Contributors

Friday, November 12, 2021

பாலஸ்தீனிய சகோதரர்களின் முதுகில் குத்திய அரபு தலைவர்கள்

Arab leaders stabbed in the back of Palestinian brothers

டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட, "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" என்று அழைக்கப்படும் இஸ்ரேலுக்கும் அரபு உலகிற்கும் இடையிலான உறவுகளின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.

இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் சூடான் மற்றும் மொராக்கோ போன்ற சில அரபு நாடுகள் இஸ்ரேலிய ஆட்சியுடனான தங்கள் உறவுகளை இயல்பாக்கியுள்ளன அல்லது குறைந்தபட்சம் அதற்கு அண்மித்துள்ளன, இது தங்கள் பாலஸ்தீனிய சகோதரர்களின் முதுகில் குத்தும் செயலாகும்.

சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, டெல் அவிவ் உடனான உறவுகளை இன்னும் வெளிப்படையாக இயல்பாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் இஸ்ரேலுடனான அதன் சிறப்பு உறவுகள் மறுக்க முடியாதவை.

ஆனால் இந்த அரபு எதேச்சதிகாரிகள் பாலஸ்தீனிய போராட்டத்தை காட்டிக் கொடுத்ததற்கு ஈடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுடனான நட்பில் இருந்து என்ன பலன் அடைந்துள்ளனர்?

இஸ்ரேலும் அதன் புதிய நண்பர்களும்

இந்த இயல்பாக்கல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அரபு நாடுகளின் நோக்கம், வாஷிங்டன் அதன் பிராந்தியக் கொள்கைகளை இயக்குவதற்கு அல்லது குறைந்தபட்சம் நிர்வகிப்பதற்கு மிகவும் செல்வாக்கு மிக்க அழுத்த குழுவாக தாம் இருக்கலாம் என்பதாகும்.

இந்த ஆட்சியாளர்களில் பலர் உண்மையில் தாங்கள் ஆளும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை என்பதால், எந்த அடிமட்டப் புரட்சியிலிருந்தும் தங்களைக் காப்பாற்றக்கூடிய, தங்கள் இருப்புக்கான முக்கிய உத்தரவாதமாக அமெரிக்காவை அவர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவோம் என்ற கற்பனையான பாதுகாப்பு தவிர அந்த ஆட்சிகளுக்கு வேறு என்ன பலன் கிடைக்கப்போகிறது...?

இவர்களது அச்ச உணர்வை நன்றாக புரிந்துகொண்ட இஸ்ரேல், நீங்கள் காங்கிரஸில் உள்ள அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுடன் அல்லது அமெரிக்க அரசாங்கத்துடன், - அது ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி, - டெல் அவிவ் வழியாகவே உறவு கொள்ள வேண்டும் என்ற கருத்தை திணித்தது.

யெமன் அன்ஸாருல்லாஹ்வின் இராணுவ தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் தடுமாறும் சவூதி அரேபியா அதன் ஏவுகணை அமைப்புகளை வலுப்படுத்த அமெரிக்க ஆயுதங்களை கோருகிறது.

சவூதி இராச்சியம் அதன் தெற்கு அண்டை நாடுகளின் பதில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக தனது மண்ணைப் பாதுகாக்க முடியவில்லை என்பதால் சவூதி அரேபியா அதனது ஏவுகணை இடைமறிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான உதவியை அமெரிக்காவை நாடியுள்ளது என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்துகிறது,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -  இஸ்ரேல் உறவு

எடுத்துக்காட்டாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாடு போன்ற, டெல் அவிவ் உடன் இணைக்கப்பட்ட, சில செல்வாக்குமிக்க அமைப்புகளுடன் உறவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாட்டின் தலைவர் எமிரேட்ஸின் ஆட்சியாளருக்கு புகழாரம் சூட்டினார்.

ஸ்டீபன் கிரீன்பெர்க் கூறுகையில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சகிப்புத்தன்மை, பன்மைத்துவம், அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் ஒரு நாட்டை நான் கண்டேன், அதே நேரத்தில் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை அது எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்த்துப் போராடும் உறுதியையும் கண்டேன்" என்று குறிப்பிட்டார்.

தங்கள் சொந்த மக்கள் நலன் பற்றி கவலைப்படாத குறிப்பிட்ட ஆட்சிகளுடன் வியாபார தொடர்பை ஏற்படுத்த விரும்பும் உயரடுக்கு இஸ்ரேலியர்களுக்கு நிச்சயமாக இது மிகவும் பயனளிக்கும் அம்சம் என்பது உண்மையே.

ஆனால் பெரும்பான்மையான அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்த அரபு-இஸ்ரேல் உறவு சாதாரணமயமாக்கலைப் பயனளிக்கும் ஒன்றாக ஒருபோதும் கருதவில்லை என்பதை நிச்சயமாக கூற முடியும்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான், கத்தார் மீது படையெடுப்பதற்கு அனுமதி கோரி டொனால்ட் டிரம்பை தொடர்புகொண்டார்

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாரை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார தடைக்கு உள்ளாக்கியிருந்தன. ஆரம்ப நாட்களில், அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை என்று அறிந்த இந்த அரசுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவியுடன் அண்டை நாடான கத்தாரை தாக்கி முற்றுகையிட சவூதி தலைமையில் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது.

