Contributors

Monday, October 4, 2021

வெளிநாட்டு சக்திகளை நம்பி பாதுகாப்பை ஒப்படைப்பது வெறும் "மாயை" - ஆயதுல்லா கமேனி

The good of the region lies in having independent, national armed forces & cooperation between neighboring countries


இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயித் அலி கமேனி பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் குறுக்கீடானது முரண்பாடு மற்றும் அழிவுக்கு ஆதாரமாக உள்ளது என்றும் பலம் பெறுவதற்கும் மற்றும் பகுத்தறிவை பயன்படுத்துவதற்கு ஈரானின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு பிராந்திய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆயத்துல்லா கமேனி கடந்த (3-10-2021) ஞாயிற்றுக்கிழமை இராணுவ அகாடமிகளின் பட்டதாரிகளுக்காக நடத்திய விழாவில், ஈரானின் ஆயுதப்படைகளை விழித்து ஆற்றிய மெய்நிகர் உரையில்  அவர்களை வெகுவாக பாராட்டினார், "வெளிப்புற மற்றும் உள் எதிரிகளின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக உண்மையான அர்த்தத்தில் அவர்கள் ஒரு தற்காப்பு கவசம்" என்று அவர்களை குறிப்பிட்டார்.


ஈரானின் இராணுவம் வடமேற்கு எல்லையில் இராணுவப் பயிற்சிகளை நடத்திய பின்னர், வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்தொல்லாஹியான், தெஹ்ரான் "தனது தேசிய பாதுகாப்புக்கு எதிரான சியோனிச ஆட்சியின் செயல்பாட்டை சகித்துக் கொள்ள மாட்டாது" என்று கூறியது, அண்டை நாடான அஜர்பைஜானுடன் இஸ்ரேலின் உறவுகளைக் குறிப்பிடுகிறது.

"பிராந்தியத்தில் வெளிநாட்டவர்களின் குறுக்கீடு முரண்பாடு மற்றும் சேதத்திற்கு நாசம் விளைவிப்பதாக உள்ளது. அனைத்து பிரச்சினைகளும் சம்பவங்களும் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் தீர்க்கப்பட வேண்டும் மற்றும் பிராந்தியத்தின் நாடுகள் அதிகாரம் மற்றும் பகுத்தறிவுக்காக ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆயுதப்படைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தலைவர் கூறினார்.

பிராந்தியப் படைகளால் பிராந்தியத்தில் பாதுகாப்பை வழங்க முடியும் என்று ஆயதுல்லா கமேனி கூறினார், சில அரசுகள் தங்கள் சொந்த தேசத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், வெளிநாட்டுப் படைகள் தலையிடவோ அல்லது பிராந்தியத்தில் அந்நிய இராணுவ இருப்பை அனுமதிக்கவோ கூடாது.

"ஈரானின் வடமேற்கில் உள்ள சில அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், வெளிநாட்டினரின் தலையீட்டுக்கு அனுமதி வழங்குவதைத் தவிர்த்து, தர்க்கத்துடன் தீர்க்கப்பட வேண்டும்" என்றும் தலைவர் கூறினார்.

"எங்கள் பிரியமான தேசத்தின் ஆயுதப்படைகள் எப்போதுமே பகுத்தறிவுடனும் சக்தியுடனும் இணைந்து செயல்படுகின்றன, மேலும் இந்த பகுத்தறிவு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதில் ஒரு காரணியாகவும் இருக்க வேண்டும். மேலும் யார் ஒருவர் சகோதரர்களுக்காக முதலில் ஒரு குழி வெட்டுகிறார்களா அவர்களே அதில் விழுவார்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்." அவர் மேலும் கூறினார்.

ஆயதுல்லா கமேனி பாதுகாப்பு என்பது ஈரானின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளின் அடிப்படை உள்கட்டமைப்பு" என்று விவரித்தார், வெளிநாட்டவர்களை நம்பாமல் பாதுகாப்பை அடைவது முக்கியம் என்றும் கூறினார்.

ஈரானிய தேசத்திற்கு பாதுகாப்பு என்பது சாதாரண விஷயம் என்று தலைவர் கூறினார், பல நாடுகள் - ஐரோப்பாவில் கூட - அதை அடைவதில் சிக்கல் உள்ளது, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலியா - வெளிப்படையாக அமெரிக்க அழுத்தத்தின் கீழ் - பிரான்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிறகு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் கட்டளையை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வழங்கியது.

"சில ஐரோப்பியர்கள் அமெரிக்ககாவின் இந்த நடவடிக்கையை (பிரான்சின்) முதுகில் குத்தும் செயலாகவும், ஒரு வகையில் ஐரோப்பா, நேட்டோ மற்றும் உண்மையில் அமெரிக்காவை நம்பாமல் சுதந்திரமாக அதனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்". அவர் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரினது ஒரு நேர்காணல் மேற்கோள் காட்டியே அவ்வாறு குறிப்பிட்டார்.

"ஐரோப்பாவை அமேரிக்கா எதிர்ப்பதில்லை என்றாலும் அமெரிக்காவை நம்பியிருப்பதால் நீடித்த பாதுகாப்பை அடைவதில் ஐரோப்பிய நாடுகள் தம்மில் குறைபாடு இருப்பதாக உணரும்போது, பிற வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் தங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கும் மற்ற நாடுகளின் நிலை தெளிவானது," என்று தலைவர் கூறினார்.

வெளிநாட்டு சக்திகளை நம்பி பாதுகாப்பை ஒப்படைப்பது வெறும் "மாயை" என்று ஆயதுல்லா கமேனி கூறினார்.

"இந்த மாயையால் பாதிக்கப்படுபவர்கள் விரைவில் அதன் பலனை அனுபவிப்பர், ஏனென்றால் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பு, யுத்தம் மற்றும் அமைதி ஆகியவற்றில் வெளிநாட்டினரின் நேரடி அல்லது மறைமுக தலையீடு ஒரு பேரழிவாகவே அமையும்."

ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பலம்வாய்ந்த அமெரிக்க துருப்புக்களை அவமானத்துடன் திரும்பப் பெற்றதை ஆயதுல்லா கமேனி சுட்டிக்காட்டி, இது அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று கூறினார்.

"அமெரிக்க இராணுவம் மற்றும் அது போன்ற நாடுகளின் வீராப்பு எல்லாம் ஹாலிவுட் படங்களில் வரும் ஒரு காட்சி போன்றதே, ஆப்கானிஸ்தானில் அவர்களின் உண்மையான தன்மை நன்கு வெளிப்பட்டது" என்று தலைவர் குறிப்பிட்டார்.

"தலிபான்களை வீழ்த்துவதற்காக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர், இந்த நீண்ட ஆக்கிரமிப்பின் போது, அந்நாட்டில் அவர்கள் பல படுகொலைகளையும் கொடுமைகளையும் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர், ஆனால் அனைத்து பொருள் மற்றும் மனித அழிவுக்குப் பிறகும், அவர்கள் அரசாங்கத்தை தலிபானிடம் ஒப்படைத்துவிட்டு ஓடினர் - இது அனைத்து நாடுகளுக்கும் ஒரு நல்ல பாடம்.

ஆயத்துல்லா கமேனி அமெரிக்க இராணுவத்தின் மீது கிழக்கு ஆசிய மக்களின் வெறுப்பையும் தொட்டுக் காட்டி , "அமெரிக்கர்கள் தலையிடும் இடங்களிலெல்லாம் மக்களால் வெறுக்கப்படுகிறார்கள்" என்றும் கூறினார்.

https://www.presstv.ir/Detail/2021/10/03/667755/Iran-Leader-foreign-threat-neighbors-armed-forces-


Saturday, October 2, 2021

ஈரானின் சுற்றுலா தங்க முக்கோணம்

Iran’s golden ‘triangle’ of tourism



பண்டைய நகரமான கெர்மன்ஈரானின் தங்க முக்கோண சுற்றுலா தளங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளஏனைய தலங்களாக இஸ்ஃபாஹான்ஷிராஸ் மற்றும் யஸ்த் உள்ளன.

பழங்காலத்திலிருந்தே கெர்மான் ஒரு கலாச்சார பெருமைமிக்க இடமாக இருந்து வந்துள்ளதுபாரசீக துணைக்கண்ட பழங்குடி மக்கள் கலாசாரத்துடன் கலக்கிறது.

இப்பிரதேசம் பஜார்-இ சர்தாசாரிஜபாலீஹ் டோம்கஞ்சாலி கான் பாத்ஹவுஸ்மாலேக் ஜாமேஹ் மசூதி மற்றும் ஷாஹத் பாலைவனம் போன்ற எண்ணற்ற வரலாற்றுத் தளங்கள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது.

இஸ்லாமிய குடியரசிற்கு முதன்முறையாக வருகை தருபவர்களுக்கு தங்க முக்கோணம் என்றழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் ஈரானின் கலாச்சார அடையாளத்தின் உருவகத்தை வழங்குகிறது.

Fபத்ஹ்-அபாத் சோலை



Fபத்ஹ்-அபாத் சோலை கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ளது. மற்றும் இங்கு பிக்லார் பெகி மாளிகை’, ‘பிக்லார்பேகி சோலை’, ‘Fபத்ஹ்-அபாத் சோலை போன்றன ஈரானின் தென்கிழக்கு நகரமான கெர்மானுக்கு வெளியே 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளன.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படிஇந்த கட்டிட முறை மஹான் என்ற இடத்தில் ஷாஸ்டே சோலையை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் பாரசீக சோலைகளின் ஒரு பகுதியாக இந்த சோலை இன்னும் பதிவு செய்யப்படவில்லைஎன்றாலும் இது கண்டிப்பாக பார்வையிடத்தக்க இடமாகும்.

அந்தி நேரத்தில் பிரபல்யமான இந்த சோலைக்குச் சென்றுஅரண்மனையின் முகப்பில் நேர்த்தியான சிவப்புஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களை காணும் உங்களை உண்மையிலேயே ஆச்சரியப்பட படவைக்கும்.

சோலையின் மத்தியில் அமைந்துள்ள குளத்தில் இந்த நிறங்களின் பிரதிபலிப்பைக் காணும் நீங்கள் பிரமித்துப்போவீர்கள். இந்த சோலை கஜார் வம்ச ஆட்சி காலத்தில் சுமார் 1255 (ஹிஜ்ரி-சூரிய) ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

Fபத்ஹ்-அபாத் நினைவு சோலை (Fathabad memorial garden) "ஃபசல் அலி கான் பிக்லர்பெய்கி" கெர்மானின் ஆட்சியாளராக இருந்தபோது நிர்மாணிக்கப்பட்டது. அதனால்தான் இது Biglarbeigi Garden என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாளிகை அதன் தரை தளம் மற்றும் சுற்றி கவர்ச்சிமிகு நடைபாதைகளைக் கொண்டுள்ளதுஅதேசமயம் அதனது பிரம்மாண்டமான இரண்டாவது மாடிஅருமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அந்நாட்களில், Fபத்ஹ்-அபாத் கனாத் எனப்படும் பண்டைய பாரசீக நீர் வழங்கல் முறைகெர்மான் நகரத்திற்கு அவசியமான நீரை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்தது. இதன் மூலமாகவே, ‘ஃபத் அலி சோலை மற்றும் மாளிகை அவற்றுக்குத் தேவையான தண்ணீரை பெற்றுக்கொண்டன.



தோட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பிரதானிகள் அமர்ந்திருக்கும் பகுதிஇரண்டு பெரிய செவ்வகக் குளங்கள் அதன் பிரமிக்க வைக்கும் முகப்பை பிரதிபலிக்கிறது. கட்டிட அமைப்பு முழுக்க முழுக்க செங்கற்களிலான மற்றும் மண் சாந்தினால் ஆனது. எளிமையான பொருட்களால் பண்டைய கட்டடக் கலைஞர்களால் இதுபோன்ற நுட்பமான கட்டிடங்களை எவ்வாறு அமைக்க முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

140,000 சதுர மீட்டர் பரப்பளவு சோலையின் நடுவில் 4000 சதுர மீட்டர் கொண்ட இந்த கட்டமைப்பும் அமைந்துள்ளது. சோலைக்கான நீர் Fபத்ஹ்-அபாத் கனாட் என்ற நிலத்தடி நீர்வழங்கல் மூலம் வழங்கப்பட்டது. கட்டிடத்தின் முக்கிய பகுதி இரண்டு இறக்கைகள் கொண்ட மத்திய கட்டிடம் ஆகும்இது சின்னத்தின் முக்கிய மையமாகும். மத்திய கட்டிடத்தின் கிழக்கில் நான்கு பருவ மாளிகை என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடமும் உள்ளது.

ஃபசல் அலி கான் பிக்லர்பெய்கியின் ஆட்சிக்கு பிறகுஇந்த அழகான , Fபத்ஹ்-அபாத் கார்டன் மற்றும் மாளிகையை, நுஸ்ரத் அல் மம்ளெக் I & II மன்னர்கள் காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.



பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு மெதுவாக உருக்குலைந்து வந்த போதிலும்சமகால முயற்சிகள் ஊடாக இந்த பொக்கிஷத்தை முழுமையாக மீட்டெடுத்துள்ளனர். இப்போதெல்லாம்சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள், Fபத்ஹ்-அபாத் கார்டன் மற்றும் மாளிகையின் நேர்த்தியான சிறப்பைக் கண்டு வியக்கின்றனர் எனலாம். மேலும் படிக்க

https://www.itto.org/iran/attraction/FathAbad-Garden-kerman/


ஷிராஸ்



2000 ஆண்டுகளுக்கும் மேலாக பாரசீக கலாச்சாரத்தின் மையப்பகுதியாக கொண்டாடப்படும் ஷிராஸ்தலைமுறை தலைமுறையாக பரவிய கல்விகவிதை மற்றும் கைவினைத் திறன்களுக்கு பேர் போன இடமாகும். இது இடைக்கால இஸ்லாமிய உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருந்தது மற்றும் சாண்ட் வம்சத்தின் போது (1751-1794) ஈரானின் தலைநகராகவும் இருந்தது. ஷிராஸ் ஈரானின் நூல்களுக்கான தலை நகர் என்றும் 2020 இல் பெயரிடப்பட்டுள்ளது.

யஸ்த்


ஜூலை 2017 இல்யஸ்த் மாகாணத்தின் தலைநகரான யஸ்த் நகரத்தின் வரலாற்று அமைப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக பெயரிடப்பட்டது. இது பொதுவாக தங்குவதற்கான ஒரு மகிழ்ச்சியான இடம் அல்லது அதன் அனைத்து பார்வையாளர்களாலும் "தவறவிடக்கூடாத" இலக்கு என்று குறிப்பிடப்படுகிறது. இது புதுமையான பேட்கிர்கள் (காற்று உள்வாங்கி)இயற்கை அழகு கொண்ட  பாதைகள் மற்றும் பல இஸ்லாமிய மற்றும் ஈரானிய நினைவுச்சின்னங்களைக் கொண்ட மண் செங்கல் வீடுகளால் கண்கவர் நகர நிலப்பரப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ஃபஹான்



ஒரு வளமான கலாசாரத்தில் ஊறிப்போனஇஸ்ஃபஹான் ஒரு காலத்தில் ஈரானில் சர்வதேச வர்த்தகம் மற்றும் இராஜதந்திரத்தின் பாதையாக இருந்ததுஇப்போது அது ஈரானின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இணையற்ற இஸ்லாமிய கட்டிடங்கள்சந்தைகள்அருங்காட்சியகங்கள்பாரசீகத் தோட்டங்கள்மற்றும் மரங்கள் நிறைந்த சோலைகள்அரண்மனைகள் போன்ற பல கட்டடக்கலை அதிசயங்களால் நிரம்பிய இஸ்ஃபஹான்பலரின் கருத்துப்படிஅதன் பிரம்மாண்ட சந்தையில் தொலைந்து போதல்அழகான தோட்டங்களில் உலா வருதல் மற்றும் மக்கள் சந்திப்பு இடங்கள் என பல அம்சங்கள் நிறைந்து உள்ளன. இஸ்ஃபாஹான் நீண்ட காலமாக "நெஸ்ஃப்-இ-ஜஹான்" (உலகின் பாதி) என்று அழைக்கப்படுகிறதுஇங்கு விஜயம் செய்வது என்பது உலகின் பாதியை பார்ப்பதற்கு சமனாகும்.

https://www.tehrantimes.com/news/465067/Kerman-added-to-Iran-s-golden-triangle-of-tourism


Tuesday, September 28, 2021

இமாம் ஹுசைனின் ஷஹாதத் அநீதி, கொடுங்கோன்மை, ஆணவத்திற்கு எதிரான ஓர் எழுச்சி

 America cannot confront Husseini ideology: political activist



அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளிகளினாலோ ஹுசைனி இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்கொள்ள முடியாது என்று கூறுகிறார் ஒரு லெபனான் அரசியல் ஆர்வலர்

"எதிர்ப்பு இயக்கங்கள் ரசூலுல்லாஹ்விடம் இருந்து கற்றுக்கொண்ட உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் இயங்குகின்றன, அல்லாஹ் அவரையும் அவரது குடும்பத்தினரையும், மற்றும் தூய்மையான இமாம்களையும், பொருந்திக்கொள்ளட்டும்" என்று ஹுசைன் அல்-திரானி டெஹ்ரான் டைம்ஸிடம் கூறினார்.

"எதிர்ப்பு சித்தாந்தத்தை எதிர் கொள்வதென்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை; அவர்களுக்கு தார்மீக சிதைவு மற்றும் சமூக மற்றும் குடும்ப சிதைவு தவிர வேறு எதுவும் இருக்கப்போவதில்லை” என்று அல்-திரானி குறிப்பிடுகிறார்.

இருபது வருடப் போருக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியது, ஒரு நாடு எதிர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒற்றுமையாக செயல்பட்டால் இராணுவ ஆதிக்கத்தால் போர்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது என்பதையே இது உணர்த்தியுள்ளது.

இப்போது பல அரசியல் ஆய்வாளர்கள் ஈராக் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதை எதிர்பார்க்கலாம் என்று ஆரூடம் கூறுகின்றனர்.

லெபனான் ஆர்வலர் வாதிடுகையில், மக்களின் சக்திக்கு முன்னால் அவர்களது இராணுவ சக்தி தோல்வியை தழுவியதையே அது நிரூபித்தது, அமெரிக்கர்கள் தாங்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தான் ஆகும், அமெரிக்க ராணுவம் வாலை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடுவதை நாம் கண்டோம்" என்று லெபனான் ஆர்வலர் கூறுகிறார்.

அல்-திரானி மேலும் கூறுகையில், "முன்னர், லெபனானிலிருந்தும் அமெரிக்கப் படைகள் சத்திய போராளிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஒரு காட்சியை நாங்கள் கண்டோம். விரைவில் சிரியா, ஈராக் மற்றும் யேமனில் இருந்து தப்பித்து ஓடுவதையும் நாம் காண்போம்".


அவரின் முழுமையான நேர்காணல் பின்வருமாறு:

கே: இஸ்லாமிய உம்மத்தின் அரசியல் வாழ்க்கையில் தியாகி இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஷஹாதத் நினைவு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

: இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்), அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தோழர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் தேதி ஹிஜ்ரி 61 கர்பலாவில் நடந்த தியாகம் மனித வரலாற்றில் இன்றுவரை மிகப்பெரிய சோக பேரழிவாகும்.

இமாம் அல்-ஹுசைனின் ஆளுமை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு சிறப்புப் பாடத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் இறை தூதரின் பேரனாக இருந்தார், "ஹுசைன் என்னைச் சேர்ந்தவர், நான் ஹுசைனை சேர்ந்தவன்". என்று ரசூலுல்லாஹ் கூறிய ஹதீஸ் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.

மேலும், அவரது பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் சொர்க்கது  இளைஞர்களின் தலைவர்களாகும்."

