Contributors

Sunday, January 10, 2021

அமெரிக்கா செய்த தற்கொலை

Suicide that the US committed 

மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் தகர்த்த சன நாள் ஜனவரி 8, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவுக்கு எதிரான முதல் இராணுவத் தாக்குதலாக இது

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8, 2020 அன்று, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்த மேற்கு ஈராக்கின் அல் அன்பர் பிரதேசத்தில் உள்ள அமெரிக்காவின் அய்ன் அல்-அசாத் ராணுவ தளம்.

கல்வியில் மேலோங்கி இருந்தால் எந்த சக்திக்கும் அடிமையாக வாழவேண்டிய அவசியமில்லை, தலைநிமிர்ந்து நிற்கலாம் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஈரான் இஸ்லாமிய குடியரசு.

இஸ்லாமிய உலகில் அணு விஞ்ஞானம், நனோ தொழில்நுட்பம், மருத்துவம், பாதுகாப்புத்துறை என்று பல துறைகளில், பல தடைகளையும் தாண்டி அந்த நாடு தலைசிறந்து விளங்குகிறது.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் கடந்த 42 ஆண்டுகளில் ஈரானின் பொது இராஜதந்திரம் எப்போதும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு கடுமையான சவாலாக இருந்து வருகிறது. ஈரான் பிரச்சினை அமெரிக்க திட்டமிடல் மற்றும் பட்ஜெட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

எவ்வாறாயினும், கடந்த நான்கு தசாப்தங்களாக, அமெரிக்காவின் முக்கிய நலன்கள், இஸ்லாமிய குடியரசின் அரசியல் மற்றும் இராணுவ வலிமையால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச சியோனிசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான புனித போராட்டம் மற்றும் ஜெருசலேமை ஆக்கிரமித்துள்ள ஆட்சியை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்லாமிய அமைப்புகளை வழிநடத்துதல் , முஸ்லிம் நாடுகளை துண்டாடி, சிறிய சக்தியற்ற மற்றும் அடிபணியும் நாடுகளை உருவாக்குவதற்கான சியோனிச  முயற்சிகளை ஈரான் எதிர்கொள்வதும் அமெரிக்கா தலைமையிலான உலகிற்கு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாகும்.

பல்வேறு வெளிப்படையான மற்றும் இரகசிய தகவல்களின்படி, ஈரானுடனான மிக தீவிரமான அமெரிக்க பிரச்சினை இது என அறிய முடிகிறது.

மறுபுறம், கடந்த தசாப்தத்தில், பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அதிகரித்துவரும் ஈரானின் செல்வாக்கு ராணுவ ரீதியில் அதனது வியக்கத்தக்க வளர்ச்சி இதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த சக்திகளுக்கு பெரும் தலையிடியாக மாறிவருகிறது.

பஹ்லவி மன்னர் ஆட்சி காலத்தில் அதிகார சக்திகளின் கைப்பாவையாக செயற்பட்ட ஈரான் இன்று பிராந்தியத்தில்  தவிர்த்து செயல்படமுடியாத, தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய சக்தி என்ற  நிலையை அடைந்துள்ளது.

1943 டிசம்பரில், நேச நாடுகளின் தலைவர்கள் (ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் ரூஸ்வெல்ட்) ஈரானின் மன்னனாக இருந்த ஷாவுக்கு தகவல் தெரிவிக்காமல், தெஹ்ரானுக்கு வந்து, போரை நிர்வகிக்கும் நோக்கத்துடன் தெஹ்ரானில் ஒரு மாநாட்டை நடத்திவிட்டு சென்றனர்.

அந்த காலத்தில், விருந்தினர்கள் போல் அவர்களிஷ்டப்படி வருவதற்கும், சாப்பிடுவதற்கும், தீர்மானங்கள் எடுப்பதற்கும் அவர்களால் முடிந்தது. அதற்கான சேவைகளை வழங்குவதற்கு மட்டுமே ஈரானால் முடிந்தது. ஆனால் இன்று, அவ்வாறான ஒன்றை அவர்களால் நினைத்தும் பார்க்க முடியாத அளவில் ஈரான் வளர்ந்துள்ளது.

