Lady Fatima al-Zahra: Islam’s most revered woman
இஸ்லாத்தின்
இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் மகள் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி),
அவரது தனித்துவமான இறையச்சம், அன்பு, பரிவு மற்றும் அசைக்க முடியாத வலிமைக்காக நினைவுகூரப்படுகிறார்,
அப் பண்புகள் அவரை தார்மீக ஒருமைப்பாடு மற்றும் ஆன்மீக தியாகத்தின் அடையாளமாக மாற்றியுள்ளது.
நேற்றைய
தினம் (24 நவம்பர்) உலக பெண்களின் நாயகி, இறை தூதரின் அன்பு மகள், விசுவாசிகளின் தளபதி
அலி (அலை) அவர்களின் மனைவி மற்றும் பரிசுத்தவான்களான இமாம்கள் ஹஸரத் ஹஸன் (அலை), ஹஸரத்
ஹுஸைன் (அலை) அவர்களின் தாயார் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்களின் தியாகத்தைக்
குறிக்கிறது.
அன்னை
பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி), இஸ்லாமிய பாரம்பரியத்தில் "சுவர்கத்து பெண்களின் தலைவி"
என்று அழைக்கப்படுகிறார், இமாம் அலி (அலை) அவர்களின் அர்ப்பணிப்புள்ள மனைவி மற்றும்
பரிசுத்தவான்களான இமாம்களின் தாயார் ஆவார். ஹிஜ்ராவுக்கு முந்தைய 18 ஆம் ஆண்டில் ஜமாதுல்
ஆகிர் 20 ஆம் திகதி மக்காவில் பிறந்தார். அவரது பெற்றோர், உன்னதமான அன்னை கதீஜா (ரழி)
மற்றும் அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல்) ஆகியோர் அவர்களுக்கு பாசத்தையும்
அக்கறையையும் பொழிந்தனர், மேலும் அவர் இருவருடனும் ஆழமான பற்று கொண்டிருந்தார்.
தனது
தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் அவரது தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட பாத்திமா
(ரழி), நபித்துவ குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதிலிருந்தே, அவர் நபிகள் நாயகம்
அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களை நேரில் கண்டவர், மேலும் நபிகளாரின் ஒவ்வொரு கஷ்டத்திலும்
ஆதரவை வழங்கி அவருடன் உறுதுணையாக இருந்தார்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்களின் வளர்ப்பில் சிறப்பு
கவனம் செலுத்தினார், இஸ்லாத்தில் பெண்மையின் சிறந்த முன்மாதிரியாக அவரது குணாதிசயத்தை
வடிவமைத்தார். நபி (ஸல்) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து ஆண்களுக்கும் முன்மாதிரியாக
இருந்தார் என்றால், பாத்திமா அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்கள் அனைத்து பெண்களுக்கும் சரியான,
மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். பாத்திமா (ரழி) அவர்கள் ஏக இறைவன் அல்லாஹ்வின்
மீதான ஆன்மீகத்தின் வெளிப்பாடாகவும், ஆன்மீக தூய்மை மற்றும் புனிதத்தின் பிரதிபலிப்பாகவும்
இருந்தார், அவர் நடத்தையில் மட்டுமல்ல, தார்மீக குணத்தன்மையிலும் தனது தந்தையை ஒத்திருந்தார்.
பாத்திமா
(ரழி) அவர்கள் ‘அஸ்-ஸஹ்ரா’ "பிரகாசமான மற்றும் ஒளிரும்" என்ற
பொருள் கொண்ட பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார், மேலும் அன்னை கதீஜா (ரழி) அவர்களின் மறைவுக்குப்
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதான அவரது ஆழ்ந்த அக்கறையை பிரதிபலிக்கும் ஹஸரத்
பாத்திமா (ரழி) அவர்கள், உம்மு அபிஹா- "அவரது தந்தையின் தாய்"- என்றும் அழைக்கப்பட்டார்.
ஹஸரத்
பாத்திமா (ரழி) அவர்களின் பண்புகள்
அன்னை
பாத்திமா (ரழி) அவர்கள் "உலகின் அனைத்து பெண்களின் தலைவி" என்று மதிக்கப்படுகிறார்,
ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் பரம்பரை மற்றும் மரபு அவர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
பெண்களைப் பற்றி வெளிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கும், அதன் போதனைகளின்
மிக உயர்ந்த உருவகமாக அவர் திகழ்கிறார். அவரது வாழ்நாளில், அவர் அர்ப்பணிப்புள்ள மகள்,
விசுவாசமான மனைவி மற்றும் அரவணைக்கும் தாய் போன்ற பாத்திரங்களை முழுமையாக நிறைவேற்றினார்.
