Contributors

Friday, August 23, 2024

ஈரான் மேற்காசிய பிராந்தியத்தில் அசைக்க முடியாத வல்லரசு

The Retribution: When Iran punished 'Israel' in Operation True Promise

  • By Al Mayadeen English

அல் மயாதீன் தொலைக்காட்சி "தி ரிட்ரிபியூஷன்" ஆவணப்படத்தை தயாரித்துள்ளது, இது இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் தொடர்பான விரிவான நுண்ணறிவுகள், தகவல்கள் மற்றும் முக்கிய நேர்காணல்களை வழங்குகிறது.


ஈரான் இஸ்லாமிய புரட்சியின் போது இளைஞர்களின் அபிலாஷைகளில் ஒன்று தங்கள் நாட்டை மேற்கு ஆசியாவின் முன்னணி ஏவுகணை சக்தியாக மாற்றுவதாகும். புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து நான்கு தசாப்த கால இடைவிடாத முயற்சிக்குப் பின்னர், இப்போது ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர்களாக இருக்கும் இந்த இளைஞர்கள், இப்போது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியங்களுக்குள் ஆழமாக ஊடுருவி "இஸ்ரேலை" தண்டிக்கக்கூடிய அளவுக்கு இலக்கை அடைந்துள்ளனர்.

இந்த முயற்சிகள் குறுகிய தூர ஏவுகணைகளின் உற்பத்தியில் தொடங்கி ஃபத்தாஹ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உற்பத்தியில் உச்சக்கட்டத்தை அடைந்தன. இந்த முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புத் தொழில்களின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள நோக்கம் ஈரானின் தடுப்பு முறையை வலுப்படுத்துவதும் அதன் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதும் ஆகும்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பரந்த அளவிலான ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும், ஒரு சில நாடுகள் மட்டுமே அவற்றை உண்மையில் பயன்படுத்துவதற்கான உறுதியையும் வலுவான விருப்பத்தையும் கொண்டுள்ளன, ஈரான் இந்த சிலவற்றில் ஒன்றாகும். அடிப்படையில் வேறுபட்ட ஒரு புறநிலையுடன், இஸ்லாமிய குடியரசு அதன் ஆயுதக் களஞ்சியத்தை தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை தெஹ்ரானின் எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டும்.

உண்மையில், ஈரான் கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக அதன் மீது திணிக்கப்பட்ட போர் முடிவடைந்த பின்னர், இந்த உறுதியின் சாத்தியத்தை நிரூபித்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய இராணுவ பயிற்சிகளில் ஒன்றைத் தொடங்கி, ஈராக்கில் உள்ள பயங்கரவாத முஜாஹிதீன்-இ-கல்க் (MKO) அமைப்புக்கு சொந்தமான தளங்களை குறிவைத்த 2005 மற்றும் 2024 க்கு இடையில், ஈரான் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் தக்ஃபிரிகளை (தீவிரவாதிகள்) எவ்வாறு தண்டித்தது, விரோத உளவுத்துறை மையங்களை குறிவைத்து, எதிரிகளுக்கு எதிராக அதன் தடுப்பு சக்தியை குவித்தது என்பதை உலகம் அறிந்து கொண்டது.

ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கை குறிப்பிட்ட கருவிகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்காமல் அதன் தடுப்பு முழுமையடையாது.

ஜனவரி 2020 இல், ஐ.ஆர்.ஜி.சியின் குத்ஸ் படையின் தளபதி, தியாகி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான ஐன் அல்-அசாத் மற்றும் எர்பிலில் உள்ள ஹரிர் தளம் மீது குண்டுவீசியதன் மூலம் ஈரான் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கு முதல் உத்தியோகபூர்வ அடியை வழங்கியது.

பின்னர், ஏப்ரல் 2024 இல், டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தை குறிவைத்ததற்கும், சிரியா மற்றும் லெபனானில் உள்ள குத்ஸ் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரீஸா ஜாஹதி படுகொலை செய்யப்பட்டதற்கும் பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு எதிரான ஆபரேஷன் ட்ரூ பிராமிஸை நடத்தியது.