மத்தியகிழக்கில் இப்போது ஈரானை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை உருவாக்கியதில் ஷஹீத் ஜெனரல் சோலைமானியின் பங்கு மகத்தானது என்று கருதப்படுகிறது.

மேலும், 2003 இல் இருந்து தொடர்ந்த ஈராக் பிரச்சினை தீர்வில்  ஈரானின் பங்கு பிராந்திய  நிர்வாகத்தில் ஈரானின் பங்களிப்பு அதன் சக்தியின் மற்றொரு பகுதியை நிரூபித்துள்ளது.

ஈராக்கை ஆக்கிரமிப்பதில் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவுசெய்த்து, ஆயினும் ஈரானின் ராஜதந்திர செயல்பாடு அதனை பயனற்றதாக ஆக்கியது. அதுமட்டுமல்லாமல் ஈரானிய பேரம் பேசும் சக்தியையும் மற்றும் பல்வேறு துறைகளிலும் அதன் செல்வாக்கையும் அதிகரித்தது. இது ஈரானின் எதிரிகளால் கணிப்பிட்டு புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிராந்தியத்தில் ஜெனரல் சுலைமானியை பாதுகாப்பு மையமாகக் கொண்ட பாரிய ஈரானிய பங்கை குறைப்பதற்கு அவரை அழித்தொழிப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை.


அவரது வேகம், விவேகம், போர் தந்திரம், தமது மேலாதிக்கத்துக்கு சவாலாக மாறிவருவதை அறிந்து, சுலைமானியின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே  அமெரிக்கா அவரைக் கொன்றது எனலாம். 

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை, பாதிப்பின் அனைத்து பக்கங்களையும் விரிவாக ஆராய்ந்து மதிப்பிட அவர்கள் தவறிவிட்டிருந்தனர். சண்டித்தனத்தின் மூலம் சிக்கல் தீர்க்கும் மேற்கத்திய முறையின்படி அவர்களுக்கு அத்தகைய மதிப்பீடு அவசியப்பட்டிருக்காது. இந்த அற்பத்தனமான செயலுக்கான பொறுப்பை டிரம்ப் ஏற்றதே இதற்கு  போதுமான சாட்சியாக  இருக்கிறது.

டிரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க நிர்வாகம் சர்வதேச அரங்கில் தான்தோன்றத்தனமாக நடக்க தொடங்கியது.

ட்ரம்ப் அனைவரையும் அச்சுறுத்தி காரியம் சாதிக்க முனைந்தார், அவர் உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக கருதப்பட்டார். அவர் தனது கவ்பாய் (cowboy) இயல்பை சிறிதும் மறைக்கவில்லை. வெளியில் ஈரானுடனான நட்பையும், உள்ளே பகைமையையும் வெளிப்படுத்த அவருக்கு எந்த காரணமும் இல்லை. அவர் தன்னை ஒரு உண்மையான எதிரி என்று காட்டினார்.

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாதக்குழுவை துவம்சம் செய்ததில் சுலைமானியின் பங்களிப்பு அளப்பரியது. இதன் காரணமாக அவர் ஈரானுக்கு மட்டுமல்ல முழு பிராந்தியத்துக்கும் ஒரு ஹீரோவாக கருதப்பட்டார்.

ஜெனரல் சுலைமானி பிராந்தியத்தில் பயங்கவாத எதிர்ப்பு முன்னணியை ஒன்றிணைப்பதன் மூலம் வெற்றியின் அடையாளமாக இருந்தார்.

காசீம் சுலைமானியைக் கொல்வதால் ஈரான் பலவீனமடைந்துவிடும், பிராந்தியத்தில் நிலைமை முன்பிருந்ததுபோல் தமக்கு சாதகமாக மாறிவிடும் என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டார்கள்.

