Contributors

Thursday, June 2, 2022

ஆட்சியாளராக இமாம் கொமைனியின் முன்மாதிரியான வாழ்க்கை முறை

 Imam Khomeini’s exemplary lifestyle as a ruler

- 

இமாம் ருஹுல்லா முசவி கொமைனியின் மறைவின்

33வது ஆண்டு நினைவு தினம்

ஜூன் 3, 2022 அன்று அனுசரிக்கப்படுகிறது.

1979 - 1989 காலகட்டத்தில் அதிகம் பேசப்பட்டவர் ஈரானின் மறைந்த யதுல்லா ரூஹுல்லா கொமெய்னி. ஏனெனில் அவர் பாரசீக வளைகுடாவின் போலீஸ்காரர் என்று அழைக்கப்பட்ட சக்திவாய்ந்த ஷா பஹ்லவிக்கு எதிராக ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்தினார்.

இந்தப் புரட்சி, அதன் இயல்பு காரணமாக, புரட்சிகளை புரட்சிமயப்படுத்தும் புரட்சி’ என்று அடையாளம் காணப்பட்டது, ஏனெனில் இது நிராயுதபாணியான மக்கள் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அந்நியச் சார்பிலிருந்து முற்றிலும் விடுபட்டது.


இமாம் கொமெய்னிக்கு நாட்டின் விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரமும் ஒப்படைக்கப்பட்டது, ஆனால் அவர் மக்களின் விருப்பப்படி இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குடியரசு ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்து நிறுவினார்.

முதல் நாளில் இருந்தே இந்த புரட்சிகர அரசாங்கத்தை வீழ்த்த பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன, MKO (Mojahideen Kalk Org) பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகளில் புரட்சியின் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். ஆனால் இமாம் இந்த சதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று விரும்பிய அரசாங்கத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றார்.

இமாம் கொமெய்னி மிக உச்சபட்ச அதிகாரத்தை கொண்டிருந்தவராக இருந்த போதிலும், தேவைப்படும்போது வழிகாட்டுதலைத் தவிர, அரசாங்க நிர்வாகத்தில் அவர் தலையிட்டதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரச அமைப்பை நடத்த அனுமதித்தார்.

இமாமின் தனிப்பட்ட வாழ்க்கை

பரந்த மற்றும் செல்வம் கொழிக்கும் ஒரு நாட்டினது அதி சக்திவாய்ந்த ஆட்சியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையும் நடத்தையும் ஒரு ஏழையைப் போலவே இருந்தது. அவர் சாதாரண மனிதனின் உணவை மட்டுமே சாப்பிட்டார். அவரது ஆடை தேர்வு குறைவாகவே இருந்தது. அனைத்து ஆடம்பரங்களையும் அவர் தவிர்த்து வந்தார்.

சமகால தோழர்கள், சகாக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

ஷா பஹ்லவி அரசனால் கட்டப்பட்ட பல பளிங் மாளிகைகள் உள்ளன. அவற்றில் குடியேறி, ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை இமாம் வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதில் விருப்பம் காட்டவில்லை. அவரது வீடு அடக்கமாகவும் எளிமையாகவும் இருந்தது. அவருடைய வாழ்க்கை முறை ஒரு ஏழை, எளிய மனிதரைப் போல் இருந்தது. ஒரு பெரிய தேசத்தின் பாரிய பொறுப்பை சுமந்துகொண்டு உலகத் தலைவர்களைச் சந்திப்பதில் ஈடுபட்டிருந்த நேரத்திலும் அவர் தன்னிலையை மாற்றிக்கொள்ளவில்லை.


அவரது சமூக நடத்தை, நீதி நிர்வாகம் மற்றும் விருப்பு வெறுப்பு அனைத்தும் இறை திருப்தியை நாடியதாகவே இருந்தன. இவ்வளவு பெரும் அதிகாரத்தைக் கொண்ட தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவர் ஏன் இப்படிப்பட்ட எழிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சிந்திக்கும் எந்த மனமும் ஆச்சர்யப்படும்.

