனிதம் என்பதில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இவற்றை மறுப்பதென்பது அல்லது அவற்றை மீறுவதென்பது மனிதத்தை மதியாதிருப்பதற்கு ஒப்பாகும்.

இஸ்லாம் என்பது தூய்மையான, மிகப் பரந்த, இயற்கையுடன் இணைந்து செல்லக்கூடிய உன்னத மார்க்கம். ஆதி மனிதர் ஹஸரத் ஆதம் (அலை) தொடக்கம் இறுதி நாள் வரை அதுவே இயற்கை மார்க்கம். காலத்துக்குக் காலம் சட்டங்கள் மாறலாம் ஆனால் மார்க்கத்தின் இலக்கு மாறுவதில்லை.

இறைவன் மனிதர்களுக்கு சிந்திக்கும் திறனையும் பகுத்தறிவையும் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தையும் வழங்கியுள்ளான். ஆனால், தமது கருத்து மட்டுமே சரியானது, அதையே சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவோ அல்லது அக்கருத்தை மற்றவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கவோ எவருக்கும் உரிமைக் கிடையாது.

"நீங்கள் சிந்திக்க வேண்டாமா..?," "ஆராய வேண்டாமா...?" என்று அல்லாஹ் மனிதர்களைப் பார்த்து புனித குர்'ஆன் மூலம் சிந்தனையைத் தூண்டி விடுகின்றான்.

ஆக, ஒருவரின் கருத்துச் சொல்லும் உரிமையை மதிக்க வேண்டும். அக்கருத்தை சிலர் ஏற்றுக் கொள்ளலாம், சிலர் நிராகரிக்கலாம்; இது அவரவர் சுதந்திரம்.

குர் ஆன் வழங்கும் இந்த உரிமைகள் அனைத்துமே மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது. (53/42) என்ற குறிப்பிட்ட ஓரிலக்கை நோக்கியே மனிதனை நகர்த்துகின்றன. 

"குர்ஆனின் நோக்கில், இறைவன் மனிதனை படைக்கையிலேயே இந்த உரிமைகளை வழங்கிவிட்டான். ஆக அந்த உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்டவையாகும். இந்த உரிமைகள் மனிதர்களிடம் உள்ள உள்ளார்ந்த திறமைகளை பயன்படுத்தி, வளங்களை வளர்ப்பதற்கான வாய்ப்பை மட்டுமல்லாமல், இறைவனின் விருப்பத்துக்கமைய மனிதன் வாழ்வது எவ்வாறு என்றும் மரணிப்பது எவ்வாறு என்றும் கற்றுத்தருகிறான்", என்று லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் றிபாத் ஹசன் குறிப்பிடுகின்றார்.

"மேலும், அல்லாஹ்வால் வழங்கப்பட்ட உரிமைகளை ஆட்சியாளரோ அல்லது மனிதனால் அமைக்கப்பட்ட அமைப்போ அகற்ற முடியாது. மற்றும் இந்த மாறுபடாத நித்திய உரிமைகள் மனிதனால் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இறைவன் எதனையும் தக்க காரணம் இன்றி படைக்கவில்லை. இறைவனின் செயல்கள் அனைத்துக்கும் நியாமான நோக்கம் இருக்கின்றது" என்று பேராசிரியர் றிபாத் ஹசன் மேலும் தெரிவிக்கின்றார்.

பின்வரும் புனித குர்ஆன் வசனங்கள் அடிப்படை மனித உரிமையினை இஸ்லாம் எந்தளவு உயர்வாகக் கருதுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

உயிர்வாழும் உரிமை

மனித உயிரின் புனிதமும் அதனது முழுமையான மதிப்பும்  குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்…..” (5/32)
 “….. அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான். (6/151)

சுயமரியாதைக்கான உரிமை

மனிதர்கள் கண்ணியத்துக்குரியவர்கள், ஏனென்றால் எல்லா படைப்புகளிலும், அவர்கள் மட்டுமே இறைவன் வழங்கிய பொறுப்பை சுமக்க முன்வந்தார்கள்.

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன; அதைப் பற்றி அவை அஞ்சின; ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்..." (33/72)
“(நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.) (அல்-குர்ஆன் 17:70).