றஸூலுல்லாஹ்வின் மற்றொரு ஹதீஸின் படி,: "அல்-ஹசன் மற்றும் அல்-ஹுசைன் ஆகிய இருவரும் இமாம்கள் ....." அவர்கள் இமாம் அலியின் புத்திரர்கள்; இறைவனின் அமைதி அவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும்

எனவே, இமாம் ஹுசைன், (அலை), புரட்சியின் சின்னமாக இருந்தார், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார், மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் புகலிடமாக இருந்தார். அவர் எங்களுக்கு சத்திய போராட்டத்தின் பாதையைக் காட்டினார் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மனசாட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கே: ஊடகங்கள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் பெயர், சுன்னிகள் மற்றும் ஷியாக்கள் என்ற வேறுபாடின்றி, முஸ்லிம்கள் மனதில் எப்படி படிந்தது?

ப: இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் ஞாபகார்த்த துக்க நிகழ்ச்சிகள், அது அவரது தியாகத்தின் ஆரம்ப காலம் முதலே நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்கள் மனதில் அவரது நினைவை புதுப்பித்து வந்தது எனலாம்.

மற்றொரு அம்சம் என்னவெனில் இமாம் ஹுசைனின் சகோதரி ஸைனப் ஆகும், அவர் இமாம் அலீ பின் அல்-ஹுசைன் ஸெய்ன் அல்-ஆபிதீன் (அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாவதாக) அவர்களுடன் அப்போதைய கலீபாவின் அரண்மனைக்கு வந்தபோது அவரது உறுதியான எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

இந்த இருவரும் யஸீதின் அநீதியையும், இமாம் ஹுசைன் (அலை) அவர்களது குடும்பத்துக்கு எதிரான அடக்குமுறையையும் பரப்ப ஊடகப் பாத்திரத்தை வகித்தனர், யஸீதின் அரண்மனையில் அவர்கள் ஆற்றிய உரை சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளது.

அரண்மனையில் அப்போது கூடியிருந்த மக்கள் றஸூலுல்லாஹ்வின் பேரனுக்காக கதறி அழ ஆரம்பித்தபோது, தனது ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என்று யஸீத் அச்சமடைந்தார்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு தேசியங்கள் மற்றும் இனங்களுக்கிடையே வருடம் தவறாது ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ஹுசைனி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் இந்த புரட்சி உணர்ச்சி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், ஊடகங்களிலும் நிலைத்திருப்பதற்கான முக்கிய ஆதாரமாக இருந்து வருகின்றன.

கே: பாலஸ்தீனம் மற்றும் லெபனான் முதல் யெமன் வரையிலான பிராந்தியத்தில் போராட்ட இயக்கங்களில் ஹுசைனி எழுச்சியின் தாக்கம் என்ன? இமாம் ஹுசைன் நிறுவிய திசையிலிருந்து போராளிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் எவை

. இமாம் ஹுசைனின் (அலை) அவர்களின் எழுச்சி மற்றும் அநியாயத்திற்கு எதிரான அவரது புரட்சி, சுதந்திரப் புரட்சியாளர்கள் தங்கள் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட போராளிகள் சரியான பாதையை வெளிச்சமிட்டு காட்டியது என்பதில் சந்தேகமில்லை.

லெபனானில், இமாம் மூசா அல்-சதர் லெபனான் மக்களை  ஆக்கிரமிப்பு மற்றும் சியோனிச ஆட்சியை எதிர்த்து போராடுவதற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் போக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் இமாம் ஹுஸை (அலை) அவர்களது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் இருந்து அணிதிரட்டினார்.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களின் புரட்சியால் அவர் ஈர்க்கப்பட்டார், அதை ஓர் உதாரண பாதையாக மற்றும் நடைமுறை அணுகுமுறை என அவரது அனைத்து ஜிஹாதி மற்றும் அரசியல் இயக்கங்கள் மற்றும் நோக்குநிலைகளிலும் ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு, எதிர்ப்புப் போக்கு தொடர்ந்தது மற்றும் இன்றுவரை சியோனிச எதிரியுடன் அனைத்து முனைகளிலும் பெரும் வெற்றிகளை அடைந்து வருகிறது.

இனவெறி, பயங்கரவாத அமெரிக்க நிர்வாகம் மற்றும் பிராந்தியத்தில் அதன் கூலிப்படையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட உலகளாவிய திமிர் முன்னணியால் உருவாக்கப்பட்ட புதிய தக்பிரி எதிரியுடன் ஒரு எதிர்ப்பு முன்னணி வெற்றிகரமாக போராடி வருகிறது.

லெபனான், பாலஸ்தீனம், யெமன், ஈராக் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் சத்திய போராளிகள் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளின் போது எழுப்பிய முழக்கங்களை பிரதிபலிக்க போதுமானது, குறிப்பாக அவர்களின் நிரந்தர முழக்கம்:

இப்னு ஸியாத் (இமாமின் எதிரி) எங்களுக்கு இரண்டு தேர்வுகளை முன்வைத்தான்; போர் அல்லது சரணடைதல் எனும் அவமானம். ஆனால் அவமானங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை, ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவவனாலும் அவனுடைய தூதராலும், துஷ்டனுக்கு கீழ்ப்படிதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இமாம் ஹுசைன் (அலை) அவர்களது இயக்கத்தால் நாம் கற்றுக்கொடுக்கொண்ட பாடம் இதுதான்: கொடுங்கோலர்களுக்கு அடிபணிய ஒப்புக்கொள்ள வேண்டாம், சரணடைய வேண்டாம்; அநீதி, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை பயமின்றி எதிர்க்க வேண்டும். தோற்கடிக்கும் வரை போராட வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் வெற்றியடையும்வரை போராடவேண்டும்; அதில் நாம் உயிர் தியாகம் செய்ய நேரிட்டாலும் சரியே. இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நித்திய வாழ்க்கையில், மரியாதை மற்றும் கண்ணியத்தை அடைவோம்.

கே: போராட்ட முன்னணியின் ஹுசைனி சித்தாந்தத்தை எதேச்சதிகார அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு மூலம் எதிர்கொள்ள முடியுமா? இமாம் ஹுசைன் கைக்கொண்ட வழிகள் மக்கள் மீதான "மென்மையான செல்வாக்கு" என்று விளக்கப்படலாம், ஏனெனில் இமாம் அவர்களின் போதனைகள் மக்களின் இதயங்களிலும் சிந்தனையிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது. அத்தகைய செல்வாக்கை அமெரிக்கா எதிர்கொள்ள முடியுமா?

. ஹுசைனி சித்தாந்தம் என்பது முஸ்லிம்களின் இதயங்களில் ஆழமாகவும் உறுதியாகவும் வேரூன்றியுள்ள ஒரு நம்பிக்கை ஆகும். உலகில் எந்த ஒரு சக்தியாலும் அத்தகைய நிறுவப்பட்ட நம்பிக்கையை எதிர்க்கவோ அல்லது தோற்கடிக்கவோ முடியாது, அது இராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சரி.