அந்த நேரத்தில், தற்காப்பு தயார்நிலை முன்னொருபோதும் இல்லாத வரலாற்று மட்டத்திற்கு உயர்த்தப்பட்யிருந்த போதிலும், கிட்டத்தட்ட முழு உலகின் கவனமும் வெறும் 22,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த பிராந்தியத்தின் (அமெரிக்க ராணுவத் தளம்) மீது குவிந்திருந்தது. இது, ஈரானின் பதிலடியில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பாகமாக இருந்தது. எவ்வாறாயினும், இவற்றால் மேற்கு ஆசியாவில் இந்த உலகளாவிய அணிதிரட்டல், ஈரானின் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் மூலம் இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மூலோபாய அடிகளை கொடுப்பதை தடுக்க முடியவில்லை. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் நடத்தியது என்ற போதிலும் இந்த பதிலடிக்காக இஸ்லாமிய குடியரசின் இராணுவம் அதன் சக்திகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பயன்படுத்தியது.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளின் மனதில் பல கேள்விகள் எழுந்தன: ஆபரேஷன் ட்ரூ பிராமிஸில் ஈரான் ஆச்சரியத்தின் கூறுகளைப் பயன்படுத்தியிருந்தால்? ... ஈரான் தொடர்ச்சியாக பொலிஸ்டிக் ஏவுகணைகளை மட்டுமே ஏவினால் என்ன செய்வது? ... தாக்குதல்கள் இன்னும் சில மணிநேரங்கள் அல்லது நாட்கள் நீடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ... ஈரானின் எதிரிகளின் பாதுகாப்பு அமைப்பு பலம் குறைந்ததைத் தொடர்ந்து மற்ற தொகுதி ஏவுகணைகள் ஏவப்பட்டால் என்ன செய்வது?.... IRGC அதன் சமீபத்திய தற்காப்பு சாதனங்களை முழுமையாக பயன்படுத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? … இஸ்லாமிய குடியரசின் கூட்டாளிகள் முழு பலத்துடன் போர்க்களத்தில் ஈடுபட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? … அக்டோபர் 7 முதல் காஸாவின் சிறிய நிலப்பரப்பில் கூட வெற்றியைக் பெற முடியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அமைப்புக்கு என்ன நடந்திருக்கும்?

இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, அவற்றுக்கு ஈரானின் எதிரிகளிடம் பதில் இல்லை.

"பழிவாங்கல்" ஆவணப்படம் ஈரானின் ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் பற்றிய விரிவான நுண்ணறிவுகள், தகவல்கள் மற்றும் பெறப்பட்ட முக்கிய நேர்காணல்களை வழங்குகிறது, இதில் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் சையத் அலி காமனேயி, ஐஆர்ஜிசி கமாண்டர்-இன்-சீஃப், மேஜர் ஜெனரல் ஹொசைன், IRGC விண்வெளிப் படையின் தளபதி சலாமி, ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா, பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே, முன்னாள் பென்டகன் ஆலோசகர், முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி, மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர்.

https://english.almayadeen.net/news/politics/the-retribution--when-iran-punished--israel--in-operation-tr

Iran air defense force ‘absolute power’ in West Asia: Cmdr.

மேற்கு ஆசியாவில் ஈரான் வான் பாதுகாப்பு படை முழு பலம் கொண்டது: கமாண்டர்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வான் பாதுகாப்பு படை துறையில் நாடு "முழுமையான ஒரு சக்தி" என்று ஈரானின் மூத்த தளபதி ஒருவர் கூறுகிறார்.

ஈரானிய இராணுவத்தின் விமான பாதுகாப்புப் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா சபாஹி-ஃபார்ட் புதன்கிழமை கூறுகையில், "பிராந்தியத்தில் வான் பாதுகாப்பின் முழுமையான சக்தி நாங்கள் என்றும், இது எவராலும் மறுக்க முடியாத உண்மை" என்றும் கூறினார்.

ஈரான் எந்த நாட்டையும் சார்ந்திருக்கவில்லை என்பதையும், ஈரானிய நிபுணர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சிறந்த உபகரணங்கள் எம்மிடம் உள்ளன என்பதையும் எதிரிகள் நன்கு அறிவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

1980 களில் ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் எம் மீது திணித்த எட்டு ஆண்டுகால போர் மற்றும் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் அயதுல்லா செயித் அலி காமனேயி ஈரான் அதன் பாதுகாப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிறப்பித்த உத்தரவு அனைத்தும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த பங்களித்தன என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரானிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படை தற்போது நாட்டைப் பாதுகாக்க சிறந்த நிலையில் உள்ளது என்று மூத்த தளபதி சபாஹி-ஃபார்ட் மீண்டும் வலியுறுத்தினார். தேவைப்பட்டால் எதிரிகளை குறிவைத்து ஏவுகணைகளை வீசவும் ஈரான் தயாராக உள்ளது என்று கூறினார்.