உறவுகள் இயல்பாக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க காங்கிரஸுக்கும் அமெரிக்காவின் நிர்வாகக் கிளைக்கும் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை ஆதரிக்கும் AIPAC அல்லது அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு F-35 போர் விமானங்களை அபுதாபிக்கு வழங்குவதற்காக கடும் பிரயத்தனம் மேற்கொண்டது.

ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பிறகு, மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க புதிய நிர்வாகத்தை இஸ்ரேல் வற்புறுத்தியத்தில் ஆச்சரியமில்லை.

இந்த ஆட்சிகளின், அனைத்து மனித உரிமைகள் உரிமை மீறல் மற்றும் சம உரிமைகள், தனிமனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம், மற்றும் அப்பாவி மக்களை அவர்களது கருத்துக்காக சிறையில் அடைத்தல் போன்ற அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் மட்டுமல்ல, அமெரிக்க ஊடகங்களும் தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கின்றன.

அதாவது, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் அப்பட்டமாக மீறுகின்றன, ஆனால் முக்கிய அமெரிக்க செய்தி ஊடகங்களில் அவற்றை பார்க்க முடியாது,  நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அல்லது CNN, NBC, CBS, போன்ற செய்தி நிறுவனங்கள் இந்த மீறல்கள் பற்றி பேசுவதில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேல் ஆட்சியுடனான உறவுகளை "இயல்புபடுத்துதல்": மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல், பல ஆண்டுகளாக பரஸ்பர இரகசிய தொடர்பு கொண்டுள்ளதால், உறவுகளை "சாதாரணமாக்குதல்" என்ற போர்வையில் தங்கள் உறவை பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முஸ்லிம் உலக லீக் பிரதிநிதிகள் குழு ஒன்று போலந்தில் உள்ள ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்கு அமெரிக்க யூதக் குழுவின் பிரதிநிதிகளுடன் அரிய விஜயம் ஒன்றை மேற்கொண்டது,  இந்த விஜயத்திற்கான நிதியை சவூதி அரேபியா வழங்கியிருந்தது.

"இந்தக் கொடூரமான குற்றங்களால் நானும் இஸ்லாமியத் தலைவர்களான எனது சகாக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்."

-         முகமது பின் அப்துல் கரீம் இசா, தலைவர், முஸ்லிம் உலக லீக்

இந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில், முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்களின் மாநாடு நியூயார்க் நகரில் இடம்பெற்றது, அதில் பஹ்ரைன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன் நோக்கம் யூத முதலீட்டை கவருவது, சுற்றுலாவை ஊக்குவிப்பது மற்றும் இரானோபோபியாவை (ஈரான் எதிர்ப்பு) பிரசாரங்களை) முடுக்கிவிடுவதும் ஆகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் சில காலமாக தொடர்பில் இருந்துவருகின்றன.

பல ஆரவாரங்களுக்கு மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இஸ்ரேலும் வர்த்தகம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் நீண்டகால தொடர்பு இருந்தபோதிலும், சமீபத்தில் தான் தங்கள் உறவுகளை இயல்பாக்கியுள்ளது போன்று காட்டிக்கொள்கின்றன. உண்மையில் இந்த அரபு நாடுகளினதும் இஸ்ரேலினதும்  ஒரே நோக்கம் ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும்.

சவூதி இராச்சியம் இன்னும் ஆபிரகாம் உடன்படிக்கையில் சேரவில்லை என்றாலும், ரியாத் மற்றும் டெல் அவிவ் பரஸ்பரம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்பதும், இஸ்ரேல் சவூதி ராஜ்யத்தை கவர்ந்து ஈர்க்கும் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டாது என்பதும் ஒரு திறந்த ரகசியம்.

ஜமால் கஷோகியின் கொலைக்குப் பிறகு, அந்த நேரத்தில் இஸ்ரேல் திட்டத்தின் CEO ஜோஷ் பிளாக், சவுதி பட்டத்து இளவரசரின் பெயரை காப்பாற்றுவதற்காக, "கஷோகி ஒரு தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூட்டாளி, அவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தாயெஷுக்கு நெருக்கமானவர்" என்று ட்வீட் செய்து கசோக்ஜி கொல்லப்பட்டதை நியாப்படுத்தினார்.

இஸ்ரேலுடனான தொடர்புகளை ஏற்படுத்த எந்தவொரு உறவிலும் இயல்பு நிலை என்று அங்கு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.

எனவே இவர்களுக்கு இடையில் உறவு எப்போதும் இருந்தது, இஸ்ரேலின் பாதுகாப்பே இந்த ஆட்சிகளின் பாதுகாப்பு.

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தன்னை ஒரு செல்வம் கொழிக்கும் ஆடம்பர பூமியாகக் காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறது, அதேநேரம் உலகம் முழுவதிலுமிருந்து பலரை இந்தப் பகுதிக்கு கவர்ந்து வருகிறது, சர்வதேச பிரபலங்களுக்கு 10 வருட புதுப்பிக்கத்தக்க வதிவிட விசா வழங்குகிறது.

ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட அரேபிய நாடுகள், பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவதற்காக எடுத்த முடிவு என்று தங்கள் முடிவை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் அவர்களின் நெருங்கிய உறவுகள், வைத்திருப்பதானது உள்நாட்டில் மனித உரிமை மீறல்களைத் தொடர்வதற்கு அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும், அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் குறிப்பிட்ட உரிமை மீறல்களை கண்டுகொள்ளவே மாட்டா என்பதாகும்.

https://www.presstv.ir/Detail/2021/10/28/669459/Abraham-Accords-Arab-Israeli-ties-normalization

Saturday, November 6, 2021

ஈரானின் "சிறப்பிற்கு எடுத்துக்காட்டு நகரங்கள்"

Masouleh, Yazd, Shushtar selected as Iran ‘paragon cities’

'சிறப்பிற்கு எடுத்துக்காட்டு நகரங்களாக’ ஈரானின் மசூலே, யாஸ்த், சுஷ்தார் தேர்ந்தெடுக்கப்பட்டன


2A (கட்டிடக்கலை & கலை) இன் சர்வதேச சஞ்சிகை , Masouleh மற்றும் Yazd மற்றும் Shushtar நகரங்கள் ஈரானின் "'சிறப்பிற்கோர் எடுத்துக்காட்டு நகரங்களாக’ என்று பெயரிடப்பட்டுள்ளது,

அவை இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் அதன் வடிவமைப்பு, பொது வசதி, நிலைத்தன்மை, சமூக நீதி, போக்குவரத்து மற்றும் நகர வாழ்க்கையின் பிற அம்சங்களை ஒருங்கிணைத்து நகர வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் எதிர்கொள்ளும் காரணத்திலாயே குறிப்பிட்ட நகரங்கள் தெரிவுசெய்யப்பட்டன என்று அறிக்கை மேலும் கூறியது.

"சிறப்பிற்கோர் எடுத்துக்காட்டு நகரங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் வாழ்வதன் விளைவும் பலனும் அதன் குடிமக்கள் மிகவும் அமைதியானவர்களாகவும், குறைவான மன அழுத்தத்துடன் இருக்கவும் உதவுகின்றன, இதன் விளைவாக, அவர்களின் புதுமை படைப்பாற்றல் சிதைவதைத் தவிர்க்கவும், அவர்கள் மிகவும் நேர்மறையாகவும், கனிவாகவும், அன்பாகவும் வாழ அனுமதிக்கிறது என்பனவும் அடங்கும் என்று நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அறிவித்துள்ளது.

அத்தகைய சிறந்த நகரங்களில், அனைத்து வயதினரும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் இணக்கமாகவும் அமைதியாகவும் வாழ முடியும்.

சிறப்பிற்கோர் எடுத்துக்காட்டு நகரம் ஒரு பெரிய, நவீன நகரமாகும், இது கடந்த காலத்தை ஆற்றல் மற்றும் வாழ்வாதாரத்துடன் இணைக்கிறது. நகர்ப்புற வடிவமைப்பு என்பது உள்ளூர் மக்களை அவற்றின் சுற்றுப்புறங்களுடன் சிறந்த முறையில் ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

A peek into ‘world’s longest qanat’

உலகின் மிக நீளமான கானாத்’ பற்றிய ஒரு பார்வை

சமீபத்தில் புனரமைக்கப்பட்டு ஸர்க்கின் கனாட் ஆனது மத்திய ஈரானில் உள்ள அரை வறண்ட யாஸ்த் மாகாணத்தின் குறுக்கே சுமார் 80 கிமீ நீளமுள்ளதால், உலகின் மிக நீளமான நிலத்தடி நீர்வழியாக பரவலாக அறியப்படுகிறது.


கனாத் யாஸ்தின் வடகிழக்கில் அமைந்துள்ள ஃபஹ்ராஜ் கிராமத்தில் இருந்து தொடங்குகிறது மற்றும் இது பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 30-40 மீ ஆழத்தில் செல்கிறது. இது ஸர்க் கிராமத்தை அடைகிறது, இந்த கனாத் மூலம் கொண்டுசெல்லப்படும் நீர் நிலங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், மொத்தமுள்ள 120,000 புராதன நிலத்தடி நீர் வழங்கல் அமைப்புகளில் சுமார் 37,000, கானாட்கள் ஈரானில் நாட்டின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

பதினொரு கானாட்களின் தேர்வு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் பாரசீக கனாத் என்ற தலைப்பின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் புவியியல் நோக்கங்கள், கட்டடக்கலை வடிவமைப்புகள் மற்றும் பிற நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பலவற்றை சுருக்கமாகக் கூறுகின்றன. இத்தகைய நிலத்தடி சுரங்கங்கள் வறண்ட காலநிலை கொண்ட பாலைவனப் பகுதிகளில் கலாச்சார மரபுகள் மற்றும் நாகரிகங்களுக்கு விதிவிலக்கான சான்றுகளை வழங்குகின்றன.