ஆமாம், இந்த உண்மையான ஹுசைனி மற்றும் புரட்சிகர சிந்தனையைச் சேர்ந்தவர்களை மதிப்பிழக்கச் செய்வதற்காக அமெரிக்க நிர்வாகம் ஆராய்ச்சி மையங்களுக்காகவும் மூலோபாய மற்றும் ஊடக ஆய்வுகளுக்காகவும் ஒரு பெரிய பட்ஜெட்டை வருடாந்தம் செலவிடுகிறது. போராட்ட இயக்கங்களுக்கு எதிராக இராணுவம், உளவுத்துறை மற்றும் ஊடகப் போரைத் தொடர அது தயங்காது என்பது உண்மையே.

போராட்ட இயக்கங்கள் உண்மையான இஸ்லாமிய சிந்தனையுடன் நிறுவப்பட்டுள்ளன, இது இறைதூதரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மற்றும் தூய இமாம்களின் வழிகாட்டல் அடிப்படையைக் கொண்டுள்ளது, இவர்களது இந்த போராட்ட சித்தாந்தத்தை எதிர்கொள்வது என்பது அமெரிக்கா அல்லது வேறு எந்த சக்தியாலும் சாத்தியமில்லை.

அவர்களது இராணுவ சக்தி அனைத்தும் உறுதிகொண்ட  மக்களின் முன்னிலையில் தோல்வியை தழுவும் என்பதையே சரித்திரம் நிரூபித்தது, அமெரிக்கர்கள் கடைசியாக சந்தித்த தோல்வி ஆப்கானிஸ்தானில் ஆகும், அங்கிருந்து அவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு ஓடும் நிலை ஏற்பட்டது.

முன்னதாக, லெபனானில் இதுபோன்ற காட்சியை நாங்கள் கண்டோம், அமெரிக்க துருப்புக்கள் போராட்ட முன்னணியின் தாக்குதல்களுக்குப் பிறகு தப்பி ஓடியது, சிரியா, ஈராக் மற்றும் யெமனில் இருந்தும் மிக விரைவில் அவர்கள் தப்பி ஓடுவதை நாங்கள் விரைவில் காண்போம்.

கே: அர்பஈன் (இமாம் ஹுசைன் (அலை) அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட 40 ஆம் நாள்) அணிவகுப்புகள் எதிர்வரும் காலங்களில் (அதாவது இஸ்லாமிய நாடுகளில் கொரோனா தொற்றுநோய் அடங்கிய பிறகு) மற்ற நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் நீடிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ப. ஈராக்கிலும் மற்றும் ஈராக்கிற்கு வெளியிலும், கொரோனா தொற்றுக்கு முன், அர்பஈன் அணிவகுப்புகளில் மக்கள் பங்கேற்றதன் அடிப்படையில், நாங்கள் கண்ட காட்சி எமது கற்பனை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது; கர்பலாவில் அர்பீன் அணிவகுப்பில் 25 மில்லியன் யாத்ரீகர்களுக்கும் அதிகமானோரை பங்கேற்றனர். அது ஒரு மானுட சூறாவளி போல் இருந்தது.

இந்த நிகழ்வை மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் அணிவகுப்பை கண்ட வெளிநாட்டு ஊடகங்கள் பிரமித்து, வாயடைத்து போகின்றன. பிறகு, இமாம் ஹுசைன் மீதான இந்த அன்பு எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை ஆராய தலைப்படுகின்றன.

அதன் செய்தி என்னவென்றால் அது ஒரு புரட்சி மற்றும் அநீதி, கொடுங்கோன்மை மற்றும் ஆணவத்திற்கு எதிரான எழுச்சி என்பதைத் தவிர வேறில்லை.

இந்த கர்பலா அணிவகுப்பில் ஷிஆக்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான சன்னிகளுடன் கிறிஸ்தவர்களும் பங்கேற்பதையும் நாங்கள் கண்டோம், இந்த அணிவகுப்பில் ஷியாக்களின் பிரசன்னம் மிகப்பெரியதாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பிரிவுகுரியது என்று கூற முடியாத, உலகளாவிய செய்தி அதில் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

https://www.tehrantimes.com/news/465443/America-cannot-confront-Husseini-ideology-political-activist

தமிழில்: தாஹா முஸம்மில் 



Wednesday, September 22, 2021

போரின் போது இமாம் கொமைனி கடைபிடித்த இஸ்லாமிய மனிதாபிமான சட்டம்

The place of “humanitarian law” in Imam Khomeini’s worldview


ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது அண்டை நாடான ஈராக்கின் முழு அளவிலான படையெடுப்பு 22 செப்டம்பர் 1980 இல்  தொடங்கியது. இந்த போரின் போது அனைத்து வல்லரசுகளும், சிரியா, லிபியா தவிர, சகல அரபு நாடுகளும் சதாமிற்கு பக்கபலமாக இருந்தன.

மனித வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து, மோதல்கள் மற்றும் போர்கள் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாகும் மேலும் கொள்ளை, கொடூரமான படுகொலைகள் மற்றும் பெண்களை மற்றும் குழந்தைகளை பல்வேறு காலகட்டங்களில் சிறைபிடிப்பது போன்ற நிகழ்வுகள் மற்றவர்களின் உரிமைகளை மீறுவது மற்றும் மனிதாபிமான கொள்கைகளை உதாசீனம் செய்வது ஆகியவை வரலாற்றில் தொடர்கதையாக இருந்துவருகின்றன.

துரதிருஷ்டவசமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் இராணுவ உபகரணங்களின் வளர்ச்சியுடன், அடக்குமுறை மற்றும் கொடுங்கோலர்கள் அதைப் பயன்படுத்துவதில் எந்த வரம்புகளும் இல்லை என்றாகிவிட்டது, ஏனென்றால் எதிரியை எந்த முறையிலாவது, எந்த விலை கொடுத்தாவது முற்றிலுமாக அழிப்பதே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மனிதாபிமான சட்டமானது போர்களில் காட்டுமிராண்டித்தனத்தையும் கொடுமையையும் குறைக்கும் முயற்சியில் சில கொள்கைகளை உருவாக்க வழி வகுத்தது என்பது உண்மையே. இந்த ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இடையே விரோதங்கள் மற்றும் போர்களின் நோக்கம் மற்றும் விளைவுகளை குறைக்கவும் உதவியது.