மறைந்த இமாமின் இறை பக்தி, அவரது தனிப்பட்ட நடத்தை மற்றும் சக்திவாய்ந்தவராக இருந்தபோது அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் பணிவு மற்றும் அவர் செய்த இறை வழிபாடுகள் தனித்துவமானது. இது அவரது ஆன்மீக முதிர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

இமாமின் ஆன்மீக நிலைகள், அவரது ஏகத்துவ புரிதல், அவரது வழிபாட்டுச் செயல், இறைவனுடனான அவரது நெருக்கம் மற்றும் அவரது தூய்மை ஆகியவை உண்மையில் சாதாரண மனிதர்களால் இலகுவில் அடைய முடியாத உச்சமாகும்.


ஷியா மற்றும் சன்னி அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் உட்பட அனைத்து சிறந்த அறிஞர்களும் மறைந்த இமாமின் ஆளுமையின் இந்த பகுதியைப் புரிந்துகொள்வது கடினம் என்று கூறியுள்ளனர்.

மறைந்த இமாமின் வாழ்க்கையின் இந்தப் பகுதியும், அவரது உன்னதமான, அறிவு ரீதியான செயல்பாடுகளும் அனைவரின் கண்களையும் கவர்ந்த போதிலும், அவரது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அவருடைய ஆன்மீக பக்குவ நிலையை எடுத்துக்காட்டுகிறது.

 

நீதி நிர்வாகம்

நீதியை நிலைநாட்டுவதில் அவர் எப்போதும் உறுதியுடன் இருந்தார். தேசத்தின் மீது திணிக்கப்பட்ட போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்ற கடினமான சோதனைகளை எதிர்கொண்ட போதிலும் அவர் பொறுமையுடனும் தைரியத்துடனும் அவற்றை எதிர்கொண்டார் என்பது எல்லா நிகழ்வுகளிலிருந்தும் தெளிவாகிறது.


மறைந்த இமாம் தனது நிகழ்வு நிறைந்த வாழ்க்கையில் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினார். அவர் எப்போதும் நீதியையும் ஒற்றுமையையும் மிக உயர்ந்ததாகக் கருதினார், மேலும் அவர் கவனம் செலுத்திய விஷயங்களில் இவை மிக முக்கியமானவை. இந்த மாபெரும் தலைவரிடமிருந்து முஸ்லிம் உலகம் கற்க பெரும் பாடங்கள் உள்ளன.

 

முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு முக்கிய முன்னுதாரணம்

இன்றைய காலகட்டம் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு படிப்பினைகள் நிறைந்தது. இஸ்லாமிய உலகத் தலைவர்கள் இமாமின் இந்தப் படிப்பினைகளைப் பின்பற்றினால், நிச்சயமாக அவர்கள் செழிப்பு, சுயமரியாதை, பாதுகாப்புப் பாதையை நோக்கிச் செல்வார்கள். "கிழக்கும் வேண்டாம், மேற்கும் வேண்டாம்" என்ற கொள்கையில் இமாம் உறுதியாக இருந்தார். இஸ்லாமிய உலகு இழந்த கண்ணியத்தை மீண்டும் பெற வேண்டுமானால் இமாமின் வாழ்விலிருந்து பாடம் கற்க வேண்டும்.

 

இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமை

இஸ்லாமிய சமுதாயம் எல்லா காலங்களிலும் அநீதிக்கு ஆளாகியிருக்கிறது. இது முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையின்மை, முரண்பாடு மற்றும் மோதல்களால் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையாகும். இந்த கசப்பான உண்மைகளால் இஸ்லாமிய உலகம் இன்றளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் வரலாற்றை - குறிப்பாக சமீபத்திய நூற்றாண்டுகளில் இஸ்லாத்தின் வரலாற்றை நீங்கள் எவ்வளவு அதிகமாகக் ஆராய்கிறீர்களோ, அவ்வளவு தெளிவாக இந்த உண்மைகளை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும்.


