Contributors

Monday, December 19, 2022

உலகளாவிய ஆணவத்தின் சதிகளை ஒற்றுமை மூலம் வலுவிழக்கச் செய்ய முடியும்

 Iran ready to cooperate with neighbors in all fields

ஈரான் இஸ்லாமிய குடியரசின் பிராந்திய மற்றும் வெளியுறவுக் கொள்கை

அனைத்து துறைகளிலும் அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க ஈரான் தயாராக உள்ளது

பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு இடையே வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டு கூட்டத்தை நடத்த தெஹ்ரான் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

தெஹ்ரான் உரையாடல் மன்றத்தின் மூன்றாவது சந்திப்பில் பேசிய ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்கையே ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவுக் கொள்கையின் மையப் பகுதியாகும் என்று கூறினார்.

நம்பிக்கையை வளர்க்கவும், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் நட்புறவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும் ஈரானிய நிர்வாகம் தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது, என்றார்.

ஈரான் எப்போதும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் அடித்தளங்களில் ஒன்றாகவும் இருந்துவருகின்றது, ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பதாகவும் குறிப்பிட்ட வெளியுறவு அமைச்சர், ஈரான் பிராந்தியத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் எப்போதும் முன்னணியில் இருப்பதாகவும் கூறினார். உலகம்.

பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஈரான் தனது அண்டை நாடுகளுடனும், பாரசீக வளைகுடா பிராந்தியத்துடனும் அனைத்து பரிமாணங்களிலும் நம்பிக்கையை உருவாக்க தயாராக உள்ளது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு இடையே வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டுக் கூட்டத்தை நடத்த தெஹ்ரான் தயாராக உள்ளது என்று அமீர்-அப்துல்லாஹியன் கூறினார்.

ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் கொள்கை அதன் அண்டை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பது, ஆக்கபூர்வமான மற்றும் முன்னோக்கு உரையாடல் மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த இப்ராஹிம் ரெய்சியின் நிர்வாகம் தயாராக உள்ளது என்று கூறினார்.

சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஆப்கானிஸ்தானில் நிலையான பாதுகாப்பு சாத்தியமாகும்

ஈரான் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள நிலையிலும் கூட கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளை உள்வாங்கியுள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் நிலையான பாதுகாப்பு என்பது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று ஈரான் நம்புகிறது.

சீனாவுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஈரான் தொடரும்

பிராந்திய நாடுகளுடனான சீனாவின் ஒத்துழைப்பை ஈரான் எப்போதும் வரவேற்றுள்ளது, சமீபத்திய ஆண்டுகளில், தெஹ்ரானும் பெய்ஜிங்கும் நீண்டகால மூலோபாய ஒத்துழைப்புக்கு தங்கள் உறவுகளின் அளவை உயர்த்தியுள்ளன அமீர்-அப்துல்லாஹியன் கூறினார். "கடந்த வாரம், ஈரானிய மற்றும் சீன பிரதிநிதிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் விரிவான கூட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தொடர்பாக டெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடத்தினர்."

Xi யின் சவூதி அரேபியாவிற்கு விஜயத்தின் போது PGCC உறுப்பு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையை குறிப்பிட்டு, ஈரான் தனது அதிருப்தியையும் எதிர்ப்பையும் உத்தியோகபூர்வ வடிவத்தில் இராஜதந்திர சேனல்கள் மூலம் அறிவித்து சீன தரப்புக்கு அதிகாரப்பூர்வ குறிப்பை அனுப்பியது.

சீனாவுடனான மூலோபாய ஒத்துழைப்பின் தொடர்ச்சியை வலியுறுத்திய அவர், ஈரான் தனது பிராந்திய ஒருமைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க யாரையும் அனுமதிக்காது என்று குறிப்பிட்டார்.