மனிதன், எல்லாவற்றுக்கும் மேலாக, ஏனைய படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபடுகின்ற பகுத்தறிவைக் கொண்டிருப்பதால், அவன் சுதந்திரமாக சிந்திக்கக்கூடியவனாக இருக்கின்றான். சர்வ வல்லமையுள்ள இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:

இறைவன் வானவர்களை நோக்கி “…. நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்என்று கூறினான்…..” (2/30)
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். பின்னர் (அவனின் தீய செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு. (95/4-6)

மனிதர்களால் சிந்திக்க முடியும்; சரி எது, பிழை எது என்று அவர்களால் பகுத்தறிய முடியும்; நல்லதை தெரிந்து தீயதை தவிர்க்க முடியும். தவறு செய்பவனாயினும் ஒருநாள் தம் தவறை உணர்ந்து திருந்தக்கூடிய வாய்ப்பு அவனுக்குண்டு. ஒரு கைதியாயினும் அவனை மிருகத்தனமாக நடத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. எனவே, மனிதன் (பூமியில் இறைவனின் பிரதிநிதியாக இருக்கக்கூடியவன் என்பதன் காரணமாக) எல்லா சந்தர்ப்பங்களிலும் மனித கண்ணியத்துக்கு உரியவனாவான்.

நீதிக்கான உரிமை.

எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. நீதி கோரும் உரிமையினை எவராலும் மறுக்க முடியாது. பாரபட்சமின்றி, நீதியாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளுங்கள் என்று என்று குர்ஆன் அழுத்தமாக வலியுறுத்துகிறது:

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” (5/8)
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (4/135)
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16/90)

நீதி விசாரணையின்போது, இரண்டு தரப்பினரின் கூற்றுகளும், எந்த பாரபட்சமும் இன்றி, சமமாக கருதப்பட வேண்டும்.

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும் மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர்! இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள்.” (2/177)

- தாஹா முஸம்மில்

Monday, February 25, 2019

யெமன் மீதான யுத்தத்தில் நாம் சவுதிக்கு உதவமாட்டோம் - மகாதீர் முஹம்மத்


Prime Minister of Malaysia: “We will not support Saudi war on Yemen”



"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" - மகாதீர் முஹம்மத்

யெமனுக்கு  ஆதரவு தெரிவிப்பதற்காகவும் யெமன் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரியும் கடந்த சனிக்கிழமையன்று மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் மலேசிய மனித உரிமை கமிஷனினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துகொண்டு உரையாற்றும்போதே மலேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
"யெமனில் ஒரு மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள சவுதி தலைமையிலான இராணுவப் பிரச்சாரத்திற்கான முந்தைய அரசாங்கத்தின் ஆதரவிலிருந்து நாம் எம்மை தூரப்படுத்திக்கொள்கிறோம்; நாம் எந்த ஒரு நாட்டினது உள்விவகாரங்களிலும் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாய் இருக்கின்றோம்" என்று மகாதீர் உறுதிப்படுத்தினார்.
"உங்களுடைய எதிரிகளுக்கு எதிராக உங்களுடன் இணைவோம் என்று எதிர்பார்க்காதீர்கள், உங்களது யுத்தத்தை நாம் செய்வோம் என்றும் எதிர்பார்க்காதீர்கள்" என்ற உறுதிப்பாட்டையும் பிரதமர் மகாதீர் எடுத்துரைத்தார்.
பல ஆண்டுகள் நீடித்த யெமன் உள்நாட்டுப் போருக்கு உடந்தையாக இருந்து வரும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை "மரணத்தின் வியாபாரிகள்" என்றும் பிரதம மந்திரி குற்றம் சாட்டினார்.
மனித உரிமைகள் பற்றிய அவர்களின் பேச்சின் நயவஞ்சகத்தனத்தை குற்றம்சாட்டிய மகாதிர், ஒரு மோதலுக்குள் சிக்கியுள்ள பிராந்தியத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் லாபம் ஈட்டும் நாடுகள், மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவை என்று குறிப்பிட்டார்.
"மத்தியகிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளவை பினாமி யுத்தங்களாகவும் தலையீடுகளாகவும் நான் நோக்குகின்றேன். மலேசியா மற்றும் ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) ஏகாதிபத்திய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற முயற்சிகளிலிருந்தும் அவர்களது தீர்மானங்கள் மற்றும் கொள்கை திணிப்பு போன்றவற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.
ஆசியான் உறுப்பு நாட்டுகள் தமக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நடுநிலைக் கொள்கையில் உறுதியாய் இருக்கும் என்பதை, தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு செலுத்தலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு  தெளிவுபடுத்தும்படி அவர் வலியுறுத்தினார்.


Monday, February 18, 2019

சீன பெருஞ்சுவரை விட 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோர்கான் (பாரசீக) பெருஞ்சுவர்.