சுலைமானியின் படுகொலையுடன், நாட்டினுள் ஐந்தாம் படை உதவியுடனும் பொருளாதார தடை பிரச்சினைகள் மற்றும் ஊடகப் போருடன், ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்து, பிராந்தியமெங்கும் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளிடையே கருத்தியல் சந்தேகம் ஏற்படுத்திடுவதன் மூலம் நிறுவன சரிவை ஏற்படுத்தலாம்  என்று ட்ரம்ப் நினைத்தார்.

ஏற்கனவே , அமேரிக்கா அதனது அதிநவீன, மிகவும் மேம்பட்ட உளவு ட்ரோன் 'குளோபல் ஹாக்' ஈரான் தனது வான்பரப்பில் ஊடுருவியதற்காக சுட்டு வீழ்த்தி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஈரானிய ஜெனரலை படுகொலை செய்வதன் மூலம் அது ஈரானுக்கு எதிரான போரை அறிவித்தது.

எதிரிக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தாவிட்டால், தாம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவோம் என்று ஈரானியர்களுக்கு வரலாற்று அனுபவம் கற்பித்திருந்தது. அமெரிக்காவுடன் போருக்கு மக்கள் பயப்படவில்லை; மாறாக, அவர்கள் அதைக் கோரினர்.

இங்குதான் உலகம் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஈரானியர்கள் திருப்பித்தாக்கினார்கள். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) ஜனவரி 8, 2020 அன்று, மேற்கு ஈராக்கின் அல் அன்பர் பிரதேசத்தில் உள்ள அமெரிக்காவின் அய்ன் அல்-அசாத் ராணுவ தளத்தை தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழித்தது.


அமேரிக்கா தமது ஆட்சியினை பாதுகாக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த அரபு ஆட்சியாளர்களின் கனவில் இடிவிழுந்தது. தாமே பிராந்தியத்தின் பாதுகாவலர் என்று கடந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக கட்டியெழுப்பிவந்த அமெரிக்காவின் இமேஜ் ஓரிரவில் தவிடுபொடியானது.

அரசியல் விமர்சகர்களின் பார்வையில் அமேரிக்கா சுலைமானியை கொலைசெய்ததன் மூலம் தற்கொலை செய்துகொண்டுள்ளது.

- தாஹா முஸம்மில்

Sunday, January 3, 2021

தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ

 Qasem Soleimani

ஷஹீத் காஸிம் சுலைமானி கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது. இவரின் ஞாபகார்த்தமாக ஈரான் இஸ்லாமிய குடியரசில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இடம்பெற்று வருகின்றன என்பதில் இருந்தே ஈரானிய மக்கள் இவர் மீது எந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.



  مِّنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ ۖ فَمِنْهُم مَّن قَضَىٰ نَحْبَهُ وَمِنْهُم مَّن يَنتَظِرُ ۖ وَمَا بَدَّلُوا تَبْدِيلً

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. 33:23

இமாம் அலியின் சுல்பிகர் வாள் போன்ற கூர்மையான கண்களாலும், அவரது உறுதியான செயல்பாட்டினால், ஜெனரல் ஹாஜ் காசிம் சுலைமானி மக்கள் இதயங்களில் ஒரு முக்கிய இடத்தை செதுக்கி, தியாகத்தை தனது வாழ்க்கை முன்மாதிரியாக மாற்றி, அவரது பெயரை என்றென்றும் பதிந்துள்ளார்.

தியாகி சுலைமானி ஈரானிய மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஒரு ஹீரோ ஆனார். ஈரானியர்கள் தங்களுக்குள் இருந்து ஒரு சாதாரண மனிதர் இஸ்லாமிய தேசத்தின் ஒரு சிறந்த ஆளுமை மற்றும் சாம்பியனாக ஆனார்.

சுலைமணி  ஈரானின் தென்கிழக்கில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகே ரபோர்ட் கிராமத்தில் மார்ச் 11, 1957 பிறந்தார். 

குடும்ப கடனை அடைக்க உதவுவதற்காக, சுலைமானி 13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறினார். கட்டுமான தளத்தில் தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றினார்.