"மூன்றாவது தெஹ்ரான் உரையாடல் மன்றம்" (TCF) தெஹ்ரானில் துவங்கியது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

டிசம்பர் 19 அன்று துவங்கிய இந்த மாநாடு, இஸ்லாமிய குடியரசின் அண்டை நாடுகளுடனான கொள்கை மற்றும் நட்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான அணுகுமுறையில் கவனம் செலுத்துகிறது. மாநாட்டில் 36 நாடுகளைச் சேர்ந்த 70 அதிகாரிகள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தெஹ்ரான் உரையாடல் மன்றத்தின் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகள் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. இந்த இரண்டு சுற்றுகளும் அரசியல் அதிகாரிகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய ஆய்வுத் துறையில் சிந்தனையாளர்களிடையே தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கான ஒரு முக்கியமான தளமாக அமைந்தன, அத்துடன் மேற்கு ஆசியா பற்றி முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

https://en.mehrnews.com/news/195130/Iran-ready-to-cooperate-with-neighbors-in-all-fields

 

Global Arrogance's new plots can be neutralized through unity

உலகளாவிய ஆணவத்தின் சதிகளை ஒற்றுமை மூலம் வலுவிழக்கச்செய்ய முடியும்

ஈரான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் தமக்குள் பல ஆற்றல்களைக் கொந்துள்ளன, தங்கள் உறவுகளை வளர்ப்பதற்கு போதுமான அடித்தளத்தை இவை அமைக்கின்றன என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரயீஸி, வருகை தந்துள்ள நிகரகுவா வெளியுறவு மந்திரி டெனிஸ் மொன்காடா மற்றும் அவரது தூதுக்குழுவினர் உடனான சந்திப்பில் கூறினார்.

ஈரான் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உறவுகளை வளர்த்துக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறிய ஜனாதிபதி ரெய்சி, இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது மேற்கத்திய நாடுகளின் தடைகளை வலுவிழக்கச் செய்ய ஒரு சிறந்த வழியாகும் என்று கூறினார்.

ஈரானுக்கும் நிகரகுவாவுக்கும் இடையிலான நல்ல இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையிலான நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகளாவிய அகந்தை (அடக்கியாள நினனைக்கும் மேற்கத்திய) நாடுகளின் விரோதம் மற்றும் அழுத்தங்கள் எம்மிரு நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவினால் பிரயோகிக்கப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான காரணிகளில் ஒன்றாக மாநிலங்கள் விளங்குகின்றன.

அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக வாழ நினைக்கும் நாடுகளுக்கு எதிரான மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளை அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டித்து, இந்த அநீதியை எதிர்க்கும் நாடுகளுக்கு எதிரான புதிய அமெரிக்காவின் திட்டங்கள் பற்றி குறிப்பிடுகையில், இணைந்த நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உலகளாவிய திமிர் முன்னணியின் அழுத்தங்களை வலுவிழக்கச்செய்வதற்கான வழிகளில் ஒன்றாகும் என்று தெளிவுபடுத்தினார்.

நிகரகுவா வெளியுறவு மந்திரி, அமெரிக்காவால் விதிக்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக ஈரானின் போராட்டம் மற்றும் எதிர்ப்பை சுட்டிக்காட்டி, தனது நாட்டிற்கும் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையே பொருளாதார மற்றும் வணிக ஒத்துழைப்புக்கான விரிவான ஆவணத்தை தயாரித்து செயல்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி கூறினார். ஈரான் மற்றும் நிகரகுவா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் வலுப்படுத்துவதையும் வலியுறுத்தினார்.

ஈரான் மற்றும் நிகரகுவா வெளியுறவு அமைச்சர்கள் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தில் கையெழுத்திட்டனர்.

https://en.mehrnews.com/news/195098/Global-Arrogance-s-new-plots-can-be-neutralized-through-unity

 

 

Tuesday, December 13, 2022

இஸ்லாமிய நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க எதிரிகள் போடும் திட்டம்

Iran against the West’s hybrid warfare

Viktor Mikhin

மேற்கத்திய நாடுகள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உருவாக்கியுள்ள சூழ்நிலையை ஈரானிலும் உருவாக்க முயல்கின்றன, நாட்டை அழித்து அதன் வளங்களை கொள்ளையடிக்கவே இவ்வாறு குழப்பத்தை உருவாக்குகின்றன என்பது தெளிவு. இவ்வாறு கூறுவது வேறு யாருமல்ல, முன்னாள் அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை அதிகாரி ஸ்காட் பென்னட் (Scott Bennett) என்பவரே ஆகும். "ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் செய்தது போல், ஈரானிய தேசத்திலும், இராணுவத் துறைகளிலும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த மேற்கு நாடுகள் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றன. ஈரானின் தேசிய வளங்களைத் சூறையாட வேண்டுமாயின், அதற்கு வசதியாக நாட்டிற்குள் குழப்பங்களை உருவாக்கி, பிரச்சனைகளை உருவாக்க வேண்டும்என்று  ஸ்காட் பென்னட் தெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார். அமெரிக்க தலைமையிலான மேற்குலகு தமது திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தோடு லெபனான், சிரியா மற்றும் ஈராக்கில் பதட்டங்களைப் பயன்படுத்தி, தாக்குதல்களை நடத்தி,  வருகின்றன. ஈரானுக்கு எதிரான இந்த நாடுகளின் விரோதப் போக்கு மற்றும் சூழ்ச்சிகளின் முக்கிய காரணமும் இதுவேயாகும், இதற்கு காரணம் இஸ்ரேலின் தூண்டுதலே என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நேட்டோ சிரியாவில் செய்ததைப் போல, "மனித உரிமைகளை" பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, போராட்டங்கள் என்ற போர்வையில் ஈரானுக்கு எதிராக உள்நாட்டுப் பயங்கரவாதம் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளன என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இவர்களது திட்டம் நிறைவேறாது என்று அறிந்துவைத்துள்ள இந்த வெள்ளை இனவாத சக்திகள் ஈரானிய ஆட்சியை மாற்றும் முயற்சியில் இதே முறைகளையும் அதே கூலிப்படையையும் பயன்படுத்துகின்றன. இஸ்ரேலிய மொசாட், லிகுட் கட்சி ஆதரவாளர்கள், அமெரிக்க சிஐஏ, பிரிட்டிஷ் MI-6 உளவுத்துறை ஆகியன இணைந்து வழிதவறிய வஹ்ஹாபிகள் மற்றும் ஈராக்கில் உள்ள சில கைக்கூலிகள், அல்-கய்தா, அல்-நுஸ்ரா பயங்கரவாதிகள், எஞ்சியிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இன்னும் ஏனைய கூலிப்படையினர் மற்றும் கலகக்காரர்கள் போன்றோரை தமது அனுசரணையில் இயக்கிவருகின்றன.

வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஈரானுக்குள் ஊடுருவி உள்நாட்டுக் கலவரம், ஷியா, சன்னி, அலவிகள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் குர்துகளுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி மோதல்களைத் தூண்டுவதே இவர்களது திட்டம் ஆகும். பலதரப்பட்ட மக்கள் கலந்து வாழும் பிரதேசங்களை இலக்காக்கி, மோதல் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு இவர்கள் பயங்கரவாதிகளை பயன்படுத்தி வருவதில் இருந்து இவர்களது திட்டம் துல்லியமாகத் தெரிகிறது. இதற்காக மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் மேற்கத்திய கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் இதற்கு ஒத்தாசையாக இருக்கின்றன. போலீஸ் சித்திரவதையின் காரணமாக ஒரு பெண் இறந்ததாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றம் ஆரம்பமானது, உண்மை என்னவெனில் அவர் ஏற்கனவே பீடிக்கப்பட்டிருந்த கடுமையான நோயினால் உயிரிழந்ந்துள்ளார் என்று மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன..

ஒரு சாதாரண சிறிய பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்டு, ஈரானுக்கு எதிரான இராஜதந்திர, பிரச்சார, இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வடிவத்தை எடுத்திருப்பதானது, ஸ்காட் பென்னட் வாதிடுவது போல், அரசாங்கத்தை சீர்குலைக்கவும் ஈரானில் குழப்பத்தை உருவாக்கவும் கருவியாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இராஜதந்திர முன்னணியில், ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் விரோத அறிக்கைகள், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்புகள் ஈரான் பற்றி மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் போலி பிரச்சாரமானது மேற்கத்திய மேலாதிக்கம் செலுத்தும் நோக்கக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, ஈரானில்  "மனித உரிமைகள்" மீறப்படுவதான  குற்றச்சாட்டு அணுசக்தி திட்டங்கள் பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்கு அதிகளவில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாய் அமையும்.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவில் மட்டுமின்றி, வளைகுடா பகுதி உட்பட வெளிநாடுகளிலும் தங்கள் ராணுவ திறன்களை வலுப்படுத்தி வருகின்றன என்பதை பல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen சமீபத்தில் ஒரு புதிய ஐரோப்பிய பாதுகாப்பு கோட்பாட்டின் கூறுகளை கோடிட்டுக் காட்டினார், அதாவது, பாரசீக வளைகுடாவில் பாதுகாப்புக்கான EU மற்றும் NATO அணுகுமுறை ஆகும். கடந்த நவம்பர் 18 அன்று பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த உரையாடலில் அவர் கூறிய கருத்துக்கள், ஈரான் மீது பிராந்திய நாடுகள் கொண்டுள்ள மிகவும் விரோதமான எண்ணங்களைப் பயன்படுத்தி, பிராந்தியத்தில் பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஒரு புதிய அணுகுமுறையைப்  பயன்படுத்துவதை பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