எதிரிகளின் தவறான கணிப்புகள்

எந்தவொரு தவறான கணிப்பீடுகளையும் செய்ய வேண்டாம் என்று சபாஹி-ஃபார்ட் எதிரிகளுக்கு எச்சரித்தார். ஈரானிய இராணுவம் மற்றும் விமான பாதுகாப்புப் படை எந்தவொரு சாத்தியமான மோதலிலும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று அறிவுறுத்தினார்.

சமீபத்திய ஆண்டுகளில், ஈரானிய இராணுவ வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் பரந்த அளவிலான உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர், இது ஆயுதப் படைகளை தன்னிறைவு அடையச் செய்துள்ளது.

முற்றிலும் பாதுகாப்பிற்காக இருக்கும் எமது இராணுவ திறன்களை வலுப்படுத்த ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் தயங்காது என்றும், ஈரானின் பாதுகாப்பு திறன்கள் எந்த சமயத்திலும் பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படாது, பாதுகாப்பு விடயங்களில் எம்மீது கட்டுப்பாடுகளை விதிக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்  என்றும் ஈரானிய அதிகாரிகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி காமனேயி பல சந்தர்ப்பங்களில் ஈரானின் பாதுகாப்பு திறன்களை பராமரித்து அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

https://en.mehrnews.com/news/220013/Iran-air-defense-force-absolute-power-in-West-Asia-Cmdr

 

Monday, August 19, 2024

எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ஈரானிய ஆட்சிக் கவிழ்ப்பில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் பங்கு

  US to forever be ashamed of overthrowing Mossadegh's govt.

ஈரான் பிரதமர் மொஹமட் முசத்தெக் மற்றும் ஜனநாயக நடைமுறைக்கு எதிராக 1953 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடங்கிய ஆட்சிக் கவிழ்ப்பின் ஆண்டு தினம் ஆகஸ்ட் 19 ஆகும். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை தூக்கியெறிந்த அவமானம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும்.

1953 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை தூக்கியெறிந்த அவமானம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பின் ஆண்டு நிறைவில், நாசர் கனானி தனது எக்ஸ் சமூக கணக்கில் அடிமைத்தனம், காலனித்துவம், ஆட்சிக் கவிழ்ப்புகள் மற்றும் பிற நாடுகளில் இராணுவத் தலையீடுகள் ஆகியவை உலகில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தலையீடுகளின் இருண்ட மற்றும் வெட்கக்கேடான வரலாற்றின் ஒரு பகுதி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

1953 ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஈரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முசத்தெக் அரசாங்கத்தை கவிழ்த்ததன் அவமானம் மற்றும் கொடுங்கோன்மை அரசியல், பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆதரவு ஆகியவை அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆட்சிகளின் முகத்தில் எப்போதும் ஒட்டி இருக்கும் என்று கானானி கூறினார்.

இத்தகைய இருண்ட வரலாற்றைக் கொண்ட இந்த இரண்டு நாடுகளும் தற்போது போலி மற்றும் இனவெறி இஸ்ரேலிய ஆட்சி மற்றும் காஸாவில் இனப்படுகொலையை ஆதரித்து வருகின்றன, அதே நேரத்தில் அவை தங்களை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் கொடி ஏந்தியவர்களாக கருதுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

https://en.mehrnews.com/news/219703/US-to-forever-be-ashamed-of-overthrowing-Mossadegh-s-govt

 

அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவுடன் 1953 ஆட்சிக் கவிழ்ப்பு ஈரானின் ஜனநாயக செயல்முறையை சிதைத்தது