1978 இல் இமாம் ஆயத்துல்லாஹ் கொமெய்னி அவர்களின் தலைமையில் இஸ்லாமியப் புரட்சி வேகமடைந்து கொண்டிருந்தது. அப்போது சுலைமானி நகராட்சி நீர் அதிகாரத்துடன் தொழில்நுட்பவியலாளாளராக பணியாற்றி வந்தார்.

1979 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், இருபத்தி இரண்டு வயதான சுலைமானி இஸ்லாமிய புரட்சியில் தீவிர ஆர்வம் காட்டினார்.

இஸ்லாமிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் இஸ்லாமிய புரட்சி காவல்படையில் இணைந்துகொண்டார்.

புரட்சிகர அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 18 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில் சதாம் ஹுசைன் ஈரான் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றைத் திணித்தார். எட்டு ஆண்டுகளளத தொடர்ந்த இந்த யுத்தத்தில் இருதரப்பிலும் சுமார் 10 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஜெனரல் சுலைமானி  அந்த போரின் பெரும்பகுதியை முன் வரிசையில் செலவிட்டார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினருக்கு நீர் வழங்குவதற்காக சுலைமானி ஒரு எளிய பணியுடன் 15 நாட்களுக்கு யுத்தமுனைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் "நான் ஒரு பதினைந்து நாள் பயணத்தில் போருக்குள் நுழைந்தேன், இறுதி வரை தங்கியிருந்தேன்," என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சாதாரண தொண்டனாக ராணுவத்தில் இணைந்த சுலைமானி தன்னுடைய திறமையின் காரணமாக படிப்படியாக உயர்ந்து ஜெனெரல் ஆனார்.

ஐ.ஆர்.ஜி.சியின் குத்ஸ் படையின் தலைவராக சுலைமானி தேர்ந்தெடுக்கப்பட்டது தற்செயலானது அல்ல. கெர்மனில் உள்ள ஒரு மலை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், பொதுவாக பழங்குடி சமூகங்களிலும், குறிப்பாக ஆப்கானிஸ்தானிலும் அரசியல் வழிமுறைகள் குறித்து அவருக்கு அவசியமான அறிவு இருந்ததால் சுலைமானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈரானின் குர்திஷ் பிராந்தியங்களில் உள்நாட்டுப் போரின்போது அவர் பெற்ற அனுபவத்தின் காரணமாக அவர் ஒரு பொருத்தமான தேர்வாக இருந்தார்.


இவரைப்பற்றி இமாம் ஆயத்துல்லாஹ் காமனெய் குறிப்பிடுகையில் "ஷஹித் சோலைமணி தைரியமானவர், நுண்ணறிவுள்ளவர். அவரது நடவடிக்கைகள் வெறுமனே தைரியத்தால் குறிக்கப்படவில்லை. சிலருக்கு தைரியம் இருக்கிறது, ஆனால் அவர்களின் தைரியத்தைப் பயன்படுத்த தேவையான ஞானமும் புத்திசாலித்தனமும் அவர்களுக்கு இல்லை. மேலும் சிலர் ஞானவான்களாக இருப்பர், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுப்பதற்கான தைரியம் அவர்களிடம் இல்லை. எங்கள் அன்புக்குப்பாத்திரமான தியாகி இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த அபூர்வ நபர்; இருவருக்கு தேவையான தைரியமும் தேவையான புத்திசாலித்தனமும் அதேசமயம் இறையச்சமும்  அவரிடம் இருந்தது". என்று குறிப்பிட்டார்கள்.

பல ஆண்டுகளாக, சர்தார் சுலைமானி உலகின் தீய செயல்களுக்கும் மனித உருவங்களில் உலாவும் பிசாசுகளுக்கு எதிராக பல்வேறு போர்க்களங்கள் மற்றும் முனைகளில் போராடினார் மற்றும் எந்தவிதமான பயமும் அச்சமும் இல்லாமல், தொடர்ச்சியான நடவடிக்கைகளை திட்டமிட்டார், அதில் தனது சகாக்களுடன் மற்றும் வீரர்களுடன் அவரும் பங்கேற்றார்.