நெதன்யாகு ஆட்சியின் கீழ் இஸ்ரேல் எவ்வாறு சிரியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டதோ அவ்வாறே ஈரானுக்கு எதிரான சூழ்ச்சிகளை செய்வதற்காக ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா வான்வெளியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை உருவகப்படுத்தி, மிகப்பெரிய கூட்டு விமானப் பயிற்சியை நடத்தும். இரு நாடுகளிலிருந்தும் போர் விமானங்கள் நீண்ட தூர விமானங்கள் மற்றும் தொலைதூர இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை உருவகப்படுத்தி மேற்கொள்ளும்; அது ஈரானுடனான போர் சூழலுக்கான தயார்நிலையை அதிகரிக்கும். சமீபத்திய ஆண்டுகளில், இஸ்ரே லிய பாதுகாப்புப் படைகள் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளை ஏற்கனவே ஈரானுக்கு எதிரான தாக்குதளுக்காக பல கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஜெருசலேம் பிரகடனம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்க-இஸ்ரேலிய மூலோபாய கூட்டாண்மை குறித்த கூட்டுப் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் Yair Lapid கையெழுத்திட்டனர். "ஈரானை அணுவாயுதத்தைப் பெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது, அதை உறுதிப்படுத்த அதன் தேசிய சக்தியின் அனைத்து கூறுகளையும் பயன்படுத்த அது தயாராக உள்ளது" என்ற அமெரிக்க உறுதிப்பாட்டை அது வலியுறுத்துகிறது. அடுத்தடுத்த கூட்டுப் பயிற்சிகள் வாஷிங்டனில் IDF தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் Aviv Kochavi மற்றும் கூட்டுப் பணியாளர்களின் தலைவர் ஜெனரல் Mark Milley மற்றும் சென்ட்காம் கமாண்டர் ஜெனரல் Michael Kurilla உட்பட அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்புகளுக்கு உட்பட்டது.

அடுத்த ஆண்டு ஈரான் மீதான தாக்குதல்கள் தொடர்பான இராணுவ நடவடிக்கைகளுக்காக  IDF இன் NIS 58 பில்லியன் ($17 பில்லியன்) பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து NIS 3.5 பில்லியன் ($1 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியேறும் பாதுகாப்பு மந்திரி Benny Gantz, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், "பிரச்சினையை மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்" என்று புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்திருந்தார். “ஈரானுக்குள் செயல்படும் திறன் இஸ்ரேலுக்கு உள்ளது. தயார்நிலை, திறன்கள் மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. இந்த சாத்தியத்திற்கு நாங்கள் தயாராக வேண்டும், மேலும் இந்த சிக்கலை செயல்படுத்துவதற்கு முன்பு, நாங்கள் மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டும், ”என்று அவர் கூறினார்.

மேற்கத்திய பகைமை மற்றும் ஈரானுக்கு எதிரான சூழ்ச்சியின் முக்கிய காரணி இஸ்ரேல் தான் என்ற வாதத்தை மேற்கூறிய அனைத்தும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன, மேலும் இந்த கொந்தளிப்பு நிலையை பயன்படுத்தி லெபனான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் தாக்குதல்களை நடத்துகின்றன.

