Contributors

Tuesday, October 14, 2025

ஈரானில் ஹபீஸ் ஷிராசி தினம் அனுசரிக்கப்படுகிறது

 Iran marks Day of Hafez Shirazi

Iran marks Day of Hafez Shirazi

ஈரானின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரின் நினைவாக ஹபீஸ் தினம் அக்டோபர் 12ம் திகதி அனுசரிக்கப்படுகிறது, அவரது அன்பு, ஷியா சித்தாந்தம் மற்றும் மனித நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள வாசகர்களை தொடர்ந்து கவர்ந்திழுக்கின்றன.

 

14 ஆம் நூற்றாண்டில் ஷிராஸில் பிறந்த ஹபீஸ், எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க பாரசீக கவிஞர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். ‘ஹபீஸின் திவான் இல் தொகுக்கப்பட்ட அவரது படைப்புகள், அன்பு, ஆன்மீகம், இயற்கை மற்றும் சத்தியத்தைத் தேடுதல் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்கின்றன. கவிதையின் பாடல் வடிவமான கஸால் தேர்ச்சி பெற்றதற்காக அறியப்பட்ட ஹபீஸின் கவிதைகள் அவற்றின் ஆழமான அழகு, நுட்பமான உருவகங்கள் மற்றும் தத்துவ ஆழத்திற்காக கொண்டாடப்படுகின்றன.

 

அக்டோபர் 12 ஆம் தேதி ஈரானில் ஹபீஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல எழுத்தாளர்கள், அறிஞர்கள் மற்றும் வாசகர்கள் இந்த நாளில் ஷிராஸில் உள்ள ஹபீஸின் கல்லறையில் இந்த நிகழ்வைக் குறிக்க ஈரானுக்கு வருகை தருகிறார்கள்.

ஹபீஸின் கவிதைகளைப் படிக்கவும், சிறப்பு விழாக்களை நடத்தவும் மக்கள் அவரது கல்லறையில் கூடுகிறார்கள்.

 

1935 இல் கட்டப்பட்ட ஹபீஸின் கல்லறை நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு கட்டிடக் கலைஞரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரே கோடார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. கல்லறை மற்றும் அதைச் சுற்றியுள்ள தோட்டங்கள் ஷிராஸின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் ஷிராசியின் வாழ்க்கை

வரலாற்றில் மிகவும் குழப்பமான காலங்களில் ஒன்றான (1315-1390) இல் பிறந்த காஜே ஷம்சதீன் முகமது ஹபீஸ் ஷிராசி சிறந்த ஈரானிய கவிஞர்கள் மற்றும் ஷியா ஆன்மீகவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் ஹபீஸ் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், அவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். அவருக்கு "லிசான் உல்-கெய்ப்" (Lisan Ul-Gheyb) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இதன் பொருள் வெளிப்படாத மொழி என்பதாகும்.

ஹபீஸ் ஈரானிலும் உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டாலும், அவரது வாழ்க்கை மர்மமாகவே இருந்துள்ளது. அவரது வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன, ஆனால் இந்த விஷயத்தில் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை.

 

கணிதம், வானியல் மற்றும் கவிதை ஆகியவற்றில் மிக முக்கியமான தடம்பதித்த ஈரானிய சிரேஷ்ட கவிஞர்களில் ஒருவரான ஒமர் கய்யாம் போன்ற பல எழுத்தாளர்களால் ஹபீஸ் செல்வாக்கு பெற்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும், பல விமர்சகர்கள் ஹபீஸை மிகவும் சுவையான தேனை தயாரிக்க வெவ்வேறு பூக்களின் மீது பறக்கும் தேனீயாக அடையாளப்படுத்துகிறார்கள்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் இன் கவிதைகள்

பொதுவாக, ஹபீஸ் "கஸல்" என்று அழைக்கப்படும் ஆன்மீகவாத கவிதைகளை எழுதுவார். இது 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அரபு கவிதையின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. ஹபீஸின் கவிதைகள் வளமான கற்பனை மற்றும் குறியீட்டின் கலவையைக் கொண்டுள்ளன. அவரது கவிதைகள் பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமானவை, இது அவரது ஆன்மாவிற்கான தேடலைக் குறிக்கிறது.

பின்வரும் கவிதை ஹஃபீஸின் புகழ்பெற்ற கஸல்களில் ஒன்றாகும்:

That beautiful Shirazi Turk, took control and my heart stole,
I'll give Samarkand & Bukhara, for her Hindu beauty mole.
O wine-bearer bring me wine, such wine not found in Heavens
By running brooks, in flowery fields, spend your days and stroll.
Alas, these sweet gypsy clowns, these agitators of our town
Took the patience of my heart, like looting Turks take their toll.
Such unfinished love as ours, the Beloved has no need,
For the Perfect Beauty, frills and adornments play no role.
I came to know Joseph's goodness, that daily would increase
Even the chaste Mistress succumbed to the love she would extol.
Whether profane or even cursed, I'll reply only in praise
Sweetness of tongue and the lips, even bitterness would enthrall.
Heed the advice of the wise, make your most endeared goal,
The fortunate blessed youth, listen to the old wise soul.
Tell tales of song and wine, seek not secrets of the world,
None has found and no-one will, knowledge leaves this riddle whole.
You composed poems and sang, Hafiz, you spent your days well
Venus wedded to your songs, in the firmaments' inverted bowl.