அவர் தனது முழு வாழ்க்கையையும் இறைவனின் பாதையில் ஜிஹாத்தில் கழித்தார், இதுவே அவரை கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு சர்வதேச நபராக மாற்றியது.

இந்த காரணத்தினால்தான் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகள் இவ்வளவு சக்தி, கௌரவம், தைரியம் மற்றும் துணிச்சலைக் காண முடியாமல், எதிர்ப்பின் தளபதி ஜெனரல் ஹாஜ் காசெம் சுலைமானியை ஜனவரி 3 ஆம் தேதி 2020 ஷஹீதாக்கினார்.

இஸ்லாத்தின் இந்த மாபெரும் தியாகி இஸ்லாமிய போதனை மற்றும் இமாம் கோமெய்னி (ர) சிந்தனையால் பயிற்சியளிக்கப்பட்டார் மற்றும் இமாம் கோமெய்னி (ர) மற்றும் உச்ச தலைவரின் கட்டளையின் கீழ் ஒரு சிப்பாயாக பணியாற்றுவதன் மூலம் தனது சிந்தனைப் பள்ளியின் அடித்தளத்தை ஆரம்பித்திருந்தார். இஸ்லாமியப் புரட்சியின், அவர் உயர் அந்தஸ்தைப் பெற்றார் மற்றும் உயர்ந்த சிந்தனைகளையும் மதிப்புகளையும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதற்கான சிந்தனைப் பள்ளியையும் ஒரு முன்னணியையும் உருவாக்கினார்.

இறைவன் மீதுள்ள உறுதியான நம்பிக்கையுடனும், வெலாயத்-இ-ஃபாகீஹ் மீது ஒரு சிறப்பு நம்பிக்கையுடனும், சொல்லப்பட்ட அனைத்தும் உண்மை என்றும், சர்வவல்லமையுள்ள இறைவன் அவனுடைய உதவியையும் ஆதரவையும் அளிப்பான் என்றும் அவர் நம்பினார். வலி-இ ஃபாகீஹ் மீதான அவரது நேர்மையும் கீழ்ப்படிதலும் எடுத்துக்காட்டாக அமைந்தது,

இது பாதுகாப்பு சகாப்தத்தின் போது போர்வீரர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உச்ச தலைவர் விவரித்தபடி “தியாகி சுலைமானி  இஸ்லாத்திலும் உச்ச தலைவரினது வழிகாட்டலிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியிருந்தார்.”

அவர் ஒரு தனித்துவமான இராணுவ மனிதர், ஒரு தனித்துவமான அரசியல் சிந்தனையாளர் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பொறுத்தவரை அதன் சூத்திரதாரி. தனது முக்கிய ராணுவ கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கலந்துகொள்வதோடு, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் மற்றும் பயனுள்ள பிற பணிகளிலும் கலந்து கொண்டார். தேசிய மற்றும் நாடுகடந்த பிராந்திய நலன்களின் ஒருங்கிணைப்பை அவர் நம்பினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ஈரானிய எல்லைகளுக்குள்ளும் அதைச் சுற்றியும் பாதுகாப்பை நாடினார், அதேசமயம் அதை எல்லை தாண்டிய மட்டத்திலும் தேடினார், மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்ற பகுதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை தானாகவே உறுதி செய்யும் என்று நம்பினார்.

இந்த அணுகுமுறை அவரது செயல்பாட்டு வேறுபாடுகளைக் காட்டுகிறது; குறிப்பிட்ட வேறுபாடுகள், அவற்றில் சில முடிவுகள் சொல்லும்  விடயம், அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பது மற்றும் நாட்டிற்கு ஆதரவாக ஒரு நிலையான ஒழுங்கை நிறுவுதல், பாதுகாப்புக் கொள்கையை முன்வைத்தல் மற்றும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவை உருவாக்குதல் என குறிப்பிடலாம்.