Masouleh, the most beautiful stairs village in Iran

ஈரானின் மிக அழகான படிக்கட்டு கிராமம் மசூலே

கூரைகளும் தெருக்களும் ஒன்றாக மாறும் படிக்கட்டுகள் கிராமமான மசூலே, வடக்கு ஈரானின் கிலானின் பச்சை மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்டிடக்கலை கொண்ட படிக்கட்டு, கிராமத்தின் வீடுகள் ஒன்றின் மீது ஒன்று கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு வீட்டின் கூரையும் அவரது மேல் அண்டை வீட்டு முற்றமாகும்.


கிராமத்தின் உள் மற்றும் வெளியில் ஏராளமான கல்லறைகள் இருப்பது அதன் தொன்மையை நிரூபிப்பதால், மசூலே ஓர் ஆயிரம் கால சரித்திரத்தை கொண்டது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கை நிலப்பரப்புகளுடன் இத்தகைய கட்டிடக்கலைகளின் கலவையானது ஒரு தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா மையமாகவும், மக்களின் வாழ்க்கைக்கான ஒரு சிறந்த வழியாகவும் இருக்கலாம். அனைத்து மக்களும் வீடுகளின் பிரதான முகப்பை நேரடியாகப் பார்க்க முடிவதால், உள்ளூர் கட்டிட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் கட்டிடத்தின் இந்த பகுதியில் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளனர்.


லோன்லி பிளானட் நிறுவனத்தின் கூற்றுப்படி, கோடை காலத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கிராமத்தின் கூரைகள் மற்றும் அதன் குறுகிய பாதைகள் வழியாக எறும்புகளைப் போல திரள்கின்றனர்.

Yazd, city of wind-catchers

யாஸ்த், தென்றல் காற்றின் நகரம்

ஜூலை 2017 இல், யாஸ்ட் நகரின் வரலாற்று அமைப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரியமாக பெயரிடப்பட்டது. வடக்கு தாஷ்ட்-இ காவிர் மற்றும் தெற்கு தாஷ்ட்-இ லுட் இடையே ஒரு சமவெளியில் இருக்கும் சோலை நகரம் மிகவும் இணக்கமான வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த பொது மற்றும் மத கட்டிடக்கலையை கொண்டுள்ளது.

யஸ்த் நகரம் பொதுவாக தங்குவதற்கு ஒரு மகிழ்ச்சிகரமான இடம் அல்லது அதன் பார்வையாளர்கள் அனைவராலும் "தவறவிடக்கூடாத" இடமாக குறிப்பிடப்படுகிறது.

கனாட் எனப்படும் நிலத்தடி சுரங்க அமைப்பு மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. நகரத்தின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கனாட்டின் மீது  கட்டப்பட்டுள்ளது மற்றும் ஒரு சமூக மையம் கொண்டதாகவும் உள்ளது. வறண்ட காலநிலையுடனான பாலைவனப் பகுதிகளில் கலாச்சார மரபுகள் மற்றும் நாகரிகங்களுக்கு அழியா சாட்சியங்களை வழங்குவதால், பாரசீக கனாட் 2016 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்யப்பட்டது.


பெட்டகங்கள் மற்றும் குவிமாடங்களின் கட்டுமானத்தில் சுவர்கள் மற்றும் கூரைகள் நிலத்தை பயன்படுத்தியதாக அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகள் தரை மட்டத்திற்கு கீழே முற்றங்களுடன் கட்டப்பட்டுள்ளன, நிலத்தடி பகுதிகள் பயன்பாட்டுக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. காற்றோட்ட வசதிகளுடனான முற்றங்கள் மற்றும் அடர்த்தியான மண் சுவர்கள் ஒரு இனிமையான சூழலை உருவாக்குகின்றன.

தெருக்கள், பொது சதுக்கங்கள் மற்றும் முற்றங்கள் ஆகியவற்றுடன் ஓரளவு மூடப்பட்ட சந்துகள் ஒரு இனிமையான நகர்ப்புற தரத்திற்கு பங்களிக்கின்றன. பல பாரம்பரிய மண் நகரங்களை அழித்த நவீனமயமாக்கல் போக்குகளிலிருந்து நகரம் தப்பித்தது.


அதன் பாரம்பரிய மாவட்டங்கள், கனாட் அமைப்பு, பாரம்பரிய வீடுகள், பஜார், ஹம்மாம், தண்ணீர் தொட்டிகள், மசூதிகள், ஆலயங்கள், ஜோராஸ்ட்ரியன் கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க டோலட்-அபாத் தோட்டம் ஆகியவற்றுடன் இன்றும் அது உயிர்வாழ்கிறது. இந்த நகரம் இஸ்லாம், யூத மதம் மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் ஆகிய மூன்று மதங்களின் அமைதியான சகவாழ்வை எடுத்துக்காட்டுகிறது.

Shushtar, home to numerous historical sites

சுஷ்டார், பல வரலாற்றுத் தளங்களின் தாயகம்

தென்மேற்கு ஈரானில் அமைந்துள்ள ஷுஷ்டார் நகரம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் பல தளங்களைக் கொண்டுள்ளது.


"தலைசிறந்த படைப்பு" என்று அழைக்கப்படும் ஷுஷ்டர் வரலாற்று ஹைட்ராலிக் அமைப்புக்கு புகழ் பெற்றது, இது யுனெஸ்கோ-பதிவு செய்யப்பட்ட நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலங்கள், வேலிகள், சுரங்கங்கள், கால்வாய்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சிகளால் இயங்கும் பழங்கால நீர் ஆலைகள் ஆகியவற்றை இது உள்ளடக்கியது. ஆக்கிமனிட் மன்னரான டேரியஸ் தி கிரேட் காலத்திலிருந்தே அதன் வரலாற்றைக் கொண்ட ஒரு பண்டைய நகரத்தின் பெயரால் அதே பெயரில் இது பெயரிடப்பட்டது.


எலமைட் மற்றும் மெசபடோமிய அறிவின் தொகுப்புக்கு சாட்சியமளிக்கும் சுஷ்டார் வரலாற்று ஹைட்ராலிக் அமைப்பு 2009 இல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பொறிக்கப்பட்டது, யுனெஸ்கோவின் கூற்றுப்படி, இவை பெட்ரா அணை மற்றும் சுரங்கப்பாதை மற்றும் ரோமானிய சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றின் பாதிப்பு இவற்றில் இருக்கலாம்.

Saturday, October 30, 2021

தலிபான் பொதுமக்கள் உயிர்களை பாதுகாக்க தவறிவிட்டது

 The Taliban have failed to protect civilian lives


ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான்  புதன்கிழமையன்று ஆப்கானிஸ்தான் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஈரானின் பல-நிலை முன்மொழிவை விவரித்தார், இதில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது, பாதுகாப்பு தொடர்பான தலிபானின் பொறுப்புகள் மற்றும் நாட்டில் மனிதாபிமான உதவிகள் விநியோகம் ஆகியவை அடங்கும்.  

தெஹ்ரானில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டாவது கூட்டத்தில் பேசிய அமிர் அப்துல்லாஹியான், இந்த சந்திப்பு பாகிஸ்தானினால் முன்மொழியப்பட்ட முயற்சியின் இரண்டாவது நாவடிக்கை என்று கூறினார்.

தற்போதைய சந்திப்பு ஆப்கானிஸ்தான் தொடர்பான உண்மைகள் மற்றும் அந்நாட்டில் இடம்பெறும் சம்பவங்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளின் எதிர்பார்ப்புகள் பற்றிய தெளிவான படத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வழங்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் நெருக்கடியை தீர்க்க ஈரான் பின்வரும் விடயங்களை முன்மொழிகிறது

முன்மொழிவின் முதல் விடயமாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் முன்னிலைப்படுத்தப்பட்ட, வெளிநாடுகளின்  தலையீடு இல்லாமல், ஆப்கானிஸ்தான் உள்ளார்ந்த உரையாடல் மூலம் அனைத்து இன மற்றும் மத குழுக்களையும் உரிய முறையில் பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, தலிபான்களுக்கு சகல மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குதல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், பெண்கள் உட்பட அனைத்து குழுக்களின் உரிமைகளைக் கவனித்தல், ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குதல், மற்றும் இன மற்றும் மத அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என  நிராகரிக்க முடியாத கடமைகள் உள்ளன. சகல குழுக்களின் உரிமைகளை காத்தல், ஆபஃஹானியர் நாடு துறத்தலை தடுத்தல் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கொள்கைகளை கடைபிடித்தல்.

மூன்றாவதாக, உணவு, மருந்து, மற்றும் கோவிட்-19 தடுப்பூசி உட்பட ஆப்கானிஸ்தான் மக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிடுகையில், மனிதாபிமான உதவிகள் நியாயமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை என்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசு முன்மொழிகிறது என்று கூறினார்.

நான்காவதாக, பிராந்திய நாடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உளவுத்துறை-பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் எதிர்கால அரசாங்கத்தின் கட்டமைப்பில் உடன்பாட்டை எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் நல்ல ஆலோசனைகளையும் ஆப்கானியக் கட்சிகளுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அதன் மத்தியஸ்தத்தையும் நாடுமாறு வெளியுறவு அமைச்சர் பரிந்துரைத்தார்.

ஆப்கானிஸ்தானில் நெருக்கடியின் வேர்கள்

ஈரானின் முன்மொழிவை முன்வைக்கும் முன்னதாக, ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையின் வேர்களை அமிர் அப்துல்லாஹியான் தொட்டுகாட்டி, ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளையும் கவலையடையச் செய்த நெருக்கடியானது அடக்குமுறை சக்திகளின் முறையற்ற தலையீடுகளின் மரபினால் ஏற்பட்டது என்று கூறினார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது என்ற சாக்குப்போக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது, அதைத் தொடர்ந்து, மேலும் ஸ்திரமற்ற தன்மை, போர் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை தொடர்ந்து நீடித்தது, அதன் தொடர்ச்சியான இராணுவப் பிரசன்னத்தால் மீண்டும் அதே நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆப்கானிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, வாஷிங்டன் பொறுப்பற்ற விதத்தில்  விட்டோடியது. இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்தியதும் அதுவே என்று அமீர் அப்துல்லாஹியான் விமர்சித்தார்,