1953 ஆகஸ்டில் ஈரானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முகமது மொசாதிக்கை அதிகாரத்திலிருந்து அகற்றி, முகமது ரேசா ஷா பஹ்லவியை ஈரானின் மன்னராக மீண்டும் பதவியில் அமர்த்தியது. இதன்போது தெஹ்ரானில் நடந்த சண்டையின் போது சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் மூலோபாய அமைவிடம் மற்றும் பரந்த எண்ணெய் வள இருப்புக்கள், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிற சக்திகளுக்கு ஈரான் சிறப்பு ஆர்வம் கொண்ட இடமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டன் அப்போது தனது நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு ஒரு முக்கிய எரிபொருள் விநியோக வழியைப் பாதுகாப்பதற்கும், எண்ணெய் ஜேர்மனிய கைகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கும் நாட்டில் ஒரு இருப்பை நிறுவியது. போருக்குப் பிறகு, அதாவது, ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் ஐக்கிய இராச்சியம் ஈரானின் எண்ணெய் மீதான கட்டுப்பாட்டை திறம்பட தம்வசம் தக்க வைத்துக் கொண்டது.

பிரதமர் முகமது முசத்தெக்ஈரானின் எண்ணெய் தேசியமயமாக்கல்


மொஹமட் மொசத்தேக் 1951 இல் ஈரானின் பிரதமரானார் மற்றும் ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்காக பெரும் மக்கள் அபிமானத்தை பெற்றிருந்தார். அக்டோபர் 1952 இல், முசத்தெக் பிரிட்டனை ஒரு எதிரி என்று அறிவித்து அனைத்து இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தார்.

பிரிட்டனுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் ஈரானுக்கு அதன் லாபத்தில் 16% மட்டுமே செலுத்தி பெரும் லாபத்தை ஈட்டியது. அவரது தேசியமயமாக்கல் முயற்சிகள் பிரிட்டிஷ் அரசாங்சங்கத்தை கோபமூட்டியது, மொசாட்டக்கை அதிகாரத்திலிருந்து அகற்றத் திட்டமிடத் தொடங்கியது. பிரிட்டனால் தனியாக அதைச்செய்ய முடியவில்லை என்பதால் அமெரிக்காவின் உதவியை நாடியது.

ஈரானின் ஜனநாயகத்தை தூக்கியெறிந்த சி.ஐ.ஏ.

ஆபரேஷன் அஜக்ஸ் என்று அழைக்கப்படும் சதி, முசத்தெக்கை பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆணையை வெளியிட ஈரானின் மன்னரை இணங்கச்செய்வதை மையமாகக் கொண்டது.

1953 ஆகஸ்ட் தொடக்கத்தில், ஈரானில் இயங்கிய சிஐஏ செயற்பாட்டாளர்கள் முஸ்லிம் தலைவர்களை "முசத்தெக்கை எதிர்க்கவில்லை என்றால் பயங்கரமான தண்டனைக்குள்ளாக நேரிடும்" என்று அச்சுறுத்தினர், இதன் மூலம் முசத்தெக் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆகஸ்ட் 16, 1953 அன்று, மொஹம்மத் ரேசா பஹ்லவி முறையாக முசத்தெக்கை பதவி நீக்கம் செய்து, சிஐஏ தேர்ந்தெடுத்த ஜெனரல் பஸ்லுல்லா ஜாஹதியை பிரதமராக நியமித்தார். இந்த நியமனம் திட்டத்தை வடிவமைத்த சிஐஏ சதியின் சிற்பியான டொனால்ட் வில்பர் பிரகடனப்படுத்தினார். உடனியாக, ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு உதவுவதற்காக அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்கள் நகரம் முழுவதும் நடந்தேறின. முசத்தெக் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் 1967 இல் இறக்கும் வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆங்கிலோ-அமெரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு ஈரானை பல தசாப்தங்களாக அடக்குமுறைக்கு ஆளாக்கியது 

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஷாவின் சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவை ஊக்குவித்தது மட்டுமல்லாமல், பின்னர் 1979 இஸ்லாமிய புரட்சியின் போது அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அணிதிரளும் முழக்கமாகவும் மாறியது. இப்போதும் கூட, ஈரானிய வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மொசத்தேக் இருந்துவருகிறார்.