சர்தார் சுலைமானியின் நடவடிக்கைகள் நாட்டின் எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் ஒரு நேர்மையான, ஆக்கபூர்வமான, தைரியமான சிந்தனை மற்றும் சர்வவல்லமையுள்ள இறைவனில் பரிபூரண நம்பிக்கை வைத்திருத்தல் ஆகியவற்றை நன்கு விதைத்திருந்தார். இமாம் கொமெய்னி மற்றும் புரட்சியின் உச்ச தலைவரால் விரும்பப்பட்ட கொள்கைகளையும் மதிப்புகளையும் செயல்படுத்திய ஒரு தைரியமான தளபதி. அவர் ஒரு துணிச்சலான மற்றும் தேசபக்தி கொண்ட போர் வீரர், இஸ்லாத்தின் புனிதத்தன்மையையும் நோக்கத்தையும் பாதுகாப்பதற்காக ஜிஹாத் கொடியை கீழே இறக்காதவர்.

வெலாயத் என்ற கருத்தைப் பற்றிய மற்றொரு புரிதலையும் அவர் தொடங்கினார், இது எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வின் முக்கிய முழக்கத்துடன் இருந்தது. உலகின் அனைத்து நாடுகளுக்கும், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளின் விழிப்புணர்வுடன் புரட்சியின் தலைமைத்துவ செய்தியை தெரிவிப்பதே அவரது நோக்கம்.

ஹாஜ் சுலைமானியின் ஆளுமை மற்றும் உத்திகளின் மகத்துவம்,

அரசியல் பிரச்சினைகள் தொடர்பான அவரது அணுகுமுறை அதே நேரத்தில் அவரது தனித்துவமான ராணுவ உத்திகள்  எதிரிகளை பயமுறுத்தியது மற்றும் இஸ்லாமிய குடியரசின் எதிரிகளுக்கு அவர் மீதான மிக மோசமான அச்சத்தை உருவாக்கியது.

எதிர்ப்பு முன்னணியின் திறன்கள் அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு, உலகம் மற்றும் மேற்கு ஆசியாவிலும் சியோனிச ஆட்சிக்கு அவமானகரமான தோல்வியைத் தரக்கூடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.


எதிரிகளின் விரிவாக்கத் திட்டங்களையும் பிரிவினைவாத இயக்கங்களையும் முறியடிக்க அவரால் முடிந்தது. மேற்கு மற்றும் மொசாட்டின் உளவுத்துறை சேவைகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்ட் என்று அழைக்கப்படுபவை) இன் பயங்கரவாத கூறுகளை மத்திய கிழக்கிலிருந்து அகற்றுவதில் வெற்றிகண்டார். மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் பினாமி யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் அடைய விரும்பிய "நைல் முதல் யூப்ரடீஸ் வரை" என்ற கனவு ஒரு இழந்த இலட்சியமாகும் என்பதை சியோனிச ஆட்சி புரிந்துகொள்ள வைத்தது.

சர்தார் சுலைமானியின் படுகொலை அமெரிக்காவின் வரலாற்றில் அரசு பயங்கரவாதத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

அமெரிக்க தலைமையிலான மேலாதிக்க அமைப்பின் விருப்பமான கட்டமைப்பு சித்தாந்தத்தை சர்தார் சுலைமானி பல்வேறு தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டங்களில் ஒரு விரிவான செயற்பாட்டின் மூலம் சவாலுக்கு உட்படுத்தினார்.

இவர்களது இந்த சர்வதேச மேலாதிக்க திட்டத்திற்கு பெரும் சவாலாக இருக்கின்றது என்பதனாலேயே ஈரானுக்கு பெரும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் இன்று முகம்கொடுத்துள்ள கஷ்டங்களுக்கும் இதுவே காரணமாகும்.

ஈரானுக்கு ஆதரவாக இந்த கட்டமைப்பை மாற்றுவது, சர்வதேச அரங்கில், குறிப்பாக பிராந்திய மட்டத்தில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் நலன்களுக்கான பாதையை வகுப்பது உட்பட, அரசியல் மற்றும் இராணுவ முன்னேற்றங்களில் செல்வாக்கு செலுத்தும் மக்கள் இயக்கங்கள் மற்றும் குழுக்களை வலுப்படுத்தி செயல்படுத்துகிறது. மற்றும் கருத்தியல் துறையில் அரசியல் போக்கை ஈரானுக்கு ஆதரவாக மாற்றுவதில் சுலைமானி வெற்றிகண்டார். இவை சுலைமானியின் சில தனித்துவமான குணங்களாகும், இது சர்வதேச அரங்கில் தியாகி சுலைமானியின் மதிப்பை உயர்த்த இதுவே காரணம்.