The Great Wall of Gorgan

உலகில் கட்டப்பட்ட மிகச் சிக்கலான எல்லை பாதுகாப்பு சுவர்களில் ஒன்று என்று இது கருதப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பினது மரபுரிமைப் பட்டியலில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

காஸ்பியன் கடலின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து அல்போர்ஸ் மலைத்தொடரின் அருகில், உலகின் மிகப் பெரிய அரணாக இருந்த, 195 கிலோமீட்டர் நீளமான கோர்கான் பெருஞ்சுவர் கைவிடப்பட்டு, புதைந்துபோன மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை.
இந்தச் சுவர் பற்றி எந்த பண்டைய சரித்திர நூலும் குறிப்பிட்டிருக்கவில்லை; இது தொடர்பான எந்த கல்வெட்டும் இன்னும்  கண்டுபிடிக்கப்படவில்லை; இது பொறிக்கப்பட்ட எந்த நாணயமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த வரலாற்றுப் பதிவுகளும்  இந்த அற்புதமான கட்டுமானம் பற்றி எதையுமே அறிவித்திருக்கவில்லை என்பது ஆச்சரியமான விடயமே. அனேகமாக நம்மில் அநேகர் இதுவரை இச்சுவர் பற்றி கேள்விப்பட்டே இருக்கமாட்டார்கள்.

வட ஈரானில் அமைந்துள்ள இந்த பெருஞ்சுவரானது (The Great Wall of Gorgan) கி.பி. 4ம் மற்றும் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்  கட்டப்பட்டுள்ளது என்று இதன் ஒருபகுதியை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதோடு புதிய ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
ஈரானின் வடகிழக்காக, காஸ்பியன் கடலின் தென்கிழக்கு பகுதியில், கோர்கான் மாகாணத்தில் இந்த எல்லை பாதுகாப்பு சுவர் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது.
இந்தச் சுவர் சசானிய பேரரசினால் பகைவர்களிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பதற்காகவும் அந்நிய இராணுவ படையெடுப்பு அச்சுறுத்தகளில் இருந்து சாம்ராஜ்யத்தை பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளது என்றும்  நம்பப்படுகிறது.
உலகில் கட்டப்பட்ட மிகவும் சிக்கலான எல்லைப்புற பாதுகாப்பு சுவர்களில் ஒன்றாகவும் இது விவரிக்கப்படுகிறது. சசானிய பேரரசு யுகம் நாகரீகத்தின் உச்சநிலையில் இருந்துள்ளதை இந்த சுவர் எடுத்துக்காட்டுவதாக ஈரானிய மக்கள் நம்புகின்றனர்.
195 கிமீ நீளமான இந்த சுவர் 6-10 மீ (20-33 அடி) அகலமும் கொண்டது, மேலும் 38 கோட்டை அரண்களைக் கொண்டுள்ளது.

செந்நிற கற்களினால் எழுப்பட்டுள்ளதன் காரணமாக இச்சுவர் "சிகப்பு நாகம்" என்று ஆய்வாளர்களினால் வர்ணிக்கப்படுகிறது. சசானிய பேரரசின் பொறியியல் திறன் மற்றும் இராணுவ அமைப்பிற்கு கோர்கான் பெருஞ்சுவர் ஒரு தனிப்பட்ட சாட்சியமாகும்.
இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகளில், செங்கல் உற்பத்திக்கான நீரை பெறுவதற்காக, கால்வாய்கள் அமைக்க வேண்டியிருந்தது. கோர்கான் ஆற்று நீரை, நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் ஊடாக பெற்றுக்கொண்டனர். பாரசீகத்துக்கே பிரத்தியேகமான வியத்தகு "கனாத்" (Qanat) நிலத்தடி சுரங்க வாய்க்கால்கள் மூலம் பெறப்படும் நீரே இச்சுவருக்காகவும் குடிநீராகவும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்கான் எனும் இப்பிரதேசம் சரித்திராசிரியர்களுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தங்கச் சுரங்கம் போன்றதொன்றாகும். இந்தச் சுவர் அவர்களது ஆவலை மென்மேலும்  தூண்டும் ஒன்றாகவும் உள்ளது.

இந்தச் சுவரினது அற்புதமான மற்றும் சிக்கலான வடிவமைப்பு, சீன பெருஞ்சுவரின் நீளத்துடன் ஒப்பிடுகையில், அதற்கு அடுத்தபடியானது என்று கூறலாம். சீன பெருஞ்சுவரின் ஆரம்ப வடிவங்களைவிட, கோர்கான் பெருஞ்சுவர் இன்னும் திடமானதாகவும் உறுதியானதாகவும் கட்டப்பட்டுள்ளது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லா சிறப்புகளுக்கும் மேற்குலக பெருமைப் பாடும் இவ்வுலகில், ரோமானியர்களுடன் சமமாக அல்லது அவர்களை விடவும்  இராணுவ வலிமை, நிறுவன திறன்கள், பொறியியல் மற்றும் நீர் மேலாண்மை திறன் கொண்டவர்களாக பாரசீகர்கள் இருந்துள்ளனர் என்பதை தயக்கத்துடனாவது ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

- தாஹா முஸம்மில்   

தகவல்களும் படங்களும்: