Contributors

Thursday, May 21, 2020

இஸ்ரேலின் மிருகத்தனமான அடக்குமுறைக்கு பாலஸ்தீனர்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை

“Quds Day”: Palestinians will never succumb to brutal Israeli repression


இந்த அபகரிப்பாளர்களின் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கைகளைத் துண்டிக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். பாலஸ்தீனிய மக்களின் தலைவிதியை தீர்மானிக்க கூடிய நாளாக புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை சர்வதேச  "குத்ஸ் தினமாக" அறிவிக்கின்றேன். இத்தினத்தை முஸ்லிம் மக்களின் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்க, குத்ஸ் விடுதலைக்கான முஸ்லிம்களின் சர்வதேச ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு நாளாக மட்டுமல்லாது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக நாளாக அனுஷ்டிக்குமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறேன்.


இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் மேற்கண்ட பிரகடனம் புனித ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் சர்வதேச குத்ஸ் தினம் என்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலையிலும் கூட, இவ்வருடம் மாற்று வழிமுறைகளில், முந்தைய ஆண்டுகளை விட அதிக வீரியத்துடன் குத்ஸ் தினம் நினைவுகூரப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களால் 1979 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமானது அத்தினத்தை மகிமைப்படுத்தவும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தவும் சியோனிசத்தையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவும் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் பலதரப்பட்ட செயல்பாடுகள்  வருடாந்திர நிகழ்வாகும்.

சியோனிச இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்பிரகடனத்தின் நோக்கமாகும்.

ஏழு தசாப்தங்களைக் கடந்தும் பாலஸ்தீனர்களின் போராட்டம் ஓயவில்லை என்பது, பலஸ்தீன மக்கள் அவர்களது பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க தாயாரில்லை என்பதையும் இஸ்ரேல் அதன் ஆக்கிரமிப்பு திட்டத்தில் முற்றாக வெற்றி பெறவில்லை என்பதையுமே காட்டுகிறது.

பாலஸ்தீனர்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சவால்களுக்கு மத்தியிலும், காலனித்துவ ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேல், அணு ஆயுத பலத்தையும் பண பலத்தையும் அமேரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் ஆதரவை பெற்றிருந்தபோதும், அச்சத்துடனேயே செயல்பட்டு வருகிறது. இதற்கு அது அன்றாடம் மேற்கொண்டுவரும் கோழைத்தனமான குண்டுவீச்சுக்களே நல்ல உதாரணம். சுருக்கமாக கூறுவதாயின்: பாலஸ்தீனியர்கள் தோற்கடிக்கப்படவில்லை என்பதும் இஸ்ரேலின் மிருகத்தனமான அடக்குமுறைக்கு அவர்கள் ஒருபோதும் அடிபணியபோவதில்லை என்பதுமாகும்.

1948க்கு முன்னர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்ததில் இருந்து, 1967 ஆம் ஆண்டில் மேலும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தபோதும், பாலஸ்தீனியர்கள் நெகிழ்ச்சியுடன் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறுவதில் உறுதியாக உள்ளனர்.

ஒரு பக்கம் ஹிஸ்புல்லாக்களையும் மறுபக்கம் ஹமாஸ் இயக்கத்தையும் சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு சவாலாக அமைந்துள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இயக்கங்களைத் சவூதி அரேபியா பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தியுள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சவுதியின் பலஸ்தீன் தொடர்பான நிலைப்பாடு இதிலிருந்து மாற்றமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.


குத்ஸ் தினத்தைக் குறிக்க உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொரு ஆண்டும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, பேரணிகள் வித்தியாசமான வடிவத்தையும் பாணியையும் கொண்டிருக்கும். இஸ்ரேலின் சியோனிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை நிரூபிப்பர். பாலஸ்தீனர்களின் நியாயமான போராட்டத்தை அவர்கள் எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டார்கள் என்பதையும் சியோனிச எதிர்ப்பு பாதையில் எந்தத் தடை போடப்பட்டாலும் அதை உடைத்தெறிந்து போராட்டம் தொடரும் என்பதை நிரூபிக்க முஸ்லிம்கள் உறுதியாக உள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான "சமாதான" பேச்சுக்கள் அல்லது "நூற்றாண்டின் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுபவற்றில் எந்தவொரு செல்லுபடி தன்மையும் இல்லை என்பதையும் அது வெறும் ஏமாற்றுவித்தை என்பதையும் பலஸ்தீன மக்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்பதையும் இந்த வருட குத்ஸ் தினம் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. அதேநேரம் பாலஸ்தீன மக்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தன்மை மிக முக்கியமானது, நிராகரிக்க முடியாதது  என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

குத்ஸ் தினம் என்பது பாலஸ்தீனத்தின் சுதந்திரம் மற்றும் நீதிக்கான தேடலை ஆதரிக்கும் தார்மீக மக்கள் சக்தியாகும்; இதை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதை நினைவூட்டுவதாகும். இது சியோனிசத்தின் ஆட்டம் காணும் காலனித்துவ திட்டத்தின் ஒருங்கிணைந்த சக்தியை விட பெரியது.

தெஹ்ரானில் உள்ள பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் பிரதிநிதி நாசர் அபு ஷெரீப், மெஹ்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "சர்வதேச குத்ஸ் தினம் என்பது திட்டங்கள் வகுத்து சரியான பாதையில் மாபெரும் முன்னேற்றங்களை நோக்கி நகரும் நாள்", என்று தெரிவித்தார். அதற்கு மாற்றமான வேறு எந்த பாதையும் தவறானது மற்றும் அழிவுகரமானது என்பதை இது நிரூபிக்கிறது. சரியான பாதை குத்ஸை நோக்கி நகர்கிறது. இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களின் இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதலும், சூழ்நிலையும் அவரை சர்வதேச குத்ஸ் தினத்தைத் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்தது, " என்றும் கூறினார்.

இஸ்ரேலை அச்சுறுத்தக்கக்கூடிய சத்தியப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தைரியம் என்பனவற்றின் மதிப்புகளை இந்தப் போராட்டம் கொண்டுள்ளது. இதன் தாக்கம் எவ்வளவென்றால் இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் நியாயம் வேண்டும் உண்மையான யூதர்கள், சியோனிஸத்தின் மிருகத்தனமான செயல்களை "என் பெயரில் இல்லை" என்று தைரியமான கூறும் நிலையை உருவாக்கியுள்ளது.

பாலஸ்தீனத்தை முற்றிலுமாக நிர்மூலமாக்குவது குறித்து கணிக்கப்பட்ட சியோனிச திட்டம், தோல்வியடைந்துள்ளது. பல தசாப்தங்கள் கழிந்த நிலையிலும் உலக வல்லரசு சக்திகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேல் தோல்வியுற்ற நாடாகவே உள்ளது என்பது நிதர்சனம்.


குத்ஸ் தினம் பாலஸ்தீன் விடுதலையை நினைவூட்டுவதற்கு மட்டுமல்லாமல், ஒடுக்குமுறைக்கு அடிபணிய மறுக்கும் மக்களை ஒன்று திரட்டி, ஜோகன்னஸ்பர்க் முதல் பாங்காக் மற்றும் தெஹ்ரான் முதல் லண்டன் வரை ஒற்றுமை கோஷம் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆளுக்கு ஒரு வாளித் தண்ணீரை ஊற்றினாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும்.
                                                                                            - இமாம் கொமெய்னி (ரஹ்)

ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்.

-       தாஹா முஸம்மில்

Thursday, May 14, 2020

வரலாற்றுத் துரோகத்தை நினைவுகூரும் "நக்பா தினம்"

"Nakba Day" commemorating the historic treachery
 "நக்பா" என்பது "பேரழிவு" என்பதற்கான அரபு வார்த்தையாகும். 1948 ஆம் ஆண்டில் 700,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, இஸ்ரேல் ஸ்தாபிக்க வழிவகுத்த தினம் நக்பா தினம் என்று அழைக்கப்படுகிறது.

72 வது ஆண்டு நக்பா தினத்தின்” (பேரழிவு நாள்) நிறைவைக் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாலஸ்தீனர்கள் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டத்தையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அடிமைப்படுத்தும் மத்தியகிழக்கு நூற்றாண்டு சமாதானத் திட்டத்தையும் முறியடித்து, பாலஸ்தீனியர்களின் முழுமையான விடுதலையை அடைவோம் என்று  இன்று மே 14, 2020 வியாழக்கிழமை உறுதிபூண்டனர்.

UN: Israeli annexation plans 'entirely unacceptable'

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குறிப்பிடத்தக்க பகுதிகளை இணைப்பதற்கான புதிய இஸ்ரேலிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டம் சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு அடியாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர் மைக்கேல் லிங்க் எச்சரித்தார். "திட்டமிடப்பட்ட இணைப்போடு ஒருதலைப்பட்சமாக முன்னேற ஜூலை 1 ம் தேதி இஸ்ரேல் எடுத்த முடிவு பிராந்தியத்தில் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் இது விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கிற்கு கடுமையான கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிராந்தியத்தில் உரிமைகள் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் லிங்க் கூறினார்.

இஸ்ரேலின் இணைப்புத் திட்டங்கள் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு வசதி செய்யப்படுகின்றன என்று லிங்க் எச்சரிக்கை தெரிவித்தார்.

இணைப்புத் திட்டங்கள் தொடர்ந்தால், மேற்குக் கரையில் எஞ்சியிருப்பது "பாலஸ்தீனிய பண்டுஸ்தான்" ஆக மாறும், இது துண்டிக்கப்பட்ட பிரதேசங்கள் ஒரு தீவுக்கூட்டம் போன்று, வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இஸ்ரேலால் சூழப்பட்டும்  நிலை உருவாகிவிடும் என்றும், சிறப்பு அறிக்கையாளர் மேலும் கூறினார்.

இந்த இணைப்பு திட்டத்தில் ஜோர்டான் பள்ளத்தாக்கும் அடங்கும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், "மோசமான மனித உரிமை விளைவுகளின் அடுக்கிற்கு" வழிவகுக்கும்.

இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதானது ஒரு நியாயமான மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கான மீதமுள்ள எந்தவொரு வாய்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும், என்று அவர் கூறினார்.  "இந்த திட்டம் 21 ஆம் நூற்றாண்டின் இனவெறியை உறுதியாக்கும், மேலும் பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். சட்டரீதியாக, ஒழுக்க ரீதியாக, அரசியல் ரீதியாக இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து எழும் மனித உரிமை மீறல்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் இணைக்கப்பட்ட பின்னரே தீவிரமடையும், என்று லிங்க் கூறினார். "ஏற்கனவே, கட்டாய வெளியேற்றங்கள் மற்றும் இடம்பெயர்வு, நிலம் பறிமுதல் மற்றும் அந்நியப்படுதல், குடியேற்ற வன்முறை, இயற்கை வளங்களை கையகப்படுத்துதல் மற்றும் இனத்தின் அடிப்படையில் சமமற்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் என்ற இரு அடுக்கு முறை சுமத்தப்படுவதை நாங்கள் காண்கிறோம்."

ஐ.நா. நிபுணர் 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து பலவந்தமாக இணைப்பது சர்வதேச சட்டத்தின் கீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

ஒரு தலைமுறைக்குள் நடந்த இரண்டு உலகப் போர்களின் கசப்பான படிப்பினைகளிலிருந்து, சர்வதேச சமூகம் இணைப்பதை தடைசெய்தது, ஏனெனில் அது மோதல்கள், பரந்த மனித பேரவலங்கள், அரசியல் உறுதியற்ற தன்மை, பொருளாதார அழிவு மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடு ஆகியவற்றை உருவாக்குகிறது.