இமாம் கொமெய்னி (ரஹ்) எப்போதும் நீதியை வலியுறுத்தினார், மேலும் அவர் அதை தீர்க்கமாக பின்பற்றவும் செய்தார். அவர் இறைவனுக்காகவும், இஸ்லாத்துக்காகவும், முஸ்லிம்களின் ஒற்றுமைக்காகவும் தனது சொந்த நலனில் கவனம் செலுத்தவே இல்லை. அவர் எவருடனும் மோதலில் ஈடுபட விரும்பவில்லை. அவர் எப்போதும் இஸ்லாமிய உம்மத்தையும் இஸ்லாமிய உலக ஒற்றுமையையும் மதிப்பவராக இருந்தார்.

இஸ்லாத்தின் எதிரிகள் பல்வேறு முஸ்லிம் குழுக்களிடையே கருத்து வேறுபாடுகளைத் தூண்ட முயற்சிக்கின்றனர், இதற்காக அவர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறார்கள். இவையெல்லாம் முஸ்லிம் உலகம் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள்.

இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபிஅல்-அவ்வல் 12 முதல் 17 வரையிலான நாட்களை இஸ்லாமிய ஒற்றுமை வாரமாக இமாம் கொமேனி அறிவித்தார். இந்த வாரத்தில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் அறிஞர்கள் இஸ்லாத்தின் அனைத்து சிந்தனைப் பள்ளிகளிலிருந்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், இஸ்லாமிய உலகின் தற்போதைய நிலைமையைப் பற்றி சிந்திக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.

இஸ்லாமிய உலகின் இன்றைய.தேவை ஒற்றுமை

        - தாஹா முஸம்மில்

 

Thursday, May 26, 2022

"அறிவை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையே முழுமையான இறை அருள்."

“The most complete gift of God is a life based on knowledge”.


விசுவாசிகளின் தளபதியும், இறையச்சமுடையோரின் தலைவருமான “ஞானத்தின் நுழைவாயில்” இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமக்கு வழங்கிய ஞானத்தின் சிகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ ஸல்லம்) அவர்களால் அலீ (அலை) அவர்கள் குறித்து வழங்கிய அடைமொழிகளில் இதுவும் ஒன்றாகும், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது கலீபாவின் தகுதியைப் பற்றி மற்றொரு பிரபலமான ஹதீஸில் இவ்வாறு வெளிப்படுத்தினார்: "நான் அறிவின் பட்டணம் மற்றும் அலி அதன் நுழைவாயில்; இந்த பட்டணத்தில் நுழைய விரும்புபவர் நுழைவாயில் ஊடாக வரவேண்டும்".

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன எதுவும் பிழைப்பதில்லை, அவர் தனது மனோ இச்சையின் படி பேசுவதுமில்லை, சூரா நஜ்மின் முதல் சில வசனங்கள் சொல்வது போல் அவருடைய வார்த்தைகள் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை (வஹீ) ஆகும்.

இவ்வாறு, வரலாறு முழுவதும், சர்வவல்லமையுள்ள இறைவனின் கொடையான அறிவைத் தேடுவதில் தங்கள் வாழ்க்கையைக் கழித்தவர்கள், ஞானத்தின் நகரத்திற்குள் சரியான முறையில், அதாவது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய அதன் நுழைவாயில் வழியாக நுழைவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டனர்.

இஸ்லாத்தின் புனித தீர்க்கதரிசியின் கூற்றுப்படி, இமாம் அலி (அலை) உண்மையை அங்கீகரிப்பதற்கான அளவுகோலாகும்.

அமீருல் முஃமினீன் இமாம் அலி (அலை) அவர்களின் பாத்திரம் பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை விதிவிலக்கானது. அவர் கஅபாவிற்குள் பிறந்தார் - அதற்கு முன்னும் சரி, அதற்கு பின்னும் சரி இவ்வாறு நிகழவில்லை - மேலும் அவர் மஸ்ஜிதில் தொழுகையின் போது வீரமரணம் அடைந்தார்.

அமீருல் முஃமினீன் அலி (அலை) அவர்கள் (பிறப்பு - இறப்பு) இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஜிஹாத், இறைவனுக்காக பொறுமை காத்தல், அறிவு மற்றும் நுண்ணறிவைப் பெறுதல் மற்றும் இறை திருப்தியின் பாதையில் நகர்தல் ஆகியவற்றில் தனது எல்லா நேரத்தையும் கழித்தார்.

அவரது குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்தில், அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களை பராமரிக்கும் பொறுப்பு நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபிதாலிபின் வீட்டிலிருந்து அவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தபோது, விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களுக்கு ஆறு வயதுதான். இறை நம்பிக்கையாளர்களின் தளபதி (அலை) அவர்கள் சிறுவயதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கல்வி கற்றவர். அவர் தனது சிறுவயதிலேயே நபிகள் நாயகம் (ஸல்) மீது தனது நம்பிக்கையை அறிவித்தார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக பிரார்த்தனை செய்தார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக ஜிஹாதில் ஈடுபட்டார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக தியாகம் செய்தார். அவர் தனது வாழ்நாளில், புனித நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன்னும் பின்னும் நீதி வழங்கவும், இஸ்லாத்தை மேம்படுத்தவும், இஸ்லாத்தைப் பாதுகாக்கவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தில், உண்மை மற்றும் நீதிக்கான அளவுகோல் விசுவாசிகளின் தளபதி அமீருல் முஃமினீன் அலி (அலை) (அலை) ஆவார். ஷியா மற்றும் சன்னி முஸ்லிம்கள் புனித நபியை மேற்கோள் காட்டி, "அலி உண்மையுடன் இருக்கிறார், உண்மை அலியுடன் உள்ளது. உண்மை அவர் எங்கிருந்தாலும் அவரைச் சுற்றி வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருந்தது.

இமாம் அலி (அலை) அவர்கள் இறைவனின் முன் வைத்திருக்கும் உயர்ந்த அந்தஸ்து அவரது தன்னலமற்ற முயற்சி மற்றும் பக்தியின் காரணமாகும்... இமாம் அலி (அலை) மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டிருந்த பாசத்தைப் பற்றி சன்னி முஸ்லிம்கள் மேற்கோள் காட்டிய மரபுகளில் சில முக்கிய விடயங்கள் உள்ளன. இந்த விடயங்கள் அனைத்து முஸ்லிம்களும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

சுன்னி முஸ்லிம்களின் ஆறு முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் ஒன்றான சுனன் அல்-திர்மிதியில், உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) இவ்வாறு மேற்கோள் காட்டுகிறார்: "எல்லா மனிதர்களிலும், புனித நபியை விட அலிக்கு பிரியமானவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை." மற்றொரு ஹதீஸில், ஹன்பலி சிந்தனைப் பள்ளியின் ஃபிக்ஹ் நிறுவனர் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) - அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கூறியதாக மேற்கோள் காட்டுகிறார்: "ஒருமுறை புனித நபி இறைவனிடம் பிரார்த்தனை செய்து இவ்வாறு கூறினார்: "மூஸா (அலை) கேட்டது போலவே. அவரது கடமைகளில் அவருக்கு உதவ ஒரு மந்திரியை நீ நியமிக்க வேண்டும், மேலும் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களை எனது மந்திரியாகவும், எனது கடமைகளுக்கு எனக்கு உதவுபவராகவும் நியமிக்கும்படி வேண்டுகிறேன்".

நமக்கான படிப்பினைகளும் அர்த்தங்களும் நிறைந்த அமீருல் முஃமினீன் (அலை) அவரது வாழ்க்கையில், அவரது நிகழ்ச்சி நிரலில் எதை முக்கியப்படுத்தினார் என்பதை இப்போது நாம் கவனிக்க வேண்டும்.

ஒன்று அவரது வாழ்க்கை முறையின் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றாகக் கூறப்படும் நீதி. மற்றது அடக்குமுறையாளர்களிடம் கடுமையாய் இருப்பது, ஒடுக்கப்பட்டவர்களிடம் அனுதாபம் காட்டுவது, ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பெற உதவுவது போன்ற குணாதிசயங்கள் பல பகுதிகளில் தெளிவாகக் காணப்படுகின்றன - நஹ்ஜ் அல்-பலாகா.

விசுவாசிகளின் தளபதி (அலை) அவர்களின் இந்த அர்த்தமுள்ள கருத்துக்களில் கவனம் செலுத்துங்கள்... இமாம் அலி (அலை) அவர்களின் கருத்துப்படி, உலகம் - உலக உடைமைகள் என்ற பொருளில் - முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவையும் கைவிடப்பட வேண்டியவையும் ஆகும்.

உலகத்தை நோக்கி, "போய் வேறொருவனை ஏமாற்று!" என்று முழக்கமிட்டார் அமீருல் முஃமினீன் (அலை) அவர்கள். உலக ஆசைகள் மற்றும் வாழ்க்கையின் பொருள் அழகு அவரை ஏமாற்ற முடியாது என்று அர்த்தப்பட்டும் விதத்திலேயே அவர் அவரை விட்டு சென்று ஏமாற்ற மற்றொருவரை கண்டுபிடிக்க கூறினார்.

அமீருல் முஃமினீன் அலி (அலை) என்ற மகத்துவம் மிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவது ஷியாக்களுக்கு அல்லது மற்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிய தனிப்பட்டது தனிப்பட்ட அல்ல. மாறாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து விடுதலை பெற்ற மக்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒன்று. முஸ்லிம்கள் அல்லாத அந்த ஆளுமைகள் கூட இந்த மகத்துவமிக்க மனிதருக்கு மரியாதை காட்டுவதை நீங்கள் காணலாம். அவரைப் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள், கவிதைகள் எழுதுகிறார்கள். அனைத்து இஸ்லாமியர்களும், அனைத்து இஸ்லாமியப் பிரிவினரும் தங்கள் முழு மனதுடன் நேசிக்கும் மற்றும் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை அந்த உன்னத மனிதர்.


Sunday, May 22, 2022

அரபு - இஸ்ரேலிய கூட்டணிக்கு எதிரான மகத்தான வெற்றி

 Islam’s Grand Victory Over Joint Arab-Israelite Army


மூலம்: செய்யத் அலி ஷஹ்பாஸ்

இன்று ஷவ்வால் 17 ஆம் நாள் இஸ்லாம் மற்றும் மனிதகுல வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வின் ஆண்டு நிறைவாகும்.

எத்தனை பெரிய படைகள், வியூகக் கூட்டணிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் இருந்தாலும், சாத்தியவான்களின் வெற்றிக்கு உத்திரவாதம் அளித்துள்ளவன் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் என்பதால், சாத்தானியக் கூறுகளின் சதிகள் தற்போது அல்லது எதிர்காலத்தில் தோல்வியடையும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.

அரேபியர்களும் இஸ்ரவேலர்களும் இஸ்லாத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்ததால், "அஹ்ஸாப் போர்" என்று அழைக்கப்படும் முக்கியமான "கந்தக் போர்" (அகழி யுத்தம்) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வெற்றியுடன் முடிவடைந்து.

முஸ்லிம்களில் உள்ள நயவஞ்சகர்களின் உதவியுடன் றஸூலுல்லாஹ்வைக் கொல்லவும், இஸ்லாத்தை ஒழிக்கவும் மதீனாவுக்கு அணிவகுத்துச் சென்ற 10,000 வீரர்கள் கொண்ட வலிமையான அரபு-இஸ்ரேல் கூட்டு இராணுவம் தோல்வியுடனும் அவமானத்துடனும் பின்வாங்கியது.

ஹிஜ்ரி 2 இல் பத்ரில் மக்காவின் காஃபிர்களால் நபிகள் நாயகத்தின் மீது சுமத்தப்பட்ட முதல் ஆயுத மோதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரேபியர்களும் இஸ்ரவேலர்களும் ஆவேசமடைந்து இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கான திட்டங்களை வகுத்தனர்.

இஸ்லாத்தின் பரம எதிரியான அபு சுஃப்யான், அரேபிய யூதரான கஅப் அல்-அஷ்ரஃப் உடன் இணைந்து இறுதி நபிக்கு எதிராக ஒரு வலிமையான கூட்டுப் படையைத் திரட்ட உறுதிபூண்டனர். சர்வவல்லமையுள்ள அல்லாஹ் சூரா அன்-நிஸாவின் ஆயா 53 இல் இந்த சதித்திட்டத்தை சுட்டிக்காட்டினார்:

"(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் (இஸ்லாத்தில்) நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்".

கஅபின் எதிர்பாரா மரணத்துடன், இவர்களால் கூட்டு சதியை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.  பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கும் தாகத்தில், உமையா வம்ச நிராகரிப்பாளரான அபு சுஃப்யான், ஹிஜ்ரி 4 இல் மதீனாவை நோக்கி அணிவகுத்துச் சென்றார், ஆனால் அவரது இலக்கை அடைய முடியவில்லை. அலி (அலை) அவர்களின் வீர வாள்வீச்சு காரணமாக நிராகரிப்பாளர்களால் றஸூலுல்லாஹ்வை அண்ட முடியவில்லை.

அடுத்த ஆண்டு ஹிஜ்ரி 5 இல், அபு சுஃப்யான் தன்னால் முடிந்த அளவு அரபு பழங்குடியினரைச் சேர்ந்த வீரர்களைக் கூட்டி, யூதர்களான பனூ நதீர் மற்றும் பனூ குரைதா (நபிக்கு நடுநிலைமை என்ற உறுதிமொழியை மீறி) உடன் இணைந்து மதீனாவை நோக்கி வந்தார். ஒரு வலுவான இராணுவத்துடன், மிகவும் மூர்க்கமானவன் என்று அறியப்பட்ட போர்வீரன் அம்ர் பின் அப்துவாத் என்பனும் படையில் அடங்கியிருந்தான்.

இஸ்லாத்திற்கு எதிரான அரபு-இஸ்ரேல் சதி பற்றி அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவின் பாதுகாப்பு திட்டத்தைத் தயாரித்தார்கள், அதன் இயற்கையான அரண்கள், உயரமான பாறைகள், அடர்ந்த ஈத்த தோப்புகளும் இருந்த இடத்தைத் தெரிவு செய்தார்கள், மேலும் அவரது பாரசீக தோழர் சல்மான் அல்-ஃபார்சியின் ஆலோசனையின் பேரில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடத்தில் ஆழமான (அகழி)பள்ளம் தோண்டப்பட்டது.

கடப்பாரை கொண்டு பள்ளம் தோண்டிய வேளை தீப்பொறிகள் உமிழும் பெரிய பாறைகளை அகற்றும் போது, நபியவர்கள் எதிர்காலத்தில் சிரியா, பாரசீகம் மற்றும் யேமன் விடுதலையைப் பற்றிய செய்திகளை வழங்கினார், அதில் அவரது தோழர்களில் இருந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை மற்றும் இந்த போரே இஸ்லாத்தின் முடிவாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தனர்.

நிராகரிப்பாளர்களின் கூட்டு இராணுவம் வந்தபோது, புதிதாக தோண்டப்பட்டிருந்த அகழி காரணமாக அதன் நுழைவு தடுக்கப்பட்டது.