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள், சூழவுள்ள பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச அரங்கிலும் அந்நாட்டிற்குள் ஒருமித்த கருத்தோ அல்லது சகிப்புத்தன்மையோ  இல்லாததே தற்போதைய நெருக்கடியின் ஆணிவேர் என்பதை நன்கு அறிந்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பாக அண்டை நாடுகள் கொண்டுள்ள ஆழமான புரிதலின் காரணமாக ஆப்கானிஸ்தான் விடயத்தில் பிராந்திய நாடுகள் பெரும்பாலும் ஓர் உடன்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார், ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையேயான தொடர்புகளை புறக்கணிக்கும் போது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்பதை ஆப்கானிஸ்தானின் வரலாறு காட்டுகிறது., சமூக மற்றும் இன சமத்துவத்தை கருத்தில் கொள்ளாமல் ஆப்கானிஸ்தானில் எந்த பொறிமுறையும் செயல்படாது என்று அமீர் அப்துல்லாஹியான்  விளக்கினார்.

வறுமை, குறைந்த தனிநபர் வருமானம், உயர் கல்வியறிவின்மை மற்றும் தொழில்முறை திறன் இல்லாமை ஆகியவை தனிநபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடவும் மற்றும் பயங்கரவாத குழுக்களில் சேருவதற்கும் தூண்டுதலாக அமைந்துள்ளன, நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பை வழங்கக்கூடிய முழு அளவிலான நிர்வாகத் திறன் இல்லாததன் காரணமாகவே ஆப்கானிஸ்தானுக்குள் அவர்கள்  தங்கள் செயல்பாட்டு மையங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமீபத்திய வாரங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் செயல்படும் திறனையும் புவியியல் அமைப்பையும் பெற்றுள்ளது. தலிபான் அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும் என்று அமீர் அப்துல்லாஹியான் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் வளர்ச்சியின்மை காரணமாக குற்றவியல் மற்றும் பயங்கரவாத குழுக்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தவிர வேறொன்றுமில்லை, இதனால் பிராந்தியத்தில் பயங்கரவாதம் விரிவடையும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

https://en.irna.ir/news/84520031/Iran-puts-forward-concrete-proposal-to-solve-Afghanistan-crisis


Thursday, October 28, 2021

புதிய இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குதல் இஸ்லாமியக் குடியரசின் குறிக்கோள்களில் ஒன்று

Creating a new Islamic civilization is one of the goals of the Islamic Republic


புனித நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) மற்றும் இமாம் சாதிக் (அலை) ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 35 வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுககர்கள் இஸ்லாமிய புரட்சியின் தலைவர் இமாம் கமேனியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.


இவர்கள் மத்தியில் உரையாற்றிய இஸ்லாமியப் புரட்சித் தலைவர், இந்தப் புனிதத்தினமாது மனித வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக விளங்குகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்து மனிதகுலத்தின் படைப்பு முழுவதும் தனித்துவமானது என்று அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் இதயத்தில் புனித குர்ஆன் இறங்கியதை பற்றி, இமாம் கமேனி "மகத்துவமிக்க இறைவன், புனித குர்ஆனை நபி (ஸல்) அவர்களின் புனித இதயத்திற்கு வெளிப்படுத்தினான், அதை அவரது தூய நாவால் ஒப்புவித்தார்கள், எல்லாம் வல்ல இறைவன் மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்கான திட்டத்தை முழுவதுமாகக் கொண்டு, இந்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரை றஸூலாக நியமித்தான்" என்று கூறினார்.

"இஸ்லாமிய தூதை சுமந்த நபி (ஸல்) அவர்களுக்கு முஸ்லிம்களான நாம் மற்றும் விசுவாசிகள் அனைவரும் செய்ய வேண்டிய கடமை என்ன? ஒன்று இஸ்லாத்தை சம்பூரணமாக செயல்படுத்துவது, மற்றொன்று முஸ்லிம் உம்மாவை ஒன்றுபடுத்துவது ஆகும். இந்த இரண்டு விடயங்களும் நம் வாழ் நாளின் மிக முக்கியமான விடயங்களாகும்," என்றார்.

இஸ்லாத்தினது எதிரிகளின் முயற்சிகளை விளக்கி அவர் அரசியல் மற்றும் உலகாயத சக்திகள் இஸ்லாத்தை பிரத்தியேக செயல்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுப்படுத்த வலியுறுத்துகின்றன. மேலும் இந்த நம்பிக்கையை மக்களிடையே திணிக்கவும் முயற்சிக்கின்றனர் என்று இஸ்லாம் விரோத சக்திகளின் செயல்களை விவரித்த அவர், “இந்த சக்திகளின் பார்வையில், வாழ்க்கை மற்றும் சமூக உறவுகளின் முக்கிய பகுதிகள் இஸ்லாத்தின் தலையீட்டிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதாகும். சமூக நிர்வாகத்தைப் பொறுத்தவரை, நாகரீகத்தை கட்டியெழுப்புதல் என்பது, அரசியல் மற்றும் வெளித்தோற்றமான அறிவார்ந்த போக்குக்கு ஏற்ப, மனித நாகரீகத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாத்திற்கு எந்தப் பங்கும் இல்லை, அதற்கு எந்தக் கடமையும் இல்லை, அதனால் உதவி செய்யும் சாத்தியமும் இல்லை,"