உண்மையில், ஈரானியர்களின் உதவியின்றி முசத்தெக் அதிகாரத்திலிருந்து வீழ்ந்திருக்க மாட்டார். என்றாலும், ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கை நீக்கிவிட்டு நோக்குவது தவறாகும். இந்த துரோகத்தின் நினைவு அமெரிக்க-ஈரான் உறவுகளில் தொடர்ந்து தாக்கம் செலுத்துகிறது. இன்னும் முக்கியமாக, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய ஷாவின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதில் அமெரிக்கா ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

ஆகஸ்ட் 19 ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துவது வாஷிங்டனின் இறுதி நோக்கத்தை மறைத்துவிடும்: உண்மையில், அமெரிக்காவின் குறிக்கோளானது, முசத்தெக் ஆட்சியில் இருந்து வீழ்ச்சியடைந்து ஏறக்குறைய ஒரு வருடத்தில் ஈரானின் எண்ணெய் வளங்களை வெளிநாட்டுக் கட்டுப்பாட்டிற்கு திருப்புதலாகும்.

1953இல் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பினால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட விளைவுகள்

இதனால் ஈரான், மேற்கு ஆசியா மற்றும், இன்னும் கூறப்போனால், முழு உலகமும் ஆழமாக பாதிக்கட்டது எனலாம். இந்த சதியையிட்டு உலகம் அசட்டையாக இருந்ததால், ஏகாதிபத்திய தலையீடுகள் மற்றும் உலக தெற்கில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்வதற்கு வழி வகுத்தது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி மேற்கு ஆசியாவில் புவிசார் அரசியல் நிலையை மாற்றியது. 50 களில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்வதற்கும் அரசாங்கங்களை ஸ்திரமற்றதாக்குவதற்கும் தொடர்ச்சியான அமெரிக்க முயற்சிகளுக்கான ஒரு வரைபடமாக மாறியது, மற்றும் பனிப்போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு கருத்தியல் ஆயுதங்களை வழங்கியது.

ஈரானில் 1953 ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, CIA ஒரு வருடத்திற்குப் பிறகு குவாத்தமாலா ஆட்சி கவிழ்ப்பை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தியது, 1957 இல் சிரியாவின் அதிபரை வெளியேற்றுவதில் தோல்வியடைந்தது; மற்றும் 1961 இல் கியூபா மீதான இராணுவப் படையெடுப்பின் தோல்வியில் மூக்குடைப்பட்டது.

1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் சம்பந்தப்பட்டதை சிஐஏ பகிரங்கமாக ஒப்புக்கொண்டது

பல தசாப்தங்களாக, ஈரானிய ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தாம் எந்த பங்கும் வகிக்கவில்லை என்று அமெரிக்கா மறுத்து வந்தது. ஆனால் அந்த நிலைப்பாடு 2009 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா சதியில் வாஷிங்டனின் பாத்திரத்தை ஒப்புக் கொண்டபோது முடிவுக்கு வந்தது.     இதற்கிடையில், பிரிட்டனில், அரசாங்க நிதியுதவி பெற்ற பிபிசி 2011 இல் முசத்தெக் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை எவ்வாறு ஒளிபரப்பியது என்பது குறித்த விவரங்களை வழங்கியது. CIA செயற்பாட்டாளர்களின் இரகசிய கோப்புக்களும் நினைவுக் குறிப்புக்களும் சதியில் CIA ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன.

ஆகஸ்ட் 19, 2013 அன்று, ஈரான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி முகம்மது முசத்தெக் அவர்களுக்கு எதிரான 1953 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதன் ஈடுபாட்டை சிஐஏ முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

ஈரானின் எண்ணெய் தொழில் தேசியமயமாக்கல் மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து இந்த தேசிய மூலோபாய வளத்தை திரும்பப் பெறுதல் போன்ற பிரச்சினையில் நாம் பார்த்தது போல், நாடுகளின் மூலோபாய இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துவது, ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக முடிவில்லாத மற்றும் பல பரிமாணப் போர்களை நடத்துவது அமெரிக்கா போன்ற மேலாதிக்க சக்திகளின் உந்துதல்களில் உள்ளவையாகும் என்பதை நாம் மறத்தல் ஆகாது.