பதினைந்து நாட்கள், அரபு-இஸ்ரேல் கூட்டு படைகள் சூழ்ச்சி செய்து, மறுபுறத்தில் உள்ள முஸ்லிம் பாதுகாவலர்களை நோக்கி அம்புகளை எய்தனர், ஆனால் முஸ்லிம்கள் இருந்த பகுதிக்குள் நுழைவதற்கு அவர்களால் ஒரு வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்த அம்ர் பின் அப்துவாத், இன்னும் இரண்டு குதிரை வீரர்களுடன் சேர்ந்து அகழியின் மிகக் குறுகலான ஓர் இடத்தைக் கண்டுபிடித்து, ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தங்கள் குதிரைகளைத் தூண்டினர்.

ஷவ்வால் 17 ஆம் தேதி றஸூலுல்லாஹ்வின் கூடாரத்தின் மீது ஈட்டியை எறிந்த அம்ர், பாதுகாவலர்களை ஒற்றைப் போருக்கு சவால் விட்டார், அப்போது முஸ்லிம்கள் தரப்பில் சிலர் அச்சம்கொண்டு நடுங்கினர், அதே நேரத்தில் அவர்களில் நயவஞ்சகர்கள் நபியை பிடித்து எதிரிகளிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டனர்.

இறை தூதரின் புனிதத்தன்மையையும், அவரின் தூதையும் களங்கப்படுத்த துணிந்த எவரும் ஒரு மிருகத்தை விட மோசமானவர் என்றும் அவருக்கு மனிதகுலத்திற்கு அழியாத பாடத்தை வழங்குவதற்காக புனித தூதர் இவ்வாறு கூறினார்: “இந்த நாயை யார் எதிர்கொள்வார்கள்”. என்று மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார், மூன்று முறையும் யாரும் எழுந்திருக்கவில்லை, அவருடைய அன்புக்குரிய உறவினர், மருமகன் இமாம் அலி இப்னு அபி தாலிப் (அலை) அவர்களைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை.

உண்மையில் ஐந்தாம் படையாக செயற்பட்ட முஸ்லிம்களில் சிலர், நபிகளாரின் அழைப்புக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, விசுவாசிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அம்ர் பின் அப்துவாத்தின் வலிமையையும் உடல் சக்தியையும் சிலாகித்துப் பேச தொடங்கினர் - இன்று அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் சேவையில் இருக்கும் சுயபாணி முஸ்லிம்கள் செய்வது போலவே, சட்டவிரோதமான சியோனிச அமைப்பின் இராணுவ வலிமையையும், இஸ்லாமிய ஈரானுக்கு எதிராக இஸ்ரேலியர்களுடன் அரேபியர்கள் கூட்டணி வைப்பதையும் அரேபியர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.

அரேபிய-இஸ்ரேல் போர்த்தலைவரின் சவாலை எதிர்கொள்ள அலி (அலை) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள், "விசுவாசத்தின் உருவகம் துரோகத்தின் உருவகத்தை எதிர்த்துப் போராட தயாராக உள்ளது" என்று கூறினார்.

சுன்னி மற்றும் ஷியா அறிஞர்களால், அனைத்து ஹதீஸ் மற்றும் வரலாற்று புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, இமாம் அலி (அலை) அவர்கள், சவால்விட்ட அம்ரை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி  அழைப்புவிடுத்த பிறகு, மேலும் அவரது உயிரைப் பணயம் வைக்காமல் அமைதியாக வெளியேறிவிடு என்று சொன்னார் - திமிர்பிடித்த அவனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் மீது உமிழ்ந்தான், போரில் ஈடுபட்டு, இமாம் அலி (அலை) அவர்களின் வாளுக்கு இறையானான்.

ஸுல்பிகார் எனப்படும் அவரது புகழ்பெற்ற இரட்டைக் வாளினால், இமாம் அலி (அலை) அவர்கள் அரபு-இஸ்ரேல் படையின் கோழைத்தனமான பிரதிநிதி அம்ரை மறு உலகிற்கு அனுப்பினார்கள்.