1967 முதல், ஐ.நா.பாதுகாப்பு சபை படை பலத்தை பயன்படுத்தி அல்லது போரினால் "பிரதேசத்தை கையகப்படுத்தும்" கொள்கையை நிராகரித்து வந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்த பல சந்தர்ப்பங்களில் அது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

"நமது நவீன சர்வதேச சட்ட முறையை உருவாக்குவதற்கு போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா பல முனைகளில், ஒரு சாதகமான சக்தியாக இருந்துவந்துள்ளது." உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான சிறந்த பாதை, உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் வலுவான வலையமைப்பு என்பதை அது புரிந்துகொண்டும் இருத்தது. ஆனால் இப்போது, அமேரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை தனிமைப்படுத்தும் அதன் தார்மீக பொறுப்பிலிருந்து மீறி, அப்பட்டமான சர்வதேச சட்ட மீறலுக்கு தீவிரமாக ஒப்புதல் அளித்து வருகிறது.

Greater Israel is the objective as Netanyahu plans to wipe Palestine off the map

இது தொடர்பாக ஊடகவியலாளர் யிவோன் ரிட்லி (Yvonne Ridley) தனது கட்டுரையில் பின்வருமாறு விவரிக்கிறார்:

பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிருந்து அழித்து மகா இஸ்ரேலை அமைப்பதே நெத்தன்யாகுவின் நோக்கம் ஆகும்.

பாலஸ்தீன் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பாக, உலகத் தலைவர்களும், மேற்கத்திய ஊடகவியலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அவர்களது பார்வையை அதிதிலிருந்து அகற்றியுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வினோதமான கருத்துக்களும், கோவிட் -19 ஐ அவர் கையாண்ட விதமும்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக ஊடகங்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கையில், எப்போதும் போலவே, இஸ்ரேல் ஒரு பேரழிவு சூழ்நிலையை அதன் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றியுள்ளது. பரம அரசியல் போட்டியாளர்களான பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் ஆகியோர் பாலஸ்தீனத்தின் மேலும் 30 சதவீதத்தை அபகரிக்கப் போகிறார்கள், இரு மாநில தீர்வின் எந்தவொரு யதார்த்தமான வாய்ப்பையும் முற்றாக அழிக்கப் பார்க்கிறார்கள்.


புதிய இஸ்ரேலிய அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அதன் முழுக்கவனமும் கோவிட் -19 க்கு எதிரான போராட்டமாக இருக்கும் என்று கூறுகிறதுநிச்சயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலங்களை அபகரிப்பதைத் தவிர என்றே கூறப்பட வேண்டும். உலகின் கவனத்தைக் கோரும் எது நடந்தாலும் இஸ்ரேலுக்கு அது  முக்கியமல்ல,  "பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் அழிப்பதற்கு" எப்போதுமே கையாளும் மிருகத்தனமான வழியில் செல்வதற்கான  நேரத்தையும் வளத்தையும் அது எவ்வாறாயினும் கண்டுபிடித்துக்கொள்ளும்.

தொற்றுநோய் மற்றும் ட்ரம்பின் வெறித்தனமான செயல்களுக்கு அப்பால் கவனம் செலுத்தக்கூடிய கெபிடல் ஹில்லில் உள்ள சில பத்திரிகையாளர்களில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜாக்சன் டீலும் ஒருவர். இந்த வாரம் ஒரு கருத்துத் தொகுப்பில் அவர், ஜூலை 1 முதல் நெத்தன்யாகு மேற்குக் கரையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானதை இஸ்ரேல் அதனுடன் இணைப்பது குறித்து தனது அமைச்சரவை அல்லது பாராளுமன்றத்தின் அனுமதியை வேண்டி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.. மேற்குக் கரை என்பது பலஸ்தீன் அதிகாரத்துக்கு உட்பட்ட, பெரும்பான்மையான பாலஸ்தீனிய மக்கள் வாழ்கின்ற பகுதியாகும்,” என்று குறிப்பிடுகின்றார்.

அதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது என்பதை டீல் சுட்டிக்காட்டுகின்றார்: நெதன்யாகு அமெரிக்காவுடன் முழு இணக்கத்துடன்செயல்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தனது நற்பு நாடான இஸ்ரேல் வாக்கெடுப்பை தொடர முடியுமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் டிரம்பிற்கு இருக்கும், அவ்வாக்கெடுப்பில் அவர் வெல்லவும் கூடும், அவ்வாறு நடந்தால் இஸ்ரேலின் (பூகோள) தன்மையை அது மாற்றிவிடும்,என்றும் டீல் கூறுகின்றார்.

அத்தகைய நடவடிக்கை பாலஸ்தீன மற்றும் அதன் மக்களின் தன்மையை நிரந்தரமாக மாற்றிவிடும். (இது தொடர்பாக அரபு ஆட்சியாளர் எந்த அக்கறையுமில்லாமல் இருக்கின்றனர். ஆனால் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் எப்போதும் போல் ஈரான் இஸ்லாமிய குடியரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.)  நெத்தன்யாகுவின் ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாக, உலகமும் உலக ஊடகங்களும் பார்த்திருக்க, இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனிய நிலங்களைத் அபகரித்து, சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை உருவாக்கி வருகிறது. ஐ.நா. வெளியிட்ட ஏராளமான கண்டனங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை; இஸ்ரேல் அவற்றை  முற்றிலும் புறக்கணித்து, தண்டனையின்றி செயல்பட்டு வருகிறது.

இஸ்ரேல் ஐ.நா. தீர்மானங்களை மீறியதை போல் உலகில் வேறு எந்த நாடும் மீறியது கிடையாது, ஆனால் இந்த சமீபத்திய நடவடிக்கை சண்டித்தனம் காட்டும் எந்த அரசினதும் ஏற்றுக்கொள்ள முடியாத, எல்லை மீறிய செயலாகும். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அப்பட்டமான அடாவடித்தனமாகும்; பாலஸ்தீனர்களின் விருப்பு, வெறுப்புக்கு இங்கு மதிப்பளிக்கப்படவில்லை.

டிரம்பின் "நூற்றாண்டின் ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுவது ஒரு "சமாதான திட்டம்" என்று உலகுக்கு விற்கப்பட்டது, ஆயினும் இது பலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுடன் இணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டும் திட்டமாகும். அது ஏற்கனவே பல நிலங்களைத் அபகரித்து காலனித்துவப்படுத்தியிருக்கும் நிலையில், "பாலஸ்தீனத்திற்கு" என  எஞ்சியிருக்கப்போகும் குறுகிய நிலத்தைக் கொண்டு அது இனி ஒரு சுதந்திர நாடாக ஆகும் சாத்தியமில்லை. அமெரிக்க ஜனாதிபதியின் அனைத்து திட்டங்களையும் போலவே, அவரது மூலோபாய திட்டமிடலான நூற்றாண்டு ஒப்பந்தத்தில், எல்லா நிலையிலும், இஸ்ரேலுக்கு பயனளிக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

பாலஸ்தீனர்கள் இஸ்ரேலால் சூழப்பட்ட சிறுசிறு குழுக்களாக தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருப்பர்,  உண்மையில் அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

உலகம் வைரஸ் நெருக்கடியில் மூழ்கியுள்ள இவ்வேளை, ஈரானுக்கு அடுத்தபடியாக, துருக்கி இப்போது பலஸ்தீன் விடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது போல் தெரிகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைப்பதற்கான இஸ்ரேலின் திட்டத்தை துருக்கி கண்டிப்பதாக அதன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹமி அக்சோய் கூறியுள்ளார். இது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய நிலங்களை "அச்சுறுத்தி அபகரிக்கும் நோக்கில் மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளது" என்றும் "சர்வதேச சட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் மனிதகுலத்தின் பொதுவான மனசாட்சியைக் காயப்படுத்தும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள், நீதி மற்றும் பொறுப்புணர்வு கொண்ட சர்வதேச சமூகத்தின் எந்தவொரு உறுப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படவோ ஆதரிக்கப்படவோ மாட்டாது என்று நாங்கள் நம்புகிறோம்." என்றும் அவர் விவரித்துள்ளார்.