அவருடைய
தாராள மனப்பான்மை ஒப்பிட முடியாதது; அவருடைய வீட்டு வாசலுக்கு வந்த யாரும் வெறுங்கையுடன்
வெளியேறவில்லை. அவர் தனது வாழ்நாள் முழுவதும், இமாம் அலி (அலை) அவர்களிடம் எதையும்
கோரவில்லை. செல்வாக்கு மிக்க, அழிக்க முடியாத வழிகளில் வரலாற்றை தொடர்ந்து வடிவமைக்கும்
சிறப்பம்சம் கொண்ட,
விதிவிலக்கான குழந்தைகளை ஒரு தாயாக அவர் கண்ணியத்துடன் வளர்த்தார். அன்னை பாத்திமா
(ரழி) அவர்கள் பொறுமைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார், பொறுமையின் முக்கியத்துவத்தையும்
எடுத்துக்காட்டினார். தன் தந்தையையும், தன் கணவரையும், தன்னையும் குறிவைத்து நடத்திய
தாக்குதல்கள் மற்றும் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட போதிலும், அல்லாஹ் மீது நம்பிக்கை
வைப்பதில் அவர் அசைக்க முடியாதவராகவும், தன் நியமங்களில் உறுதியாகவும் இருந்தார்.
அவரது
அறிவுசார் மற்றும் ஆன்மீக அந்தஸ்து அவர் நிகழ்த்திய இரண்டு புகழ்பெற்ற பிரசங்கங்களில்
ஒன்றான ஃபடக் பிரசங்கத்தில் தெளிவாகத் வெளிப்படுகிறது, அங்கு அவர் ஓரிறை கொள்கை (தொளஹீத்)
பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை திறம்பட வெளிப்படுத்தினார், நபியின் பணியைப் பற்றிய தனது
புரிதலை மக்களுக்கு உணர்த்தினார், மேலும் இமாமத்தின் கருத்தைப் பற்றிய சுருக்கமான மற்றும்
சக்திவாய்ந்த விளக்கத்தை வழங்கினார்.
ஹஸரத் பாத்திமா
(ரழி) அவர்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தைகள்
நபி
(ஸல்) அவர்களின் குழந்தைகள் அனைவரிலும், பாத்திமா (ரழி) அவர்கள் இளையவர், அவர்
அவரை தன்னிலிருந்து பிரிக்க முடியாத, மனித வடிவத்தில் ஒரு தேவதையாக கருதினார். அவரைப்
பார்க்கும்போதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. எந்தவொரு பயணத்திற்கு
முன்பும், அவர் பார்த்த கடைசி வீடு பாத்திமா (ரழி) அவர்களுடையது, திரும்பி வந்ததும்,
அவர் நுழையும் முதல் வீடும் அதுதான்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பாத்திமாவுக்கு (உடல் ரீதியாகவோ உள ரீதியாகவோ)
காயப்படுத்துகிறாரோ அவர் எனக்குத் தீங்கு விளைவிக்கிறார். எவரேனும் எனக்குத் தீங்கு
செய்தால், அவர் அல்லாஹ்வுக்கு தீங்கு செய்கிறார்; எவரேனும் அல்லாஹ்வுக்கு தீங்கு செய்தால்,
அவர் அல்லாஹ்வை நிராகரிப்பு செய்கிறார். ஓ, பாத்திமா! உங்களுக்கு கோபம் ஏற்பட்டால்,
அது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகும்; நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அது அல்லாஹ்வையும்
மகிழ்விக்கிறது" என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாத்திமா என் இதயத்தின் அமைதி.
ஒவ்வொரு
நாள் காலையிலும் பள்ளிவாசலுக்கு செல்லும் வழியில் அவர் பாத்திமாவின் வீட்டைக் கடந்து
செல்லும்போது, "நபித்துவத்தின் குடும்பத்தினரும், தூதரின் மூலாதாரமுமான, உங்கள்
மீது சாந்தி உண்டாவதாக" என்று கூறுவார்.