இனவாத வண்ணப் புரட்சிகள் பொதுவாக மேற்குலகின் ஆக்கிரமிப்பு பிரச்சாரங்களின் இலக்காகும். மற்றும் ஊடக போர்கள் குழப்பம் மற்றும் பதட்டங்களை உருவாக்குவதற்கு கவனச்சிதறல்கள் ஏற்படுத்தி இந்த இனவாத வண்ண புரட்சிகளை தொடங்குவதற்காகவும் ஆகும். ஈராக்கில் அமெரிக்கா உருவாக்கிய பல்வேறு கோத்திர மற்றும் மதப் பிரிவுகளுக்கு இடையே மோதலும் இவர்கள் மூட்டிய போர்களில் அடங்கும். இதற்காக லிபியா மற்றும் சிரியாவில் குழப்பங்களை ஏற்படுத்த, சவூதி அரேபியா, கத்தார், இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கூலிப்படையினர் சிஐஏ மற்றும் பென்டகனால் பணியமர்த்தப்பட்டு, நிதியுதவி மற்றும் பயிற்சியளிக்கப்பட்டனர். இதற்கு பொறுப்பாய் இருந்த ஜெனரல் Lloyd Austin, இப்போது பாதுகாப்புச் செயலர். இந்த நடவடிக்கைகளின் நோக்கம் பிராந்தியங்களில் உள்ள மக்களிடையே பதற்றம், குழப்பம், மோதல் மற்றும் பகைமை ஆகியவற்றை உருவாக்கி, இயற்கை செல்வங்களை கொள்ளையடிப்பதாகும். இவர்களது திட்டத்தை அறிந்துகொள்வதற்கு கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, லிபியா, சிரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் வரலாற்றைப் பார்த்தால் போதுமானது. இப்போது உக்ரைனும் ஈரானும் நிச்சயமாக இந்த மேற்கத்திய இனவாத நிறப்புரட்சியின் அடுத்த இலக்காக ஆக்கப்பட்டுள்ளன, எனவே இத்தகைய விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஒரு சர்வதேச கூட்டணி அவசியமாகும்.

Viktor Mikhin, corresponding member of RANS, exclusively for the online magazine “New Eastern Outlook.

https://messageofwisdom.blogspot.com/2022/12/iran-against-wests-hybrid-warfare.html?fbclid=IwAR213rTfR0_d8IcIySbDy_fb4RwerKcpcFDDQtncWZRC4CnQmADxJuI5LHI

Thursday, December 8, 2022

கிழக்கின் எழுச்சி: கற்பனையா அல்லது நிஜமா...?

 The rise of the East; claim or fact?

Ruholamin Saeidi, Assistant Professor at Imam Sadiq Univ.

ஆக்கம்: ரூஹல் அமீன் ஸஈதி, உதவிப் பேராசிரியர், இமாம் சாதிக் பல்கலைக்கழகம்

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர், இமாம் ஆயத்துல்லாஹ் செய்யிதலி காமனெய், சமீபத்தில் மாணவர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் உரையை நிகழ்த்துகையில் மேற்கில் இருந்து ஆசியாவிற்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான சக்தி மாறுவது குறித்தும் இந்த பண்டைய (ஆசிய) கண்டம் அறிவு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராணுவ சக்தி ஆகியவற்றின் உலகளாவிய மையமாக மாறிவருவது குறித்தும் பிரஸ்தாபித்தார். உலகின் பொருளாதார ஆதிக்க மையம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு மாறுவது பற்றிய இந்தப் பேச்சு வெறும் கற்பனையா அல்லது மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் சர்வதேச உறவுகளின் ஆய்வாளர்கள் இதை ஒப்புக்கொள்கிறார்களா? என்பதை சற்று ஆராய்வோம்.

சர்வதேச ஒழுங்கின் எதிர்கால நிலை குறித்து உலகில் உள்ள சர்வதேச உறவுகளின் முக்கிய அறிஞர்களின் விவாதங்களின் சுருக்கமான கண்ணோட்டம், மேற்கிலிருந்து அதிகாரம் கிழக்கிற்கு படிப்படியாக மாறுகிறது என்பதற்கான ஒரு கூற்று மட்டுமல்ல அது ஒரு யதார்த்தம் என்பதை இங்கு காட்டுவது அவசியமாகும்.