இக்கட்டுரையானது இமாம் கொமைனியின் சிந்தனையில் கோட்பாடு மற்றும் நடைமுறையில் மனிதாபிமான சட்டத்தின் கொள்கைகளை விவாதிக்கவும் ஆராயவும் முயற்சிக்கிறது. ஈரானுக்கு எதிராக சதாமினால் திணிக்கப்பட்ட 8 வருட போரின் போது இமாம் கொமெய்னியின் தலைமைத்துவதிற்கு இவ்விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

மனிதாபிமான சட்டத்தின் கருத்து, குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள்

சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பது மோதல்களின் விளைவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கும் கொள்கைகளின் தொகுப்பாகும். சர்வதேச சட்டத்தின் இந்த அம்சம் மோதல்களில் ஈடுபடாத அல்லது போர்க்களத்தை விட்டு வெளியேறியவர்களின் உரிமைகளை காக்கிறது, மேலும், இராணுவ உபகரணங்கள் மற்றும் போர் முறைகளைப் பயன்படுத்துவதில் வரம்புகளை விதிக்கிறது. சர்வதேச மனிதாபிமான சட்டம் தனிநபர்கள் மற்றும் நாடுகளின் ஆயுத மோதல்களின் போது உரிமைகள் மற்றும் இவ்வாறான மோதல்களின் போது அவர்களின் கடமைகள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. மேலும், ஆயுத மோதல்களின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதன் மூலமும், சில ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதன் மூலமும், இது இராணுவத்தையும் பொதுமக்களையும் மற்றும் ஆயுத மோதல்களில் இராணுவமற்ற இலக்குகளையும் காப்பதை ஆதரிக்கிறது.

சர்வதேச மனிதாபிமான சட்டம் முக்கியமாக தனிநபர்களை காக்கும் கொள்கை விடயத்தில் கவனம் செலுத்துகிறது. அதன் இலக்கை பாரம்பரிய மற்றும் நவீனமாக வகைப்படுத்தலாம்:

அ) போரின் போது மனித துன்பங்களைக் குறைத்தல் மற்றும் போரில் சில கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துதல் அல்லது தடை செய்தல் ஆகியவை பாரம்பரிய குறிக்கோள்;

ஆ) மறுபுறம், மனிதர்களின் உயர்ந்த நிலை மற்றும் கண்ணியத்தை மதிப்பது மற்றும் போர்க்குற்றவாளிகளைப் பின்தொடர்வது, விசாரணைக்கு உட்படுத்துவது மற்றும் தண்டிப்பது, நவீன குறிக்கோள் ஆகும்.

மறுபுறம், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கண்ணோட்டத்தில், பின்வரும் கொள்கைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாகும்.

மனிதாபிமான நடத்தை மற்றும் பாரபட்சம் காட்டாமை

இந்த கோட்பாட்டின் படி, அனைத்து மனிதர்களும் மனிதாபிமானத்துடன், எந்த தேசியம், இனம், மதம் போன்ற பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். இங்கு "மக்கள்" என்ற வார்த்தையில் சண்டையில் பங்கேற்க முடியாத அல்லது விரும்பாத அனைவரும் அடங்குவர்.

இராணுவத் தேவை

இராணுவத் தேவை என்பது எந்தவொரு இராணுவ தாக்குலையும் அல்லது நடவடிக்கையும் நியாயமான, ஏற்றுக்கொள்ளத்தக்க இராணுவ காரணங்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நியாயமின்றி செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, போர்க்களத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தல்

மட்டுப்படுத்தல் கொள்கையின் மிக முக்கியமான விளக்கம் என்னவென்றால், தேவையற்ற அல்லது அதிகப்படியான அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை மனிதாபிமான சட்டம் தடைசெய்துள்ளது.

 வேறுபாடு காணல்

பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு காணல்  சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை மற்றும் முழுமையான கொள்கையாகும்.

பரிமாணம்

இந்த கொள்கையின்படி, "சாத்தியமான எந்த வழியிலும்" எதிரி மீது வெற்றி பெறுவதை ஏற்க முடியாது. எனவே, போரை வழிநடத்துவதில், மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர் ஓர் இராணுவத் தாக்குதலில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரடி மற்றும் முழுமையான இராணுவ நன்மைகளுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான எதிர்பாரா  துன்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

இஸ்லாமும் மனிதாபிமான சட்டமும்

புனித குர்ஆனின் படி, இஸ்லாமிய போதனைகள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன, பூமியில் ஒரு நபர் எங்கு வாழ்கிறார் மற்றும் எந்த இனம் அல்லது தேசியத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. இதனடிப்படையில், ஆரம்பத்தில் இருந்தே, இஸ்லாம் அமைதியான வாழ்க்கை என்ற திட்டத்தை கொண்டு வந்தது, மற்றும் போரை விடுத்து மற்ற நாடுகளுடனான முஸ்லிம்களின் உறவுக்கு அமைதியை அடிப்படையாக அமைத்தது. அதன்படி, அமைதி மற்றும் பாதுகாப்பின் மார்க்கமான இஸ்லாம் போரை ஒரு வேண்டப்படாத நிகழ்வாகவே கருதுகிறது. ஆகவே இது மற்றவர்களுடனான உறவின் அடிப்படையாக அமைதியையும் அமைதியான சகவாழ்வையும் அமைத்துள்ளது.

முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது அல்லது ஆக்கிரமிப்பாளர்கள் எங்களது சுதந்திரம் மற்றும் இஸ்லாமிய ஆட்சியை அச்சுறுத்தும்போது மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஆக்கிரமிப்புக்கு எதிராக பாதுகாப்பது அவசியமானது மற்றும் கட்டாயமானது.  இந்த நோக்கத்திற்காக, இஸ்லாம் நீதி, கருணை, மற்றும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பேணுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவான திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. எதிரிகளுக்கு எதிரான வரம்புகள் என்னவென்பது குர்ஆனில் மிகவும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளன. மேலும், போரின் போது நடந்துகொள்ளவேண்டிய முறைகள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு இடையிலான வேறுபாடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களிடம் சகிப்புத்தன்மை போன்ற மனிதாபிமானக் கருத்தில் அவர் மிகவும் கவனம் செலுத்தினார்.

அவர் போர்க்களத்துக்கு ஆயுதப்படைகளை அனுப்பிய போதெல்லாம் போரில் மனிதாபிமான கொள்கைகளை கடைபிடிக்க பரிந்துரைத்தார்.

பாத் சோஷலிச ஆட்சியினால் ஈரான் மீது திணிக்கப்பட்ட போரில் மனிதாபிமான சட்டம் மீறப்பட்டது பற்றிய சுருக்கமான பார்வை

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் மீதான படையெடுப்பில், ஈராக் இராணுவம் தெற்கு ஈரானின் பல எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களை ஆக்கிரமித்து, அவற்றில் சிலவற்றில் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ முடியாத வகையில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. பாத் சோஷலிச ஆட்சி போரை போர்க்களத்திற்கு மட்டுப்படுத்தவில்லை மற்றும் அஹ்வாஸ் மற்றும் கெர்மன்ஷா போன்ற நகரங்களில் குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் பல முறை தாக்கியது. தவிர, மக்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான பள்ளிகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறை வசதிகளை அளித்தது மட்டுமல்லாமல் உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்களையும் ஈராக்கிய ராணுவம் மேற்கொண்டது. இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதானது ஈரானுக்கு எதிராக பாத் சோஷலிச ஆட்சி எடுத்த மற்றொரு மனித-விரோத நடவடிக்கை ஆகும்; இந்த பாத் சோஷலிச ஆட்சி ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது. அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஈராக்கிற்கு இந்த சட்டவிரோத ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. ஐநா நிபுணர்களின் அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்தின. ஈராக்கிய பாத் சோஷலிச ஆட்சி இரசாயன குண்டுகளை பயன்படுத்தியது ஈரானிய போராளிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் சர்தாஷ்ட் போன்ற எல்லை நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு எதிராகவும் அவற்றை பயன்படுத்தியது.