இஸ்லாத்தை சமூக மற்றும் அரசியல் துறைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற இத்தகைய வலியுறுத்தலுக்கான காரணம் உலகில் உள்ள பெரிய அரசியல் சக்திகளின் இஸ்லாம் விரோத மனப்பான்மை ஆகும்; மற்றும் இது அவர்களின் இலக்குகளில் வேரூன்றியுள்ளது என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் கூறினார். இஸ்லாமிய நூல்கள் இந்த நம்பிக்கையை வெளிப்படையாக நிராகரிக்கின்றன என்றும் அவர் கூறினார். இஸ்லாம் பற்றிய கண்ணோட்டத்தையும் அது வழங்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றியும் நாம் தெளிவுபடுத்த வேண்டும்.


இஸ்லாம் கூறுவது என்னவென்றால், இந்த மார்க்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தும் மனித உணர்வுகள் முதல் சமூக, அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் வரை மனித வாழ்க்கையின் அனைத்துமே ஆகும். அனைத்து மனிதகுலம் தொடர்பான பிரச்சினைகளும் இதில் அடங்கும்.

மனித சமூக வாழ்வின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் இஸ்லாம் குறிப்பிடும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் குர்ஆனில் ஆர்வம் கொண்டவர், குர்ஆனை நன்கு அறிந்தவர், குர்ஆனின் விதிகளைப் புரிந்து கொண்டவர். இதுதான் குர்ஆன் அறிமுகப்படுத்தும் இஸ்லாம் என்பதை அறிந்துகொள்வார். என்று இமாம் கமேனி குறிப்பிட்டார்.

இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் "இமாம்" என்ற கருத்தை கமேனி விளக்கினார். இஸ்லாமிய அரசாங்கத்தின் பிரச்சினையை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு முஸ்லிம் அறிஞர்களைக் கேட்டுக் கொண்டார். இரண்டாவது விடயமாக இஸ்லாமிய ஒற்றுமையைப் பொறுத்தவரை, இஸ்லாமிய ஒற்றுமைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். அவர் இமாம் கொமைனியின் (ரஹ்) அவர்களின் முயற்சிகளை நினைவு கூர்ந்தார், மேலும் அவர் “முஸ்லிம்களின் ஒற்றுமை நிச்சயமாக குர்ஆன் விதித்துள்ள கடமையாகும். அதை ஏன் வெறும் தார்மீகப் பிரச்சினையாக மாற்றப் பார்க்கிறோம்? இது ஒரு கட்டளை மற்றும் ஆணை."

முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது ஒரு அடிப்படை விடயம் என்றும் தந்திரோபாயப் பிரச்சினை அல்ல என்றும் அவர் விவரித்தார், “முஸ்லிம்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார். முஸ்லிமல்லாதவர்களுடன் உறவு வைத்துக்கொளவதில் ஆர்வமுள்ளவர்களும் தாராளமாக அதை செய்யலாம், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆர்வம் இல்லாதவர்களும் கூட, முழுக்க முழுக்க இத்தகைய தொடர்புகளில் ஈடுபட வேண்டும். இந்த ஒத்துழைப்பு நிலை இருக்கும்போதே ஒற்றுமை ஏற்படும்என்றார்.

இஸ்லாமியக் குடியரசு ஒற்றுமை என்ற விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், முஸ்லிம் சிந்தனைப்பிரிவுகளுக்கு இடையே நிலவும் பிரிவினையும், முரண்பாடுகளை உருவாக்க எதிரிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியும்தான் என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் கூறினார். ஷியா மற்றும் சன்னி வெளிப்பாடுகள் அமெரிக்க அரசியலின் இலக்கியத்தில் நுழைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், “இஸ்லாமிய ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்துவதற்கு இதுவே காரணம். அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மைகள் தங்களால் இயன்ற இடங்களில் இஸ்லாமிய உலகில் முரண்பாடுகளை உருவாக்குகின்றன என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

ஆப்கானிஸ்தானிய ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் பற்றி இமாம் கமேனி குறிப்பிடுகையில், “கடந்த இரண்டு வெள்ளிக்கிழமைகளில் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் தொழுகையின் போது மஸ்ஜிதுகளில் குண்டுகள் வெடிக்கச் செய்த சோகமான சம்பவங்கள் மிக அண்மைய உதாரணம்.என்றார். இவற்றை வெடிக்கச் செய்தது யார்? தாயெஷ் ISIS. இந்த தாயெஷ் என்பவர்கள் யார்? தாயெஷ் என்பது 'நாங்கள் உருவாக்கிய ஆயுத குருவாகும்' என்று அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தெளிவாகக் கூறினர். அவர்கள் தற்போது இதை மறுக்கிறார்கள்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் ஆப்கானிஸ்தான் ஷியா முஸ்லிம்கள் +மீதான தாக்குதல் பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைத்தார். இஸ்லாமிய உலகில் எங்கும் ஒற்றுமை என்ற இலக்கிற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம் என்றார். "உதாரணமாக ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, திட்டங்களை வகுக்க வேண்டும். இந்தத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரு வழி, தற்போதைய, மதிப்பிற்குரிய ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தாங்களாகவே ஷீஆ அமஸ்ஜிதுகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபடுவது அல்லது சன்னி சகோதரர்களை இந்த மையங்களில் தொழுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்என்று ஆலோசனை வழங்கினார்.