தியாகி சுலைமணி எதிர்ப்பு முன்னணிக்கு இதுபோன்ற மகத்துவத்தை வழங்கினார், அது ஒருபோதும் மறைந்துவிடாது, எதிர்காலத்தில் இந்த மகத்துவம் இன்னும் தெளிவாகிவிடும்.

இதயத்தில் பதிந்த இந்த தளபதியின் ஆளுமையின் மகத்துவம் ஈரானியர்களை மட்டுமல்ல, மத்திய கிழக்கு மக்களையும், உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியது.

அவர் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் சுதந்திரத்தை நேசிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர், உலக மக்கள் பலரும் அவரது தியாக உணர்வைப் பற்றி இரங்கல் தெரிவித்தனர் மற்றும் அவரது தூய்மையான உடல் ஈரானுக்கும் அவரது பிறந்த நகரமான கெர்மனுக்கும் வருவதற்கு முன்பு அவர்களின் நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் அனுதாப கூட்டங்களை நடத்தினர்.

அவரது இறுதி சடங்கில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றதன் வியக்கத்தக்க காட்சி அமெரிக்க பயங்கரவாத நிர்வாகத்திற்கு அவரது செய்தியும் பாதையும் ஒருபோதும் அழியாது என்ற  ஒரு செய்தியை அனுப்பியது.

இஸ்லாத்தின் மாபெரும் தியாகிகளை, குறிப்பாக உயிருள்ள தியாகி ஹஜ் காசேம் சுலைமானியை அவரது ஆசீர்வாதங்களுடன் பொழிவதற்கு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்,

இஸ்லாத்தின் மாபெரும் தியாகிகள் அனைவருக்கும், குறிப்பாக மனதில் உயிர்வாழும் தியாகி ஹஜ் காசீம்  சுலைமானிக்கும் அருள்மாரி பொழிவதற்கு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்,

 

 

Wednesday, December 30, 2020

COVID-19 தடுப்பூசியைக் கண்டுபிடித்து ஈரான் வியக்கத்தக்க சாதனை

Iran's amazing achievement in finding vaccine for COVID-19

ஈரான் அதன் தடுப்பூசியின் மனித பரிசோதனையைத் தொடங்குகிறது. இஸ்லாமிய குடியரசில் உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டத்தை ஈரான் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது, தொற்றுநோய்க்கான மருத்துவ கருவிகளை அணுகுவதையே தடுத்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தடைக்கு மத்தியில் ஈரான் இந்த சாதனையை எட்டியுள்ளது, வியக்கத்தக்கது.

"ஈரானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசி மூன்று நபர்களுக்கு செலுத்துவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது".


கொரோனா வைரஸ் காரணமாக ஈரானில் பாதிக்கப்பட்ட 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட 55,000 உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பொருளாதாரத் தடைகளிலிருந்து உணவு மற்றும் மருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சர்வதேச வங்கிகள் ஈரான் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனைகளை மறுக்கின்றன.

ஜனாதிபதி ஹசன் ரூஹானி சனிக்கிழமை, அமெரிக்க வங்கிகள் மூலம் தெஹ்ரான் மருந்துகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று வாஷிங்டன் கோரியதாகவும், அவ்வாறு அனுப்பப்படும் பணத்தை அமெரிக்காகைப்பற்றும் என்று அஞ்சுவதாகவும் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை வெளியீட்டில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சுகாதார அமைச்சர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொறுப்பான ஈரானிய துணைத் தலைவர் முன்னிலையில் ஊசி போடுவதைக் காட்டும் படங்களை IRIB  ஒளிபரப்பியது.