இந்த கருத்து ஈரான் இஸ்லாமிய குடியரசு போன்ற நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. மேற்கத்திய அறிவியல் வட்டாரங்களில் அது ஒரு தொடர் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவரங்கள் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட,  சர்வதேச உறவுகள் துறையில் பல முக்கிய பிரமுகர்கள் இந்த பிரச்சினையின் சாரத்தை உறுதிப்படுத்தும் அளவிற்கு, கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளன,

உலகம் தற்போது அடிப்படை மாற்றம் மற்றும் மாற்றத்தின் நிலையில் இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். உலக ஒழுங்கு ஒரு முக்கியமான இடைநிலைக் காலத்தில் அமைந்திருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். அது அதன் முந்தைய இயக்கத்தின் போக்கை மாற்றியமைத்துள்ளது மற்றும் உலகில் ஏற்பட்டு வரும் விரிவான மாற்றங்கள் காரணமாக, அது ஒரு புதிய திசையில் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் அதிவேகமாக நகர்கிறது.

ஜோசப் நை (Joseph Nye) என்ற புகழ்பெற்ற நவதாராளவாதக் கோட்பாட்டாளரின் கூற்றுப்படி இந்த மாற்றத்தின் மிக முக்கியமான பரிமாணங்களில் ஒன்று, உலக ஒழுங்கின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமாகும், தொழிலாளர்கள் அவர்களின் திறன்களின் தரத்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட விதம் ஆகும்.

சக்தி கட்டமைப்பில் மாற்றம் இரண்டு நிலைகளில் நிகழ்கிறது: ஒன்று சக்தி மாற்றம் மற்றும் மற்றொன்று சக்தி பரவல். அதிகார மாற்றம் என்பது அரசாங்கங்களுக்கிடையிலான உறவுகளுடன் தொடர்புடையது. இதன் செயல்பாட்டில் உலகளாவிய சக்தி மற்றும் செல்வத்தின் மையம் மேற்கிலிருந்து கிழக்கிற்கு படிப்படியாக மாற்றப்படுவதையும், ஆசியாவின் முந்தைய நிலையை மீட்டெடுப்பதையும் நாம் காண்கிறோம்.

வரலாற்று ரீதியாக, தொழில்துறை புரட்சிக்கு முன்னர், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசியாவில் வாழ்ந்தனர் மற்றும் உலக தேவையில் பாதி இந்த கண்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு, 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிலைமை மாறியது. உலகளாவிய உற்பத்தியில் அதன் பங்கு ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்தது, மேலும் அதிகாரம் மற்றும் செல்வத்தின் மையம் மேற்கு நோக்கி (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) மாறிய போதிலும் உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல் இன்னும் ஆசியாவிலேயே உள்ளது. ஆகவே, 21ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக ஆய்வாளர்களும் நிபுணர்களும் கருதுகின்றனர். பண்டைய கண்டம் மீண்டும் எழுச்சி பெறுவதாகவும், இந்த நூற்றாண்டில் மீண்டும் அதன் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

மேற்கிலிருந்து கிழக்கிற்கு இந்த அதிகாரம் மாறுவதற்கான காரணத்தைப் பொறுத்தவரை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பா சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரமாண்டமான, சுதந்திரமான மற்றும் வளரும் பாத்திரத்தை வகிக்கும் திறனை நடைமுறையில் இழந்தது என்று கூறலாம். முழுமையாக அமெரிக்காவை மையப்படுத்திய ஒன்றாகவே அது இருந்தது,.

கடந்த சில தசாப்தங்களாக ஐரோப்பிய அரசாங்கங்களால் சுதந்திரமான நிலைப்பாடுகளை மேற்கொள்வதற்கும் அமெரிக்காவின் கனமான நிழலில் இருந்து விடுபடுவதற்கும் சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஈராக் போர் மற்றும் JCPOA பேச்சுவார்த்தைகள் போன்ற ஏமாற்றமளிக்கும் தோல்விகளுக்கு வழிவகுத்தன. எனவே, சர்வதேச உறவுகளின் அறிஞர்கள் உலகளாவிய சக்தி சமன்பாடுகளின் எதிர்காலத்தில் ஐரோப்பாவிற்கு எந்த சிறப்பு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று பக்கங்களையும் உருவாக்கும் ஒரு முக்கோணத்தில் உலகின் தலைவிதியை அவர்கள் வரையறுக்கிறார்கள்.

தற்போதைய உலக ஒழுங்கில் அமெரிக்கா மட்டுமே வல்லரசாகக் கருதப்பட்டாலும், அமெரிக்காவின் மேலாதிக்க அதிகாரம் பலவீனமடைந்து, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற புதிய போட்டியாளர்கள் உருவாகும் வகையில் அதன் தலைமைத்துவ அதிகாரம் படிப்படியாக பரவலாக்கப்படுவதை பல ஆண்டுகளாக நாங்கள் அவதானித்து வருகின்றோம்.