உலகப் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் என்பது உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்காவின் தலையீட்டின் சக்திவாய்ந்த உந்துதல்களில் ஒன்றாக இருந்தாலும், எண்ணெய் வள நாடுகள், கனிம வளங்கள் மற்றும் உலகின் இயற்கை வளங்கள் நிறைந்த ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, வெனிசுலா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் தலையிடுவதற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, சுதந்திரத்தைப் பாதுகாப்பது போன்ற சாக்குப்போக்குகள் தேவைப்படுகின்றன. பாதுகாப்புக்கு உத்தரவாதம், முன்கூட்டிய பாதுகாப்பு மூலோபாயம் போன்றவற்றை கூறிக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தும் நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தங்கள் கொள்கைகளை செயல்படுத்த முயற்சிக்கின்றன.

பொதுவான சட்டங்கள், கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்ற மற்ற அனைத்து நாடுகளின் கண்காணிப்பாளராக அமெரிக்கா தன்னைக் கருதினாலும், இந்த கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் அமெரிக்கா ஒருபோதும் கீழ்ப்படிவதில்லை என்பது கண்கூடு.

அமெரிக்க நாட்டின் வரலாற்றின் பக்கங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம், வாஷிங்டன் தனது கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு எதிராகவும், சில சந்தர்ப்பங்களில் அதன் நண்பர்களுக்கு எதிராகவும் கூட, உலகில் பொதுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மீறும் பல வழக்குகள் அதன் மீது உள்ளன என்பதை நாம் மறத்தல் ஆகாது..

Reported by Sahar Dadjoo

https://en.mehrnews.com/news/219647/US-UK-backed-1953-coup-shattered-Iran-s-democratic-process

Thursday, August 15, 2024

'செத்த பூனை ராஜதந்திரம்' இங்கே தோல்வி - பதிலடிக்கு முன்னால் விடுக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே

‘Dead cat diplomacy’ fails here

Western calls, statements intended to tamper Iran's calculations ahead of retaliation against Israel

 By Mona Hojat Ansari

மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்படும் தூதுகள், ஈரானின் உத்திகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடிக்கு முன்னால் விடுக்கப்படும் அறிக்கைகள் மட்டுமே.

பேச்சுவார்த்தைகள் தோல்வியின் விளிம்பில் இருக்கையில் அல்லது ஏற்கனவே தோல்வியுற்றிருக்கையில் எதிர்த்தரப்பு மற்றும் அதன் கூட்டாளிகளின் மீது பழியைப் போடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயமான "இறந்த பூனை இராஜதந்திரம்", 1991 இல் பிராந்திய நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக இருந்திருக்கலாம், அதன் மூலம் இஸ்ரேல் தன்னை அப்பாவியாக காட்டிக் கொள்ளலாம்.

எவ்வாறாயினும், 2024 இல், இஸ்ரேலின் உண்மையான இனவெறி நிறங்கள் மற்றும் மனித உரிமைகள் மீதான மேற்குலகின் பாசாங்குத்தனமான அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வு உலக மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஈரானின் அல்லது ஹமாஸின் வீட்டு வாசலில் இறந்த பூனைகளை போடுவதால் காஸா நெருக்கடியின் குற்றவாளிகள் அவர்கள் அல்ல என்றாகிவிடப்போவதில்லை.

"இறந்த பூனை இராஜதந்திரம்" என்ற சொல் முதன்முதலில் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் பேக்கரால் உருவாக்கப்பட்டது, அவர் இஸ்ரேலுடனான 1991 மாட்ரிட் சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள, ஏமாற்றமடைந்த அரபு தலைவர்களை வற்புறுத்த போராடிக் கொண்டிருந்தார்.  மாட்ரிட் மாநாடு, அந்த நேரத்தில் எந்த உடன்படிக்கையையும் நோக்கிச் செல்லவில்லை என்றாலும், பிராந்திய நாடுகளை இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் பாதுகாப்பு நிலையை தளர்த்துமாறு வற்புறுத்துவதற்கு வாஷிங்டனுக்கு ஒரு படிக்கல்லாக அது மாறியது. இது 1994 இல் ஜோர்டான்-இஸ்ரேல் அமைதி ஒப்பந்தம் மற்றும் ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது, அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் ஆகியவை 2020 இல் இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கின.