"மேற்குக் கரையை இணைப்பதில் அமெரிக்க நிலைப்பாடு சட்டவிரோதமானது மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முரணானது" என்று ஹமாஸ் ஊடகத் தலைவர் ரஃபாத் முர்ரா அனடோலு நியூஸ் ஏஜென்சிக்கு தெரிவித்தார். "இது பாலஸ்தீன மக்களின் வரலாற்று உரிமைகளை புறக்கணிக்கிறது, பாலஸ்தீன பிரச்சினையை முற்றுமுழுதாக புறக்கணிக்கிறது," என்றும் கூறினார்.

குறிப்பிட்ட இந்த இணைப்பு திட்டத்தால் ஹமாஸ் கடும் சீற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைப்பதை ஆதரிப்பதாக வெள்ளிக்கிழமை அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோவினது, தனது எஜமானர் டிரம்ப்பைப் போலவே, பொறுப்பற்ற அறியாமையைக் காட்டிய வார்த்தைகளால் ஹமாஸ் இயக்கத்தின் கோபம் அதிகரித்துள்ளது.

ரஃபாத் முர்ரா பாலஸ்தீனியர்களை ஒன்றிணைத்து அமெரிக்க நிலைப்பாட்டை எதிர்கொள்ள நீதி நியாயத்தை மதிக்கும் உலகு  ஒன்றாக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, கணிக்கத்தக்க வகையில், பலவீனமான பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், 84, இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் "பொருத்தமான நடவடிக்கைகளை" எடுப்பேன் என்று கூறினார். அபபாஸின் பதில், பலவீனமானது என்று நோக்கர்கள் தெரிவித்தனர்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் முறித்துவிடுவதாக அவர் அச்சுறுத்தியது அமரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்க்கும் செயலாகும்.

இஸ்ரேலின் இந்த அடாவடித்தனத்தை தடுத்துநிறுத்த உலகின் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான நடவடிக்கையே இப்போது அவசியமாகும்.

Saturday, May 9, 2020

சியோனிச பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்கு அரபு ஆட்சிகள்



புனித ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் இரண்டு சவுதி தொலைக்காட்சித் தொடர்கள் அரபு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் இஸ்ரேல் தொடர்பான அறபு மக்களின் கருத்துக்களை மாற்றும் முயற்சி, தொடரின் பின்னணியில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



துபாயை தளமாகக் கொண்ட, சவுதிக்குச் சொந்தமான எம்பிசி (MBC Network) நெட்வொர்க்கும் பாலஸ்தீனியர்களை அதன் திட்டங்களில் எதிர்மறையான நிலைக்குத் தள்ள முயற்சித்ததற்காக கடும் விமர்சனங்களைப் எதிர்கொண்டுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சியோனிஸ்ட்டுகள் பல தசாப்தங்களாக பாலஸ்தீனிய மற்றும் அரபு பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த போதிலும், பாலஸ்தீனியர்களை அதன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மோசமாக துஷ்பிரயோகம் செய்த போதிலும், சியோனிச இஸ்ரேலுடன் "சுமுக உறவை ஊக்குவிப்பதாக" சவுதிக்கு சொந்தமான எம்.பி.சி நெட்வொர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது என்று அல்ஜஸீரா இணைதளம் குறிப்பிடுகிறது. https://www.aljazeera.com/news/2020/05/saudi-tv-shows-spark-uproar-promotion-israel-200506174943064.html?