இந்த நாடுகள் அமெரிக்காவின் வீழ்ச்சி நிலையை சாதகமாக்கியுள்ளன, மேலும் வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள் தங்களால் தீர்க்க முடியாத மோதல்கள் பலவற்றில் சிக்கியுள்ளனர். இது சம்பந்தமாக, ஜோசப் நை, மேலாதிக்கம் என்பது ஏகாதிபத்தியதிற்கு ஒத்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார், மேலும் அமெரிக்கா தற்போது உலகின் பிற பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது, என்றாலும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி அதற்கு இல்லை என்று ரிச்சர்ட் ஹாஸின் (Richard Haass) வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: "அமெரிக்கா இன்னும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், உலக அமைதியையும் செழுமையையும் அதனால் பராமரிக்க முடியவில்லை, அதை அபிவிருத்தி செய்வது ஒருபுறம் இருக்க".

இதன் அடிப்படையில், பல சர்வதேச உறவுகள் அறிஞர்கள் உலக ஒழுங்கின் தற்போதைய கட்டமைப்பை "ஒற்றை-பன்முனை" அமைப்பாகக் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், வல்லரசு எந்த சர்வதேச பிரச்சினைகளையும் தனியாக நிர்வகிக்க முடியாது, மற்ற பெரிய சக்திகளுடன் உடன்பட்டு ஒத்துழைக்க வேண்டும். வல்லரசு நாடு, குழுவின் தலைவராகவும், உயர்ந்த நிலையில் இருந்தாலும், உலகளாவிய விவகாரங்கள் மற்றும் சவால்களை நிர்வகிக்க மற்றவர்களின் ஒத்துழைப்பும் தலையீடும் தேவைப்படும் விதத்திலேயே இந்த அமைப்பு இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

1930 களின் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மிகவும் கடுமையான நிதி நெருக்கடியாகக் கருதப்படும் 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடி, அமெரிக்காவின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் அடியாக அமைந்தது, ஏனெனில் இது நவதாராளவாத மாதிரியின் தோல்வியை பிரதிபலித்தது, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில். அதிகபட்ச அளவிற்கு நிதி கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

2008 ஆம் ஆண்டு அமெரிக்க மேலாதிக்க நற்பெயருக்கு அடிவிழுந்தற்கான காரணம், இந்த நிதி நெருக்கடி நோய், குறைபாடுகள் மற்றும் நவதாராளவாதத்தின் புதிய வடிவத்தின் பாதிப்புகளின் அறிகுறியாகும், இது "கேசினோ முதலாளித்துவம்" ("casino capitalism") என்று அழைக்கப்பட்டது. நிதிக் கட்டுப்பாடு நீக்கம், ஊகக் குமிழ்கள் (speculative bubbles) உருவாகவும், வளரவும், பின்னர் உலகம் முழுவதும் திடீரென வெடிக்கவும் காரணமாகிறது - இது பொருளாதார அமைப்பின் கணிக்க முடியாத நிலைக்கு வழிவகுக்கும்.

இதன் விளைவாக, இந்தப் பெரும் நெருக்கடியானது மேற்கத்திய விழுமியங்களைப் பற்றிய சந்தேகங்களை அதிகரித்தது மற்றும் "ஆசிய மதிப்புகள்" மற்றும் சீனப் பொருளாதார மாதிரிக்கான பிற நாடுகளின், குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் ஆசைக்கு வழிவகுத்தது, எனவே, வளரும் நாடுகளின் சில பகுதிகளில், "வாஷிங்டன் ஒருமித்த கருத்தை" விட " பெய்ஜிங் ஒருமித்த கருத்து" (சீன ஆட்சி மாதிரியைப் பின்பற்றுதல் என்ற பொருளில்) மிகவும் பிரபலமானது.