1973 ஜெனிவா மாநாட்டின் தீர்மானத்தின் கீழ் இஸ்ரேல் ஆட்சி அதன் உறுதிமொழிகளை அப்பட்டமாக மீறியதை அடுத்து அரபு தலைவர்கள் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயக்கம் காட்டினர், வாஷிங்டனின் அப்போதைய முயற்சி விரயமாறிவிட்டது.  முதல் பாரசீக வளைகுடாப் போருக்குப் பிறகு அரேபியர்கள் மீது ஒரு தீர்வைத் திணிக்கவும், அதே நேரத்தில் அதை நம்பத்தகுந்ததாக மாற்றவும் அமெரிக்கா விரும்பியது.

1989 முதல் ஜேம்ஸ் பேக்கர் அரபு நாடுகளின் இஸ்ரேலுடனான உறவு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த முயன்று வந்தார். குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய போராடிய பிறகு, ஒரு புதிய மூலோபாயத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். 1991 மார்ச்சுக்கும் அக்டோபருக்கும் இடையில், ஜேம்ஸ் பேக்கர் மேற்கு ஆசியாவிற்கு எட்டு பயணங்களை மேற்கொண்டார், எகிப்து, சிரியா, ஜோர்டான், சவுதி அரேபியா தலைவர்கள் மற்றும் ஒரு பாலஸ்தீனிய பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரபு தலைவர்களை அவர் எச்சரித்தார். இதற்கிடையில், பிராந்தியத்தில் அமைதி இல்லாததற்கான பழியை அவர்கள் மீது போடுவதற்காக, அவர் அரேபியர்களை, குறிப்பாக பாலஸ்தீனியர்களை பகிரங்கமாக விமர்சித்தார். அதற்காக ஊடகங்களைப் பயன்படுத்தியதன் மூலம், அரபு நாடுகள் சமாதானத்தை எதிர்ப்பவர்களாகக் கருதப்படாமல் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்க முடியாது என்று உணரும் சூழலை ஜேம்ஸ் பேக்கர் உருவாக்கினார் என்று மேற்கு ஆசியாவுக்கான அவரது ஆலோசகர்களில் ஒருவரான ஆரோன் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ் பேக்கர் அரேபியர்களை இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுக்க வெற்றிகரமாக இழுத்ததிலிருந்து, விளைவுக்கு மற்றவர் மீது பழியைப் போடும் இறந்த பூனை இராஜதந்திரம் எந்த பேச்சுவார்த்தை மேசையிலும் அமெரிக்க அரசியல்வாதிகளின் விருப்பமான மூலோபாயமாக மாறியது.

வாஷிங்டன், ஊடகத்தின் மீதான அதனது கட்டுப்பாடு மற்றும் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு விளையாடுவதில் பெற்றுள்ள நிபுணத்துவம் காரணமாக, களத்தில் என்ன நடந்தாலும் அது எப்போதும் அதற்கு சாதகமான நிலையில் இருப்பதாக நம்புவதாகத் தெரிகிறது. எனினும் அது எப்போதும் அவ்வாறு இருந்து விடப்போவதில்லை. மேலே உயர்வது கீழே வந்தாகவேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி மற்றும் சியோனிச ஆட்சியை விடுவிக்க ஒரு வாய்ப்பு

ஈரானிய மண்ணில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரானிய பதிலடியை எதிர்பார்த்து சியோனிச ஆட்சி காத்திருக்கையில், சமீபத்திய நாட்களில், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக தமது பலத்தை செலுத்த முயன்று வருகின்றன. இந்த ஆதரவில் இராணுவ உதவி மற்றும் சியோனிஸ்டுகளை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் அவர்களின் சமீபத்திய பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்துதல் ஆகியன அடங்கும்.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள் சமீபத்திய விவாதங்களின் போது "ஈரானின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு" தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியதாகக் கூறினர்.

"இஸ்ரேலுக்கு எதிரான இராணுவத் தாக்குதல் குறித்த அதன் தற்போதைய அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு நாங்கள் ஈரானுக்கு அழைப்பு விடுத்தோம், அத்தகைய தாக்குதல் நடந்தால் பிராந்திய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் குறித்து விவாதித்தோம்" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஈரானிய மண்ணில் ஹமாஸ் தலைவர் ஒருவரை இஸ்ரேல் கொன்றதை அது கண்டிக்கவில்லை. நடந்தது ஈரானின் இறையாண்மையை மீறும் செயலாகும், அத்துடன் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறிய குற்றமுமாகும்.