"கந்தக் போரில் தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடம்கொடுக்காமல் இறைவனுக்காக மட்டுமே செய்யப்பட்ட இந்த சாதனையை பாராட்டி அலியின் வாள்வீச்சு தக்கலைன் (மனித இனமும் ஜின்களும்) இணைந்து செய்யும் வணக்கத்தை விட மேலானது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறினார்கள்.

இந்த காட்சியை அகழியின் மறுபக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரபு-இஸ்ரேல் படை, அதிர்ந்துபோனது, மேலும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அவர்களின் முகாமை சீர்குலைக்க பலமான புயலை ஏவியதால், எதிரிகள் ஓட்டம் காண தொடங்கினர்.

இவ்வாறு, இமாம் அலி (அலை) அவர்கள் றஸூலுல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இருந்தார்கள், மேலும் மீதமுள்ள முஸ்லிம்களையும் சண்டையிலிருந்து காப்பாற்றினார்கள்.

கந்தக் (அகழி) போரின் படிப்பினைகள் நமக்கு மிகவும் வெளிப்படையானவை, மேலும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வெற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாதையை உறுதியாகப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய ஆணவமானது மிருகத்தனமான சியோனிஸ்டுகள் மற்றும் பிற்போக்குவாத அரபு ஆட்சிகளின் கூட்டணியைக் கொண்டு, இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையை குழைக்கும் நோக்கில் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, மற்றும் பிற மனிதகுலத்திற்கு எதிரான கோழைத்தனமான குற்றங்கள் இளைத்துக்கொண்டிருக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், இமாம் அலி (அலை) மற்றும் பிற ஆசீர்வதிக்கப்பட்ட அஹ்ல் அல்-பைத் ஆகியோரை பின்தொடர்ந்து விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியத்தைக் குறிக்கிறது,

அரபு-இஸ்ரேல் படையின் மீது இஸ்லாம் பெற்ற இந்த மகத்தான வெற்றியின் நினைவாக, மதீனாவில் அகழி இருந்த இடத்திற்கு அருகில் மசூதிகள் கட்டப்பட்டன, அதாவது மஸ்ஜித் அல் ஃபத்ஹ் அல்லது வெற்றி மசூதி, மஸ்ஜித் இமாம் அலி (அலை), நபிகளாரின் அருமை மகள் ஹஸ்ரத் பாத்திமா ஸஹ்ரா (அலை), மற்றும் மஸ்ஜித் சல்மான் ஃபார்ஸி ஆகியவை கட்டப்பட்டன. கடந்த 1400 வருடங்களாக யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் விசுவாசிகள் இந்த மசூதிகளில் இறைவணக்கம் புரிந்து வந்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, சரித்திர சான்றுகளான இந்த மஸ்ஜிதுகள் அனைத்தும் இப்போது வஹ்ஹாபிகளால் அழிக்கப்பட்டுள்ளன, இவர்கள் தம்மை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொண்டாலும், நிராகரிக்கும் அபு சுஃப்யானின் வாரிசுகள் மற்றும் இஸ்ரேலியர்களைப் பின்பற்றுவோராகும், இவர்களது இந்த இஸ்லாம் விரோத போக்கு இஸ்ரேல் என்று அழைக்கப்படும் சட்டவிரோத சியோனிச அமைப்புடன் வைத்துள்ள தொடர்பு பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், ஆகிய நாடுகளில் பகிரங்கமாகத் தெரிகிறது. மற்றும் மொராக்கோ, மற்றும் ரியாத் ஆட்சிக்கும் டெல் அவிவ் இடையேயான இரகசிய உறவுகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மீண்டும் தோன்றி, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கொடுங்கோன்மையை முடிவுக்குக் கொண்டு வரவும், அநீதியை வேரோடு அகற்றவும், அமைதி, செழிப்பு மற்றும் நீதிக்கான உலகளாவிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

https://kayhan.ir/en/news/102749/islam%E2%80%99s-grand-victory-over-joint-arab-israelite-army