இஸ்லாமியக் குடியரசின் குறிக்கோள்களில் ஒன்று புதிய இஸ்லாமிய நாகரிகத்தை உருவாக்குவதாகக் கூறிய இமாம் கமேனி, ஷியா மற்றும் சுன்னிகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும், அது இல்லாமல் இது சாத்தியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். முஸ்லிம்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கு பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு முக்கியக் குறிகாட்டியாக புரட்சித் தலைவர் கருதுகிறார். “பாலஸ்தீன பிரச்னைக்கு முஸ்லிம்களின் ஒற்றுமை அவசியம் என்று உணரப்பட்டால், பாலஸ்தீனப் பிரச்சினை நிச்சயமாக சிறந்த முறையில் தீர்க்கப்படும். பாலஸ்தீன தேசத்தின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக பாலஸ்தீன விவகாரத்தில் நாம் எவ்வளவு தீவிரம் காட்டுகிறோமோ, அந்தளவுக்கு முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையை அடைவதற்கு நெருக்கமாக இருப்போம் என்று அவர் விளக்கினார்,

இஸ்ரேலுடனான உறவை சீராக்குவதில் சில அரசுகள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த அவர், “துரதிர்ஷ்டவசமாக சில அரசுகள் பெரிய தவறு செய்துவிட்டார்கள். அபகரிக்கும், சர்வாதிகார சியோனிச ஆட்சியுடன் உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் அவர்கள் பாவம் செய்துள்ளனர், இந்த நடவடிக்கை இஸ்லாமிய சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமைக்கு எதிரானது. அவர்கள் இந்தப் பாதையை விட்டு விலகி, இந்த மாபெரும் தவறுக்கு ஈடுசெய்ய வேண்டும்என்று வலியுறுத்தினார்.

இமாம் கமேனி தனது உரையின் முடிவில் ஈரானிய மக்களுக்கு உரையாற்றுகையில், இஸ்லாத்தின் உன்னத நபியைப் பின்பற்றுவது, என்பது குறிப்பாக பொறுமை, நீதி மற்றும் நெறிமுறை ஆகிய மூன்று விஷயங்களில் அவருடைய முன்மாதிரியைப் சம்பூரணமாக பின்பற்றுவதை சார்ந்துள்ளது என்று கூறினார். இன்று எல்லாவற்றையும் விட நமக்கு ஸ்திரத்தன்மை அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர் அரசாங்க அதிகாரிகளிடம் "நீங்கள் உறுதியுடனும், எதிர்ப்பாற்றலுடனும், சகிப்புத்தன்மையுடனும் இந்த பாதையில் தொடர வேண்டும், நீங்கள் ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது" என்றார்.

மேலும் அவர் நீதி என்பது தீர்க்கதரிசிகளின் மிக முக்கியமான இடைநிலை இலக்கு என்று விவரித்தார், "பகைவர்களுடைய விஷயத்தில் கூட நீதி வழங்குவது அவசியம் என்று புனித குர்ஆன் கருதுகிறது. நியாயமான முறையில் நடந்து கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருடன் ஒத்துப் போகாத சூழ்நிலையில் இருந்தாலும், அவதூறு, பொய், [பொல்லாங்குகளால் நம் எதிர்ப்பைக் கறைப்படுத்தக் கூடாதுஎன்று குறிப்பிட்டார்.

தலைவர் கடைசியாக நபிகள் நாயகத்தைப் போல் நடந்து கொள்ளவேண்டும் என்றார். மேலும் அவர் “இஸ்லாமிய நெறிமுறைகள் என்றால் பணிவு, மன்னிப்பு, மென்மையான நடத்தை, மற்றவர்களுக்கு நல்லது செய்தல் மற்றும் பிற முஸ்லிம்களைப் பற்றி பொய்கள், அவதூறுகள் மற்றும் சந்தேகங்களைத் தவிர்த்தல் அவசியமாகும், இந்த விடயங்களை எப்போதும் நிரந்தர வழிகாட்டுதல்களாக நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்," என்றும் குறிப்பிட்டார்.

"நாங்கள் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாமிய குடியரசின் பிரதிநிதிகள் என்று கூறும்போது, இந்த நடவடிக்கையுடன் இருக்க வேண்டும். நமது செயல்களில், நாம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்" என்றும் இமாம் கமேனி வலியுறுத்தினார்,

https://english.khamenei.ir/news/8739/Muslims-unity-necessary-for-realization-of-new-Islamic-Civilization