மேலே கூறப்பட்ட இக் கவிதை ஒரு காதலிக்கு தீவிர பாராட்டை வெளிப்படுத்தும் நன்கு அறியப்பட்ட பாடல் ஆகும். இது பாரசீக கவிதையின் மையப் பகுதியாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் செல்வாக்கு செலுத்துகிறது, ரால்ப் வால்டோ எமர்சன் மற்றும் ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே போன்ற நபர்களால் கூட குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இக் கவிதை ஹபீஸின் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும் மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பரவலாக இக் கவிதை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் இன் திவான்

ஹபீஸின் புகழ்பெற்ற புத்தகம் திவான் (கவிதைகளின் தொகுப்பு). அவரது புத்தகம் ஈரானியர்களுக்கு மிகவும் விலைமதிப்பற்றது, எனவே ஒவ்வொரு ஈரானிய குடும்பமும் அதை தங்கள் வீட்டில் வைத்திருக்கிறது. ஈரானிய மக்கள் நவ்ரூஸ் அல்லது யால்டா நைட் போன்ற வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஹபீஸின் திவான்களைப் படிக்க கூடுகிறார்கள்.

 

ஹபீஸ் தனது கவிதைகளைத் தொகுக்கவில்லை, மாறாக முகமது கோலந்தம் தனது தொகுப்பிற்கு ஒரு முன்னுரையை எழுதினார், ஹபீஸ் இறந்து சுமார் 21-22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 813 அல்லது கி.பி 1410 இல் அதை முடித்தார் என்று சிலர் கூறுகின்றனர்.

Iranians mark Hafez Day at his tomb in Shiraz

ஹபீஸ் மற்றும் கோதே

ஜெர்மன் இலக்கியத்தின் மிகவும் புகழ்பெற்ற கவிஞரான ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே (1749-1832), கிழக்கு இலக்கியம் குறிப்பாக, பாரசீக இலக்கியத்தில் அவரது ஆர்வத்தை அதிகரிக்க காரணியாக அமைவது ஹபீஸ் கவிதைகளில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஆர்வம் ஆகும். ஹபீஸைப் பின்பற்றுவதில் கோதேயின் முதல் உந்துதல் காதல் கவிதைகளை இயற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாக இருந்தது, ஆனால் பின்னர் ஹபீஸின் கவிதைகளின் ஆன்மீக அம்சங்கள் அவரை ஈர்த்தன.

 

ஹபீஸின் கவிதைகள் தொகுப்பு மீது கோதேயின் எழுத்துக்களுக்கு மிகவும் ஆழமாக செல்வாக்கு செலுத்தின, அவர் ஹபீஸைப் பின்பற்றுவதற்காக தனது கவிதைத் தொகுப்பை இயற்றி மற்றும் அதற்கு "மேற்கு-கிழக்கு திவான்" என்று பெயரிட்டார்.

 

ஆஸ்திரியாவின் கிளஜென்பர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஜோஹன் வொல்ஃப்காங் வான் கோதே ஹபீஸால் ஈர்க்கப்படாமல் மதிப்புமிக்க மேற்கு-கிழக்கு திவானை எழுதியிருக்க மாட்டார் என்பதை மறுக்க முடியாது என்று கூறினார்.

 

கோதே தனது 65 வயதில் ஹபீஸின் மொழிபெயர்ப்பைக் கண்டார், அது அவரது வாழ்க்கையை மாற்றியது. மிகப்பெரிய ஈரானிய கவிஞராக ஹபீஸ், கோதேயின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அவர் கூறினார்.

 

கோதே ஹபீஸின் ஆன்மீக சொற்கள் மற்றும் மொழியின் பிம்பத்தை நிறுவ முடிந்தது. ஹபீஸைப் பற்றிய அவரது புரிதல் அவரை ஒரு வாரத்தில் 15 புதிய கவிதை வரிகளை இயற்ற வைத்தது. கோதே மேற்கத்திய கவிதைகளை கிழக்கத்திய உள்ளடக்கத்துடன் இயற்றினார் என்று அவர் மேலும் கூறினார்.

 

கிழக்கத்திய இலக்கியம் மற்றும் பழைய ஏற்பாட்டை அவர் ஒன்றிணைத்து மேற்கத்திய மக்களுக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றியதாக அவர் கூறினார், இருப்பினும் புத்தகம் கிழக்கு கருப்பொருளைக் கொண்டிருந்தது.

 

பின்னர், பாரசீக இலக்கியத்தின் பிற கூறுகளில் அவர் ஆர்வம் காட்டினார். அவர் கிழக்கு புத்தகங்களிலிருந்து பாரசீக-அரபு எழுத்துக்களை நகலெடுக்க முயன்றார் என்று பேராசிரியர் கூறினார்.

 

மேற்கு-கிழக்கு திவான் கோதே இரு பிராந்தியத்தின் புரிதலை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கவும், மனிதன் தனது இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவும் முயற்சிக்கிறார்.

 

தொகுத்தவர் மொஹதேசே பக்ரவன்

தமிழில் மஹ்ஜுபா முஸம்மில்

https://en.mehrnews.com/news/237591/From-Shiraz-to-the-World-Hafez-s-poetry-touches-human-soul