கடிகாரங்கள் இஸ்ரேலின் நெருங்கி வரும் முடிவை காட்டுகின்றன. உலக வரைபடத்திலிருந்து அதன் அழிப்பையும் நோக்கி நகர்வதை உணர்ந்த  சியோனிஸ்டுகள் லண்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள தங்கள் காட்பாதர்களின் ஆதரவோடு வாழ்வை நீடிப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எவ்வாறாயினும், உலக நாடுகளை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதற்கும் அவர்களின் பொருளாதாரங்களை கையாளுவதற்கும் ஒரு இனவெறி / பயங்கரவாத சித்தாந்தமாக இருக்கும் சியோனிசம் உண்மையான யூத மதத்தின் ஏகத்துவ கொள்கைக்கு மாற்றமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே சூழலில், தீர்க்கதரிசிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி ஓரிறை விசுவாசத்தின் உறுப்பினர்களாக உள்ள யூதர்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசில் ஆயிரக்கணக்கானோர் நிம்மதியாக வாழ்கின்றனர், தங்கள் சடங்குகளை தங்கள் ஜெப ஆலயங்களில் கடைப்பிடிக்கின்றனர், தேசிய நாடாளுமன்றத்தில் தங்கள் சமூகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த முறை, தங்களது புதிய அரபு உறவினர்கள், திறந்த இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக, சியோனிச சார்பு தொலைக்காட்சி சீரியல்களின் வடிவத்தில் கலாச்சார ஊடுருவல் மற்றும் வர்த்தக தொடர்பு, இறுதியாக அரசியல் கூட்டாண்மை ஆகியவற்றின் மூலம் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அவர்களின் நூற்றாண்டு கால கனவை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கை முத்தத்தை அளிப்பார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அரபு ஆட்சியாளர்களைப் போல் அல்லாது, அரபு மக்கள் அதற்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

சியோனிஸம் யூதர்கள் மற்றும் யூத மதத்தின் பிம்பத்தை கெடுக்க முயற்சிக்கிறது, சியோனிசமும் சியோனிசவாதிகளும் சாத்தானிய கூறுகள் என்பதற்கு இது மறுக்கமுடியாத சான்றாகும். அதேபோல் நமது பிராந்தியத்தில் சில அரபு ஆட்சிகள் முஸ்லிம்களின் மற்றும் இஸ்லாத்தின் மகத்துவத்தை சிதைக்க முயற்சிக்கின்றன. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களைக் காட்டிக் கொடுக்கும் சாத்தானிய கொள்கைகள் மற்றும் அல்-குத்ஸின் விடுதலையின் குறிக்கோளை மறந்து, சட்டவிரோத இஸ்ரேலுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் கூடிக்குலாவுகின்றனர்.

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் 'ரமலான் ஸ்பெஷல்' சீரியல்கள் நிச்சயமாக அரபு ஊடகங்களால் கூறப்படும் இடைக்கால புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் அல்ல; அது இஸ்ரேலுக்கு கதவு திறக்கும் பிற்போக்குத்தனமான முயற்சிகளில் ஒன்றாகும்.

"
உம் ஹாரூன்" அல்லது "ஆரோனின் தாய்" என்ற தொலைக்காட்சி நாடகம், அரபு நாடுகளில் பொதுமக்களை மூளைச்சலவை செய்வதற்காக சவூதி அரசின் அங்கீகாரத்துடனும் அனுசரணையுடனும் அரங்கேறி வருகிறது. இந்த நிகழ்ச்சி சவூதி அரேபியாவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள அரபு உலகின் மிகப்பெரிய தனியார் ஒளிபரப்பு நிறுவனமான MBC யினால் ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அதே நெட்வொர்க் "மக்ரஜ் 7" என்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியையும் ஒளிபரப்புகிறது, இது சட்டவிரோதமான இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான அரபுலகின் வரலாற்று ரீதியாக நியாயமான போராட்டங்களை, அணுகுமுறைகளை கொச்சைப்படுத்துகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பேரில் தங்கள் சியோனிச சார்பு பிரச்சாரத்தை பரப்புவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

நகைச்சுவை நிகழ்ச்சி, "மக்ரஜ் 7" (வெளியேறு 7) - தேவையற்ற உரையாடலைத் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சவுதி பேச்சு வழக்கு (ஸ்லாங்) சொல் - அரபு மக்களின் நீண்டகால கருத்துக்களை, இஸ்ரேலைக் கைப்பற்றுவது, பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலை போன்ற விடயங்களை வேடிக்கையாக சித்தரித்து காட்டுகிறது என்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிரான சியோனிஸத்தின் வடிவமைப்புகளை வெளிப்படையாகவே சிலாகித்து காட்டுகிறது.