அரசுக்கு சொந்தமான மருந்து குழுமத்தின் ஒரு பகுதியான ஷிஃபா பார்மட் தயாரித்த இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

இந்த மூவரும் EIKO கூட்டு நிறுவனத்தின் தலைவரின் மகள் உட்பட மூன்று தன்னார்வலர்களான இரண்டு உயர் அதிகாரிகள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

முதலில் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பரக்கத் மருந்துக் குழுவின் தலைவரின் மகள் தய்யிபா மொக்பர் "விஞ்ஞான செயல்முறையில் நாடு சரியான வழியில் முன்னேறியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கூறினார். "இதன் முடிவு எங்கள் மக்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார்.



கோவிரன் (COVIRAN) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, போலியோ நோய்த்தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரசாயனங்களால் பலவீனப்படுத்தப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஒரு கொரோனா வைரஸால் இது தயாரிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி இரண்டு வார இடைவெளியில் இரண்டு அளவுகளில் "56 தன்னார்வலர்களுக்கு" வழங்கப்படும் என்று இந்த தடுப்பூசியை உருவாக்கும் நிறுவனத்தின் பொறுப்புவாய்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி ஐரிப் நியூஸ் தெரிவித்தது. இரண்டாவது ஊசி ஏற்றப்பட்டு 28 நாட்களுக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று அது கூறியுள்ளது.

"அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ஈரானில் 1.5 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பரக்கத் மருந்துக் குழுவின் தலைவர் முஹம்மது மொக்பர் கூறினார்.

நாட்டின் ராசி நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட மற்றொரு ஈரானிய தடுப்பூசி, "மிக விரைவில் எதிர்காலத்தில் மனித சோதனைகளைத் தொடங்க" அங்கீகாரத்தைப் பெறும் "என்று சுகாதார அமைச்சர் சயீத் நமகி கூறினார்.

பிப்ரவரியில் மனித தன்னார்வலர்களில் பரிசோதனைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டாவது தடுப்பூசியை தயாரிக்க ஈரான் ஒரு "வெளிநாட்டு நாடு" உடன் ஒத்துழைக்கிறது என்று ரூஹானி கூறியுள்ளார்.

COVID-19 க்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கும் எட்டு தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) வின் அங்கீகாரத்துக்காக உலகளவில் முன்வைக்கப்பட்டுள்ள 48 நம்பிக்கைக்குரிய வேட்பாளர் தடுப்பூசிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று தெஹ்ரான் கடந்த மாதம் கூறியது.

"உலகில் (வேறு இடங்களில்) உற்பத்தி செய்யப்படும் பல தடுப்பூசிகளை விட உள்நாட்டு தடுப்பூசி (COVID-19 க்கு) சிறந்தது என்பதை நாங்கள் எதிர்காலத்தில் நிரூபிப்போம்" என்று சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் சயீத் நமகி ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


தடுப்பூசி உற்பத்தியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அனுபவமுள்ளது

தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட, சுகாதார அமைச்சர், ஈரானில் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு ஊசி போடப்படுவது இதுவே முதல் முறை என்று நினைத்துவிடாதீர்கள், நாங்கள் 1920 இல் தடுப்பூசி தயாரித்துள்ளோம்; ஆசியாவில் முதன்முதலில் தடுப்பூசிகளைத் தயாரித்தவர்களாக நாங்கள் இருந்தோம், உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று கூறினார்.


இமாம் கோமெய்னியின் ஆணையை நிறைவேற்றுவதற்கான தலைமையகத்தின் தலைவரான முகமது மொக்பர், அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசிக்கு மேலதிகமாக, மேலும் ஆறு நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. "அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மாதத்திற்கு 1.5 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்," என்றார்.

இதற்கிடையில், இந்த தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பதற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் அவசியமில்லை என்று சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் வலியுறுத்தினார். "தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தால், எப்போது வேண்டுமானாலும் தேவையான சர்வதேச சான்றிதழ்களைப் பெறுவோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.tehrantimes.com/news/456338/Iran-tests-first-homegrown-coronavirus-vaccine