ஜூலை 31 ஆம் தேதி இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செய்யத் அலி காமனேயி அவரை ஈரானின் "அன்புக்குரிய விருந்தினர்" என்று குறிப்பிட்டு அவரது கொலைக்கு பழிவாங்குவதாக சூளுரைத்தார்,. அதை தொடர்ந்து பல ஈரானிய அதிகாரிகள் இந்த உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல்வாதிகளும் தங்கள் அறிக்கையில், இஸ்ரேல், குறிப்பாக பெஞ்சமின் நெத்தென்யாகு காஸாவில் சமாதான முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதை பற்றி எதையும் குறிப்பிடாது, "காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு" மட்டும் முயற்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை இதேபோன்றவொரு அறிக்கையை வெளியிட்டு, காஸாவில் போர்நிறுத்தத்திற்கான "வாய்ப்பு" வெற்றி பெறவில்லை என்றால் ஈரான் தான் பொறுப்பு என்று வலியுறுத்தின.  10 மாதங்களுக்கும் மேலாக காஸாவில் சியோனிச ஆட்சியின் தாக்குதல் மற்றும் அழிவு மற்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட முக்கியமான ஒருவரை கொன்றதன் பின்னர், இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்கள், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆட்சிக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை தடம் புரளச் செய்யலாம் என்று E3 கருதுவதாக கூறுகிறது.

"இவ்வாறு அவர்கள் விடுக்கும் அறிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஒரு முக்கிய உடந்தையாக இருந்து வருகின்றன மற்றும் அனைத்து முனைகளிலும் சியோனிச ஆட்சிக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்குகின்றன" என்று அஜர்பைஜான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கான தூதராக பல ஆண்டுகள் பதவிவகித்த முன்னாள் ஈரானிய இராஜதந்திரி மொஹ்சென் பகாயென் தெஹ்ரான் டைம்ஸிடம் தெரிவித்தார்.

"பெய்ரூட் மற்றும் தெஹ்ரானில் உயர்மட்ட எதிர்ப்புத் தலைவர்களின் படுகொலைகளுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்கும் என்பதை மேற்கத்திய நாடுகள் நன்றாக அறிந்திருந்தன. வாஷிங்டனும் அதன் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும் இஸ்ரேலை அதன் ஆபத்தான, அழிவுகரமான திட்டங்களுடன் முன்னேறுவதற்கு அனுமதித்தன. இப்பொழுது அதன் நடவடிக்கைகளின் விளைவுகளுக்கு அதுவே பொறுப்பு என்பதற்கு மாற்றமாக, இஸ்ரேல்தான் பாதிப்புக்குள்ளான தரப்பு போன்று காட்டி, அதை குற்றங்களில் இருந்து விடுவிக்க முயல்கின்றன. அடிப்படையில் இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை ஸ்தாபிப்பதைத் தடுக்கிறது என்பதை நன்றாக அறிந்துகொண்டு அவர்கள் ஈரானையும் லெபனானையும் காஸாவில் சமாதானத்தைத் தடுப்பவர்கள் என்று கூறப்படும் ஆபத்துக்கு விடையிறுப்பதைத் தவிர்க்குமாறு நயவஞ்சகத்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்," என்று முன்னாள் இராஜதந்திரி விளக்கினார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் அதன் பெயரைப் பாதுகாப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சமீபத்திய முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று பக்காயீன் மேலும் கூறினார். "மேற்கத்திய நாடுகள் என்ன சொன்னாலும் ஈரான் தனது பதிலடி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பது உறுதி. அனைத்திற்கும் மேலாக, கடந்த பத்து மாதங்களில் சியோனிச ஆட்சி செய்துள்ள பயங்கரவாத இனப்படுகொலை செயல் ஒவ்வொன்றிற்கும் பின்னர், பொதுமக்கள் கருத்தை முன்பு செய்ததை போல இப்போது அவ்வளவு எளிதாக திசைதிருப்பப்பிவிட முடியாது".

ஈரான் நிச்சயமாக அதன் பதிலடியை நடத்தியே தீரும், அது எங்கு, எப்போது, எப்படி என்பதை சம்பந்தப்பட்ட ஈரான் அதிகாரிகள் தீர்மானிப்பார்.

https://www.tehrantimes.com/news/502429/Dead-cat-diplomacy-fails-here