மனிதாபிமான கொள்கைகள் மற்றும் விதிகள் குறித்த இமாம் கொமெய்னியின் பார்வை

இமாம் கொமெய்னி தனது அறிக்கைகள் மற்றும் உரைகளில் "மனிதாபிமான சட்டம்" என்ற வார்த்தையை நேரடியாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், திணிக்கப்பட்ட 8 வருட போரின்போது அவர் நாட்டை வழிநடத்திய முறையானது மனிதாபிமான கொள்கைகள் மற்றும் நியமங்களுக்கு முற்றிலும் ஒத்துப்போகிறது.

பின்வரும் பிரிவில், இமாம் கொமைனியின் சிந்தனை மற்றும் உலகக் கண்ணோட்டத்தில், மற்றும் நடைமுறை கோட்பாட்டில் இந்த கொள்கைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை விவாதிக்க உள்ளோம்.

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையில் கவனம் செலுத்துதல்

பாரபட்சமின்றி மனிதாபிமான நடத்தையை கவனிப்பது இஸ்லாத்தின் மிக அடிப்படையான மனிதாபிமான கொள்கைகளில் ஒன்றாகும். இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், மன்னிப்பு, இரக்கம் மற்றும் மனிதாபிமான-இஸ்லாமிய நடத்தை ஆகியவை எதிரி படைகளுடன் மோதலில் காட்டவேண்டிய அடிப்படை நெறிமுறை மதிப்புகளில் ஒன்றாகும், அவற்றை ஆயுதப்படைகள் கவனத்திகொள்ள வேண்டும். உதாரணமாக, இது தொடர்பாக அவர் கூறியதாவது:

"சதாம் மற்றும் அவரைப் பின்பற்றி போர்க்களத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரணான வகையில் பழிவாங்க இந்த அதிகாரத்தை பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.... நாம் உயிர் தியாகம் மற்றும் இறப்பு வரை மனிதாபிமான கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும்."

ஆயுத மோதல்களில் ஒடுக்குமுறையை நிராகரித்தல்

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (புனித குர்ஆன் 2:190) என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. மற்றொரு வசனத்தில், போர்க்களத்தில் உள்ள முஸ்லிம் போராளிகள் நீதி மற்றும் அறநெறியை மறந்துவிடக் கூடாது என்று புனித குர்ஆன் எச்சரிக்கிறது: "முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்." (புனித குர்ஆன் 5:8). இந்த இஸ்லாமிய போதனையின் அடிப்படையில் மற்றும் ஈரானிய நகரங்கள் மீது ஈராக் தாக்குதல் நடத்தி பொதுமக்கள் கொல்லப்பட்ட பிறகும் கூட, போராளிகளை நோக்கி உரையாற்றுகையில், இமாம் கொமைனி கூறினார்: உங்கள் நகரங்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி அழிந்தும், உங்கள் அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்டு இருப்பினும் பழிவாங்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் ... ஒரே ஒரு தோட்டாவை அவர்களது நகரங்களை நோக்கி [இராணுவ இலக்குகளுக்கு அன்றி] குறிவைப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள்.”

குடிமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டின் கொள்கை

இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில், போரில் பங்கேற்காதவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில், இமாம் கொமெய்னி பொதுமக்களைத் தாக்குவதைத் தடைசெய்தார் மற்றும் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையே உள்ள  வேறுபாட்டை சுட்டிக் காட்டினார்: "ஈரானின் ஆயுதப் படைகளின் தளபதிகளுக்கும் ஈராக்கிற்கும் இடையே வேறுபாடு உள்ளது, வித்தியாசம் என்னவென்றால் ஈரானிய தளபதிகள் இஸ்லாத்தை மனதில் இருத்தி இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் பாதுகாப்பற்ற நகரங்களைத் தாக்கமாட்டாங்கள், சந்தையில் உள்ள மக்களை அல்லது வேறு எங்கும் உள்ள மக்களை, நிர்கதிக்குள்ளான ஏழைகளையும் தாக்க மாட்டார்கள் ... ஆனால் ஈராக் தளபதிகள் தங்கள் குண்டுகளை நகரங்களை நோக்கி வீசுகிறார்கள்.

இமாம் கொமைனியின் இந்த உரை பொதுமக்கள் மற்றும் போராளிகள் மற்றும் இராணுவ மற்றும் இராணுவம் அல்லாத இலக்குகளுக்கு இடையே வேறுபாட்டை அறிந்துகொள்ளும் தேவையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் சுட்டிக்காட்டுகிறது.

ஆயுதங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு

போர்க்களத்திற்கான ஒரு மனிதாபிமான கட்டமைப்பை இஸ்லாம் ஒரு பொது மற்றும் இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் வரையறுத்துள்ளது. அதன்படி போரொன்றில் கொல்வது நியாயமானதாக இருந்தாலும் கூட, எந்த ஆயுதத்தையும் பயன்படுத்த ஒரு முஸ்லிம் தளபதிக்கு சுதந்திரம் இல்லை; போரில் இரசாயன மற்றும் நச்சு ஆயுதங்கள் உட்பட சில ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இமாம் கொமெய்னி உலகில் அழிவு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு பற்றிய தனது கவலையை வெளிப்படுத்தி, அவற்றை இன்றைய உலகின் அவலங்களில் ஒன்றாக கருதி, இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு எதிராக நிற்க சிந்தனையாளர்களையும் நாடுகளையும் தூண்டினார். ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஈராக் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக ஈரான் ஒருபோதும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. இமாம் கொமெய்னி இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஹராமாக அறிவித்தார் (மத ரீதியாக தடைசெய்யப்பட்டது). அமெரிக்க பத்திரிகையாளர் கரேத் போர்ட்டர் தனது "தயாரிக்கப்பட்ட நெருக்கடி: ஈரான் அணுசக்தி அச்சத்தின் சொல்லப்படாத கதை" என்ற தனது நூலில், "ஈரான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்ததற்கான உண்மையான காரணம்… இமாம் கொமெய்னி இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அதை தடை செய்திருந்தார் என்பதாகும்" என்று எழுதியுள்ளார்.