இமாம்
அலி (அலை) மற்றும் ஹஸரத் பாத்திமா (ரழி) ஆகியோரின் திருமணம்
இமாம்
அலி (அலை) மற்றும் ஹஸரத் பாத்திமா (ரழி) ஆகியோருக்கு இடையிலான திருமணம் சிறந்த இஸ்லாமிய
ஒன்றியமாக நினைவுகூரப்படுகிறது. அவர்களின் வீடு ஆன்மிகம், பணிவு, இறையச்சம் ஆகியவற்றால்
வடிவமைக்கப்பட்டது. இமாம் அலி (அலை) அவர்களின் ஆழ்ந்த அறிவு மற்றும் ஆன்மீக வலிமைக்காக
கௌரவிக்கப்படும் அதே வேளை, பாத்திமா மீது அவர் வெளிப்படுத்திய ஆழ்ந்த பாசமும் மென்மையான
மரியாதையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம்
அலி (அலை) அவர்கள் ஒருமுறை கூறினார், "நான் அவளைப் பார்க்கும்போது, என் துயரங்களும்
கவலைகளும் மறைந்துவிடுகின்றன." இமாம் அலி (அலை) அவர்கள் காலத்தில் பல திருமணங்கள்
வழக்கமாக இருந்தபோதிலும், இமாம் அலி (அலை) பாத்திமாவின் வாழ்நாளில் மற்றொரு பெண்ணை
திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தார், அவரது உணர்வுகளையும் கண்ணியத்தையும்
மதித்தார், இது பாத்திமா (ரழி) அவர்கள் மீது இமாம் அலி (அலை) அவர்கள் கொண்ட ஆழமான அன்பை
விவரிக்கிறது.
ஹஸரத்
பாத்திமா (ரழி) அவர்களின் உயிர்த்தியாகம்
அவரது
வீட்டின் மீதான தாக்குதல், அவரது வயிற்றில் உள்ள குழந்தையின் கருச்சிதைவு மற்றும் உடல்
ரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான சோகமான நிகழ்வுகளைத் தொடர்ந்து பாத்திமா
அஸ்-ஸஹ்ரா (ரழி) அவர்கள் தனது 18 வயதில் காலமானார்.
அவர்
உயிர்த்தியாகம் செய்த திகதி குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. சுன்னிகளிடையே நிலவும்
மிகவும் பொதுவான கருத்துப்படி, அவர் நபிகள் நாயகம் இறந்து 75 நாட்களுக்குப் பிறகு,
ஜமாதுல் அவ்வல் 13 ஆம் திகதி காலமானார் என்றும், ஷியா பாரம்பரியத்தில் மிகவும் பரவலாக
அங்கீகரிக்கப்பட்ட கருத்துப்படி, அவர் நபிகள் நாயகம் காலமான 95 நாட்களுக்குப் பிறகு,
ஜமாதுல் ஆகிர் 3 ஆம் தேதி, ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில் ஷஹீதானார் என்றும் கூறப்படுகிறது.
அன்னை பாத்திமா
ஸஹ்ரா (ரழி) அவர்களால் இமாம் அலி (அலை) அவர்களுக்கு சொல்லப்பட்ட உயில்
ஹஸரத்
ஸஹ்ரா (அலை) அவர்கள் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, இமாம் அலி (அலை) அவர்களை
தனது 3 உயில்களை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். அவர் இமாம் அலி (அலை) அவர்களிடம்
கூறினார்,
1. ஓ அலி, நீர் தனிப்பட்ட முறையில் என் இறுதிச் சடங்குகளை செய்வீராக.
2. என்னை அதிருப்திப்படுத்தியவர்கள் எனது இறுதிச்
சடங்கில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பீராக.
3. என் உடலை இரவு வேளையிலேயே கப்ருக்கு எடுத்துச்
சென்று அடக்கம் செய்வீராக.
இவ்வாறாக,
இமாம் அலி (அலை) அவர்கள் ஸஹ்ரா (அலை) அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, அனைத்து இறுதிச்
சடங்குகளையும் செய்து, அவரது உறவினர்கள் மற்றும் மகன்களுடன் பிரத்தியேகமாக இரவில் ஜன்னதுல்-பாகி
இற்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார் மற்றும் அவரது விருப்பங்கள்
நிறைவேற்றப்பட்டன.
பாத்திமா
(ஸல்) அவர்களின் இறுதிச்சடங்கில் முஃமின்களின் தளபதி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் கல்லறையில்
உரையாற்றும் போது, அல்லாஹ்வின் தூதரே! தயவுசெய்து என் கௌரவத்தையும் உங்களை மிக விரைவில்
சந்திக்கப் போகும்,
உங்களுக்கு அருகில் புதைக்கப்பட்ட உங்கள் மகளின் கௌரவத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மகளின் மரணம் என்னை ஆறுதலும் பொறுமையும் இழந்தவராக விட்டுவிட்டது.
நான் என் சுய கட்டுப்பாட்டையும் சகிப்புத்தன்மையையும் இழந்துவிட்டேன்.