பிரபல பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அப்தெல் பாரி அத்வானின் கூற்றுப்படி: "வருந்தத்தக்கது, இந்த ரமழான் விரைவில் மறக்கப்படாது, ஏனெனில் இது சவூதி ஊடகங்களால் இயக்கப்படும் ஒளிபரப்பு நிறுவனங்களால், அரசாங்கத்தின் உதவியுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசுடன் இணங்கிச்செல்லும் மிகப்பெரிய துரோக  பிரச்சாரத்திற்கு சாட்சியாக உள்ளது.

பலஸ்தீன் விடயத்தில் வரலாற்றுத் துரோகமிழைத்த சவூதி அரேபியா இப்போது பலஸ்தீன் விடுதலைப் போராட்டத்தை நக்கலும் நையாண்டியுமாக சித்தரிக்கிறது. இது அரபுலகை கொதிக்கச் செய்துள்ளது.

சட்டவிரோத சியோனிச ஆட்சி, அதன் போலி கலாச்சார பிரச்சாரங்கள் மூலம் அதன் இருப்புக்கு சட்டபூர்வமான தன்மையை வழங்குவதில் அதன் ஸலபி மச்சான்மார்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என்று கருதுகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் மீதான தங்கள் ஆட்சியாளர்களின் அடிமை மனப்பான்மையை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாத, பிராந்தியத்தில் அரபு முஸ்லிம்கள் மத்தியில் வளர்ந்து வரும் மனக்கசப்பைக் கருத்தில் கொண்டு நோக்கும்போது இந்த சியோனிச-அரபிகளின் சல்லாபம் குறுகிய காலத்தில் அடங்கிவிடும் என்றே தோன்றுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரேலின் அழிவு காலம் மிக  வேகமாக நெருங்கி வருகிறது, அதோடு அரபு மக்களின் எண்ணெய் செல்வத்தை கொள்ளையடித்து தனிப்பட்ட இன்பங்களுக்காகவும் அமெரிக்காவினதும் பிரிட்டனினதும் நன்மைக்காகவும் அதைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் மேலும் செய்த காரியம் என்னவென்றால் சிரியா மற்றும் ஈராக்கை ஸ்திரமின்மைக்கு இட்டுச்செல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு நியளிப்பதும் மற்றும் சக அரபு நாடான யேமன் மீது போரை திணித்ததுமாகும்.

பலஸ்தீனர்களை ஈராக்கில் குடியேற்றும் அமெரிக்க திட்டம்

இது இவ்வாறிருக்க, நூற்றாண்டின் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் அமெரிக்க சூழ்ச்சி திட்டத்தை ஈராக்கின் சில பகுதிகளில் அமல்படுத்துவதற்கு வழி வகுத்து வருவதாக ஈராக் பாதுகாப்பு இயக்கம் அசாப் அஹ்ல் அல்-ஹக் செவ்வாயன்று எச்சரித்தது. இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை அங்கு குடியேற்ற திட்டமிட்டுள்ளது என்றும் அது கூறியது.

ஈராக்கில் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கப் படைகள் ஒத்துழைக்கின்றன என்பதற்கு தமது இயக்கம் மறுக்கமுடியாத ஆணித்தரமான ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்று தஸ்னிமுக்கு அளித்த பேட்டியில் ஆசாஹிப் அஹ்ல் அல்-ஹக் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் அல்-ரபீ கூறினார்.

"இந்த சூழ்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்காக, ஈராக்கின் சில பகுதிகளை மேற்கு மற்றும் அல்-அன்பார் நுழைவாயில்களாக மாற்ற அமெரிக்கா (சில பிற்போக்குவாத அரபு தலைவர்களுடன் இணைந்து) முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் படி, நூற்றாண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பாலஸ்தீனர்கள் அல்-அன்பார் மாகாண மேற்கு பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள்”.

பலஸ்தீனும் ஈராக்கும் அமெரிக்காவின் சொல்லுக்கு ஆடும் பொம்மைகள் அல்ல என்பதை அவர்கள் வெகு விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.