இஸ்லாமியப் புரட்சியின் தற்போதைய தலைவரான இமாம் கமேனி, மனித நேயமற்ற பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அதே கொள்கையையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது; இந்த ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் குவிப்பு ஆகியவற்றை அவர் ஹராமாக (தடைசெய்யப்பட்டதாக) கருதுகின்றார். இது சம்பந்தமாக, அவர் ஒருமுறை இவ்வாறு கூறினார், "அணு ஆயுத பயன்பாடு பரவலான கொலை மற்றும் அழிவுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், பொதுவாக இராணுவமென்றோ, பொதுமக்களென்றோ, இளைஞர்கள், முதியவர்கள் என்றோ, ஆண்கள், பெண்கள் என்றோ குழந்தைகள் என்றோ எந்த வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை., மற்றும் இதன் மனித விரோத விளைவுகள் அரசியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கு மட்டுப்பத்தப்படாமல் அடுத்த தலைமுறைகளுக்கு மீள முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறது; எனவே, இந்த ஆயுதத்தின் எந்தவொரு உபயோகமும் மற்றும் அச்சுறுத்தலும் கூட மிக அடிப்படையான மனிதாபிமானக் கோட்பாடுகளின் கடுமையான மீறலாகும் மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஒரு தெளிவான உதாரணமாகும்என்று குறிப்பிடுகின்றார்.

இராணுவ நடவடிக்கைகளில் பரிமாணத்தை பேணல்

இமாம் கொமைனியின் கண்ணோட்டத்தில், "சாத்தியமான எந்த வழியையும்" பயன்படுத்தி எதிரிகளை வெல்லும் உத்தி தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தாக்குதல்கள் சாதாரண மக்களை கொல்ல வழிவகுக்கக்கூடாது மற்றும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கௌரவ ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; ஈராக்கிய மக்களை தாக்கி காயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை; அதற்கு மாற்றமாக நாங்களும் எங்களது இராணுவமும் தேச மக்களும்  சதாம் போலவே நினைத்திருந்தால், குழந்தைகளையும் பெண்களையும் பொதுமக்களை கொன்றாயினும் முன்னேறிச் செல்லலாம் என்று நினைத்திருந்தால்.., ஈராக்கிற்கு உதவி செய்வோர் எவரும் இல்லை என்பதை நீங்கள் இன்று பார்ப்பீர்கள்... எங்கள் இராணுவம் இஸ்லாத்தில் உறுதியாக உள்ளது .. மேலும் ஈராக் நகரங்கள் மீது ஒரு குண்டையும் அது வீசவில்லை."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாத்தின் சட்டத்தின் மூலாதாரமான குர்ஆன் சுற்றுச்சூழலைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டுள்ளது மற்றும் பல வசனங்களில் இதை வலியுறுத்தியுள்ளது. ஈராக்கின் பாத் சோஷலிச ஆட்சி ஈரானின் எண்ணெய் வயல்களில் குண்டுவீச்சு உட்பட சூழல்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயத்தில், இமாம் கொமெய்னி அதைக் கண்டித்து இவ்வாறு கூறினார்: "அமைதிக்காக ஆதரவு கோரிய எவரும் இதை ஆரம்பித்த சதாமை தட்டிக் கேட்கவில்லை, வேண்டாத இந்த போரை திணிக்க இந்த தேசம் (ஈரானிய தேசம்) என்ன குற்றம் அல்லது பாவம் செய்தது?, பல்லாண்டுகளாக அவர்கள் அயராது உழைத்து அமைத்த தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் முதலீடு செய்ததன் விளைவை அழித்து எரிக்கச் செய்தது ஏன்? என்று எவரும் கேட்கவில்லை."

போர்க் கைதிகளுக்கு அன்பு காட்டுதல்

திணிக்கப்பட்ட போரில், ஈராக் இராணுவப் படைகள் இஸ்லாமியப் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்டபோது, ​​அவர்களுடன் தயவுடன் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் துன்புறுத்துவதையும் தவிர்க்க வேண்டும், என்று கூறினார். இமாம் கொமைனி, அவர்களை ஈரான் இஸ்லாமிய குடியரசின் விருந்தினர்களாகக் கருதி இவ்வாறு கூறினார்: "எங்கள் இராணுவம் மற்றும் புரட்சிகர காவலர்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களிடம் மனிதாபிமான நடத்தை கொண்டிருக்க வேண்டும் மற்றும் இந்த மனிதாபிமான நடத்தையில் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்; உங்களது பொறுப்பில் உள்ள இந்தக் கைதிகள் உங்களுக்கு விருந்தினர்கள் போல இருப்பதால் அவர்களை நல்ல முறையில் மனித நேயத்துடன் நடத்துமாறு நான் அறிவுறுத்துகிறேன்." அவர் மற்றொரு சந்தர்ப்பத்தில், "நீங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் போர்க் கைதிகளுக்கு அனுதாபம் காட்டுங்கள் மற்றும் அவர்களிடம் இஸ்லாமிய-மனிதாபிமான நடத்தையைக் காட்டுங்கள் மற்றும் காயப்பட்ட ஈராக்கியர்களை மருத்துவமனைக்கு அனுப்புங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். - அவர்களது கடின உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது, - காயப்பட்ட கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் சகோதரர்கள் போல் நடத்த வேண்டும்; அவர்களின் இஸ்லாமிய நடத்தையால் காயம் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் குரோதத்தை தணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.

முடிவுரை

இந்த கட்டுரையானது இமாம் கொமைனியின் உலகக் கண்ணோட்டத்தில் அவர் வழங்கிய மனிதாபிமான சட்டத்தின் மற்றும் கோட்பாடுகளின் இடத்தை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய முயன்றது. மனிதாபிமான சட்டத்தின் முக்கிய கோட்பாடுகள் இமாம் கொமைனியின் சிந்தனையில் இருந்ததையே இது காட்டுகிறது. இவை நிச்சயமாக இஸ்லாமியக் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது மற்றும் பெறப்பட்டது என்பது சந்தேகமில்லை. இமாம் கொமைய்னியின் உலகக் கண்ணோட்டத்தில் மனிதாபிமானச் சட்டத்தின் கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்லாது, அதன் அடிப்படையில், ஈரானுக்கு எதிரான 8 ஆண்டு ஈராக்கிய போரின் போது கூட நாட்டின் தலைமைத்துவத்தில் இத்தகைய கொள்கைகள் தெளிவாக காணப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இமாம் கொமெய்னி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுமீது சதாம் திணித்த போர் போன்ற மிக கடினமான சூழ்நிலைகளில் கூட, ஈரான் மனிதாபிமானமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை நாடாது, எப்போதும் மனித ஒருமைப்பாடு மற்றும் கௌரவத்தை மதிக்க முயன்றது என்பது சரித்திரம்.

 

https://english.khamenei.ir/news/8518/The-place-of-humanitarian-law-in-Imam-Khomeini-s-worldview

 

தமிழில்: தாஹா முஸம்மில்