இன்று, சந்தைப் பொருளாதாரம் மற்றும் எதேச்சாதிகார அரசாங்கத்தின் கலவையான அதன் வெற்றிகரமான நிர்வாக மாதிரியுடன், சீன அரசியல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே ஒரு காரண உறவின் இருப்பு தொடர்பான மேற்கத்திய அனுமானங்களை சவாலுக்கு உபடுத்தியுள்ளது. சீனா தற்போது அமெரிக்காவிற்கும், உலகப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தின் தாராளவாத மாதிரிக்கும் இணையாக மிகவும் தீவிரமான போட்டியாளராகக் கருதப்படுகிறது.

சர்வதேச உறவுகள் ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி, சீனா இந்த வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்தால், வரும் தசாப்தங்களில் அமெரிக்காவுடன் சமமாக இருக்கும். 2008 நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மேலாண்மை ஆகிய இரண்டின் போதும், புதிய தாராளவாத நாடுகளை விட சீனா மிகவும் வெற்றிகரமான சாதனையை படைத்துள்ளது. ஆசிய விழுமியங்களை நம்பியிருக்கும் பல கிழக்கு நாடுகள் செய்த ஈர்க்கக்கூடிய சாதனைகள் மிகவும் வெளிப்படையாக இருந்தன, மேற்கத்திய அறிஞர்கள் அதன் விளைவுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), பாட்ரிசியா ஓவன்ஸ் (Patricia Owens) மற்றும் ஜான் பெய்லிஸ் (John Baylis) ஆகியோர் தங்களின் உலக அரசியலின் உலகமயமாக்கல் புத்தகத்தில் எழுதியுள்ள முன்னுரையில் இதற்கான உதாரணத்தைக் காணலாம்:

ஆசியாவின் "புலிகள்" என்று அழைக்கப்படும் சிங்கப்பூர், தைவான், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகள், சர்வதேசப் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் சிலவற்றை பெற்றுள்ளன, ஆனால் சிலரின் கருத்துப்படி, இந்த நாடுகள் தமது ஆசிய விழுமியங்களை பாதுகாத்து வந்துள்ளன. இந்த நாடுகள் சில "மேற்கத்திய" மதிப்புகளை கண்டிப்பாக நிராகரிக்கின்ற போதிலும், அவை மகத்தான பொருளாதார வெற்றியைப் பெற்றுள்ளன. முரண்பாடு என்னவென்றால், மேற்கத்திய விழுமியங்களைப் பின்பற்றாமல், இந்த நாடுகள் வெற்றிகரமாக நவீனமயமாக்குவதைத் தொடர முடியுமா என்பதுதான்… இந்த நாடுகள் பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலை நோக்கி தங்கள் சொந்த பாதைகளைத் தொடர்ந்து பின்பற்றினால், எதிர்காலத்தில் மனித உரிமைகள், பாலினம் மற்றும் மதம் போன்ற பிரச்சினைகள் மீதான "ஆசிய" மதிப்புகள் "மேற்கத்திய" மதிப்புகள் இடையேயான மோதல்களை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

இதன் விளைவாக, உலகளாவிய அதிகார பரவல் முறையின் மாற்றம் மற்றும் கிழக்கு நோக்கி படிப்படியாக மாறுவது மற்றும் மேற்கத்திய முறைகளுக்கு தீவிர போட்டியாக ஆசிய ஆட்சி முறைகள் தோன்றுவது ஆகியவை சர்வதேச உறவுகளின் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பேசப்படும் ஒரு விஷயமாகும். நீண்ட காலமாக அவர்கள் இதை மனதில் கொண்டு உலக அமைப்பின் எதிர்காலத்தை சித்தரித்துள்ளனர்.

இந்த அதிகார மாற்றம் மற்றும் அதன் பரிமாணங்கள் மற்றும் விளைவுகள் பற்றிய துல்லியமான புரிதல், இந்த செயல்பாட்டில் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் நிலைப்பாடு பற்றிய சரியான விளக்கத்தைத் தொடர்ந்து, உலகில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சதுரங்கப் பலகையில் ஈரான் எங்கு இருக்கும் என்பதைத் தீர்மானிக்க, நாட்டின் உயர் மட்டங்களில் உள்ள முடிவெடுப்பவர்கள் மிகக்கவனமாக பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் டாக்டர். ரூஹுல் அமீன் ஸஈதி, இமாம் சாதிக் (அலை) பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பீடத்தில் உதவிப் பேராசிரியர் ஆவார்.

https://english.khamenei.ir/news/9279/The-rise-of-the-East-claim-or-fact